Powered By Blogger

Sunday, March 26, 2017

மாற்றங்கள் தொடர்கதை தானா ?

கூட்டாளிகளா,

வணக்கம் வைக்குறேன் !! இப்போ இன்னா சொல்ல வரேன்னா....தூத்தேறி...மறந்து போச்சே !! இன்னாமோ உருப்படியா சொல்ல நினைச்சுகினே வந்திட்டிருக்கப்போ இந்த இழவெடுத்த ஞாபக மறதி சும்மா உசிரே வாங்குது ! ஆங்...செரி.....மேட்டருக்கே வாரேன் லைன்னா !! 

Hold on guys !!! தவறான வலைப்பக்கத்துக்குள் நுழைந்து விட்டோமோ என்ற பீதியோ ; கோடை வெயிலுக்கு அதற்குள்ளாகவே ஒரு சேதாரமா ? என்ற பயமோ அனாவசியம் !! ஏப்ரல் மாதத்தில் தற்செயலாய் அமைந்து போன்றதொரு கதைக் கூட்டணியானது, அநியாயத்துக்கு கரடு முரடான ஸ்கிரிப்ட்டுடன்ஒட்டு மொத்தமாய்ப் போட்டுத் தாக்க, கடந்த 10 நாட்களாய் அவற்றோடு குப்பை கொட்டியதன் பலனாய் - வாயைத் திறந்தாலே கூவம் போல் மணக்கிறது !! ஏற்கனவே பதிவிட்டிருந்தது போல ஹெர்மனின் ஜெரெமியா கதை ரொம்பவே லோக்கலான இரு பசங்களின் பயணக் கதை !! பற்றாக்குறைக்கு இந்தக் கதைகளை ஹெர்மன் உருவாக்கிய  சமயம்  (1978) - அவர் கதாசிரியர் க்ரெக்குடன் லேசான மனத்தாங்கலில் இருந்தாராம் ! (கமான்சே கதைகளுக்கு ஹெர்மன் + கிரெக் கூட்டணி இணைந்து இயங்கி கொண்டிருந்த வேளை அது !! ) என்னாலும் சொந்தமாய்க் கதை எழுதி,  ஒரு கதாசிரியரின் ஆற்றலும் எனக்குள் உள்ளதென்று  நிரூபிக்க ஹெர்மன் முனைப்பாக இருக்க - அவரது டயலாக் வரிகளில் நிறைய நையாண்டி ; குதர்க்கம் என்று விரவி இருப்பதை நெடுக பார்க்க முடிந்தது !! And ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணி கொண்ட மனுஷன் இவரென்பதை அந்த 136 பக்கங்களிலும் புரிந்து கொண்டேன் !! So சுத்தமாய் முதுகெலும்பைக் கழற்றித் தந்த கதைக்குள் கடப்பாரை நீச்சல் அடித்ததில்   எனக்குள்ளும் லேசாக தலைதூக்கிய மிஸ்டர் கடுப்ப்ஸ் - எனது வரிகளிலும் பிரதிபலிப்பது போல் தோன்றியது !!

சரி, இது தான் இப்படி என்று நமது சுட்டிக் . குட்டிப் பயல் பென்னியின் பக்கமாய் கொஞ்சம் ஒதுக்கினால் - அவன் சந்திக்கும் Ms .அட்டகாசமோ ஒரு ராங்கி ராணி !! அங்கேயும் லைட்டாக கச்சா-முச்சா பாஷை சடுகுடு ஆட - இறுதியாய் இரவு கழுகாரிடம் தஞ்சம் புகுந்தேன் !! இந்தாண்டின் முதல் சிங்கிள் ஆல்பம் என்பதால் 100 பக்கங்கள் மாத்திரமே ; அதுமட்டுமன்றி - கதையும் ஒருவிதத்தில் குழப்பங்களின்றித் தெரிந்ததால் கடைசி நேரத்தில் எழுதிக் கொள்ளலாம் என்ற மெத்தனத்தில் இருந்தேன் !! ஒரு வழியாக ஜெரெமியாவில் எனது பணிகளுக்கு "சுப மங்களம்" போட்டான பின்னே - "ஒரு வெறியனின் தடத்தில்" புறப்பட்டால் - கொஞ்ச நேரத்துக்கு மெர்ஸெல் ஆகிப் போனேன் !! ரொம்பவே ஆரவாரமான கதைக் களம் ; "சிங்கம் - சிங்கிளாத் தான் வரும் !!" என்பதற்கு அக்மார்க் உதாரணமாய் கதை நெடுக தனி ஆவர்த்தனத்தில் அதகளம் பண்ணும் TEX ; செம fresh ஆன புதியதொரு ஓவிய பாணி என்று கதை பட்டையைக் கிளப்பியது ! ஆனால் highlight அத்தோடு முடிந்திடவில்லை !!! கதையில் தலை காட்டுமொரு முதியவர் வாயைத் திறந்தாலே சும்மா கூவம் தோற்றது போங்கள் !! கதையின் முழுமையும் இந்தப் பெரியவரைச் சுற்றியே ஓடிட, அவருக்குப் பேனா பிடித்ததில் என் பேனாவே பேஜாராகிப் போச்சு !! So ஒரு வித்தியாசமான கதை கூட்டணியில், ஒரு வித்தியாசமான ஒற்றுமை இந்த ஏப்ரலை எனக்கும், உங்களுக்கும் பரபரப்பாக்கிடவுள்ளது என்பதே தலைப்புச் சேதி !! 

And இதோ - இந்த இதழ்களின் அட்டைப்படங்களும் ; உட்பக்கங்களும் டிரைலர்களாய் !! ஆட்டத்தை ஆரம்பித்து வைப்பது பொடியன் பென்னி !! வழக்கம் போல - இங்கே ஒரிஜினல் டிசைனையே நாம் பயன்படுத்திட வேண்டுமென்ற படைப்பாளிகளின் கண்டிஷன் அமலில் இருப்பதால்  - மூச் காட்டாமல் எழுத்துக்களை மட்டும் இணைத்து விட்டு ராப்பரை ரெடி செய்து விட்டோம் !! So இன்னமும் கொஞ்சம் நகாசு வேலைகள் பார்க்க ஆசை இருப்பினும் , no ஆணி புடுங்கிங்ஸ் என்று தீர்மானித்தோம் !! 
உட்பக்கத்திலிருந்தும் இதோவொரு டீசர் !!
இந்த 64 பக்க இதழைக் கையில் ஏந்தும் போது உங்களின் நார்மலான காமிக்ஸ் எதிர்பார்ப்புகள் ; "இன்ன மாதிரி இன்ன மாதிரி கதை ஓட வேண்டும் ; இந்த ரீதியில்  கிளைமாக்ஸ் அமைய வேண்டும்..இத்யாதி..இத்யாதி  !!" என்ற சிந்தனைகளை முடிந்தமட்டிற்கும் ஓரங்கட்டி விடுங்களேன் - ப்ளீஸ் !! இது நம்முள் ஒரு ஓரமாய்ப் பதுங்கி கிடக்கக் கூடிய மழலைத்தனத்தை அசாத்தியமாய்த் தட்டி எழுப்பும் ஆற்றல் கொண்ட கதை !! பென்னியோடு நாமும் பால்யங்களுக்குள் புகுந்து விட்டால் இந்த இதழானது கலப்படமில்லா குதூகலத்துக்கு உத்தரவாதம் !! TINTIN பாணியினை நினைவூட்டும் சித்திரங்கள் ; அதே classy வர்ணச் சேர்க்கைகள் ; கண்ணுக்கு இதமானபக்க அமைப்புகள் என நான் செம ஜாலியாய் ரசித்துப் பணியாற்றிய இதழிது !! பல்செட் கட்ட வேண்டிய வயதுக்காரர்களுடன் விடாப்பிடியாய் நமது பால்யங்களை வலம் வந்தே தீருவோம் என்று பிடிவாதம் காட்டும் நாம் - அதே பால்யங்களை - சற்றே மாறுபட்ட ரூட்டில் மறுவிசிட் அடித்துத் தான் பார்ப்போமே ? பென்னி - ஜாலிச் சூறாவளி !!

சூறாவளி என்ற உடனே ஒரு மஞ்சள்சட்டைக்காரரை நினைவு கூராது போவது சாத்தியமாகுமா ? இதோ ஏப்ரல் டேஸ் கோட்டாவின் அட்டைப்பட முதல் பார்வை !!
மிரட்டும் பணிமண்டலமே இந்தக் கதையின் முழுமைக்கும் பின்னணி என்பதால் நமது ஓவியரின் சகாயத்தோடு டெக்ஸுக்கு ஒரு தடிமனான கோட் வழங்கியுள்ளோம் !! ஓவியரின் டிசைனை சற்றே improve செய்ய முனைவது நமது டிசைனரின் முயற்சி !! பின்னட்டை நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணம் !  ரொம்பவே  வித்தியாசமான சித்திர பாணிகொண்ட இந்தக் கதைக்கு பின்ராப்பர் ஒரு சின்ன டிரைலர் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! And இதோ அந்த black & white சித்திர பாணிக்கொரு சாம்பிள் :
இந்த சாகசத்தில் கார்சன் உடனில்லை எனினும், அந்தப் பெரியவரின் அதிரடி இருப்பு - கதைக்கு ஒரு நெருப்பைத் தருவது போலுள்ளது !! எல்லா பாணி TEX கதைகளையும் முயற்சித்த திருப்தி கிட்டட்டுமே என - நம்மவரின் solo சாகஸத்தைத் தேர்வு செய்தது நிச்சயம்  தவறில்லை என்று தோன்றுகிறது  !!  சிம்பிளான கதை அரங்கே - ஆனால் அதைச் சொன்ன விதமும், கதைக்கு நல்கியுள்ள ஸ்பீடையும் பார்த்து வாய் பிளக்காது இருக்க முடியவில்லை தான் !! அசாத்தியமானவர்கள் இந்தப் படைப்பாளிகள் !!

மெயின் பிக்சர் ஆச்சு ; இனி காத்திருப்பது மறுபதிப்பின் முன்னோட்டமே !! பூப்போட்ட ஸ்கார்பும், அண்டராயரும் டிரேட்மார்க்காய்க் கொண்ட நமது ஆதர்ஷ ஜானி நீரோவே இம்மாத மறுபதிப்புக் கோட்டாக்காரர் ! இதை எழுதுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தான் அந்தக் கதையினைத் திருத்தும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன் என்பதால் இன்னமும் கெக்கே-பிக்கே ஓயவில்லை முழுமையாய் !! இதோ கொலைக்கரம் இதழின் அட்டைப்பட first லுக் !!
சமீப வழக்கப்படி இந்த மறுபதிப்புக்கும் நமது ஓவியரின் கைவண்ணமே - ஸ்டெல்லாவையும் அட்டைப்படத்தில் இணைத்து !! ஜானி நீரோவை நேராக வரைந்தால் தானே வம்பாகிப் போகிறது நம் ஓவியருக்கு - 'சிவனே' என்று குனிந்த தலை ஸ்டில்லைத் தேர்வு செய்து விடுவோம் என்று மகா சிந்தனை எழுந்தது அடியேனுக்கு ! தலை தப்பிக்கிறதா ? என்பதை நீங்கள் தான் சொல்லிட வேண்டும் !! "கதை"யைப் பொறுத்தவரை ....அதாவது, அந்தக் கதை இருக்கே ; ஆங்....இருக்கு..இருக்கு..கதை இருக்கவே இருக்கு....அது வந்து கழுத்தை ஒரே திருகாய்த் திருகி எதிரிகளை  போட்டுத் தள்ளும் ஒரு மெகா வில்லனை நம்மவர் போட்டுத் தாக்கும் சாகசமிது !! சொல்லப்போனால் - எனது பால்யங்களில் நான் ரொம்பவே ரசித்த கதையிது ! ஜானியின் குரவளையை வில்லன் நெரிக்க முற்படும் கட்டங்களில் வயிற்றில் பீதி பந்து சுருண்டதெல்லாம் நினைவுள்ளது !! ஆனால் இன்றைக்கு அதையே படிக்கும் போது பேந்தப் பேந்தத் தான் முழிக்க தோன்றுகிறது !! ஆண்டவா !! இதைத் தான் காலமாய் சிலாகித்தோமா ? என்ற கேள்வி ஜிங்கு ஜிங்கென்று ஆடுகிறது என் முன்னே !! Oh yes ...அற்புத ஆர்ட்ஒர்க் உள்ளது ; குழப்பமிலா கதையோட்டம் தான் !! ஆனால் ...ஆனால்...ஆனால்...!! சரி..விட்டுவிடுவோம்  !! இந்தப் பதிவின்  thuvakkathil கொப்பளித்த பாஷை மறுபடியும்  எட்டிப் பார்த்துத் தொலைக்கப் போகிறது !

