Powered By Blogger

Saturday, June 21, 2025

ஜூலைக்கொரு வாடகை சைக்கிள் !

 நண்பர்களே,

வணக்கம்! பூமியின் ஒரு ஸ்பெஷல் தினத்துக்கு நல்வரவு! வருஷத்தின் ஜுன் 21-ம் தேதி தான் பூமியின் மேல்பாதியானது சூரியனை நோக்கிச் சாய்ந்து கிடக்குமாம் - ஆக நீண்டதொரு பகல் பொழுதையும், மிகச் சுருக்கமானதொரு இரவுப் பொழுதையும் உருவாக்கிட! வடதுருவ நகர்களிலெல்லாம் இந்த Summer Solstice தினத்தை செம விமர்சையாகக் கொண்டாடுவதை நானே பார்த்திருக்கிறேன்! So கிட்டத்தட்ட ஆண்டின் நடுப்பகுதி என்ற பொழுதில் இன்று நின்று கொண்டிருக்கிறோம்!

And காத்திருப்பது "ஆண்டுமலர் மாதம்" என்பதால் இந்த நொடியில் வாடகைச் சைக்கிளைத் தேடும் ஆட்டோகிராப் சேரனைப் போல மனசு flashback-க்குள் ஐக்கியமாகிட விழைகிறது! அது என்னமோ தெரியலை- அப்பப்போ பரோட்டாக்களை உள்ளே தள்ளினாலுமே சாலையோரக் கடைகளின் மாஸ்டர்கள் மலை போல மைதாவைக் குவித்துக் கொண்டு, ஈரானிய ஏவுகணைகளின் லாவகத்தோடு முட்டைகளை உடைச்சு அதனுள்ளே ஊற்றிவிட்டுப் பினைந்து தள்ளுவதைப் பார்க்கும் போதெல்லாம் பசிக்கிறது தானே?! அதே போலவே ஒரு நூறு தபா பழங்கதைகளை அசை போட்டிருந்தாலுமே நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பான அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் மண்டை நிறைய கேசமும்; அகம் அம்புட்டும் ரம்யமும் இருப்பது போலவே ஒரு பீலிங்! And செம தற்செயலாய் நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன் போலவே இப்போதும் இளவரசியுடன் பணியில் ஈடுபட்டிருக்க, nostalgia ஒரு மிடறு தூக்கலாய் அலையடிக்கிறது! "The பிளைஸி ஸ்பெஷல்'' இதழுக்கான எடிட்டிங் ஓடிக் கொண்டுள்ளதே!

1983......!! லக்கி லூக்குக்கு இணையாக "தனிமையே என் துணைவன்' என்று பாட்டுப் படிக்கும் நிலை தான் அன்று எனக்குமே! பதினான்கு வருடப் பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்ற தருணத்தில், அடுத்து என்ன செய்வதென்ற வழிகாட்டலுக்கு நமக்கு விதி லேது! அப்பாவால் அன்றாடப் பாடுகளையே அல்லலி­ன்றிச் சமாளிக்க முடியாத நாட்கள் அவை! And எனது தாய்வழிப் பாட்டியும் மிகுந்த ஆரோக்கியக் குறைபாடுகளோடு முட்டி மோதிக் கொண்டிருக்க- தாத்தாவால் எனக்கோசரம் எதுவும் செய்ய இயலா நிலை! மார்ச் இறுதியில் தேர்வுகள் ஓவர்- நானோ CBSE பள்ளி மாணவன் என்பதால் எங்களது ரிசல்ட்கள் டில்­லியி­ருந்து மே நடுவாக்கில் வெளியிடப்படும்! And மேயும் வந்து, ரிசல்ட்களும் வந்து, எங்களது Commerce பிரிவில் நான் டாப்பராகத் தேர்வானதும் நிகழ்ந்த வேத்திலேயே மறந்தும் போயின - becos ரொம்ப ரொம்பச் சீக்கிரமே எனக்குப் புரிந்துவிட்டது காலேஜ் பக்கமாய் தலை வைக்கும் வாய்ப்பு கூட நமக்கு வாய்க்கப் போவதில்லையென்று! அது நாள் வரைக்கும் நெதத்துக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தது - பள்ளி, கல்வி என்றெல்லாம்! ஆனால், திடுதிடுப்பென ஒவ்வொரு நாளுமே கேள்வி குறியாகியிருந்தது!

உடன் படித்த பசங்கள், பெண்கள் சகலரும் சென்னை, கோவை என ஆங்காங்கே கல்லூரிகளில் சேர்ந்திருக்க, அவர்களிருக்கும் திக்கைத் தவிர்ப்பதே எனது முதல் இலட்சியமாகிப் போச்சு! கடன் தொல்லைகள், கழுத்தைச் சுற்றிய பாம்பாய் படுத்தியெடுக்க, சீனியர் எடிட்டர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் விடுவார் ; so அலறும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் பொறுப்பு நம்மளதே! அன்றெல்லாம் விடியற்காலைகளில் கந்தர் சஷ்டியோ, சுப்ரபாதமோ ஒ­லித்திடாது ; மாறாக, மார்வாடி மாமையாக்களிடமிருந்தும், செட்டியார் சேட்டன்களிடமிருந்தும் குளிரக் குளிர கிட்டிடும் அர்ச்சனைகளே காதை நிரப்பிடும்! அக்காக்கள் இருவருமே திருமணமாகிப் போயிருந்தனர் & தம்பி + தங்கை ஸ்கூல் போகும் பிள்ளைகள்! So காலைப் பொழுதுகளை காது நிறைய கரம் மசாலாக்களால் நிரப்பிய பிற்பாடு, குளித்துக் கிளம்பிப் போக போக்கிடம் கிடையாது! அப்பாவின் ஆபீஸுக்குப் போனால், கடனுக்கு ஈடாக ஏதேனும் மிஷின்களை ஈட்டிக்காரப் பிரபுக்கள் ஜப்தி பண்ணி தூக்கிச் செல்லும் காட்சிகளே வரவேற்கும் என்பதால் அங்கே போகவே மனம் ஒப்பாது! தவிர, முத்து காமிக்ஸ் ஆபீஸில் நான் அமர்ந்திருக்கும் மேஜையில் அப்போது திருவாளர் முல்லை தங்கராசன் நடுநாயகமாய் குந்தியிருப்பார்! முத்து காமிக்ஸ் வாரமலருக்கு ஏற்கனவே மங்களம் பாடப்பட்டிருந்த நிலையில், அடுத்து க்ரைம் நாவல்களை வாரயிதழாக வெளியிடலாமென்று அப்பாவிடம் கொக்கி போட்டுக் கொண்டிருப்பார்! So ஆபீஸ் பக்கமாய் போவதை ரொம்பவே குறைத்துக் கொண்டேன்!

என்ன செய்வதென்றே தெரியாத அந்த நாட்களில் நான் செய்த குடாக்குத்தனங்களை இன்று நினைத்தால் சிரிக்கத் தான் தோன்றுகிறது! Hindu நியூஸ்பேப்பரின் வரி விளம்பரங்களை நெதமும் விடாமல் படிப்பேன்; ஏதாச்சும் டிப்ளமோ படிப்புகளோ; வூட்டிலி­ருந்தபடியே செய்யக்கூடிய வேலைளோ கண்ணில் படுகின்றனவா? என்ற தேடலில் ! "சேலம் டாக்டர் ஈரோடு விஜயம்'' போன்ற பூமியை அதிரச் செய்யும் விளம்பரங்களையெல்லாம் தாண்டி கண்ணில்பட்டது ஒரு ad! அது தான் "வீட்டி­லிருந்தபடியே டிடெக்டிவாக ஆவது எப்படி?'' என்றதொரு டிப்ளமோ படிப்பு(?!!!!) ......அரை லூசாட்டம் அதற்கொரு தபால் போட்டேன் - என்ன தான் சொல்றானுங்கன்னு பார்ப்போமே என்ற நினைப்பில்! தபால் போட்டாச்சு - ஆனால், அவர்கள் அனுப்பக் கூடிய பதிலை வீட்டில் யாராச்சும் பார்த்துவிட்டால் சிரிப்பாய் சிரித்து விடுவார்களே என்ற பயம் தொற்றிக் கொண்டது! "ஆஹா.. என்னடா இது முத்து விஜய ரிப் கிர்பிக்கு வந்த சோதனை?" என்றபடியே தினமும் போஸ்ட்மேன் வீட்டுப் பக்கமாய் வரக் கூடிய நேரத்துக்கு ரோட்டிலேயே போய் நிற்க ஆரம்பித்தேன்!

