Powered By Blogger

Saturday, April 19, 2025

மாற்றம் - முன்னேற்றம் - காற்றோட்டம்!

நண்பர்களே,

வணக்கம்! ஏப்ரலின் மூன்றாவது வாரத்தை எட்டித் தொடும் அண்மைக்கு வந்தாச்சு ; and மே மாதத்துப் பரபரப்புகளுக்கு இப்போதே தயாராகி வருகிறோம்! ரெகுலர் தடத்தில் மூன்று கலக்கலான இதழ்களும், ஆன்லைன் மேளாவின் பெயரைச் சொல்­லி மேற்கொண்டு ஐந்து இதழ்களும் இந்த மே மாதத்திற்கென காத்திருப்பதால் அலுவலகம்  பிசியோ பிசி! But ரெகுலர் தடங்களில் 3 இதழ்களே என்ற ஃபார்முலா- கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் தருவதால், ஏப்ரலில் மே சாத்தியமாகிடவுள்ளது!

மே மாதத்தின் highlight இரண்டு அம்மணிகளே! இருவருமே அட்டைப்படங்களில் காட்டும் கெத்தை புக்ஸ்களில் பார்க்கும் போது செம மாஸாக உள்ளது! ஆட்டத்தைத் துவக்கிடவுள்ளவர் நம்ம சிகாகோவின் 'சிக்' டிடெக்டிவ் ரூபின் தான்! இம்முறை சிலபல ஆடையலங்காரச் சமாச்சாரங்களில் சிக்கனத்தையும் கடைப்பிடிக்க நேர்வதால்- மேடம் is chic in more ways than one! வழக்கம் போலவே ஒரு சிகாகோ க்ரைம் த்ரில்லர் & வழக்கம் போலவே யதார்த்தத்தோடு பயணிக்கிறது கதையுமே! நிஜமானதொரு புலனாய்வானது ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாம் பார்ப்பது போல சுலபமெல்லாம் கிடையவே கிடையாதென்பதை ரூபினின் கதாசிரியர் yet again நமக்குக் காட்டிடுகிறார்! எப்போதும் போலவே கதை நெடுக ஒரு பரபரப்பு விரவியிருக்க, அந்தச் சித்திர பாணியும், செம 'பளிச்' கலரிங்கும் ஒரு மிடறு தூக்கலாக்கிடுகிறது - வாசிப்பு அனுபவத்தை!

இதோ- இந்த இதழுக்கான நமது மகளிரணி ஓவியை உருவாக்கியுள்ள அட்டைப்படம்! ஒரிஜினல் ஓவியர் போட்டிருந்த பென்சில் ஸ்கெட்ச் நெட்டில் கிடைத்திருக்க, அதனை வர்ணமயமாக்கி cute ஆனதொரு அட்டைப்படமாக்கியுள்ளோம்! And இதோ- கலக்கலான கலரில் உட்பக்க preview கூட!


ரைட்டு.. ஒரு கேரட் கேச அம்மணியின் ஆக்ஷன் மேளாவோடு துவங்கிடும் மே மாதத்தின் அடுத்த (கலர்) இதழில் ஒளிவட்டம் பாய்ந்திடுவதோ ஒரு பொன் கூந்தல் பேரழகியின் மீது! அந்த அழகியோ ஒரு செமத்தியான வில்லி­ என்பது தான் கொடுமையே! Yes- XIII தொடரின் இரண்டாவது ஆல்பத்திலேயே நம்மாளின் புதுச் சின்னம்மாவாய் என்ட்ரி தரும் பெலி­சிட்டி பிரவுண் தான் "மைனாவோடு மஞ்சுவிரட்டு'' ஆல்பத்தின் நாயகி! XIII spin-off தொடரில் கதையின் பல்வேறு மாந்தர்கள் மீது தனித்தனி ஆல்பங்களில் focus செய்திடும் பாணி நடைமுறையில் இருப்பதால், இங்கே பெலி­சிட்டியோடு நாமும் பயணிக்கிறோம்! காசுக்காக எதையும் செய்யத் தயங்காத தாரகை என்பது ஏற்கனவே நமக்குத் தெரிந்திருந்தாலும், இங்கே அவரது வாழ்க்கையை அலசி, சோப் போட்டு, கொடியில் உலர்த்தியிருப்பதால்- எக்கச்சக்க அழுக்கு, தண்ணீரில் மீந்திருப்பதைப் பார்க்க முடிகிறது! And ஆங்காங்கே முழு நிர்வாண சீன்களுமே இடம்பிடித்திருந்தன- கதைக்கு எவ்விதத்திலும் பெருசான சகாயங்கள் செய்திடாமல்! 'அப்படியே போடலாம்' என கம்யூனிட்டியில் நீங்கள் பரவலாய் அபிப்பிராயப்பட்டிருந்தாலும் தற்செயலாய் ஒரு Cinebook ஆல்பத்தைப் பார்க்க நேரிட்ட போது, அவர்களே லைட்டாகத் துணியெடுத்து, நாசூக்கான டெய்லரைக் கொண்டு தைத்து, இதுமாதிரியான அழகியருக்கு அலங்காரம் செய்திருப்பதைப் பார்க்க முடிந்தது! இங்கிலாந்தின் வாசகர்களுக்கே அந்த முழு பப்பி-ஷேம் சித்திரங்கள் சரி வராதென அவர்கள் தீர்மானித்திருக்க, நாமளோ 'மாற்றம்- முன்னேற்றம்- காற்றோட்டம்' என்று கொடி பிடித்தால், Bata பிய்ந்து போகும் அபாயம் இருப்பது லைட்டாக நெருடியது! So Cinebook காட்டிய வழியில் அந்த ஜும்பலக்கா சீன்களில், தலீவருக்கு போராட்டக் களங்களில் நல்கும் வேப்பிலை உடுப்பு பாணியில் - பிகினிக்களை அணிவித்து விட்டிருக்கிறோம்! சர்வ நிச்சயமாய் இதனை இப்டிக்காவும், அப்டிக்காவுமாய் அலசிடும் முனைப்பு அலையடிக்குமென்பது புரிகிறது! So"மறுக்கா முட்டுச்சந்துக்குப் போறேன்.. போறேன்' என வடிவேலு பாணியில் பிங்க் கலரில் நிஜார் போட்டுக் கொண்டபடியே பேராவலாய் அறிவித்து நிற்கிறேன்! 

பற்றாக்குறைக்கு பெலிசிட்டியின் குணத்திற்கேற்ப அவரது வசனங்களிலும் ஒரு முரட்டுத்தன்மை, ஒரு பண்படாத பாணி தொனிக்க வேண்டுமென மனதுக்குப்பட்டது!  So இதற்கென பேனா பிடித்திருந்த நம்ம கரூர் மருத்துவரின் சாந்தமான வரிகளைக் கணிசமாகவே மாற்றியும் எழுதியுள்ளேன்! ஆக, தன்னைக் கற்பழிக்க வரும் கயவாளிப் பன்னாடையை சங்கறுத்து விட்டு, அவனை "தேவடியாப் பயலே"! என்று அம்மணி அர்ச்சனை செய்யும் போது, திட்டத் தோன்றினால் 'சிவகாசியின் திசை தெற்கு' என்பதை நினைவுகூர்ந்திடக் கோருவேன்! ஒரு raw ஆன ராங்கியின் கேரக்டருக்கு நாசூக்கு அவசியமாகிடாது என்ற நம்பிக்கையில் வரிகளில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளேன்! So 'மு.ச' பயணத்தை "மூ.ச' பயணமுமாக்கிட நீவிர் எண்ணினால் - ஞான் தயார் புலவர்களே! அப்புறம் ஹாலிவுட் நடிகை மர்லி­ன் மன்ரோவின் "Diamonds are a girl's best friend" என்ற பிரபல பாட்டையும் நம்ம கவிஞரின் இஸ்டைலில் ரஜிக்கவும் மறவாதீர்! 

இதோ- ஒரிஜினல் அட்டைப்படத்துக்கு முழுசாயொரு makeover தந்துள்ள நமது கோகிலாவின் கைவண்ணத்திலான அட்டைப்படப் preview! and உட்பக்கச் சித்திரங்களும், கலரிங்கும் மெர்சலூட்டுகின்றதையும் பாருங்களேன்! மிரளச் செய்யும் சித்திரத் தரம் & அதற்கு செமத்தியாய் ஈடு தரும் டிஜிட்டல் கலரிங்குமே! So அற்புதமானதொரு visual experience வெயிட்டிங்ங்! பழனிவேல்.... இது yet again உங்கள் நினைவினில்!


மே மாதத்தின் இதழ் # 3 & இம்மாதத்தின் ஒரே black & white இதளுமான "நிழல் ஓநாய்கள்'' பணிகளுக்குள் இன்னமும் தலைநுழைக்கத் தீரவில்லை என்பதால், அது பற்றிய preview அடுத்த பதிவினில்!

And தற்சமயத்துத் திட்டமிடலி­ன்படி மே மாத ரெகுலர் இதழ்களை சற்றே சீக்கிரமாகவே அனுப்பிவிடுவது என உத்தேசித்துள்ளோம்! மூன்று இதழ்களுமே செம crisp வாசிப்புக் களங்கள் என்பதால் அவற்றை சடுதியில் வாசிக்க உங்களுக்குப் பெரும் பிரயத்தனங்கள் அவசியமாகிடாது என்பது எங்களது எதிர்பார்ப்பு! அவற்றை "சரசர'வென (படித்து) ரசித்து விட்டீர்களெனில் ஆன்லைன் மேளாவின் கத்தையினை மே முதல் வாரத்தில் ரசித்திடத் தடையிராதென்றே படுகிறது!

