நண்பர்களே,
வணக்கம். போன வாரயிறுதியில் வீட்டோடு புண்ணியம் தேடும் பயணம் - so இக்கட ஆஜராக முடியவில்லை ! ஆனால் "நீ வராங்காட்டி என்ன - உன்னைப் பத்தின நியூஸ் எங்களுக்கு வரும்லே ?" என்ற விதமாய் நிகழ்வுகள் ! பேத்திக்கு தமிழ் ரைம்ஸ் புக் வாங்க உள்ளூர் பொஸ்தவ கடைக்குப் போனா அதுவொரு FB சேதியாகிறது ! திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் போனை நோண்டிக்கினு நின்றால் அது candid கேமராவில் சிக்கி வலையில் ரவுண்டு வருது ! கும்பகோணத்தில் சாலையைக் கடந்தால் - திருப்பூர் நண்பர் கையைப் பிடித்துக் கொண்டு சிலாகிக்கிறார் ! வேற வழியே இல்லே - அஷ்டமி-நவமில்லாம் கழிஞ்ச பிற்பாடு, நாமளுமே ஒரு கச்சி -கிச்சி ஆரம்பிக்கலாமோ ? மூ.ச.மு.க. - எப்புடி கீது folks ?
Jokes apart, ஜூலை ரெகுலர் தட இதழ்களின் பணிகள் கிட்டத்தட்ட ஓவர் என்பதால் ஸ்பெஷல் தடத்தின் ஒரு அங்கமான தாத்தாஸுக்குள் பிஸியாகியுள்ளேன் - and உள்ளுக்குள் இனம்சொல்ல இயலா உணர்வுகள் பிரவாகமெடுக்கின்றன ! இம்முறை ஊர் விட்டு ஊர் - நாடு விட்டு நாடு சென்று பிழைக்க வேண்டியிருக்கும் புலம் பெயர்ந்த ஜனத்தின் குரலில் கதாசிரியர் Wilfrid Lupano பேசுவதை பிரமிப்புடன் பார்த்து வருகிறேன் ! And ஒரு மொழிபெயர்ப்பாளனாக இவற்றையெல்லாம் மிஞ்சிய சவால்கள் இனி வாய்த்திட வாய்ப்பே இல்லை என்ற சிந்தனை தலைக்குள் ! At the same time நம் மத்தியில் இந்த ஆல்பம் # 5 தான் இவர்களது இறுதித் தலைகாட்டலோ ? என்ற கேள்வி வயிற்றைப் பிசைகிறது !
தாத்தாஸ்களை இதுவரையிலும் ரெகுலர் சந்தாத்தடத்தில் உட்புகுத்தி இருந்ததால் எப்படியோ உங்கள் தலைகளில் கட்டி விட்டிருந்தோம் & வண்டியும் ஓடிவிட்டிருந்தது ! ஆனால் அது குறித்த விசனங்கள் நிறையவே எழுந்ததால் தனி முன்பதிவுக்கு நகற்றியதோடே சாயம் வெளுத்துவிட்டது ! இந்தக் கதை பாணிக்கான ரசிகர்களோ / ரசிக்கும் பொறுமை கொண்டோரோ ஆகக் குறைச்சல் என்பது கருப்பு வெள்ளையில் அப்பட்டமாகியுள்ளது ! இதில் irony என்ன தெரியுமா ? வெகு சமீபத்தில் ஒரு பிரெஞ்சு தேச காமிக்ஸ் சார்ந்த ஆய்விற்கென என்னைப் பேட்டி கண்ட போது நான் செம பீற்றலாய் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு சிலாகித்த சில தொடர்களுள் தாத்தாக்களும் அடக்கம் ! "இந்தியாவில் வேறு எந்தவொரு மொழியிலும் இந்தத் தொடரினை சுட்டுவிரலால் தொடக்கூட வாசகர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை - எங்க தமிழ் வாசகர்களைத் தாண்டி !" என்று பீப்பீ ஊதியிருந்தேன் ! பச்சே தாத்தாக்களுக்கு நம் மத்தியில் R.I.P போடவேண்டிய வேலை நெருங்கியிருக்க - just not able to swallow the disappointment !