"நாலு நாளாய் நடுரோட்டில் பிள்ளை திடீரென தேவுடா காக்குதே?'' என்று அம்மாவுக்கு சந்தேகம் எழுந்திடக் கூடாதே என்ற பயமும் இன்னொரு பக்கம்! ஐந்து நாட்கள் கழித்து ஒரு பதினைந்து காசு போஸ்ட்கார்ட் வந்தது - ரப்பர் ஸ்டாம்பில் "என்னவோ ஒரு டிடெக்டிவ் இன்ஸ்டிட்யூட்'' என்ற விலாசத்தோடு! சேலம் பக்கமாய் ராசிபுரமோ, ஆத்தூரோ அவர்களது கம்பெனி(!!!) என்று பார்த்தேன்! "ஆறு மாசம் படிச்சுப் போட்டா அடுத்து சேம்சு பாண்ட் நீங்களே தான்'' என்ற ரேஞ்சுக்கு என்னவோ எழுதியிருந்தார்கள்! "அஞ்சல்வழியில் படிக்கிற சமாச்சாரங்களை அனுப்பி வைப்போம்; நீங்க இப்போ ஒரு 150/- அனுப்பி வைக்க வேண்டியது!'' என்றும் இருந்தது! நாற்பத்தி இரண்டு வருஷங்களுக்கு முன்னே அதெல்லாம் வெயிட்டானதொரு தொகை! என் கையிலோ வெறும் அரையணா கூடக் கிடையாது! இத்தனை பணத்துக்கு எங்கே போவதென்று புரியலை!

என்னைப் போலவே வேலையற்ற எவனோ ஒருத்தன் ராசிபுரத்திலி­ருந்தபடியே காதிலே பூச்சுற்றி நாலு காசு சம்பாதிக்கப் பார்க்கிறான் என்பது கூட மண்டைக்குள் அந்த நாட்களில் எட்டவில்லை! தாத்தாவிடம் ஏதேதோ சொல்லி இரண்டோ- மூன்றோ தவணைகளில் அந்த ரூ.150-ஐ கேட்டு வாங்கவே கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் பிடித்தன! மொத்தமாய் காசு சேர்ந்த பின்னே அதை மணியார்டர் பண்ண போஸ்ட் ஆபீஸிற்குப் போனால், படிவத்தைப் பூர்த்தி செய்யக் கூடத் தெரியலை நமக்கு! பள்ளிக்கூடத்தில் பெரிய பருப்பு- but ஒரு சாதாரண படிவத்தை நிரப்பவே தடுமாறும் நிலையாகிப் போச்சே என்று துப்பிக் கொண்டே யாரிடமோ கேட்டு, ஒரு மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து பணத்தை கவுண்ட்டரில் நீட்டினேன்! அங்கே அமர்ந்திருந்த மனுஷன்- "மணியார்டர் கமிஷன் இவ்ளோ.. அதையும் சேர்த்து எடுத்து வை தம்பி!'' என்றார்! ஆஹா.. இதுக்குமொரு கட்டணம் உண்டா? என்று பேந்தப் பேந்த முழித்தபடியே ஆபீஸிற்கு ஓட்டமெடுத்தேன் - அந்த ரெண்டோ, மூணோ ரூபாய்களை வாங்கி வர! ஒருவழியாய் மணியார்டரை அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது, என் மனக்கண்ணில் ஜானி நீரோ... காரிகன்.. ரிப் கிர்பி என்று ஓடிக் கொண்டிருந்தனர்! கூடிய சீக்கிரமே நாமளும் அந்த ரேஞ்சுக்கு டிடெக்டிவாகி இருப்போமென்று மெய்யாலுமே நம்பியிருந்தேன்! மறுநாள் முதல் உச்சிப் பொழுதில் போஸ்ட்மேனுக்காக ரோட்டில் காத்திருக்கும் படலம் தொடர்ந்தது!

நாட்கள் சிறுகச் சிறுக நகர்ந்தன.. மணியார்டரைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதென்று ஒரு சிறு அட்டைத் துணுக்கை மட்டுமே போஸ்ட்மேன் தந்தார்! தொடர்ந்த நாட்களில் பகல்களும் புலர்ந்தன; போஸ்ட்மேனும் வருவார் but "ஒண்ணுமில்லே'' என்று சைகை காட்டியபடியே போயும் விடுவார்! விடாப்பிடியாய் இரண்டு வாரங்கள் எல்லைவீரனாய் ரோட்டில் நின்றதன் பின்னே தான் சிறுகச் சிறுக உரைக்க ஆரம்பித்தது - எல்லாமே ஒரு டகால்டி என்பது! காசும் போச்சு; ஒரு மாதத்துக் கனவுகளும் போயிண்டே.. என்பது புரிபட்ட நேரத்தில் தொண்டையெல்லாம் அடைத்தது; ஆனால், கஷ்டத்தைச் சொல்லி­ அழக் கூட ஆள் கிடையாது ! வெறுத்துப் போயிருந்த அந்தப் பொழுதில் தான் ஒரு நல்ல மனிதரின் பரிச்சயம் கிட்டியது!

அந்நாட்களில் மாலை மலர் குழுமத்தி­லிருந்து "தேவி' என்ற வாரயிதழ் ஒன்றினை வெளியிட்டு வருவார்கள்! அதற்கான அட்டைப்படம் மட்டும் அப்பாவின் அச்சகத்தில் ப்ரிண்ட் ஆகும். திரு.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரான திரு.ராமசந்திர ஆதித்தன் அவர்கள் அதனை நடத்திக் கொண்டிருந்தார்! அப்பா மீது அவருக்கு நிரம்ப அன்பும், நம்பிக்கையும் உண்டு! படு சுமாராக "தேவி' அட்டைப்படங்களை அச்சிட்டு அனுப்பினாலும், முகம் சுளிக்க மாட்டார்கள்! அவரது மூத்த மகன் திரு.கண்ணன் ஆதித்தன்! அமெரிக்காவில் கல்வி கற்று முடித்து சென்னைக்குத் திரும்பியிருந்தார்! அச்சுத்துறை சார்ந்த அனுபவம் அவருக்குக் கிட்டினால், நல்லதென்று அவரது தந்தையார் கருதிட, அன்றைக்கு அச்சுத் தொழிலுக்கு மையமாய் திகழ்ந்த சிவகாசியில் சில நாட்களைச் செலவிட்டால் பயனுள்ளதாக இருக்குமென்று எண்ணியிருந்தார்! "சிவகாசி" என்ற உடனே அந்நாட்களில் அவர்களுக்கு இருந்த பிரதான பரிச்சயம் நம்ம சீனியர் எடிட்டரும், அவரது அச்சகமும் தான்! So திரு.கண்ணன் ஆதித்தன் அவர்கள் சிவகாசிக்கு ஒரு வாரமோ என்னவோ visit அடித்தார்!

அறவே வேலையே இல்லாத அரைவேக்காடு நான் இருந்ததால், கண்ணன் ஆதித்தன் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர்! அன்றைக்கு சிவகாசியில் ஒரேயொரு மிதமான லாட்ஜ் மட்டுமே உண்டு; ஆனால், அதுவும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ரகமெல்லாம் கிடையாது! வருகிறவரோ பாரம்பரியமிக்கப் பெரிய குடும்பத்தவர் ; அமெரிக்காவில் கல்வி கற்றிருந்தவர்! So இந்தப் புறாக்கூண்டில் எவ்விதம் தாக்குப் பிடிப்பாரோ? என்ற பயம் எனக்கு! தவிர, இந்த ஊரில் தெருவுக்குத் தெரு இருக்கும் பாய் கடை பரோட்டாக்கள் தான் அன்றைய McDonald's.....Burger King...KFC...! புதுசாய் வருபவர்கள் மெய்யாலுமே திணறித் தான் போவார்கள்! ஆனால், மலர்ந்த முகத்தோடு வந்து சேர்ந்த கண்ணன் அவர்கள் எதையுமே ஒரு குறையாகப் பார்க்கக் காணோம்! சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உடுப்பி ஹோட்டலுக்கு என்னோடு போய், விளக்குமாற்றால் வருடப்பட்ட கற்கள் மீது சுடப்பட்ட தோசைகளையும் சங்கடங்களின்றிச் சாப்பிட்டார்; சந்துக்குள் இருந்த நமது ஆபீஸிற்கும் சங்கோஜங்களின்றி நடந்தே வந்தார்! பிராசஸிங் நுணுக்கங்கள்; அச்சுத்துறை டெக்னிக்ஸ் என்று கவனமாய் பார்வையிட்டார்!

