Powered By Blogger

Monday, December 24, 2012

ஒரு பதிவின் பயணம் !

    

218 comments:

  1. Replies
    1. டியர் எடிட்டர், ஒரு வருடப் பதிவு நிறைவு செய்தமைக்கு - congrats !

      பல மகிழ்ச்சியான தருணங்களும், பல சிறப்பான கருத்துப் பரிமாற்றங்களும், மனிதர்களுக்கே உரிய சில குணங்களால் ஆக்கம் பெற்ற சில கருப்பு பதிவு தினங்களும் கடந்து ஒரு வருடந்த்தினை அடைந்திட்டது - குறிப்பிடத்தக்கதே.

      நமது பயணம் இன்னும் சிறந்து விளங்கிடவும், பல நல்ல, உலகத் தரமான கதைகள் அமைந்திடவும் wishes and prayers !! நேர்மையும், உழைப்பும் கொண்டிட்ட உங்களது முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

      Regular publication dates - say 15th of every month - மற்றும் courier streamlining 2013-ல் மேம்படுத்தபட்டால் - that will bring more smiles to our faces!

      One suggestion:

      வாசகர்களுக்கு - சிறிய கதைதானெனினும் - மொழி மாற்றம் செய்ய அளிக்கப்படும் வாய்ப்பு நல்ல ஒரு முயற்சி எனினும் - apart from their translations getting published - தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிமாற்றத்திற்கு ஒரு பரிசினை அறிவிக்கலாமே? Plus - due to the expenses involved in prizes this could be done once in three months ?!!

      Delete

    2. ஆசிரியரின் பதிவு இடப்பட்ட நேரம் "Posted by Vijayan at 23:23 "

      உங்களுடைய பின்னூட்டம் இடப்பட்ட நேரம் "Comic Lover (a) சென்னை ராகவன்24 December 2012 23:22:00 GMT+05:30"

      நமது லக்கி லுக் ஒருவரே இவ்வுலகில் தன் நிழலை விட வேகமாக செயல்படக்கூடியவர் என்பதை இத்தனை நாள் நினைத்திருந்தேன். "சென்னையில ராகவன் இருக்கேன் " என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் நண்பரே ! : ) congrats !!

      Delete
    3. @ விஸ்கி-சுஸ்கி:

      It is not like that. The Editor's original post was at 23:21 with a மிட்டாய் pink background. At that time I had made my first comment. Then the background resumed normalcy at 23:23 - which is the final update time that is showing up :) :)

      Delete
  2. அன்பின் எடிட்டருக்கு,

    சரியாக ஒரு வருடம் முன்பாக ஒரு சனிக்கிழமை மதியத்தில் இருந்து துவங்கிய இந்த வலைரோஜா (பின்னே எவ்வளவு நாளைக்குதான் வலைப்பூ, வலைப்பூ என்று ஜெனரிக் ஆகவே சொல்லிக்கொண்டு இருப்பது? அதனால்தான் ஸ்பெசிக் ஆக ஒரே ஒரு பூவை சொன்னேன்) இன்று ஒரு ஆண்டை கடந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    நாற்பது ஆண்டுகளாக காமிக்ஸ் வெளியிடும் உங்களுக்கு இந்த ஒரு ஆண்டினை கொண்டாடுவது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இன்றைய புதிய தலைமுறைக்கு இந்த மாதிரியாக ப்ளாக்,டுவிட்டர்,வதனப்புத்தகம் (அதாங்க ஃபேஸ்புக், நன்றி:ப்ரியா கல்யாணராமன்) என்றெல்லாம் பரவி இருப்பதன் மூலமே கவனத்தினை ஈர்க்க முடியும். முதல் முயற்சியாக ப்ளாக் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது.

    போகிற போக்கை பார்த்தால் அடுத்த ஆண்டு நீங்கள் இந்த ஆண்டின் சாதனையை (1 வருடம் = 52 வாரங்களில் 70 பதிவுகள், கிட்டதட்ட 5 நாட்களுக்கு ஒரு பதிவு II 365 நாட்களில் 2,50,000 ஹிட்ஸ்,ஒரு நாளைக்கு 685 ஹிட்ஸ் II ஒரு வருடத்தில் 339 ஃபாலோயர்கள், கிட்டதட்ட ஒரு நாளைக்கு ஒரு புதிய ஃபாலோயர் II இன்னும் கூட 70 பதிவுகளில் மொத்தமாக எத்துனை கமெண்ட்டுகள்,சராசரியாக ஒரு பதிவுக்கு எத்துனை கமெண்ட்டுகள் என்றல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்) அடுத்த ஆண்டு சர்வ சாதாரணமாக முறியடித்து விடுவீர்கள் போலிருக்கிறது.

    எது நடக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இந்த இரண்டாவது ஆண்டில் கண்டிப்பாக 100 பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்.

    தன்னுடைய ஒரே மகளை கயவர்களுக்கு பறிகொடுத்து விட்டு வாடும் பெற்றோருக்கோ,அறுபது ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவரை காப்பாற்ற உதவி கோரி வந்த அந்த பெண்மணிக்கும், மூன்று வயது மகளின் சிகிச்சைக்கு பண உதவி தேடி பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்க கூட காசில்லாமல் வந்த அந்த தந்தையின் கஷ்டத்தை விட நாம் அதிகமாக துயரத்தில் இல்லை.

    இவர்களுடைய பிரச்சினைகளின் கனத்தை கருத்தில் கொண்டால் நாமெல்லாம் சொர்க்கத்தில் தான் வசிக்கிறோம்.அதற்காக நமக்கெல்லாம் பிரச்சினையே இல்லையா என்று கேட்கவேண்டாமே,ப்ளீஸ். ஆகவே இந்த தளத்தில் வேற்றுமைகளை களைந்து, புன்னகையின் உண்மையான விலாசமாக இந்த வலைப்பூவை மாற்றுவோம்.

    ஆரம்பத்தில் பகல் வேளைகளில் வந்துக்கொண்டு இருந்த இந்த பதிவுகள் இப்போதெல்லாம் இரவு மூன்றாம் சாமத்தில் தான் வெளியிடப்படுகின்றன. எங்களையெல்லாம் இரவுக்கழுகு, நடுநிசிக் கள்வன் ஆக்கி விட்டீர்கள். இதனை குறையாக சொல்லவில்லை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். நடைமுறை உலகில் தினம் தினம் சந்திக்கும் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் என்னுடைய சிறிது நேர புன்னகைக்கு விலாசம் அமைத்த உங்களுக்கும், இந்ததளத்தில் கட்டுக்கோப்புடன் துணையளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் உண்மையான சந்தோஷத்துடன் நன்றி கூறுகிறேன்.

    இப்போதெல்லாம் ஏர்போர்ர்ட்டில்,இரெயில் நிலையங்களில் காத்துக்கொண்டு இருக்கும்போது தனிமையோ, கவலையோ வாட்டுவதே இல்லை. லயன் முத்து காமிக்ஸ் வாசக அன்பர்களின் கமெண்ட்டுகள் ஒரு சிறு புன்னகை பூவை இதழ்களின் ஓரத்தில் உதிர்க்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. And Am pretty sure that, எடிட்டருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அதே ஃபீலிங் தானிருக்கும்.

    உங்களது முதல் பதிவில், முதல் கமெண்ட் என்னுடையதே. அநேகமாக இரண்டாம் ஆண்டின் முதல் பதிவிலும் வந்து வாழ்த்து சொல்வேன்.

    ReplyDelete
  3. Replies
    1. முதல் வருட பதிவுலக வெற்றிப் பயணத்திற்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்! இது ஒரு துவக்கம் மட்டுமே! :)

      இவை NBS-இல் அச்சேறப் போகும் பக்கங்களா?! இப்படி வண்ணப் படங்களின் மேல், லைட் கலர் ஃபான்ட்களை பிரிண்ட் செய்தால் படிப்பதற்கு சற்று சிரமமாக உள்ளது!

      வாசகர்களுக்கு மொழிபெயர்க்கும் வாய்ப்பை அளிப்பது ஒரு சிறப்பான யோசனைதான்! :) ஆனால், இதற்கு போட்டி எக்கச்சக்கமாய் இருக்கப்போவது நிச்சயம்! குவியப் போகும் வாசகர்களின் விண்ணப்பங்களுக்கு, மொழிபெயர்ப்பு வாய்ப்புகளை எப்படி பிரித்துக் கொடுக்கப் போகிறீர்கள் சார்?! :)

      Delete
    2. பதிவை இமேஜ் ஃபைலாக போட்டால், மொபைல் மூலம் படிக்கும் வாசகர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என நினைக்கிறேன்!

      Delete
  4. தட்டு தடுமாறி italian படித்து வருகிறேன் எல்லாம் டெக்ஸ் கதைகள் மீது உள்ள காதலினால்... முயற்சி செய்கிறேன்.. என்னிடமும் கேட்டதற்கு நன்றி..

    அனைவர்க்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்...

    Happy Anniversary and Happy Christmas too...

    We love your passion more than you love it... Its hard to see such people with great passion and love towards what they do.. you are one among the blessed to have it..

    Its very nice to hear from you...
    Thankyou
    Shriram -- once again merry Christmas...

    ReplyDelete
  5. Congrats Sir and congrats to everyone. Very much delighted and wish for many more years to come. I feel my age is just one O:-)

    ReplyDelete
  6. super sir....

    today i am 6th ..

    hai friends ... i am in trichy.. any friends from trichy...!!!!

    ReplyDelete
  7. sir i didn't receive mail for new post...

    why sir .. any problem in our server or !

    friends are you receive mail for new post..

    ReplyDelete
  8. Lest it appears banal, உங்களது டீம் அலுவலர்கள் அனைவருக்கும் மறுபடியும் ஒரு Salute - take a bow! பொறுமையாகவும், passionate-ஆகவும் உங்கள் கனவுகளுக்கு ஈடு கொடுக்கும் இவர்களுக்கு ஒரு நன்றி. வெகு விரைவில் எங்காவது உங்களைச் சந்தித்திடும் ஆவலுடன் ... :):)

    Thank you Lion Comics team for re-introducing the spring in my steps this year !!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் Chief..

    ReplyDelete
  10. வாழ்த்த வயதுண்டு; வாழ்த்துகிறேன்!

    இன்னும் பல மைல் கற்களைக் கடந்து, என்றென்றும் தொடரட்டும் இந்தப் பயணம்!

    ReplyDelete
  11. டியர் விஜயன்,

    நிச்சயமாக கடந்த ஓர் ஆண்டில் நம் குழுவினர் செய்திருப்பது ஒரு சாதனையே. இதுவரை பார்வையாளர்களாய் மட்டுமே இருந்து வந்த எங்களை, தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்துவது நல்ல முயற்சி. இது வாசகர்களை இன்னும் நம் குழுமத்தோடு ஒன்றிப்போக செய்யும். அதேநேரத்தில் எதுவும் தேறவில்லையெனில், "வாசகர்களே, நீங்கள் உங்களுடைய மொழியறிவையும், நகைச்சுவை உணர்வையும் மேம்படுத்துங்கள் என்று ஒரு 'குட்டு' வைக்கவும் தவறாதீர்கள்.

    உதாரணத்திற்கு, மேலே உள்ள 'மதியில்லா மந்திரியை' இப்படியும் மொழிபெயர்ப்பு செய்யலாம்.

    #1:"யாரங்கே...எங்களை மொழிபெயர்க்க தயாராகுங்கள்... பிழை இருந்தால் தலையை சீவிவிடுவோம் (சீப்பைவைத்து)."

    #2: "வாசகர்களே, இனி நீங்களே எங்கள் 'நாக்கு'. இதுவே என் 'வாக்கு'."

    என்கிற ரீதியில் மொழிபெயர்ப்பு இருந்தால், அந்த வேலையை நீங்களே செய்வது உத்தமம். எனவே "ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது" என்று ஒரு disclaimer போட்டுவிடுங்கள்.

    மேலும் உதாரணத்திற்கு 100 பேர் இந்த மொழிபெயர்ப்பு முயற்சியில் இறங்கினால், ஒரே கதையை 100 முறை படித்துவிட்டு அதில் ஒன்றை தேர்வு செய்வதும், மற்றதை விடுவதும் சற்றே சிரமமான காரியமாய் தோன்றவில்லையா ?. உங்களுடைய அனுபவத்திற்கு உங்களுக்கே தெரியும் எது எடுபடும், எது தேறாது என்று. என்னை பொறுத்த வரை, இது இத்தனை வருட கால லயன்/முத்து வாசகர்களுக்கும், இதன் மூலமாக நாங்கள் கற்றுக்கொண்ட தமிழுக்கும் 'ஆசிரியர்'வைக்கும் தேர்வாகவே படுகிறது.

    ReplyDelete
  12. இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இந்த வலைப்பூ அமைந்திருந்தது. முகம் அறியாவிட்டாலும் தங்கள் கருத்துகளாலும், எழுத்து நடையாலும், கிண்டல்களாலும், கேள்விகளாலும், அதிரடிகளாலும் என்னை கவர்ந்தவர்கள் இங்கு பின்னூட்டம் இட்ட அனைவரும்.
    நீண்டநாள் பழகிய நண்பர்களாகவே மனதில் பதிந்துவிட்டனர்.
    வாங்கி 3வருடங்களாக என்ன உபயோகம் என்று நினைக்கவைத்த என்னுடைய கணினி இந்த வருடத்தில்தான் உபயோகப்படுத்தபட்டது .லாட்டரி சீட்டை வாங்கியவரின் மன நிலையை ஒத்திருந்தது இரவுகளில் உங்களின் பதிவுகளையும் பின்னூடங்களையும் படிப்பது.
    ஒய்வு நேரங்களின் அனிச்சை செயலானது இந்த வலைப்பூவை பார்வை இடுவது.
    நாம், நம் உறவுகள், தொழில்முறை நண்பர்கள், என்பதை தாண்டி நம் நட்பு வட்டம் மிக சிறியதே; இந்த வலைபூவினால் அது மிகப்பெரியதாக மாறியது என்று கூறினால் மிகையில்லை.
    காமிக்ஸ் சிறுவர்கள் படிக்கும் விஷயம் இன்னும் பால்யம் மாறாமல் நாம் மட்டும்தான் படிக்கின்றோமோ என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கியது இந்த தளமே !
    மனதிற்கு பிடித்த விஷயத்தை தடையில்லாமல் அனுபவிப்பது போல் சிறந்த ஆசீர்வாதம் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மனதிற்கு பிடித்த காமிக்ஸ் பிரியத்தை இந்த வருடத்தில் முழுமையாக அனுபவித்தேன்.
    இழந்த சிலவருடங்களும், பால்யத்தின் சந்தோசமும் திரும்ப பெற்றேன்.

    வாழ்த்துகளும்! நன்றிகளும்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தலைவா! கலக்குங்க!

    ReplyDelete
  15. வணக்கம் ஆசிரியரே!
    உங்களிடம் எனக்கு சிறிய வருத்தம்......

    புதிரில்லா கதையில்லை!
    விடையில்லா புதிரில்லை!

    சில பதிவுகளாய் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு விடை தராமல்
    கண்டும் காணாமல் கடந்து போகிறீர்கள்!

    உங்களிடம் வாங்கிய பொருளில் சந்தேகம்
    கேட்கும் வாடிக்கையாளனுக்கு
    விளக்கம் தரும்
    கடமையை புறக்கணிக்கிறீர்கள்,

    இதன் காரணம் எனக்கு புரியவில்லை
    இப்போதும் உங்கள் பதில் மெளனம் தான் என்றால் இனியும் இது குறித்து நான் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை
    நன்றி!

    அந்த கேள்வி:

    //வணக்கம் விஜயன் சார்!

    எனக்கு நெடுநாளாக ஒரு குழப்பம்.

    double-thrill ஸ்பெஷல் "பனியில் ஒரு பரலோகம்"
    ஜானி கதையில்
    பக்கம் 69 ல் டாக்டர்
    அகோனி இறந்து விடுகிறார்.

    பக்கம் 76 ல் டிவியில்
    மீண்டும் தோன்றுகிறார்.

    இதற்கு கதையில்
    விளக்கம்
    தரப்படவில்லையே?

    கடைசிப் பக்கம் இல்லாத துப்பறியும் நாவலை போல இந்த இடம் உறுத்துகிறது விளக்கம் தர வேண்டுகிறேன்!//

    //Msakrates : இப்போதெல்லாம் ஏராளமான புதுக் கதைகளை புரட்டி வருவதால் 3-4 மாதங்களுக்கு முந்தைய இதழ்கள் கூட ஏதோ ஒரு மாமாங்கத்தில் வெளி வந்தவைபோல் ஒரு feeling எனக்கு ! So,முடிந்தால் இன்று அந்தக் கதையைத் திரும்பவும் ஒரு முறை புரட்டிப் பார்த்து விட்டு பதில் சொல்ல முயற்ச்சிக்கிறே­னே ?!
    அதற்கிடையே நண்பர்கள் யாரேனும் சாக்ரடீசின் சந்தேகத்திற்கு விடை தயாராக வைத்திருந்தாலும் இங்கே பதிவிடலாமே!//

    ReplyDelete
    Replies
    1. டியர் Msakrates நண்பரே, உங்களுடைய கேள்விக்கு பதில் தர எனக்கு ஆசை ...புத்தகத்தை தேடினால் காணோம்..:(.நண்பரிடம் உள்ளது. வாங்கி இன்னொருமுறை படித்துவிட்டு பதிலளிக்கிறேன்.PLEASE WAIT !

      Delete
    2. From the first time you posted this question several weeks ago, I have repeatedly checked the story and I could not find an explanation. I read every story carefully but I did not even notice this the first time I read it. It is amazing how you have spotted this.

      Delete
    3. @ Msakrates,

      உங்களுக்காக இந்த கதையினை மறுவாசிப்பு செய்தேன். இந்த இடம் சற்று பசப்பலாகவே இருக்கிறது. அதாவது டாக்டர் அகோனி இறப்பதை தானே பார்த்ததாக ஜானி சொல்லுகிறார். ஆனால் அந்த particular frame-ல் அகோனியின் உருவம் முழுவதுமாய் தென்படுவதில்லை. Looks like there is a body - but the face appears to be hidden. பின்னர் நீங்கள் கூறிய பிரேமில் ஜானி பார்த்து திகைக்கிறார்.

      ஆனால் எடிட்டிங்கில் விடுபட்டது போல் தோன்றவில்லை - இந்த ஒரு கதையின் அமைப்பே இப்படி ஒரு லிங்க் இல்லாதது போலதான் திரிகிறது. To me it rhymes in tune with the standard of stories of our yesteryear heroes - எண்பதுகளில் படித்திட்ட ஜானியின் கதைகளுக்கும் இப்போது படித்திடும் கதைகளுக்கும் உள்ள தர வேறுபாடு இதிலும் தெரிகிறது என்று நினைக்கிறேன். பழைய நாயகர்களின் 'golden oldies' கதைகளுக்கு இனி ஜானி டிகேஸ்ட் வந்தால்தான் உண்டு என நினைக்கிறேன்.