Before I sign off - இப்போதைக்கு எனக்குள் விரவி நிற்கும் இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்களேன் guys ? இன்னும் இருப்பதோ-முப்பதோ ஆண்டுகளுக்குப் பின்பாய் நாமிப்போது சிலாகித்து ரசிக்கும் கதைகளுமே இதே போல 'கெக்கே-பிக்கே' சிரிப்பினை உருவாக்கிடுமா ? "இதையாடா சாமி அன்றைக்கு ரசித்தோம் ?? "என்று ஒரு தூரத்து பொழுதில்  நாமும் புருவங்களை உயர்த்தத்தான் செய்வோமா ? ரசனைகள்  நம்மைச் சூழ்ந்துள்ள உலகினையும் சார்ந்ததே எனும் பொழுது இந்த மாற்றங்கள் தவிர்க்க இயலா நியதி தானா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

 Bye all for now !! See you all on Sunday !!

P.S : இந்த வாரம் பணிகளின் சுமை தாக்குப் பிடிக்க இயலா அளவில் இருந்த காரணத்தினால் போன வாரத்துப் பதிவில் தலை காட்ட இயலவில்லை !! தினமும் தூங்கப் போகும் வேளையில் கூர்க்கா விசில் சத்தமே என்னைத் தாலாட்டி வந்துள்ளது இந்த வாரத்தின் முழுமைக்கும் !! So  முந்தய பதிவில்  நீங்கள் எழுப்பியிருக்கக் கூடிய கேள்விகளை சிரமம் பாராது இங்கேயும் பதிவிடுங்களேன் - ப்ளீஸ் ? நிச்சயம் பதில் தர முனைவேன் !!! Sorry guys !! 

362 comments:

  1. காமிக்ஸ் நண்பர்கள் அனைவர்களுக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. no 6 படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  3. சார்...இம்மாத புத்தகங்களை என்றைக்கு எதிர்பார்க்கலாம்?

    ReplyDelete
  4. இம்மாத கதைகளுக்கான மெனகெடல் நன்றாக தெரிகிறது! பெரும்பாலோரின் அலுவலக மார்ச் பரபரப்பு தங்கள் பணியிலும் தொடர்வது உணர முடிகிறது.

    ReplyDelete
  5. //இந்த மாற்றங்கள் தவிர்க்க இயலா நியதி தானா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?
    //
    அனைத்தையுமே அப்படி சொல்லிவிடமுடியாது என்பது என் கருத்து எடிட்டர் சார்!! 20/25 வருடங்களுக்கு முன் படித்த டெக்ஸ் மற்றும் டைகர் இன்றும் அடேங்கப்பா ரகமாக உள்ளனவே!!!

    ReplyDelete
    Replies
    1. காலத்தை வென்றும் சில படைப்புகள் அமைவது இயற்கை.போற்றுதலுக்குரிய அமர காவியங்களை உருவாக்குவதே அனைத்து துறை சார்ந்த கலைஞர்களின் இதய நாதமாக இருக்கும். இந்திய தேசத்தினுடைய இதிகாசங்களை மிக எளிதாக அடையாளப்படுத்த முடியும்.சித்திர கதை வடிவத்திலோ;அனிமேசன் தொழில் நுட்பத்திலோ இது மிக திறமையாக எடுத்தாளப்பட்டால் உலகம் நமது தேசத்தை பெருமிதத்தோடு நிமந்து பார்க்கும்.ஆகும் பொருட் செலவு;ஈட்டக்கூடய வருவாயை பின்னங்களில் கணக்கிடக்கூடிய சாதாரண மனித வர்க்கம்தானே உலகத்தில் சஞ்சரிப்பது.

      Delete
  6. டியர் சார் போன வருடம் முதலே நம்பர் 400 தாண்டிய டெக்ஸே நம் தமிழ் கதைகளில் பயணிக்கிறார் !!????

    இத்தாலியின் கதைகளின் முதல் 120 க்குள் வந்த கதைகளை நீங்கள் தமிழில் வெளியிடும் நாள் எப்போது வரும் ??

    வருமா ?? வராதா ?? (தெளிவான பதில் தேவை)

    (இதற்கு முன் நீங்கள் வெளியிட்ட கதைகள் இதில் சேராது )

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath: அராஜகம் unlimited - இதழ் # 107 & 108

      Delete
    2. @ லயன் காமிக்ஸ்

      சரியான தகவல், கூடவே வெளிவந்த வருடம் இத்தாலி கதையின் பெயர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.!

      இரண்டு பாகங்களாக வெளிவந்த 'அராஜகம் அன்லிமிடெட்'
      முதல் பாகம்>>>>செப்டம்பர்-1969 ம்
      இரண்டாம் பாகம்>>>>அக்டோபர்-1969 ல் வெளிவந்தது.!

      முதல் பாக அட்டை பார்க்க...இங்கே'கிளிக்'

      இரண்டாம் பாக அட்டை பார்க்க...இங்கே'கிளிக்'

      ஒரு சின்ன டவுட் : Lion Comics <<<< இந்த id க்கும் நம்ம லயன் ஆபிசிக்கும் ஏதும் தொடர்பிருக்கா..??? அல்லது வாசகரின் ID யா..???

      Delete
    3. mayavi.siva : //Lion Comics <<<< இந்த id க்கும் நம்ம லயன் ஆபிசிக்கும் ஏதும் தொடர்பிருக்கா..??? அல்லது வாசகரின் ID யா..???//

      அடியேனின் ID தான் ! போனிலிருந்து பதில் போட்ட சமயம் இந்தக் கவனிக்கத் தவறியிருந்தேன் போலும் !

      Delete
    4. Tex Sampath : //போன வருடம் முதலே நம்பர் 400 தாண்டிய டெக்ஸே நம் தமிழ் கதைகளில் பயணிக்கிறார் !!????//

      தவறான கருத்து !

      நீதிக்கு நிறமேது ? - # 210

      துரோகத்துக்கு முகமில்லை - 287 & 288

      ஆவியின் ஆடுகளம் # 301 & 302

      காத்திருக்கும் - "கடல் குதிரையின் முத்திரை" - # 16 & 17

      கதைகளின் தேர்வு எப்போதுமே variety ; தரம் என்ற அளவுகோல்களைச் சார்ந்திருக்குமே தவிர, நம்பர்களை அல்ல !

      120 வரைக்குமான கதைகள் சகலமும் டாப் என்று யாரேனும் சொல்லியிருந்தார்களெனில் அதில் நிச்சயம் நிஜமில்லை ! நல்ல கதைகள் + சுமார் ரகம் என சரிக்கு சரி அங்குள்ளன !!

      TEX எனும் நாயகரை ஒரு புது உச்சத்துக்கு இட்டுச் சென்ற பெருமை கதாசிரியர்கள் Claudio Nizzi & Mauro Boselli வைச் சாரும் !! And இவர்கள் பணியாற்றிய / ஆற்றும் காலகட்டம் என்னவென்பதை போனெல்லி ரசிகர்கள் அனைவரும் அறிவோம் தானே ?

      Delete
    5. /// அடியேனின் ID தான் ! போனிலிருந்து பதில் போட்ட சமயம் இந்தக் கவனிக்கத் தவறியிருந்தேன் போலும் ! ///

      'ஙே'

      /// 120 வரைக்குமான கதைகள் சகலமும் டாப் என்று யாரேனும் சொல்லியிருந்தார்களெனில் அதில் நிச்சயம் நிஜமில்லை ! நல்ல கதைகள் + சுமார் ரகம் என சரிக்கு சரி அங்குள்ளன !! ///

      சோக்கா சொன்னீங்க வாத்யாரே :D

      Delete
  7. கௌபாய் ஸ்பெஷலிலும் ஓவர் கோட் உண்டே..?

    ReplyDelete
  8. படிச்சுட்டு வாரேன்

    ReplyDelete
  9. இன்னிய பதிவு படிச்சி மெர்சலாயிட் டோம்.. அ..அ..க்ங்..

    ReplyDelete
  10. டெக்ஸ் ன் ஆரம்ப காலத்து கதை களை வெளியிடுங்கள் ஆசிரியரே

    ReplyDelete
  11. டெக்ஸ் ன் அட்டை படம் மிக அருமை
    அட்டை படத்திற்க்கக ௺ங்கள் மெனக்கெடுவதை கண் கூடாக தெரிகிறத

    ReplyDelete
  12. போன பதிவிவ் ஸம்பி கதைகள் வேண்டும் வேண்டாம் என்று பெரிய விவாதம் நடந்தது ஸம்பி படங்களை நானும் அவ்வளவு விரும்பி பார்ப்பது கிடையாது.

    ஓரு நாள் night show பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அப்படி பார்த்த படம் தான் residential evil நான் பேய் படம் நினைச்சிகிட்டு தான் போனேன். ஆனால் R E ஸம்பி படம். முதற் பிரேம்மிலிருந்து கடைசி பிரேம் வரையில் விறுவிறுப்பு.

    அதேபோல Train to Busan என்ற கொரியா படம்.டைம் பாஸ்ஸில் விமர்சனம் படித்து online னில் பார்த்தேன். படம் உண்மையிலேயே மெர்ஸலாக இருந்தது. கொரியா திரைப்படம் வரலாற்றில் அதிக வசூல் செய்தது இந்த ஸம்பி படம் தான்.

    ஸம்பி கமிக்ஸா என்பது நல்ல இருக்காது என்று தோன்றினாலும். யாருக்கு தெரியும் அதிலும் residential evil மாதிரி நல்ல காமிக்ஸ் இருக்கலாம். ஸம்பி கதைகளை வெளியிட ஆசியரை அனுமதிக்கலாமே?

    ReplyDelete
  13. கொலைக் கரம் நான் விரும்பி படித்த கதைகளில் ஒன்று

    ReplyDelete
  14. "தல" டெக்ஸ் அட்டைப்படம் சூப்பர் சார்....
    காமிக்ஸ் பயணத்தில் ஒவ்வொருநாளும் நாம் தொடும் உயரம் மகிழ்வை தருகிறது....
    சித்திரங்களின் வழியே கதை நகரும் அற்புதம் அது ஒரு வானவில் வர்ணஜாலம்....

    ReplyDelete
  15. டேஞ்சர் டயபாலிக் கதை வருவதற்கு எனது ஆரவாரமான வரவேற்பு......
    கரும்பு தின்ன கூலியா....?

    ReplyDelete
  16. அட்டை படங்கள் எல்லாமே அருமையாக உள்ளது . உட்பக்க டீசர்களும் நன்றாக வந்துள்ளது. அதுவும் டெக்ஸின் சித்திரங்கள் வித்தியாசமாக நன்றாக உள்ளதாக படுகிறது .

    ReplyDelete
  17. "தல" கதையின் உள் பக்க சித்திரம் அருமையாக உள்ளது... எதிர்பார்ப்பு அதிகமாகிறது.....