தோல்விகள் நமக்குப் புதிதே அல்ல ! ஜானதன் கார்ட்லெண்ட் ; மேஜிக் விண்ட் ; கமான்சே ; லேடி S என்றெல்லாம் நிறையத் தொடர்களை மனம் நிறைந்த கற்பனைகளோடு அறிமுகம் செய்துள்ளோம் தான் & விழுந்த சாத்துக்களை "விழுப்புண்களாய்" கருதி ஒரு ஓரமாய்ப் போய் எச்சிலைத் தொட்டு மருந்து போட்டும் கொண்டோம் தான் ! அங்கு "கதை ஜவ்வு ; அம்மணியின் கதாப்பாத்திரம் டொக்கு ; பாண்டஸி ஓவரா கீது ; இது அரப் பழசு" - என ஸ்பஷ்டமாய் காரண-காரியங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் படைப்பின் அளவினில் துளியும் குறை சொல்ல இயலா அற்புதம் தாத்தாக்களின் தொடர் ! ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் உருவாக்கமும், அவர்கள் ஒவ்வொருவரின் வாயிலாகவும் கதாசிரியர் வெளிப்படுத்தும் சமூகக் கோபங்களும் - இன்றைக்கு நமக்கெல்லாம் நிரம்பவே ரசிக்கும் என்றே எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் காலங்கள் மாறுகின்றன என்பதை இந்தத் தொடருக்கு கிட்டியுள்ள thumbs down சுட்டிக்காட்டுகிறது ! அதிகம் பேசப்பட்டிருந்தாலோ, அலசப்பட்டிருந்தாலோ, சிலாகிக்கப்பட்டிருந்தாலோ maybe தாத்தாஸ் நீடித்திருப்பார்களோ - என்னவோ ? But தனிப்பட்ட முறையில் ரசிக்காத ஒரு சமாச்சாரத்தை சிலாகிக்கச் சொல்வதும் நியாயமே இல்லை தான் ! So இங்கு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு யாரையும் / எதனையும் நொந்திட வழி லேது தான் !
இதனில் "விலை கூடுதல்" என்று காரணம் பிடித்த சில நண்பர்களின் discovery - தாத்தாக்கள் செய்யும் ப்ளாக் ஹ்யூமருக்கு நிகரானது ! சைக்கிள் கேப்பில் நாலு காசு பார்க்க நான் நினைத்திருக்கும் பட்சத்தில் , அதனை ஏற்கனவே இஸ்துகினு கிடைக்கும் ஒரு கிராபிக் நாவல் ஜான்ராவில் தானா முயற்சிப்பேன் ?? அத்தனை புத்தி கெட்ட பேமானியாகவா நான் போயிருப்பேன் guys ? முன்பதிவு அறிவித்த சமயம் நாம் எதிர்பார்த்தது 400 புக்கிங்ஸ் & maybe 50 பிரதிகள் ஏஜெண்ட்கள் வாயிலாக sales & இன்னொரு 50 பிரதிகள் புத்தக விழாக்களில் sales ! ஆக 500 இதழ்களின் ப்ரிண்ட்ரன் என்ற கணக்கீட்டில் விலையினை நிர்ணயித்திருந்தோம் ! அதுவே "கொள்ள விலை" என்ற கண்டுபிடிப்பினைச் செய்த நண்பர்கள் மட்டும் IPL மேட்ச்களின் வரவு-செலவு கணக்குத் தணிக்கையினில் இருந்திருந்தால் ஜூப்பராக இருந்திருக்கும் ! இன்றைய யதார்த்தமோ மொத்த பிரிண்ட்ரன்னே 250 என்பதே ! Phew..! இங்கே பணம் சார்ந்த சங்கடத்தைக் காட்டிலும், மனதுக்கு ரொம்பவே நெருக்கமானதொரு தொடருக்கு VRS கொடுக்க வேண்டியிருப்பதே அதிகமாய் சங்கடமூட்டுகிறது ! ரைட்டு - "தாத்தாக்களும் கடந்து போவர்" என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான் ! இல்லே - முழியாங்கண்ணன் இப்புடித் தான் சொல்லுவான் - but தொடர்ந்து வரும் பாருல்லே - என்ற மைண்ட் வாய்ஸ் கேட்டிங்ஸ் தான் ! But நிரம்ப சாரி மக்களே - பாக்கெட்டிலும் பலமில்லை ; மனதிலும் உரமில்லை - இந்தத் துக்ளியூண்டு நம்பருக்குள் வித்தைகளைக் காட்டிட ! கையிருப்பு இருந்தாலும் பின்னாட்களில் ஸ்கூல் பசங்களிடமாச்சும் சொற்ப விலைகளில் தள்ளி விடக்கூடிய கதைகளல்ல இவை எனும் போது -இனியும் கிட்டங்கிக்குள் இவர்களை தேக்கிட தம் லேது !