ஆன்லைன் மேளாவினில் 5 இதழ்கள் கொண்ட முதல் phase-ல்

*ஒற்றைக்கண் மர்மம்(மாயாவி)
*மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல் (டெக்ஸ்)
*சிகப்பு நதி (ஸாகோர்)
*விச்சு & கிச்சு ஸ்பெஷல் 

கிட்டத்தட்ட முழுசுமாய் ரெடி! காத்திருக்கும் வாரத்தில் அவை அனைத்துமே அச்சாகி பைண்டிங் புறப்பட்டு விடுமென்பது எனது யூகம்! நாளைய பொழுதில் OP அடிக்காமல் "நாளை போய் நேற்று வா..!'' கிராபிக்  நாவலையும் எழுதி முடித்துவிட்டேனெனில்  மே மாதத்தில் ரொம்ப ரொம்பச் சீக்கிரமே மேளா களை கட்டிவிடும்! And trust me folks - இம்முறை அமைந்துள்ள அத்தனை இதழ்களுமே அனல் பறக்கவிடும் அதிரடி மாஸ்- தெறி ரகங்கள்! கையில் ஏந்தினால் எவற்றையுமே படித்து முடிக்காது கீழே வைக்க மனம் வராதென்று அடித்துச் சொல்வேன்! அதிலும் டெக்ஸ்- சும்மா ஜாலம் செய்திருக்கிறார்!

In fact அத்தனை இதழ்களுமே இந்த மே மாதம் சொல்லி ­வைத்தாற்போல இம்மி கூட தொய்வின்றி அமைந்து போயிருப்பதால் தான் அப்பாவின் காரியங்களின் மத்தியிலும் இவற்றைக் கரைசேர்க்கச் சாத்தியப்பட்டுள்ளது! நிஜத்தைச் சொல்வதானால், - மார்ச் 27-ல் இந்த ஆன்லைன் மேளாவையே ஜுனுக்கு ஒத்திப் போட்டுவிடலாமே! எனறு தான் பட்டது! மே மாத ரெகுலர் இதழ்களையுமே சற்றே தள்ளிப் போட்டுக் கொண்டாலும் தப்பில்லை; நீங்கள் புரிந்து கொள்வீர்களென்றே தோன்றியது! ஆனால், இன்ன பிற சிந்தனைகளைப் புறம்தள்ள நீங்களெல்லாமே நமது இதழ்களைப் பயன்படுத்தும் போது, நானோ அவற்றிலி­ருந்து தூரப் போக நினைப்பது குடாக்குத்தனமென்றுபட்டது! And yes பணிகளுக்குள் புகுந்த போது, எல்லாமே சிறுகச் சிறுக மட்டுப்படுவது போல் தோன்றிட - பூதமாட்டம் தொடர்ந்த ராப்பகல்களில் பணிகளைப் பூர்த்தி செய்யவும் முடிந்துள்ளது! Phewww.. அரசாங்கப் பணியிலி­ருந்தால் இந்நேரத்துக்கு ஒரு மாலையைப் போட்டுவிட்டு, காரம் - காப்பி வாங்கித் தந்து பிரியாவிடை என்ற பெயரில் "ஒழிஞ்சதுடா அராத்து!'' என்று ரிட்டயர்மண்டினுள் அனுப்பியிருப்பார்கள்! இங்கேயோ, இப்போதோ - இன்னமும் பல்டி பல்டியாய் அடித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பெருசு ! புனித மனிடோவே துணை!!

ஆன்லைன் புத்தக மேளா சார்ந்த சகல விபரங்களும் நமது கம்யூனிட்டியில் ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்! இதோ ஒரு மறு ஒலி­பரப்பு! 









Take my word for it folks- இதுவொரு செம racy combo! முன்பதிவுகளுக்கு முந்துங்கள்! ஏற்கனவே தெறி ஸ்பீடில் புக்கிங்ஸ் அரங்கேறி வருகின்றன - நீங்களும் அந்த அணியில் சீக்கிரமே இடம்பிடித்தால் மகிழ்வோம்! God Speed folks!!

மீண்டும் சந்திப்போம் all ; have a lovely weekend! Bye for now!

P.S. ஆன்லைன் மேளாவின் இதழ்களுக்கு நீங்கள் புக்கிங் செய்திருந்து, சேலத்தில் மே முதல் தேதியன்று நடைபெற உள்ள நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்க இருக்கும் பட்சத்தில் - உங்களது "ஒற்றைக்கண் மர்மம் " மாயாவி இதழினை அங்கு பெற்றுக்கொள்ள இயலும். "மாயாவி @சேலம் " என்றொரு வாட்சப் சேதியை நமது கம்யூனிட்டி நம்பருக்கு அனுப்பினால் மதி!

167 comments:

  1. பள்ளி கூடத்தில தான் பர்ஸ்ட் வரல...இங்கேயாச்சும்..

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  3. Munpathivu panniachhunu than ninaikiren..

    ReplyDelete
  4. அம்மணிகளின் அட்டைப்படங்கள் இரண்டுமே அழகு சார்...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.... மிட்நைட்லே இன்னா பண்ணிட்டு இருக்கீங்கோ?

      Delete
    2. இரண்டு அம்மணிகளின் அட்டைப்படம் மிட்நைட்ல பார்க்க சரியான டைம்ங்க தானே

      Delete
    3. தலீவரே.. 'ம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க.. அந்தப்புரத்தின் கண்காணிப்பு கோபுரத்தில் உங்களை பணி அமர்த்திடறேன்.. ☺️

      Delete
    4. ///இரண்டு அம்மணிகளின் அட்டைப்படம் மிட்நைட்ல பார்க்க சரியான டைம்ங்க தானே//

      😂😂😂😂ரம்யா ஸிஸ்@
      ரொம்ப rugged கேர்ளா மாறிக்கிட்டே இருக்கீங்க 😂

      Delete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  7. மே மாத குளுமை இப்பொழுதே வீசதொடங்கி விட்டது. 👌👌👌

    ReplyDelete
  8. //இன்ன பிற சிந்தனைகளைப் புறம்தள்ள நீங்களெல்லாமே நமது இதழ்களைப் பயன்படுத்தும் போது//


    எங்களை நன்றாக தெரிந்து வைத்துள்ளீர்கள் சார்💐💐💐

    ReplyDelete
  9. ""இன்ன பிற சிந்தனைகளைப் புறம்தள்ள நீங்களெல்லாமே நமது இதழ்களைப் பயன்படுத்தும் போது, நானோ அவற்றிலி­ருந்து தூரப் போக நினைப்பது குடாக்குத்தனமென்றுபட்டது!"
    எவ்வளவு உன்னதமான வரிகள் ஆசிரியர் சார். 👌❤️.
    அட்டைப்படங்களின் ப்ரிவ்யூ இரண்டுமே அசத்தல்.
    வெல்கம் ஆன்லைன் மேளா 🎇🎇🎇🎇🎆🎆

    ReplyDelete
  10. இரண்டு அட்டைபடங்களின் எழுத்துருவ ஆக்கம் செம

    மரணம் டிசைன் செம

    மஞ்சுவிரட்டு டிசைன் செம

    மஞ்சள் பேக்க்ரவுண்டில் சிவப்பு டிரஸ் அருமை

    ReplyDelete
  11. அட்டை படங்கள் சூப்பர்!!

    இதுவரை வெளியான ரூபினின் கதைகள் எல்லாமே 'வேற லெவல்' வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தவை என்பதால், இந்த கதையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! பெலிசிட்டியை பொருத்தவரை தற்போது கலவையான உணர்வுகளே! படித்து முடித்த பிறகே அம்மணி good டா, bad டா, ugly யா என்று சொல்ல இயலும்!😝

    ஆன்லைன் மேளாவிற்கு பணம் செலுத்தி விட்டேன். Gpay செய்த 30 வினாடிகளுக்குள் 'Sir online book fair booking number 5052🙏' என்று whatsapp தகவல் வந்து மிரளசெய்தது! என்னா ஸ்பீடு!! பின்றீங்க மக்காஸ்!! 😮👏👏💐💐

    ReplyDelete
  12. வணக்கம் மக்களே 🙏😍

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ரூபின் அட்டை அசத்தலோ அசத்தல்.

    ReplyDelete
  15. @Edi Sir💐😘

    மாயாவி@சேலம் 👍😘

    ReplyDelete
  16. மாயாவி அட் சேலம் வாட்ஸ் அப்பில் போட்டாகிவிட்டது.. ஏதேதோ காரணங்களுக்காக ஈரோடு புத்தக விழாவை தவறவிடும்போது மனம் வருத்தத்தில் ஆழும் . பிறகு மீளும்.

    ஆனால் இம்முறை சேலத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

    எனவே மே ஒன்று அன்று சேலத்தில் இருக்க வேண்டிய எல்லாவிதமான சாதகமான சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொண்டேன்.

    ( பாஸ்போர்ட் உடன் வருகிறேன். சேலத்து இளவரசர் ஆன் தி ஸ்பாட் விசா தந்து விடுவார் என நம்புகிறேன் 😁)

    ReplyDelete
    Replies
    1. 'விசா' என்பது அந்தப்புர அம்மணிகளில் ஒருவரது பெயராக இல்லாதவரை சரிதானுங்க செனா அனா ஜி!😝

      Delete
    2. Btw, welcome to salem!💐🙏☺️

      Delete
    3. அருமை சகோ
      தங்களை நேரில் பார்த்து ரொம்ப நாளாயிற்று

      Delete
  17. அதன் முக்கியத்துவம் கருதி ஒற்றைக்கண் மர்மம் விடுத்து ஆன்லைன் விழா புத்தகங்களில் ஆவலுடன் நான் மிகவும் எதிர்பார்ப்பது- சொல்ல கொஞ்சம் சங்கோஜமாகவே இருந்தாலும் - விச்சு கிச்சு தொகுப்பு தான் 😁.

    சுட்டி குரங்கு கபிஷ் - இதன் தாக்கம் தான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வி&கி இத்தினி ஜல்தியா வெளிவருவதன் பின்னணியை சொன்னா சிரிக்கப்பாடாது சார் - அவர்கள் மேல் எனக்குமொரு அசாத்திய லவ்ஸ் உண்டு! நெடுநாளாய் 🤔😁

      Delete
  18. Preview எல்லாமே அருமை சார். ஏப்ரலில் மே செம்ம செம்ம சார். ரூபின் படிக்க ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  19. அதே போல புது ஹீரோ Seguvara கலக்குவார் என்ற நம்பிக்கையுடன்.

    ReplyDelete
    Replies
    1. அவர் ஸகுவாரோ சார்....

      Delete
    2. தமிழில் type செய்ய வரல சார் அதான் ஆங்கிலத்தில் ....