ஓய்வாய் ஹோட்டல் ரூமில் இருக்கும் போது தான் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்- "நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க ப்ரோ?'' என்று!! அந்நாட்களில் நம்பளுக்கு புடிக்காத ஒரே வினா அது தான்......ஆனால், ஓடவோ, ஒளியவோ இடமிருக்கவில்லை - அவர் உள்ளன்போடு அந்தக் கேள்வியினை முன்வைத்த போது! எனக்கோ, எதையாச்சும் புலம்பி, ஒப்பாரி வைத்துத் தொலைத்தால் அப்பாவின் பெயர் கெட்டு விடுமே என்ற பயம்! So எதையோ சொல்லி­, பூசி மெழுகிட நான் எத்தனித்தாலுமே அவருக்கு நிலவரம் புரிந்தது! ஆறுதலாய் பேசினார்...! "உனக்கு எதில் ஆர்வமுள்ளதோ- அதனில் முயற்சி செய்....சென்னை வந்தால் ஏதும் உதவி தேவை எனில் சொல்லு !" என்று சொன்னார்! ஏனோ தெரியலை - அன்று இரவு அழுதேன்.. ரா முழுக்க அழுதேன்! எதற்குமே பிரயோஜனமாகிட மாட்டோமோ? என்று கொஞ்ச காலமாகவே அரிக்கத் துவங்கியிருந்த அரக்கன் அழுது முடித்த போது லேசாக ஓய்ந்தது போலி­ருந்தது காலையில் எழுந்த போது!

ஆனால், நம்ம கி.நாக்களுக்கு அன்றைக்கே ட்ரெய்லர் விட்டிருந்தார் புனித மனிடோ! அழுகாச்சிப் படலம் அத்தனை சுலபமாய் ஓய்ந்திருக்கவில்லை! சுகர்; ஆஸ்துமா; இருதயக் கோளாறு என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்த எனது பாட்டி ஒரு டிசம்பர் நாளில் just like that ஒற்றை நிமிடத்தில் இயற்கையோடு ஐக்கியமாகியிருந்தார்! மூன்று நாட்களுக்கு முன்னே மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தாத்தாவையும், பாட்டியையும் நான்தான் வழியனுப்பி வைத்திருந்தேன்! பாட்டியை அதன் பின்பாக நான் பார்த்தது சடலமாகக் கொண்டு வரப்பட்ட போது தான்! ஒற்றை நாளில் உலகமே சரிந்தது போ­லிருந்தது! பதினாறு வயதில் நான் பார்த்த முதல் family member-ன் மரணம் அது - உலுக்கித் தள்ளிவிட்டது! பாட்டிக்கு அப்போது வயது 55 தான் எனும் போது இழப்பை ஜீரணிக்க கிஞ்சித்தும் முடியவில்லை! வீட்டின் முதல் பேரன் என்ற வகையில் சின்ன வயதில் பாட்டியை ரொம்பவே பெண்ட் கழற்றியிருந்ததெல்லாம் மனதில் நிழலாட, ஒவ்வொரு ராத்திரியும் மொட்டை மாடியில் தனியாய் போய் அமர்ந்து அழுவேன்! ஆனால், எல்லா இருண்ட குகைகளின் இறுதியிலும் ஒரு வெளிச்சக் கீற்று இல்லாது போகாது என்பது நிஜம் தான் போலும்! பாட்டியின் மறைவைத் தொடர்ந்து தாத்தா தனித்து இருக்காது, எங்களோடே குடியிருக்க வந்துவிட்டார்கள்! அம்மா தான் அவருக்கு ஒரே பிள்ளை என்பதால் அந்தக் குடிமாற்றம் சுலபமாகிப் போனது!

ஆறு மாதங்களாய் என்னை வதைத்துக் கொண்டிருந்த தனிமை சிறுகச் சிறுகக் கரைந்தோடத் துவங்கியது தன் பிற்பாடே! தாத்தாவுமே ஒரு அச்சகம் நடத்தி வந்தவர் என்பதால் சென்னை ட்ரிப்ளிகேனில் உள்ளதொரு பாரம்பரியமிக்க சீட்டுக் கம்பெனிக்கு வருஷா வருஷம் சாமி படம் போட்ட காலெண்டர்கள் ப்ரிண்ட் செய்து தருவார்! 1983 டிசம்பரிலோ பாட்டியின் காரியங்கள் முடிந்திருந்த நிலையில் தாத்தாவால் காலெண்டர் தயாரிப்பினைக் கண்காணிக்க இயலவில்லை! "நீ பார்த்துக்குறியாடா கண்ணா?'' என்று தாத்தா கேட்ட போது - இஸ்ரேல் - ஈரான் யுத்தத்துக்கு மத்தியஸ்தம் பண்ணும் பொறுப்பையே என்னிடம் ஒப்படைத்தது போலிருந்தது! அன்று வரைக்கும் கண்ணாடியில் பிரதிப­த்த ஒரு தண்டச் சோற்றுத் தடியன் திடுதிடுப்பென காணாது போய்விட்டது போல் பட்டது!

ஒரு விநாயகர் படம்! 30.000 காலண்டர்கள்! அச்சிட்டு அவர்களது ஐந்து கிளைகளுக்கு (டில்­லி, மும்பை, சென்னை; பெங்களூர்; கல்கத்தா ) அனுப்பிட வேண்டும்! தாத்தாவின் பிரஸ் மூடியிருந்தது என்பதால் அப்பாவின் மூத்த சகோதரரிடம் பிரிண்ட் பண்ணி வாங்குவது என்று தீர்மானித்தேன்! (பின்நாட்களில் லயன் காமிக்ஸ் துவக்கம் கண்ட பிற்பாடு நாமாக அச்சு இயந்திரங்கள் வாங்கும் வரைக்கும் பெரியப்பாவின் பிரஸில் தான் பிரிண்ட் செய்வோம்)

சித்திரம் போடுவது பாலக்காட்டில் உள்ளதொரு ஓவியர்! முழுப் பொறுப்பு மட்டுமல்லாது, தயாரிப்பின் முழுக் காசையும் என் வசம் தாத்தா ஒப்படைத்திருக்க, நேற்று வரை வெங்கம் பயலாய் சுற்றிக் கொண்டிருந்தவனிடம் கணிசமாய் பணமும், பொறுப்பும் ஒரே நாளில் தொற்றியிருந்தன! நான் ப்பாவின் பிரஸ்ஸில் ஏகப்பட்ட நாட்களைச் செலவிட்டிருந்தேன் தான்; ஆனால், அச்சுக்கலை என்பதற்குள் புகுந்து பணி செய்த அனுபவமெல்லாம் இம்மியும் கிடையாது! So திடுமென கைக்கு வந்த பொறுப்பு மலைக்கச் செய்தாலும், இதைச் சொதப்பாது செய்து முடிக்க வேண்டுமென்ற வேட்கை ஒரு வெறியாய் உள்ளுக்குள் ஆட்டிப் படைத்தது! பெரியப்பாவும் சரி, அவரது அச்சகத்தினரும் சரி, எனக்கு மெய்யாலுமே இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தனர்! அவர்களது ஆபீஸிலேயே எனக்கென ஒரு சின்ன மூலையில் ஒரு மேஜை போட்டுத் தந்தனர்!

  • ஒவியர் படம் போட்டாகணும்!
  • அதை கம்பெனியினர் ஓ.கே. செய்தாகணும்!
  • அதன் பின்பாய் அந்த டிசைனை நெகடிவ் எடுக்க வேண்டும்!
  • ஐந்து வர்ணங்களில் அச்சிட பிராசஸிங் பணிகள் அடுத்து!
  • அப்புறமாய் பேப்பர் கொள்முதல்....!
  • பின்னே பிரிண்டிங் !
  • அதன் மேலே வார்னிஷ் + தங்க மூலாம் பூச்சு!
  • அதனூடே கீழே தேதிகள் கொண்ட தாள்களை தனியாக ரெடி பண்ணி, ப்ரிண்ட் பண்ணி வைத்திருக்கணும்!
  • அதுவொரு Chit Fund நிறுவனம் என்பதால் என்றைக்கு ஏல விடுமுறை என்று ஒவ்வொரு கிளைக்கும் ஏற்ப டைப்செட் செய்து, பிழையின்றி சரி பார்த்திருக்க வேண்டும் ! கன்னட ராஜ்யோத்சவ தினத்துக்கு பெங்களூரு காலெண்டர்களில் விடுமுறைகள் காட்டணும் ; துர்கா பூஜாவுக்கு கொல்கத்தா காலெண்டர்களில் ....and etc etc !
  • படத்தைத் தொங்க விடும் பொருட்டு மேல் பக்கம் டின் அடிக்க வேண்டும்!
  • கீழேயுள்ள மாதக்குறிப்புகள் கொண்ட ஷீட்களை வரிசைப்படுத்தி தையல் மிஷின்களில் (யெஸ்- டெய்லர்கள் தைக்கும் அதே தையல் மிஷினில் தைக்க வேண்டும்) தைத்து வாங்கினால் காலெண்டர்கள் ரெடி!
  • அப்புறமாய் கேஸ் பெட்டிகளில் பேக் பண்ணி எந்த ஊருக்கு எவ்வளவென்று கணக்கிட்டு அனுப்ப வேண்டும்!
  • அத்தனை கிளைகளுக்கும் காலெண்டர்கள் பத்திரமாகக் கிடைத்த பின்பாக சென்னை தலைமையகத்தில் காசு வசூ­லிக்க வேண்டும்!