அப்புறம் ஆளில்லா கடையினில் டீ ஆத்தும் கஷ்டம் பற்றி - இப்போதும் 150 பேர் பதிவிட்டுப் போகும், சில பல மில்லியன் வியூஸ் கொண்டிருக்கும் தளத்திலிருந்து நான் பேசிக்கொண்டிருக்கும் போது - யாருமே இல்லாது போனாலும், "எனக்குப் பிடித்ததை பதிவு செய்வேன்" - என்று தொடரும் ஒரு நண்பரை என்னவென்பது ? இதோ திருவண்ணாமலை நண்பர் சுரேஷ் ஜீவாவின் தாத்தாக்கள் பற்றிய பதிவு !! நன்றிகள் சார் !! - உங்களிடம் கேட்காமலே சுட்டு விட்டிருக்கிறேன் !
=================================================================
கதை - LUPANO
ஓவியம் - CAUUET
மொழியாக்கம் - S விஜயன்
இந்த வார மறுவாசிப்பில் நான் எடுத்துக் கொண்ட புத்தகங்கள் தாத்தாஸ்
இந்தக் கதையை லயன் காமிக்ஸ் எடிட்டர் வெளியிடுவதாக அறிவித்த சமயம், அப்பொழுது தான் மார்கன் பிரீமேன் நடித்திருந்த GOING IN STYLE எனும் ஹாலிவுட் படத்தை பார்த்திருந்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கதை என்ற எண்ணவோட்டம், அப்பொழுது எனக்கு ஒரு ஆர்வத்தை தூண்டி விட்டிருந்தது.
முதல் புத்தகம் வந்த சமயம் அந்த ஹாலிவுட் படத்துக்கும், இந்த கி நா புதையலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் என்று பார்த்தால் தங்கள் அந்திம காலத்தை, கழிக்க போராடும் மூன்று தாத்தாக்களின் கதை என்று மட்டுமே புரிந்தது. அது வரை ஆறு ஆல்பங்கள் வந்துள்ளது என்று எடிட்டரும் அறிவித்திருந்தார்.
ஓவியங்களை பொறுத்தவரை இந்த நான்கு அல்பங்களுக்கும் ஓவியர் ஒருவரே. ஒவ்வொரு தாத்தாக்களையும் அவர்களின் குண நலன்களுக்கு ஒப்ப (casting) வரைந்திருப்பது அருமை. வயதான முகங்களை சுருக்கங்களுடன் வரைவது சவாலான செயல். அதை திறம்பட செய்திருக்கிறார் ஓவியர். அப்புறம் இந்த கதையில் வரும் கிராமம். அந்த சிறு கிராமத்தை அவர் விவரித்துள்ள காட்சிகள் மூலம், நான் அந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் போல மிகவும் பரிச்சயமுடன் நம்மை உலவ விட்டுள்ளார்.