      ஹிஹிஹி

      Delete
  20. எங்கள் சிறு அணியின் கோரிக்கையை ஏற்று அம்மணி பெலிசிட்டிக்கு ஆடை தானம் செய்த வள்ளல் விஜயன் சாருக்கு வாழ்த்துக்கள். இது போதும் சார் இது எங்களுக்கு மனநிறைவை கொடுக்கும்

    ReplyDelete
    Replies
    1. அந்த கதை.. கதைன்னு ஒரு ஐட்டம் உண்டில்லீங்களா... அதுக்கு எதைக்கொண்டும் மூடாக்கு போட முடியாதே 🤔🤔

      Delete
    2. சார் அப்படி பாத்தீங்கன்னா 13 தொடரையே படிக்க முடியாது. குறைந்தபட்சம் ஓவியத்தில் ஆவது ஒரு மறைவு இருக்கட்டும். கதை என்னும்போது அவ்வளவு எளிதில் தட்டுப்படாதுங்க.

      Delete
  21. Present sir ! ரூபின் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! I liked very much the last book !

    ReplyDelete
  22. ஆன்லைன் மேளா - வில் டெக்ஸ் - வருகிறார் ...
    ஸாகோர் வருகிறார் என்றாலும்
    விச்சு& கிச்சு வருகிறார்கள் என்பதில் தான் மனம் பரபரக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. ஜாம்பவான்களுக்கே tough தரும் விச்சு & கிச்சு 💪

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. இளம் டெக்ஸ் - புயலில் ஒரு சூறாவளி கோடை மலராக வருவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கோடை மலராக வெளி வருமா?

    ReplyDelete
    Replies
    1. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் சார்!

      அதே போல வெயில் சாத்தும் எந்தப் பொழுதும் கோடை மலர் பொழுதுகளே!

      Delete
    2. அப்போ ஜூனில் யங் டெக்ஸ்.

      Delete
  25. //மைனாவோடு மஞ்சுவிரட்டு///

    மஞ்சள் அட்டை படம்...

    ரைட்டு,

    முதல் குறீயீடு ...

    இனி கதையில எங்க எங்க ல்லாம் குறீயீடு இருக்குன்னு பார்க்கனும்..

    ReplyDelete
    Replies
    1. புக்க படிங்க தெய்வமே... குறியீடு... குறை ஏடுன்னு தேட ஆரம்பிச்சா இலையில் உள்ள பதார்த்தத்தின் சுவையை கோட்டை விட்டுடுவீங்க!

      Delete
  26. பதிவுக்கு நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  27. ரூபின் கதைக்கு ஆவலுடன் வெயிட்டிங்

    ReplyDelete
  28. மைனாவோடு மஞ்சுவிரட்டு 😃 இந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது சார் ☺️☺️☺️☺️☺️

    ReplyDelete
  29. சார் . அந்த வி&கி அணியில் ஆயுட்கால மெம்பராக என்னையும் சேர்த்துக் கங்க.பாக்கெட் சைசில் கலரில் முதல் முறையாக ஆதர்ச விளையாட்டு வீரர்கள் .ஆவலுடன் வெய்ட்டிங் சார்

    ReplyDelete
  30. *சாபங்கள் சாவதில்லை*

    அன்றாட மனித மனங்களின் விரக்தியை இறக்கி வைக்க அடுத்த மனிதனை கேலி செய்து தன்னை தானே சமம் பண்ணி கொள்கிறான், ஒருநாள் விளையாட்டாக ஆரம்பிக்கும், மெதுவாக மனம் அடிமையாகி பழக்கமாக்கி விடும், பின்னர் கேலி செய்திட புதுப்புது யோசனைகள் தோன்றும்
    அப்படியாக தோன்றியது வினையாக முடிகிறது இங்கு.

    வயதான செவ்விந்தயரை புரிந்து கொள்ள முடிகிறது
    சிறுவயதிலிருந்து இயற்கையோட இயந்து வாழ்ந்த இடத்தை விட்டு செல்ல எப்படி மனம் வரும், தான் வளர்ந்த இடம் , தன் மக்களும் கூட இல்லாத சோகத்தால் குடிக்கு அடிமையாகி சோக வெள்ளத்தில் இருக்கும் முதியவர், தான் கேலி செய்யப்படும் போது சண்டை போடவோ, மனதின் சோகத்தை எரிச்சலாகவோ காட்டாமல் வெற்று ஜடமாக கடந்து செல்கிறார். மனம் கனக்கின்றது
    அவரது உடல் எரியும் காட்சி, கருப்பு வெள்ளை என்றாலும் நம் மனதை உலுக்கி விடுகிறது😥😥😥

    அதிர்ச்சியும் குற்றயுணர்வும் சேர அங்கிருந்த பாதி பேரால் அதன் பின் இயல்பாக இருக்க முடியவில்லை

    கேலி செய்வதற்கு அடிமையாகி, குற்ற உணர்வுடன் உழல்பவர்களிடம், பழிவாங்குகிறது எரிந்து போனவரின் ஆத்மா என்ற பீதியை கிளப்பி விட்டு, ஒவ்வொருவராக இறக்க அங்கு அடுத்த நாளை வாழ்வா சாவா என்ற எண்ணத்தில் வரவேற்கும் மக்களாக வாழ்கின்றனர்.

    இப்படியாக பட்ட இடத்தில் புயலின் உபயத்தில்(நன்றி வில்லன் அவர்களே)
    வந்து சேரும் இரு பிரசித்தி பெற்ற ரேஞ்சர்ஸ்க்கு ஆக்ஷனில் இறங்கிட முகாந்தரமாக அமைந்திடகிறது

    சும்மா ஒரு சலூனிலோ, ஒரு தெருவிலோ, ஒரு காட்டிலோ மேட்டிலோ பிரச்சனை நடந்தால், அவங்க குதிரைகளே இந்தப்பா இறங்குனு இறக்கி விட்டுரும்.

    ஏங்க புதுசா இரண்டு பேரு ஊருக்கு உள்ள வந்தவங்கன்னா, அவங்க கிட்ட எதாவது சொல்லுவாங்களா, இவிங்க கேட்ட உடனே எல்லாத்தையும் சொல்லிடனும். ரேஞ்சர்ஸ் ஆயிற்றே.
    ஷெரீப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு பிடிக்காம ஒரு பெண்ணை அறைந்தது கோபம் வந்தது, நம்ம காரசன் முத ஆளா குதிப்பார்ன்னு பார்த்தா, டெக்ஸ் நல்லா ணங் ணங் குடுத்திடுறார், வாங்கின பிறகு எந்திரித்து நிற்கிறார், டெக்ஸ் கிட்ட அடி வாங்கியும் நிக்கிறார், பலசாலி தான் சிக்ஸ் மைன்ஸின் ஷெரீப்


    அதிரடியாக ஷெரீப்பிடம் ஆரம்பித்தாலும், சின்ன ஊர் என்பதால் சலம்பல் பண்ணாமல் கொலைகாரனை பிடித்து விடுகின்றனர். டெக்ஸ் க்கு சந்தேகம் வரும் இடத்தில் நமக்குமே சந்தேகம் வந்து விடுகிறது, காரணம் மட்டும் புலப்படாமல்.

    கீர்த்தி மிகு டெக்ஸ் பெயர் கேள்வி பட்டிருந்தாலும் வாய் சவாடல்கள் தான் பேசுவாங்களே வில்லன்ஸ், அப்புறமென்ன இந்த வில்லனும் வாய்ச்சவடால் பேசி ஒரே ஒரு கும் வாங்கி கொள்கிறான், அதுக்கே சுருண்டு விழுந்திடுறான்,
    அதிக ஆர்ப்பாட்டம் பண்ணாம ஒரு காதல் ஜோடியையும் சேர்த்து வைக்கின்றனர்.

    ரோசிட்டா இருவருமே அழகிய ,அன்பான, அறிவான பெண்கள்

    சித்திரங்கள் மிக மிக அருமை
    டெக்ஸின் தீர்க்கமான பார்வை, கார்சனின் குறுந்தாடி கூட அழகாக வரைந்துள்ளார், அதி முக்கியமாக, அந்தந்த காட்சிகளிலுக்கு ஏற்ற முகபாவனைகள், யாருமற்ற தெரு கூட கதை சொல்கிறது, வசனம் இல்லா பேசிடும் காட்சிகள், பலே பலே ஓவியர்
    சபாஷ் தெரிவிக்க பட வேண்டிய வேண்டிய சித்திரகாரர்
    ஆரம்பத்தில் டெக்ஸ் ஸும் கார்சனும் ஊருக்குள்ளே நுழையும் சலூனை நெருங்கிடும் காட்சியே சான்று
    மண்வாசனையும் மழையின் சத்ததையும் பீல் பண்ணலாம், ஓவியம் குடுக்கும் உணர்வுகள்

    அட்டைப்படம் தரம் மிக அருமை, கதையும் சிறப்பு,அதுவும் ஆரம்பம் குடுக்கும் அந்த மிஸட்ரி பீலிங் உணர முடிந்தது, நோ டூமில், கொஞ்சம் கும் ணங், அதுவும் கார்சன் கையை பயன்படுத்தும் வேலையும் இல்லை, ஆனா இவிங்க சேட்டைதான்
    ஒரு மன ஆறுதல் அந்த செவ்விந்தியனை எரித்ததை கொண்டாடாமல், செய்த தவறை உணர்ந்து அவருக்கு மரியாதை செய்த அவ்வூர் மக்களின் செயல்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மன ஆறுதல் அந்த செவ்விந்தியனை எரித்ததை கொண்டாடாமல், செய்த தவறை உணர்ந்து அவருக்கு மரியாதை செய்த அவ்வூர் மக்களின் செயல்.// super

      Delete
    2. நன்றி சகோதரர்களே

      Delete
    3. நார்மலான எழுத்து நடையில் ஹாஸ்யமான அருமையானவிமர்சனம்

      Delete
    4. நன்றி தோழரே
      போட்டோ கிடைத்துள்ளது, என்னை அழைக்கவும்

      Delete
  31. //சும்மா ஒரு சலூனிலோ ஒருதெருவிலோ ஒருகாட்டிலோ மேட்டிலோ பிரச்னை நடந்தா அவங்க குதிரைகளே இந்தாப்பா இறங்கு னு இறக்கி விட்டிரும்//இதைத்தான் கோயமுத்தூர் குசும்புனு சொல்வாங்களோ.சூப்பர் ஸிஸ்டர்.