    ReplyDelete
  18. ஜெராமையா படங்கள் அருமை. அனைத்து அட்டைப் படங்களும் எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. புத்தகங்கள் வரட்டும் என்று காத்துக்கிட்டுருக்கோம். இப்பவே இருபது இருபத்து ஐந்து வருஷமா படிச்சிக்கிட்டு இருக்கோம். சலிப்பே தட்டல. இன்னும் இருபது வருஷம் ஆனாலும் படிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அதையெல்லாம் ஒத்துக்க முடியாது. கால இயந்திரத்தில் எங்களையெல்லாம் அந்த காலத்துக்கே அழைச்சுக்கிட்டு போயி முத புத்தகத்திலிருந்து வெளியிடுங்க.
      படிக்காத புக்கோட லிஸ்டு இருக்குப்பா.
      அதோடு தொலைந்த புத்தகங்கள் அனைத்தும் திரும்பி கிடைக்கும்ல.
      என்னமோ போடா மாதவா.

      Delete
    2. புத்தகங்கள் வரட்டும் என்று காத்துக்கிட்டுருக்கோம்- :D Sankar ji, political comedy நியாபகம் வந்தது இந்த வார்த்தைகளில் :D :D :D

      //இப்பவே இருபது இருபத்து ஐந்து வருஷமா படிச்சிக்கிட்டு இருக்கோம். சலிப்பே தட்டல. இன்னும் இருபது வருஷம் ஆனாலும் படிப்போம்.//+1

      Delete
  19. எப்பப்பாரு மெர்சல் ஆகாத நைனா. இன்னும் எத்தினி வர்சமாநாச்சும் படிச்சிக்கினு தான் இர்ப்போம்.

    ReplyDelete
  20. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  21. வணக்கம் சார், மாடஸ்தியின் கழுகுமலைக் கோட்டை இதழ் உடனடியாக தீர்ந்து விட்டது. ஆபீசில் கேட்ட போது ஸ்டாக் இல்லை. அது மேற்கொண்டு பிரிண்ட் செய்யப்படுமா இல்லை எங்கள் அதிர்ஸ்டம் அவ்வளவு தானா. தயவுசெய்து பதில் அளிக்கவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறயாக கிடைக்கவில்லை குரல் ஒரே மாதத்தில்...

      Delete
    2. wow .... pocket size mas hit?....!

      இல்லை குறைந்த பிரிண்ட் ரன் ஆ ? இரும்பு கைதானே ரெகார்ட் ஹோல்டர் இளவரசி அவரை வெல்கிறாரா edit?

      Delete
    3. இதுக்கு தான் நாங்கள் கதை வரும் முன்பே புக் பன்னி விடுவோம். பொருமையா வங்குவதற்கு எல்லா நேரத்திலும் அதிஷ்டம் இருக்குமா? ஆசிரியர் தான் சொல்ல வேண்டும்.

      இளவரசி எதிர்பாளர் kid artinan நோட் பன்னவும்.

      Delete
    4. குறைந்த ப்ரின்ட்ரன். ஆயிரம் காப்பிகள் மாத்திரமே. சீக்கிரம் ஸ்டாக் தீர்ந்ததற்கு வேறோரு காரணமும் இருக்கிறது நண்பர்களே..!! ஹிஹி :-)

      Delete
    5. மாடஸ்டி குரலில்.

      எதிர் பாக்கலைல்ல,B/W வந்தவள் கலரில் வருவேன்னு எதிர்பாக்கலைல்ல.

      அதுவும் பாக்கெட் சைஸில் வருவேன்னு எதிர் பாக்கலைல்ல.

      கூட டஸ்ட் ஜாக்கெட்டோடு வருவேன்னு எதிர்பாக்கலைல்ல.

      மிச்சமில்லாம ஒரே மாசத்தில் விக்கும்னு எதிர்பாக்கலைல்ல.

      இந்த மாஸ்டியை,
      நியூஸ் பேபப்பர்ல பாத்திருப்பே.
      முத்து காமிக்ஸ்ல பாத்திருப்பே.
      லயன் காமிக்ஸ்ல பாத்திருப்பே. ஏன்
      அஜய் சாமி வரைஞ்சி கூட பாத்திருப்பே.
      தன்னந்தனியா நின்னு கலரில் வந்து ஜெயிச்சத பாத்திருக்கியா?
      சத்தமில்லாமல் வந்து ருத்ரதாண்டவம் ஆடி, பாத்திருக்கியா?

      M B ன்னா Modesty blaisy இல்ல
      Master of blackbuster ன்னு அர்த்தம்.

      Delete
    6. பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி என்பார்கள்.!


      ஆனால் பெருமாளே சொல்லிட்டார்.!


      பிறகு ஏது அப்பீல்.?????

      Delete
    7. Govindaraj Perumal : பின்றீங்க - பதிவுக்குப் பதிவு !

      Delete
    8. கம்பம் ஜெய்கணேஷ் : Sorry, no ! சூப்பர் 6 மட்டுமென்றில்லை ; தொடரவிருக்கும் Collector 's Editions சகலமுமே குறிப்பிட்ட printrun ; மறுபதிப்புகளின்றி - என்ற ரீதியிலேயே இருந்திடும் ! அதன் பொருட்டே முன்பதிவு செய்திடக் கோரி 6 மாதங்களாய்க் குரல் கொடுத்துக் கொண்டே வருகிறேன் !

      LUCKY CLASSICS கூட கிட்டத்தட்ட காலி !

      Delete
  22. அட்டைகளும் பதிவும் அருமை

    ReplyDelete
  23. டெக்ஸ் அட்டைப்படம் one of the all time best . No doubt. ஆனால் டெக்ஸ் முகத்துக்கு இவ்ளோ மேக்கப் தேவை இல்லை என தோன்றுகிறது. வன்மேற்கின் முகவரியல்லோ அவர். அவர் முகத்துக்கு சல்மான்கான் முகம் மாதிரி புஸ்னு மேக்கப் மெனக்கெட தேவை இல்லை. உருவத்தை தவிர மத்த இடங்களை நமது ஓவியர் enhance செய்யலாம் அல்லது எப்போதுமே original அட்டைப்படங்களை மட்டுமே பயன்படுத்தலாம். நான் சரியத்தான் பேசுறனா 🤔😊.

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் கதைகளின் ஒரிஜினல் அட்டை படத்தை ஏன் பதிப்பு செய்ய முடிவ வில்லை. பட்டி டிங்கரிங் செய்தான பின்னே அது முழுமையாய் மனதை ஆக்ரமிக்க மறுக்கிறது.

      Delete
    2. ஒரிஜினல் அட்டைப்படங்கள் தட்டையான வர்ணச் சேர்க்கைகள் கொண்டவை என்பதால் அவற்றை அன்றும், இன்றும் நாம் பயன்படுத்துவதில்லை !

      And இவை பட்டி டிங்கரிங் செய்யப்பட்டவையும் கிடையாது ; முழுமையாய்ப் புதிதாய் வரையப்படுபவை !

      Delete
  24. Replies
    1. இதை பதிப்பிட்டே ஆகணும் தானே..?

      Delete

    2. ............. படித்து விட்டேன் என்ற முறையில் இந்த இடியப்பம்(ஒவொருமுறை படிக்கும்போதும் வேறு வேறு அர்த்தம் தரும் காவியம் ) நமது வாசகர்களுக்கு எற்பாக இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது .

      Editஇன் //ரசனைகள் நம்மைச் சூழ்ந்துள்ள உலகினையும் சார்ந்ததே எனும் பொழுது இந்த மாற்றங்கள் தவிர்க்க இயலா நியதி தானா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?// கேள்விக்கு உங்க பதில் என்றல் BIG spl +1


      //இதை பதிப்பிட்டே ஆகணும் தானே..?// நிச்சயம் (personal opinion )

      Delete
  25. சபைக்கு சலாம் வெச்சுக்கிறேன். .!!

    ReplyDelete
    Replies
    1. நானும் சலாம திருப்பி உங்களுக்கு வைக்கிறேன்.

      Delete
    2. சலாம் வெக்கல என்று நாளை ஒரு பேச்சு வந்திடக்கூடாது.

      அதனாலே...

      நானும் ஒரு சலாம் வெச்சுடறேன்.

      Delete
    3. சலாம் MECHERI GAR, AND SABAI :)

      Delete
  26. காலை வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  27. ///? இன்னும் இருப்பதோ-முப்பதோ ஆண்டுகளுக்குப் பின்பாய் நாமிப்போது சிலாகித்து ரசிக்கும் கதைகளுமே இதே போல 'கெக்கே-பிக்கே' சிரிப்பினை உருவாக்கிடுமா ? "இதையாடா சாமி அன்றைக்கு ரசித்தோம் ?? "என்று ஒரு தூரத்து பொழுதில் நாமும் புருவங்களை உயர்த்தத்தான் செய்வோமா ?///

    நிச்சயம் அப்படி இருக்காது.
    அன்றைக்கு எப்படி ரசித்தோமோ, இம்மி குறையாமல் இன்றைக்கும் அப்படியே ரசிக்கும் ரிப்போர்ட்டர் ஜானி ஒரு உதாரணம் சார்.!
    போலவே இன்றைக்கு நாம் ரசிக்கும் பல கதைகள் இன்னும் முப்பது வருடம் கழிந்தாலும் அப்படியே ரசிக்கமுடியும். ஹிஹி இதையா சிலாகித்தோம் என்று நினைக்கவே மாட்டோம் என்றே நம்புகிறேன்.

    ஜானிநீரோ போன்றவர்கள் வேண்டுமானால் சிரிப்பை உண்டாக்கலாம், 90 களில் படித்த லக்கி, ஆர்டின், டெக்ஸ் ,டைகர் போன்றோரை இன்னும் எத்தனை யுகங்கள் கழிந்தாலும் இப்படியேதான் ரசிப்போம்னு எம்மனசுக்கு படுது சார். .!

    ReplyDelete
    Replies
    1. கேப்டன் பிரின்ஸ் இன்று படித்தால்கூட நெருப்பு பறக்கிறது.

      Delete
    2. ஜானிநீரோ போன்றவர்கள் வேண்டுமானால் சிரிப்பை உண்டாக்கலாம், 90 களில் படித்த லக்கி, ஆர்டின், டெக்ஸ் ,டைகர் போன்றோரை இன்னும் எத்தனை யுகங்கள் கழிந்தாலும் இப்படியேதான் ரசிப்போம்னு எம்மனசுக்கு படுது சார். .!// உண்மை,
      +111111

      Delete
    3. //கேப்டன் பிரின்ஸ் இன்று படித்தால்கூட நெருப்பு பறக்கிறது.//+1

      //90 களில் படித்த லக்கி, ஆர்டின், டெக்ஸ் ,டைகர் போன்றோரை இன்னும் எத்தனை யுகங்கள் கழிந்தாலும் இப்படியேதான் ரசிப்போம்னு எம்மனசுக்கு படுது சார். .!//
      +1

      Delete
    4. \\கேப்டன் பிரின்ஸ் இன்று படித்தால்கூட நெருப்பு பறக்கிறது.\\
      +1

      Delete
  28. தம்பி சிவக்குமார் சிவா,
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா..!

      Delete
    2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா..!

      Delete
    3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா! எண்ணியதெல்லாம் அவ்வண்ணமே திண்ணமாகட்டும்!

      Delete
    4. ஹேப்பி பர்த் டே ....சிவா ....:-)

      Delete
    5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா.

      Delete
    6. நண்பருக்கு நமது வாழ்த்துக்களும் !!

      Delete
  29. ///ஸ்டெல்லாவையும் அட்டைப்படத்தில் இணைத்து !! ஜானி நீரோவை நேராக வரைந்தால் தானே வம்பாகிப் போகிறது நம் ஓவியருக்கு - 'சிவனே' என்று குனிந்த தலை ஸ்டில்லைத் தேர்வு செய்து விடுவோம் என்று மகா சிந்தனை எழுந்தது அடியேனுக்கு !///

    நல்ல சிந்தனை நல்ல சிந்தனை ..!