மொழியாக்கம் குறித்து நான் பெரிதாக சிலாகித்தது இல்லை ஆனால் இந்த புத்தகங்களில் எடிட்டரின் மொழியாக்கம் simply awesome. நான்கு நண்பர்கள் அதுவும் நீண்ட நெடுங்கால நண்பர்களாகவே வாழ்ந்து வந்த தாத்தாக்களிடம் இருக்கும் அன்யோன்யம் வசனங்களில் தெறிக்கிறது. கொச்சையான மொழி என்று முகம் சுழிக்காதவாறு இது தான் யதார்த்தம் என்று வாசகர்களாகிய நம்மையும் கதையில் ஒன்ற வைத்ததில் சாதித்துள்ளார் நமது எடிட்டர்.
அந்துவான், பியரி, மில்சே என்று சிறு வயது முதல் நண்பர்களாக இருக்கும் மூன்று தாத்தாக்கள் மற்றும் அந்துவானின் பேத்தி சோபி,
ஒரு சின்ன கிராமம், அந்த கிராமமே நம்பி இருக்கும் ஒரு மருந்து தொழிற்சாலை. இதை விட ஒரு நல்ல கதையை உருவாக்க வேறு என்ன முகாந்திரம் வேண்டும்.
இதுவரை நான்கு புத்தகங்கள் தமிழில் வந்துள்ளது. இத்தனை ஆண்டு இடைவெளியில் அவர்கள் இன்னும் இரண்டு புத்தகங்களை போட்டுள்ளனர். ஆக இன்னும் நான்கு புத்தகங்கள் மீதம் உள்ளது. இந்த புத்தகங்கள் விற்காததற்கு காரணம் இந்த புத்தகத்தை வாங்கியவர்கள் இன்னும் பலர் படிக்கவில்லை என்பேன். இந்த புத்தகங்கள் குறித்து அலசவில்லை என்பேன். மறுவாசிப்பில் இந்த கதைகள் வேறு ஒரு கோணத்தை தருவதை நான் உணர்ந்ததை போல், பலரும் உணர்ந்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால் அடுத்த புத்தகம் எப்பொழுது சார் என்ற மில்லியன் டாலர் கேள்வி தான் தளத்தில் எதிரொலிக்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை பற்றி ஒரு சிறு குறிப்புடன்..
*அந்தியும் அழகே*
இந்த கதை அந்துவான் தாத்தாவின் அட்டகாசங்கள்..
இந்தக் கதை, அந்துவானின் வாழ்க்கை பக்கங்களில் சிலவற்றை எடுத்து, நான்கு முக்கிய கதாபாத்திரங்களின் அற்புதமான அறிமுகமாக அமைத்திருக்கிறார்கள். சிறு வயதில் தாத்தாக்கள் அடிக்கும் லூட்டிகள் நமது சிறு வயது நினைவுகளை கிளறி விடுகிறது.
1970 80 களில் தமிழகத்தில் பிறந்தவர்கள், தங்கள் சிறு வயதில் தங்களை ஒரு கவ்பாயாக பாவித்துக் கொண்டு காடுகளிலும் மேடுகளிலும் வலம் வந்தது போல, இந்த தாத்தாக்களும் தங்களை ஒரு கடற்கொள்ளையராக கற்பனை செய்துக் கொண்டு சேட்டைகள் செய்வது அற்புதம்.
கதை எங்கெங்கோ சென்றாலும், வாசகர்கள் அலுத்துக் கொள்ளாதபடி, நக்கல் நையாண்டியை குழைத்து, படிப்பவர்களை குஷிப் படுத்தியிருக்கிறார் கதாசிரியர். நிகழ்காலம் கடந்த காலம் என்று மாறி மாறி பக்கங்கள் பறக்கும் கதையில் கலரிங் மூலமாக வாசகர்களாகிய நாம் குழம்பாமல் பயணிக்க எடுத்துக் கொண்ட சிரத்தை அபாரம்.
