Powered By Blogger

Sunday, November 10, 2013

பிரபஞ்சத்தின் புதல்வன் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் எனக்கு நானே "ஓட்டைவாய் உலகநாதன்" என்று பெயர் வைத்துக் கொள்கிறேன்...! எந்தவொரு விஷயத்தையும் கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கும் ஆற்றல் எனக்கில்லையா - அல்லது நண்பர்களின் கற்பனைக் குதிரைகளுக்குக் கடிவாளம் போடும் பொருட்டாவது விஷயங்களைப் போட்டு உடைக்கும் நிர்பந்தம் நேர்கிறதா - நிச்சயமாய்த் தெரியவில்லை ! எதுவாக இருப்பினும், '2014-ன் கிராபிக் நாவல்கள் தனி வரிசை' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இங்கு வாழைப்பூ வடைப் போராட்டக் குழுவின் டெர்ரர் கற்பனைகள் ஒரு பக்கமாயும் ; நம் அலுவலகப் பணியாளர்களுக்கு போன் செய்து அவர்களுக்காவது இது பற்றி மேற்கொண்டு விபரங்கள் தெரிந்துள்ளதா எனச் சோதித்து அறிய  முற்படும் நண்பர்களின் curiosity மறு பக்கமென அதகளம் தான் ! So இனியும் அந்த கிராபிக் நாவல் வரிசைகளின் கதைகள் பற்றியதொரு சிறு கோடாவது போட்டால் தேவலை என்ற சூழலில் தான் இந்தப் பதிவு ! 2014-ன் கிராபிக் நாவல் வரிசை ஏன் ? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முன்னே அதன் பிரதான ஆட்டக்காரரை அறிமுகம் செய்திடுகிறேனே ? 


"பிரபஞ்சத்தின் புதல்வன் - தோர்கல்" பிரெஞ்சு மொழியில் 1977-ல் துவங்கியதொரு கதைத் தொடரின் நாயகர். ஒவ்வொரு ஆல்பமும் சராசரியாய் 300,000 பிரதிகள் விற்பனை காணும் ஒரு topseller ஹீரோ ! (இது வரையில்) 34 ஆல்பம்கள் ; ஆங்கிலம் மற்றும் சகல ஐரோப்பியப் பிரதான மொழிகளிலும் வெளியாகி வெற்றிக் கொடி நாட்டிய சாதனைக்குச் சொந்தக்காரர் ! பிரபல த்ரில்லர் கதைகளின் படைப்பாளியான வான் ஹாம்மேயின் பன்முகத் திறமைகளுக்கு ஒரு அசாத்திய உதாரணம் அவரது இந்த ஆக்கம் என்று சொல்லலாம். அது சரி - 'அழுகாச்சிக் காவியங்களை மாத்திரமே இது வரை கிராபிக் நாவல்களென வழங்கி வந்து விட்டு - இது போன்றதொரு தொடரினை  "கிராபிக் நாவல்" எனும் குடையின் கீழே அடைப்பது எவ்விதம் ? என உங்களுக்கு தோன்றிடும் நியாயமான கேள்விக்கு பதில் தோர்கலின் கதை பாணியில் உள்ளது ! பல நூற்றாண்டுகளுக்கு முன்பாய் உலகின் வட துருவத்தைக் கட்டியாண்ட ஆக்ரோஷ வீரர்களான வைகிங்களின் கதையாகவும் இதைப் பார்த்திடலாம்  ; கடலும் மலைகளும் சார்ந்ததொரு மாயாஜால லோகத்தின் பிரதிபலிப்பாகவும் சொல்லிடலாம் ; science fiction ரகக் கதைகளாகவும் இனம் கண்டிடலாம் ; ஒரு விதத் திகில் த்ரில்லராகவும் அடையாளம் சொல்லலாம் ; 'ஒரு ஊரில் ஒரு பயங்கர மாயக் குள்ளன் இருந்தானாம்' என்று உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ஒரு மழை நாளிரவில் சொல்லிடக் கூடிய அதீதக் கற்பனையாகவும் classify செய்திடலாம். சுருக்கமாய்ச் சொன்னால் இது எல்லைகளற்ற கற்பனைகளின் வெளிப்பாடு - மூச்சிரைக்கச் செய்யும் சித்திர அற்புதங்களோடு ! ரோசின்ஸ்கி எனும் போலந்து நாட்டைச் சார்ந்த ஓவியரின் அசாத்தியத் திறன்களை இக்கதைத் தொடர் வெளிச்சம் போட்டுக் காட்டும். இங்கு டுமீல்-டுமீல் துப்பாக்கிகளை எதிர்பார்த்திட இயலாது - வீரியமான வில் -அம்புகளும் ; கம்பீரமான போர்வாள்களுமே இருந்திடும் ! காற்றைக் கிழித்துச் செல்லும் ஜெட் விமானங்களும்  ; நக்கல் பேசும் தோஸ்துகளும் இருக்க வேண்டிய இடத்தில் - வைக்கிங் படகுகளும் ; கட்டபொம்மன் மீசைகள் கொண்ட ஆஜானுபாகு உருவங்களும் இடம் பிடித்திருப்பதைக் காண இயலும். ஆங்கிலத்தில் ; பிரெஞ்சில் இதனை ஏற்கனவே ரசித்திருக்கும் நண்பர்களுக்கு இந்த பில்டப் தேவை இல்லை எனினும் - முதன்முறையாய் தோர்கலைச் சந்திக்கக் காத்துள்ள இதர சகாக்களுக்கு இந்த அறிமுகம் உதவினால் மகிழ்ச்சியே ! "பிரபஞ்சத்தின் புதல்வன்" என்ற முதல் இதழ் கிராபிக் நாவல் வரிசையின் முதல் issue - ரூ.60 விலையில் முழு வண்ணத்தில் வரவுள்ளது ! 

கிராபிக் நாவல் வரிசையில் 2014-ல் மொத்தம் 6 இதழ்கள் ரூ.60 விலையினில் இருந்திடும். அவற்றுள் 2 கதைகள் தோர்கல் ஆக்கிரமிப்பார். ஒரு slot - " வானம் எங்கள் வீதி !" என்ற பெயரோடு அந்த விமானங்கள் சார்ந்த உலக யுத்தப் பின்னணியிலான யுத்தக் கதைக்கு ! இதர 3 இடங்களையும் ரொப்பிட திகில் த்ரில்லர் ரகக் கதைகள் சிலவற்றிற்கு முயற்சித்து வருகிறேன். அவற்றையாவது இப்போதைக்கு திரைமறைவில் வைத்திருப்போமே ? 

So 2014-ன் இந்தப் புது முயற்சி உங்களின் தொண்டைகளை சோகத்தில் அடைக்கச் செய்யும் முயற்சியல்ல ; இந்தப் புது பாணிகளை ரசிக்கலாம் என்ற நம்பிக்கையுள்ள நண்பர்கள் சந்தா தொகைகளை செலுத்தும் போது  இதன் பொருட்டு - ரூ.400 சேர்த்து அனுப்பிடலாம் ! சந்தா என்ற topic -ல் இருந்திடும் போதே இதனை ஒரு நினைவூட்டலாகவும் குறிப்பிட விரும்புகிறேன். 2014-ன் கதைகளுக்கு முன்பணம் அனுப்பிட ; அதன் பூர்வாங்கத் தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்திட நிச்சயம் 'வைட்டமின் 'ப ' நிறையவே தேவை என்பது நீங்கள் அறியாதது அல்ல ! சந்தாப் புதுப்பித்தல்கள் துவங்கி விட்டுள்ளன ; ஆனால் இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பதே நிஜம். 'ஜனவரியில் தானே ? - அப்போது பார்த்துக் கொள்ளலாம் !' என்று கருதிடாமல் இப்போதே பணம் அனுப்பிட முனைந்தால் -  நிச்சயம் எங்கள் தோள்களின் பாரம் சற்றே குறைந்திடும் ! ப்ளீஸ் guys ? அதே போல நீங்கள் உங்கள் நகர நூலகங்களுக்கோ / பள்ளி ; கல்லூரி நூலகங்களுக்கோ நமது சந்தாக்களை அன்பளிப்பாய் வழங்கிட விரும்பிடும் பட்சத்தில் 15% சலுகை + 2 அல்லது 3 தவணைகளில் பணம் செலுத்தும் சுதந்திரமும் உண்டு ! Do give that a thought too ?