    அப்படியாச்சும் ஜானி அட்டைப்படத்துல இடம்பிடிச்சே ஆகணுமா என்ன?

    எப்படியும் எல்லா கதைகளிலும் ஸ்டெல்லாதான் ஜானியை காப்பாற்றுவார். இம்முறை அட்டைப்படத்திலேயே காப்பாற்றிவிட்டார்..!

    ReplyDelete
  30. ஆசிரியருக்கும்....நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்...

    எனது அலைபேசியில் இந்த தளத்திற்கு மட்டும் செய்வினை வச்சுட்டாங்களான்னு தெரியலை ...புகைப்படங்கள் எதுவும் இந்த தளத்தில் மட்டும் கடந்த இரண்டு பதிவுகளாக காணப்படுவதே இல்லை.....:-((

    ReplyDelete
  31. முந்தய பதிவில் நீங்கள் எழுப்பியிருக்கக் கூடிய கேள்விகளை சிரமம் பாராது இங்கேயும் பதிவிடுங்களேன் - ப்ளீஸ் ? நிச்சயம் பதில் தர முனைவேன்


    ######

    ஆசிரியரின் " உப பதிவை " எதிர் நோக்கி இன்று இரவு 9 மணி வரை ஊன் உறக்கம் இன்றி காத்திருக்கும்


    பலரில் ஒருவன்...


    ######


    ஹீஹீ....இதுவும் போன பதிவில் நான் கேட்ட கேள்வி தான் சார்...:-))

    ReplyDelete
  32. சித்திரங்களும்'வர்ணச்சேர்க்கைகளும் அசரடிக்குது.காட்சி கோணங்களும் கதாபாத்திரங்களுடைய பாவனைகளும் மெர்சலாகீது.ஒத்தப்பக்கத்துல எம்மா தெறமப்பா.பென்னி இப்பவே கெளப்புது பீதிய.

    ReplyDelete
  33. //இன்னும் இருப்பதோ-முப்பதோ ஆண்டுகளுக்குப் பின்பாய் நாமிப்போது சிலாகித்து ரசிக்கும் கதைகளுமே இதே போல 'கெக்கே-பிக்கே' சிரிப்பினை உருவாக்கிடுமா ? "இதையாடா சாமி அன்றைக்கு ரசித்தோம் ?? "என்று ஒரு தூரத்து பொழுதில் நாமும் புருவங்களை உயர்த்தத்தான் செய்வோமா ?//

    அப்படி இல்லை சார். இன்று எத்தனையோ டெக்னாலஜி வளர்ந்து இருந்தாலும், பலவகை காமிராக்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும், போட்டோசாப் போன்ற ஆப்களின் மூலம் மேடுபள்ளமும், வறண்ட நிறமும் கொண்ட நமது முகங்களை மெருகேற்றி பார்க்கும் வசதிகள் பல இருந்தாலும்,

    அப்போதைய ஹிப்பி, பெல்பாட்டத்துடன் எடுக்கப்பட்ட பழைய கருப்புவெள்ளை புகைப்படங்களில் இருக்கும் ஒரு ஜீவன் தற்போதைய டெக்னாலஜி வழங்கும் வசதிகளில் இல்லையென்றே சொல்லவேண்டும்.

    பழசு பழசு தான் சார்.

    ReplyDelete
  34. //இன்னும் இருப்பதோ-முப்பதோ ஆண்டுகளுக்குப் பின்பாய் நாமிப்போது சிலாகித்து ரசிக்கும் கதைகளுமே இதே போல 'கெக்கே-பிக்கே' சிரிப்பினை உருவாக்கிடுமா ? "இதையாடா சாமி அன்றைக்கு ரசித்தோம் ?? "என்று ஒரு தூரத்து பொழுதில் நாமும் புருவங்களை உயர்த்தத்தான் செய்வோமா ?//

    அப்படி இல்லை சார். இன்று எத்தனையோ டெக்னாலஜி வளர்ந்து இருந்தாலும், பலவகை காமிராக்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும், போட்டோசாப் போன்ற ஆப்களின் மூலம் மேடுபள்ளமும், வறண்ட நிறமும் கொண்ட நமது முகங்களை மெருகேற்றி பார்க்கும் வசதிகள் பல இருந்தாலும்,

    அப்போதைய ஹிப்பி, பெல்பாட்டத்துடன் எடுக்கப்பட்ட பழைய கருப்புவெள்ளை புகைப்படங்களில் இருக்கும் ஒரு ஜீவன் தற்போதைய டெக்னாலஜி வழங்கும் வசதிகளில் இல்லையென்றே சொல்லவேண்டும்.

    பழசு பழசு தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. சுசீ ஜீ நீங்க ஒரு தடவ சொன்னாலே நூறு தடவ சொன்ன மாதிரி....மூணு தடவ சொன்னா......:-)))

      Delete
    2. முன்னூறு தரம் சொன்ன மாதிரி,அருமையா சொன்னிங்க சுசி.
      +11111

      Delete
    3. சேலம் சுசீ..!@

      பின்றிங்களே பெரியவரே :-)

      Delete
    4. சேலம் சுசீ //பழசு பழசு தான் சார்.//

      சிக்கலே அது தானே சார் ?!

      Delete
  35. இதையாடா சாமி அன்றைக்கு ரசித்தோம் ?? "என்று ஒரு தூரத்து பொழுதில் நாமும் புருவங்களை உயர்த்தத்தான் செய்வோமா ? ரசனைகள் நம்மைச் சூழ்ந்துள்ள உலகினையும் சார்ந்ததே எனும் பொழுது இந்த மாற்றங்கள் தவிர்க்க இயலா நியதி தானா ?


    ###₹₹₹₹#####


    அனைத்து கதைகளையும் அந்த எல்லைக்கு கொண்டு வர முடியாது என்பதே எனது கருத்து சார்...இப்பொழுதும் அந்த கால கட்டத்தை...., பூ போட்ட டிராயரை....., ரசிக்கும் சிலர் இருக்கிறார்கள் என்பதோடு...அந்த கால கட்டத்தில் வந்த மேலும் பலரை இன்னமும் நாம் ரசித்து கொண்டே தானே இருக்கிறோம்...சில ( காமிக்ஸ் ) காவியங்களை எத்தனை லோகங்கள் கடந்தாலும் ரசிக்க தான் முடியுமே தவிர எள்ளி நகைக்க முடியாது சார்..மேலும் உதாரணத்திற்கு பல நண்பர்களும் மறு வாசிப்புக்கு என இதழ்களை தேடும் பொழுது சமீபத்திய இதழ்களை விட அந்த கால கட்ட சாகஸங்களை தான் அதிகம் தேடி படிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியா நிஜமே.....

    நூறாண்டு கடந்தாலும் அந்த காலகட்ட நண்பர்களுக்கு ஒரு சில வேண்டுமானால் " கெக்கே பிக்கே" ரகமாக தெரியலாம்..ஆனால் பல ....

    "பாருடா....அப்பொழுதே இந்த அளவிற்கு படைப்பை படைத்து இருக்கிறார்களே..சிம்ப்ளி சூப்பர்."

    என மனதினுள் நினைக்க வைப்பவைகளே ஏராளமாக இருக்கும் என்பதே (என்) கருத்து சார்...



    இப்பொழுதும் களி ...கம்பங்கூழ்...பழைய சோறு ..வெங்காயம் என்றால் என்னவென்றே தெரியாத பலர்....கண்டாலே முகம் வெறுக்கும் பலர் என இருப்பினும்...இன்னமும் அன்று முதல் இன்று வரை இட்லி தோசை சலிக்காத அடிமையானவர்களே அதிகம்..


    பி.கு:....எந்த நாயகர் சில காலகட்டங்களுக்கு பிறகு எள்ளி நகையாடப் படுவார்..எவர் என்றுமே சலிக்காத நாயகராக இருப்பார் என்பதை அவரவரே முடிவு எடுத்து கொள்ளலாம்:-)

    ReplyDelete
    Replies
    1. உணவு காமிக்ஸ் உடன் ஒப்பிட முடியாதது தலைவரே (வணக்கம் ! :) கம்பர் ராமாயணம் எழுதும்போது அவர் கடந்து சில தலைமுறை அதே ட்ரெண்ட் உடன் படித்தார்கள் , இப்பொது இளைய தலைமுறையிடம் ராமாயணம் கொண்டுசேர்க்க CAMPFIRE மட்டும்தான் வேளைக்கு ஆகிறது ... இப்படி வேறு வடிவாக ரசனை மாறும் வாய்ப்புகள் அதிகம் ....

      இப்போ தமிழ் காமிக்ஸ் தமிழ்நாட்டுல படிக்கிற இளையதலைமுறை கூட்டத்தை விட மங்கா காமிக்ஸ் தமிழ்நாட்டுல படிக்கிற கூட்டம் இளையதலைமுறை மத்தியில் பெறுகியிருக்கிறதே அதுபோல .....

      Delete
    2. வணக்கம் சதிஷ் ஜீ...:-)

      Delete
    3. Paranitharan K : தலீவரே.....மனித மனமென்பது ஒரு அசாத்திய சமாச்சாரம் !! இஷ்டப்பட்டால் கடப்பாரையைக் கூடக் கரைத்து விடும் ; பிடிக்காது போனால் மைசூர்பாகைக் கூட "அய்யே.திகட்டல் !" என்று ஒதுக்கச் செய்யும் !

      சில தருணங்களில் நமது காமிக்ஸ் ரசனைகளும், நேசங்களும் இதற்கு கட்டியம் கூறும் விதமாகவே அமைந்து விடுகின்றன !! "இவற்றையெல்லாம் நாம் (சு)வாசித்திருக்கிறோம் ; நேசித்திருக்கிறோம் என்ற நிறைவான மனதோடு அந்தத் தொடரின் ஒரு புதுக் கதையை அணுகும் போது, அதிலுள்ள குறைகள் நமக்குத் பெரிதாய்த் தெரிவதில்லை ! உதாரணம் - TEX !! இவரது தொடரின் சுமாரான கதைகள் கூட மிதமான சேதாரங்களோடு தலை தப்பி விடுவது வாடிக்கை ! ஆனால் அதுவே ஒரு கமான்சே தொடரிலோ ; ஒரு புதுமுக cowboy கதையிலோ நிகழ்ந்தால் "வச்சு செஞ்சிடுவோம் " !!

      அந்நாட்களது புராதனங்களை ரசிக்கும் போது நிகழ்வதும் இதுவே என்பேன் !! "ரோஜா மாளிகை ரகசியம்" "நெப்போலியன் பொக்கிஷம் ; "வைரஸ் X " ' "தலை கேட்ட தங்கப் புதையல் "போன்ற classics மெய்யாகவே காலத்தை வெல்லக்கூடிய கதைக் களங்களைக் கொண்டவை !! அந்த கூட்டத்தோடு நாம் கோவிந்தா போடும் போது - சிலபல பூப் போட்ட அண்ட்ராயர் கதைகளும் எஸ்கேப் ஆகிவிட்டுள்ளன - தர்ம அடி வாங்கிடாது !!

      கொலைக் கரம் இதழை மீள்வாசிப்பு செய்யும் போது இதனை மனதில் இருத்திக் கொண்டே வாசித்துப் பாருங்களேன் ?! அதுவும் அமெரிக்க ஜனாதிபதியே ஜானிகாருவை வரச் சொல்லி அழைக்கும் கட்டத்தில் - சத்தியமாய் முடிலே !! வில்லாதி வில்லனை வெளியே கொண்டு வர பேப்பரில் நியூஸ் கொடுக்கும் அதகள ஐடியா !! ஷப்பா !!!