      Time to look towards Wayne Shelton, Thorgal, Gill Jordan, Largo Winch etc etc ....!

      Delete
  16. வாழ்த்துக்கள், தங்கள் வலைப்பதிவு மென்மேலும் தொடர! ஒரு ஹாட்-லைன் விட உங்களின் வலைப்பூ எங்களுக்கும் தங்களுக்குமிடையே உடனுக்குடன் நல்லதொரு பரிமாற்றத்தை கொண்டு சென்றது என்றல் மிகையல்ல...நமது காமிக்ஸ் எனும் மேட்சில் இரண்டாவது இன்னிங்க்ஸ் இந்த அளவு ஒரு மெகா ஹிட் ஆனதற்கு இதுவும் (இதுதான்) காரணம்.

    ஸ்கூல் படிப்பையே ஒருவழியாக தட்டுத்தடுமாறி முடித்தேன். பரீச்சை நேரங்களில் ஜுரம் வராத குறைதான். அந்த ஜுரத்துடன் இப்போது நான் translate என்னும் குளத்தில் / கடலில் குதிக்க தயாராகிவிட்டேன். ஜுரம் வந்தாலும் விடமாட்டோம்ல? நானும் translate பண்ணப்போறேன், நானும் translate பண்ணப்போறேன், நானும் translate பண்ணப்போறேன்.!? யாரு படிக்க?

    ReplyDelete
  17. Congrats for wonderful first year. Best wishes for second year.

    ReplyDelete
  18. Phone moolum parkum enaku ondrumay puriavillai(

    ReplyDelete
  19. //Karthik Somalinga:
    இவை NBS-இல் அச்சேறப் போகும் பக்கங்களா?! இப்படி வண்ணப் படங்களின் மேல், லைட் கலர் ஃபான்ட்களை பிரிண்ட் செய்தால் படிப்பதற்கு சற்று சிரமமாக உள்ளது!//
    நண்பர் குறிப்பிட்டிருப்பது உண்மைதான்! பின்னணியில் வர்ணப்படங்கள் வந்தால்ஈ எழுத்துக்களை கறுப்பில் போட்டால் நல்லது. அல்லது, முன்பு கறுப்பு வெள்ளையில் செய்ததுபோல, பார்டர்களில் மட்டும் படங்களைப் போட்டால் படிப்பதில் சிரமம் இராது.
    ------------------
    பதிவுலகின் முதலாண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள்.

    இன்னும் பல பதிவுகள், சுவாரஸ்யங்களோடு தொடர்ந்தும் வரட்டும். உங்களுக்கும், உங்கள் நிறுவன அலுவலர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வலையுலக வாசகர்களை வாஞ்சையாய் வாரியனைத்த வாடாத வலைப்பூவின் வாசனையாய் வலம்வரும் திரு.விஜயனுக்கு வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. எதிர்காலத்துல பெரிய Translator-ஆ வருவீங்க போல தெரியுதே! :)

      Delete
    2. மதிதன்னில் மிதிபட்டாலும் வதனமதில் வீரங்கொள்ளும் வேங்கைகுல வாரிசுகள் யாம்!

      விதிதன்னில் சிறைப்பட்டாலும் சலனமன்றி சகசம்புரியும் சத்திரியர்குல புத்திரர்கள் யாம் !

      ஈரோட்டு பாலகனை பாராட்ட எத்தனித்தால்
      சினங்கொண்டு சிறுகூட்டம் போராடச் சித்தங்கொள்ளும்!

      பார்மகிழும் காரணியை பாசமிகு தோழனேன்றால்
      இக்கணத்தின் முதல்நோடியுந்நேசத்துடன் முகமலரும்!

      உஸ்ஸ்...அப்பட....
      நானும் மொழிபெயர்க்க recommend செய்த விஜய்க்கு ஒரு சிறு tribute!!! :

      Delete
    3. அச்சச்சோ! இலக்கியம் தவிர்னு முந்தா நேத்தே எங்க கருப்புக் கிழவி பாடினாங்களே! தெரியாதா உமக்கு?

      Delete
    4. யாரங்கே? உடனடியாக அரசவைப் புலவரை வரச்சொல்! எனக்காக விஸ்கி-சுஸ்கிப் புலவரால் புனையப்பட்டிருக்கும் இப்பாடலோடு கொஞ்சம் சாடலும் ஓங்கியிருப்பதாக  ஐயப்படுகிறேன். அரசவைப் புலவர் என் ஐயத்தைத் தீர்த்தபின் அந்த மதுபானப் புலவருக்கு பொற்கிழி பரிசில் அளித்துத் துதிப்பதா அல்லது மதம்கொண்ட யானையின் கால்களில் வைத்து மிதிப்பதா என்பதை முடிவு செய்கிறேன்.

      Delete
    5. இந்த தமிழ் நடை சில காலமாக படித்த மாதிரி இருக்கே ...!
      விஸ்கி-சுஸ்கி: ...ஆங்?!! அவனா நீ ....???? :) :)

      Delete
    6. Comic lover:

      அதேதான்! எங்களுக்கு 'விருது' வழங்கப்பட்டபின், 'ஆள் பிடிக்கும்' அமைச்சராகவும் எனக்குப் பதவி நியமனம் அளிக்கப்பட்டதே; அதேதான்! :)

      Delete
    7. விஸ்கி-சுஸ்கி : எனக்கும் இந்த பாடலின் உள் கருத்து புரியவில்லை ! ஆனால் உங்கள் மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை உள்ளது ! தெளிவாக உள்ளதை உள்ளபடி இங்கே எழுதலாமே நண்பரே ! இங்கு தெளிவாக எழுதுவதே ஒரு தெளிவான சிந்தனையாக தங்களைப் போன்ற ஒரு சிறந்த சிந்தனையாளருக்கு பெருமை தரக்கூடியதாக இருக்கும் ! கூற வந்ததை இயலுமெனில் இங்கு வெளிப்படையாக எழுதினால் மட்டுமே இங்கு நல்லதை நினைப்பவர்களுக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கும் !

      Delete
    8. விஸ்கி-சுஸ்கி : //'ஆள் பிடிக்கும்' அமைச்சர்//
      அந்த பதிவு யாரால் எழுதப்பட்டு, அவரால் எங்கு அனுப்பப்பட்டு, போலி மரமண்டை பெயரில் எவரால், எங்கிருந்து இங்கு பதிவிடப்பட்டது என்று எனக்கு நன்றாகவே தெரியும் ! எனவே தயவு செய்து விஸ்கி-சுஸ்கி மீது யாரும் களங்கம் ஏற்படுத்த வேண்டாம் !

      Delete
  21. உங்க ஒரு வயசுக்கு வாழ்த்துக்கள் சார்.

    வலைக்குள்ள மாட்டி வெற்றிகரமா முதல் வருடம் பூர்த்தி செஞ்சிட்டீங்க.

    தொடர்ந்து வலைக்கு உள்ளேயே இருங்க. உங்கள ரிலிஸ் பண்றதா இல்லை. :)

    ReplyDelete
  22. வலைரோஜா வில் முதல் அடியை எடுத்து வைத்து வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டீர்கள்! வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்!அடுத்த வருடத்தை இது போல் வெற்றியோடு துவங்கும் நீங்கள் எங்களையும் உடன் அழைத்து செல்வீர்கள் என்று சந்தோஷமாக நம்பிக் கொண்டிருக்கிறோம்! கனவுகள் கலைக்கப்படாவிட்டால் இங்கே கற்பனைகள் கூட நிஜமாகும்!!!

    ReplyDelete
  23. Great news!!! - I wanna translate too!!!

    ReplyDelete
  24. Sir,

    More than 21000 views per month, This is nothing but astonishing and nothing but a Lion-Muthu Cult.

    Many people including me are coming here just because we are addicted to for Lion and Muthu comics since childhood and the certain style of your writing which gives a sense of enjoyment and that you are rocking with us since the early 80s. It is nothing but we are attracted to a legacy

    Happy christmas to all fellow friends.

    -Organic Yanthiram

    ReplyDelete
  25. திரு விஜயன் அவர்களே ....

    வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் நமது காமிக்ஸ் பயணம் மிக சிறப்பாக அமைய இந்த ஒரு வருடம் இனிய தொடக்கமாக இருக்கும்.

    சிறு வயதில் எனக்கு அறிமுகமான நமது காமிக்ஸ், வாழ்க்கை பயணத்தின் அவசரத்தில் என்னை விட்டு விலகியது (சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு)

    சென்ற டிசம்பரில், அலுவலகத்தில் பொழுது போகாத (!) ஒரு மாலை நேரத்தில் திரு கிங் விஸ்வா அவர்களின் வலைப்பூ மூலமாக நமது வலைப்பூ பற்றி அறிந்து கொள்ள முடிந்தது எனது பாக்கியமே.

    பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்னை விட்டு விலகி காமிக்ஸ் பாதையை மீண்டும் கண்டு அதில் பயணிக்க முடிந்தது மிகவும் சந்தோசமே.

    இதை விட முக்கியமாக, நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் அறிந்து / தொடர்பு கொள்ள முடிந்தது.

    சென்ற வருட புத்தக திருவிழாவில் தங்களை சந்தித்தது (முதல் முறை) மிகவும் மகிழ்ச்சி அளித்த விசயங்களில் ஒன்று (அடுத்த சந்திப்பு வரும் நெவெர் பிபோர் புத்தக வெளியீட்டில்)


    வரும் காலம் வசந்த காலமாக திகழ எனது வாழ்த்துக்கள் ....

    நன்றிகளுடன்
    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  27. Congrats for completing successful 1st year in blog and to continue interesting posts in upcoming years! Merry Christmas!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

    ஒரு சந்தேகம்::::
    நமது வாசகர் மதி இல்லா மந்திரி கதையை மொழி பெயர்க அனுப்பிய கதைகளை, வாசகர் தனது வலை தளத்தில வெளிட வாய்புகள் அதிகம்!! அதனை எப்படி தடுக்க முடியும்? இது போன்றவற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்திர்களா? இப்படி கதைகளை வெளிடுவதால், அசல் (original) உரிமையாளர் ஏதும் கூற மாட்டாரா? நீங்கள் கண்டிப்பாக இது பற்றி யோசித்து இருப்பீர்கள் என நம்புகிறன்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாதத்தில் அர்த்தம் உள்ளது. முதலில் soft copy யை இப்படி பரிமாறிக்கொள்ள ராயல்டி ஓனர் ஒப்புக்கொள்வாரா?? அப்படி ஷேர் செய்யும் போது நண்பர்களிடம் NDA அக்ரிமென்ட் போடும் ஐடியா உள்ளதா???
      //நமது வாசகர் மதி இல்லா மந்திரி கதையை மொழி பெயர்க அனுப்பிய கதைகளை, வாசகர் தனது வலை தளத்தில வெளிட வாய்புகள் அதிகம்!//
      கவலை அளிக்கும் சங்கதி!முதலில் CONTROL செய்வது சிரமம். soft copy இல் watermark வைத்தால் யாரிடம் இருந்து கசிந்தது என்பதை சுலபமாக அறியலாம். CA சாத்தியம் PAவுக்கு சாத்தியம் மிக குறைவு

      Delete
    2. @ Parani from Bangalore and விஸ்கி-சுஸ்கி:

      நானும் இது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

      1) ஆர்வ மிகுதியில் சிலர் தங்களது மொழிபெயர்ப்பினை வலையேற்றுவது நடந்துவிடக்கூடிய ஒரு செயல்தான். பல scanlation தளங்கள் அரும்பி வரும் வேளையில் நாம் Intellectual Property protection குறித்த கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

      2) இவ்வாறு வலையேற்றப்படும் மாதிரி translations மிகும்போது ஒரிஜினல் பதிப்பாளர்களுக்கு நம்மேல் மதிப்புக் குறையாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு வலையேற்றப்படும் translations - will actually encourage those who are in the business of printing heftily priced, pirated multi-color tamil comics in the name of 'private circulation only' under the banner of Classic Comics Club. We should be careful that such activities do not give a chance to legitimize the claims of this gang of amoral practitioners who morph themselves as folks responsible for re-launching tamil comics.

      I am sure the Editor would have thought twice about these things before making such an announcement. He has been in this field for decades.

      Delete
    3. @Parani, விஸ்கி-சுஸ்கி & ராகவன்:
      நியாயமான வருத்தம்தான்! ஆனால், காமிக்ஸின் ஏதாவது ஒரு பக்கமோ அல்லது ஒரிஜினல் தலைப்பு மட்டுமோ கிடைத்து விட்டாலே, அதன் மூல ஸ்கேன்களை இன்டர்நெட்டில் தேடி டௌன்லோட் செய்திட வாய்ப்பிருக்கும் இன்றைய நிலையில், இத்தகைய கட்டுப்பாடுகள் எவ்வகையில் உதவிடும் என்பது புரியவில்லை.

      ஆனால், நீங்கள் சுட்டிக்காட்டும் இன்னொரு அம்சம் மறுக்க இயலாதது! இவ்வாறாக Source PDF-களை வாசகர்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், மூலப் பதிப்பாளர்களின் நம்பிக்கையை ஆசிரியர் இழந்து விடலாகாது! எனவே PDF / Soft Copy அனுப்புவதற்கு பதிலாக, அவற்றை "கருப்பு வெள்ளைத் தாளில்" அச்சிட்டு, மொழிபெயர்க்க விரும்பும் வாசகர்களுக்கு அனுப்பிடலாம்.

      ஒவ்வொரு Page, Panel & Baloon-க்கும் ஒரு identification நம்பர் கொடுத்து விட்டால் வாசகர்கள் தங்கள் மொழிப்பெயர்ப்பை அந்த ID நம்பர்களுக்கு எதிரே - வெள்ளைத் தாளில் எழுதியோ, பிரிண்ட் செய்தோ அனுப்பிடலாம்! பலூன்களில் அந்த நீண்ட வசனங்களை திணிக்கும் 'சுவாரசியமான' பொறுப்பை நமது எடிட்டரிடமே விட்டு விடலாம்! ;)

      உதாரணத்திற்கு:
      * P7P2B1 (Page Number 7, Panel Number 2 & Balloon Number 1: இந்த யோசனை உங்களுக்கு பிடித்திருக்கிறதா மன்னா?!

      * P7P2B1 (Page Number 7, Panel Number 2 & Balloon Number 2: கிர்ர்ர், சரியான மொக்கை ஐடியா.... யாரங்கே, மதியில்லா மந்திரியை உடனே நாடு கடத்துங்கள்!!!

      :) :) :)

      Delete
    4. P7P2B1 & P7P2B2 என்று படிக்கவும்! :)

      Delete
    5. மொழி பெயர்க்க படம் இல்லாமல், வெறும் பலூன், உரையாடல் மற்றும் கதையில் வரும் கதாபாத்திரம் பெயர் மட்டும் குறிப்பிட்டு அனுப்பினால் சில பிரச்னைகளை தவிர்க்கலாம்! ஆசிரியர் இந்த தொழிலில் நிறைய அனுபவம் உள்ளதால் நம்மை விட சிறப்பான யோசனை உடன் இர்ருபார்!

      Delete
    6. "ஆசிரியர் இந்த தொழிலில் நிறைய அனுபவம் உள்ளதால் நம்மை விட சிறப்பான யோசனை உடன் இர்ருபார்!"
      உண்மை! உண்மை!!

      Delete
  29. Today i received the final black and white book of johny its very good printing and papers expecting classics issues like this , I hope all are enjoy the chennai book fair with our Editor... Happy New Year to all friends...

    ReplyDelete
  30. வருடம் ஒன்றை வெற்றிகரமாக Complete செய்ததற்கு வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையும், உற்சாகமும் இரட்டிப்பாகிட வாழ்த்துக்கள்.

    மொழிபெயர்ப்பு தொடர்பான உங்களின் முடிவும், எங்களின் மீதான உங்களின் நம்பிக்கையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. சோதனை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எனக்குள் தோன்றிய வருத்தம் கலந்த சந்தேகம்:

    இதுவரை நம் காமிக்ஸின் உயிர்நாடியாக அனைவரும் கருதுவது மொழிபெயர்ப்பே. அதில் இவ்வாறு விளையாடிப் பார்க்க வேண்டுமா? லக்கி லூக் மற்றும் மதியில்லா மந்திரி இருவரும் வெற்றி பெற்ற கதாபாத்திரங்கள். அதிலும் ஒரிஜினலை விட நம் மொழிபெயர்ப்பில் மதியில்லா மந்திரியின் நகைச்சுவை செம தூக்கலாக இருக்கும்.

    இப்போது பல்வேறு வாசகர்களின் மொழிபெயர்ப்பால் அது பாழாகிவிடுமோ என்று தோன்றுகிறது.

    நீங்கள் முயற்சித்துப் பார்க்க வேண்டுமென்றால். "இரத்த வெறியன் ஹேகர், க்ரைம் க்விஸ், பரட்டை சிங்கம்" போன்றவற்றில் முயற்சிக்கலாமே.

    ஆஸ்தான ஹீரோக்களில் இடம் பெற்ற லக்கி லூக் போன்றவர்களின் புதிய கதைகளில் ஏன் இந்த சோதனை முயற்சி?

    ReplyDelete
    Replies
    1. @ Soundar,

      "இப்போது பல்வேறு வாசகர்களின் மொழிபெயர்ப்பால் அது பாழாகிவிடுமோ என்று தோன்றுகிறது"

      எனக்கும் இந்த பாயிண்ட் உறைத்ததால்தான், instead of free translation, ஒரு போட்டி வைக்குமாறு கோரியிருந்தேன் - பரிசுடன். We will the Editor's opinion after he reads the different inputs on this translation opportunity.

      Delete
    2. Dear Vijayan Sir,

      எனக்கு நமது லயன் காமிக்ஸின் தனித்தன்மை கெட்டுவிடும் என்றே தோன்றுகிறது. எனக்கு பரிசு முக்கியமல்ல. வேண்டுமானால் குண்டன் பில்லியில் கூட முயற்சி செய்து கொள்ளுங்கள். பிரதான ஹீரோக்களில் வேண்டாம். It is my request as a fan of our comics.

      @Comic Lover (a) சென்னை ராகவன்: Thanks for your comments friend.