    ReplyDelete
  32. //திட்டத் தோன்றினால் 'சிவகாசியின் திசை தெற்கு' என்பதை நினைவுகூர்ந்திடக் கோருவேன்! //

    தெற்கிலிருந்து வீசுவது தென்றலா? டெம்பஸ்டா?😁

    டெட்வுட் டிக் கதைகளின் உரையாடல்களின் போது கரடு முரடான நடை உபயோகப்படுத்தப்பட்டது. கதை சொல்லும் பாணிக்கும் கதை செல்லும் போக்குக்கும் அது தேவையாக இருந்தது.

    நாவல்களிலோ அல்லது காமிக்ஸ்களிலோ வசவு சொற்களில் இழிவான சொற்கள் உபயோகப்படுத்தப்படுவது -derogatory - பதிப்பாசிரியரின் உரிமையாகவே இருக்கலாம்... ஆனால் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் பெரும்பான்மை வாசகர்களின் மனப்பாங்கைப் பொறுத்தது.

    அச்சு ஊடகங்கள், எழுத்து மூலமாக வரும் சமூக ஊடகங்கள் இவற்றைப் பற்றி மட்டுமே இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது. திரைப்பாடல்கள் திரைப்படங்கள் இவற்றை நாம் கவனத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறிய முகநூல் சம்பவம்

      வெகு நாட்கள் முன்பு முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு பதிவை பற்றியது.

      எஸ். வித்யா கே. வித்யா என்ற இரு கல்லூரி தோழிகள் ஒரு வட்ட வடிவ மேஜையின் முன்பாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
      அவர்கள் முன்பு இரு கண்ணாடி குவளைகளில் பழுப்பு நிற திரவம்
      தளும்பிக் கொண்டிருக்கிறது. அவை குளிர்பானங்களாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஆகவும் இருக்கலாம்.

      இந்த புகைப்படம் முகநூலில் ஒரு பதிவாக வெளியிடப்படுகிறது.

      பதிவின் தலைப்பு இதுதான்

      The vidyas are having fun at the bar.

      பதிவை வெளியிட்டது அவர்கள் இருவருக்கும் அறிமுகமான ஒரு நபர் அல்லது அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவராகவும் இருக்கக்கூடும்.

      இந்த பதிவில் என்ன முரண் இருக்கிறது ஒரு சாதாரண பதிவு தானே என்ன நாம் நினைக்கக் கூடும்.

      ஆனால் பதிவை வெளியிட்ட நபர் The என்பதற்கும் vidyas என்பதற்கும் இடைவெளி விடவில்லை.

      அப்போது இந்த பதிவு முகநூலில் ஒரு சிறிய புயலை கிளப்பியது. சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் மிக கண்ணியமாகவே பதில் அளித்து இருந்தார்கள். இது போன்ற இழிச் சொற்களை தாங்குவதற்கான மன உறுதி எங்களுக்கு உள்ளது. இது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றவாறு அதை தாண்டி சென்று விட்டார்கள். ஆனால் முகநூல் எழுத்தர்கள் இந்த சொல்லைப் பற்றி கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார்கள். இந்த பதிவை வெளியிட்ட நபருக்கும் கடுமையான கண்டன குரல்கள் எழுந்தன.

      Delete
    2. சுஜாதா

      விஞ்ஞான கதைகள் நிறைய எழுதிய சுஜாதாவின் சொல்லாடல்கள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. சொற்கள் என்று இல்லாமல் இழிவான பொருளை தரக்கூடிய வாக்கியங்களை எழுதியதாக அவர் மேல் குற்றச்சாட்டு எழுந்தது.

      முதன் முதலில் வெளியான விக்ரம் படத்தின் கதை வடிவம் குமுதம் இதழில் தொடராக வெளியிடப்பட்டது.

      அதில் புது மனைவியை தேனிலவின்போது இழந்த கமல் மறுபடியும் வேலைக்கு வரும்போது தன்னுடன் வேலை செய்ய புதிதாக வரும் ஒரு பெண்ணிடம் பேசுவதாக இந்த உரையாடல் எழுதப்பட்டது.

      "உச்சா போகும்போது சுவரில் என் பெயரை எழுதுவேன் உன்னால் முடியுமா? என பெண்ணை விட ஆணின் மேன்மை(?) பற்றி பேசுவதாக எழுதப்பட்ட உரையாடல்.

      அதே குமுதத்தில் சுஜாதா கருப்பு சிவப்பு வெளுப்பு என எழுதி அது நிறுத்தப்பட்டு ( வேறு காரணங்களுக்காக ) பின் அதே கதையை வேறு வடிவத்தில் ரத்தம் ஒரே நிறம் என்று எழுதினார். இதில் கருப்பு சிவப்பு வெளுப்பு கதையில் அவர் வர்ணனைகளுக்காகப் பிரயோகப்படுத்திய சொற்றொடர்கள் மீது கடும் எதிர்ப்பு எழுந்தது.

      இது பொருத்தமான இடத்தில் தேவைக்கு அதிகமான சொற்றொடர் உபயோகத்திற்காகவோ அல்லது அதன் உள்ளடக்கத்துக்காகவோ எழுப்பப்பட்ட கண்டனக் குரல்கள்.

      Delete
    3. பொருத்தமே இல்லாத இடத்தில் தேவையே இல்லாத சொற்றொடர் பிரயோகத்திற்காக அல்லது சொல்லின் பிரயோகத்திற்காக அல்லது அதன் உள்ளடக்கத்திற்காக அதிக கண்டனம் எழுந்தது கம்பர் மேல் தான் என்றால் உங்களால் நம்ப முடியாது.

      இயல்வுறு செலவி னாவா யிருகையு மெயினர் தூண்டத்
      துயல்வன துடுப்பு வீசுந் துவலைகண் மகளிர் மென்றூசு
      உயல்வுறு பரவை யல்கு லொஈபுறத் தளிப்ப வுள்ளத்து
      அயர்வுறு மதுகை மைந்தர்க்க் கயாவுயிர்ப் பளித்த தம்மா.
      ( கம்ப இராமாயணம்-குகப் படலம் (பாடல் 1066), ப. 745)

      பாடலின் பொருள்:எயினர் நாவாயின் இருபக்க த்தும் உந்தும் துடுப்புக்கள் நீர்த் திவலைகளை வீசி மடவாரின் ஆடைகளை நனைக்க, அப்போது அம்மடவாரின் அல்குல் வெளியே புலப்பட்டு வீரர்க்குக் காணப்பட்டு மனக்களிப்பை விளைவித்தது.//

      இதில் அல்குல் என்ற வார்த்தைக்கு செயற்கை நுண்ணறிவு "புருவம்" என்ற பொருளை தரும். ஆனால் தமிழ் அகராதிகள் கூறும் பொருள் வேறு. முந்தையது தருவது தவறான பொருளாகும்.

      தசரதன் இறந்த பிறகு ராமனை காட்டிலிருந்து திரும்பி கூட்டி வருவதற்காக பரதன் குகன் முதலானோர் செல்லும்போது எழுதப்பட்ட பாடல் இது. கம்பரசம் நூலில் அறிஞர் அண்ணாவால் கடுமையாக தாக்கி எழுதப்பட்ட பாடல் இது.

      போலவே ராமர் சீதையின் அங்க அடையாளங்கள் பற்றி அனுமனிடம் கூறுவதாக வரும் பாடல்.

      வார்த்தைகளின் பிரயோகம் சொற்றொடர்களின் உபயோகம் இவை குறித்து மாபெரும் மேதைகளும் முரண் கருத்துக்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பதற்காக இவை கூறப்பட்டன.

      Delete
    4. நமது காமிக்ஸ்சை பொருத்தவரை நூல் வெளியான பிறகு எடிட்டர் சார் உபயோகப்படுத்திய வார்த்தையை பற்றி வாசகர்கள் எவ்வித முடிவுக்கும் வரலாம்.

      ஒரு சிலர் ரோஜாக்களைப் போல் இருக்கலாம். எளிதில் கையாள முடியாத அளவுக்கு அவைகளுக்கு முட்கள் உண்டு.

      ஒரு சிலர் மோப்பக் குழையும் அனிச்சம் போல் இருக்கலாம். அவர்களுக்கு இந்த வார்த்தையின் பிரயோகம் ஏற்றுக்கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்.

      ஒருவேளை ஒரு சிலர் இந்த வார்த்தையின் பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு கலாச்சார காவலர்கள் என்ற போர்வையோ, பண்பாட்டுக் காவலர்கள் என்ற துண்டோ, சமூகப் பொறுப்பாளர்கள் என்ற கைக்குட்டையையோ அவர்கள் மேல் போர்த்த முயல வேண்டாம் .


      நீங்கள் இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேட்கிறீர்களா?

      எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

      பிடவம் மலர, தளவம் நனைய,

      கார் கவின் கொண்ட கானம்”

      என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் வரிகளில் (499:1-2) வருவது போல் செடி முழுதும் முட்கள் நிறைந்த பிடவம் மலரைப் போல் நான்... 😁

      Delete
    5. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

      Delete
    6. அருமை செல்வம் அபிராமி சகோதரரே ❤❤❤💐💐

      Delete
  33. *சாய்கான் புதையல்*

    முதலில் படித்தது யுத்தத்தை பற்றிய குறிப்புகளை.
    கொரியாவிலும் தெற்கு பகுதியை தான் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது,
    வடக்கை சோவியத் பிடித்திருந்தது.
    வியட்நாமிலும் அவ்வாறே அப்படியே, இந்த ஒற்றுமை ஏன் என்று புரிபடவில்லை, கொஞெசம் ஆராய்ந்தால் தெரிய வரலாம்,
    காரணங்களும் வேறாக இருக்கலாம்,
    வியட்நாமில் கம்யூனிஸ்ட்னான வடக்கு ஜெயித்து ஒன்றானது, கொரியாவில் அவ்வாறு நடக்கவில்லை, அது நன்றே.