இன்றைக்கு யோசித்தால் மலைப்பாக உள்ளது - நயா பைசா அனுபவமின்றி இத்தனை வேலைகளை நான் எவ்விதம் ஏற்றுக் கொண்டேன் என்பது! ஆனால், அடுத்த பதினைந்து நாட்களுக்காவது புலரும் ஒவ்வொரு காலையிலும் என்னை நானே கண்ணாடியில் பார்க்கும் போது, லஜ்ஜை பிடுங்கித் தின்னாமல் இருக்க எதையும் செய்யலாமென்ற ஒரு desperation தான் என்னை அன்று இயக்கியது என்பது புரிகிறது! பைத்தியக்காரன் போல கால நேர மாற்றங்களை சட்டை செய்யாது பணி செய்வது துவங்கியது அன்றைக்குத் தான்! அப்போதெல்லாம் சிவகாசி ஒரு 24/7 நகரம்! இரு ஷிப்ட்களில் ஊரின் அத்தனை அச்சகங்களும் இயங்கி வரும் என்பதால் ஹோட்டல்கள், டீக்கடைகள் என சகலமும் திறந்திருக்கும்! So வேளைக்குச் சோறு' என்பதெல்லாம் மறந்து "வேலைக்குப் பின் சோறு'' என்று மாறிப் போயின எனது பொழுதுகள்!

எனக்குப் பணிகள் தெரியாதென்ற போதிலும் பணி தெரிந்தோரைத் தெரியும்! So ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவரவது ஒத்தாசையைக் கோரிப் பெற்று வரிசையாய் வேலைகள் அரங்கேறுவதை ரசித்தேன் ! நெட்டி வாங்கிய இரண்டரை வாரங்களுக்குப் பின்பாக கேஸ்பெட்டிகளில் காலெண்டர்களை அடைத்து லாரி ஷெட்களுக்கு அனுப்பி விட்டு அந்த லாரி பாஸ்களை பதிவுத் தபால்களில் ஐந்து முகவரிகளுக்கும் அனுப்பி முடித்த போது தேதி 31.12.1983. ஆண்டின் பெரும் பகுதி சூன்யமாய் தென்பட்டிருந்த நிலையில், அதன் இறுதி இருபது நாட்கள் எனக்குள் ஒரு பெரும் நம்பிக்கையினை விதைத்திருந்தன! வேலைகளை முடித்த கையோடு, கணக்கு வழக்குகளையும் எழுதி தாத்தாவிடம் பாக்கிப் பணத்தைக் கொடுத்த போது, பாம்பன் பாலத்தையே கட்டி முடித்த திருப்தி எனக்குள்! And அந்த இரண்டு வாரத்து அனுபவங்களே ஆறு மாதங்களுக்குப் பின்பாய் லயன் காமிக்ஸின் பயணம் துவங்கிய பிற்பாடு எனக்குப் பெரிதும் உதவின என்பதில் துளியும் ஐயமில்லை!

தொடர்ந்த நாட்களில் தாத்தாவுக்கு நானும், எனக்கு தாத்தாவும் துணையென்று ஆகிப் போனோம்! ஒரே ரூமில் தாத்தாவும், நானும் படுத்துறங்க, சீக்கிரமா ஒரு ரவுண்ட் தூக்கத்தைப் போட்டுவிட்டு நள்ளிரவுவாக்கில் தாத்தா முழிப்பதற்கும், நம்ம ராக்கோழி அவதார் அரங்கேறிடுவதற்கும் சரியாகயிருக்கும்! ஏதேதோ பேசுவோம்...விடிய விடியப் பேசுவோம் ! முறையாய் ஆதரவு தந்து தூக்கிவிட்டால் பேரன் தேறிவிடுவான் என்ற நம்பிக்கை தாத்தாவுக்குப் புலர்ந்ததோ என்னவோ- எனது கனவான டிங்-டாங் சிறுவர் மாத இதழை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட ஊக்குவித்தார்! மதுரை காமராஜ் யுனிவர்சிடியின் அஞ்சல்வழிக் கல்வியில் ஏற்கனவே சேர்த்தும் விட்டிருந்தார் !! So மெதுமெதுவாய் எனக்குமொரு புது routine புலரத் தொடங்கியது!

எழுதினேன்.. எழுதினேன்.. கட்டுரைகள்; துணுக்குகள்; கதைகள் - என்று ஏதேதோ எழுத ஆரம்பித்தேன்! ஒவ்வொன்றுமே வெகு சீக்கிரம் வெளிவரப் போகும் இதழினில் பக்கங்களாகிடப் போகின்றன என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையுமே எழுதிடும் marathon-களாக்கினேன்! இதோ இன்றைக்கு பதிவுகள், ஹாட்லைன்கள், மொழியாக்கங்கள் என எதையெதையோ எழுதுவதற்கு 1984-ன் அந்தப் பொழுதுகள் தான் முதற்புள்ளி ! நடுநடுவே B.Com-க்கென படிக்கவும் நேரமெடுத்துக் கொண்டேன்! கொஞ்ச நாட்களில் டிங்-டாங் வேலைக்கு ஆகப் போவதில்லை என்பது புரிபட்ட போது உதயமானது தான் "லயன் காமிக்ஸ்''! And இதோ கிட்டத்தட்ட ஐநூறு மாதங்கள் கழிந்த நிலையில் here we are!

அப்பா இருந்த வரையிலும் இதையெல்லாம் பகிர்ந்தால் அவர் சங்கடப்படுவாரே என்ற எண்ணம் என்னுள் இருந்தது! So இதைப் பற்றியெல்லாம் எங்கேயுமே வாய் திறந்ததில்லை ! But where it all started? என்று அவதானிப்பதானால் 1983-ன் டிசம்பரில் தான் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்ளத் தான் இந்த ரிவர்ஸ் கியர் பயணம்! 1983-ன் இருண்ட பொழுதுகளையும், 1984-ன் வெளிச்சக் கீற்றுக்களையும் இன்றைக்கு நிதானமாய் அசை போடும் போது ஒன்று மட்டும் புரிகிறது - தண்ணீருக்குள் இறங்காது நீச்சல் சாத்தியமே ஆகாதென்று ! கடப்பாரை நீச்சலோ, butterfly stroke களோ - எதையேனும் போட்டு தலையினை தண்ணீருக்கு மேலே தக்க வைக்க நமது survival instinct உதவிடும் என்று நம்பணும் போலும் ! Of course - எதுவும் வேலைக்கு ஆகாமல் போய் தண்ணீருக்குள் சுவாஹா ஆகிடவும் வாய்ப்புண்டு தான் ; but புனித மனிடோ கரம் தராது போக மாட்டாரென்றும் நம்ப வேணும் போலும் ! புதிய தத்துவம் # 4941 .....!

Moving on : இதோ - ஜூலையில் காத்துள்ள நம்ம மஞ்ச சொக்காய் கார்ட்டூன் தலயின் சாகசத்தின் அட்டைப்படப் preview ! வழக்கம் போலவே 2 கதைகள் ! இம்முறையே இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து ! முதலாம் சாகசம் ஜாம்பவான் கோசினி கைவண்ணத்தில் - "ஒரு நாயகன் உதயமாகிறான்" !! இங்கே நம்ம ரின்டின் கேன் முதன்முறையாக டால்டன்களோடு அறிமுகம் காணும் படலம் அரங்கேறிடுகிறது ! இரண்டாம் கதையோ தொடரின் பிற்பகுதியினைச் சார்ந்தது ! "நல்ல காலம் பிறக்குது" ஆல்பத்திலும் டால்டன்கள் + ரின்டின் கேன் லூட்டிகள் உண்டு ! So உங்களுக்கு மட்டுமன்றி, உங்க வீட்டு குட்டீஸ்களுக்குமே ஒரு breezy read வெயிட்டிங் என்பேன் !