*துள்ளவதோ முதுமை*
இந்தக் கதை பியரி தாத்தாவின் பரிதாபங்கள்
இந்தக் கதை பியரியின் காதல், அவரது கொள்கை என்று அவருடன் பயணித்தபடியே நமக்கு பியரி ஏன் இப்படி இருக்கிறார் என நம்மை பியரியின் மீது ஆதங்கம் கொள்ள வைக்கிறது. அந்துவானுக்கு நேரெதிர் கேரக்டர் நம்ம பியரி என்பதை கதை வாயிலாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
பிரஞ்சு நாட்டின் பழக்க வழக்கங்கள், அதை ஓரமாய் பகடி செய்தபடி கதை நகர்த்தும் விதம் தாத்தாக்களின் கதையில் உள்ள வீரியம். இந்தக் கதையில் இந்த பகடிகள் ஒருபடி குறைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
*எல்லாம் கிழமயம்*
இந்தக் கதை மில்சே தாத்தாவின் மிரட்டல்கள்
அடுத்து யார் மில்சே தாத்தா தானே, முதல் அத்தியாயத்தில் மில்சே தாத்தாவின் மறுபக்கத்தை கோடிட்டு கதாசிரியர் அதை இங்கு develop செய்து, கூடவே மில்சே தாத்தாவின் மற்றொரு நண்பரான எர்ரோல் தாத்தாவையும் இணைத்து நால்வர் கூட்டணியாக இந்த கதையை சும்மா கொளுத்தி போட்டுள்ளார் கதாசிரியர். இந்தக்கதையில் வரும் ஒரு காட்சியை அப்படியே நமது தமிழ் சினிமாவில் தற்சமயம் செம ஹிட்டடித்த ஒரு படத்திலும் காட்சிப்படுத்தியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆக நம் கிராபிக்ஸ் நாவல்களை சில பல டைரக்டர்கள் வாங்கி படிக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.
எர்ரோலும் மில்சேவும் அடித்த லூட்டிகள் நம்மை திக்கு முக்காடி சிரிப்பின் விளிம்பில் நிறுத்தியிருந்த சமயத்தில், மில்சே தாத்தாவின் மறுபக்கத்தை கேட்டு அதிர்ந்து போன அவரது நண்பர்கள் போலவே நாமும் முழிக்க, ஒரு சில நிமிடங்களில் சோபியின் ருத்ர தாண்டவத்தில் வெடிச்சிரிப்பாய் மாற்றியிருந்தார் ஓவியர். தாத்தாக்களின் உண்மை முகம் பேத்திக்கு தெரிந்து விட்டது என்று கூனிக் குறுகுவது, வேற லெவல் திங்கிங்...
*மாயமில்லே மந்திரமில்லே*
SIMPLY SUPERB
தாத்தாஸ்களின் லூட்டி மிகவும் குறைவே, ஆனால் நம் ஹீரோ தாதாக்களை தவிர்த்து, இந்தக் கதையில் வரும் பிற தாத்தாக்கள் அடிக்கும் லூட்டி ஆகா ரகம். அதிலும் கேப்டன் பஸ்ஸு சில பேனல்களே வந்திருந்தாலும் தெறி ரகம்.
இந்த கதை முழுக்க முழுக்க சோஃபிக்கு நேர்ந்து விட்டிருக்கிறார் ஆசிரியர். நடுவில் சோஃபியை கலாய்ப்பது போல் சுய பகடி செய்துக் கொள்கிறார். அரசியல் நெடி அள்ளி வீசுகிறது. ஒவ்வொரு அரசியல் பார்வையின் மறுபக்கத்தை போகிற போக்கில் LEFT HANDடில் DEAL செய்து விட்டு போகிறார் ஆசிரியர்.
எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை என்பதே. அதை இந்த புத்தகம் உறுதி செய்கிறது. நீங்கள் வலதுசாரியோ அல்லது இடதுசாரியோ, இந்தக் கதை இரண்டு திசையிலும் பயணிக்கிறது.