    *இராணுவம் ஒரு நாட்டின் பாதுகாப்பின் ஏற்பாடாக, திறம்பட செயல்பட அந்நாட்டின் மனிதர்களை மனதளவிலும் உடலளவிலும் திடமான வீரர்களாக செதுக்கி உருவாக்கபடுகிறது* .
    *ஆனால் போர் கற்று தந்திடும் அனுபவங்களே அவ்வீரர்களுக்கு சிறந்த ஆசானாக விடுகிறது.*

    இந்நிகழ்வில்களில்
    சிலர் சுயநலமாய் மாறிடுவர், சிலர் மனநலம் பாதிக்கபடுவர், சிலர் அடிமையாக மாறிடுவர் -
    அதிகாரத்துக்கு, பணத்துக்கு, மதுவுக்கு, சண்டைகளுக்கு, இன்னும் சிலர் சைக்கோவாக, இத்தனை கொடூர ரணகளங்களே மீறி மனதில் கருணை உணர்வு மற்றும் அடுத்தவர்களை கொடுமை படுத்தாத எண்ணம் இருந்தால், அது ஒரு வரப்பிரசாதம்.

    போரில் அதிகாரிகள் அரசியலை வெகு சீக்கிரமாக கற்று கொள்கிறார்கள், அவர்கள் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் பகடை காய்களே.

    ஷெல்டன் எந்த மாதிரி என்று நம்மளுக்கு தெரியுமே

    வியட்நாமிற்கு ஹானஸ்டியுடன் வரும் ஷெல்டன், தாங்கள் ஏன் இங்கு வந்துள்ளோம் என்பதை ப்ளாஷ் பேக்கில் விவரிக்க ஷெல்டனின் வியட்நாம் இராணுவ நாட்கள் நமக்கு சொல்லபடுகிறது.

    போரின் தோல்வியில் தத்தம் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அனைவரும் வழிகளை தேடி கொண்டிருக்க, இடையே மிஞ்சிருக்கும் தங்கத்திற்கு ஒரு வேட்டை நடக்கிறது. கிட்டியதா, கைநழுவி போனாதா என்பதை சுவாராசியமாக சொல்லி இருக்கிறார் நமது கதாசிரியர்

    லீ ஹாங் என்ற மனித மிருகத்திடம் ஷெல்டன் மாட்டி கொள்வது கொடுமை
    17 மணி நேர நரக வேதனை, ஒவ்வொரு நொடியும் யுகங்களாய் கடந்திடும் ரணகளமெ. அந்த இளம் வயதில், என்னவொரு மனதிடம் ஷெல்டனுக்கு, மதியூகமாக கிடைக்கும் வாய்ப்பில் தப்பிக்கிறார்.
    எப்படியும் தப்பி விடுவார் என்று தெரிந்தாலும், அவரு அங்கிருந்து தப்பும் வரை மனது சஞ்சலத்துடனே இருந்தது,
    நகத்தை கடிக்காத குறை மட்டுமே.
    Prisoner of War ஆக இருப்பத்தெல்லாம் மிக மிக கொடுமை.

    சுயநலவாதி என்றாலும் செம தில்லான பெண்தான் லீ க்வான் யென். தான் பிறந்த வளர்ந்த சூழ்நிலையை சுய பச்சாதாபமாக அணுகாமல், தனக்கென ஒரு வாழ்வை உருவாக்கி கொண்ட ஒரு துணிச்சலான பெண்ணாகவே நான் லீ க்வானை பார்க்கிறேன்.

    ஹானஸ்டி அழகாக ஷெல்டனுக்கு உறுதுணையாக வந்து போகிறார். லீ க்வானை நன்றாகவே பழிவாங்கி விடுகிறார்😂😂😂.

    சித்தரிங்கள் செம டீடெயில்ட், ப்ளேன் மேலெழும்பும் போதும், அது பற்றி எரிந்து கீழே விழும் போதும், செமயான ஆக்ஷன் ஓவியம். தங்கம் சுமந்து சென்ற வண்டி விழுந்த அந்த நீர்வீழ்ச்சி டாப் டக்கரான கண்களுக்கு விருந்து, பார்த்து கொண்டே இருக்கலாம் போன்ற ஒரு மிக அருமையான சித்திரம்
    வாகனங்களை வரைவதில் மிக மிக நேர்த்தியாக, விமானங்கள், ஹெலிகாப்டர் செமயாக சித்திரப்படுத்தி உள்ளார் ஓவியர்.

    *அட்வென்ட்சராக வாழும் ஒரு முன்னாள் இராணுவ வீரன், வியட்நாம் போர், திடீரென்று அதிகாரத்தில் உயர்ந்த அரசியல்வாதி இவைகளை இணைத்து ஒரு செம ஆக்ஷன் த்ரில்லரை படைத்திருக்கிறார் நமது ஜீனியஸ் கதாசிரியர் வான் ஹாம்மே* ❤❤❤❤❤

    ஷெல்டன் வெற்றி பெற வேண்டியவர், ஏனோ விற்பனையாவதில் சிறிது சுணக்கம் காண்கிறார்

    எஞ்சி நின்றவனின் கதையின் முதல் பாகத்தை தனியாக போட்டால் நன்றாக இருக்கும், இதுவரை படிக்காத முதல் பாகம்.

    ReplyDelete
    Replies
    1. //அது பற்றி எரிந்து கீழே விழும் போதும், செமயான ஆக்ஷன் ஓவியம். // அந்த வண்டியை பிடித்தபடி ஆற்றில் விழும் ஷெல்டன் ஆகாயத்தில் வண்டி தனியாக அவர் தனியாக செல்வதாக செம detailing.

      உங்கள் பார்வையில் லீ குவானை அனுகியதை ரசித்தேன்..

      தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்..

      Delete
    2. ரொம்ப நன்றிகள் சகோ💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நன்றி ஸ்டீல் 💐💐💐💐💐

      Delete
  34. பொட்டி கிளம்பி விட்டது.

    ReplyDelete
  35. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  36. கடல்சகோ .ஒரு ஒப்பந்தத்தின் கதை யின் முதல் பாகம் கேட்கிறிர்கள் என்று நினைக்கிறேன்.இதில்தான் முதல் பாகத்தில் (ஷெல்டனின் mission ல்) உயிரிழந்த நண்பர்களின் பங்கு பணத்தை நண்பர்களின் குடும்பத்தினருக்கு சேர்ப்பிக்க பல தடைகளை கடந்து செல்வார் ஷெல்டன்.

    ReplyDelete
    Replies
    1. NBS-ல் வந்தது சகோ
      NBS புத்தகம் வாங்கவில்லை
      நான் படித்ததில்லை, ஆகையால் கேட்டேன்

      Delete
  37. புத்தகம் கையிலே புத்தியோ பதிவிலே சனிக்கிழமையை கண்டதும் மனம் விரும்புவது உங்கள் பதிவை 😊 நான் என்ன செய்வேன் 😊

    ReplyDelete
  38. //புத்தகம் கையிலே புத்தியோ பதிவிலேசனிக்கிழமையை கண்டதும் மனம் விரும்புவது உங்கள் பதிவை/உண்மை. இப்ப ஆசிரியர்: //புத்தகத்த படிங்க தெய்வமே . சுவர் இருந்தால்தான் சித்திரமே படிச்சிட்டு பதிவுல விமர்சனத்தை போடுங்க// '

    ReplyDelete
  39. நிழல் ஓநாய்கள்-.சமீபத்தில் வந்த அறிமுக கதைகளில் கையில் ஏந்திய பிறகு கீழே வைக்க மனமில்லாமல் படித்து முடித்த கதை.
    மிகச்சிறந்த அறிமுகம். எளிதான வாசிப்பு நம்மில் அனைவர்க்கும் கண்டிப்பாக இவரை பிடிக்கும்.

    புதிய நாயகர் இனி ஆண்டு தோறும் நம்மிடம் தொடருவார் 😊

    ReplyDelete
  40. கிளைமேக்ஸ் ஏக பரபரப்பு போலிஸ் கிரிமினல்கள் உடனான மோதல் இவ்வளவு டீடெய்லாக இதுவரை வந்ததில்லை.குழப்பமில்லாத தெளிந்த நீரோடை போன்ற மொழிபெயர்ப்பு அருமையான தெளிவான ஓவியங்கள் ஹிட் அடிக்கிறார் அறிமுக நாயகன் ஸகுவாரோ.

    ReplyDelete
    Replies
    1. பொட்டி எனக்கு கிடைக்கல சார். நாளை மாலை வரை காத்திருக்கனுமாம்... சொக்கா

      Delete
  41. ஸகுவாரோ மொழி பெயர்த்த மேச்சேரியாருக்கும் ,மைனாவோடு மஞ்சு விரட்டு மொழிபெயர்த்த கரூர் டாக்டர் . A. K. K.ராஜாஅவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள் நண்பர்களே 👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
  42. முத்தான மூன்று புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்.

    முதலில் படித்தது எப்போதும் போல V Comics ஸகுவாரோ. அறிமுக ஹீரோ என்றாலே ஒரு மகிழ்ச்சி தான். ஆனால் கதையும் சரி ஆக்ஷன் உம் சரி சுமார் தான்.
    எனது மதிப்பெண் 7/10

    இரண்டாவதாக படித்தது ரூபின் இப்போது இருக்கும் ஹீரோக்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒருவர். மிக கவனமாக ஓவியங்களை பார்த்து படிக்க வேண்டியது கட்டாயம் ரூபின் கதைகளில் இதுவும் அதற்கு விதி விலக்கு இல்லை. ஆரம்பமே ஒரு பிரஸிடெண்டை கொல்ல நடக்கும் முயற்சியுடன் துவங்கும் கதை போகப் போக வேறு எங்கோ சென்று கடைசியாக எல்லா புள்ளிகளும் இணையும் க்ளைமேக்ஸ் அற்புதம். இந்த வருடத்தின் டாப் கதைகளில் ஒன்று.
    அதும் டயலாக் எல்லாம் அருமை. பூனை ஒன்றை எடுத்து வளர்த்தால் உனது தனிமைக்கு துணையாக இருக்கும் என்று ஒரு பெண் கூற எனக்கு டிவி யே போதும் அது வீட்டை நாறடிப்பது இல்லை என்று ரூபின் பதில் சொல்வதை ரசித்தேன். இது போல பல இடங்கள். கடைசி பத்து பக்கம் சும்மா பரபர.