ரைட்டு.. இளவரசியோடு ஒரு பக்கமும், டேங்கோவோடு இன்னொரு பக்கமும் சாகஸம் பண்ணப் புறப்படுகிறேன்! கிளம்பும் முன்னே ஒரேயொரு (ஜா­லி) கேள்வி மட்டும் :

1983ல் நீங்கள் பிறந்திருந்தீர்களா மகாஜனங்களே? ஆமாம் - எனில் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ? Just curious!

Bye all.. Have a great weekend! See you around!

Saturday, June 14, 2025

பயணத்தில் ஒரு "பயணம்"!

நண்பர்களே, 

வணக்கம்! புலி­யும் வந்தாச்சு.. and most importantly - காத்திருக்கும் தந்தையர் தினத்துக்கு ஒரு நாள் முன்பாகவே உங்களிடம் ஒப்படைக்கவும் செய்தாச்சு! இனி உங்களுக்காச்சு..Manu Larcenet-ன் ஜாலங்களுக்காச்சு! என்று ஆராமாய் கட்டையை ஒரு நாளுக்காச்சும் கிடத்தத் தயாராகி வருகிறோம்! So இந்தப் பதிவு ரொம்பப் பெருசாகவெல்லாம் இராது! Rather- இந்த மைல்கல் இதழோடு உங்களது selfies; இயன்றால் உங்களது பசங்களுடனான selfies என்று ஜா­லியாக வாரயிறுதியினை செலவிடலாமே?

நிஜத்தைச் சொல்வதானால் இந்தப் "பயணம்'' செல்ல நான் விழைந்தது போன வருடம் ஜுன் 15-க்கே...! பிப்ரவரி 2024 வாக்கில் இந்தப் படைப்பு என் கண்ணில் பட, அப்போவே துண்டைப் போட்டு, அப்போவே டிக்கெட்டும் வாங்கி, அப்போவே பயணம் பண்ணும் ஆசை அலையடித்தது! கதையின் subject - ஒரு தந்தை + மகனின் விடியலுக்கான தேடல் என்ற போதே இதனை Father's Day ஸ்பெஷலாகத் திட்டமிட்டாலென்ன? என்ற நினைப்பும் சேர்ந்தே முளைத்திருந்தது! ஆனால், ஐரோப்பியப் புத்தகவிழா circuit மார்ச்சில் துவங்கி ஜுன் வரைக்கும் வரிசைகட்டி அரங்கேறிடுவது வழக்கம் என்பதால் உரிமைகளுக்கான முடிவெடுப்போர் செம பிஸி! ஒருவழியாக அவர்கள் ஆபீஸ் திரும்பிய பிற்பாடு நமக்கு இசைவைச் சொல்லி­யிருந்த போதே Father's Day 2024 கடந்து சென்றிருந்தது! சரி, ரைட்டு உரிமைகளை வாங்கி விட்டாலும், இதழை வேறெந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடலாகாது என்று அன்னிக்கே தீர்மானித்துக் கொண்டேன்! அதன் நீட்சியே மே 2025-ன் ஆன்லைன் மேளாத் தருணம் & இந்த ஒற்றை இதழை மட்டும் ஜுன் 15-க்கு வெளியிடும் திட்டம்! And here we are....!

இதன் தயாரிப்பிற்குள் இறங்கும் முன்பாகவே "சாம்ப­லின் சங்கீதம்'' முன்பதிவினையும் அறிவித்திருந்தோம் & அதன் ரிலீஸ் தேதியாக ஆகஸ்ட் 2-ஐ மனதில் fix செய்திருந்தோம்! So "ரெண்டு கனமான கிராபிக் நாவல்கள் மிகக் குறுகிய இடைவெளியிலா? ஆஹா... சமாளிக்க வழி தேடணுமே?" என்ற டர்ர்ர் உட்புகுந்திருந்தது! ஆனால், சாம்ப­லின் சங்கீதம் நெட்டி வாங்கும் பணியென்பதால் தானாகவே பின்சென்று விட, பயணம் பண்ண ரூட் க்ளியர் ஆனது!

இங்கே பயன்படுத்த வேண்டிய பேப்பரின் தேர்வு தான் நிரம்பவே படுத்தி எடுத்துவிட்டது! பக்கத்துக்குப் பக்கம் எக்கச்சக்க கறுப்பு solids ; டார்க்கான சித்திரங்கள் எனும் போது, வழக்கமான கனத்திலான காகிதத்தில் அச்சிட்டால் பின்புறம் தெரிவதைத் தவிர்க்க இயலாது! So வாயெல்லாம் பேசிவிட்டு, இங்கே செலவைக் குறைக்கும் முனைப்பில் எதையாச்சும் கோணங்கித்தனமாய் செய்து வைத்தால் மொத்தமாய் Bata பிய்ஞ்சு போகும் என்பது புரிந்தது! So ஈரோட்டு மில்­லில் ஆரம்பித்து, நெல்லை மில்; புகளூர் மில் என்று அத்தனையிலும் சாம்பிள்ஸ் வாங்கினோம்! க்ளாஸிக் இதழ்களுக்குப் பயன்படுத்திடும் அந்த மஞ்சள் நிறப் பேப்பரையும் வாங்கிப் பார்த்தோம்! அத்தனை பேப்பர்களிலும் பிரிண்ட் போட்டும் பார்த்தால் - ஊஹும், எதுவும் தேறக் காணோம்! இந்தப் பக்கத்து அடர் கறுப்பு, மறு சைடில் ஸ்பஷ்டமாய் அத்தனை ரகங்களிலும் தெரியவே செய்தது! இது என்னடா தமிழகத்துக்கு வந்த சோதனை? என்றபடியே வெளி மாநிலங்களது பேப்பர் மில்களின் சாம்பிள்களையும் சேகரிக்க ஆரம்பித்தோம்! 

எண்ட ஸ்டேட் கேரளம்; நா ராஷ்ட்ரம் ஆந்திரா; நன்ன ராஜ்யா கர்னாடகா என்று தேசீய ஒருமைப்பாட்டுச் சின்னமாய் திரிந்த போது தான் - " நிம்ம தேடுற சரக்கு இவிடே உண்டு அன்னைய்யா'' என்றொரு பிரசித்தி பெற்ற மில் அபயக் கரம் நீட்டியது! செம தரமான பேப்பர்; தும்பைப்பூ வெள்ளை என்றில்லாது... மெல்லி­ய சிகப்புச் சாயலோடு ஒரு வெள்ளை; தொட்டாலே செம டெம்பர் என்று கண்ணில்பட்ட முதல் நொடியிலேயே வசீகரித்தது அந்தப் பேப்பர் ரகம்! நாம் மாமூலாய் பயன்படுத்தும் பேப்பரின் திக்னெஸில் கிட்டத்தட்ட 70% அதிக கனம் கொண்டது என்பதால் வதைத்து வந்த see through இங்கே கிஞ்சித்தும் இருக்கவில்லை! So "கண்டேன் சீதையை''என்று freeze ஆகிய நொடியில் நமது பேங்க் கையிருப்போ,  நம்ம விஸ்காம் வாத்தியார் பிரஷாந்தின் புஷ்டியையே ஒத்திருந்தது! மண்டையைச் சொறிந்து நின்ற நொடியில் தான் கனவுலகம் க்ரூப்பின் சார்பில் ஐந்து பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிட புக்ஸ் கொள்முதல் செய்த நண்பர்களின் பணமும்; நமது கையிருப்பில் உள்ள அம்புட்டு புக்ஸிலும் இரண்டு செட் வீதம் அயல்நாட்டுக்கொரு வாசக நண்பர் ஆர்டர் செய்திருந்த பணமும் மிகச் சரியாக வந்து சேர்ந்தன! மறு நாளோ, இன்னொரு வெளிமாநில நண்பர் லக்கி லூக்கின் CINEBOOK கையிருப்பிலி­ருந்து full set (71 புக்ஸ்)க்கான பணத்தையும் அனுப்பிய நொடியில் என் மண்டை நோவுகள் காற்றில் கரைந்தே போயின!