      Delete
    3. @ராகவன்: //"இப்போது பல்வேறு வாசகர்களின் மொழிபெயர்ப்பால் அது பாழாகிவிடுமோ என்று தோன்றுகிறது" - எனக்கும் இந்த பாயிண்ட் உறைத்ததால்தான், instead of free translation, ஒரு போட்டி வைக்குமாறு கோரியிருந்தேன்//

      லாஜிக் உதைக்கிறதே?! :) போட்டி, பரிசு என்று வைத்தால் மொழிபெயர்க்க விரும்பும் வாசகர்களின் எண்ணிக்கை கூடத்தானே செய்யும்?! :) மொழிபெயர்க்க விரும்புவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை (Refundable) செலுத்தி, Non-Disclosure Agreement-ல் கையெழுத்திட வேண்டும் என்று சொன்னால் வேண்டுமானால் நீங்கள் நினைப்பது நடக்கலாம்! :D

      Delete
    4. @ karthik:

      பரிசளித்து ஊக்கப்படுத்திடுன் பட்சத்தினில் வாசகர்கள் கூடலாம் என்பது சாத்தியமே. அனால்:

      1) ஒரு போட்டி என்று வந்துவிட்டாதால் கூடுதல் பெருமை உள்ளதால் quality of translation-க்கு சிரமமேற்கொள்வார்கள்
      2) random translations ஊகுவிக்கபடாமால் ஒரு போட்டி முறைப்படுத்தப்பட்டால் - ஒரிஜினல் பதிப்பாளர்களிடம் அனுமதி மற்றும் விளக்கங்கள் கூறிடல் எளிதாகிடுமோ என்ற ஒரு angle

      Delete
    5. @ராகவன்:
      ஆம், நீங்கள் சொல்லும் இரண்டு காரணங்களும் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளன!

      ஆனால், வெற்றி பெற்ற காமிக்ஸ் கதைகளுக்கு இந்த விஷப்பரிட்சை வேண்டாமே என்று பல வாசக நண்பர்கள் மிகவும் வருத்தப்படுவதால், சோதனை மொழிப்பெயர்ப்பு முயற்சிகளை "நாலு கால் மழலைகள்" ஒரு பக்க கார்ட்டூனுக்கு மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன்! :) :) :)

      இன்னும் கொஞ்சம் நேரத்தில் IND-PAK T20 மேட்ச் வேறு துவங்கவிருப்பதால், ஆசிரியரின் கருத்துக்கள் நள்ளிரவில்தான் வரும் என நினைக்கிறேன்!!!

      Delete
    6. நாம் மொழிபெயர்ப்பு செய்துகொடுத்தாலும் அதில் தரமானதையே ஆசிரியர் தேர்ந்தெடுப்பார்.
      ஆகையால் தரம் கெட்டுவிடும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
      கண்டிப்பாக ஆசிரியர் தரப்பில் இருந்து ஒரு மிக பெரிய Step ahead towards us .
      அவர் இவ்வளவு நம்பிக்கை வைத்து நமக்கு வாய்பளிக்கும் பொழுது அதனை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என தான் யோசிக்க வேண்டும்

      //இரத்த வெறியன் ஹேகர், க்ரைம் க்விஸ், பரட்டை சிங்கம்" போன்றவற்றில் முயற்சிக்கலாமே.//
      //சோதனை மொழிப்பெயர்ப்பு முயற்சிகளை "நாலு கால் மழலைகள்" ஒரு பக்க கார்ட்டூனுக்கு மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன்//
      கண்டிப்பாக ஒரு பக்கத்தில் நமது திறமையை நிரூபிக்க முடியாது கண்டிப்பாக 4 இல் இருந்து 8 பக்கங்கள் என்பது ஒரு reasonable வாய்ப்பு என்பது எனது கருத்து,

      //P7P2B1 (Page Number 7, Panel Number 2 & Balloon Number 1: இந்த யோசனை உங்களுக்கு பிடித்திருக்கிறதா மன்னா?!//
      எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

      Delete
    7. @கிருஷ்ணா:
      //சோதனை மொழிப்பெயர்ப்பு முயற்சிகளை "நாலு கால் மழலைகள்" ஒரு பக்க கார்ட்டூனுக்கு மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன்//

      அது சும்மா ஜாலிக்காக சொன்னது! பூனை கார்ட்டூன்ல மொழி பெயர்க்க வசனமே கிடையாதே?! ;) வித விதமா பூனை சவுண்ட் எஃபெக்ட் அங்கங்க போட்டா வேலை முடிஞ்சிரும்! :)

      Delete
    8. @Comic Lover (a) சென்னை ராகவன் - //ஒரு போட்டி என்று வந்துவிட்டாதால் கூடுதல் பெருமை உள்ளதால் quality of translation-க்கு சிரமமேற்கொள்வார்கள்// - நண்பரே அனைவருமே 200% ஆர்வத்துடன் உழைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் அதை நேரடியாக பிரதான ஹீரோக்களில் செயல்படுத்தாமல் சிறிய கதைகளில் முயற்சி செய்துவிட்டு அப்புறம் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் வாய்ப்பளிக்கலாமே. எவ்வளவு நன்றாக எழுதுபவராக இருந்தாலும் முன் அனுபவமோ பயிற்சியோ இன்றி கரையேறுவது கடினம்.

      குண்டன் பில்லி, பரட்டை தலை ராஜா போன்றவற்றில் இருந்து ஆரம்பித்தால் பிரச்சனை வர வாய்ப்பு குறைவு. இல்லையென்றால் சூடான சோற்றில் நடுவில் கை விட்டு அள்ளுவது போல் ஆகிவிடும் அல்லவா?. - இது என் கருத்து



      @கிருஷ்ணா வ வெ - //கண்டிப்பாக ஒரு பக்கத்தில் நமது திறமையை நிரூபிக்க முடியாது கண்டிப்பாக 4 இல் இருந்து 8 பக்கங்கள் என்பது ஒரு reasonable வாய்ப்பு என்பது எனது கருத்து// - குண்டன் பில்லி, பரட்டை தலை ராஜா போன்றவை குறைந்தது 4 பக்கங்கள் இருக்கும் நண்பா :-)

      Delete
    9. ஒருவேளை லக்கி லூக் மற்றும் மதியில்லா மந்திரியின் புதிய கதைகளில் இந்த புதிய முயற்சி தோல்வியடைந்தால் இழந்த அந்த கதையை உடனடியாக "Reprint" செய்ய இயலாதல்லவா. அதுதான் என் மிகப்பெரிய கவலை.

      Positive ஆக யோசிக்க வேண்டியது அவசியம்தான். அதே நேரத்தில் முன்எச்சரிக்கையும் தேவைதானே.

      Delete
    10. @Tamil Comics - SoundarSS :
      //குண்டன் பில்லி, பரட்டை தலை ராஜா போன்றவை குறைந்தது 4 பக்கங்கள் இருக்கும் நண்பா :-)//
      ஆனால் அவைகள் இன்னும் வழக்கில் உள்ளனவா எனபது தெரியவில்லை நண்பா:)
      //சூடான சோற்றில் நடுவில் கை விட்டு அள்ளுவது போல் ஆகிவிடும் அல்லவா?//
      உங்கள் பயம் புரிகிறது.ஆனால் எனக்கு என்னவோ தரம் இல்லாமல் இருக்கும் வாய்ப்பு மிக மிக குறைவே என தோன்றுகிறது.ஆகையால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

      Delete
    11. எனக்கு நமது நண்பர்களின் மீது மிக நம்பிக்கை உள்ளது.
      நம்ம கார்த்திக்,விஜய் போன்றோரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்களை நாம் பார்த்துள்ளோம்
      ஆகையால் நல்லதொரு முயற்சி என்றே தோன்றுகிறது.
      நான் 100 சதவீதம் அவர்கள் மீது Bet கட்ட தயார்.

      Delete
    12. கிருஷ்ணா வ வே:

      நண்பர்களின் திறமை மேல் எனக்கும் பரிபூர்ண நம்பிக்கை உள்ளது. நமது காமிக்ஸ் படித்ததனாலே கூட திறமை வளர்த்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.

      என் பயம் எல்லாம்:

      நாம் 200 பேர் முயல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவரது முயற்சி வெற்றியடைந்துவிடுகிறது. பங்கு பெற்ற சிலர் ஒரு ஆர்வக்கோளாறினால் வலையேற்றம் செய்துவிட்டால் - இப்போது கூட அல்ல - ஒரு இரண்டு வருடம் கழிந்தே என்று கொண்டிடுங்களேன் - அப்போது pirated comic publishers / SCANLATION bloggers கூற்று இப்படியும் இருந்திடலாமே: "லயன் காமிக்ஸ் வலையேற்றினால் வாசகர்கள் சரி, நாங்கள் செய்தால் தவறா?" என்று கேட்டுவிட்டால் - முறையாக செயல்படும் நமது குழுவினர்ற்கும் சேர்ந்தல்லவா அவப்பெயர் வந்திடும்?!! So there must be stringent IP protection methods.

      கார்த்திக் சொன்னது போல refundable deposit plus non-disclosure agreement வைத்து, ஒரு போட்டியாகவும் அறிவித்து விட்டால், உண்மையாக ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள். There may be several other ideas in place of refundable deposits as well. As I said originally, the Editor would have thought about all these chances of misappropriation of Intellectual Property. Let us see.

      Delete
    13. "லயன் காமிக்ஸ் வாசகர்கள் வலையேற்றினால் சரி, நாங்கள் செய்தால் தவறா?" - sentence corrected!

      Delete
    14. நண்பரே அவ்வாறான பயங்கள் எனக்கும் இல்லாமல் இல்லை.
      ஆனால் எனது கருத்து நம்மை நம்பி ஆசிரியர் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்கும் பொழுது நாம் எப்படியாவது அந்த முயற்சியை எப்படியாவது வெற்றி ஆக்க வேண்டும் என்பதே.அதற்கு நாம் என்னவகையான பாதுகாப்பான முறைகள் எடுக்க வேண்டுமோ அதனை செய்ய வேண்டும்.

      அதுவும் இல்லாமல் ஆசிரியர் அதனை எவ்வாறு நடைமுறை படுத்த போகிறார் என்பதை நாம் இன்னும் அறியவில்லை..
      அதுவரை சற்று பொறுமை காப்போமே.

      Delete
  31. அன்பின் எடிட்டர்,

    முதல் வருட பதிவுலக நிறைவுக்கு வாழ்த்துகள். நீங்கள் பதிவு எழுத ஆரம்பித்தது, சமீபத்தில் தான் என்ற எண்ணம் நிலைத்து நிற்கும் போது, அதற்குள் ஒரு வருடம் உருண்டோடி விட்டதை கண்டு ஆச்சர்யபடாமல் இருக்க முடியவில்லை. இடைபட்ட இம்மாதங்களில், உங்களை நேரில் சந்திக்கும் வாசகர்களுக்கு மட்டும் கிடைத்து கொண்டிருந்த அந்த நேரடி உணர்வை, பதிவுகள் மூலம் பல வாசகர்களை உணர செய்தது, உங்கள் எழுத்துகளில் உள்ள வெற்றியை பறைசாற்றும்.

    பல காலமாக நான் உட்ட பல காமிக்ஸ் வாசகர்கள் உங்களை இணைய உலகிற்கு வர சொல்லி கேட்டிருந்தும், கடைசியில் உங்கள் ஜுனியர் மூலமாவது அது நிறைவேறியதே. ஆரம்பத்தில், ஏற்கனவே நடந்த கோஷ்டி பூசல்கள், மற்றும் போலி ஐடி சிகாமணிகளின் சித்துவேலையில், உங்கள் பதிவையையும் சந்தேக கண்ணோடு பார்க்க வைத்தது உண்மையே. அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக இது உங்கள் தளம் தான் என்று உறுதிபடுத்தி கொண்ட பிறகு, நான் அதிகிம் வாசிக்கும் காமிக்ஸ் தளமாக இது மாறியது.

    இந்த ஒரு வருட நிறைவை கொண்டாடும் விதமாக வாசகர்களையும் மொழிபெயர்ப்பில் பங்களிக்க அழைத்திருப்பது வரவேற்கதக்க செயல். இதன் மூலம் மொழிபெயர்ப்பில் குறை என்ற அந்த குற்றசாட்டுகளை, கொஞ்சமாவது சமம் படுத்த முடியும் என்று தோன்றுகிறது. ஆனால், அதன் வெற்றி தற்போதைய இதழ்கள் மொழிபெயர்க்கபடுவதில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். - 6,8 பக்கங்களை செம்மைபடுத்தோடு மட்டும் அல்ல.

    2013 ல் நமது லயன் முத்துவின் தரம் இன்னும் மேம்படும் சாத்தியகூறுகுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. தமிழ் காமிக்ஸின் ஒரே எஞ்சிய பதிப்பகம் என்ற விதத்தில் அதற்கான கடமையும் உங்களுக்கு உண்டு என்பது தாங்கள் அறியாதது அல்லவே.

    ReplyDelete
    Replies
    1. Rafiq u always rock man! hope u update ur blog too :p

      Delete
  32. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. ---

    ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

    கடந்து போல ஒரு வருடத்தில் நாள் தவறாமல் நான் வந்து சென்ற வலைத்தளம் இதுவே... அதுவே இதன் வெற்றிக்கு எடுத்துக்காட்டு.

    காலப்போக்கில் தன்னை சீர் செய்துகொள்ளாத எதுவும் நிலைப்பதில்லை. அந்த வகையில், அச்சுத்தாள் தரம், கலர், பிரிண்டிங், அழகிய பேக் மற்றும் வலைத்தளத்தில் அப்டேட் என்று நிகழ்காலத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தியதால், லயன் - முத்து காமிக்ஸ் காலத்தைக் கடந்த ஒன்றாக இருக்கும், இருப்பது ஆச்சரியமில்லை.

    *****
    இன்று குமுதம் அரசு பதில்களில் நம் முத்துகாமிக்ஸ் - காற்றில் கரைந்த கப்பல் பற்றி இடம் பெற்றிருந்தது மற்றுமொரு மகிழ்வளிக்கும் விஷயம்
    *****

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ------

    ReplyDelete
  34. இளைப்பாறியது இங்கு சில நாட்களே என்றாலும் என்றுமே இனிய நினைவிது! காமிக்ஸ் எனும் தமிழ் சரித்திரத்தில் அழியாத புகழிது! மழை விழுகின்ற இடம் பொறுத்தே ஆறு இனிப்பாகிறது! கடல் உப்பாகிறது! குட்டை சேறாகிறது! கங்கை கலசமாகிறது ஆறு நெளிந்து செல்கிறது என்று நடுநிலை கொண்டால் கடல் நீர் எல்லாம் குடிநீராகி விடுமா என்ன! எனவே நமக்கு நாம் தான் சாட்சி! அதுவே அனைவரின் மனசாட்சி! வெற்றிகள் தொடரட்டும்! காமிக்ஸ் வேட்கை கொண்ட உள்ளங்கள் என்றுமே இங்கு துணை இருக்கட்டும்! இன்று இமயத்தை தொட்டுவிட்டோம்! இனி எவரெஸ்ட் யும் எட்டி பிடிப்போம்!

    ReplyDelete
  35. முதல் வருடத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் சார்.. நண்பர்கள் கூறுவது போல்,
    நிறைய பேர் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது. உங்கள் நிறுவனத்தின் சிறப்பான மொழி பெயர்ப்பை வைத்துதான்.
    அந்த சிறப்பை பல பேரிடம் கொடுத்து வீணாக்க வேண்டாமே.கபிஷ்,பரட்டைத்தலை ராஜா,குண்டன் பில்லி,
    விச்சு கிச்சு போன்றவற்றில் வேண்டுமாணால் முதலில் முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  36. பாலோடு கலந்த நீர் பாலாகிறது! கடலோடு கலந்த நீர் கடலாகிறது! உழவுக்கு இறைத்த நீர் விழலுக்கும் பாய்கிறது! தலை உயர்த்தி விண் நோக்குவதால் பதர்கள் பக்குவம் அடைந்து விடுவதில்லை! தலை குனிந்து நிலம் பார்ப்பதால் முற்றிய கதிர்கள் பயனற்றுப் போவதில்லை! நாங்கள் இங்கே பாலோடு கலந்த நீரானோம்! அதனாலேயே அது போல் சுவை கொண்டோம்! எனினும் இயற்கையில் நாங்கள் இங்கு நீர் தானே! காமிக்ஸ் தாகம் தணிக்க வந்த வானம்பாடிகள் நாங்கள்! எங்களுக்கு பருகத்தெரியும்! பாடத்தெரியும்! இசைக்கத்தெரியும்! ஆனால் இயற்றத் தெரிந்தாலும் மொழிப்பெயர்ப்பை தங்கள் மூவர் அணி மட்டுமே செய்யவேண்டும்! இதுவே சிறந்தது! இதுவே உயர்ந்தது! இதுவே வரும் காலத்தில் குழப்பமற்றது! இதுவே தம் உயர் நிலை என்றும் இறங்கா நிலை கொண்டது!

    ReplyDelete
  37. டியர் எடிட்டர் விஜயன் சார்,
    நமது வலைத்தளம் ஓராண்டு நிறைவு செய்வதற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். மேலும் நூறாண்டுகள்! தொடர வாழ்த்துகள். காமிக்ஸ் படிக்கும் அனைவர்க்கும் படைக்கும் ஆற்றல் இருக்காது. எனவே தங்கள் முயற்சியின் பலன் வரும் நாட்களில் தெரிய வரும். புது முயற்சிக்கு நன்றி.

    விஜயன் சார், ஒரு சின்ன வேண்டுகோள். nbs இதழை ஜனவரி 8 அல்லது 9 ஆம் தேதியே அனுப்ப பாருங்கள் சார். அப்போதுதான் பொங்கலுக்குள் சந்தாதாரர்களுக்கு இதழ் கிடைக்கும். இல்லாவிட்டால் தபால்துறையின் தொடர்ச்சியான பொங்கல் விடுமுறை முடிந்து ஒருவாரம் கழித்து தான் இதழ் கிடைக்கும். இதை தவிர்க்க ஆவன செய்யுங்கள் சார். ப்ளீஸ்.

    எனக்கு இன்னும் ரிப்போர்ட்டர் ஜானியின் மரணத்தின் நிசப்தம் கிடைக்கவில்லை!
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  38. This is a Never Before muyarchi, best wishes to editor and future translators. 5 posts within a month after august.

    Editor sir,
    Congrats for finishing one year in blogging and thank you for providing quality blog posts. Is it possible to turn on advertisment, in that way you can make some money for your hard work in creating blog posts. Which will eventually help in getting more comics.

    ReplyDelete
  39. ஓராண்டு நிறைவுக்காக நம் எடிட்டருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் இந்த நேரத்தில், இவ்வலைப்பூ உருவாகக் காரணமான; இன்டர்நெட்டின் மகத்தான வலிமையை நம் எடிட்டருக்கு உணர்த்திய அவரது மகன் விக்ரமிற்கு இத்தருணத்தில் நாம் நன்றி தெரிவிக்காவிட்டால்  'நன்றி மறந்தவர்கள்' லிஸ்டில் நாளைய வரலாறு நம்மையும் சேர்த்துவிடாதா?!