    எனது மதிப்பெண் 10/10

    அடுத்து படித்தது மைனாவோடு மஞ்சு விரட்டு. பெலிசிட்டிக்கு எல்லாம் ஒரு ஸ்பின் ஆப் தேவையா என்ற மன நிலையுடன் படிக்க துவங்கிய கதை. ஆனால் படிக்க துவங்கிய பின்னர் அப்படியே உள்ளிழுத்துக் கொண்டது. அட்டகாசமான மொழிபெயர்ப்பு, அழகான ஓவியங்கள், எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் தனக்கு ஏற்றது போல மாற்றிக் கொள்ளும் அவளது திறமை எல்லாமே அருமை. One of the best stories of this year.

    எனது மதிப்பெண் 9.5/10

    ReplyDelete
  43. முதன்முறையாக ரூபின் காமெடி கலக்கல். இரண்டரை லட்சம் டாலர் ஒப்பந்தத்தில் பிரசிடண்டை கொலை செய்ய வரும் ஸ்னைப்பரை, டாக்டர் எப்படி உள்ளே வந்தீர்கள் "ஒற்றை தலைவலி இரட்டை தலைவலி" (டாக்டர் ஃபீஸ் இரண்டரை லட்சமா? அநியாயம்)என்று கடுப்படிப்பது வெடிச்சிரிப்பு

    ReplyDelete
  44. விசாரணையின்போது முக்கியமான தகவல்களை சாவகாசமாக கடைசியில் கூறி ரூபினை கடுப்படிக்கும் இடமும் நகைச்சுவை(அதுவும் இரண்டு முறை)

    ReplyDelete
  45. தற்போது நமது நாயகர்கள் பட்டியலில் முதலிடம் டெக்ஸ் . இரண்டாம் இடம் லக்கி . மூன்றாம் இடம் ரூபின்

    ReplyDelete
  46. Read saguvera. Interesting read. Welcome saguvera

    ReplyDelete
  47. இந்த வார பதிவு....

    ReplyDelete
  48. Rubin. As usual, ruthless, frustrated, daring and winning

    Felicity brown. Interesting spinoff. It's like in movies where stories are told in other people s perspective. Different camera angles for the same scene. Entertaining read.

    ReplyDelete
  49. இந்தியாவுக்கு வந்தாச்சு. இன்று கொரியரும் வந்தாச்சு. ஸ்வீட் பாக்சுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  50. ஆசிரியர், கடந்த வார பதிவை தவறவிட்டது மனதுக்கு சங்கடமாயிருக்கிறது. கடந்த மாதம் அவர் மிகப்பெரிய துக்கத்தில் இருந்த போது கூட, இதுவும் கடந்து போகும் என்று எழுதியிருந்தார்.

    அவருடைய பதிவு இல்லாமல் சனி, ஞாயிறு கிழமைகள், ஒரு வித குறையுடனே முடிகின்றன... அசைவம் இல்லாத ஞாயிறு போல...

    Blogல் பதிவை சுடச்சுட அல்லது பழைய பதிவை படிக்கும் சுகம், வாட்ஸ்அப் தருவதில்லை...

    வேறு பலரும் இப்படி மிஸ் பண்ணியிருக்க் கூடும்..

    வரும் வாரங்களில் இது போன்ற ஏமாற்றத்தை தவிர்க்குமாறு ஆசிரியரை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // வரும் வாரங்களில் இது போன்ற ஏமாற்றத்தை தவிர்க்குமாறு ஆசிரியரை வேண்டிக் கொள்கிறேன். // நானும் கேட்டுக் கொள்கிறேன்

      Delete
    2. // வேறு பலரும் இப்படி மிஸ் பண்ணியிருக்க் கூடும்.. // ஆமாம்

      Delete
  51. First look rating

    1. Rubin
    2. Saguvera
    3. Felicity

    After reading rating

    1. Felicity
    2. Saguvera
    3. Rubin

    ReplyDelete
  52. *நிழல் ஓநாய்கள்*

    கதையை பலரும் சிலாகிக்கும் அதே வேளையில் என்னிடம் புத்தகம் வந்து சேராத காரணத்தால், என்னை குடைந்துக் கொண்டே இருந்த ஒரே விஷயம் அது என்ன நிழல் ஓநாய்கள். ஒரு வேலை நிழல் உலக ஓநாய்கள் என்பதை தான் தலைப்பில் நிழல் ஓநாய்கள் என்று வைத்து விட்டாரா? அப்படி என்றாலும் இதில் ஓநாய்கள் என்று கூறுவது யாரை வில்லன்களையா அல்லது ஹீரோவையா எனும் கேள்வி ஓயாமல் அலை எழுப்பிக் கொண்டே இருந்தது. நேற்று புத்தகத்தை கைப்பற்றிய பிறகு இந்தக் கதையில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அலசிப் பார்த்தால், இந்த கதையில் நிழல் ஓநாய்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.

    ஒரு வேளை வில்லன்களை தான் குறிப்பிடுகிறார்களோ என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் வில்லன்களோ வெறும் குள்ளநரிகள் தான். ஆக சகுவாரோ தொடர்வாரா, அவர் ஏன் இந்த வறண்ட பூமிக்கு வர காரணம் எனும் சில பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் கூகுளாண்டவரை தொட்டால், பதில் பளிச் என்று தெரிகிறது.

    1974 ல் ஐக்கிய அமெரிக்காவின் சுங்கத்துறையின் கீழ் பூர்வகுடி மக்களை வைத்து துவங்கப்பட்ட ஒரு அமைப்பே நிழல் ஓநாய்கள். இந்த அமைப்பின் நோக்கமே மெக்சிக்க எல்லை வழியாக நடைபெறும் குற்றங்களை தடுப்பதே ஆகும். 2010 முதல் 2020 வரை இவர்கள் 437 போதை மற்றும் அனுமதியற்ற ஊடுருவல் குற்றங்களை தடுத்துள்ளார்கள். இவர்கள் 117,264 பவுண்ட்ஸ் உள்ள போதைப்பொருட்களையும், 45 ஆயுதங்களையும், 251 ஊர்திகளை மற்றும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட $847,928 அமெரிக்க டாலர்களை கைப்பற்றி உள்ளார்கள்.

    இந்த செய்தியை அறிந்ததில் இருந்து, என் மண்டையில் ஓடும் ஒரே கேள்வி சகுவாரோ இந்த அமைப்பை சேர்ந்தவரா என்பதே? கதை ஆரம்பிப்பது 1972 எனும் பொழுது அதற்கு சாத்தியம் இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் வில்லனை வைத்தே இவன் ஒரு பெடரல் ஏஜெண்டாக இருப்பானோ எனும் சந்தேக விதையையும் நாம் புறந்தள்ள முடியாது. போனெல்லியின் வலைதளமும் நவஹோ ஏஜெண்டாக கூறுகிறது, ஆகையால் இந்த சிந்தனையை புறந்தள்ளி கதைக்குள் நுழைவோம்.

    தத்துவ புத்தகத்தில் புகுந்து விட்டோமா என்று சிந்தனை செய்யும்  அளவுக்கு கதை நெடுகிலும் தத்துவங்களால் பின்னி எடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் போட்டிருக்கும் அந்த சாலையைத் தவிர அனைத்தும் பூமித்தாயின் கருவறையில் பூத்தவைகள் தான் என்று சொல்லும் ஹொபி பெரியவருடன் நான் கருத்து முரண்பட்டாலும், இந்த கதையில் தெளித்து விடப்பட்டுள்ள அனைத்து தத்துவங்களும் நெஞ்சை அள்ளுகிறது.

    தத்துவ மழையா, இது நமக்கு ஆகாதே எனும் பார்ட்டியா நீங்கள், கவலை வேண்டாம். 7 ஆம் பக்கத்தில் இருந்தே ஆக்ஷனுக்கான விதை தூவப்படுகிறது. 11 ஆம் பக்கத்தில் பட்டாசின் திரியில் உறவு கொண்ட தீப்பொறி போல பற்றிக்கொள்கிறது பக்கங்கள்.

    எந்த விதமான நேரடி ஈடுபாடும் தன்னை சிக்கலில் தான் சேர்ப்பிக்கும் என்பதால் தன் மதியூகத்தால், சரியாக சதுரங்க கட்டங்களில் விளையாடி உண்மையான குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்கிறார் ஹீரோ. சுபம் போடும் முன்பு மீண்டும் தத்துவ விசாரங்கள் மூலமாக தான் யார் என்பதை ராஜாளியுடன் பேசும் விதமாக வாசகர்களாகிய நமக்கு கோடிட்டு காட்டுவது வேற லெவல் கதை சொல்லல். 

    சார் 2026 அட்டவணையில் ஒரு இரண்டு மூன்று ஸ்லாட்கள் அவசியம் சார். பாத்து பண்ணுங்க.

    கதை 11/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
  53. *மைனாவோடு மஞ்சுவிரட்டு* 

    ஒரு எதிர்மறை கதாபாத்திரம். இந்த கதையெல்லாம் அவசியமா என்று தோன்றக்கூடிய கதாபாத்திரம். இப்படி ஒரு எண்ணத்துடன் தான் இந்த கதையை நான் படிக்க எடுத்தேன். 

    நளினி ஜமீலா அவர்கள் எழுதிய புத்தகத்தை என் தங்கை என்னிடம் வாசிக்க கொடுத்ததில் இருந்து, பாலியல் தொழிலாளிகள் மீது இருந்த எனது எதிர்மறை கருத்துக்கள் காணாமல் போயிருந்தது. ஆகையால் அந்த கோணத்தில் இந்த கதை எனக்கு எந்த அதிர்வலையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப் போனால் பெலிசிட்டி ஒரு பாலியல் தொழிலாளியாக இந்த கதையில் எங்கும் உருவாக்கப்படுத்தவில்லை. இத்தனைக்கும் அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஹெலனுடன் பாலியல் உறவு கொண்டிருக்கும் பெண்ணாக காட்டப்பட்டிருந்தாலும், பணத்துக்காக எதையும் செய்யும் பெண்ணாக (ஆங்கிலத்தில் gold digger அல்லது பிரஞ்சு மொழியில் demimondaine என்பார்கள்)  பெலிசிட்டியை இந்த கதை கொண்டு செல்வது போல அமைத்திருக்கிறார்கள். ஆனால் அழகும்  புத்திசாலித்தனமும் ஒருங்கே அமைந்த ஒரு பெண் அதை மூலதனமாக உபயோகித்துக் கொள்ளலாம் எனும் சிந்தனையில் விளைந்த கதையாக தான் என்னால் பார்க்க முடிந்தது. 