      Delete
    4. ஹாஹா.....ஆசிரியர் சார்...உங்களுக்கேவா....:-)))

      Delete
  36. மார்ச் இதழ்களின் விமர்சனம்:

    முதலாவது லக்கி...

    அட்டை படம் : அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதை : அருமை



    இரண்டாவது டெக்ஸ்:

    அட்டை படம் : சுமார்
    சித்திரங்கள் : அருமை
    கதை : o k.....
    ஒரு வரி விமர்சனம் : தல கதையை எப்படி இருந்தாலும் படிக்க முடியும்....

    மூன்றாவது T H O R G A L,


    அட்டை படம் : அருமை
    சித்திரங்கள் : அருமை
    கதைகள் : சுமார்

    ReplyDelete
    Replies
    1. தோர்கள் கதை வரிசைகளில் கதைக்களத்தோடு ஒன்றிப்படித்தால் மட்டுமே படைப்பாளிகளுடைய மேன்மையை உணர முடியும்.ஒரு சித்திரக் குள்ளன்'மானிடச் சிறுவன்'நான்கு கைகளுடைய அசுரன்'.பறக்கும் திறன் பெற்ற பூனைகள்"பாம்புகள்"நாக லோகம் போன்ற பாத்திரப்படைப்களை வைத்துக் கொண்டு 2000 பக்கங்களுக்கு இழுக்க வேண்டிய கதைய 20 பக்கங்களில் செதுக்கப்பட்டிருக்கும்.இந்த கதை ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் பார்வையில் தட்டுப்பட்டால் வெற்றிப் படமாக அமையும்.பாத்திரங்களுடைய குணாதியத்தை வெளிப்படுத்தும் விதமாக;'ஆனால் ஜாகி!இந்த ஆபரணத்தை நான் விற்க விரும்பவில்லையே?மாறாக இதை இப்போதே என் அன்பளிப்பாய் தருகிறேன் ஏற்றுக்கொள்!போன்ற காட்சிகளில் கதை நாயகனுடைய பாத்திரத்தை வாசகர்களிடம் மிக நெருக்க இட்டுச்செல்லும் விதம் படைத்திருப்பார்.தோர்கள் கதைகளில் அடி நாதமாக பின்னப்பட்டிருக்கும் கதையை ஓரளவு யீகிக்க முடிகிறது.அடுத்த பாகங்களுக்காக காத்திருக்கிறோம்.

      Delete
    2. Sri Ram : //20 பக்கங்களில் செதுக்கப்பட்டிருக்கும்.இந்த கதை ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் பார்வையில் தட்டுப்பட்டால் வெற்றிப் படமாக அமையும்//

      Very true !!

      Delete
  37. எல்லா அட்டைப் படங்களும் - அருமை!

    ///////? இன்னும் இருப்பதோ-முப்பதோ ஆண்டுகளுக்குப் பின்பாய் நாமிப்போது சிலாகித்து ரசிக்கும் கதைகளுமே இதே போல 'கெக்கே-பிக்கே' சிரிப்பினை உருவாக்கிடுமா ? "இதையாடா சாமி அன்றைக்கு ரசித்தோம் ?? "என்று ஒரு தூரத்து பொழுதில் நாமும் புருவங்களை உயர்த்தத்தான் செய்வோமா ?///////

    இப்போது அதை சரியாகக் கணிக்க முடியாதுதான். எனினும் யோசித்துப் பார்த்தால்...

    இன்னும் முப்பதாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் குழந்தைகளாக மாறிவிட்டிருப்போமே!!! அப்போது மறுபடியும் இஸ்பைடர், இ.கை.மாயாவி, ஜானி நீரோ, லா & டே கதைகளை (பேரக்குழந்தைகளை பழைய புத்தகக் கடைக்கு அனுப்பி) தேடித் தேடி படிப்போமோ என்னவோ?!!

    இரணை மாற்றங்கள் 'குறிப்பிட்ட' சில கதைகளுக்கு வேண்டுமானால் நிகழலாம் என்றே தோன்றுகிறது!

    ReplyDelete
  38. கார்வின குணப்படுத்த டாக்டர் போதாது , என ஆணித்தரமாய் மாடஸ்டி சொல்ல....அட என நிமிர ...நான்தான் தேவை என மாடஸ்டி கூற ...சரிதான் ஆசிரியர் சித்தரிப்பான நூலிழை நட்புக்கு பங்கம் வந்துடுமோ .....நண்பர்கள் தொலைத்து விடப்போகிறார்கள் என எண்ணிப் பக்கத்தை புரட்டினால் ...மாடஸ்டி உடைய கழட்ட போச்சுடா என தொடர்ந்தால் , நல்லவேளை அப்படி எந்த வேலையுமில்லாமல் மனோத்துவ சிகிச்சை ...வலி மட்டுமே என் நினைவை ஜீவித்திருக்கச் செய்யும் என பதிமூன்று ஒரே பேனலில் கூறிக் கொண்டு கையை கிழித்துக் கொள்வாறே இரத்தப்படலத்தில் கடலில் மூழ்கும் முன் அதனை இங்கே இருவது பக்கங்களுக்கு மேல் சுவாரஷ்யமாய் தீட்டி உள்ளார்கள் . அவர்கள் வண்ணச்சேர்க்கை அளித்திருந்தால் கூட இப்படி ஈர்த்திருக்கமா என்பது கேள்விக்குறியே .நமது வண்ணச்சேர்கய விஞ்ச முடியாது . மாடஸ்டி உதடுகளுக்கு மட்டும் வண்ணச் சாயம் பூசி இருந்தால் சிவப்பும் அதிக பக்கத்த வியாபித்திருக்கும் .அதும் மாடஸ்டி அணைப்பில் 135 முதல் கட்டத்தில் கார்விணை நோக்கி கரம் நீளுமிடம் காட்டும் வர்ண ஜாலங்கள் , நிஜம்மாய் கார்வின் வேறுலோகத்தில் இருக்கும் பிரம்மையை தெளிவாய் காட்டுவதுடன் , வர்ணங்கள் மனதை உற்சாகத்தில் ஆழ்த்தி வர்ணங்களின் ஈர்ப்புக்கு இணையில்லை எனக்காட்டவும் தவறலை ....வர்ணத்தை கலந்தடித்து வானவில்லாய் காட்டிய நிறச்சேர்க்கையாளர் மற்றும் மேற்பார்வயாளருக்கும் நன்றிகள் ; சபாஷ்...இன்னும் பல...சிக்கென்ற புத்தக வடிவமைப்பும் இரண்டே பேனல்களும் , வளவளப்பும் , ஈர்க்கும் வண்ணக்கலவைகளும் மாடஸ்டிய விட ஈர்த்து தடவிப்பார்க்கச் செய்யத் தவறவில்லை .கதையென்றால் அட்டகாசமான திருப்பங்கள் இல்லாமலே ஒரே நேர்கோட்டில் அட்டகாசமாய் பயணிக்க ப்ளட்சர் ,கழுகுகள் என சிறுவர்களை ஈர்க்கும் வண்ணமும் , எதிராளிகள வீழ்த்திய பின்பும் தொடரும் அட்டகாசமான மனவலிமை காட்டும் போராட்டங்கள் நம் வயதொத்தவர்களை கவரும் வண்ணமும் செல்வது நமது தாரக மந்திரம் ஏழு முதல் எழுபத்தேழு வரை எனும் வார்த்தைதனை நினைவுறுத்தத் தவறவில்லை . அதும் முன் , பின் முழு பக்க அட்டயும் ,பின்னணிகளும் , முனபக்கம் உள்ள பழய அட்டையும் , கவறச் செய்த மேல் கவர் கொண்ட அட்டயும் சேகரிப்பாளருக்கும் ,தற்கால ரசிகருக்கும் விருந்து . எல்லா அம்சங்களும் நேர்த்தியா கொண்டு படைககப்பட்ட உச்ச கட்ட படைப்பென்றால் மிகயல்லவே !இப்புத்தகம் உடனடியா விற்றுத் தீர்ந்ததால் பின்வருவோர்க்கு கிடைக்காதோ..

    ReplyDelete
  39. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு காலை
    வணக்கம்.

    ReplyDelete
  40. ஸ்டீல் உண்மையாகவே உங்களுடைய கை
    இரும்புதான். எவ்ளோ பெரிய மாத்ரெ
    சாரி பதிவு.

    ReplyDelete
  41. தோர்கல்: மிக நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ள தோர்கல் கதை, தோர்கலின் பிறப்பு பற்றிய இரகசியம்களை சுவாரசியமான விதத்தில் சிறு சிறு கதைகளாக சொன்ன விதம் அருமை. தோர்கல் எப்போதும் எங்களின் செல்லபிள்ளை.

    நமது சீனியர் எடிட்டர் மொழிபெயர்ப்பில் தானும் ஒரு சிங்கம்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். வாழ்த்துக்கள்.

    இந்த வருடம் வரவுள்ள அடுத்த "தோர்கல்" கதையை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன், இந்த முறை அது ரெண்டு பாகம் உள்ள கதையாக வருவது கூடுதல் ஆர்வத்தை கிளப்பிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. விண்வெளியின் பிள்ளை நமது எடிட்டரின் மொழிபெயர்ப்பு.

      இது குறித்து ஈனாவினாவுக்கு எடிட்டர் விளக்கமளித்து இருக்கிறார் பரணி!

      Delete
    2. selvam abirami @ தாயத்தின் கதையில் நமது எடிட்டர் பட்டி டிங்கரிக் செய்ததாக சொன்ன ஞாபகம். மற்ற படி முழு மொழிபெயர்ப்பும் நமது சீனியர் என்பதாக ஞாபகம்.

      இதனை தவறாக நான் புரிந்து கொண்டால் சரிசெய்து கொள்கிறேன்!

      Delete
    3. ///Erode VIJAY : முந்தைய கதைகளைப் போலவே இதுவும் இருக்குமென்ற நம்பிக்கையில் தான் சீனியரை இதனில் பேனா பிடிக்கச் சொல்லியிருந்தேன் ! ஆனால் இந்தக் கதையின் தன்மை இத்தனை complex எனும் பொழுது, எப்போதேனும் பேனா பிடிக்கும் சீனியருக்கு அது நிரம்பவே சிரமங்களைத் தருவதை புரிந்து கொள்ள முடிந்தது ! So அவர் எழுதியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பாக்கியை புதிதாய் எழுத வேண்டிப் போனது !///

      நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான்.

      தாயத்து பகுதி அவரை அதிகம் வேலைவாங்கியதாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.

      Delete
    4. தாயத்து...செயின்..மோதிரம்..பாசிமணி....சகலத்திலும் !

      ஒட்டு மொத்தமாய் ரொம்ப ரொம்ப complex கதைகள் அல்லவா - சகலமும் ?

      Delete
  42. சேலம் டெக்ஸ்
    என்னா இது
    வெறும் நம்பரமட்டும் போட்டுட்டு

    ReplyDelete
  43. Replies
    1. quote from comics-அருமை மாயாவி சார் தொடருங்கள் .....

      Delete
  44. Dear Edi,

    April previews are hot and happening... Especially Tex and Jeremiah promises a good reading experience. Haven't warmed up to Benny yet... But probably they are aimed for a different younger audience base.

    Johnny Nero classic with a split cover art is a huge nostalgia. I think it is a long time since we used this format, which was almost a Trademark style of erstwhile Rani Comics through much of its golden years.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : //Haven't warmed up to Benny yet... But probably they are aimed for a different younger audience base.//

      True.....ஆனால் அந்தச் சின்னப்ப பையனிடமும், அந்தச் சித்திர பாணியிலும் ஏதோவொரு வசீகரம் உள்ளது சார் ! முயற்சித்துப் பாருங்கள் !