சுற்றுச்சூழலை காக்கப் போராடும் ஒரு தாத்தா, வேலைவாய்ப்புக்காக சுற்றுச்சூழலாவது மண்ணாவது என்று போராடும் மற்றொரு தாத்தா, வேலை வாய்ப்பே முக்கியம் என்று ஒரு பார்வை, என்னடா வேலைவாய்ப்பு என்று அதை கிழித்து தொங்க விடும் மற்றொரு பார்வை, LGBTQ வுக்காக ஒரு கை ஓசை, மத வெறுப்புணர்விற்கு ஒரு குட்டு, என்று உலகில் உள்ள அரசியலின் அ முதல் அக்கன்னா வரை பிழிந்து தொங்க விட்டது ஹேப்பி அண்ணாச்சி.
நகைச்சுவையில் ஊற போட்டு அடித்துள்ளார் கதாசிரியர். அதிலும் அந்த 17 ஆம் பக்கம் மற்றும் 18 ஆம் பக்கம் சில நிமிடங்கள் மனதில் பயத்தை கிளப்பியது, எதோ ஒரு பக்கத்தை மிஸ் பண்ணிட்டாங்க என்று மொத்த புத்தகத்தையும் ஆராய்ந்து ஒரு வழியாய் திரும்பவும் 17 ஆம் பக்கத்துக்கும் 18 ஆம் பக்கத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்போம் என்று கிளம்பி, ஓ இது தான் கதையா என்று அந்த இரண்டு பக்கத்தை புரிந்துக் கொள்ள நான் பட்ட பாடு, ஏண்டா கி.நா ன்னா இப்படி தெறிச்சு ஓடுறாங்க என்று புரிய வைத்தது. ஆனால் கி நா வின் அழகே இது போன்ற தலை சுற்றும் அம்சம் தான் என்பது தான் என் பார்வை.
எடிட்டர் அவர்கள் முந்தைய கதைகளை படித்து விடுங்கள் என்று கூறி இருந்தார். ஆனால் ஒரு சில விஷயங்கள் தவிர்த்து முன்னாடி வந்த கதைகளை படிக்காமல் இந்த புத்தகத்தை தொட்டாலும் நமக்கு ஒன்று இரண்டு கேள்விகளே எழும். அதுவும் இந்த கதையின் அழகில் தொலைந்தே போயிருக்கும்.
அதுவும் அந்த கடைசி பக்கமும் கடைசி மூன்று பேனலும், அந்த ஆசிரியரையும் அந்த ஓவியரையும் என்ன பாராட்டினாலும் தகும். ஒரு தந்தையாக நெடுநேரம் என் மனம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தது.
கம்பியூட்டர் ஜித்து அர்னாட், நெட்ஒர்க் தேடி அலையும் காட்சிகள் செம. இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் எழுதிக் கொண்டே போகலாம். அதுக்கு பேசாம அந்த கதையை ஒரு தடவையாவது படிங்கன்னு இந்த புத்தகத்தை தூக்கி கையில் கொடுத்து விடலாம்.
கதை 10/10
ஓவியம் 10/10
மேக்கிங் 10/10
https://lion-muthucomics.com/111-thathas
==============================================================
Maybe இதைப் படித்த பின்னே ரெண்டோ- மூணோ புது நண்பர்கள் கூட தாத்தாக்களின் மீது மையல் கொள்ள நேரிட்டாலும் அது நண்பர் சுரேஷ் ஜீவாவுக்கும், இந்தக்கதாப்பாத்திரங்களுக்குமான வெற்றியாகவே அமைந்திடும் !
அராத்துகள் அடங்கிடுமோ ?
Bye all...see you around ! Have a great week ahead !!
கிட்டங்கியில் குடியிருந்து வரும் தாத்தாக்களுக்கு maybe நீங்களொரு வீடு தர ரெடியாக இருப்பின் - நாங்கள் more than willing !!
ஏற்கனவே கைவசமுள்ள 4 தாத்தாஸ் = ரூ.480
வரவிருக்கும் ஆல்பம் # 5 = ரூ. 200
இந்த 5 இதழ்கள் கொண்ட காம்போவினை ரூ.450 + கூரியர் என்ற விலைக்குத் தந்திட நாங்க ரெடி ! Anybody willing out there மக்களே ?








.jpg)





.jpg)