'எல்லாம் சரி - கிராபிக் நாவல்கள் எனும் விஷப் பரீட்சைக்கு ஏன் இத்தனை ஆர்வம் ?' என்ற ஒரு சாராரின் கேள்வி பாக்கி நிற்கின்றது ! 'சிவனே' என்று கார்ட்டூன் கதைகளையோ - துளியும் சிக்கல் இல்லா டெக்ஸ் கதைகளையோ தனியானதொரு இதழாய் போட்டுப் போய் கொண்டே இருக்கலாமே ? என்ற கேள்விக்கு எனது பதில் ரொம்பவே simple : ஐந்தில் ரசிக்கும் அந்த Tom& Jerry -ஐ பதினைந்தில் அதே ஆர்வத்தோடு நாம் ஆராதிப்பதில்லை ! இருபத்தைந்தில் முக்கியமாய்த் தெரிந்திடும் சங்கதிகள் நாற்பதை நெருங்கும் நாட்களில் நகைப்பாய்த் தெரிந்தால் வியப்பில்லை ! காலமும், சூழ்நிலைகளும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும், நம் ரசனைகளையும் செதுக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் சந்தேகமே இல்லை ! நவீன உலகின் புது சினிமாக்களை சந்தோஷமாய் ரசிக்கிறோம் ; உடுப்பி ஹோட்டல்களும் ; வுட்லண்ட்ஸ் ஹோட்டல்களும் நின்ற இடங்களில் இன்று KFC : McDONALDS என்றெல்லாம் வாய்க்குள் நுழையா பெயர் கொண்ட கடைகளில் வாயைத் திறந்து நிற்கின்றோம் ;  இள ரத்தம் பாய்ந்திடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு விசிலடிக்கிறோம் ; புது சிந்தனைகளைச் சொல்லிடும் இளைய தலைமுறையை வியப்போடு பார்க்கிறோம் - ஆனால் (தமிழில்) 'காமிக்ஸ் ரசனை' என்று வரும் போது மட்டும் நிறைய வேளைகளில் நம்மைச் சுற்றி நாமே ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டு அதன் கதகதப்பே போதுமென்ற திருப்தியில் தொடர்வது புரியாத புதிர்களில் ஒன்று ! அது தவறென்றோ ; அந்த ரசனைகள் மட்டமென்றொ சத்தியமாய் நான் ஒரு நாளும் சொல்லப் போவதில்லை ; இன்னமும் சாப்பாட்டு வேளைகளில் நான் தேடுவது லக்கி லூக்குகளையும் ; டொனால்ட் டக்குகளையும் தான் !  ஆனால் சிறிது சிறிதாகவேனும் நம் ஜன்னல்களை இதர விடியல்களின் திசைகளிலும் திறந்து வைப்பதில் தவறில்லை என்பது எனது எண்ணம் ! இந்த சோகக் காவியங்களை படித்து நான் சாதிக்கப் போவது என்ன ? காமிக்ஸ் படிப்பதே ஒரு பொழுது போக்கிற்கு எனும் போது இதில் 'நொய்-நொய்' என்ற பிடுங்கல்கள் தேவை தானா ? என்று எண்ணத் தோன்றுவது சகஜமே ! பல்சுவைப் பந்தியிலும் ஒரு ஊறுகாய் ஓரமாய்த் தேவைப்படும் போது - நம் வாசிப்புகளின் விஸ்தீரணத்தை சன்னமாய் அகலப்படுத்திடும் ஒரு முயற்சியை விரோதமாய்ப் பார்க்கத் தேவை இல்லையே ? கனமான கதைகளை ஜீரணம் செய்ய சிரமம் நேர்கிறது என்ற அபிப்ராயங்களை மதிக்கிறேன் ; "வானமே எங்கள் வீதி" நிச்சயம் அது போல் சிரமங்களைத் தராது ! தொடரவிருக்கும் திகில் த்ரில்லர்களும் ரசிக்கும் விதமே இருந்திடும் ! ஆனால் இது போல் சின்னதாய் இன்று துவங்கிடும் ஒரு முயற்சி - நம் காமிக்ஸ் ரசனைகளை வெவ்வேறு genre களுக்குள்ளேயும் காலப்போக்கில் இட்டுச் செல்ல ஒரு பிரத்யேகப் பாதையாய் அமைந்தால் அது நமக்கெல்லாம் பெருமை ஆகாதா ? 'இன்னமுமா காமிக்ஸ் படிக்கிறே ? என்ற பரிகாசங்கள் மாயமாகி  'காமிக்ஸ்லாம் படிக்கிறியா ? எனக் கண்கள் விரியக் கேள்விகள் எழும் நாளொன்று புலர இந்தப் பாதை சிறிதேனும் உதவிட்டால் அது நம் அனைவரது வெற்றியும் ஆகிடாதா ? Good night folks ! See you around soon ! 

220 comments:

  1. Replies
    1. அடுத்த தடவை முதல் இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள்

      Delete
  2. ஆஹா அருமை சார் ! உங்கள் தோர்கல் குறித்த எழுத்துக்கள் அனைத்தும் தேன் சொட்டுகின்றன ,உங்களது திகட்டாத வரிகளின் துணையுடன் ! பல நண்பர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் ! அவர்கள் அனைவரும் உற்ச்சாக கூக்குரலிடுவார்கள் ! விமானத்தின் கதை சத்தமில்லையே என இருந்தேன் ! அருமை ! சந்தாக்களின் எண்ணிக்கையில் , உற்ச்சாக ஊற்றெடுக்க இவை உருதுனையாகட்டும் !

    ReplyDelete
  3. Replies
    1. வைக்கிங் என்றால் எனக்கு சமீப காலமாக முதலில் நினைவுக்கு வருவது "HOW TO TRAIN YOUR DRAGON " படம். தற்போது இரண்டாம் பாகம் 3 D யில் வந்துள்ளது! "சான்சே இல்லை" என சொல்ல வைக்கும் ஒரு படம் அது ....!

      Delete
    2. நண்பர் விஸ்கி சுஸ்கி : How to train your Dragon எனக்கும் மிகவும் பிடித்த படம். ஆனால் அதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு அல்லவா வெளிவர உள்ளது? (June 10 2014) !!

      Delete
    3. @Radja from France,
      "வந்துள்ளது" என்பதை "வரவுள்ளது" அல்லது "TRAILER வந்துள்ளது" அவற்றுள் எது மிகவும் பொறுத்தமாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ளவும். : )! கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் பாஸ் ! : )

      Delete
    4. நண்பர் விஸ்கி சுஸ்கி : // கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் பாஸ் ! : ) //

      :-))

      Delete
  4. அடடே... இதெல்லாம் கனவா? நிஜமா? அப்போது நண்பர்கள் கேட்டபோது - 'இது நமக்கு சரிவராது... நம் ரசனைக்கு ஒத்துவராது... ராயல்டி மிக அதிகம்...' என்ற வார்த்தைகளே வரும். ஆனால், இப்போது... அப்படிச் சொன்னவை எல்லாமே களத்தில் சாதாரணமாக இறக்கப்படுகின்றன. வருக வருக என்று வரவேற்பதோடு, இப்படியே போனால், ஆஸ்ட்டிரிக்ஸ், டின் டின் னெல்லாம் நமது காமிக்ஸ்களில் இடம்பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற என் எண்ணத்தையும் இங்கே பதிவுசெய்கிறேன். நன்றி ஆசிரியரே! அச்சுத் தரத்தில் காம்ப்ரமைஸ் வேண்டாம் - என்பது இந்த இடத்தில் உங்கள் முன் வைக்கும் முக்கிய கோரிக்கை!!

    ReplyDelete
    Replies
    1. //ஆஸ்ட்டிரிக்ஸ், டின் டின் னெல்லாம் நமது காமிக்ஸ்களில் இடம்பிடிக்கும்//

      Delete
    2. @பொடியன்
      ஆசிரியரின் புதிய பதிவை தெரியப்படுத்தியதற்கு நன்றிகள் சார் !

      Delete
    3. @ பொடியன்

      நன்றிகள் +1

      Delete
  5. மாயாஜால கதைகள் , முன்பொரு காலத்திலேயே என துவங்கும் இவற்றை கற்பனை செய்தாலே யுவராஜா போன்றோர் நினைவில் வருகின்றனர் , நமது லயனிலும் இது போன்ற கதைகள் வராதா என ஏங்கி திரிந்த சிறுவயது என் முன்னே வந்து செல்கிறது ! இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமார எனும் வரிகள் கண் முன்னே மின்னி மறைகிறது ! தங்க நகரம் , மந்திர ராணி நினைவுகள் மின்னி மறைந்த எனது ஏழாம் வகுப்பிற்கு அழைத்து செல்கிறது !
    அப்போது மின்னி மறைந்த ஸ்பைடரின் பாதாள போராட்டம், இன்னொரு கதை , விண்வெளி பிசாசு கூட சந்தோசமாய் மனதின் முன்னே வந்து செல்கிறது ! இவ்வளவு நாள் தேடல் அல்லது காத்திருப்பிற்கு பின்னே அட்டகாசமாய் அந்த லோகம் புலர உள்ளது !

    ஆஹா என்றென்றும் நன்றிகள் சார் !

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு தனி உலகம் , இப்போதைய மாபெரும் வெற்றி பெற்ற ஹாரி போர்ட்டர் , லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் .......என மாபெரும் வெற்றி பெற்ற படங்களே இவற்றின் அழுத்தமான சாட்சி ! இந்த வரிசையில் உங்களது தேடல்கள் நமது லயனின் அழுத்தமான் அடுத்த அடிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை !

      Delete
    2. ஈது எண்ணத்தை சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை ,குட்டித்தலையணை டெக்ஸ்ஐ தொடர்ந்து அடுத்த அற்புதம் !

      Delete
  6. டியர் எடிட்டர் ,

    கிராபிக்ஸ் காமிக்ஸ் வரிசையில் , Thorgal -"பிரபஞ்சத்தின் புதல்வன் " எனும் பெயரில் வருவது மற்றும் வானமே எல்லை -(எனது அபிமான வெளியீடு ) இரண்டுமே வெளிவரவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது . மற்றும் திகில் திரில்லெர் தொடரினையும் வரவேற்கின்றோம் . Thorgal தொடரில் Vane Hamme இன் சித்திரங்கள் காண ஆவலாக உள்ளேன் .

    ReplyDelete
  7. hmm night mulichurunthathu na;llatha pochuu...

    ReplyDelete
  8. Dear Editor Sir,
    I saw the coming forth issues advertisements, I had the same feeling when i read first time, "Appirikka Sathi".
    Happy to see Johnny, Mudalai Pattalam, Rojer, Chick bill are in the line.
    I too have disppointments in your 2014 schedule,
    (Particularly, the 50% reduction for color reprints) but overall it covers all people favorite series,
    Your last post was so creative and brilliant, but as the reall readers we feel different in our view of angle.

    I guess you are planning something for kids in 2014???. :) Fingers crossed!

    For KKK pls try reprint only in color, otherwise go for someother reprint.
    Our previous size (7.5x5) is ok for KKK if you can give that for Rs.120/- I think it may cross more than 228 pages...

    As per graphic novels, we welcome the different stories, We know you will give only the best for us and our region.

    ReplyDelete
  9. Thorgal is a welcome addition to our comics lineup.

    I only hope that the color printing quality improves well enough for us to appreciate it. The quality of the last few titles (XIII, Largo, Prince reprint, Iratha Thadam) were disastrous, with XIII having the worst printing quality I have ever seen.

    ReplyDelete
  10. lucky already paid for graphic novels also

    ReplyDelete
  11. பிரமாதமான அறிவிப்பு. அந்த ஒரு ஓவியமே ஆயிரம் கதைகள் சொல்கின்றதே!!