      Delete
  45. சார் அட்டகாசம்...டெக்சின் அட்ட அந்த நீல வண்ணப் பிண்ணனி , அந்த சைப்ரஸ் மரம் காட்டும் பனி சூழ் உலகு , அந்தச் செங்குதிரை , கோட்டு போட்ட டெக்ஸ் எல்லாமிணைந்து அதகளபடுத்துது ...தயாரிப்பில் நீங்கள் காட்டிய உற்சாகமும் மின்சாரமாய் அடியேனை எழுத்துகள் வாயிலாகவும் தாக்குவதால் அதே எண்ண உற்சாக அலை என்னுள்ளும் .. .பின்னட்டையோ வண்ணமெல்லாம் உருகி அந்த பனிக்குகைக்குள் உறிஞ்சி இழுக்க டெக்ஸ் போல வண்ணத்தில் நணைந்தேன் ஞானும் .பிரம்மாதம் பின்னட்டயும் ..பென்னி இழுக்குது சும்மா மனச பின்னி ..எழுத்துரு மனம் கவருது .பின்னட்ட வண்ணமய பக்கமும் அழகு ஜானிஜி அட்டை அதகளம் .மறுபதிப்பு அட்டைகள் தொடர்ந்து கலக்குவதுடன் மேம்படட்டும் வருவது அருமை .

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //மறுபதிப்பு அட்டைகள் தொடர்ந்து கலக்குவதுடன் மேம்படட்டும் வருவது அருமை .//

      ஹை !!! தப்பியது தலை !!

      Delete
  46. சார் லார்கோ..பதிமூன்று ,ஷெல்டன் .....தோர்கள் , ஸ்பைடர் , மாயாவி நிச்சயமாய் எக்காலத்துக்கும் கெக்கே , பிக்கே ரகமல்ல... என்னைப் பொறுத்தவரை ..முன்னவை கதாநாயகனின் திறமையின் உச்சமென்றால்..பின்னவை அற்புத ,ஆச்சரிய கற்பனையின் உச்சம் .

    ReplyDelete
    Replies
    1. +1

      ஸ்பைடர் குறித்து மாற்று கருத்து இருப்பினும் ANTI-ஹீரோ சப்ஜெக்ட் காலம்(ராபின் ஹூட் காலம், அல்லது அதற்கு முன்பாக வே ) தாண்டிய இருப்பை/ஈர்ப்பை கொடுத்து வந்திருக்கிறது என்பது நிஜம்

      Delete
  47. //ஜெரெமியா கதை ரொம்பவே லோக்கலான இரு பசங்களின் பயணக் கதை !! பற்றாக்குறைக்கு இந்தக் கதைகளை ஹெர்மன் உருவாக்கிய சமயம் (1978) - அவர் கதாசிரியர் க்ரெக்குடன் லேசான மனத்தாங்கலில் இருந்தாராம் ! (கமான்சே கதைகளுக்கு ஹெர்மன் + கிரெக் கூட்டணி இணைந்து இயங்கி கொண்டிருந்த வேளை அது !! ) என்னாலும் சொந்தமாய்க் கதை எழுதி, ஒரு கதாசிரியரின் ஆற்றலும் எனக்குள் உள்ளதென்று நிரூபிக்க ஹெர்மன் முனைப்பாக இருக்க - அவரது டயலாக் வரிகளில் நிறைய நையாண்டி ; குதர்க்கம் என்று விரவி இருப்பதை நெடுக பார்க்க முடிந்தது !! And ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணி கொண்ட மனுஷன் இவரென்பதை அந்த 136 பக்கங்களிலும் புரிந்து கொண்டேன் !!//


    :D உங்களை கடப்பாரை நீச்சல் அடிக்கவைத்த அணைத்து தொடர்களும் சரித்திர வெற்றி நமது வாசகர்களிடம் என்ற செண்டிமெண்ட் இன்னும் நீங்க நிறைய கடப்பாரை அடிக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது....


    நையாண்டி ஒருபுறம் இந்த BUILD UP ஆர்வத்தை எகுறுகிறது எடிட் ... :)

    ReplyDelete
    Replies
    1. Satishkumar S : //இன்னும் நீங்க நிறைய கடப்பாரை அடிக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது.... //

      நமக்குத் தெரிஞ்சதே அது தானே ?! தண்ணியை கண்டாலே ஒரு உதறல் !!

      Delete

  48. FROM LAST POST:
    //புதுக் கதை நாயகர்கள் / படைப்பாளிகள் பற்றிய அடுத்த கட்ட update / உசுப்பேற்றல் !!//

    கலர் உசுப்பேற்றல் இருந்தாலும் எனக்கு RAY OF HOPE ! கொண்டு வாங்க நிச்சயம் கொண்டாடுவோம் எடிட் SIR! :)


    டயபாலிக் ஒரு நல்ல விறுவிறுப்பான தொடராக வரட்டும் எடிட் .... ONE SHOT வேண்டாம்.

    ZOMBIES -அய்யயய்ய (DON'T WANT personal opinion).

    கழுகு மலைக்கோட்டை

    நானும் முதல் முறை படித்தேன் ரசித்தேன். sympathy, action, love வித்யாசமான அனுபவம். இத்தகைய கதையை reprint செய்ததற்கு நன்றி, பிரின்டிங் தரத்திற்கு ஒரு நன்றி , இத்தகைய formatக்கு மற்றும் ஒரு நன்றி எடிட்.

    பத்திரிகைக்கையாளர் - சமூக பொறுப்பு morality.-


    அப்படி பார்த்த அமெரிக்காவில் ஒருசாராருக்கு துப்பாக்கி culture தப்பு தான் எடிட் இப்படி Jean Giraud நினைச்சிருந்த நமக்கு blueberry இப்போ இல்லை . so... டயபாலிக் ஒரு நல்ல விறுவிறுப்பான தொடராக வரட்டும் எடிட்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே துப்பாக்கி தவறல்ல...பிடிக்கும் ஆசாமிய பொறுத்தே சரி , தவறெல்லாம்..டயபாலிக் யாரென்று பார்க்காமல் கொல்லும் குரூரம்...ஹீரோவாய் சித்தரிப்பத ஏற்க இயலவில்லை....மனது எப்பவுமே ஹீரோவுடன் சேர்ந்தே போராடுவதும் ஒரு காரணம் .

      Delete
    2. :) Steel சில தொடர்கள் அருமையானவை என்று ஏகப்பட்ட நல்ல விமர்சனங்களை இணையத்தில் படித்ததனால் கேட்கிறேன் , விசயம் இருக்காமல் குரூர கதையோட்டத்தை மட்டும்(I am against only bloodshed stories too!) வைத்து இதனை புத்தகங்கள்/தொடர்கள் வந்திருக்காதே (https://en.wikipedia.org/wiki/Diabolik) சிலகதைகளை மட்டும் படித்துஇருக்கிறோம் முழுமையாக அனைத்து கதாபாத்திரங்களையும் ஒரு தொடராக படித்தால் தான் முடிவுசெய்ய இயலும் ?

      Delete
  49. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural". We request you to share the URL links of your valuable articles on our website to reach wider Tamil audience...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    ReplyDelete
  50. Hold on guys !!! தவறான வலைப்பக்கத்துக்குள் நுழைந்து விட்டோமோ என்ற பீதியோ ; கோடை வெயிலுக்கு அதற்குள்ளாகவே ஒரு சேதாரமா ? என்ற பயமோ அனாவசியம்

    ReplyDelete
  51. தரைக்கடியில் தங்கம்: கருப்பு தங்கத்தை கிடைக்கும் ஒரு கிராமம் மற்றும் அதனை சுற்றி நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. இதில் நமது கதாநாயகருக்கு நீதியைகாப்பது அதுவும் வில்லனை சரியான சட்ட விதிகளின் படி கைது செய்யவேண்டும்.

    முதல் பக்கத்தில் இருந்து சிரிப்பு மற்றும் விறுவிறுப்புக்கு குறைவில்லாத கதை. அந்த கிராமத்தில் கருப்பு தங்கத்தை விரும்பாதவர் யாரும் கிடையாது, அதுவும் அந்த கோர்ட் சீன் செம; கருப்பு தங்கத்தை விரும்பாத ஷெரிப்பின் உதவியாளர் பாத்திரம் சூப்பர். அந்த குண்டு பையன் சிறையில் அடைபட வேண்டும் என்று அடிக்கும் கூத்து டாப் கிளாஸ்.

    லக்கி மீண்டும் ஒரு சிரிப்பு நாயகன் என்பதை நிருபித்துவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. +1 வித்யாசமான கதை களம் நானும் படித்தேன் ! ஆனா இந்த லக்கிஇல் என்னமோ மிஸ் ஆனா பீலிங் .....ஹ்ம்ம்

      Delete
  52. ///இந்த சாகசத்தில் கார்சன் உடனில்லை எனினும், அந்தப் பெரியவரின் அதிரடி இருப்பு - கதைக்கு ஒரு நெருப்பைத் தருவது போலுள்ளது !!///

    அதானே..!! அந்தப் பெரியவர் ஸீக் செம்ம அராத்தா இருப்பார் போலயே..!!

    பின்னட்டையில் பீமபுஷ்டி லேகியம் கிண்டிக் கொண்டிருப்பதும் அதே பெரியவர்தானா சார் .. !

    ReplyDelete
    Replies
    1. அதை கறுப்புக் கிழவி கேரக்டர் மாதிரி தெரியுது.

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : //பின்னட்டையில் பீமபுஷ்டி லேகியம் கிண்டிக் கொண்டிருப்பதும் அதே பெரியவர்தானா சார் .//

      ஊஹூம்.....அது லேம் டக் !! தாத்தாவின் செவ்விந்திய வீட்டுக்காரம்மா !! அவரைக் கொண்டும் கதைக்கொரு சுவாரஸ்யம் கூட்டிட லைட்டாக ஒரு வேலை செய்துள்ளேன் !

      Delete
    3. ///ஊஹூம்.....அது லேம் டக் !! தாத்தாவின் செவ்விந்திய வீட்டுக்காரம்மா !!///

      ங்ஙே..!!

      பாட்டீமாவா அது..! (கண்ணாடி போடவேண்டிய காலம் கனிஞ்சிடுச்சி போலிருக்கே கண்ணா!!)

      Delete
  53. டியர் எடிட்டர்

    கடந்த ஐந்து மாத tex கதைகளை ஒரு சேர வாசித்துக்கொண்டிருக்கிறேன். Nothing like it .. எந்த வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் ஒரு light மசாலா மூவி பீலிங்குடன், 4-5 MGR படம் பார்த்த திருப்தி. தீபாவளி மலர் Top class action!

    அதே மூடில் இருக்கையில் மீண்டும் "அந்த" கோரிக்கை ...

    .. அதாவது அடுத்த ஆண்டு முதல் .. மாதம் இரண்டு Tex வந்தாக்கா சூப்பர் (once a fortnight) !

    ReplyDelete
    Replies
    1. வந்தா நல்லாத்தான் இருக்கும்.
      +11111

      Delete
    2. ////அதாவது அடுத்த ஆண்டு முதல் .. மாதம் இரண்டு Tex வந்தாக்கா சூப்பர் (once a fortnight) ! ////

      எனக்கெல்லாம் வாரம் ஒன்னு வந்தாக்கூட ஓகே தான்!

      Delete
    3. எனக்கெல்லாம் வருஷம் ஒன்னு வந்தாக்கூட ஓகே தான்!!

      Delete
    4. அப்ப நீங்க ஏதாவது ஒரு டெக்ஸ் புத்தகம் மட்டும் வாங்கினால் போதுமே கணேஸ் குமார்.... உங்க ப்ராப்ளம் தீர்ந்துடுமே.....ஆனா எங்களுக்கு மாதம் இரண்டு டெக்ஸ் புத்தகம் வந்தாலும் பத்தாதே.....

      Delete
    5. நா எங்க வாங்கற சந்தால தானா வந்துடுது.