    இவ்வலைப்பூவினால்,
    * தினமும் சில நிமிடங்களோ, பல மணி நேரங்களோ இன்பமாய் பொழுது கழிகிறது.
    * காமிக்ஸ் தொடர்பான எந்தக் கேள்வியும் கேட்டு உடனடியாகப் பதிலும் பெற முடிகிறது.
    * காமிக்ஸ் உலகில் நடப்பதை உடனுக்குடன் அறியமுடிகிறது.

    மேற்கண்ட காரணங்களால்,
    * காமிக்ஸ் மீதான காதல் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
    * வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாகிறது.
    * அருமையான பல நண்பர்களின் நட்பு கிடைத்திருக்கிறது.
    * அதனால், பழைய காமிக்ஸ்களில் சில படிக்கவும் கிடைத்திருக்கிறது. :)

    இவை அனைத்தும் நிகழப் பின்புலமாய் அமைந்த விக்ரமிற்கு நிறையவே கடமைப்பட்டிருக்கிறோம் நண்பர்களே!

    நன்றி விக்ரம்! 
    வாசகர்களாகிய எங்களால்  எங்கள் எடிட்டரிடம் நிகழ்த்த முடியாத சில மாற்றங்களை, மகன் என்ற முறையில் உங்கள் தந்தையிடம் நீங்கள் நிகழ்த்தவிட முடியும்! இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டதைப் போல!

    நிகழ்த்துங்கள்; காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. @ True Erode Vijay, Vikram should be thanked too!

      நன்றி விக்ரம்!

      BTW Erode Vijay:

      /* வாசகர்களாகிய எங்களால் எங்கள் எடிட்டரிடம் நிகழ்த்த முடியாத சில மாற்றங்களை, மகன் என்ற முறையில் உங்கள் தந்தையிடம் நீங்கள் நிகழ்த்தவிட முடியும் */

      மகன் தந்தைக்காற்றும் உதவி ...!!

      Delete
    2. Well said Erode Vijay, i too agree with you...

      Delete
  40. இன்றைய குமுதம் அரசு பதில்கள் பகுதியில் நம்முடைய முத்து காமிக்ஸ் பற்றியும், லாரன்ஸ் டேவிட் சாகசம் செய்துள்ள காற்றில் கரைந்த கப்பல்கள் பற்றியும் அருமையாக ஒரு பதிலில் எழுதப்பட்டுள்ளது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

    அதிலும் குறிப்பாக "வெளி இடங்களில்கூட ஆங்கில வழவழ புத்தகங்கள படிப்போரின் மத்தியில் நான் முத்து காமிக்ஸை சந்தோஷமாக , கூச்சமின்றி படிப்பேன்" என்று கூறி உள்ளது பெருமையாக உள்ளது.

    இரண்டாம் ஆண்டின் துவக்கத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. இரண்டாம் ஆண்டின் துவக்கதிற்க்கும் ,வலையுலகில் இன்னும் பல ஆண்டுகள் பீடு நடை போடவும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  42. புனைபெயரும் புரியாத பல குழப்பங்களும் (a Box office hit ) ( மறுபதிப்பு-முதல் பத்தி )

    part 1 of 3

    காமிக்ஸ் காமிக்ஸாய் படித்து, ஊரெல்லாம் கதை கதையாய் பேசுகின்றோம்! டைகரின் தீரத்தை, வில்லரின் வீரத்தை, மாயாவியின் சாகசத்தை, மாண்ட்ரேக்கின் ஜாலத்தை, மார்ட்டீனின் அறிவு விசாலத்தை, ஜானியின் தேடலை, வனரேஞ்சர் ஜோ வின் அர்ப்பணிப்பை, லக்கி லூக்கின் தன்னலமற்ற சேவையை, சிக்பில்லின் வெகுளித்தனத்தை, மாடஸ்டி யின் தடம் மாறி வந்த நேர்மையை, பாண்ட் ன் அதிரடியை, லாரன்ஸ்&டேவிட் ன் இணைப்பிரியா நட்பை, ஜானி நீரோவின் கண்ணியத்தை, ரிப்கெர்பி யின் எளிமையை, XIII ன் வாழ்க்கையில் ஏற்படும் விதியின் விளையாட்டை, ஜெரோமின் அப்பாவித்தனத்தை, பெர்ரி மேசன் னின் தொழில் தர்மத்தை, இன்னும் இது போன்று எத்தனை எத்தனையோ ஆனால் நாம் இவற்றில் எதைக் கற்றோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொண்டு, இந்த சலசலப்புகளுக்கு எமக்கு நாமே வைத்துக்கொள்ளக் கூடிய ஒரு முற்றுபுள்ளியாக மட்டுமே தயவு செய்து இந்த பதிவை தாங்கள் கருதவேண்டும்!

    இனி நாம் எதையும் இங்கு கற்க வேண்டாம்! இனியும் நாம் இங்கு யாருக்கும் கற்றுக் கொடுக்கவும் வேண்டாம்! ஏனெனில் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற நிலையில் அல்லவா இங்கு நாம் எல்லோரும் இருக்கின்றோம்! இதில் எவர் எவருக்கு கற்றுக் கொடுக்க! அல்லது எவர் எவரிடமிருந்து கற்றுத் தெளிய! இதில் ஒன்றுமே இல்லை! சற்றே சிந்தனை செய்ய நமக்கு நேரம் மட்டுமே தேவையான ஒன்றாக இருப்பதில் உள்ள தவறையெல்லாம் காலச்சக்கரத்தில் ஓடும் வாழ்க்கையெனும் நம் வண்டி மொத்தமாக நேரமின்மைக்கு குத்தகைக்கு விட்டுக்கொடுத்து விட்டது! விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை! உண்மைதான், எங்கே தங்களிடம் உள்ள அரிய comics collection மொத்தத்தையும் எனக்கு விட்டுக் கொடுங்கள் பார்ப்போம்! எது எது எப்படி என்பதில் உள்ள உண்மைகள், அது அது அப்படி அதில் பொதிந்து இருந்தால் மட்டுமே வாழ்க்கை சுகமானதாக அமையும்! நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்றாலும் நம் வீட்டிற்கு நாலு பக்கம் தானே! இதில் சந்தேகம் இருந்தால் புலனாய்வு செய்து பாருங்கள்!!!

    contd part 2 of 3 : புனைபெயரும் அதன் அத்தியாவசியமும்!



    ReplyDelete

  43. புனைபெயரும் புரியாத பல குழப்பங்களும் (a Box office hit )

    part 2 of 3:




    1. நாம் இனிமேல் வாழ்க்கையில் அடையவே முடியாத லட்சியம் என்று மாறிய ஒரு பாத்திரம்!

    2. நெருங்கிய அடிப்பொடிகள் நம் ரசனையை அறிந்து அதன் மூலம் நம் மரியாதை கெட்டுவிடாமல் இருக்க!

    3. தன் தனித்தன்மையை காக்க!

    4. நம் உள்ளத்தை அழுத்திக்கொண்டிருக்கும் மறுதலிக்கப்பட்ட ஓர் ஆசை!

    5. சரிசம மனப்பன்மையுடன் சரிநிகர் சமானமாக எல்லோரிடமும் கலந்துரையாட!

    6. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று அஞ்சி தன அடையாளத்தை மறைக்க!

    7. உயர்வு மனப்பான்மையையும் தாழ்வு மனப்பான்மையையும் தன்னிடமிருந்து அகற்றி அடுத்தவர்களுக்கும்
    அது தோன்றி விடாமல் நண்பர்கள் வட்டத்தை உருவாக்க!

    8. தம் புனைபெயரை நினைத்து இடுக்கண் வருங்கால் இன்புற்றிருக்க!

    9. தன் மீது எவரேனும் சேற்றை வாறி இறைத்தாலும் தன்
    புகழுக்கும் தன் பெருமைக்கும் சிறிதும் களங்கம் வராமலிருக்க!

    10.நான் உயர்ந்தவனும் அல்ல தாழ்ந்தவனும் அல்ல, சராசரி காமிக்ஸ் வாசகன் என்பதை இங்கு அறிவிக்க!

    contd part 3 of 3 : சரி, அதனால் போலி ID உண்மையாகிவிடுமா!



    ReplyDelete
  44. புனைபெயரும் புரியாத பல குழப்பங்களும் (a Box office hit )

    part 3 of 3 :




    ஒரு மனிதன் எப்படி, தன பெற்றோருக்கு மகனாகவும், மகனுக்கு தந்தையாகவும், மனைவிக்கு கணவனாகவும், கடவுளுக்கு பக்தனாகவும், ஆசிரியருக்கு மாணவனாகவும் தன் கடமையை திறம்பட செய்கிறானோ, அது போல் அவசியத்திற்காகவும், அத்தியாவசியத்திற்காகவும், அனுபவத்திற்கும், அனுபோகத்திற்கும் சில ID கள் இருப்பதை எப்படி போலி என்று சொல்ல முடியும்! எனவே இங்கு நபர் முக்கியமல்ல அவர் பதிவிடும் கருத்தே முக்கியம்! ஒருவரின் பதிவை நாம் படித்து தான் அவர் கருத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்! அவர் பெயர் ஒன்றே போதும்! இதை தாண்டி விடு அல்லது படித்து தெளிந்து விடு என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக பறைசாற்றிட!

    நம் மீது உண்டான கருத்து திணிப்பு நமக்கு எப்படி அனாவசியமாகவும் அபத்தமாகவும் தோன்றுமோ அது போல் எமக்கு சரியெனப்பட்டு அதை நaaம் இங்கு முன் வைக்கும் சில ஆலோசனைகளும் பலருக்கு அனர்த்தமாக தோன்றிவிடும்! உதாரணத்திற்கு ID யில் original பெயர், original புகைப்படம் மட்டும் போதாது, அவரவர் தம் குடும்ப புகைப்படமும் ஆல்பத்தில் upload செய்யவேண்டும் என்பது எனக்கு சரியானதாக தோன்றினால் அது தங்களுக்கும் சரியென தோன்றிவிடுமா! எனவே அவரவர் விருப்பம் எதுவோ அது நம்மை புண்படுத்தாதவரை அது நமக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒன்றே! அப்படியே நம்மை பாதித்தாலும் அதை மட்டும் மேற்கோள் காட்டி இந்த விதத்தில் என்னை பாதிக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுவதே முறையானதாகும், இறுதியானதாகும், அதுவே நீதியும், தர்மமும் ஆகும்! இந்த தளம் தங்களின் பதிவுக்கு எப்படி ஒரு வாய்ப்பாக அமைகிறதோ அது போல் என்னுடைய காமிக்ஸ் பதிவுக்கு எனக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவே தாங்களும் கருதவேண்டும்!

    மரமண்டை (எ) கைநாட்டு கத்துகுட்டி என்று போடுவதால் மட்டும் கலியுகம் மாறிவிடுமா என்ன !!!














    ReplyDelete
  45. தல மரமண்ட! இப்படி எங்கள அநியாயமா காட்டிக் கொடுத்திட்டியே இது ஞாயமா தொர!

    ReplyDelete
  46. ஓராண்டு நிறைவுக்கு இனிய வாழ்த்துக்கள்.உங்கள் உதவிக்கும் முதலில் நன்றி கூறுகிறேன்.வாசகர் படித்து விட்டு கருது கூறாது செல்வது பற்றி எங்கோ பார்த்ததால் காமிக்ஸ் ரசிகனாக மட்டும் முதல்முறையாக கருத்து கூறுகிறேன்.வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.முதலில் கொஞ்சம் ஓவரான சின்ன வேண்டுகோள்.மிகவும் முக்கியமான ஒரு தருணம் என உங்கள் தந்தை ஆரம்பித்துவைக்கும் NBS வெளியிட்டு விழாவை கூறியுள்ளிர்கள்.அந்த வரலாற்று தருண விழாவுக்கு வருகை தர முடியாத வெளிநாடு வாசகர்களும் தங்களுக்கும்,தங்கள் தந்தைக்கும் மரியாதையை ,பாராட்டுகளை தெரிவிக்கவும்,விழாவை ரசிக்கவும் ஓர் வாய்ப்பாக மேற்படி விழாவை நேரடி ஒளிபரப்பாக இன்டர்நெட்டில் ஒளிபரப முடியுமா?இல்லை பிறகாவது youtubeஇல் அல்லது இங்கே வலைபதிப்பில் வெளியிடமுடியுமா?

    காமிக்ஸ் இழந்த பெருமையை மீட்க Last Man Stand ஆக மிக சிறிய வாசகர் வட்டத்துடன் போராடிய நீங்கள் செய்யும் அண்மைகாலமாக செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் Defence இல் இருந்து Offence கு செல்வதை மட்டுமல்ல இதுவரை இல்லாத ஒரு வகை வேகத்துடன் கூடிய நிதானம் இருபதையும் அவதானிக்க முடிகிறது.இவ்வளவு காலத்தின் பின் அங்கங்கே சிதறுண்டு கிடந்த பலர் காமிக்ஸின் மேலுள்ள பற்றால் இன்று மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள அதிசயம் உங்களால் தமிழகத்தில் மட்டுமல்ல அயல் நாடுகளில் கூட உருவாகிவிட்டது.காமிக்ஸ் சிறுபிள்ளை சமாச்சாரம் என ராணி காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் கதைகள் ஏட்படுத்திய மாயையை ,காமிக்ஸின் வீழ்ச்சியை முறியடிக்க முடியாமல் போனமைக்கான சில காரணங்கள் ஒவ்வொன்றாக இப்போது தான் புரிகிறது.
    முதலாவது நிச்சயமாக வண்ணம்,தாளின் தரம் தான்.அடுத்தது விளம்பரங்கள்.வாசகர் அல்லாத கதை பேசுபவரோ,சும்மா புரட்டி பார்த்து செல்பவரோ B &Wல் கவனம் செலுத்துவதில்லை.ஆனால் என்னை பொறுத்தவரை கேப்டன் டைகர் கதைவரிசையில் கலரில் அழகு சிப்பாயாக இருக்கிறார்.ஆனால் B &W ல் படங்களில் உயிரோட்டம் கூட உள்ளது போல் ஒரு பீலிங்.
    விளம்பரங்கள் என்று நான் கூறுவது கதைகள்,விவரங்கள் வாசகர்கலை சென்றடையும் பரவலையும்,வீச்செல்லையையும்.கிங் விஸ்வா ,டாக்டர் செவன்,புலோ சுலாகி மற்றும் பலரது ஆர்வம் தான் துப்பாக்கி படத்தில் போன்று காமிக்ஸின் Sleep Persons எல்லாரையும் விஜயன் சார் இங்கு வரும் வரையில் பழைய அனுபவங்கள்,வருங்கால வெளியீடுகள் பற்றி அவ்வப்போது பகிர்ந்து உசுப்பேற்றி கொண்டிருந்தார்கள் என்றால் மிகையாகாது.அதுவும் மீடியாவின் நவீன குழந்தையான வலைபதிவுகளில்.ஒரே ரசனை கொண்ட பலர் join என கிளுக்கி சேரும் போது நிஜ உலகில் உள்ள தயக்கங்கள் எதுவும் இல்லாது கலந்து உரையாடலாம்.எந்த மீடியா காமிக்ஸை வீழ்த்தியதோ அதைவிட நவீன மீடியா இன்று உதவுகிறது என்றால் துரித மாற்றங்களுக்கு நாமும் ஈடு கொடுக்க வேண்டியதன் அவசியத்துடன் வழியையும் காட்டிய முகம் தெரியாத அந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
    அடுத்து இந்த பெரிய சைசில் உங்கள் வெளியீடுகள் ஐரோப்பிய காமிக்ஸ் அல்பங்கள் போல் உள்ளன அல்ல,தமிழில் வெளியாகும் அல்பங்களே தான்.இதேவேளை ஸ்பெஷல் வெளியீடுகளில் அட்டைப்படத்திற்கு ஏற்படும் போட்டியை குறைக்கஅட்டகாசமான அட்டைப்படங்கள் உள்ள டைகர்,XIII ஆகியோரை உள்ளடக்குவதை விட தனித்து தங்க கல்லறை போல் இரு பாக அல்பமாக வெளியிட்டால் நல்லாயிருக்கும் என்பது என் தனிபட்ட ஆசை.
    தங்க கல்லறை சுமார் என்று ஏன் குறிபிட்டார்கள் என நான் பார்கவில்லை.வசனங்கள் வித்தியாசம் தெரிந்தாலும் நிச்சயம் ஓர் நல்ல கதை. ஜிம்மி "பாஸ்" என அழைக்கும் முறையில் மட்டும் மறுபரிசீலனை தேவை.
    ஹாட்-லைன் 2 பக்கத்திற்கு நீளுவது நிச்சயம் மகிழ்ச்சி.ஆனால் மாயாவி, போன்று பிரின்ஸ் கதைதொடர் முடிவும் அதிர்ச்சி.வண்ணத்தில் பழைய கதைகள் காண ஆசை.படைப்பாளிகள் இறந்து விட்ட நிலையில் டைகர் கதைக்கும் இப்படி ஒரு முடிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

    முத்துவின் Epic 50 ஆவது ஆண்டு இதழாக
    முழுவண்ணத்தில் ஒட்டுமொத்த இரும்புக்கை மாயாவி கதைகளை
    அல்லது
    டைகரின் epic ஆன மின்னும் மரணம் தொடரை இதுவரை வெளியிடபடாத அரிசோனா லவ் யும் சேர்த்து complete collectionஆக
    வெளியிடப்படும் என அறிவிப்பீர்கள் என்பதுபோன்ற நம்பிக்கையுடன் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. WELL SAID நண்பரே !
      //வண்ணத்தில் பழைய கதைகள் காண ஆசை.படைப்பாளிகள் இறந்து விட்ட நிலையில் டைகர் கதைக்கும் இப்படி ஒரு முடிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க கூட முடியவில்லை. //

      ஸ்பைடர் கதைகள் இல்லை என்று முன்பு உச்சத்தில் இருந்த போது கூறியதை கேட்டு துயருற்றதை விட ,இது கடும் வேதனை அளிக்கிறது ! ஆனால் புதிய லார்கோ,வெய்னே ,XIII போன்ற அதிரடி நண்பர்கள் நிறைய உண்டு என அறிந்த போது இப்போது கலக்கம் நீங்கி விட்டது ! நிறைவான கதைகள் பல உண்டு ,இப்போதைய தரம் மெருகேறி உள்ளது நமது சந்தோசத்தை கூட்ட பெருமளவு உதவி உள்ளது !இப்போதைய ஜானி கதை பார்த்த பின்னர் மறு பதிப்பு கதைகள் கருப்பும் வெள்ளையுமாக வர இருப்பதை உணர்ந்தால் ஆசிரியர் மேற் கோள் காட்டியது போல கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என ஆனந்த கூத்தாட தோன்றுகிறது ,கனவின் நிறம் கூட அதுவல்லவா !