    இப்படி, ஆக்‌ஷன், திகில் கதைகளைப் போடுவீர்கள் என்று தெரிந்தால் ஏன் கிராபிக்ஸ் நாவல்களுக்கு எதிர்ப்பு வரப்போகிறது? இதற்கேன் இவர் தனி சந்தா அறிவித்தார் என சண்டைபிடிக்கப்போகிறார்கள் பாருங்கள்!!

    ஆனால், எனக்கொரு டவுட்டு...........

    இப்படி ஆக்‌ஷன், திகில்னு இறங்கினீங்கன்னா, நாங்க எதிர்பார்த்த கலைப்படைப்புகள்?? ஆக்சனை கலைப் படைப்பு இல்லையென சொல்லமாட்டேன், ஆனால், நான் சொல்லவருவது, உணர்வுப்பூர்வமாக மனிதம், வரலாறு பற்றிப்பேசும் கதைகளை!! அதுக்கு பிரளயத்தின் பிள்ளைகள், சிப்பாயின் சுவடுகளோடு கல்தாவா? அவ்வ்வ்வ்...

    ReplyDelete
    Replies
    1. @ ஆதி
      //நாங்க எதிர்பார்த்த கலைப் படைப்புகள்?//

      'க்ராபிக் நாவல்' என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே பாகற்காயை பச்சையாய் சாப்பிட்டமாதிரி மூஞ்சியை வைத்துக்கொள்ளும் நம் நண்பர்கள் சிலரது மனநிலை மாற்றம் வரும்வரையிலாவது அடுத்த ஓரிரு வருடங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் 'கலைப் படைப்புகள்' இல்லாமலிருந்தால் கூட நல்லதுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது! :)

      Delete
    2. பத்து நாளா படிச்சு................. ஒரே தடவை தான் .................இன்னைக்கு தான் முடிச்சேன் சிப்பாய் கதை

      Delete
  12. போன பதிவுலேயே சொல்லணும்னு நினைச்சேன். பின்னூட்டப் பிரச்சினை! அதான் இங்க..

    எனக்கு ரீபிரிண்டைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில், பி&ஒ காலத்தைப் பெருமளவு மிஸ் செய்தவன் நான். ஆகவே எந்தக் கதை ரீபிரிண்ட் ஆனாலும் எனக்கு மகிழ்ச்சியே!

    கார்சனின் கடந்த காலத்துக்கு எவ்வளவு ஆதரவு? பிரமிப்பாய் இருக்கிறது. ஆகவே கலரோ, பி&ஒயிட்டோ அதை ரீபிரிண்ட் போட்டே தீருங்கள்! அதோடு, போன பதிவில் டெக்ஸின் பிரமாதமான கதைகள் என தலைவாங்கிக் குரங்கு, டிராகன் நகரம் ; சைத்தான் சாம்ராஜ்யம் ; மரண முள் ; மரணத்தின் நிறம் பச்சை 5 கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்களே அட்டகாசமான, மறக்கமுடியாத கதைகளென வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள். ஆயின் அவற்றின் சிறப்பைக் கேட்கவே வேண்டாம். சமீபத்தில் தலைவாங்கிக்குரங்கு ரீபிரிண்ட் செய்யப்பட்டுவிட்டது. ஆக, மீதமிருக்கும் 4 கதைகளையும் ஒரே புக்காக மெகா குண்டாக ரீபிரிண்டு போடும் படி தாழ்மையுடன், கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

    வாழைப்பூ வடை நண்பர்களே.. அணி திரளுங்க.. நான் கேட்பது நியாயம்தானே!!

    ReplyDelete
    Replies
    1. பி&ஒ காலத்தை மிஸ் செய்ததும் ஒரு வகையில் நல்லதாப்போயிற்று. எல்லாக் கதைகளையும் மாங்கு மாங்கென சாணித்தாளில் படிப்பதைவிட, இப்படி செலக்டிவான டாப் கதைகளை, நல்ல பிரிண்டில் ஃபிரெஷ்ஷாக படித்து மகிழும் வாய்ப்பு கிடைத்திருக்காது பாருங்கள். :-)))))))))))

      Delete
    2. டிராகன் நகரம் ; சைத்தான் சாம்ராஜ்யம் ; மரண முள் ; மரணத்தின் நிறம் பச்சை//

      என்ன இந்த ரீபிரிண்ட் கதைகளுக்கு சப்போர்டே இல்லை? இவருக்கு வேற வேலை இல்லை, எப்ப பாத்தாலும் ஜோக்கடிச்சிகிட்டு என்று ஆசிரியர் விலகிப்போகிறாரா? தனியே டீக்குடிக்கும் போராட்டம் நடத்த வேண்டியதுதான் போல. அவ்வ்வ்வ்..

      எப்படியும் இந்தக் கோரிக்கை கானல்நீர்தான் என்று எனக்குத் தெரிகிறது. இன்னொரு ஐடியா!! பேசாமல், இந்த புக்குகள் கைவசம் இருக்கும் நண்பர்கள் லைட்டா இங்க ஒரு பிட்டைப்போடுங்கள், ஒரு ஞாயித்துக்கிழமையாப் பாத்து நேர்ல வந்து இருந்து, சாப்பிட்டு (இது முக்கியம்) வ்ழாவை சிறப்பித்துவிட்டு, ஒரு ஓரமாக உக்காந்து புக்குகளைப் படித்துமுடித்து திரும்பித்தந்துவிட்டு போய்விடுகிறேன்.

      எனி சென்னை வாலண்டியர்ஸ்? ஈ.விஜய்? கிங்விஸ்வாவிடம் எப்படியும் இவை இருக்கும், ஆவடிக்கு கிளம்பிறலாமா? மீ திங்கிங்!! :-))))))))

      Delete
    3. அடிக்கடி போராட்டம் நடத்துவோர் உடலுக்கு ஆரோக்யமான எண்ணை சேர்க்காத உணவுகளை ஆயுதமாகப் பயன்படுத்தவும். வாழைப்பூ வடைக்கு பதிலாக கம்பு அடையை சேர்த்துக்கொள்ளுங்கள்! :D

      Delete
    4. எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு, அது வாழைப்பூ வடையா அல்லது வலைபூ வடையா??

      Delete
    5. yes, i vote for your demand of mega tex special..

      Delete
    6. //எனி சென்னை வாலண்டியர்ஸ்? ஈ.விஜய்? கிங்விஸ்வாவிடம் எப்படியும் இவை இருக்கும், ஆவடிக்கு கிளம்பிறலாமா? மீ திங்கிங்!! //

      ஆதி தாமிரா - இதில் ஏதாவது ஒரு புத்தகத்தை உங்களுக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளேன். நாளைக்கு பகலில் தொலைபேசியில் பேசுவோமே?

      Delete
    7. //எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கு, அது வாழைப்பூ வடையா அல்லது வலைபூ வடையா??//

      சிம்பா,

      சந்தேகமே வேண்டாம். அது வாழைப்பூ வடையேதான்.

      கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ................ அந்த கதை இங்கே வேண்டாமே?

      எங்கேயாவது அநீதி நடந்தால் அங்கே சென்று அதை கண்டிக்கும் வகையில் வாழைப்பூ வடை சாப்பிடுவது எங்கள் காமிக்ஸ் கிளப் மெம்பர்களின் வழக்கம்.

      Delete
  13. டியர் எடிட்டர்,

    வாவ்! தோர்கல்!! அட்டகாசம்!!!

    இதற்கு முன் தோர்கல்லை நான் ஆங்கிலத்திலோ, வேறு எந்த மொழியிலுமோ படித்ததில்லை என்ற போதிலும், இதைப் பற்றி நண்பர்கள் சிலர் வலைத்தளங்களிலும், இந்த ப்ளாக்கிலும் ஏற்கனவே சிலாகித்து எழுதியிருந்ததால், நெட்டில் மேய்ந்து இத்தொடரின் அட்டைப்படங்கள் சிலவற்றை பார்த்தேன். விதவிதமான sci-fi/மாயாஜால ரக அட்டைகள் என் கவனத்தை ஈர்த்தாலும், 'ஃப்ளாஷ் கார்டன்' ரகக் கதை பாணியில் கொஞ்சம் ஓவர் பூ-சுற்றலாக அமைந்துவிடுமோ என்ற பயமும் கூடவே எழுந்தது. ஆனால் 'வாண் ஹாம்மே' என்ற பெயரை அந்த அட்டைப்படங்களில் பார்த்த மாத்திரத்தில் என் பயம் உடனே விலகி சட்டென்று ஒரு உற்சாகமும், ஆர்வமும் குடிகொண்டது. இந்த மனிதரின் படைப்பாற்றலும், கற்பனைத் திறனும்தான் உலகறிந்த விசயமாயிற்றே!

    'வாண் ஹாம்மே'யின் இந்த வித்தியாசமான படைப்புகள் தமிழில் என்றைக்கு வருமோ என்று நான் ஏக்கப் பார்வை பார்த்து ஒரு சில மாதங்களே ஆகியிருக்கின்றன எனும் நிலையில், இந்த அட்டகாசமான அறிவிப்பு என் உற்சாகத்தை பன்மடங்காக்குகிறது. 'சன்ஷைன் க்ராபிக் நாவல்' வெளியீடாக இத்தொடர் வருமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை! சூப்பர் சார்!!