    சரியா தப்பா என்ற விவாதம் இன்னும் நீண்ட விளக்கங்களுடனும், ஒழுக்க நெறி குறித்த பிரசங்கங்களுடனும் இன்னும் நீளமாக சொல்ல முடியும் ஆனால் கதாசிரியர் 53 ஆம் பக்கத்தில் ஜுவானை வைத்து ஓரிரு வரியில் முடித்து விடுகிறார்.

    " நாட்டின் முக்கால்வாசி மக்கள் நாளொன்றுக்கு இரண்டு டாலர்கள் சம்பாதிக்க அல்லாடிக் கொண்டிருக்கும் பொழுது உன்னிடம் இருக்கும் செல்வம் அளப்பரியது தானே?" 

    என்று கேட்பது போல் நியாய தர்மங்களை கதாசிரியர் அலசுகிறார்.

    கொலைக்கு அஞ்சாத பாதகி என்று ஆரம்பம் முதலே கட்டமைக்கப் பட்டிருந்தாலும், தன்னை ஆபத்துக்கு உள்ளாக்காத ஒரு புரட்சி வீரனை சுட்டுத்தள்ளி கொல்ல அவள் தயங்குவதில்லை இருந்தே, அவள் மீதிருந்த வெறுப்பு காணாமல் போகிறது. 

    பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் எனும் மனப்பான்மை பெரும்பாலோரிடம் உண்டு, ஆனால் பணம் மட்டுமே எதையும் சாதிக்காது. அதிகாரம் புகழ் இவையும் உடனிருந்தால் மட்டுமே எந்த வித தொல்லையும் இல்லாமல் வாழ முடியும். அப்படி உங்களிடம் பணம் இருக்கிறது ஆனால் அதிகாரம் மற்றும் புகழ் இல்லையென்றால் இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக் கொள்வது உத்தமம். 

    அதிகாரம் எதையும் வளைக்கும் திறமை கொண்டது என்பதை கடைசி வரை பெலிசிட்டி உணர்ந்துக் கொள்ள தவறுகிறாள். அவளது வாழ்க்கையின் 54 பக்கங்களை மட்டுமே இந்த கதையில் நமக்கு முன் வைக்கிறார்கள். ஆனால் அதிலேயே FBI இடம் இருந்து தப்பித்து, தங்கி இருந்த ஹோட்டல் மேனேஜரிடம் அடிபட்டு, ஜுவானிடம் மாட்டி, ஜுவானிடம் இருந்து ஆர்டிஸ்சிடம் சிக்கி, கடைசியில் புரட்சிப்படையின் புண்ணியத்தில் சிறையில் சிக்கி பழிவாங்க காத்திருக்கும் பெலிசிட்டி தனக்கான அதிகாரத்தை கைப்பற்ற தவறுவதை வைத்துப் பார்க்கும் பொழுது, கொஞ்சம் அறிவும் இருந்திருந்தால், இந்த அம்மணி இந்நேரம் எந்த நாட்டுக்கோ பிரசிடெண்ட் ஆகியிருக்க கூடிய அனைத்து தகுதிகளும் கொண்டவளாகி இருப்பாள்.

    ஆனால் ஒரு மைனாவை கூண்டுக்குள் அடைத்து வைக்க முடியாதே. பிரசிடெண்ட் எனும் பதவி மட்டும் சுதந்திரத்துடனா வருகிறது. அதுவும் ஒரு வகை சிறை வாழ்க்கை தானே என்ற எண்ணமும் அவளிடம் இருந்திருக்கலாம். வாழ்க்கையோடு மஞ்சு விரட்டில் ஈடுபட்டிருந்த மைனா தான்  அடைக்கப்பட்டிருக்கும் கூண்டுக்குள் இருந்து வாடிவாசல் வழியாக வெளியேறும் அந்த அற்புத தருணம் மீண்டும் அமையுமா? தொற்றுப் போனவளாக பெலிசிட்டி இருக்கப் போவதே இல்லை, அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் XIII எனும் கற்பனா உலகில் ஒரு ராணியாக உலா வருவாளா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக கதை முடிந்த பின்னும் என் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கிறது.

    கதை தேர்வுக்கும், மொழியாக்கத்துக்கும் ஒரு ராயல் சல்யூட். சென்சாரில் கத்தரி ஒரு சில இடங்களில் தெரிந்தாலும் மேக்கிங்கில் அதை உறுத்தாமல் செய்திருப்பது சிறப்பு. ஓவியம் SIMPLY AWESOME.

    கதை - 10/10

    ஓவியம் - 10/10

    மேக்கிங் - 10/10

    ReplyDelete
  54. *ஜன்னலோரமாய் மரணம்*

    ரியோ டி ஜெனிரோவில் ஆரம்பிக்கும் கதை சிகாகோவில் முடிவடைய, ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத செயல்கள் அறுந்து தொங்கும் சங்கிலியின் தடம் பிடித்து ரூபின் சாதிப்பது கலக்கல். 

    சொதப்பல் திலகமாய் ஒரு அப்ப்ரண்டிஸ் கொலையாளி, அவர் விட்டு செல்லும் தடயங்களின் கால்தடம் பிடித்து சம்மந்தமே இல்லாத தொடர் குற்றங்களின் மூலமாக குற்றவாளியை கடைசியில் பிடிப்பது அருமை. 

    சொதப்பும் காவல் அதிகாரிகளை வறுத்தெடுக்கும் கேப்டன்களை எத்தனையோ கதைகளில் பார்த்துள்ளோம். ஏன் ஸ்பூன் அண்ட் வைட் கதையில் அவர்கள் தண்டனை பெறுவதை கூட பார்த்திருக்கிறோம். இங்கோ ரூபின் அந்த உயரதிகாரியை டீல் செய்யும் விதம், ஆஹா... செய்யும் வேளையில் திறமையிருந்தால் கேப்டன்கள் எந்த தவறையும் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வேளை பெண் என்றால் பேயும் இறங்குமாமே, கேப்டன்கள் எம்மாத்திரம் என்று நீங்கள் நினைத்தால் ஏஜென்ட் ராபின் கதைகளை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வேன்.

    ஒரே ஒரு சில்லறை திருடனால், எத்தனை குற்றங்களை (போலி லைசன்ஸ் பிளேட் செய்து கார் ஓட்டுதல், போலீஸ் கையகப்படுத்தும் வண்டிகளில் உள்ள பாகங்களை திருடுதல், துப்பாக்கி முனையில் கொள்ளை, ஹிட் அண்ட் ரன் எனும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் செல்வது, பார்க்கிங்கில் விடப்படும் கார்களை உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விடும் செக்யூரிட்டிகள், நிர்வாண போட்டோகிராபி, பர்னிச்சர்களை திருடும் கும்பல்) ரூபின் கண்டுபிடிக்கிறாள் என்று கதையை சிரிப்பு மழையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள். கடைசியில்  ரூபினை சீருடையில் வைத்தது அவளையே கலாய்த்து  அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
  55. ரூபின் கதைகளில் ஈர்ப்பது.வெறும் குற்றம் ,குற்றம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமல்லாது கதாபாத்திரங்களின் அன்றாட வாழ்க்கையும், குடும்பப் பிண்ணணியும்கதை நிகழ்வுகளோடேபயணிப்பதுதான்.நமக்கு முற்றிலும் மாறுபட்ட மேற்க் கத்திய வாழ்க்கை முறை சுவாரஸ்யமாக கூறப்படுகிறது .

    ReplyDelete
    Replies
    1. அதிலும் எமனுக்கே அடங்காதவர்கள் எனும் சுய பகடிகள் செம சார்

      Delete
  56. இம்மாதத்து ரூபின் ஸகுவாரோ இருவருக்கும் 2026அட்டவணையில் கூடுதல் ஸ்லாட் கள் ஒதுக்கவேண்டும்

    ReplyDelete

  57. ஜன்னல் ஓரமாய் மரணம்

    மின்னல் பாய்ந்தது போல் ஒரு தருணம்.🌹

    ரூபின் கதைகள் ஆரம்பத்திலிருந்தே அலப்பறை செய்துதான் வருகின்றன.

    அம்மணி ஆனைகளையே வாரி செல்லும் காட்டோடை. சிகாகோ காவல் சீருடையில் ஒரு லேடி டெக்ஸ். தாவரங்களில் மாமிச பட்சிணி போல் பெண்மை மேலோங்கி இருப்பிலும் ஆணைப் போல் ஆட்டம் போடும் அர்த்தநாரி.
    கடமைக்கு தடைபோடும் சிகப்பு நாடாக்களை உருவி வீசி எறிந்து செல்வதில் சின்னதொரு செகுவேரா.

    ரூபின் கதைகளில் மிகவும் பிடித்தது கதையோடு இழையோடும் அற்புதமான நகைச்சுவை.

    ஜாக்கி சான் நடிக்கும் படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகளில் கூட நகைச்சுவை அற்புதமாய் இழையோடும். ரூபினின் இந்த கதை ஆக்சன் கதையா நகைச்சுவை கதையா என்று சந்தேகம் வரும் அளவுக்கு ஹியூமர் பின்னி பெடல் எடுக்கிறது.

    படங்களாகட்டும் வசனங்கள் ஆகட்டும்..... புன்னகையும் குபீர் சிரிப்பும் பொங்கி வருகின்றன.

    உதாரணம் பக்கம் 10

    டார்லிங்!!! அப்படியானால் நம்மளோட ஐந்து வருட திருமண வாழ்க்கை???( விழுந்து விழுந்து சிரித்த இடங்களில் ஒன்று)

    வசனங்கள் எழுதிய சுகன்யா மேடத்திற்கும் எடிட்டர் சார் அவர்களுக்கும் ஒரு இனிப்பு டப்பா பரிசாக விரைவில் அனுப்பப்படும்.

    9.5/10

    ReplyDelete
    Replies
    1. கிடைத்த இடத்திலெல்லாம் சிக்ஸர் அடித்துள்ளார்கள்..