பரபரபவென பேப்பரை வாங்கிப் போட்டோம்! அட்டைப்படத்தின் நகாசு வேலைகள் ஒருபக்கம் மின்னல் வேகத்தில் அரங்கேறின! பக்கங்களை மறுக்கா மறுக்கா சரிபார்த்த கையோடு மின்னலாய் அச்சுக்குச் சென்றோம்! இம்முறை பிராசஸிங்கிலும் துளி கூட சமரசங்களின்றி the best-க்குச் சென்றோம்! கறுப்பு மசி முதற்கொண்டு இந்தவாட்டி ஜப்பான் வரவு! இவ்விதம் பிரிண்ட் செய்து வந்த முதல் தாள் தான், நான் போன வாரம் பேங்க் வாச­லில் நின்றபடியே வாய் பிளக்க ரசித்த சமாச்சாரம்! 

And பைண்டிங்கிலும் நமது வாடிக்கையான நண்பரின் பங்களிப்பு மிரட்டலானது! இது ஸ்கூல் நோட்புக் சீஸனின் உச்ச வேளை என்பதால், ஊர் முழுக்க பல இலட்சங்களில் நோட்டுகள் பைண்டிங்கை எதிர்நோக்கிக் குவிந்து கிடக்கின்றன! அவற்றின் மத்தியில் தம்மாத்துண்டு எண்ணிக்கையுடன் நாம் இத்தனை முக்கியமான பணியோடு நின்ற போதும் அவர் முகம் சுளிக்கவில்லை! நமது பணிகளின் தன்மையினையும், நம் சிறுவட்டத்துக்கு இவை எத்தனை மதிப்பு வாய்ந்தவை என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்பதால் கச்சிதமாய் வியாழன் இரவுக்கு முடித்துத் தந்துவிட்டார்! And வெள்ளியன்று நம்மாட்கள் மின்னல் வேகத்தில் பேக்கிங்கையும் பூர்த்தி செய்தி- இதோ Father's Dayக்கு உங்கள் கைகளில் நம்மாலானதொரு சிறு novelty!

இனி சித்திரங்களினுள்ளும், பயணத்தின் பின்னணியினுள்ளும் நீங்கள் புகுந்திடவுள்ள அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது மட்டுமே எங்களது பணியாக இருக்கப் போகிறது! And if initial reactions are anything to go by - இதுவொரு தெறி இதழ் என்பது உறுதி!

இந்த ஆல்பத்துக்கு இந்த சைஸ், மெனக்கெடல் எல்லாம் நல்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு! 2017-ல் இதே Manu Larcenet-ன் "நிஜங்களின் நிசப்தம் " கிராபிக் நாவலையும் வெளியிட்டிருந்தோம் தான் - but truth to tell, அதன் அருமை எனக்கன்று பூரணமாய் புரிந்திருக்கவில்லை! So சுமாரான காகிதம், சுமாரான சைஸ், தயாரிப்பு என்றே வண்டி ஓட்டியிருந்தேன்! அந்த இதழ் செம ஹிட் தான், but உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது - ஒரு பிரமிக்கச் செய்யும் ஜாம்பவானின் படைப்புக்கு உரிய நியாயம் செய்யத் தவறி விட்டோமே என்று! அதை நிவர்த்திக்கவே இன்று இந்த பிரம்மாண்டம்!

More then anything else, எதையேனும் புதுசாய் முயற்சித்து உங்களை அகம் மகிழச் செய்வது தான் என்னை எப்போதுமே இயக்கிடும் பேட்டரி!  So அந்த அத்தியாயத்தின் லேட்டஸ்ட் படலமான இந்தப் "பயணம்'' - நமது பயணத்தின் ஒரு ஸ்பெஷல் அங்கமாகிட்டால் ஆந்தையன் ஹேப்பி அண்ணாச்சி!

Now it's back to the drawing board- அடுத்த குட்டிக்கரணம் எந்த மாதிரி அடிக்கலாமென்ற மகா சிந்தனையுடன்! 

சர்வ நிச்சயமாய் இதனை மேலிருந்து அப்பா ரசிக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கையுடன் நடையைக் கட்டுகிறேன்! 

Happy Father's Day all.... Enjoy the weekend! Bye for now! See you around!

P. S : ஆன்லைன் லிஸ்டிங் போட்டாச்சு & already விற்பனைகள் on fire 🔥🔥.. இதுவொரு லிமிடெட் edition என்பதால் முன்பதிவு தவிர்த்து அதிகப் பிரதிகள் கையில் நஹி! 

https://lion-muthucomics.com/special-release/1342-payanam.html

Saturday, June 07, 2025

கேள்விகள் ஒரு தொடர்கதையே...!

 நண்பர்களே,

வணக்கம்! இன்னொரு வாரயிறுதி.. இன்னொரு பதிவு.. இன்னுமொரு upcoming release பற்றிய ப்ரிவியூ படலம்! ஆனால் this is a moment with a difference, becos இது எது போலவும் அல்லாததொரு மைல்கல் இதழுக்கான தருணம் !!

பயணம்! Manu Larcenet என் ஜாம்பவானின் இருண்டதொரு கிராபிக் நாவல்! அவ்வப்போது, இது குறித்த தகவல்களை நானும் பகிர்ந்துள்ளேன் தான்; நண்பர்களும் க்ரூப்களில் பதிவு செய்துள்ளனர் தான்! நம்மில் ஒரு சிலர் இந்த ப்ரெஞ்சு ஆக்கத்தின் இங்கிலீஷ் வார்ப்பினை ரசிக்கவும் செய்துள்ளனர்! But trust me guys- தமிழில் நமக்குக் காத்திருக்கும் அனுபவமானது மெர்சலூட்டத் தவறவே செய்யாதென்பது எனது நம்பிக்கை!

152 பக்கங்கள்! இந்த மொத்தப் பக்கங்களுக்கும் அவசியமாகிட்ட வசனங்கள் ஒரு ரெகுலர் ரிப்போர்டர் ஜானி கதைக்குத் தேவையாகிடுவதில் பாதி தானிருக்கும்! So அந்த வித்தியாசமான சித்திர ஜாலங்களை ரசிப்பதே இங்கு பிரதானப் பொறுப்பாக இருந்திடக்கூடும்! And அங்கு தான் காத்துள்ள MEGAAAA சைஸின் ஆற்றல் ஒரு மிடறு கூடுதல் வீரியத்துடன் புலப்படவுள்ளது என்பேன்!

நிறையவாட்டி சொன்ன அதே விஷயம் தான் - இந்த சைஸின் பின்னணியிலுமே! ஏதாச்சும் குரங்குக் கூத்தடித்தாவது, உங்கள் புருவங்களை அவ்வப்போது உயரச் செய்ய முயல்வது தான் ஆந்தையனின் பிரதம இலட்சியம்! ஏதாச்சும் புதுசாய் ஒரு நாயகரையோ/ தொடரையோ தேடி நான் இன்னமும் ஓடுவது அதற்காகவே! எதோ ஒரு விதத்தில் வித்தியாசப்பட்டு நிற்கும் கதைகளா? "ஆவோ.. ஜி ஆவோ ஜி..." என்று வாஞ்சையாய் நான் அவற்றை வரவேற்றிட முனைவதும் அதற்காகவே! So இந்தப் "பயணம்'' கிராபிக் நாவ­லின் அறிவிப்பைச் செய்த போது, "அடடே..!' என்று நீங்கள் ஸ்லாகித்த போது, ஒரு பவன்டோவை சுர்ரென்று குடித்த மகிழ்வு கிட்டியது! ஆனால், அது போதாது - அதே பவன்டோவை ப்ரிட்ஜில் வைத்து இன்னும் செமயாக்கி ரசித்தாலென்ன என்று யோசித்த தருணத்தில் எழுந்தது தான் இந்த ராட்சஸ சைஸ் தீர்மானம் ! சித்திரங்கள் தான் இங்கே show stoppers எனும் போது, அவற்றை ரசிக்க ஏதுவாய் இதுவரையிலும் அல்லாததொரு பெரிய சைஸை போட்டுத் தாக்கினால் சர்வநிச்சயமாய் உங்களது புருவங்கள் விட்டத்தைத் தொட்டு நிற்குமென்று பட்டது! நமக்குத் தான் ஏதாச்சும் புதுசாய் மண்டைக்குள் உதயமாகி விட்டால் "ட்றா ராமா.. ஆட்றா ராமா'' என்ற நமைச்சலும் கைகோர்த்து விடுமே?! So மெகா சைஸ் ; Coffee table புத்தக சைஸ் என்று அறிவிப்புக்கு நகாசு பண்ணி விட்டாச்சு!