    அப்படியானால், 2014 ஜனவரியில் சென்னை புத்தகத் திருவிழாவின்போது 'சன்ஷைன் கிராபிக் நாவலை' களமிறக்கவிருப்பதாக சென்ற பதிவில் நீங்கள் உளறிக் கொட்டியதின் பின்னணியில் இந்த 'தோர்கல்'லும் இருக்கிறது. அப்படித்தானே? 'அப்படித்தான்' எனில், கொண்டாட்டமும் பல மடங்காகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது? :)

    இன்னும் சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு 'சிங்கத்தின் மத்திம வயதில்' தொடரை நீங்கள் எழுதும்போது பின்வரும் வரிகள் இடம்பெறக்கூடும்...
    "இன்று பிராதான இடத்தைப் பெற்று கோலோச்சி வரும் நமது கிராபிக் நாவல்கள் அறிமுகமான அன்றைய காலகட்டங்களில், நண்பர்களது 'வாழைப்பூ' போராட்டங்களைச் சமாளித்திட நான் அடித்த பல்டிகளும், எனக்கு ஏற்பட்ட தலைநோவுகளின் எண்ணிக்கையும் சொல்லி மாளாதவை..." :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால், 2014 ஜனவரியில் சென்னை புத்தகத் திருவிழாவின்போது 'சன்ஷைன் கிராபிக் நாவலை' களமிறக்கவிருப்பதாக சென்ற பதிவில் நீங்கள் உளறிக் கொட்டியதின் பின்னணியில் இந்த 'தோர்கல்'லும் இருக்கிறது. அப்படித்தானே? 'அப்படித்தான்' எனில், கொண்டாட்டமும் பல மடங்காகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது? :)//

      Delete
    2. Erode VIJAY : ஓ.வா.உ.நா. இருக்க - ரகசியமாவது புண்ணாக்காவது ?

      Delete
    3. 'சிங்கத்தின் மத்திம வயதில்' தொடரை நீங்கள் எழுதும்போது//

      அப்படியானால் ஒரு காலத்தில், ‘சிங்கத்தின் வயசான காலத்தில்’ என்றும் தொடர் வருமல்லவா? ஹிஹி!

      Delete
    4. சிங்கத்திற்கு வயசாகாது!

      Delete
  14. சார் ஆரம்பத்தில் சூப்பர்கிராபிக் நாவல் கதை கொடுத்து விட்டு அப்புறம் கொடுக்கும் கிராபிக் கதைகள் எல்லாம் ஒரே அழுமுஞ்சி கதைகளாகவோ உள்ளது இந்த வருடமாவது மாற்றி அமையுங்கள். 2014ல் கண்டிப்பாக டெஞ்சர் டாயாபாலிக் ஒன்றாவது கொடுங்கள் . நி1நி2 வேண்டாம் சார்.

    ReplyDelete
  15. டிசம்பர்ரில் வெளி வரும் 4வதுபுத்தகம் சிக் பில் கதையா?

    ReplyDelete
  16. சார், 2014 line up நன்றாகவே உள்ளது. முதலை பட்டாளம், ரோஜர் போன்றவர்களின் வருகை மகிழ்ச்சியை தருகிறது. லக்கி-டெக்ஸ் ஆதிக்கம் குறைவதும் மகிழ்ச்சிதான்.

    but, கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் 2013ல் நமக்கு சம்பந்தம் இல்லா போர்க்களம் - சோகம் இந்த உணர்ச்சிகளை தாண்டி வெளியே வந்ததாக தெரியவில்லை. அதனால் தான் பலருக்கும் கிராபிக் நாவல்கள் பிடிக்கவில்லை. personal ஆக இதுவரை வந்த 3 கிராபிக் நாவல்களும் சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை. தயவு செய்து மீண்டும் போர்க்களம் - சோகம் வேண்டாமே.

    கேட்டாலும் கிடைக்கப்போவதில்லை. இருந்தாலும் கேட்போமே...
    1. ராபின், மார்டின் இவர்களின் கதைகள் 2014 சேர்க்கவும்.
    2. கர்சனின் கடந்த காலம், நிழல் 1 நிஜம் 2 போன்ற கதைகள் மிக சமீபமாக வந்தவை. இக்கதைகளுக்கு மறுபதிப்பு என்பது too early என எண்ணுகிறேன்.
    2. ரிப் கெர்பி, சார்லி, விங் கமேண்டர் ஜார்ஜ், பேட்மேன் போன்ற இதுவரை மறுபதிப்புகளில் தலைகாட்டாதவர்களை மறுபதிபுகளில் செய்யலாமே.

    ReplyDelete
    Replies
    1. Siv நீங்கள் கா. க. கா வேண்டாம் என்று சொல்வதை பார்த்தால் கள்ள மார்க்கெட்டில்கலரில் வாங்கிவிட்டீர்களென நினைக்கிறேன்

      Delete
    2. SIV : //but, கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் 2013ல் நமக்கு சம்பந்தம் இல்லா போர்க்களம் - சோகம் இந்த உணர்ச்சிகளை தாண்டி வெளியே வந்ததாக தெரியவில்லை.//

      சரியான கருத்தென்று இதனோடு உடன்பட மாட்டேன் சார் ! 'சுனாமி ' என்றதொரு வார்த்தை நம் எத்தனை பேர்களின் அகராதிகளில் இருந்தது - 2004-ல் நாம் அதன் தாண்டவத்தை நேரில் பார்த்திடும் வரை ?

      யுத்தமும் ; அதன் வலிகளும் நமக்கு செய்திகளாகவும், வரலாற்றுப் பாடங்களாகவும் மாத்திரமே இருந்து வருவது நம்பால் கடவுளின் கருணைப் பார்வை லயித்திருப்பதனால் ! ஆனால் அந்தக் கருணையினை அனுபவிக்கும் அதிர்ஷ்டமில்லா ஒரு உலகத்தையும் , அதன் மாந்தர்களையும் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள நினைப்பதில் தவறில்லையே ?

      Delete
    3. SIV : சம்பந்தமென்று பார்த்தால் - நமக்கும் தொப்பியணிந்த அந்தக் குதிரைப் பசங்களுக்கும் (அது தான் - அந்த கௌபாய்ஸ்) என்ன தொடர்பென்று சொல்லுவது ? :-)

      Delete
    4. //குதிரைப் பசங்களுக்கும் (அது தான் - அந்த கௌபாய்ஸ்) // எடி சார் குதிரை பசங்க என்றால் ஹார்ஸ் பாய்ஸ் தானே .... ;)

      Delete
    5. கிறுக்கல் கிறுக்கன் : கள்ள மார்கெட் அல்ல. நல்ல மார்க்கெட்டில் புது வெளியீடாக வங்கியதை இன்னும் பத்திரமாக வைத்து உள்ளேன்.

      // யுத்தமும் ; அதன் வலிகளும் நமக்கு செய்திகளாகவும், வரலாற்றுப் பாடங்களாகவும் மாத்திரமே இருந்து வருவது நம்பால் கடவுளின் கருணைப் பார்வை லயித்திருப்பதனால் ! ஆனால் அந்தக் கருணையினை அனுபவிக்கும் அதிர்ஷ்டமில்லா ஒரு உலகத்தையும் , அதன் மாந்தர்களையும் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள நினைப்பதில் தவறில்லையே ? //

      உங்கள் கூற்றில் உடன்படுகிறேன் sir. நாம் நேரடியாக சம்பந்தம் இல்லையெனினும்
      சமகாலங்களில் நாம் பார்த்திடும் ஈழ யுத்தத்தை விட கொடிய ஒரு சோகத்தை கிராபிக் நாவல்களில் பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் இந்த சோக காவியங்களுக்கு வருடத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கை போதும் என்பது என் personal கருத்து.

      படித்ததில்லை என்றாலும் தோர்கல்க்காக ஆவலுடன் காத்து உள்ளேன்

      Delete
  17. I like ur choice sir. I haven't read Thorgal before but it look promising. One of my all-time favorite hero is Conan the barbarian and Thogal seem to be similar kind of story. I welcome him with open hands.

    ReplyDelete
  18. கடந்த சில மாதங்களுக்கு முன்பே தோர்கல் பற்றி நமது பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அது இன்று நமது காமிக்ஸ்=ல் வருவது மிகவும் மகிழ்ச்சி. தோர்கலை நான் இதுவரை படித்தில்லை. ஆனால் என் நண்பர்கள் மிகவும் அற்புதமான கதைகள் என்று கூறியுள்ளார்கள். கிராபிக் நாவல் எப்போதுமே என் மனதை கவர்ந்தவை அதில் தோர்கலும், மாயாஜால கதைகளும் இடம் பெறும்போது அடையார் ஆனந்தபவன் மில்க் ஸ்வீட் 5 கிலோ ஒரே நேரத்தில் சாப்பிட்டது போல் உணருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // அடையார் ஆனந்தபவன் மில்க் ஸ்வீட் 5 கிலோ ஒரே நேரத்தில் சாப்பிட்டது போல் உணருகிறேன்//

      இப்ப எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க? :D

      Delete
    2. ஈரோடு விஜய் - இப்ப எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க?

      பிரகாஷ் பப்ளிஷர்ஸ், அம்மன்கோவில்பட்டி, சிவகாசி.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  19. வாழ்த்துக்கள் ஸ்டீல்

    ReplyDelete
  20. முன்னெச்சரிக்கை: மற்றுமொரு அடுக்குமாடி குடியிருப்பு கீழே கட்டப் பட்டுள்ளது!

    டியர் விஜயன் சார்,

    மாறாத உறுதியுடன் கிராபிக் நாவல்களை தொடர்ந்து வெளியிடும் உங்கள் முயற்சிகள் பாராட்டுக்கு உரியது! வாசகர்களால் மிகவும் விரும்பப் படும் 'XIII' தொடரைக் கூட கிராபிக் நாவல்களின் கீழ் வகைப் படுத்தலாம்! ஆனால், கிராபிக் நாவல் என்ற பெயர் சூட்டலின் கீழ் நீங்கள் வெளியிடத் சோகக் கதைகளை, ரசிக்க முடியாமல் விலகி நின்ற பல வாசகர்களின் மனம், தோர்கல் மூலம் நிச்சயம் மாறும் என்றே நம்புகிறேன்.

    ஆனால், இதுவரை 34 பாகங்கள் வெளிவந்துள்ள இந்தத் தொடரில் அடுத்த வருடம் இரண்டே இரண்டு கதைகள் தான் வெளிவரவிருக்கின்றன என்ற சேதி நிச்சயம் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை!