      Delete
    2. //வண்ணத்தில் பழைய கதைகள் காண ஆசை.படைப்பாளிகள் இறந்து விட்ட நிலையில் டைகர் கதைக்கும் இப்படி ஒரு முடிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க கூட முடியவில்லை. //

      டைகர் (ப்ளுபெர்ரி) கதையின் ஒரிஜினல் படைப்பாளிகள் இருவரும் தற்போது உயிருடன் இல்லை . இந்த வருடம் மார்ச் மாதம் கின் கிராட் காலமாகிவிட்டார்.கதாசிரியர் மைகேல் சார்லியர் ஜூலை 1989 ஆம் வருடம் இயற்க்கை எய்தினார். :( இப்போது டைகரின் படைப்பாளிகள் François Corteggiani and Michel Blanc-Dumont கூட்டணி . டைகர் கதைக்கு படைப்பாளிகள் மாறுவதை போல ஸ்பைடர் மாயாவி கதைகளுக்கும் புதிய படைப்பாளிகள் தற்கால பாணியில் படைத்திட்டல் அவர்களும் காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிப்பார்கள்

      Delete
    3. "டைகர் கதைக்கு படைப்பாளிகள் மாறுவதை போல ஸ்பைடர் மாயாவி கதைகளுக்கும் புதிய படைப்பாளிகள் தற்கால பாணியில் படைத்திட்டல் அவர்களும் காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிப்பார்கள்"

      இது உண்மைதான் நண்பரே! நாம் அனைவரும் அந்த நாளுக்காக மிகவும் எதிர்பார்க்கிறோம் ...

      Delete
    4. //"டைகர் கதைக்கு படைப்பாளிகள் மாறுவதை போல ஸ்பைடர் மாயாவி கதைகளுக்கும் புதிய படைப்பாளிகள் தற்கால பாணியில் படைத்திட்டல் அவர்களும் காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிப்பார்கள்"

      இது உண்மைதான் நண்பரே! நாம் அனைவரும் அந்த நாளுக்காக மிகவும் எதிர்பார்க்கிறோம் ...//


      ஆஹா எப்படி இருக்கும் கற்பனை செய்தாலே உள்ளமெல்லாம் இனிக்கிறதே !

      Delete
    5. Hopefully would try to attend the NBS Release -- If so would be posting the pics and videos...
      dont worry friend but we are not there yet, very much to go for live feeds...

      Delete
  47. Congratulations dear Vijayan Sir!

    Personally i too have couple of blogs and website for my philosophical services... But i found it very difficult to make my blog most reachable one... I was trying this for 4 years... When your (our) blog touched 1 lakh views within 6 months of time, I was suprised... And now 2.5 lakhs view... I know this was/is a record break. I think this blog is giving its fruits for your plenty years of effort on making of our comics, Sir. You deserve for this...

    Regarding the translation opportunity... really this would be a great platform for many of our talented readers. But dont send the original pdf file to all...Once if it is sent, it may be widely circulated... the originals should always be with the publisher... But we thank you for you putting somuch confidence on us. As Parani and Bladepedia Karthick said either the hardcopy/softcopy can be sent in greyscale mode(black and white).

    Thanks and regards
    Udhay - Chennai



    ReplyDelete
  48. Chief...Fan's performing translation for a lucky luke or front line hero stories is not a nice idea...
    we have tried these sort of stuffs through vaasagar spotlight already, so it will be nice if we dont disturb the rythm..
    As usual u r the boss, it's ur call...

    ReplyDelete
  49. *கறைபடிந்த உருவத்தின் உள்ளத்தில் கரை புரண்டோடும் உண்மைகள்!

    ஒரு தன்னிலை விளக்கம்!

    *நான் வந்த வேலை முடிந்து விட்டது! சென்று வருகிறேன்!

    உதாரணத்திற்கு, நம் வீட்டிற்கு நல்லது செய்ய நினைத்து ஒரு நல்ல நண்பர் வருகிறார், அந்த நல்ல விஷயங்களை நமக்கு பொறுமையாக சொல்லியும் முடித்து விடுகிறார்! உடனே கணவன் மனைவி இருவரும் அந்த நண்பரை காரணம் காட்டி சண்டையை ஆரம்பித்து அடிதடி லெவலுக்கு வீடு செல்கிறது! அப்பொழுது சண்டையை சற்றும் நிறுத்த இயலாத அவர் என்ன செய்வார்? நான் சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்டேன் ( நான் வந்த வேலை முடிந்து விட்டது ), சென்று வருகிறேன் என்று தானே அங்கே கூற முடியும்! அப்படி தான் சென்று விட்டால் புரிதலின்றி ஆரம்பித்த அந்த சண்டை முடிந்து விடும் என்று அவர் பரிபூரணமாக நம்பி இருக்கலாம் அல்லவா!

    சற்றாவது சிந்தியுங்கள் நண்பர்களே!

    போற்றுவதும் தூற்றுவதும் நமக்கு எளிதான ஓன்று!
    ஆனால் பிறர் வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் அன்று!

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் சார். நானும் மொழிபெயர்க்க விரும்பினாலும் எனக்கு என்னமோ இது சரியான யோசனைன்னு தெரியல. என்னடா நெகடிவா சொல்லறான்னு நினைக்காதீங்க. கடைசில நான் மொழி பெயர்த்தது தான் கரெக்டுன்னு ஆளாளுக்கு கோடி பிடிக்க போறாங்க. சப்போர்ட் பண்ண ஆளுக்கொரு கும்பல் சேரப் போகுது. பேக் ஐடில வந்து ஆளாளுக்கு அதகளம் பண்ண போறாங்க. அதுதான் பயமாக இருக்குது.

    ReplyDelete
    Replies
    1. ராஜின் பயம் எனக்கும் உள்ளது. அது தவிர டம்மி ஐடியுடன் வந்து பைலை பெற்று விட்டு அதை வெப்சைட்டில் பதிவேற்றி விடுவார்களோ என்றும் பயமாக இருக்கிறது. உதயன், காமிக்லவர் போன்றவர்கள் விளக்கமளித்தால் தேவலை.

      Delete
  51. வாழ்த்துக்கள் sir

    ReplyDelete
  52. ஜானி புத்தகம் இப்போதுதான் வந்தது. வந்திட்ட ஒரு மணி நேரத்திற்குள் நான் நேற்று அனுப்பிய e-mail படித்துவிட்டு லயன் ஆபிசிலிருந்து follow up செய்தார்கள். Customer response பல படிகள் உயர்ந்திருக்கிறது - in fact this year follow ups have been very prompt.

    ஆனாலும் RAMG75 சொல்வது போல it is clear that S T Couriers have some logistical problems with respect to distributing in Chennai. It is their own problem to solve. We must resolve to a better service for Chennai based deliveries. Even if it takes 2-3 days Speed Post is a guaranteed option.

    ReplyDelete
  53. //ஓராண்டு நிறைவுக்காக நம் எடிட்டருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் இந்த நேரத்தில், இவ்வலைப்பூ உருவாகக் காரணமான; இன்டர்நெட்டின் மகத்தான வலிமையை நம் எடிட்டருக்கு உணர்த்திய அவரது மகன் விக்ரமிற்கு இத்தருணத்தில் நாம் நன்றி தெரிவிக்காவிட்டால் 'நன்றி மறந்தவர்கள்' லிஸ்டில் நாளைய வரலாறு நம்மையும் சேர்த்துவிடாதா?!//

    உண்மை நண்பர் விஜய் அவர்களே ... ஜூனியர் லயன் அவர்களுக்கு எனது நன்றிகள் ... உண்மையிலேயே உங்களது இந்த முயற்சி நமது காமிக்ஸின் இரண்டாவது இன்னிக்ஸ் இவ்வளவு தூரம் பயணப்பட மிகவும் உதவி உள்ளது ....

    சென்ற வருட புத்தக திருவிழாவில் திரு. விக்ரம் விஜயன் அவர்களை சந்தித்தது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.

    இந்த வருட திருவிழாவிலும் ..... Waiting ....

    ReplyDelete
  54. அன்புள்ள ஆசிரியருக்கு,

    வெற்றிகரமான முதல் ஆண்டு வாழ்த்துக்கள்!

    நானும் திரு.Raj Muthu Kumar S மேலே கூறியுள்ள கருத்தை ஆமோதிக்கிறேன். இந்த மொழிபெயர்ப்பு யோசனையினால் நமது வாசகர்கள் குழுவாக இங்கே சண்டை போட ஆரம்பித்து விடுவார்களோ என்று

    ReplyDelete
  55. My Encounters with lion..
    During Comics con, Due to my mom's cattart surgery on saturday at mysore, i was not able to meet our editor though i planned to be there for the two days. Somehow i managed to reach the con on sunday evening. Bad luck i cudn't meet editor. But met mr.radhakrishnan. My wife was suprised tat i spent 2000rs petrol for car and 6hrs driving to buy a 100rs comics. (she
    still can't beleive tat i visited sivakasi last year to only buy comics, bad luck even then i cudn't meet editor) I don't know how to explain her tat it is worth more than wat i hv spent, the time and money. Now She (is a kannadiga) wants to learn tamil only to read our comics. My first daughter (4yrs) learning tamil by reading our comics, while my second daughter (1yr) sees pictures page by page,surprisingly without tearing . both likes only lucky luke. May be its
    time we sud think of bringing back mini lion to attract kids. (adding filler pfes is a perfect move in right direction)irumbukai ethan kandipaga reprint news is awesome... Plsss.. For tat matter, All tiger stories sud be.. Pls reply sir.. Pls announce Next year schedule in sequence.. ( i feel like tharumi of thiruvilayadal.. ayyo sokka athanaiyum ennakka..)

    ReplyDelete
    Replies
    1. @Vijay "Father of the Pride&quot
      Hats off to you.

      /* " i feel like tharumi of thiruvilayadal.. ayyo sokka athanaiyum ennakka.." */
      I used to feel the same when i put my hands on Lion-Muthu Kodai malar 25 years back and more recently i felt like that when i got the comeback special and will be feeling like that when i get NBS.

      Delete
    2. Vijay "Father of the Pride&quot :
      தங்களின் பதிவை படித்தவுடன் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது ! எப்படி சொல்வது என்று தெரியவில்லை ! ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது, தங்களின் காமிக்ஸ் ஆர்வத்திற்கு வானமே எல்லை ! காமிக்ஸ் கடைக்கு செல்ல ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் விற்கும் இன்றைய நாளில் வீட்டிற்கே வரும் கூரியர் கட்டணம் ரூபாய் 20 மிகப்பெரிய விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது ! இன்றைய விலைவாசியில், கூரியர் கட்டணம் ரூபாய் 20 மிகப்பெரிய விஷயமாக கருதப்படுவது ஏன் என்று எனக்கு இன்னுமும் ஆச்சரியமாகவே தோன்றுகிறது !

      இரும்புக்கை எத்தன் வண்ண மறுபதிப்பு, அதன் இறுதிப்பாகம் இரண்டின் முத்து காமிக்ஸ் வண்ண முதல் பதிப்பு அறிவிப்பை படித்தவுடன் என்னுள் எழுந்த படப்படப்பு அடங்க சில மணி நேரம் ஆனது ! ஆனால் ஓன்று, தங்களின் காமிக்ஸ் ஆர்வத்திற்கு முன் என் காமிக்ஸ் ஆர்வம் எல்லாம் சிறிய விஷயமே !






      Delete
    3. நன்றி.. ஆனால் காமிக்ஸ் படிக்கும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காமிக்ஸ் காதலில் சளைத்தவர் அல்ல....

      காமிக்ஸ் விலையை பொறுத்தவரை யார் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் உலகத்தில் இதைவிட குறைந்த விலைக்கு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் காமிக்ஸ் வருவதாக தகவல் இல்லை..

      SO Please Guys enjoy the Privilege.. Yes it is..

      Delete
  56. தங்கள் பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ! ஒரு வருடம் கடந்து போனதே தெரியவில்லை. ஒரு வருடத்தில் 70 பதிவுகள் வந்தது போல் ஒரு வருடத்தில் 70 இதழ்கள் வரும்காலம் மிக அருகில்தான் . அந்த பொற்காலத்தை நோக்கிய உங்களின் பயனத்திற்கு நாங்கள் அனைவரும் துணை நிற்பது உறுதி !

    ReplyDelete
  57. Friends,
    I think this translation work is not a competition for the readers.
    This would be the freelance job offered by our editor to our readers! The translators will be finalised by the editor. The talented people can use this opportunity. Editor might already observed some of our readers has translation gift. We dont know how our previous translation was, each and every time, our Vijayan editing all the translation to suit to our trend and taste...at the final stage before printing the book. We always use to see that final stage translation only. Likewise we can expect, he will do the editing at the final stage... And he will get the best from the translators even if they are reader. Nothing harm.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே,

      நான் நினைக்கிறேன் இந்த மொழிபெயர்ப்பு வேலை வாசகர்களுக்கு ஒரு போட்டியாக இருக்காது.
      இந்த நமது வாசகர்களுக்கு நமது ஆசிரியர் வழங்கும் ஃப்ரீலான்ஸ் வேலை என்றே படுகிறது ! ஆனால் தகுதியான
      மொழிபெயர்ப்பாளர்களை மட்டுமே நமது ஆசிரியர் இறுதி செய்திடல் மிகவும் அவசியம் .

      மேலும் இப்போது பணியாற்றும் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களின் வேலைப்பாடு எப்படி இருக்குமென நமக்கு தெரியாதல்லவா?.
      ஒவ்வொரு முறையும், நமது விஜயன் சார் புத்தகம் அச்சிடும் முன் இறுதி கட்டத்தில், நமது காமிக்ஸ் போக்கிற்கு மற்றும் ரசனைக்கு ஏற்ப அனைத்து அத்தனை மொழிபெயர்ப்பை திருத்தம் செய்தே வந்திருக்கிறார் என அவரின் முந்தைய பதிவில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
      நாம் எப்போதும் அந்த இறுதி கட்ட மொழிபெயர்ப்பை பார்த்து (படித்தே) பழகி இருக்கிறோம்.

      அதேபோல் புதிய நபர் யாராக இருந்தாலும் மொழிபெயர்க்கும்போது, விஜயன் சார் இறுதி கட்டத்தில் வேண்டிய திருத்தம் செய்வார் என நாம் எதிர்பார்க்க முடியும். அவர்கள் வாசகராக இருந்தாலும் கூட வழக்கம் போல் அவர் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து சிறந்தவற்றையே கிடைக்கப் பெற்றிடுவார். ஆசிரியர் ஏற்கனவே நமது வாசகர்கள் சிலரின்/பலரின் எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பை திறமையை கவனித்தே இந்த வாய்ப்பினை அறிவித்திருப்பார். காமிக்ஸ் தயாரித்தலில் அவர் திட்டமிடாமல் இந்த வாய்ப்பினை அறிவித்திருக்க மாட்டார். வாசகர்களும் தங்கள் படைப்பு ஏற்று கொள்ளப்படாமல் போனால் வருத்தமடையாது தரத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திட வேண்டும்.
      திறமை மிக்க மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
      எனவே மொழிபெயர்ப்பில் எந்த தீங்கும் நேராது.

      ஏதேனும் தவறாக பின்னூட்டமிட்டிருந்தால் மன்னிக்கவும்.

      Delete
  58. @Vijayan Sir,

    Read the johnny comics.

    The Paper quality and the Print is really very good. Its hard to believe such quality in BW pages.

    Hope our CC digests come in the same style.

    ReplyDelete
  59. நான் இன்று வரை இந்த மாத முத்து காமிக்ஸ் பெறவில்லை. ஆனால் எப்படியோ நண்பர் R.T. முருகன் மூலம் ஒரு பிரதி கிடைக்கப்பெற்றேன். அச்சு மற்றும் காகித தரம் மிக சிறந்த முறையில் இருப்பதேயாகும். நான் கதையை மிகவும் ரசித்தேன். 15 ருபாய் விட அதிக மதிப்புள்ளது இந்த புத்தகம். இந்த புத்தகத்திற்கு நான் மார்க் போட வேண்டும் என்றால், 97/100 போடலாம். (கதை நன்றாக இருக்கிறது, ஆனாலும் அது ஜானியின் இடியாப்ப சிக்கல் கதை ஸ்டாண்டர்ட் படி இல்லை. அதனாலேயே நான் 3 சதவீதம் குறைத்துள்ளேன் ). நான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பேருந்தில் பயணம் செல்லும் போது இந்த காமிக்ஸ்சை படித்து முடித்தேன். கடந்த முறை நான் "மீண்டும் ஸ்பைடர்" காமிக்ஸ் படித்ததாக ஞாபகம்.
    நண்பர்கள் அனைவருக்கும் பண்டிகை மற்றும் முன்னதாக புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. Very true. இந்த இதழின் தரம் மிக்க நன்றாக உள்ளது. மற்றபடிக்கு, பல வருடங்கள் கழித்து லயன் / முத்து காமிக்ஸ் படிப்பதால் கதை வழக்கம்போல் பிடித்திருந்தது.

      சங்கத் தமிழ் மொழிமாற்றம் தான் எனக்குப் பிடிக்கும் என்று அடம் பிடிக்கப் போவதில்லை :) :) காலத்தை ஒட்டி உரைநடை மாறுவது தவிர்க்க இயலாதது. நாற்பது வருடங்களில் பிற ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடை மாற்றம் வந்து அதனை ஒப்புக்கொண்ட நாம், காமிக்ஸ் மொழி நடை மாற்றத்திற்கும் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். The rest will fall in place as we progress ...!

      Delete
    2. நண்பரே காமிக்ஸ் லவர் ராகவன்,
      மொழிபெயர்ப்பு தொடர்பான நமது வாசகர்களின் பல கருத்துக்களை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. கூடுதலாக (சில) 8 பக்கங்களில் மட்டும் ஏற்படும் மொழிபெயர்ப்பு மாற்றங்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமது வாசகர்கள் பகுதியில் இருந்து சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை கண்டுபிடிக்க இந்த முறையானது பொருத்தமானதாக இருக்குமே.

      நீங்கள் புத்தக வெளியீடுகள் மற்றும் மொழிபெயர்ப்பு வேலை அனுபவம்பெற்ற நீங்களும் கூட இந்த சிறிய திட்டத்தில் பங்களிப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும். (உங்களுக்கு நேரம் இருந்தால் ..)