But trust me when I say this folks - புத்தகத்தைக் கையில் நீங்கள் ஏந்தவுள்ள நொடியினில் கிட்டவுள்ள அனுபவத்திற்கு, இந்த பில்டப் படலங்களெல்லாம் எத்தனை முயன்றாலும் நியாயம் செய்யச் சாத்தியமே ஆகிடாது! மாதந்தோறும் அச்சுக்குச் செல்லும் போது முதல் ஷீட்டை கலர் இதழ்களில் மட்டுமே நான் பார்வையிடுவது வாடிக்கை ; black & white இதழ்களுக்கெல்லாம் பக்க நம்பர் வரிசைக்கிரமமாய் சரியாக வருகிறதா? என்பதைச் சரிபார்த்த கையோடு மைதீனே அச்சுக்கு approval தந்திடுவதுண்டு! ஆனால், இந்த மெகா சைஸ் b&w இதழின் பிரிண்டிங் நான் பார்த்திடாமல் நடந்திடக் கூடாதென்று சொல்லியிருந்தேன்! So மூன்று நாட்களுக்கு முன்னே பேங்க்கிற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த காலைப் பொழுதில் "அண்ணாச்சி தாளை எங்கே கொண்டு வரட்டும்?'' என்று ஃபோன் அடிக்க, "பேங்கிற்கே வந்திடு மைதீன்' என்றிருந்தேன்! அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பயணத்தின் முதல் அச்சான தாளோடு பேங்க் வாசலில் மைதீன் நின்று கொண்டிருந்தான்!

Oh yes - நான் பார்த்திடும் ஆயிரத்துச் சொச்சமாவது இதழின் தயாரிப்பே இது! Of course- 41 ஆண்டுகளாய் இதே routine-க்குள் ஷண்டிங் அடித்து வருகிறேன் தான்! ஆனாலும், இந்த ராட்சஸ சைஸ் திப்பினை நேரில் பார்த்த நொடியில் மிரண்டே போய்விட்டேன்! நம்மள்லாம் சுனாமியிலேயே சுவிம்மிங்க போடற எருமைக்கடாக்கள் ஆச்சே! என்று நினைத்திருந்த எனக்கு - பேங்க் வாச­லில் வாயடைத்துப் போய் நின்ற அந்த நொடி அத்தனை சீக்கிரத்திற்குள் மறக்கவே மறக்காது! So இந்தமுறை "பயணம்'' கூரியர் டப்பிகளைத் திறக்கும் நொடிகளை மறவாது உங்களது செல்பிக்களோடு சிறப்பித்திடலாம் folks - சர்வ நிச்சயமாய் இதுவொரு மேஜிக் தருணமாக இருந்திடவுள்ளது ! சகல அச்சுப் பணிகளும் முடிந்தன; அட்டைப்படமும் நகாசு வேலைகள் பூர்த்தி கண்டு பைண்டிங் போயாச்சு! Hopefully அடுத்த வார வெள்ளிக்கு despatch அமைந்திட வேணும் & அடுத்த வாரம் இதே தருணத்தில் நமது பதிவுப் பயணத்தின் நாயகனாக கி.நா."பயணம்'' அமைந்திட வேணும்! ஜெய் பைண்டிங் பாகுபலி­!!! Fingers Crossed big time!!

Moving on ஜுலை சார்ந்த முன்னோட்டங்களுக்கு இது தருணமாகிடாது, becos ஜுனின் 2 இதழ்களும் இந்த நொடி வரையில் ரொம்பவே fresh ஆக இருந்து வருகின்றன! அதிலும் ரிப்போர்டர் ஜானியின் கலர் சாகஸமானது ஓரளவுக்கு அலசப்பட்டிருக்க- "தல'' சரவெடி கொளுத்திடும் "சட்டத்தோடு சடுகுடு'' இன்னமுமே படம் பார்க்கப்பட்ட நிலையில் பல கட்டில் முகப்புகளில் ஆராமாய் தொற்றிக் கொண்டிருக்குமென்றுபடுகிறது! So அதனுள் புகுந்திட உங்களுக்கு அவகாசம் தந்த கையோடு, 2026 அட்டவணை சார்ந்த (மாமூலான) கேள்விகள் படலத்தினுள் புகுந்திடலாமென்று நினைக்கிறேன்! ஆண்டுதோறும் அதே மாவை கேள்விகளின் ரூபத்தில் அரைப்பது போலி­ருக்கலாம் தான்- ஆனால் இந்தச் சவாரியின் மத்தியில் உங்களது எண்ணங்களில்/ அபிப்பிராயங்களில்/ ரசனைகளில் ஏதேனும் சிறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொறுப்பு எனக்குள்ளதே?! So here we go one more time மக்களே:

1. எல்லாம் சுழல்வது "டெக்ஸ்'' எனும் மாயனைச் சுற்றியே எனும் போது, வினாவினையும் அவரிடமிருந்தே துவக்குதல் தானே பொருத்தம்?

"மாதமொரு டெக்ஸ்'' என்ற அந்த வேட்கை இன்னமுமே அதே வீரியத்துடன் தொடர்கிறதா folks? இயன்ற மட்டிலும் கதைத் தேர்வுகளில் வித்தியாசம் காட்ட நாங்கள் முயற்சித்தாலுமே - வாசிப்பு அனுபவ அளவுகோல்களில் இந்த நொடியின் ரீடிங் என்னவோ? என்பதே எங்களது கேள்வி! So "மாதமொரு டெக்ஸ்'' இல்லாது போனால்- இளவரசரை மனித எரிகுண்டாக்கிக் கடாச முற்படும் பிரயத்தனத்தில் நீங்களெல்லாம் இறங்குவீர்களா? மாட்டீர்களா? என்பதைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்?!

2. எனது கேள்வி # 2 கூட டெக்ஸ் சார்ந்ததே!

மாதா மாதம் 224 பக்க நெடும் TEX சாகஸங்களைப் படிக்க நேரமும்/அவகாசமும்/ ஆர்வமும் கீதா மகா ஜனங்களே?

அல்லது இடையிடையே மித நீளக் கதைகளையும் நுழைத்தால் ஒரு welcome relief ஆக இருந்திடுமா?! Honest answers please ?

3. கேள்வி நம்பர் மூன்றுக்கு ஓரளவுக்கு எனக்கு விடையும் கிட்டிவிட்டது தான்! இருந்தாலும் ஒரு மறு ஊர்ஜிதம் கோரிட விழைந்தே இந்த மறு கேள்வி - moreso just after"ஜெர்மனியில் ஜானி''!

இன்னமும் க்ளாஸிக் ஜானியே தான் தொடரணுமா? பெட்ரோமேக்ஸ் லைட்டுக்கு சித்தே ஓய்வு தந்துவிட்டு 2026-க்கு மட்டுமாச்சும் ஒரு LED பல்பாய் ஜானி 2.0- முயற்சித்தாலென்ன folks?

ஒத்துக் கொள்கிறேன்- ஜானி 2.0-ல் இதே கர்லிங் ஹேர் + ஸ்டைலான புன்னகையோடு வலம் வருவதில்லை தான்! அங்கே நாடீனுடன் மனுஷன் சில ஸ்பூன்லி­ங் ஆட்டங்களில் ஈடுபட்டதில் உங்கள் காது வழியாகப் புகை சமிக்ஞைகள் வெளிப்படுகின்றதன் வலி­யும் புரிகிறது தான்! Yet- இந்த க்ளாஸிக் கதைகளில் புராதனம் இழையோடுவதை மறுப்பதற்கில்லையே? இதோ இம்மாத "ஜெர்மனியில் ஜானி'' ஒரிஜினலாய் உருவானது 1972-ல் !! So கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் கழிந்த பின்னேயும் அவரோடு அன்னம், தண்ணீர் புழங்கி வருகிறோம்! வாழைப்பூ வடை; வேப்பிலை ஜாக்கி என்றெல்லாம் வலம் வரும் நவீன யூத்களான நாம் 2024-ல் வெளியான 2.0 கதையினை பகிஷ்கரித்து விட்டு, நம்ம பெரியப்புகளின் காலங்களது கதைகளோடே டிராவல் பண்ண நினைப்பது ஓ.கே.தானா?

Of course ரெகுலர் ஜானி கதைகளும் 2010 வரைக்குமே தொடர்ந்துள்ளன தான்! அவற்றி­லிருந்து தேர்வு செய்தால் "சிரிச்ச முக' ஜானியை தரிசித்தது போலவுமிருக்கும்; புராதனங்களைத் தவிர்த்தது போலவுமிருக்கும் தான்! ஆனால், சிக் பில் தொடரைப் போலவே இங்குமே சிக்கல் ஒன்றே! இரு நெடும் தொடர்களின் பின்பகுதியிலும் வந்த கதைகளின் பெரும்பகுதி படு சுமார்! பேஜாரே அது தான்!