    லார்கோ, வேய்ன் ஷெல்டன், ப்ளூபெர்ரி, கமான்சே போன்ற படைப்புக்கள் - தொடர்களாக இருந்தாலும், அவை ஓரிரு கதைகள் அடங்கிய தனித் தனி கதைகளின் தொகுப்புகள் மட்டுமே; இந்தத் தனித் தொகுப்புகளின் கதை புரிய, நாயகர் பற்றிய ஒரு சிறிய முன்னறிமுகம் இருந்தால் மட்டும் போதும் - சில சமயங்களில் அது கூடத் தேவைப் படாது! எனவே, அத்தொடர்களில் இருந்து வருடத்திற்கு சில கதைகளை வெளியிட்டால் கூட பெரிதாய் ஒன்றும் பிரச்சினை இராது!

    XIII-ன் முதல் தொடர், கிட்டத்தட்ட 20 வருடங்களாக அந்தரத்தில் தொங்கியதில் ஏகத்திற்கும் கடுப்பான வாசகர்களில் நானும் ஒருவன்! இடையில் பல வருடங்கள், அதைப் பற்றி சுத்தமாக மறந்தே போய் விட்டேன்! ஆனால், அதை ஒரு மெகா இதழாக வெளியிட்டு என்னைப் போன்ற நெடுநாள் வாசகர்களை மகிழ்வித்தீர்கள்! XIII-ன் இரண்டாவது தொடர், பிரெஞ்சிலேயே சமீபத்தில் தான் துவங்கியுள்ளது என்பதால் நமக்கு வேறு வழியில்லை - எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொறுமையாக காத்திருக்கத் தான் வேண்டும்!

    ஆனால், ஏற்கனவே 34 பாகங்கள் வெளிவந்துள்ள ஒரு தொடரைப் படிக்க இன்னுமொரு 20 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா என்ன?! தோர்கல் விரைவில் லயனில் வரப் போகிறது என்ற வதந்தி அரசல் புரசலாக கேட்ட போதே, மீண்டும் ஒரு மெகா தொடர் - அதுவும் லயனிலா என்ற பயம் உள்ளூர இருந்தது. அதற்குக் காரணம், வருடத்திற்கு குறைந்தது இரண்டு மெகா ஸ்பெஷல்கள் வெளியிடக் கூடிய Capacity உங்களிடம் இருந்தாலும், அவற்றை "கதம்பப் ஸ்பெஷல்களாக" வெளியிட்டு, அதிலேயும் ஒரு சில தொடர் கதைகளை உள்ளே நுழைத்து, பல மாதங்கள், பல வருடங்கள் வாசகர்களைக் காக்க வைப்பீர்கள்! :(

    ஒரே ஒரு விண்ணப்பம்: எங்களுக்கு அடுத்த வருடம் வானமும் வேண்டாம், வீதியும் வேண்டாம்; நீங்கள் பரிசீலனையில் வைத்திருக்கும் வேறு த்ரில்லர் கதைகளும் வேண்டாம் - 2014 மார்ச் மாதத்திற்குள், தோர்கலின் முதல் ஆறு பாகங்களை, ஒரு தனி ஸ்பெஷல் இதழாக, र400 விலையில், முடிந்தால் ஹார்ட் பவுண்ட் கவருடன் வெளியிட முடியுமா? ஒருவேளை அது பெரும் வரவேற்பைப் பெற்றால், அடுத்த ஆறு பாகங்களை, அடுத்த வருட இறுதிக்குள், முன்பதிவின் பேரில் வெளியிடலாம்!

    மாறாக, ஒவ்வொரு வருடமும், இரண்டு அல்லது நான்கு பாகங்கள் மட்டுமே வெளிவரும் என்றால்... என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

    ரொம்பவே சீரியஸாக போய் விட்ட இந்தப் பதிவை, கொஞ்சம் லைட்டாக முடிக்க வேண்டும் இல்லையா?! ;)

    //எந்தவொரு விஷயத்தையும் கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கும் ஆற்றல் எனக்கில்லையா//
    இதைத் தான், டெக்ஸ் தீபாவளி மலரில் இடம் பெற்ற விளம்பரம் ஒன்றிலேயே போட்டு உடைத்து விட்டீர்களே! (பக்கம் 464 - மேலிருந்து கீழாக மூன்றாவது படம்!) ;-)

    //" வானம் எங்கள் வீதி !" என்ற பெயரோடு அந்த விமானங்கள் சார்ந்த//
    அதான் ஏற்கனவே தெரியுமே! :) இதுக்கு ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கீங்களே?! ;)

    //இதர 3 இடங்களையும் ரொப்பிட திகில் த்ரில்லர் ரகக் கதைகள் - இப்போதைக்கு திரைமறைவில்//
    (அனேகமா) அந்த திரில்லர் கதைகளில் ஒன்றுக்கான Preview கூட அந்தப் பதிவிலேயே இருக்கே! ;)

    என்னவோ போங்க சார்!

    ReplyDelete
    Replies
    1. //இதைத் தான், டெக்ஸ் தீபாவளி மலரில் இடம் பெற்ற விளம்பரம் ஒன்றிலேயே போட்டு உடைத்து விட்டீர்களே! (பக்கம் 464 - மேலிருந்து கீழாக மூன்றாவது படம்!) ;-)//
      நல்ல வேலை நீங்க ஸ்'ஸ்கூல் வாத்தியார் ஆகலை.... பசங்கெல்லாம் நொந்து நூடல்ஸ் ஆகிருபாங்க... கழுகு பார்வை அய்யா உமக்கு...

      Delete
    2. Karthik Somalinga : 34 ஆல்பம்கள் கொண்ட தோர்கலை உருவாக்கிட படைப்பாளிகளுக்கும், அங்குள்ள வாசகர்களுக்கும் 36 ஆண்டுகள் காத்திருப்பு அவசியமாகி இருக்கும் போது நாம் பிள்ளையார் சுழியிலே அயர்ச்சி காட்டுவது எத்தனை பொருத்தமென்று தெரியவில்லை ! தவிர தோர்கலின் கதைகளை ஒரு சங்கிலியின் பல கண்ணிகளாகவும் பார்த்திடலாம் ; தனித் தனி சாகசங்களாகவும் படித்திடலாம் எனும் போது XIII தொடரில் நேர்ந்த குழப்பங்கள் இதனில் எழ வாய்ப்புகள் குறைச்சலே !

      ப்ளூகோட் பட்டாளத்தில் 57 ; கமான்சேவில் 15 ; ஷெல்டனில் 15 ; சாகச வீரர் ரோஜரில் 67 ; சிக் பில்லில் 60 ; லக்கி லுக்கில் 70 ; கேப்டன் டைகரில் 16 ; ரிபோர்டர் ஜானியில் 78 ; டெக்ஸ் வில்லரில் 630+ ; என எண்ணிலடங்காக் கதைகள் அந்தந்தத் தொடர்களில் காத்துள்ளன என்பதற்காக அவற்றை நாம் ஒட்டு மொத்தமாய் வெளியிடவும் முனைந்திடவில்லை ; ஒதுக்கி வைத்திடவும் இல்லை எனும் போது தோர்கலை மட்டும் 'எக் தம்மில்' வெளியிட்டே தீர வேண்டுமென்ற அவசரம் காட்ட வேண்டியதன் அவசியம் எனக்குப் புலனாகவில்லை. நம் மார்கெட் ; நம் ரசனைகள் ; நமது shortcomings நமக்கே நமக்கு மட்டும் பிரத்யேகமானவை ! So அவற்றுக்குள் உலவிட நாம் தேர்வு செய்யும் பாதைகளும் உலகின் இதர பதிப்பக ஜாம்பவான்களின் பாதைகளோடு ஒத்துப் போகும் கட்டாயம் நிச்சயம் கிடையாது.

      அதே போல ஸ்பெஷல் இதழ்களில் ஒரே கதையின் collection என்பது உங்களின் பார்வையில் சரியான மார்க்கமாய்த் தெரிந்திடலாம் - நிச்சயம் அதில் குறை காண இயலாது ! ஆனால் அது மாத்திரமே பாதை என்பதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. வாசகர்களின் ரசனைகள் ஆளுக்கொரு விதமெனும் போது அதனுள் ஒரு balance கண்டிட முயற்சிப்பதே எனது பொறுப்பு ! பெரும் வியாபாரியாய் இருக்கும் ஆற்றல் என்னிடம் இல்லாது போயினும் - வாசகப் பெரும்பான்மையின் நாடிகளை சிறிதேனும் உணராது போகும் பட்சத்தில் நிச்சயம் சிக்கலே !

      Delete
    3. கார்த்திக்கின் பில்டிங் தகர்க்கப்பட்டது. :-))))

      Delete
    4. @விஜயன் சார்:
      //நாம் பிள்ளையார் சுழியிலே அயர்ச்சி காட்டுவது எத்தனை பொருத்தமென்று தெரியவில்லை//
      கொஞ்சம் பெரிய சுழியாக போட முடியுமா என்று மட்டுமே கேட்டிருக்கிறேன்! அதற்கு காரணம் இல்லாமல் இல்லை! முதல் ஆறு ஆல்பங்கள் இணைந்தது ஒரு கம்ப்ளீட் ஸ்டோரி ஆர்க் என்று கேள்விப் பட்டேன்; எனவே தான், அவற்றை ஒரே இதழாக வெளியிட முடியுமா என்ற விண்ணப்பம்! அதற்கு உங்கள் பதிலை சொல்லி விட்டீர்கள், நன்றி!

      //ப்ளூகோட் பட்டாளத்தில் 57 ; கமான்சேவில் 15 ; ஷெல்டனில் 15 // etc. etc.

      இந்தப் பட்டியலில் உள்ள கதைகளை எல்லாம், ஏக் தம்மில் வெளியிட நான் ஒன்றும் உங்களிடம் கேட்கவில்லையே?! கீழ்க்கண்டவாறு தானே எழுதி இருந்தேன்?