      Delete
  60. இந்த மாத முத்து காமிக்ஸ் செவ்வாய்கிழமை கிடைத்தது! கதை சுமார் தான்!! சில இடம்களில் "continuity" இல்லாதது போன்று தோன்றுகிறது!!! சில இடம்களில் வார்த்தை பிழைகள் (spelling mistakes), ஆனால் கடந்த இதழ்களை விட குறைந்து உள்ளன!! காகித தரம் மிக அருமை!! சிறப்பு (special) இதழ்களுக்கு பயன்படுத்தும் அதே காகிதத்தை பயன்படுத்தியது பாராட்டுக்குரியது!!சித்திரம் அருமை!!!

    மொத்தத்தில் காமிக்ஸ் உலகில், இந்த வருடம் மறக்கமுடியாத வருடமாகிய உங்கள் குடும்பம் மற்றும் அலுவலக பணியாளர் அனைவரும் நோய் நொடி இன்று அனைத்து செல்வம்களுடன் நீடுழி வாழ ஆண்டவனை வேண்டுகிறன்!

    ReplyDelete
  61. நண்பர் புனித சாத்தானின் தொடர் மெளனம் கவலையளிக்கிறது.   பு.சா. அவர்களே, உங்களின் 'அடியேன்'க்காகவும், 'ஹிஹி'க்காகவும் என்னைப்போல் இங்கே பல ரசிகர்கள் உண்டென்பது புரியவில்லையா?

    நண்பர் பாலாஜி சுந்தரையும் பல மாதங்களாகக காணவில்லையே! ஒரு தேர்ந்த விமர்சகரை; ஆலோசகரை இவ்வலைப்பூ தற்காலிகமாக இழந்திருக்கிறது.
    We badly miss you, Balaji!

    ReplyDelete
  62. இதோ எனது சுய அறிமுகம் ;

    பெயர் : மரமண்டை
    ஊர் :
    X111.வெஸ்டர்ன் அவென்யூ,
    கார்ட்டூன் பட்டி,
    விஜய நகரம்,
    காமிக்ஸ் நாடு, மாய உலகம்.600 007.

    பண்பு : எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் நல்லதை மட்டுமே பார்ப்பது ! அதை தயங்காமல் பாராட்டுவது !
    எதிரிகள் : இன்று வரை எவருமே இல்லை !
    பிடித்தது : லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் மட்டுமே !
    ஆசை : காமிக்ஸ், காமிக்ஸ், காமிக்ஸ் !
    என்னிடம் உள்ள காமிக்ஸ் : 338


    எத்தனை ஆசைகள் :
    1. முழு வண்ண வெளியீடுகள் தற்போதைய அளவில், தற்போதைய
    தரத்தில்1000 புத்தகங்கள், அதுவும் சாத்தியப்படக்கூடிய குறுகிய காலத்தில் !
    2. காமிக்ஸ் க்ளாஸிக்ஸ் வெளியீடுகளும் தற்போதைய லயன் முத்து அளவில் !
    3. X111, மின்னும் மரணம், வனரேஞ்சர் ஜோ, மர்ம மனிதன் மார்ட்டின்,
    டைகர் கதைகள் முழு வண்ண மறுபதிப்பு, 150 பக்கங்களில் மட்டும் !
    4. இங்கு யாராவது ஆசிரியர் விஜயன் ஐ மனதளவில் துன்புறுத்தினால் என்னால் முடிந்தளவு எதிர்ப்பது !

    அனுபவத்தில் கற்றது : மரமண்டையாய் இருந்துவிட்டால் வாழ்க்கையில் துன்பமே இல்லை !

    ReplyDelete
  63. விஸ்கி-சுஸ்கி : எனக்கும் இந்த பாடலின் உள் கருத்து புரியவில்லை ! ஆனால் உங்கள் மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை உள்ளது ! தெளிவாக உள்ளதை உள்ளபடி இங்கே எழுதலாமே நண்பரே ! இங்கு தெளிவாக எழுதுவதே ஒரு தெளிவான சிந்தனையாக தங்களைப் போன்ற ஒரு சிறந்த சிந்தனையாளருக்கு பெருமை தரக்கூடியதாக இருக்கும் ! கூற வந்ததை இயலுமெனில் இங்கு வெளிப்படையாக எழுதினால் மட்டுமே இங்கு நல்லதை நினைப்பவர்களுக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கும் !

    ReplyDelete
  64. நல்ல செய்தி நண்பர்களே!

    திருநெல்வேலியில் காமிக்ஸ் விற்பனை முயற்சி வெற்றி அடைந்ததை தொடர்ந்து மேலும் பல கடைகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது!

    1.ரகுமத் புக்ஸ்டால் திலி ஜங்ஷன்.[பிளாட்பாரம் 1. ]
    2.மேலப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள கடை,
    3. திலி புது பஸ்ஸடாண்ட் மணி புக் ஸ்டால்,
    4. புத்தக பூங்கா&
    5.கவிதா புக் ஸ்டால்
    (புது பஸ்டாண்ட் இந்தியன் வங்கி ஏடிஎம் பின்புறம்)

    மரணத்தின் நிசப்தம்
    இன்றுமுதல் கிடைக்கிறது!

    உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!

    ReplyDelete
    Replies
    1. @ Msakrates,

      Excellent efforts from you. Hats off to your folks for providing such efforts and publicity.

      Delete
    2. உங்களது இடைவிடா முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

      Delete
  65. comic lover:

    வணக்கம் நண்பரே!
    தங்கள் பாராட்டுக்கள் லாபநோக்கமின்றி காமிக்ஸ் வளர்ச்சிக்காக தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு விற்பனை செய்யும் நண்பர்களை சென்றடையட்டும்!

    அதில் எனக்கு எந்த பங்கும் இல்லை!

    ஸ்ரீவில்லிபுத்தூர். ராஜபாளையம் ஊர்களில் விற்பனை முயற்சி பணபற்றாக்குறையால் தள்ளிப்போகிறது!

    மற்ற ஊர்களிலும் வாய்ப்பும் வசதியும் உள்ள வாசகர்கள் முன்வந்தால் விதை விருட்சமாகலாம்!

    //ஆனால் எடிட்டிங்கில் விடுபட்டது போல் தோன்றவில்லை -//

    பதிலுக்கு நன்றி!
    எனக்கு தேவை யுகங்கள் அல்ல!
    ஆதாரபூர்வமான விளக்கம்....

    ReplyDelete
  66. FLASH NEWS
    ராஜபாளையம் பஸ்டாண்டில் இப்போது மரணத்தின் நிசப்தம் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது!

    ReplyDelete
  67. Comic Lover (a) சென்னை ராகவன்: பக்கம் 62 ல் 4 வது கட்டத்தில் லூடோ பாஸ்டியன்ஸ் சவ அடக்கதின் கூட்டத்திலிருந்து வெளி செல்வதுபோல செல்கிறார். ஆனால் பக்கம் 63 இல் 4 ஆம் கட்டத்தில் மீண்டும் சவப்பெட்டியில் இருந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது அதுமட்டுமல்ல அதற்கு பிறகு அவர் எங்கே செல்கிறார் என்பதும் தெரியவில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்பதனையும் கொஞ்சம் புலனாய்வு செய்து சொல்லுங்களேன்!

    ReplyDelete
  68. //Erode M.STALIN 28 December 2012 00:35:00 GMT+05:30
    Comic Lover (a) சென்னை ராகவன்: பக்கம் 62 ல் 4 வது கட்டத்தில் லூடோ பாஸ்டியன்ஸ் சவ அடக்கதின் கூட்டத்திலிருந்து வெளி செல்வதுபோல செல்கிறார். ஆனால் பக்கம் 63 இல் 4 ஆம் கட்டத்தில் மீண்டும் சவப்பெட்டியில் இருந்து வருவதாக காட்டப்பட்டுள்ளது அதுமட்டுமல்ல அதற்கு பிறகு அவர் எங்கே செல்கிறார் என்பதும் தெரியவில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று என்பதனையும் கொஞ்சம் புலனாய்வு செய்து சொல்லுங்களேன்! Reply//

    நண்பரே!

    லூடோ பாஸ்டியன் 73ம் பக்கம் திரும்பவும் வருகிறார்!

    83ம் பக்கத்தில் இறந்து போகிறார்!

    ReplyDelete
  69. Dear friends

    i want to tell you my experience that i was consumed by studies, job and personal life and from got drifted away from lion comics from 1987 onwards. To my biggest surprise, lion comics was continuing all through these years and only in 2010 i came to know about it. During these years 1987 to 2009, though i used to roam around book stores, small shops selling magazines, i did not find a trace of lion muthu comics and that it was alive and kicking.

    Everybody knows that there was a big following for lion and muthu in the early eighties to late eighties and like me many of them drifted away and lost getting caught in the web of life. Out of the lost and missing fans, i think only may be 2% are back and the rest simply are not aware of lion muthu publishing comics now. Why i say this, i went to exactly 5 of my friends who were old lion-muthu comics fans and asked them whether they were aware that lion muthu publishing comics and i'am very sorry that 5/5 said they are not aware. This is the state in a city like chennai/coimbatore/madurai. then i only wonder how the old fans can be reached in villages and towns.

    Vijayan sir, I have 2 points

    1) while this blog is doing great, i still feel it has only reached may be 10% of the old lion comics fans "who have web access".
    2) for people in villages and towns and cities who have no web access or not internet savvy, i think they will never know that lion - muthu comics are available

    Sir, i request you to provide this comics enjoyment, by reaching out to all the fans who somehow drifted away by some innovative methods.

    -Organic YANTHIRAM.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ஒரு சதவீதம் கூட நாம் இங்கே இல்லை !நமக்கு வாய்ப்பு இன்னும் வளமாக உள்ளது அனைவரையும் சென்றடைந்தால் !இப்போது கடைகளில் தொங்க விட உள்ள அட்டைகள் வர உள்ள விளம்பரங்கள் ,அற்புதமான நாயகர்களை வண்ணத்தில் தாங்கி வர உள்ள வெளியீடுகள் கண்டிப்பாக எங்கோ கொண்டு செல்ல போகிறது ! உற்ச்சாகம் கூட கூட நம்மை ஆச்சரிய படுத்த ,சந்தோசபடுத்த கூடிய கதைகளின் வரவு அதிகரிக்க போகிறது !1980 s நம் கண் முன்னே வரவிருக்கிறது !1980 s என்ன வரும் காலம் 2013 என்றே கூறவிருக்கிறது காலம் ! nbs கூட வர உள்ள அட்டவணை நம்மை எங்கோ கொண்டு செல்லவிருக்கிறது .............................

      Delete
    2. Organic Yanthiram,

      What you said is true, after 80s and 90s our comics not available in bookstores as it was available earlier. Later very few book shops from selected areas selling lion comics. Also those who have contact with lion comics office they were getting our lions throuh subscription. We can say without an exaggeration, many older readers returned to our comics reading after this blog page established in 2012.

      நீங்கள் என்ன சொன்னீர்களோ அது உண்மைதான்.
      80களுக்கு பிறகு 90களில் முன்பு போல புத்தக கடைகளில் நமது காமிக்ஸ் விற்பனைக்கு கிடைக்கவில்லை. பின்னர் நம்முடைய காமிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மிக சொற்பமான கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மேலும் நம்முடைய லயன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டுள்ள வாசகர்கள் மட்டுமே சந்தா மூலம் நம்முடைய காமிக்ஸ் பெறுவது சாத்தியமானது. 2012ல் துவங்கப்பட்ட இந்த ப்ளாக் மூலமாகவே பழைய வாசகர்கள் மீண்டும் நமது காமிக்ஸ் பக்கமாக திரும்பியுள்ளனர் என்றால் மிகையாகாது.

      Delete
    3. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : What you say is absolutely true. We have a bright future and i hope that we will get more comics from Lion-Muthu stable and not to forget that it will be still great if we get a children magazine too. At the same time to achieve this, somehow the message that lion-muthu is available should be sent to the lost fans of the 80's and also bring the new generation readers

      @udhayan
      Indeed, though i was getting the comics bits and pieces during 2011, only in 2012 after this blog i was able to get back to my 80's style.

      Delete
  70. ஆசிரியர் vijayan :
    //நியாயமான சிந்தனைகளே ! ஏற்கனவே நம் நண்பர்களில் பலரும் முந்தையப் பதிவுகளில் இதனை எழுப்பியுள்ளார்கள் !
    இதே சூழ்நிலையில் நானொரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும் பட்சத்தில், இளையவர்களை target செய்து எப்போதோ இன்னுமொரு இதழைத் தயாரிக்கக் கச்சை கட்டி இருப்பேன். ஆனால் அந்த சிந்தனை வேகத்தை, செயலிலும்,விற்பனையிலும் sustain செய்திடுவதில் சிரமங்களை சந்தித்து, சொதப்பியும் இருப்பேன் நிச்சயமாய் ! கொஞ்சமேனும் ஒரு திட்டமிடல் ; ஒரு ஒழுங்கு சமீப காலமாய் தான் தலைக்குள்ளே துளிர் விட்டு வருவதால், 'எடுத்தோம் ; கவிழ்த்தோம்' என்றில்லாது, செய்வது எதுவாகினும் திருத்தமாய் இருந்திட வேண்டுமென்ற தீவிரம் உருவாகி உள்ளது ! நிதானமாய் அசை போட்டு வருவோம் ; சரியான தருணம் நெருங்கும் போது நிச்சயம் அதனை தவற விட மாட்டோம் ! //

    ஆசிரியரின் நீண்ட நாள் விருப்பமான சிறுவர்களுக்கான காமிக்ஸ் தொடங்குவது
    பற்றிய அவரின் பார்வைக்கு ஒரு லயன் காமிக்ஸ் வாசகனாக என்னுடைய எண்ணங்கள் !
    இடம், பொருள், ஏவல் பார்த்து பிறிதொரு சந்தர்ப்பத்தில்!

    காரணம்: ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு கருத்தை மையப்படுத்தி
    மட்டுமே என் பின்னூட்டங்கள் அமைந்தால் சொல்கின்ற கருத்தில் குழப்பம் தவிர்க்கப்படும் என்பதால் மட்டுமே!

    *ஆசிரியருக்கு ஒரு திறந்த மடல்*

    ReplyDelete
  71. @Msakrates

    அந்த கேள்வி:

    //வணக்கம் விஜயன் சார்!

    எனக்கு நெடுநாளாக ஒரு குழப்பம்.

    double-thrill ஸ்பெஷல் "பனியில் ஒரு பரலோகம்"
    ஜானி கதையில்
    பக்கம் 69 ல் டாக்டர்
    அகோனி இறந்து விடுகிறார்.

    பக்கம் 76 ல் டிவியில்
    மீண்டும் தோன்றுகிறார்.

    இதற்கு கதையில்
    விளக்கம்
    தரப்படவில்லையே?

    கடைசிப் பக்கம் இல்லாத துப்பறியும் நாவலை போல இந்த இடம் உறுத்துகிறது விளக்கம் தர வேண்டுகிறேன்!//

    76 page ல், frame 5 ல்

    ஜானி தரும் விளக்கம்: " அவர் இறந்து கிடந்ததை நேரில் பார்த்தவன் நான்... அவரைப் போல் வேடம் அணிந்தவனா.... இல்லை.. போலியாக உருவாக்கப்பட்ட வார்ப்பா?"

    92 page ல் frame 11 ல்

    இஹ்மர் தரும் விளக்கம்: "மார்டினாத்தான் பாஸ்டியன்சின் சகாயத்தோடு டாக்டரின் கதையை முடித்தால்"

    இந்த இடத்தில் டாக்டர் இறந்தது உறுதி படுவதால். திரையில் தெரியும் உருவம் ஜானியின் கூற்று படி அது வேடம் அணிந்தவனகவோ, அல்லது போலியாக உருவாக்கப்பட்ட வர்ப்பகவோ இருக்கலாம்.

    ReplyDelete
  72. Mahesh:

    //76 page ல், frame 5 ல்
    ஜானி தரும் விளக்கம்: " அவர்இறந்து கிடந்ததை நேரில் பார்த்தவன் நான்... அவரைப் போல் வேடம் அணிந்தவனா.... இல்லை.. போலியாக உருவாக்கப்பட்ட வார்ப்பா?"
    92 page ல் frame 11 ல்
    இஹ்மர் தரும் விளக்கம்:"மார்டினாத்தான் பாஸ்டியன்சின் சகாயத்தோடு டாக்டரின் கதையை முடித்தால்"
    இந்த இடத்தில் டாக்டர் இறந்தது உறுதி படுவதால். திரையில் தெரியும் உருவம் ஜானியின் கூற்று படி அது வேடம் அணிந்தவனகவோ, அல்லது போலியாக உருவாக்கப்பட்ட வர்ப்பகவோ இருக்கலாம்//

    அதாவது கதையின் ஒரு புதிருக்கான விடையை வாசகனே யுகித்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்களா?

    எனக்கு தேவை ஊகங்கள் அல்ல உறுதியான விளக்கம்!

    கதை எடிட்டிங்கில் வெட்டப்பட்டதா அல்லது ஒரிஜினலே அப்படித்தான் ஓட்டை லாஜிக்குடன் இருக்கிறதா என்ற உண்மையான விளக்கம்!

    இந்த விளக்கத்தை எனக்கு தர ஆசிரியர் தயங்குவது ஏன்?

    நான் வேலையில் இருந்ததால் பதில் தர தாமதம் ஏற்பட்டு விட்டது பொறுத்துக்கொள்க!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ்-ல precise லாஜிக் தேடரிங்களே தலைவா.

      //திரையில் தெரியும் உருவம் ஜானியின் கூற்று படி அது வேடம் அணிந்தவனகவோ, அல்லது போலியாக உருவாக்கப்பட்ட வர்ப்பகவோ இருக்கலாம்//

      அந்த இடத்திற்கு மேல் டாக்டர் வேறெங்கும் வருவதில்லை. அப்படி இருக்க உங்களுக்கு என்ன குழப்பம் கதையில்.

      on the lighter side,

      கதைபடி ஜானியால் கூட யுகிக்க முடியவில்லை, நீங்களும் அதை யுகிக்க முயற்சிக்காதிர்கள்.

      Delete
  73. //Parani from Bangalore26 December 2012 10:06:00 GMT+05:30
    மொழி பெயர்க்க படம் இல்லாமல், வெறும் பலூன், உரையாடல் மற்றும் கதையில் வரும் கதாபாத்திரம் பெயர் மட்டும் குறிப்பிட்டு அனுப்பினால் சில பிரச்னைகளை தவிர்க்கலாம்!//

    இந்த இடத்தில் உங்கள் கருத்துக்களோடு முரண்படுவதற்கு மன்னிக்கவும் நண்பர்களே.