So ஸ்டைலான ஜெமினி கணேசனா ? யூத்தான துல்கர் சல்மானா? 2026-ல் நீங்க பார்க்க விரும்புவது யாரை folks?

4. Absence makes the heart grow fonder என்பது பழமொழி! தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு டிபனுக்கு உப்மாவை காணோம்னு  வச்சுக்கோங்களேன் - அதுவே கூட ராஷ்மிகா மந்தனாவின் புன்னகையைப் போல மனசை ஆர்ப்பரிக்க வைக்குமாம் ! "சர்ப்ரைஸா உப்மா பண்ணியிருப்பாளோ?'' என்றபடியே கிட்சனுக்குள் போய் எட்டிப் பார்க்கத் தோணுமாம்!

அந்தக் கதையாய் இரண்டு ஆண்டுகளின் பிரிவானது, பாஸ்டர் மீது ஏதேனும் பரிவுப் பார்வைகள் எழுந்திடச் செய்துள்ளதா ? என்பதே எனது நான்காவது கேள்வி! புத்தக விழாக்களில் சுத்தமாய் washout ஆன நாயகர்களுள் SODA முக்கியமானவர்! ஏனோ தெரியலை - சென்னைப் புத்தகவிழாக்களில் கூட இந்தக் கறுப்பு அங்கிப் போல்ஸ்காரை யாரும் பெருசாய் ரசிக்கக் காணோம்! So சந்தாத் தடத்தில் நீங்கள் மனசு வைத்தாலன்றி இவரது எதிர்காலமெல்லாம் நம்பர் நடிகையின் ஈரோயினி வாய்ப்பைப் போலவே கானலாகிப் போகும்! So...

SODA? பேடாவா?

5. தர்மசங்கடத்தின் உச்சத்திலான வினா இது! இதற்கான உங்களது பதிலும் எனக்குத் தெரியும் தான்! But கேட்டாக வேண்டிய நிலையில் உள்ளேன்!

தோர்கல்!!

கிட்டத்தட்ட ஒரு டஜன் ஆண்டுகளாகப் போகின்றன இந்த fantasy நாயகர் நம்மோடு இணைந்து! ஜாம்பவான் வான் ஹாமின் பேனா ஜாலம் செய்த தொடரே! Yet கிட்டத்தட்ட 30 பாகங்கள் கழிந்த நிலையிலும் விற்பனைகளில் ரொம்பவே தடுமாறிடும் அந்த துரதிர்ஷ்டம் மட்டும் இன்றளவில் தொடர்கிறது! "ஏக் தம்''மில் மூன்று அத்தியாயங்களை இணைத்து ஹார்ட்கவரில் போட்ட இதழ்களிலும் ஸ்டாக் குவிந்து கிடக்கிறது ; தனித்தனி ஆல்பங்களாய் வெளியான இதழ்களிலும் ஸ்டாக் நிறைந்து நிற்கிறது! And 14 நாட்கள் அரங்கேறிய 2025-ன் சென்னைப் புத்தகவிழாவில் மொத்தமாய் விற்பனை கண்ட தோர்கல் இதழ்களின் எண்ணிக்கையே 43 தான்! And நம்மிடமோ கிட்டத்தட்ட 12 தோர்கல் titles உள்ளன! So சந்தாக்களில் காணும் விற்பனையினைத் தவிர்த்து தோர்கலுக்கான movement பூஜ்யத்துக்கு மிக மிக அருகில்!

இந்த நொடியில் நம் முன்னே உள்ள options நான்கு !

A. ஆனானப்பட்ட ரோஹித் ஷர்மாவுக்கும், விராத் கோலி­க்குமே டாட்டா சொல்ல இயன்றுள்ள நமக்கு- "பிள்ளைகுட்டிகளோட நல்லபடியா வாழுங்க தோர்கல் சார்! ஜோலனுக்கோ, ஓநாய்குட்டிக்கோ, கண்ணாலம் வைக்கிறப்போ மறக்காமச் சொல்லுங்க!'' என்றபடிக்கே தோர்கலுக்கொரு விடை தருவது அசாத்தியமாகிடக் கூடாது! So நம் முன்னுள்ள Option -A- டாட்டா to தோர்கல்!

B. Option-B இந்த ரெகுலர் தோர்கல் வரிசைக்கு முழுக்குப் போட்டு விட்டு THORGAL SAGA என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்குமொரு ஸ்பெஷல் தடத்தில் தொற்றிக் கொள்வது! இங்கே மாறுபட்ட படைப்பாளிகளின் கைவண்ணங்களில் One Shot சாகஸங்கள் வெளிவருகின்றன! ஆனால், இதனுள் புகுவதும் அத்தனை சுலபமும் அல்ல தான்!

To start with- பிரதானத் தொடரை முடிக்காமல் இந்த வண்டியில் சவாரி செய்ய படைப்பாளிகள் அனுமதிப்பார்களா? என்பது தெரியலை! வாய்ப்புகள் 50-50 தான்! தவிர, மெயின் தொடரில் நாம் இதுவரைப் பார்த்திராத சில கதாப்பாத்திரங்களுமே இந்த THORGAL SAGA தடத்தில் வரும் வாய்ப்புகளுண்டு ! So அங்கே நாம் பேந்தப் பேந்த விழிக்க நேரிடலாம்!

இது தான் Option-B !

Option C. ரெகுலர் தொடரையே தொடர்வது - ஆனால், மிகச் சுருக்கமான பிரிண்ட்ரன் சகிதம்! அதாவது சந்தா எண்ணிக்கை என்னவோ- அதை விட ஒரு நூறு பிரதிகள் மட்டுமே கூடுதலாக அச்சிட்டால், அந்தந்த இதழில் கையிருப்பே விழாது! புத்தகவிழாக்களுக்கும் சுமந்து போய் பல்ப் வாங்கும் நோவுகள் இராது!

ஆனால், சிக்கல் என்னவெனில்- ரூ.120/-க்கு தற்சமயமாய் நாம் விற்பனை செய்து வரும் 48 பக்க தோர்கலை limited பிரிண்ட்ரன்னுக்குக் கொண்டு செல்லும் போது ரூ.175/- போல் ஏதோவொரு விலைக்கு விற்றிட வேண்டி வரும்! So 3 அத்தியாயங்கள் இணைந்ததொரு story arc என்று வைத்துக் கொள்ளுங்களேன் - ஹார்ட்கவரில் பண்ணும் பொது ரூ.550 விலையாகிப் போகும் ! அது பட்ஜெட்டை எகிறச் செய்யும் ! "பேங்கிலே லோன் போட்டுத் தான் தோர்கலைப் படிக்கணும்!" என்ற ஆர்வலர்களின் கோரஸ் உற்சாகமாய் சிம்பனி இசைக்கும் வாய்ப்புகள் இங்கே உண்டு! ஆர்வலர்களின் சங்கீதங்கள் ஒருபுறமிருக்க - அவர்களது டாப் விற்பனைத் தொடர்களுள் ஒன்றான தோர்கலை ஒரு இக்ளியூண்டு சர்குலேஷனுக்கு படைப்பாளிகள் தரச் சம்மதித்து இருப்பதே தெய்வச் செயல் ; இந்த நிலையில் அதனிலும் ஒரு பாதியான தம்துண்டு நம்பரை இனி சொல்லி, அதற்கும் படைப்பாளிகளின் இசைவைப் பெறுவதை கற்பனை பண்ணிப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது !! இதற்கான சாத்தியங்கள் 30 - 70 என்பேன் !! Phew !!

So இது தான் Option C....!

Option D : சின்னதொரு பிரேக் ; அதன் பின்பாய் புதுசாய் ஜோலனைப் பிரதானப்படுத்தி தொடரை ஒரு மீள்வருகை செய்திடச் செய்வது ! Maybe அந்த இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சமே கொஞ்சமாய் அபிமானம் கூடிடும் என்ற நம்பிக்கை கொள்வது ! This will be Option D....!

இப்போது சொல்லுங்களேன் folks? - A? B? C? D ?


ரைட்டு "சட்டத்தோடு சடுகுடு'' இதழுக்குள் புகுந்திடவும், மேலேயுள்ள கேள்விகளுக்குள்ளும் மூழ்கிட நீங்கள் பிஸியாகிடும் நேரத்தில் லக்கி லூக்கோடும், டின்டினோடும் கரம் கோர்க்க நான் புறப்படுகிறேன்!

Bye all.. Have a lovely weekend! See you around!