      //எனவே, அத்தொடர்களில் இருந்து வருடத்திற்கு சில கதைகளை வெளியிட்டால் கூட பெரிதாய் ஒன்றும் பிரச்சினை இராது!//

      //தோர்கலை மட்டும் 'எக் தம்மில்' வெளியிட்டே தீர வேண்டுமென்ற அவசரம் காட்ட வேண்டியதன் அவசியம் எனக்குப் புலனாகவில்லை//
      34 ஆல்பங்களையும், ஒரே ஆண்டிலோ, ஒரே இதழிலோ வெளியிட சொல்லவில்லையே?! தவிர, அந்த 34 ஆல்பங்கள், XIII அளவுக்கு குழப்பத்தைத் தராது என்று நீங்கள் கூறி விட்டதால், அது ஒரு பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை! 34 ஆல்பங்கள் என்று அறிவித்த கையோடு, இதையும் கொஞ்சம் தெளிவு படுத்தி இருந்திருக்கலாம்!

      தோர்கலை ஒரே தம்மில் படிக்க எனக்கு எந்த ஒரு அவசரமும் இல்லை. என்னிடம், அதன் முதல் 13 ஆல்பங்கள், Cinebook வடிவில், ஹார்ட் காப்பிகளாக என் வீட்டு புத்தக அலமாரியில், சில மாதங்களாக துயில் பயின்று கொண்டிருக்கின்றன! பொதுவாகவே தமிழில் படிப்பதையே மிகவும் விரும்புவேன் என்பதால், உங்களின் இந்த அறிவிப்பு என்னுடைய ஆவலை சற்று அளவுக்கு அதிகமாகவே தூண்டி விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தவறு தான், மாற்றிக் கொள்ள வேண்டும்!

      //வாசகப் பெரும்பான்மையின் நாடிகளை சிறிதேனும் உணராது போகும் பட்சத்தில் நிச்சயம் சிக்கலே !//
      கதம்ப ஸ்பெஷல்களை அடியோடு வெறுக்கும், அந்த சிறுபான்மை வாசகர்களில் ஒருவனாக, எனது பார்வைகளை / எதிர்ப்புகளை அவ்வப்போது இங்கு பதிவு செய்வதில் தவறேதும் இல்லையே?!

      ஒருவேளை, தோர்கல் பெருத்த வரவேற்பைப் பெற்று, அதன் காரணமாக, லயனின் 30-வது ஆண்டு மலரில், அதன் மூன்றாம் பாகத்தை நீங்கள் வெளியிட முடிவெடுத்தாலும் - அப்போதும் என் எதிர்ப்பினை இங்கு பதிவு செய்வேன் என்பதை, இப்போதே முன்பதிவு செய்து விடுகிறேன்!

      உங்களின் பொறுமையான பதில்களுக்கு நன்றி!

      @சிம்பா:
      //நல்ல வேலை நீங்க ஸ்'ஸ்கூல் வாத்தியார் ஆகலை.... பசங்கெல்லாம் நொந்து நூடல்ஸ் ஆகிருபாங்க...//
      நோ நோ, அடிச்சு வெளியே தொரத்தி இருப்பாங்க! :D பை தி வே, தோர்கல் லயனில் வருகிறது என்ற புரளி, பல மாதங்களாகவே இணையத்தில் உலா வருகிறது! ;-)

      @ஆதி தாமிரா:
      //கார்த்திக்கின் பில்டிங் தகர்க்கப்பட்டது. :-))))//
      குண்டு ஆனை ஆதிக்கும், குண்டுப் பூனை விஜய்க்கும் ஒரு காலம் வந்தது போல, இந்த 'ஒன்றே ஸ்பெஷல், ஒன்றே கதை' கார்த்திக்கிற்கு ஒரு காலம் வராமலேயா போய் விடும்?! ;) அப்ப வச்சிக்கிறேன் உங்களை! :D

      Delete
    5. //தவிர தோர்கலின் கதைகளை ஒரு சங்கிலியின் பல கண்ணிகளாகவும் பார்த்திடலாம் ; தனித் தனி சாகசங்களாகவும் படித்திடலாம் எனும் போது XIII தொடரில் நேர்ந்த குழப்பங்கள் இதனில் எழ வாய்ப்புகள் குறைச்சலே ! //

      டெக்ஸ் கதைதொடர் ரகமா அல்லது லார்கோ/ஷெல்டன் கதை தொடர் ரகமா என்பதை தெளிவுபடுத்தவும் சார். முன்னது ரகம் என்றால் வெளியிடும் விதம் பற்றி பெரியதாக கவலை கொள்ள தேவை இல்லை. பின்னது ராகம் என்றால் கதம்பமாக வேண்டாமே ப்ளீஸ்.

      "தோர்கல்" கதைகளை 60 (ஒரு சாகசம் ) அல்லது 120 (இரண்டு சாகசம் ) எனும் வடிவத்தை கடைபிடிக்கவும் எனபது எனது தாழ்மையான மிகத்தாழ்மையான கோரிக்கை.ஸ்பெஷல் கதம்ப குண்டு புத்தகங்களில் லார்கோ/ஷெல்டன்/தோர்கல் தொடர்களை இணைத்துவிட வேண்டாம்.

      @கார்த்திக்

      //கதம்ப ஸ்பெஷல்களை அடியோடு வெறுக்கும், அந்த சிறுபான்மை வாசகர்களில் ஒருவனாக, எனது பார்வைகளை / எதிர்ப்புகளை அவ்வப்போது இங்கு பதிவு செய்வதில் தவறேதும் இல்லையே?!//

      கதம்ப ஸ்பெஷல்கள் (கதம்ப GENRE இல்லாமல் கதம்ப கதைகள் ) ஒரு GENRE ஒட்டி வரும் பட்சத்தில் (உதாரணமாக த்ரில்லர் ஸ்பெசல், ADVENTURE ஸ்பெசல்,கௌ பாய் ஸ்பெசல்,COLLECTORS ஸ்பெசல் ) அல்லது STAND ALONE கதைகள் கதம்பமாக வரும் பட்சத்தில்,அல்லது ஆண்டு மலர் போன்ற வேலைகளில் கதம்ப மலரின் தேவைகள் கட்டாயம் எனும் போது SECOND CATEGORY ரக கதைகள் ( கமான்சே, ஜில் ஜோர்டன்,லக்கி ,சிக்க்பில் ,ப்ளூ கோட்ஸ் போன்றவற்றை டெக்ஸ் ,டைகர் போன்ற ஹீரோக்களுடன் இணைத்து வெளியிடலாம்.

      எந்த வேலைகளிலும் லார்கோ/ஷெல்டன்/தோர்கல் தொடர்களை இவற்றுடன் இணைத்துவிட வேண்டாம்


      //கதம்ப ஸ்பெஷல்களை அடியோடு வெறுக்கும்,//

      பரணி போன பதிவில் கிராபிக்ஸ் நாவலை அடியயொடு வெறுக்கிறேன் என்று சொன்னது போல் உள்ளது நண்பா! I'M WITH YOU IN THIS.ஆனால் கொஞ்சம் SPECIFIC ஆகா இருப்போமே ! : )

      Delete
    6. // கார்த்திக்கின் பில்டிங் தகர்க்கப்பட்டது //

      அதில் உள்ளூர எனக்கொரு வருத்தமுண்டு! அவர் பில்டிங் தரைமட்டமாகாதிருந்தால், பக்கத்திலேயே குட்டியாய் ஒரு குடிசை வீடு கட்டி, உள்ளே குக்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டு கார்த்திக், விஸ்கி-சுஸ்கி, ரமேஸ் எல்லாரும் கடுமையா விவாதம் பண்ற அழகை கண்கொட்டாம கண்டு ரசிச்சிருப்பேன் (நடுவுல நண்பேன்டா, buddy, கண்ணே, மணியே எல்லாம் வேற போட்டுக்குவாங்க பாருங்க... மைன்ட் ப்ளோயிங்!).
      ஒருவேளை இந்தப் பதிவிலும் அப்படியொரு விவாதம் தொடர்ந்திருந்தால், "அடடா, என்னால கமெண்ட் போட்டு சண்டைல பங்கெடுத்துக்க முடியாம இந்த load more ரொம்பத் தொந்தரவு பண்ணுதே"ன்னு ஒருத்தர் 'உச்'சுக் கொட்டிக்கிட்டுக் கதை விட்டிருப்பார். "நூறு கமெண்ட் கூட தாண்டலை; உங்களுக்கு மட்டும் load more வருதாக்கும்'னு அவரை கையும் களவுமாக 'கபக்'குனு மடக்கியிருப்பேன். கிரேட் எஸ்கேப்! கிர்ர்ர்...

      Delete
    7. @விஸ்கி-சுஸ்கி:
      //ஆனால் கொஞ்சம் SPECIFIC ஆகா இருப்போமே ! : )//
      என் பின்னூட்டச் சங்கிலியில் இருந்து, தவறுதலாக அறுபட்டு விழுந்த சில கண்ணிகளை - எடுக்கவோ, கோர்க்கவோ என்று நட்புடன் வினவியதிற்கு நன்றி நண்பா! :D

      என்ன செய்ய, நம்ம ஈரோடு விஜயை குஷிப் படுத்த, சில 'மசாலா டயலாக்ஸ்' தேவைப் படுது இல்லையா?! ;)

      ஒரே நாயகரின் பல கதைகளும் (உ.ம்.: டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷல்), ஒரே Genre-ஐச் சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட தனிக் கதைகளும் (Standalone albums) - குண்டு சைஸில், ஸ்பெஷல் இதழாக, வருடம் ஒருமுறை வருவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை! :) XIII போன்ற இறுக்கமான சங்கிலித் தொடர்களும், லார்கோ / வேய்ன் போன்ற Loose Link கொண்ட சங்கிலித் தொடர்களும், ஸ்பெஷல் இதழ்களில், பத்தோடு பதினொன்றாக இணைந்து வருவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை இங்கே அனேகமாக பனிரெண்டாவது முறை பதிவு செய்யும் அதே வேளையில், நமது ஞாபக மறதி ஏஜென்ட் நம்பர் பதிமூன்றை, மறந்தும் ஸ்பெஷல் இதழ்களில் கூட்டு சேர்க்க வேண்டாம் என்பதை, மீண்டும் மீண்டும் நினைவுறுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்! ;)

      என்ன தான் பதினைந்து நாள் ரூம் போட்டு யோசித்து, "பீ கேர்ஃபுல்" ஆக எழுதினாலும், ஒரு ஃப்ளோவில், எண்ணிரண்டு பதினாறு மன்னிக்கவும், ஒன்றிரண்டு வார்த்தைகள் கூடுதலாகவோ அல்லது குறைச்சலாகவோ வெளிப்பட்டு விடுகின்றன! :D முடிந்த வரை, கண்ணிகளில் சிக்காமல் எழுத முயற்சித்தாலும், சில சமயங்களில் தவறாக கால் வைப்பதால், அவை ஆங்காங்கே வெடித்தும் விடுகின்றன! ;)

      பீ வெரி வெரி கேர்ஃபுல் - இதையும், நான் எனக்குத் தான் சொல்லிக்கிறேன்! :)

      Delete
    8. //என்ன தான் பதினைந்து நாள் ரூம் போட்டு யோசித்து, "பீ கேர்ஃபுல்" ஆக எழுதினாலும், ஒரு ஃப்ளோவில், எண்ணிரண்டு பதினாறு மன்னிக்கவும், ஒன்றிரண்டு வார்த்தைகள் கூடுதலாகவோ அல்லது குறைச்சலாகவோ வெளிப்பட்டு விடுகின்றன! //

      பார்த்தீர்களா, மேலே உள்ள பின்னூட்டத்தில் கூட, "பதினான்கு" விடுபட்டுப் போய் விட்டது! :D

      Delete
  21. யாரெல்லாம் சந்தா கட்டியது ...?