      Delete
    2. //அம்மணி ஆனைகளையே வாரி செல்லும் காட்டோடை. சிகாகோ காவல் சீருடையில் ஒரு லேடி டெக்ஸ். தாவரங்களில் மாமிச பட்சிணி போல் பெண்மை மேலோங்கி இருப்பிலும் ஆணைப் போல் ஆட்டம் போடும் அர்த்தநாரி.
      கடமைக்கு தடைபோடும் சிகப்பு நாடாக்களை உருவி வீசி எறிந்து செல்வதில் சின்னதொரு செகுவேரா//

      மிக அருமையா சொல்லி இருக்கீங்க சகோ

      Delete
  58. இவ்வருட டாப் 10 லிஸ்ட்டில் இப்பொழுதே இடம் பிடித்துவிட்டார் ரூபின்

    ReplyDelete
  59. நிழல் ஓநாய்கள்— கதையின் முடிவு, அந்த சிறுவனை தனது செவிந்திய ஆசானிடன் கூட்டி செல்வாரா, நாயகன் ஆரம்ப காலத்தில் நடந்தது என்ன தனது பணிபுரியும் காலத்தில் என்ன நடந்தது என்பதை படிக்க மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன்.

    அட்டகாசமான அறிமுகம்.

    ReplyDelete
  60. ஆண்-1 : ஓ போற்றிப் பாடடி பொண்ணே...
    சௌந்தரார் நினைவடி முன்னே....
    காமிக்ஸ் திசை கண்ட முன்னோர் இவர்தான் ஹோய்...
    தமிழில்கதை சேர்த்த
    கந்தர் மகன்தான் ஹோய்...

    போற்றிப் பாடடி பொண்ணே...


    சௌந்தரார் நினைவடி மண்ணே....

    ***


    ஆண்குழு : என்ன சொல்ல காமிக்ஸ் வளம்....
    டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
    நம்மவங்க கண்ணில் படும்
    டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
    என்ன சொல்ல காமிக்ஸ் வளம்
    நம்மவங்க கண்ணில் படும்
    அந்த கதை இப்ப உள்ள
    சந்ததிங்க கேட்க வேணும்
    நம்முயிர்க்கு மேல படக் கதைதானே
    இரும்புக்கை இருந்தாலே வாங்கி ரசித்தோமே
    பிறறெல்லாம் வந்தாங்க
    வந்தவழி போனாங்க
    குணத்தால் மனத்தால் முத்து லயன் வி'ன்னானாங்க


    பெண்குழு : ஓ போற்றிப் பாடடி பொண்ணே...
    சௌந்தரார் நினைவடி முன்னே....
    காமிக்ஸ் திசை கண்ட முன்னோர் இவர்தான் ஹோய்...
    தமிழில்கதை சேர்த்த
    கந்தர் மகன்தான் ஹோய்...

    போற்றிப் பாடடி பொண்ணே...


    சௌந்தரார் நினைவடி மண்ணே....

    ***


    ஆண்குழு : முன்னோருக்கு
    முன்னோரெல்லாம்.....
    டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
    இன்னாருன்னு கண்டு கொள்ள
    டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
    முன்னோருக்கு முன்னோரெல்லாம்
    இன்னாருன்னு கண்டு கொள்ள
    ஏடெடுத்து எழுதி சொல்ல
    ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
    முத்தலைமுறையின் கதைக்களந்தான்
    முத்து லயன் விபலந்தான்
    எக்காலமும் வாழ்த்து சொல்லும்
    இவங்களுக்கு எக்காளம்தான்
    தமிழாலே அழகாக்கி ஆணைமேல அம்பாரி
    கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்


    பெண்குழு : ஓ போற்றிப் பாடடி பொண்ணே...
    சௌந்தரார் நினைவடி முன்னே....
    காமிக்ஸ் திசை கண்ட முன்னோர் இவர்தான் ஹோய்...
    தமிழில்கதை சேர்த்த
    கந்தர் மகன்தான் ஹோய்...

    போற்றிப் பாடடி பொண்ணே...


    சௌந்தரார் நினைவடி மண்ணே....

    ReplyDelete
    Replies
    1. அருமை ஸ்டீல் சகோ

      Delete
    2. கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்// செம வரிகள்

      Delete
  61. ஒற்றைக்கண் மர்மம்....அட்டைப்படம் நேரில் பளபள....திறந்ததும் தந்தையார் புகைப்படம் நினைவுகளில் கரைய.....அவர் கொணர்ந்த மாயாவி தூண்களாய் பின் அட்டை படத்தின் இருபுறங்களிலும் விளம்பர மாய்...பறக்கும் பிசாசம் ப்ளாக் மெயிலுமாய்....இருவண்ணக்கதைகளாய் நினைவை தூண்டி அதே அட்டைப்படங்களாய் இரு கண்களால் காட்சி தர ஏங்க வைத்த கதைகளுக்காய் காத்திருக்கிறோம்...ஒற்றைக்கண் மர்மம் முதன்முதலாய் பார்க்கிறேன்...வண்ணத்தில் லார்கோ....பதிமூனயே தூக்கிச் சாப்பிட...இதழ் வடிவமைப்பு என சகலத்திலும் டாப்பாய் இவ்விதழே...தந்தையாருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமாய்...வண்ணமாய் அட்டகாசமாய் ஜொலிக்கிறது....வாழ்த்துக்கள் மற்றும் அஞ்சலிகள் சார்...மாயாவி போல மறைந்திருந்து நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் அவருக்கும் நன்றிகள் இக்கதைய தேடிப்பிடித்தமைக்கு....அவ்விரும்புக் கைக்கு

    ReplyDelete
  62. ஒற்றைக்கண் மர்மம்.தமிழ் காமிக்ஸ் பிதாமகருக்கு அற்ப்புதமான ட்ரிபியூட் ஆக அமைந்துவிட்டது.அற்ப்புதமான கலரிங் . கதையில் எங்கும் பழமை நெடி அடிக்கவில்லை .விறுவிறுப்பாக உள்ளது..ஒற்றைக்கண் மர்மம் திருப்தி.

    ReplyDelete
    Replies
    1. // ஒற்றைக்கண் மர்மம்.தமிழ் காமிக்ஸ் பிதாமகருக்கு அற்ப்புதமான ட்ரிபியூட் ஆக அமைந்துவிட்டது. // உண்மை. புத்தகம் அட்டகாசமாக உள்ளது. கலரிங், தயாரிப்பு தரம் அருமை

      Delete
  63. வேற்று கிரக வாசிகள் குறித்து மனித இனத்துக்கு என்றுமே ஒரு ஈர்ப்புண்டு. காலம் காலமாய் பூமி மட்டுமே தனியாக உயிர்கள் வாழும் ஒரு உலகமாக பார்ப்பதற்கு அஞ்சுகிறான் மனிதன். மனிதன் ஒரு சமூக மிருகம். மனிதனுக்கு ஒரு கூட்டத்தோடு வாழ்வதே பிடித்தமான காரியம். ஆகையால் இந்த பரந்த அண்டவெளியில் பூமி என்ற ஒரே ஒரு உலகம் மட்டுமே உயிர்கள் கொண்டது என்பதை அவன் நம்ப மறுக்கிறான். நம்புவதற்கு ஏதும் ஆதாரங்கள் இல்லாததால், அவனது கற்பனைக் குதிரையின் பாய்ச்சல் எப்படி எப்படியோ உள்ளது. சமீபத்தில் நம் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் வேற்று கிரக வாசிகளாக இருக்க வாய்ப்புள்ளதா என்று ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் இறங்கி உள்ளதாக படிக்க நேர்ந்தது. அப்படி பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரமாக ஒரு வேற்றுகிரகவாசி கூட்டம் மனித இனத்தை ஆய்வு செய்ய வருவதும், அதை இரும்புக்கை மாயாவி தோற்கடித்தாரா (ஹீரோ தோற்றதா சரித்திரம் இல்லியே) அல்லது அந்த முயற்சியில் என்னென்ன சோதனைகளை சந்தித்தார் என்பதே கதை.  ஒரு மசாலா கதைக்கு உண்டான அனைத்து இலக்கணங்களையும் கொண்டுள்ள கதையில், ஒரு ஆக்ஷன் மேளாவை மட்டுமே எதிர்பார்க்க இயலும்.

    *ஒற்றைக்கண் மர்மம்* 

    காமிக்ஸ் உலகின் பிதாமகருக்காக வெளியிட்ட சிறப்பிதழ் அட்டகாசமாக வந்துள்ளது. முதல் பக்கத்தில் சௌந்தரபாண்டியன் அய்யாவின் புன்முறுவலுடன் கூடிய முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். இனிவரும் ஆண்டுகளில் மார்ச் 27 என்பதை காமிக்ஸ் நாளாக கொண்டாடுவோம் என்று எடிட்டர் கூறிய பிறகு நான் மண்ணில் புதைக்கப் பட விரும்பவில்லை மாறாக விதைக்கப்பட விரும்புகிறேன் என்று கூறிய ஒரு கவிஞனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. An apt tribute for the legend who had introduced steel claw to us.

    கதைக்கு வருவோம். எத்தனையோ ஏஜெண்டுகள் தங்களுக்கு கொடுத்த பொறுப்பை செய்து கொடுத்த பின் ஓய்வுக்கு எங்காவது செல்வார்கள். செல்லுமிடத்திலும் ஒரு ஏழரையை கட்டிக் கொண்டு ஓய்வு எடுக்க முடியாமல் திணறுவார்கள். அப்படி ஒரு கதை தான் இதுவும். 

    சும்மா சொல்லக்கூடாது கதையை படபடவென்று நகர்த்திக் கொண்டு சென்றுள்ளார்கள். மேக்கிங் அருமை, மொழியாக்கமும் வழக்கம் போல கலக்கி விட்டார்கள். ஒரு 30 நிமிடங்கள் அனைத்தையும் மறந்து, ஒரு விந்தையான உலகில் உலா வர ஏதுவான புத்தகம். 

    கதை 9/10

    ஓவியம் 9/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
  64. இன்று பதிவுக் கிழமை சார்

    ReplyDelete
    Replies
    1. சார் இன்று பதிவுக் கிழமை...

      Delete
    2. ஒரு வாரமா காத்திருக்கிறேன் சார்

      Delete
    3. //ஒரு வாரமா காத்திருக்கிறேன் சார்//

      ஆமாங்க ஆமா

      Delete