      Delete
    6. நீங்கள் செல்வதை அடுத்த வருடம் முயற்ச்சிக்கிறேன் கண்ணன். கடந்த இரு வருடங்கள்களாக காமிக்ஸ் நிதி நிலைமை சரியாக இல்லை.சந்தாவில் சேருவோர் எண்ணிக்கை 2014 விட குறைந்து கொண்டே போவதால் போன வருடம் கட்டினேன். இந்த வருடமும் அதுவே தொடர்ந்தது.

      டெக்ஸ் மாதம் இரண்டு வெளியிட்டு சந்தா 10000, 15000 வந்தால் நான் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது தானே?

      Delete
    7. Raghavan : ஒரு dedicated டெக்ஸ் தடத்தினை சென்றாண்டு போல மறுபடியும் உருவாக்கிட எனக்கும் ஆசை தான் ; ஆனால் மொழிபெயர்ப்புச் சுமைகளை சமாளிக்க முடியவில்லை என்பதே bottomline !

      பக்க எண்ணிக்கை ஜாஸ்தி என்பது ஒருபுறமிருக்க, இப்போதெல்லாம் நம்மவருக்கு நாம் தந்து வைத்திருக்கும் அந்த உச்சபட்ச ஸ்டார் அந்தஸ்துக்கு நியாயம் செய்யும் விதமாய் வரிகளை வீரியமாகவே அமைத்திட வேண்டியதொரு மௌனமான கட்டாயம் நிலவுகிறது ! இதன் பொருட்டு எனக்கு அவசியமாகிடும் man hours ரொம்பவே கூடிக் கொண்டே போகிறது !!

      நம் அனைவருக்கும் திருப்தி தரக் கூடிய விதமாய் TEX கதைகளுக்குப் பேனா பிடிக்க யாரேனும் அகப்பட்டால் உங்கள் கனவு நிறைவேறிடக் கூடும் !!

      Delete
  54. இந்த மாத இதழ்கள் என்று கிளம்புகிறது எனச் சொல்லவே இல்லையே சார்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் அடுத்த மாதம் முதல் நாளுக்குள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது ரவி சாரே...;-)

      Delete
    2. Arivarasu @ Ravi : மாதம் புலரும் சமயம் சார் !! இம்முறை பணிகள் ரொம்பவே சிரமமாகி விட்டதால் என் மேஜையினில் irunthe அவை புறப்பட நாழியாகிவிட்டது !! பைண்டிங்கில் ரண வேலை காத்துள்ளது !!

      Delete
  55. கொலை கரம் அட்டைபடம்: யாருப்பா அது ஜானி தலையில் நரை தெரிகிற மாதிரி அட்டைபடத்தில் வரைத்து? ஸ்டெல்லாவ வயசு குறைச்சு காண்பிக்க ஜானியை இப்படி பழி வாங்குவது நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. @ PfB

      அதுகூட பரவாயில்லீங்க... அந்த ஆள் ஏன் ஜானியின் தலையை மோந்து பாக்கிறான்னுதான் தெரியல!

      Delete
    2. ///... அந்த ஆள் ஏன் ஜானியின் தலையை மோந்து பாக்கிறான்னுதான் தெரியல!///


      ஏதாச்சும் அமேசான் காட்டு அற்புத மூலிகைத் தைலத்தின் வாசம் வருதான்னு செக் பண்ணியிருப்பாரு..!!

      Delete
    3. என்ன இருந்தாலும் ஸ்டெல்லா ஸ்டெல்லா தான்.

      Delete
    4. Erode VIJAY : "சும்மா படிய வாரிய கேசம் ஜீவ மரணப் போராட்டத்தின் போது கூட இம்மியும் கலையாமே இருக்குதேப்பா - இன்னா மேட்டரு ? இன்னா பிரிலகிரீம் தேய்ச்சுக்கிறே ?"

      வில்லனின் mindvoice ?

      Delete
  56. சென்ற வார பதிவிற்கான பதில் இது -

    யெஸ்! கண்டிப்பாக புனர்ஜென்மம் எடுக்கச் செய்யுங்கள் டேஞ்சர் டயபாலிக்-ஐ!

    ReplyDelete
    Replies
    1. discoverboo : 2018 -ன் அட்டவணை கிட்டத்தட்ட ரெடி என்றால் நம்ப முடிகிறதா சார் ? So டயபாலிக் in 2018 என்பது சாத்தியமில்லை ! அப்புறமாய் அப்புறம் பார்த்துக் கொள்வோமே ?

      ஒருவித mixed reactions சகிதம் பயணித்து வரும் நாயகர் இவர் என்பதில் லேசான நெருடல் தொடராது இல்லை !!

      Delete
    2. 2018'slot list filled.
      இது எப்ப.

      Delete
  57. ////தினமும் தூங்கப் போகும் வேளையில் கூர்க்கா விசில் சத்தமே என்னைத் தாலாட்டி வந்துள்ளது இந்த வாரத்தின் முழுமைக்கும் !!///

    நம்ம தலீவரின் குரட்டைச் சத்தம் கூட விசில் சத்தம் மாதிரிதான் இருக்கும் எடிட்டர் சார்! தாரமங்கலத்துல கூர்க்காவே கிடையாதாம்... நள்ளிரவு 8 மணியிலிருந்தே விசில் சத்தம் பட்டையைக் கிளப்புமாம்!

    ReplyDelete
    Replies
    1. ///நம்ம தலீவரின் குரட்டைச் சத்தம் கூட விசில் சத்தம் மாதிரிதான் இருக்கும் எடிட்டர் சார்!///

      ஆமாமா..!!
      தலீவர் பகல்ல குறட்டை விடுறப்போ, தாரமங்கலத்துல பல தாய்மார்கள் குக்கர் விசிலடிக்குதுன்னு நினைச்சி வேகாத சோற்றை இறக்கிவெச்சி கணவன்மார்களுக்கு பரிமாறிடறாங்களாம். அதனால தாரையைச் சேர்ந்த குடும்பத்தலைவர்கள் மொத்தமா சேர்ந்து தலீவரோட குறட்டைக்கு சைலன்சர் பொருத்தமுடியாமான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்களாமாம். .!!

      Delete
    2. @ கிட்

      ஒருதபா நம்ம தலீவர் பஸ்ஸுல ஏறி டிக்கட் வாங்கிட்டு, அப்படியே தூங்கிட்டாராம்!
      அப்புறமென்ன, அந்த பஸ் பக்கத்து ஊருக்கே நாலு மணி நேரம் லேட்டாத்தான் போய்ச் சேர்ந்துச்சாம்!

      Delete
    3. கிர்ர்ர்......சேந்தம்பட்டிலியே குறட்டை விடாம தூங்குற ஒரே பரிதாப ஜீவன் நான் மட்டுமே.....

      ஆபிசுல கூட கேட்டு பாருங்க..

      என்னை போயி....ஹூம்....:-(

      Delete
    4. ///ஆபிசுல கூட கேட்டு பாருங்க..///

      எப்படி கேக்குறது?
      அதான் எல்லாப் போனையும் (லேன்ட்லைனக் கூட) சைலன்ட்ல போட்டுட்டுதானே எல்லோரும் தூங்குறிங்க..!!
      சரி நேர்ல வந்து கேட்போம்னு பாத்தா காலிங் பெல்லும் சைலன்ட் மோடுல இருக்கு..!!

      கேட்டுப் பாக்குறதாமுல்ல கேட்டு..!!

      Delete
    5. ///அப்புறமென்ன, அந்த பஸ் பக்கத்து ஊருக்கே நாலு மணி நேரம் லேட்டாத்தான் போய்ச் சேர்ந்துச்சாம்!///

      சும்மா சும்மா எங்களைப் பாத்து விசிலடிச்சிட்டே இருக்கான்னு சொல்லி, அந்த பஸ்ஸுல இருந்த ஆன்ட்டீஸும் பாட்டீஸூம் தலீவர பின்னியெடுத்துட்டாங்கன்னு தாரை டெய்லியில தலைப்பு செய்தி கூட வந்துச்சே..!!

      Delete
    6. தலீவரை "வச்சு" செய்யற வாரமா டெரர் பாய்ஸ் ?

      Delete
    7. என்ன இருந்தாலும் சவுண்டு ஜாஸ்திதான்.

      Delete
  58. @ திரு விஜயன்

    ////இப்போதைக்கு எனக்குள் விரவி நிற்கும் இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்களேன் guys ? இன்னும் இருப்பதோ-முப்பதோ ஆண்டுகளுக்குப் பின்பாய் நாமிப்போது சிலாகித்து ரசிக்கும் கதைகளுமே இதே போல 'கெக்கே-பிக்கே' சிரிப்பினை உருவாக்கிடுமா ?////

    எனது பதில்::::::::

    தாத்தா: இந்த தாத்தா நியாபம் வரும்போதெல்லாம் இந்த பொக்கிஷத்தையும் அப்பப்ப தடவிகொடுத்து படிக்க மறந்துடாதே செல்லம்...

    தந்தை: இவனை காலேஜ் அனுப்பரப்போ கூட... இந்த காமிக்ஸை தான் கட்டிட்டு அழுதிட்டு இருந்தான்..

    மனைவி: என்னை பொண்ணு பார்த்தபின்னும் கூட...இந்த காமிக்ஸை தான் கட்டிட்டு அழுதிட்டு இருந்தாரு...

    நண்பர்கள்: அனுபவிக்க உலகத்துல எத்தனையோ இருந்தும்கூட...எப்பபாரு இந்த காமிக்ஸை தான் கட்டிட்டு அழுதிட்டு இருப்பான்...

    மகன்: நான் பொறந்தப்போ கூட... அப்பா இந்த காமிக்ஸை தான் கட்டிட்டு அழுதிட்டு இருந்தாரு..

    மருமகள்: எனக்கு கல்யாணம் ஆனப்போ கூட... உங்க தாத்தா இந்த காமிக்ஸை தான் கட்டிட்டு அழுதிட்டு இருந்தாரு...

    பேரன் அவன் நண்பனிடம் : என்னை கட்டிட்டு அழுதுட்டே என்னோட தாத்தா இந்த புக்ஸ் ரூம் சாவியை கொடுத்தாரு...ஐ லவ் மை கிரான்பாதர்...

    பேரனின் பாட்டி: உங்க தாத்தா மாதிரியே எப்ப பாரு இந்த காமிக்ஸையே கட்டிட்டு அழுதிட்டு இருக்கியே....

    இதற்கு மேல் விளக்கம் தேவையா என்ன...?????

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓ. . .!!

      இதான் விளக்கமா???? :-)

      Delete
    2. உண்மையோ உண்மை மாயாவி சார்.

      Delete
    3. சரியான விளக்கம் மாயாஜீ....

      Delete
    4. புதுசா ஆவுறதுக்கு இன்னும் ஜாஸ்தி இல்லே தான் ; but நண்பர்களை "தாத்தா"க்களாய்க் கற்பனை செய்து பார்த்தால் சும்மா 'ஜானி நீரோ' கதை படிச்சா மாதிரி சிப்பு-சிப்பா வருது !!

      கற்பனை பண்ணித் தான் பாருங்களேன் !!! ஆளுக்கொரு சோடாபுட்டிக் கண்ணாடியும் ; அப்புசாமித் தாத்தாவின் வெண்சிகையோடும் !!!

      நம்ம அஜய் கிட்டே சொல்லி ஒரு க்ரூப் "எதிர்கால" போட்டோவை உருவாக்கச் சொல்லிப் பார்த்தால் ஒரு மாசத்துக்குச் சிரிக்கலாம் என்று நினைக்கிறேன் !!

      Delete
    5. ///நம்ம அஜய் கிட்டே சொல்லி ஒரு க்ரூப் "எதிர்கால" போட்டோவை உருவாக்கச் சொல்லிப் பார்த்தால் ஒரு மாசத்துக்குச் சிரிக்கலாம் என்று நினைக்கிறேன்!! ///


      என்ன ஒரு டெர்ரரான ஆசை..!!