    ReplyDelete
    Replies
    1. நான் அனுப்பிட்டேன் ..........

      Delete
    2. டியூஷன் ஃபீஸ் கட்டியாச்சு! :P

      Delete
    3. நானும் Transfer செய்துவிட்டேன் Graphic Novelகும் சேர்த்து ! இம்முறை எனது தேர்வு professional couriers!

      Delete
    4. 8/11/13 அன்று சந்தா கட்டினேன். அதற்கு email வழியாக ரசீது போன்று ஏதேனும் பதில் அனுப்புவார்களா? முதன்முறையாக சந்தா கட்டுவதால் எழும் சந்தேகம்!

      Delete
    5. @ cap tiger

      நண்பரே!

      நீங்கள் பணம் செலுத்திய விபரம் மற்றும் உங்கள் பெயர்,விலாசம் உடன் சந்தா எண் ( இருந்தால் ) போன்ற தகவல்களை லயன் அலுவலக மின்னஞ்சல்-க்கு அனுப்பினீர்கள் என்றால் சந்தா புதுப்பிக்க பட்டதற்கு பதில் மின்னஞ்சல் வந்துவிடும்.

      Delete
    6. இமெயில் பதில் வந்துவிட்டது! 2014க்கு ஃபிங்கர்ஸ் கிராஸ்டு! :)

      Delete
  22. Dear Editor,

    கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் வெளியிடுவது பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லை?

    ReplyDelete
    Replies
    1. அலோ.. அலோ.. நீங்க பேசுறது ஒண்ணுமே கேக்கலையே.. சிக்னல் சரியில்லனு நினைக்கிறேன்! அலோ!!

      Delete
    2. @Periyar, சென்ற பதிவில் அதைப்பற்றி ஒரு update செய்யப்பட்டுள்ளது கவனிக்கவில்லையா! அதிலுள்ள கடைசி 6 Giga Size பத்திகளை ஒரு விடுமுறை நாளில் படித்துப் பயன்பெறுக! :D

      Delete
    3. @Ramesh Kumar - போன பதிவில் உள்ள update-யை ஏற்கனவே படித்து விட்டேன். அதில் எந்த இடத்திலும் எடிட்டர் கார்சனின் கடந்த காலத்தை கருப்பு வெள்ளையில் மட்டுமே வெளியிடுவேன் என்று உறுதியாக / தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சந்தேகமிருந்தால், தயவுசெய்து நீங்கள் மறுமுறை அந்த update-யை படிக்கவும்.

      ஆதலால் தான், இங்கே மறுபடியும் எடிட்டரின் confirmation வேண்டியுள்ளேன்...

      எப்படியாவது அவர் மனம் மாறி, கால் கட்டை விரலை வாய்க்குள் விட்டோ வண்ணத்தில் வெளியிட்டு விடுவார் என்ற ஒரு நப்பாசை தான் :)

      இதற்கு எப்படியும் எடிட்டர் ஒரு நல்ல (கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் வரும் :) பதிலளிப்பார் என்று இன்னும் நம்புகிறேன்

      Delete
    4. டியர் பெரியார் !!!

      ///இதற்கு எப்படியும் எடிட்டர் ஒரு நல்ல (கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் வரும் :) பதிலளிப்பார் என்று இன்னும் நம்புகிறேன்///

      உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக "மூட நம்பிக்கை"யாய் ஆகிவிடாது என அடியேனும் நம்புகிறேன்:-)

      Delete

  23. டியர் சார்,

    //சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கும் ஆற்றல் எனக்கில்லையா - அல்லது நண்பர்களின் கற்பனைக் குதிரைகளுக்குக் கடிவாளம் போடும் பொருட்டாவது விஷயங்களைப் போட்டு உடைக்கும் நிர்பந்தம் நேர்கிறதா - நிச்சயமாய்த்
    தெரியவில்லை ! //

    I CAN UNDERSTAND! : )!

    "தோர்கல்" ஒரு அட்டகாசமான தேர்வு. செம கல்லக்கல்.இந்த அறிமுகம், புதிய வாசகர்களை கவர் நமக்கு ஒரு சரியான வாய்ப்பு. போஸ்டர்,நோட்டிஸ்,விளம்பரம் என அதகளப்படுத்தி இதை சரியாக மார்க்கெட்டிங்
    செய்தால் நமது வேகத்துக்கு இது அடுத்த கியராக அமையும் வாய்ப்புகள் அதிகம். நண்பர்கள் தமக்கு தோன்றும் INNOVATIVE விளம்பர யுக்தியை இங்கே SHARE செய்தால்., தேர்ந்தெடுக்கப்படும் ஐடியாவுக்கு என்ன பரிசு
    என்பதை ஆசிரியர் அறிவிப்பார் ! : )

    ஐடியா #1 : சினிமா தியேட்டர்களில்(SPECIALLY ஆங்கில படங்கள் ) போஸ்டர் & முடிந்தால் புத்தக விற்பனை
    செய்யும் சாத்தியம் உண்டா ?? இலவச புக் லெட்ஸ் WITH டீசர் ADS??தனியாக மார்க்கெட்டிங் பிரிவை ஏற்படுத்துவது கட்டாயம்!

    நண்பர்களுக்கு, நான் எனது சந்தா தொகையை சென்ற வாரம் அனுப்பிவிட்டேன்! தற்போது சந்தா தொகையை செலுத்தமுடியும் என்ற நிலையில் உள்ள நண்பர்கள் சிரமம் பார்க்காமல் செய்துமுடித்துவிடவும். (@ஈரோடு விஜய் THANKS FRIEND, THAT WAS A GOOD INITIATIVE )

    //அன்பளிப்பாய் வழங்கிட விரும்பிடும் பட்சத்தில் 15% சலுகை + 2 அல்லது 3 தவணைகளில் பணம் செலுத்தும் சுதந்திரமும் உண்டு ! Do give that a thought too ?//

    GOT IT SIR !

    //எல்லாம் சரி - கிராபிக் நாவல்கள் எனும் விஷப் பரீட்சைக்கு ....//

    எவ்வளவு பெரிய விளக்கம்! இன்னமும் கொஞ்சம் காலத்தில் தாராமங்கலம் பரணிதரனும் இங்கே எனக்கு கிராபிக் நாவல் தான் வேண்டும் என்று கேட்டு பெரிய கடிதம் எழுதும் காலம் வரும். :)!

    ReplyDelete
    Replies
    1. ஐடியா#2

      பணம் செலுத்தக்கூடிய அத்தனை வழிகளையும் திறந்துவைத்திருக்க வேண்டும். இன்றைய வேகமான சூழலில் அவ்வப்போது நினைத்ததைச் சாதிக்கவேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப பல பணப்பரிமாற்ற வழிகளைக் கையாள்கின்றனர்.

      ஆக, M.O, Bank transfer மட்டுமல்லாது அத்தனை வழிகளையும் திறக்கவேண்டும். நான், கிரெடிட் கார்டு மூலமாக பணம்செலுத்தும் வழியைத் தேடி சலித்துவிட்டேன். M.O, Cheque, DD, Online Transfer, Credit/Debit Card payment, Paypal (வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு எளிதாக இருக்கும்), இன்னும் என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனைக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும். இந்தத் தளத்திலும், சந்தா கோரும் அத்தனை இடங்களிலும் இவற்றுக்கெல்லாம் லிங்க் தரப்பட்டு, சிங்கிள் கிளிக்கில் அதை சாதிக்கமுடியவேண்டும்!

      சிம்பா சொன்னது போல தனி மார்கெட்டிங் பிரிவை ஏற்படுத்துவது கட்டாயமே!!

      ஆச்சரியகரமாக சந்தா கட்டவிரும்பாத, அதை ஏனோ அசௌகரியமாக கருதும் நண்பர்களும் எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் 100% கட்டாயமாக (கடைகளில்) இவர்கள் வாங்குகிறார்கள். இவர்களின் எண்ண ஓட்டத்தையும் புரிந்துகொள்ள முயலலாம்! ஒவ்வொரு பெரிய ஊர்களிலும், நிரந்தரமாக ஒரு கடையில், புத்தகம் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் அதே நாளில் கிடைக்க வகை செய்யலாம்.

      Delete
    2. நமது முந்தைய வாசகர்கள் அனைவருக்கும் ஒரு கடிதமோ அல்லது வேறு வகையில் தகவல் அனுப்பி சந்தாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம், மேலும் தமிழக பகுதியில், (திண்டுக்கல் , நாமக்கல், சேலம், சென்னை போன்று) நமது முந்தைய முகவர்களை, நேரில் அழைத்தோ,அல்லது சந்தித்தோ ஒரு ஒப்பந்தம் ஏற்பட வழிவகை உருவாக்கிடலாம்.