    சித்திரக்கதைகளின் அடி நாதமே, அதிலுள்ள சித்திரங்களுக்கும் வசனங்களுக்குமிடையிலுள்ள தொடர்புதான்.

    1930-1950 களில் வந்த பல சித்திரக்கதைகளில், அவற்றில் பலூன்கள் மூலம் வசனம் குறிப்பிடப்பட்டருக்காது. படத்தின் ஒரு ஓரத்தில் வசனங்கள் அச்சிடப்பட்டு கட்டங்கள் சிறைவுசெய்யப்பட்டிருக்கும். அதேநேரம், அந்தக் கட்டங்களுக்கு கீழாக, 'அவன் அவ்வாறு சொன்னதைக்கேட்டு சாம் கொதிப்படைந்தான். தன் துப்பாக்கியை உருவி எடுத்து ரிக்கை குறிவைத்து விசையை இழுத்தான். தோட்டா வேகமாக ரிக்கின் தலையை நோக்கிப் பறந்தது. ஆனால், அற்புதவேகத்தில் செயல்பட்ட ரிக், சட்டென்று தலையைச் சாய்த்து தப்பிக்கொண்டான். அவனது பெல்ட்டிலிருந்த ரிவால்வர் அவன் கைக்கு கணநேரத்தில் வந்தது....' என்று வசனம் வசனமாக எழுதியிருப்பார்கள் (ஆர்ட்டிஸ்டுகளுக்கு அனுப்பப்படும் குறிப்புகளை அப்படியே பிரிண்ட் செய்வார்கள் போலும்!).

    ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை. வசனங்களே குறைந்து முழுவதும் ஆக்ஷனிலேயே கதைகள் நகர்கின்றன. (இப்போது நமது காமிக்ஸ்களில் வரும் கதைகள் 70-90 களில் படைக்கப்பட்டிருந்தாலும்கூட, அவை வசனம் கறைந்தவையாகவே அமையப்பட்டுள்ளமை ஆச்சரியமே!)

    வசனம் ஒன்றில் 'ஐயோ! அம்மா!' என்று இருந்தால், அவன் கையாலா? துப்பாக்கியாலா? துடைப்பத்தாலா? தாக்கப்பட்டான் என்பது தெரியாமல் மொழிபெயர்ப்பது கதையின் உயிரோட்டத்தையே சிதைத்துவிடாதா? ('இப்ப மட்டும் என்னவாம், அப்படித்தானே இருக்கிறது' என்று சொல்லும் நண்பர்களின் வாதங்களும் இருக்கின்றன).

    அடுத்தடுத்த கட்டங்களின் தொடர்ச்சி என்பது படங்களைப் பார்க்கும்போதே புரியுமல்லவா? படம் இல்லாமல் வசனங்களை மட்டும் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது 'பார்வைப் புலன் வலுவிழந்தவர்கள் யானையைப் பார்த்த கதை' ஆகிவிடாதா? எனவே, உங்கள் கருத்துக்களை மீள் பரிசீலனை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மேலே பல எழுத்துப்பிழைகள் விட்டுவிட்டேன். மன்னிக்கவும். ஒப்புநோக்கப்பட்டபின் (ஃப்ரூப் ரீட் செய்தபின்) ;-) எனது பின்னூட்டம்!
      ---------------------
      //Parani from Bangalore26 December 2012 10:06:00 GMT+05:30
      மொழி பெயர்க்க படம் இல்லாமல், வெறும் பலூன், உரையாடல் மற்றும் கதையில் வரும் கதாபாத்திரம் பெயர் மட்டும் குறிப்பிட்டு அனுப்பினால் சில பிரச்னைகளை தவிர்க்கலாம்!//

      இந்த இடத்தில் உங்கள் கருத்துக்களோடு முரண்படுவதற்கு மன்னிக்கவும் நண்பர்களே.

      சித்திரக்கதைகளின் அடி நாதமே, அதிலுள்ள சித்திரங்களுக்கும் வசனங்களுக்குமிடையிலுள்ள தொடர்புதான்.

      1930-1950 களில் வந்த பல சித்திரக்கதைகளில், அவற்றில் பலூன்கள் மூலம் வசனம் குறிப்பிடப்பட்டிருக்காது. படத்தின் ஒரு ஓரத்தில் வசனங்கள் அச்சிடப்பட்டு கட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டிருக்கும். அதேநேரம், அந்தக் கட்டங்களுக்கு கீழாக, 'அவன் அவ்வாறு சொன்னதைக்கேட்டு சாம் கொதிப்படைந்தான். தன் துப்பாக்கியை உருவி எடுத்து ரிக்கை குறிவைத்து விசையை இழுத்தான். தோட்டா வேகமாக ரிக்கின் தலையை நோக்கிப் பறந்தது. ஆனால், அற்புதவேகத்தில் செயல்பட்ட ரிக், சட்டென்று தலையைச் சாய்த்து தப்பிக்கொண்டான். அவனது பெல்ட்டிலிருந்த ரிவால்வர் அவன் கைக்கு கணநேரத்தில் வந்தது....' என்று வசனம் வசனமாக எழுதியிருப்பார்கள் (ஆர்ட்டிஸ்டுகளுக்கு அனுப்பப்படும் குறிப்புகளை அப்படியே பிரிண்ட் செய்வார்கள் போலும்!).

      ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை. வசனங்களே குறைந்து முழுவதும் ஆக்ஷனிலேயே கதைகள் நகர்கின்றன. (இப்போது நமது காமிக்ஸ்களில் வரும் கதைகள் 70-90 களில் படைக்கப்பட்டிருந்தாலும்கூட, அவை வசனம் குறைந்தவையாகவே அமையப்பட்டுள்ளமை ஆச்சரியமே!)

      வசனம் ஒன்றில் 'ஐயோ! அம்மா!' என்று இருந்தால், அவன் கையாலா? துப்பாக்கியாலா? துடைப்பத்தாலா? தாக்கப்பட்டான் என்பது தெரியாமல் மொழிபெயர்ப்பது கதையின் உயிரோட்டத்தையே சிதைத்துவிடாதா? ('இப்ப மட்டும் என்னவாம், அப்படித்தானே இருக்கிறது' என்று சொல்லும் நண்பர்களின் வாதங்களும் இருக்கின்றன).

      அடுத்தடுத்த கட்டங்களின் தொடர்ச்சி என்பது படங்களைப் பார்க்கும்போதே புரியுமல்லவா? படம் இல்லாமல் வசனங்களை மட்டும் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது 'பார்வைப் புலன் வலுவிழந்தவர்கள் யானையைப் பார்த்த கதை' ஆகிவிடாதா? எனவே, உங்கள் கருத்துக்களை மீள் பரிசீலனை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. Podiyan, I agree! I am NOT expect in this area, after seeing your reply I can remember some of the comics had the dialog in the bottom! Anyway it is my suggestions expects can decide about the best way to go!!

      Delete
  74. Mahesh:

    // அந்த இடத்திற்கு மேல் டாக்டர் வேறெங்கும் வருவதில்லை. அப்படி இருக்க உங்களுக்கு என்ன குழப்பம் கதையில். on the lighter side, கதைபடி ஜானியால் கூட யுகிக்க முடியவில்லை, நீங்களும் அதையுகிக்க முயற்சிக்காதிர்கள்.//

    நண்பரே!
    கதை அரைகுறையாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

    கதைகள் ஒரிஜினலில் இருந்து தமிழுக்கு வரும்போது சிதைக்கப்பட்டு இருந்தால் அவற்றின் சுவை குறைகிறதே!

    Podiyan:

    // மொழிபெயர்ப்பது கதையின் உயிரோட்டத்தையே சிதைத்துவிடாதா? ('இப்ப மட்டும் என்னவாம், அப்படித்தானே இருக்கிறது' என்று சொல்லும் நண்பர்களின் வாதங்களும் இருக்கின்றன).//

    கரெக்ட்!
    தங்கக்கல்லறை புதிய மொழிபெயர்ப்பில் எனக்கு இந்த அனுபவம் தான் கிடைத்தது!

    கதையின் ஜீவன் பொருத்தமற்ற வசனங்களால் சாகடிக்கப்பட்டுள்ளது!

    விளைவு டைகர் கதைகளில் ஒரு மெகா ஹிட்டான தங்கக்கல்லறை கலரில் வந்தும் அதன் சுவையை நாம் முழுமையாக அனுபவிக்க இயலவில்லை!

    முதல் பதிப்பு மொழிபெயர்ப்புடன் புதிய மொழிபெயர்ப்பை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்!

    மொழிபெயர்ப்பு அதன் மூல கதையையோ கதாபாத்திரங்களின் குணாதிசயங்களையோ சிதைத்து விடாமல் அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய ஒன்று...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இந்த கதை படிக்கும் போது குழப்பம் இருந்தது! மகேஷ் கூறியது போல் இருக்கலாம் என்ற அனுமானத்தில் விட்டுவிட்டேன்! பொதுவாக ஜானி கதைகளில் சில இடம்களில் சில பக்கம் இல்லாது போல் தோன்றும், பலமுறை பக்கம்களை இரண்டு முறை திருப்பி பார்த்த அனுபவம் உண்டு; மரணத்தின் நிசப்தம் கதைக்கும் இது பொருந்தும்!! என்னை பொருத்தவரை எடிட் செய்த வாய்புகள் குரையு! மேலும் இவை ஜானி கதைகளின் "Trade Mark" :-) ஆனால் அசிரியர் இதை பற்றி விளக்கினாள் நன்றாக இர்ருக்கும்!! இது போன்ற "லாஜிக்" தங்க கல்லறை படிக்கும் போது தோன்றியது! இறுதி-ல் அனுமானத்தில் விட்டுவிட்டேன்!!!

      முழு அர்ப்பணிப்புடன் அசிரியர் செய்வதால் தான் நமக்கு இந்தவருடம் இனிமையான வருடமாக அமைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை!

      Delete
    2. சந்தேகத்தில் பாண்டிய மன்னனை மிஞ்சிவிடுவீர்கள் போல் இருக்கிறது,

      தங்களுக்காக ஒரிஜினல் கதையை Download செய்ய முயற்சிக்கிறேன், ஒப்பிட்டு பார்த்துவிட்டு கூறுகிறேன்

      Delete
    3. நண்பரே,

      உங்கள் E-mail ID தந்தீர்கள் என்றால் ஒரிஜினல் கதையை அனுப்பி வைக்கிறேன்

      Delete
  75. நண்பர் சாக்ரடீசுக்கு,

    நண்பரே ஏற்கனவே திருநெல்வேலியைத் தொடர்ந்து முதல் முயற்சியாக ராஜபாளையத்தில் ஆனந்தா போர்டிங் & லாட்ஜிங் ஹோட்டல் வாயில் அருகாமையில் ஒரு கடையில் மரணத்தின் நிசப்தம் சில புத்தகங்கள் மட்டும் விற்பனைக்கு கொடுத்திருக்கிறோம். பழைய பேருந்து நிலையத்தில் கேட்டிருக்கிறோம். அடுத்த வாரத்தில் இருந்து அங்கும் விற்பனைக்கு ஏற்பாடு செய்துவிடுவோம்.

    இது போக ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் (சிவகாசி பேருந்துகள் நிற்கும் வரிசையில்) ஒரு புத்தகக் கடையில் முதல் முயற்சியாக மரணத்தின் நிசப்தம் சில புத்தகங்கள் மட்டும் விற்பனைக்கு கொடுத்திருக்கிறோம்.


    ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் வாரத்தில் இருந்து அதிக புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

    மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் NBS சில பிரதிகள் கடைகளில் கிடைக்கவும் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளோம்.

    இதை நான் இங்கே இவ்வளவு நாள் சொல்லிக்கொள்ளாதது வீண் தம்பட்டம் போல் தெரியும் என்பதால். ஆனால் ஆர்வமிகுதியில் தாங்கள் அளித்த தவறான (பணபற்றாக்குறை) தகவலால் தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் கூறவேண்டியதாகி விட்டது.

    //பணபற்றாக்குறை// தவறான தகவல்களை அளிக்க வேண்டாமே.

    உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சாக்ரடீஸ்.

    ReplyDelete
  76. வாழ்த்துக்கள் சார்.நமது காமிக்ஸ்களில் உள்ள முதல் highlight மொழிப்பெயர்ப்புதான் ,அதனால் கவரப்பட்டவர்கள் தாம் நாம் அனைவரும் .....இப்படியிருக்க ,எங்களை உற்சாகப்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு விஷப்பரிட்ச்சையை மேற்க்கொள்கிறீர்களோ என்று எண்ணுகிறேன் ...உங்களை விட்டு வேறு எவர் \மொழிப்பெயர்ப்பு செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்வோமா எனபது சந்தேகம்தான் ....ஒரு பக்க கதையாக இருந்தாலும் அது உங்களின் முத்திரையாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை

    ReplyDelete
  77. Code Name மரமண்டை !

    Dedicated to Investigative Journalism !!!

    வாசகர்களே, வாசக நண்பர்களே ! நீங்கள் இங்கு வராமல் என்னவோ போல் இருக்கிறது! மனமும், இதயமும் சற்றே கணக்கிறது! நாம் எந்த கெடுதலை செய்துவிட்டோம், இங்கு வராமல் தவிர்க்க! எனவே தயங்காமலும், தவிர்க்காமலும் இங்கே பதிவிட வாருங்கள்! உங்களின் எழுத்துக்களும் அது கொண்டு வரும் சிந்தனைகளும் என்னைப்போல் இங்கு சிலருக்காவது பிடித்தேதான் இருக்கும்! தங்களின் பெயர்களை வெளிப்படையாக சொல்ல எனக்கு ஆர்வமே, ஆனால் அப்படி சொல்லிவிட்டால் நீங்கள் எல்லாம் நல்லவர்கள் என்று வெளியுலகத்திற்கு தெரிந்துவிடும்! எனவே கீழ்கண்ட பெயர்கள் உள்ளவர்களை இங்கே வரவேற்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம் !!!

    LEVEL.I : Home alone!
    1. A Nostalgia

    LEVEL.II : Great Minds think Alike!
    1. அங்க தேசத்து அரசன்
    2. The Lion King

    LEVEL.III : காக்க காக்க!
    1. South
    2. West
    3. West end

    LEVEL.IV : T20-We will be back in form!
    1. Mr. X
    2. Mr. Y
    3. Mr. Z
    4. Mr. XZ
    5. Mr. YZ
    6. Mr. Z Z
    7. Mr. XYZ
    லயன் முத்து காமிக்ஸ் வலைரோஜா வின் மேன்மை கருதி வெளியிடுவோர்,
    இவண்:
    தலைவர்
    த உ பு சி (ROFL) and ச போ சி (LOL) template comment ஐ கடுமையாக எதிர்ப்போர் சங்கம் !!!

    ReplyDelete
  78. சவுந்தர் நண்பரே!
    அந்த தகவல் நமது பொதுவான நண்பரிடம் இருந்து எனக்கு வந்தது அது தவறான தகவலாக இருந்ததற்கு வருந்துகிறேன்!

    இது குறித்த முழுமையான விளக்கம் மெயிலில் அனுப்பி வைக்கிறேன்!

    தாங்கள் தமிழ் காமிக்ஸ் வளர எடுக்கும் முயற்சிகளுக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
  79. மகேஷ் நண்பரே!
    என்னிடம் கம்ப்யுட்டர் இல்லை இயக்கவும் தெரியாது!
    nokia 110 மொபைல்தான் உள்ளது!
    அதில் கதையை தரவிறக்கம் செய்து வாசிக்க இயலாது!

    நீங்கள் கதையை பார்த்து கதை தமிழில் வெட்டப்பட்டுள்ளதா அல்லது ஒரிஜினலே அப்படித்தானா என்று பார்த்து சொல்ல முடியுமா?

    அல்லது இங்கே மற்றவர்கள் பார்க்க லிங்க் கொடுக்கலாம்!

    MY Email

    sakrates1991@gmail.com

    ReplyDelete
  80. //Ahmed Pasha29 December 2012 11:55:00 GMT+05:30
    வாழ்த்துக்கள் சார்.நமது காமிக்ஸ்களில் உள்ள முதல் highlight மொழிப்பெயர்ப்புதான் ,அதனால் கவரப்பட்டவர்கள் தாம் நாம் அனைவரும் .....இப்படியிருக்க ,எங்களை உற்சாகப்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு விஷப்பரிட்ச்சையை மேற்க்கொள்கிறீர்களோ என்று எண்ணுகிறேன் ...உங்களை விட்டு வேறு எவர் \மொழிப்பெயர்ப்பு செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்வோமா எனபது சந்தேகம்தான் ....ஒரு பக்க கதையாக இருந்தாலும் அது உங்களின் முத்திரையாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை //

    to: Mr.Ahmed Pasha

    ஆசிரியரே பலதடை மொழிபெயர்ப்பு எல்லாவற்றையுமே அவர் செய்வதில்லை என்றும், அதற்காக சிலரை நியமித்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் படிக்கவில்லையா? மொழிபெயர்த்து வந்ததும், அவற்றிரி ஆசிரியரின் 'டச்' இருக்குமென்பதே வழமை.

    அதேபோலத்தானே நம் நண்பர்களின் மொழிபெயர்ப்பும் ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதிலும் அவரது எடிட்டிங் இருக்கத்தானே போகிறது. பிறகேன் கவலை நண்பரே?

    காமிக்ஸ்களின் வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. அதன் ஒரு வெளியீடுகூட வராத நிலையில், அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏன் நினைக்கவேண்டும்? சில வெளியீடுகள் வரட்டுமே, அதன் பின்னர் எங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே?

    ReplyDelete
  81. நண்பர்களே, 3 நிமிடம் முன்பு ''மேற்கே ஒரு மின்னல்'' கதையில் 6 ஆம் பக்கம் படித்த போது எனக்கு ஒரு
    மிகப்பெரிய சந்தேகம் வந்து விட்டது! அமெரிக்கா வை கண்டுப்பிடித்த கொலம்பஸ் (columbus) நல்லவரா ! கெட்டவரா !

    நல்லவர் : உலகின் மிகப்பெரிய செல்வ செழிப்பு மிக்க வளமான ஒரு நாட்டை கண்டுப்பிடித்து
    அது, பின் நாளில் உலக வல்லரசாக மாற்றம் கொண்டு இன்றுவரை பரிணமிக்க காரணமானவர் !

    கெட்டவர் : அமெரிக்கா வை கண்டுப்பிடிக்க காரணமாயிருந்து அந்த மண்ணின் பூர்வீக குடிகளான
    எண்ணற்ற லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் கொடும் அழிவுக்கு காரணமாக இருந்துவிட்டார் !

    தயவு செய்து விவரம் அறிந்த வாசகர்கள் என்னுடைய சந்தேகத்தை
    தீர்த்துவைத்தால் இனிமேலும் இது போன்ற கேள்விகளை இங்கு எழுப்ப மாட்டேன் !!!