      ஆனா இப்பவே கொஞ்சம் அப்புசாமி தாத்தாக்கள் நம்ம குரூப்பில் இருக்கத்தானே செய்கிறார்கள். டை அடித்தும் தொப்பி போட்டும் இளமையை காப்பாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான் சார். .!!

      Delete
  59. ///....அது வந்து கழுத்தை ஒரே திருகாய்த் திருகி எதிரிகளை போட்டுத் தள்ளும் ஒரு மெகா வில்லனை நம்மவர் போட்டுத் தாக்கும் சாகசமிது !! ///

    ஆங்.! ஞாபகம் இருக்கு சார். துப்பாக்கி வெச்சிருந்தாலும் கையாலயே கழுத்தை கரெக்டான வார்த்தையில் சொல்லணும்னா மென்னியை முறிப்பதே அந்த வில்லனுக்கு பிடித்தமான விசயம்.அதுவும் இராணுவத்தில் பணிபுரியும்போது கூட எதிரிநாட்டு வீரர்களை சுடாமல் கையாலயே மென்னியை முறிப்பார் இந்த வில்லன். என்னா வில்லத்தனம். .!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : //என்னா வில்லத்தனம். .!!//

      ஆனாக்கா இந்த தபா கதையைப் படிக்கும் சமயம் why கெக்கே-பிக்கே coming ன்னு தான் புரிலே எனக்கு !!

      Delete
    2. எடிட்டர் சார். .!

      நீங்களே ஒட்டுமொத்தமா ஜானிய கலாய்ச்சுட்டா எப்படிங்க சார்.?!

      எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க சார், அடுத்த வாரம் ஜானிய நம்பித்தான் இருக்கேன். .! :-)

      Delete
  60. போனவாரம் Zombies பத்தி நெறய்ய விவாதங்கள் போயிட்டு இருந்துச்சி.

    ஒருத்தர் வேண்டாம்னு சொல்லி காரணம் சொன்னப்போ, நியாயந்தானே வேண்டவே வேண்டாம்னு தோணுச்சி.

    இன்னொருத்தர் வந்தபின்னாடி படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, எடிட்டர் செலக்ட் செஞ்ச கதை நல்லா இருக்கவே வாய்ப்புகள் அதிகம்னு சொன்னப்போ,
    அட..! இதுவும் நியாயந்தானேன்னு தோணுச்சி..!

    இப்போ, Zombies வந்தா நல்லாயிருக்கும்னு சொல்லலை, வரலைன்னா நல்லா இருக்காதுன்னும் சொல்லலை, நல்லா இருக்குறது வந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லத்தோணுது..!

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொன்னீங்க கண்ணரே...:-)

      Delete
    2. ///Zombies வந்தா நல்லாயிருக்கும்னு சொல்லலை, வரலைன்னா நல்லா இருக்காதுன்னும் சொல்லலை, நல்லா இருக்குறது வந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லத்தோணுது..!ombies வந்தா நல்லாயிருக்கும்னு சொல்லலை, வரலைன்னா நல்லா இருக்காதுன்னும் சொல்லலை, நல்லா இருக்குறது வந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லத்தோணுது..!////

      நாளைக்கு அமாவாசை!

      அ அது வந்து உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லியே கண்ணன் சார்.

      Delete
    3. @ ALL : இந்த ZOMBIES விவாதங்களை இம்மாத இதழ்களை முடித்த பின்பு தான் நிதானமாய்ப் படித்துப் பார்க்க வேண்டும் !! So இது எனது மேலோட்டமான சிந்தனை மாத்திரமே !

      THE WALKING DEAD என்றதொரு அமெரிக்க ZOMBIE தொடர் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்களென்று நினைக்கிறேன் ; கிட்டத்தட்ட 160 + கதைகள் ; வண்டி வண்டியாய் award கள் ; ஏராளமான நாவல் வடிவங்கள் ; ரகளையான TV தொடர்கள் என்று வாசகக் கற்பனைக் களங்களை அட்டகாசமாய் வடிவமைத்துள்ள படைப்பு இது !! எதிர்கால உலகில், குற்றுயிராய்த் திரியும் இதைப் போன்ற டெர்ரர் பார்ட்டிகள் காமிக்ஸ் உலகினில் எக்கச்சக்கமாய் சுற்றித் திரிகின்றன !

      நாமிப்போது முயற்சிக்க எண்ணியுள்ளது பிரான்க்கோ-பெல்ஜிய படைப்பொன்று - உரோமக் கால்களைக் குத்திட்டு நிற்கச்செய்யும் சித்திரத் தரத்தில் !!

      முயற்சித்தே பார்த்திரா ஒரு புது genre ஐ ; நான் தேர்வு செய்திருப்பது எந்தக் கதையை என்பதைத் தெரிந்தும் கொள்ளாமலே - வேணாமென கருதுவதில் லாஜிக் தட்டுப்படவில்லையே !! Of course லாஜிக் இல்லாக் கதைக் களங்கலே அவையும் - ஆனால் செலபோனுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்வது போல மின்சார ஓட்டைகளைத் தேடித் திரியும் மாயாவி மாமாவும், சிரசாசன SMS அனுப்பும் கூர்மண்டயர்களும் நம் நெஞ்சுக்கு நெருங்கியவர்கள் தானே ? லாஜிக் என்ற வாசனையை பேருக்கு கூடக் கொண்டிரா பார்ட்டிகள் தானே அவர்களும் ?

      மெது மெதுவாய் எல்லைகளை விரிப்போமே guys ?

      Delete
    4. ///
      நாளைக்கு அமாவாசை!

      அ அது வந்து உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லியே கண்ணன் சார்.///


      G P @ :):):):)

      அமாவாசை யெல்லாம் பிரச்சினை இல்லீங்..! (ஏன்னா எப்பவுமே இப்படித்தான்.)

      அந்த கடோசி வார்த்ததேன் பிரச்சினை. "சார் "!

      சும்மா கண்ணன்னு சொல்லுங்க போதும்.!
      (நல்லா கவனிங்க! ரெண்டு வார்த்தைக்கும் இடைவெளி விட்டுருக்கேன்.)

      சும்மாக்கண்ணன்னு சொல்லிடாதிங்கோ..!! :-)

      Delete
    5. ///நாமிப்போது முயற்சிக்க எண்ணியுள்ளது பிரான்க்கோ-பெல்ஜிய படைப்பொன்று - உரோமக் கால்களைக் குத்திட்டு நிற்கச்செய்யும் சித்திரத் தரத்தில் !! ///

      Welcome Zombies. Welcome to our den ..!

      Delete
  61. மாற்றம் ஓன்றே மாறாதது. ஓரு சில கதைகள் (எனக்கு டைகர் மற்றும் லார்கோ மற்றும் cartoon) காலத்தை வென்ற கதைகள் உள்ளன.
    ஆனால் சில சமயம் மாற்றம் விதைக்கபட வேண்டும். கடிவாளம் கட்டிய குதிரை போல் ஓரே பாதையில் பயனிக்காமல் நமது ரசனை சற்று மாற்ற முயற்சி செய்யவது கூட நல்லதே. ஏனென்றால் மாற்றம் ஓன்றே மாறாதது.

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டே தட தடுக்கும் ஒரு மஞ்சள் சட்டைக்காரரின் திசையில் ஊரின் பெரும்பான்மையே லயித்து நிற்பதால், உங்களையும் அந்தப் பக்கமாக இட்டுச் செல்லவும் முயற்சிக்கத் தானே செய்கிறோம் ?

      அஸ்க்கு..பிஸ்க்கு...என்றபடிக்கு பழிப்புக் காட்டி வந்தாலுமே !!

      மாற்றம் வரும் !!

      Delete
  62. Dear editor
    March month tex was the best of tex in our comeback times!
    Great selection!

    ReplyDelete
    Replies
    1. ARVIND : Online விற்பனையிலும் அதகள முகம் காட்டியுள்ள இதழ் இது !!

      Delete
  63. @ ALL : இப்போல்லாம் இங்கே எட்டிப்பாத்தாக்க சும்மா கல்லாணவூட்டிலே தல காட்னாப் போல ஒரு பீலிங்கு !! இவ்ளோ ஜனம் புல் பூஸ்ட்டிலே பதிவுக்கு பதில் போடறப்போ மெர்ஸெல் ஆகிடுதப்பா !!! எம்மாம் ரகளை !!

    தூத்தேறி....சித்தே முன்னேவே ஆஜராகி இருக்கலாம்லேன்னு தோணிச்சி !!! ஆனாக்க நம்ம 'தலீவரு' கதையை.....அதான்பா மஞ்ச சொக்கா பார்ட்டியோட கதையே இன்னும் முடிச்ச பாடில்லையா ...அத்துக்கொண்டி லேட் ஆகிக்கினு போச்சு !! அதுவரைக்கும் வாயிலே வார்த்தை வலிச்சுக்கினே போகுது !! லைட்டா அஜீஸ் பண்ணிக்கோ வாத்யாரே !!

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார், இப்பத்தான் நீங்க ரொம்ப அழஹ்ஹா பேசுறீங்க! :D

      Delete
    2. @ வாத்தி

      ஒன்னு ஓரி பன்னிக்காதே வாத்யாரே...நீங்கோ ஊட்டண்டா போய் ஜோரா 'டெஸ்ட்' எழுதி பாஸ் ஆவுற மேட்டரை கவனிங்கோ...
      இந்த இந்த புல் பாம்ல கீற ஜனங்களை லைட்டா டாபாய்ச்சி வெக்கறேன்...

      கண்ணுகளா...நல்ல கண்ணை துடைச்சிட்டு கேளுங்கோ...அதுஇன்னாப்பா... சோம்புவோ...சாக்குபீஸோ...[ வுவ்வ்வ்] அந்த கண்ணம்மாபேட்ட பிசாசோட நாம தல டெக்ஸ் பூந்து விலாசுற ஒரு கத கீதுப்பா..அது இன்னான்னு புது ஐடி lion comics வந்து கொரல் கொடுப்பாரு...

      நீங்க இன்னா பண்ரீங்கன்னா...'தல' டெக்ஸ்க்கு நா கொரல் கொடுத்தத பாத்து கெக்கபிக்கன்னு சிரிங்கோ...இங்கே'கிளிக்'

      Delete
    3. ///அத்துக்கொண்டி லேட் ஆகிக்கினு போச்சு !! அதுவரைக்கும் வாயிலே வார்த்தை வலிச்சுக்கினே போகுது !! லைட்டா அஜீஸ் பண்ணிக்கோ வாத்யாரே !!///

      ஜாம் பஜார் ஜக்கு மேரியே பேசிகினாரு நம்ம எடிட்டரு..! அப்டியே ஃபுளோவா வார்த்தைங்கோ வந்து வுயுவுதற பாக்கச்சொல்லோ செம்ம மெர்சலா கீது..!!

      Delete
  64. Dear Editor, Just a suggestion. Why don't you try a book by doing Cloud Finding. Even movies are produced in this way.

    ReplyDelete
  65. Cloud Fundingக்கு நா(ங்க)ன் ரெடி. நீங்க ரெடியா?

    ReplyDelete
    Replies
    1. Senthil Vinayagam : காமிக்ஸ் படிக்கும் / ரசிக்கும் பொறுப்பே பெரும் பொறுப்பு நண்பரே !! அதைத் தாண்டிய சுமைகள் வேண்டாம் உங்களுக்கு !

      Delete
  66. Thanks Editor Sir. We know very well that you are trying your best every month. I just felt that we can also contribute a bit, that's all. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் எங்கள் அனைவரின் பங்களிப்புடன் ஒரு comics நச்சயம் வெளிவர வேண்டும்.

    ReplyDelete