    ReplyDelete
  82. இந்த பதிவை தமிழில் இட வேண்டும் என்றுதான் நினைத்தேன். விரிவாக எழுதியபின் Reverse பட்டன் அழுத்தியதால் தமிழ் வடிவம் மறைந்து விட்டது. எனவே ஆங்கிலத்தில் ....!

    In 2012, I had purchased Lion/Muthu comics in three ways – all via remote orders.

    1) Ordering back issues via bank-transfer and phone call – was quickest and a pleasant experience:

    This worked beautifully so far. My latest order was mid of this week and the book set reached me the next day afternoon. So far I have ordered back issues 4 times in 2012 and I have always gotten the back issues the next day. Kudos to the staff members to maintain the quickness.

    2) Ordering via e-bay – super speed delivery of online products:

    Prior to paying subscriptions I was ordering through e-bay – and reading all the 2012 issues of lion/muthu comics. Here again 80% of the time, the books came the next day and 20% of the time in two days – which is actually super speed for an online order. The team deserves an appreciation for this too.

    Both the above deliveries have happened through Professional as well as S T Couriers and they have been always prompt.

    3) Tardiness and delay in delivery of subscribed copies:

    Since SUPER HERO SUPER SPECIAL I had paid for the subscription for the remaining issues of 2012 and also the forthcoming issues of 2013 including comics classics.

    However I had a different and slightly disappointing experience with subscribed issues as none of the issues so far (SHSS, Thangak Kallarai, Maranaththin Nisaptham) have reached me on time – and there has been a delay of 4-6 days on an average.

    This is surprising given that the general norm is that the subscriber copies arrive on the release date or ahead of it.

    Since our lion/muthu team is involved in all these cases it perhaps is evident that the inability – rather ineptitude - of S T Couriers (which now seems to be the default option) to handle bulk couriers being done to all cities from a particular destinations.

    While some folks in Chennai had received copies the next day for Maranaththin Nisaptham as evident from their blog posts, the others were perhaps left in the oblivion due to the inefficiency of the courier delivery company.

    When I called and asked S T Couriers they replied saying that making blank calls without having the parcel order placed is unwelcome.

    It is also worrying how S T Couriers, given their ineptitude, are going to handle the delivery of Never Before Special – given that the Editor has said that each book is about a kilogram in weight. Assuming we have (a sample number – not exact) 500 pre-bookings, it is half a ton of books to be moved from Sivakasi to all places and given the bulk handling capabilities that I have seen so far – I am really concerned how S T couriers is going to handle this situation.

    All the good work done by the Lion/Muthu team – burning midnight oil – should not be undone by an inept service.

    Here are some suggestions to the ‘Lion’ team for handling these issues:

    a) Consider having upto three courier options – zone in the courier places for subscription books and divide it into three zones and send via three couriers. Yes, price will vary slightly – but on time delivery is more critical. After a while, continue with two best services.
    Apportioning the delivery as said above will make it easier for stock to reach the places faster due to lesser load and also due to the fact that there is competition.
    b) Instead of targeting monthly releases as early as possible, we can target a release on either Second Monday or Third Monday of every month. By all means despite 99% of the deliveries would be completed by the approaching Saturday afternoon – in time for everyone to enjoy the book during the weekend.

    c) The courier company must be let known that such a service is tardy and is unwelcome and if they continue this way other options would be looked at.

    d) Speed Post can be explored – yes India Post is tardy at times too – but they have a compulsory tracking number and at best it reaches destination within 3-4 days. So it helps.



    ReplyDelete
    Replies
    1. @comic lover,
      I regularly make purchases via online and I have experienced very bad service from pretty much everybody including premium delivery services such as blue dart. Believe me all courier services such as ST, professional and others fall in a same group. And though i haven't experienced speed post services, i believe it must be still more worst as it is a government operated one.
      I think we need to live with this.

      Organic YANTHIRAM.
      After all we are just Organic Machines.

      Delete
    2. I presume, like me, you belong to the IT or Telecom world. Would you expect your customer to live with a delayed shipment (release) of your product? If not in IT, you must still be working on some product or service and we do not delay it there - right? And no different day delivery to customers scheduled on the same day release right? IMHO, this is what this courier company is doing!

      I am just pointing at the bulk handling (in)capabilities of the current courier service folks. When handling single parcels - they look to be good.

      As long as there are options we need to explore alternatives. Living with tardiness begets further tardiness !!

      Delete
    3. பெங்களூரிலும் ST குரியர் படு மோசம், சில மாதங்களுக்கு முன்னர் லயன் அலுவலகத்தில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது Professional குரியரில் அனுப்புகிறார்கள் - சேவை துரிதமாக உள்ளது!

      வாசக நண்பர்கள் முடிந்தவரை குரியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புத்தகங்கள் பெற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம்! ஆர்வ மிகுதியால் பலரும் இவ்வாறு செய்யத் துவங்கினால், பிறகு சம்பந்தப்பட்ட குரியர் நிறுவன ஊழியர்கள் "சிவகாசியில இருந்து பார்சலா?! கிடப்பில போடுங்க, அவங்களே ஆபிஸ் வந்து வாங்கிப்பாங்க" என்ற ரீதியில் அலட்சியமாக செயல்படத் துவங்கி விடுவார்கள்!!! வீடு தேடி வந்து, நேரத்திற்கு சேர்பிப்பது அவர்களின் கடமை! நேரம் தவறினால் அவர்களை தொலைபேசியில் அழைத்து வேண்டுமானால் தொல்லை செய்யலாம் - ஆனால் நேரில் சென்று பெறுவதை நண்பர்கள் தவிர்க்கலாமே?!!!

      Delete
    4. Karthik :

      இந்த அட்வைஸ் எல்லாம் NBSன் முன்பு எடுபடாது என்றுதான் தோன்றுகிறது. NBS கைக்கு கிடைக்கும் நாளன்று கொரியர் ஆஃபீஸை திறப்பதே நம் நண்பர்களாகத்தான் இருக்கும்.
      கொரியர் ஆஃபீசுக்கு புத்தகப் பார்சல் வந்து சேரும்வரை சாமி படத்தைத் துடைத்துவைப்பது, டேபிளை அரேஞ்ச் செய்வது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு; புத்தகம் கைக்குக் கிடைத்ததும் உள்ளேயே சின்னதாய் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு, வினோதமாய் கத்தியபடியே சிட்டாய் பறந்துவிடுவார்கள். :)

      Delete
    5. சூப்பர் ஜோக். வாய்விட்டு சிரித்தேன். Thanks Vijay.

      Delete
    6. haa haa... good joke but it is fact...

      Delete
    7. @comiclover
      I'am NOT from the BIT and BYTE world rather but BRICK world. i.e construction :-(
      Yes, Customers always want everything on-time.
      My suggestion is if you want to ship anything using courier, add a buffer of 2 days. i.e ship it 2 days earlier. so you can never miss the committed dates.

      @Erode VIJAY
      ---வினோதமாய் கத்தியபடியே சிட்டாய் பறந்துவிடுவார்கள்.---
      Really I did this when i was in secondary school and got lion comics.

      Delete
    8. கார்த்திக்,நானும்தான் !nbs வாங்க மட்டும் அங்கே சென்றே வாங்கி கொள்கிறேன் ,பின்னர் வரும் மாதங்களில் அவர்கள் வந்து தரும் வரை காத்திருக்கிறேன் ,எப்படியும் மாலை வந்து விடும் முன்னர் ,இப்போது கேட்டால் மதியம் வந்து விடுவோம் என கூறினார்கள் !TEST செய்து விடுவோம்

      Delete
    9. @விஜய்:
      விட்டால், சிவகாசியில் இருந்து டெலிவரி வேன் வரும் போது பாதி வழியிலியே மடக்கி விடுவீர்கள் போல் இருக்கிறதே?! :)

      @ஸ்டீல் க்ளா:
      ஓகே, ஓகே :) ஆனால் விஜயோடு செல்ல வேண்டாம் ஆர்வக் கோளாறில் உங்கள் பிரதியையும் ஆட்டை போட்டு விடுவார்! அவர் விரைவில் வலைப்பூ தொடங்கவிருப்பதால், முதல் பதிவே NBS பதிவாக இருக்க வேண்டும் என அசுர கதியில் இப்போதே தீவிரமாக விமர்சனம் எழுதி வருகிறார்! ;) நண்பர் விஜயின் வலைப்பூ விஜயமடைய என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! விடாதீர்கள், எல்லோரும் வாழ்த்துங்கள்! ;)

      Delete
    10. நண்பர்களே, வசந்தியை வேண்டுமானாலும் நம்புங்கள்; வதந்தியை நம்ப வேண்டாம்!

      கார்த்திக் :
      'யாம் பெற்ற இன்பம்' ம்?
      நடத்துங்கள் உங்கள் நாடகத்தை!

      Delete
  83. இன்றைக்கு ஆசிரியரிடமிருந்து பதிவு கிதிவு உண்டா? உளவுப்படையைச் சேர்ந்த நண்பர்கள் உடனே அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ReplyDelete
  84. Erode VIJAY: //நண்பர் புனித சாத்தானின் தொடர் மெளனம் கவலையளிக்கிறது. பு.சா. அவர்களே, உங்களின் 'அடியேன்'க்காகவும், 'ஹிஹி'க்காகவும் என்னைப்போல் இங்கே பல ரசிகர்கள் உண்டென்பது புரியவில்லையா?//

    ஒரு வழியாக நல்ல பேய்... சமாதானம் அடைந்துவிட்டது வரும் ஜனவரியில் புது பிறவி எடுக்கவுள்ளதாம் ( ஆமா பிசாசுக்கு பிறவி உண்டா ஹி ஹி ....)
    //நண்பர் பாலாஜி சுந்தரையும் பல மாதங்களாகக காணவில்லையே! //
    நண்பர் பாலாஜி சுந்தரை தொடர்பு கொண்ட பொழுது தொடர்ந்து வேலைப்பளுவில் இருப்பதாக தகவல் வந்தது

    ReplyDelete
    Replies
    1. ஈ. ஸ்டாலின்:

      பயனுள்ள தகவலுக்குப் பல கோடி நன்றிகள்!
      அது ஒருபுறமிருக்கட்டும்,
      'தமிழ்காமிக்ஸ் கடந்த பாதை' - இந்த வார்த்தை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, ஸ்டாலின் அவர்களே?!

      Delete
    2. E.VIJAY :நான் "கடந்த பாதை"யை எப்போதும் மறப்பதில்லை

      Delete
  85. // இன்றைக்கு ஆசிரியரிடமிருந்து பதிவு கிதிவு உண்டா? உளவுப்படையைச் சேர்ந்த நண்பர்கள் உடனே அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //


    உளவுப்படை தலைமை அதிகாரி திரு ஸ்டாலின் உடனடியாக, நண்பர் திரு விஜய் அவர்களுக்கு பதில் கூறவும்

    நாங்களும் எவ்வளவு நேரம்தான் REFRESH பண்ணிக்கிட்டு இருப்பது :)

    ReplyDelete
    Replies
    1. // நாங்களும் எவ்வளவு நேரம்தான் REFRESH பண்ணிக்கிட்டு இருப்பது //

      அதானே?! நம்ம எடிட்டர் புதுசா பதிவு போட்டதும் 'கிணிகிணி'னு நம்ம மொபைலில் மணியடிக்கற மாதிரி ஏதாவது அப்ளிகேசன்-கிப்ளிகேசன், விட்ஜெட்-கிட்ஜெட் உண்டா நண்பர்களே?

      Delete
    2. மாயாவியிடமிருந்து தலைவருக்கு ,"நிழல் படை 3 தனை விசாரித்த போது, மின் தடை ,அகொதீகா வினர் இவைகள் குறுக்கிடா விட்டால் இன்று ஆசிரியர் மாடஸ்டி சேர்ந்த ஒரு பதிவு இட தாயார் என கூறினார் , மேலும் தகவல்கள் கிடைத்தால் தொடர்பு கொள்கிறேன் ,தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறேன் !"

      Delete
  86. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : வீட்டில் ஒட்டடை அடிப்பதற்கு கூட லாயக்கில்லை என்ற புகழாறம் சூட்டப்பட்ட எனக்கு ஒற்றர் படை தலைவர் பதவியா... இது என்ன ஈரோட்டுக்கு வந்த சோதனை :)

    ReplyDelete
    Replies
    1. //வீட்டில் ஒட்டடை அடிப்பதற்குக் கூட லாயக்கில்லை //

      அடடா! பல ஜாம்பவான்களின் நிலைமை வீட்டுக்குள் பரிதாபத்திற்குரியதே! விதியை வெல்ல யாரால் முடியும்!
      சரி, சரி; பாத்திரம் கழுவும் வேலையிலாவது நல்ல பெயர் எடுக்கப் பாருங்க நண்பரே! :)

      Delete
    2. //பாத்திரம் கழுவும் வேலையிலாவது நல்ல பெயர் எடுக்கப் பாருங்க நண்பரே! :)//
      என் குரு நாதர் நீங்கள் கற்றுக்கொடுத்த வித்தையை சிரம்பட மேற்கொண்டு உங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பேன் (என்ன இருந்தாலும் என்னால் குருவை மிஞ்சிய சிஷியனாக மாறமுடியாது):)

      Delete
    3. சிஷ்யரே,

      அதென்ன அந்தப் பாத்திரத்தின் ஓரத்தில் ஒரு கறை?! :-D

      Delete
    4. Erode VIJAY :"சீத்தலை சாத்தனார்" என்ற சங்ககாலப்புலவர் ஒருவரின் பெயர்காரணம் இங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது . தனது சிஷியர்கள் யாராவது பாடலில் தவறு செய்து விட்டால் அதற்கு காரணம் தான் சரியாக கற்றுக் கொடுக்காததுதான் என நொந்து நூலாகி தனது தலையில் தானே ஆணியால் குத்திக் கொள்வாராம் அதனால் அவர் தலை சீழ் பிடித்து சீத்தலைச்சாத்தனார் என்று பெயர் வந்ததாம் ( நன்றி : கோனார் தமிழுரை). நீங்கள் அதே கவரிமான் குரு..........

      Delete
    5. நல்ல கதை! கதையை படித்துக்கொண்டே நேற்றிரவு தூங்கிப்போய்விட்டேன். சிறுவயதில் கதை சொல்லித் தூங்க வைத்த என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி!
      தினமும் கதை சொல்லுங்கள் நண்பரே! :)

      Delete
    6. மாயாவியிடமிருந்து தலைவருக்கு ,"நிழல் படை 3 தனை விசாரித்த போது, மின் தடை ,அகொதீகா வினர் இவைகள் குறுக்கிடா விட்டால் இன்று ஆசிரியர் மாடஸ்டி சேர்ந்த ஒரு பதிவு இட தாயார் என கூறினார் , மேலும் தகவல்கள் கிடைத்தால் தொடர்பு கொள்கிறேன் ,தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறேன் !"

      Delete
  87. Dear Sirs,

    REF : பிரபல புலனாய்வு DOT DOT but not DITTO.
    SUB : Code Name மரமண்டை.

    என்ன கொடுமை ஸார் இது ! இதுவரை ஒருத்தர் கூட Decoding செய்யவில்லை. துப்பறிவதில் உள்ள
    ஆர்வம் மிகவும் குறைந்தே போய் விட்டது என்று ''தூங்கிப்போன டைம் பாம்! குள்ள ஏஜென்ட் 327''
    அன்றே சொன்னது இன்று உண்மையாகி விடும் போல் அல்லவா உள்ளது !!!

    Signed.

    CC.to : டிடெக்டிவ் அப்பாவி ஜெரோம் : Code list
    வெளியானப்பின் அதில் உள்ள ஒருவர் கூட இதுவரை இங்கு பதிவிடவில்லை!

    ReplyDelete
  88. லயன் ஆஃபீஸிலிருந்து கொரியர் ஆஃபீஸுக்கு புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் முன்; ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு GPS tracking deviceஐ embed செய்துவிட்டால், டெலிவரியின்போது புத்தகம் எந்த இடத்திலிருக்கிறது என்பதை நம் மொபைலிலேயே தெரிந்து கொள்ளலாமே!

    ஹூம், இப்போதில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம்தான்! :)

    ReplyDelete
  89. ஒருவேளை, தனது பின்னூட்டங்கள் ஒன்றுகூட இல்லாமல் பதிவு, 200 பின்னூட்டங்களைத் தாண்டுகிறதா? என்று ஒரு கணிப்புக்காக் காத்திருக்கிறாரோ என்னவோ? (இன்னும் 8 தான் - 200க்கு)

    ReplyDelete
  90. Let us finish the matter ! Here it goes 193, 194, 195, 196, 197, 198, 199, 200. Done !!!

    ReplyDelete
  91. Replies
    1. இருளுக்குப் பின் வரும் ஜோதி!

      (உடனே, அந்த ஜோதி எப்ப வருவாள்னு கேட்கக் கூடாது) :)

      Delete
    2. // உடனே, அந்த ஜோதி எப்ப வருவாள்னு கேட்கக் கூடாது //

      // நண்பர்களே, வசந்தியை வேண்டுமானாலும் நம்புங்கள்; //


      நண்பர் விஜய் அவர்களை பற்றி அவரது வீட்டில் நிறைய சொல்ல வேண்டும் போல உள்ளதே ????

      Delete
  92. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    ராஜா.G -PONDICHERRY.

    ReplyDelete
  93. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  94. ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர், லயன் அலுவலக பணியாளர்கள் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும்,

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...


    2013 ல் நாம் அனைவரும் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் / நிறைய நண்பர்கள் / நிறைய ஆசிரியரின் அதிவெடி அறிவிப்புகள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் ...


    ReplyDelete
  95. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    வரும் புத்தாண்டு அன்புடனும் அமைதியுடனும் திகழ பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  96. புதுவருடம் ஆரம்பிக்கவேயில்லை; அதற்குள் வாழ்த்துக்களா? ஏன் இவ்வளவு அவசரம்?

    ReplyDelete
  97. தங்க ஆண்டை தோண்டி கொண்டிருக்கிறோம் .இன்னும் 7.27 மணித்துளிகளில் அடைய இருக்கிறோம்

    ReplyDelete
  98. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  99. My best wishes to each and every one in this forum for a Cheerful and Prosperous New Year!
    - Komixcreate

    ReplyDelete
  100. படித்து கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  101. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  102. காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வழ்த்துக்கள்

    ReplyDelete
  103. அசிரியர் இன்னும் பதிஊ போடல!! அவருக்கு என்ன வேலையோ!! காத்திருந்து காத்திருந்து ஒரு வருஷம் ஓடிவிட்டது!! நான் தூங்க போறேன்!

    ReplyDelete