      மேலும் இன்னும் சில முறை குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் இதழ்களில் விளம்பரங்கள் செய்யலாம். இதன் மூலம் கண்டிப்பாக சில நூறு சந்தாக்கலாவது புதிதாக இணைந்திட வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளது.

      Delete
    3. //ஆச்சரியகரமாக சந்தா கட்டவிரும்பாத, அதை ஏனோ அசௌகரியமாக கருதும் நண்பர்களும் எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் 100% கட்டாயமாக (கடைகளில் or E-Bayல்) இவர்கள் வாங்குகிறார்கள். இவர்களின் எண்ண ஓட்டத்தையும் புரிந்துகொள்ள முயலலாம்! //

      Delete
    4. ஆஹா! விஸ்கி-சுஸ்கி, ஆதி, சிம்பா - எல்லோருடைய ஐடியாக்களும் ஒவ்வொரு விதத்தில் அருமை! சாத்தியப்படுபவை சரித்திரம் படைக்கட்டுமே!

      Delete
  24. சார், ஜூனியர் லயன், மினி லயன் வெளிவந்த காமெடி கதைகள், திகில் இதழில் வெளிவந்த ரிபோர்ட்டர் ஜானி கதைகள் போன்றவைகளுக்கு மறுபதிப்பு வாய்ப்பு எப்பொழுது....

    இரும்பு கௌபாய்,
    வேதாள உலகம்,
    விசித்திர போட்டி...

    போன்ற கதைகள் மறுபதிப்பு வெளிவரும் நாட்களுக்காக காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  25. Thorgal தமிழில் வருவது சந்தோஷமே!

    ReplyDelete
  26. கிராபிக் நாவல் Track-க்கு இப்ப கூடுதல் வைட்டமின் சேர்ந்துவிட்டது. 6 புத்தகங்களும் சீராக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்துவிட்டதென்றால் சூப்பர்தான்!

    ReplyDelete
  27. டியர் எடிட்டர் விஜயன் சார்,
    சென்னை புத்தக திருவிழா ஸ்பெஷல் ஏதாவது உண்டா சார்?
    எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  28. Dear Editor,

    Its glad to see, each book gets individual printing as Franco-Belgian albums. Its a really welcoming change.. I really have one request..

    Its really nice, if you can provide 'Bag & Board'* package for our books. It will help us to protect them and display them proudly on the shelf rather than stack them as a pile. A set of 10 Bags & Boards on ebay will help us to buy as much as we need, without any hassle.

    For friends who doesn't know:
    Bag & Board - A stiff white board along with a tranaparent cover to protect a comic issue/magazine from collapsing. Please do google as 'comics Bag & Board' for lot of info.

    Thanks,
    Sankar

    ReplyDelete
  29. டியர் எடிட்டர் சார்,
    கிராபிக்ஸ் நாவல் தனி வெளியீடாக வருவது மிக்க மகிழ்ச்சிக்குரியது. நன்றி எடிட்டர் சார். நீங்க எந்த கதைகள வேணாலும் வெளியிடுங்க சந்தோஷமா வாங்கி படிக்க தயார், ஆனாலும் வசங்களுக்கு இடையே வரும் அல்லவோ, சங்கதி, ஜல்தி போன்ற வார்த்தைகளை படிக்கும்போது...,

    ReplyDelete
  30. i am bit disappointed in your service sir. I have been waiting for November books all this time and reached my patients limit today. So i gave ur office a call only to find out they haven't send my set of books yet and they will do it tomorrow. u should give priority to customers who have paid for santhas. In fact i have paid santhas for two set of books and now I need to wait another 10 days to read it.

    ReplyDelete
  31. எடிட்டரின் புதிய முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள், கிராபிக் நாவல்களில் ராஜேஷ் குமார் நாவல் போல், பீ டி சாமீ கதைகள் போல் உண்டா இருந்தால் அவற்றையும் வெளி இடவும்

    ReplyDelete
  32. Welcome graphic novels. About Tex deepavali special : Muthal kathaiyin sithirangal migavum arumai. Very dinamic. Athigamaga shadow payanpaduthi irupathu puthumai. Really amazing. Matra tex kathaigalin sithirangalai vida ithu enaku migavum pidithirukirathu. And athigamaga siritha mugathudan Iravu kalugu irupathum ithil mattumthan ( enaku therinthu ). Adutha kathaiyileye tex mugathil evvalavu irukkam. Tex kathaikal 2 matrum sippayin suvadugal arumai.

    ReplyDelete
  33. // "பிரபஞ்சத்தின் புதல்வன்" என்ற முதல் இதழ் கிராபிக் நாவல் வரிசையின் முதல் issue - ரூ.60 விலையில் முழு வண்ணத்தில் வரவுள்ளது ! //

    வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  34. Hello Vijayan sir.. I really liked the graphic novel "oru sippaiyin suvadukalil".. nice story which shows what is war.. and I want to make a request to you on the quality of the paper used for TeX viller diwali special.. please don't use the low quality paper.. according to me the comics whatever I buy from you are going to be monument kind of item which will decorate in my room.. and I need it to be lost longing and fresh even if I read and took after ages.. so please consider this .. no execuses on it..


    Thanks and eagerly waiting for next book.. sorry for missing to write my mother tongue tamil..

    ReplyDelete
  35. காமிக்ஸ் களத்தில் அதிரடியாக நுழைந்து, அட்டகாசங்கள் செய்துவரும் "பிச்சு, பிச்சு" புகழ் ஆதி தாமிரா அவர்களின் பிறந்த நாள் இன்று என்பதால்...←

    வேறு என்ன செய்வது????????????


    சரி, விடுங்க பாஸ்



    வாழ்த்துகிறோம்.



    இங்ஙனம் : சிந்தனை செயலாளி ஆதி தாமிரா Fan Club, அன்டார்ட்டிகா கிளை.

    ReplyDelete
    Replies
    1. அன்னாரின் வயது 39க்கும் 37க்கும் நடுவில் என்பதால் அவ்வளவு மெழுகுவர்த்திகளை ஏற்ற முடியாது. ஒரே ஒரு மெழுகுவர்த்தி ஏற்றியாவது நாளைக்கு சென்னையில் இருக்கும் லயன் முத்து காமிக்ஸ் வாசக அன்பர்களுக்கு ட்ரீட் வைப்பார் என்று ஈரோடு விஜய் அவர்களின் பட்சி சொன்னதாக தகவல்.

      Delete
    2. ஆதி தாமிரா பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே...//இதையே காரணமா காட்டி, நீங்க கேட்ட நான்கு புத்தகங்களையும் கிங் விஸ்வாவிடமிருந்து அன்புடன் ஆட்டையை போட வாழ்த்துக்கள்//

      Delete
    3. சிம்பா,

      உங்க வீட்ல ரசம் வைக்க.

      இந்த இடத்தில் நண்பர் விஜய்யின் பூனையை துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்: கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்

      Delete
    4. @ ஆதி தாமிரா

      சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் நண்பரே! பல ஆயிரம் காமிக்ஸ்களைப் படித்து மகிழ்ந்திட தேவதைகள் அருள்பாலிக்கட்டும்!

      @ கிங் விஸ்வா

      அதென்ன அடிக்கடி 'உங்க வீட்ல ரசம் வைக்க'னு சாபம் தர்றீங்க? புரியலையே?! வீட்டில் ரசம் வைப்பது நல்ல விசயம்தானே?!

      Delete
    5. ஆதி தாமிரா பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    6. சாபத்தில் ஒரு சிறிய ஆனால் effective-ஆன improvemenet:
      உங்க வீட்ல தினமும் ரசம் வைக்க.

      @ஆதி தாமிரா, வாழைப்பூ வடையை கத்தியால் வெட்டி பிறந்த நாளைக்கொண்டாட வாழ்த்துக்கள்!



      Delete
    7. @ R.K
      // உங்க வீட்ல தினமும் ரசம் //

      !! இதுவும் நல்ல விசயம்தானே?
      ஒருவேளை பின்வருனவற்றில் ஏதாவது இருந்தால் அது ரியல் சாபமோ என்னவோ?!
      * உங்க வீட்டில் தினமும் ரசம் 'மட்டும்' வைக்க
      * உங்க வீட்டில் தினமும் 'நீங்களே' ரசம் வைக்க

      ம்? :)

      Delete
    8. பல வீடுகளில் ரசம் வைக்கும் நாளில் வேறெதுவும் செய்வதில்லை என்பதும், காலையில் உப்மா செய்த அதே நாளில் மதியம் ரசம் வைத்துப் போராட்டம் நடத்தப்படுவதும் நமது பாரம்பரியமல்லவா? :P

      Delete
    9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி

      Delete
    10. வாழ்த்துச்சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகள்!

      @விஸ்வா,
      வாழ்த்து சொன்னீங்க சரி, அதெதுக்கு தேவையில்லாத வயசு பத்தின ஆராய்ச்சி? பிச்சி பிச்சி!
      :-))

      @அனைவருக்கும்,

      நல்ல வேளையாக இங்கே விஸ்வா எனக்கு வாழ்த்துச் சொன்னார். அதனால்தான் இதை இங்கே பேசமுடிகிறது. இணைய நண்பர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள், சந்தோஷ மற்று துக்கமான குடும்பத் தகவல்கள் இவற்றைப் பகிரத்தான் ஜி+, ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இருக்கின்றனவே.. (அவற்றை அதுக்கு கூட யூஸ் பண்ணலைனா எப்படி? ஹிஹி!).. அங்கே பகிர்ந்துகொள்வதே போதுமானது என எண்ணுகிறேன். இந்தத் தளத்தில் சப்ஜெக்ட் சாராத இதுபோன்ற தகவல்கள் பொருத்தமானவையாக இருக்காது. மேலும், இது ஒரு மீறலுமாகும். ஆகவே, இனி நண்பர்கள் இங்கே இதுபோன்ற வாழ்த்துகள், தகவல்களைப் பகிரும் முன்பு அதன் அவசியத்தை ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

      Delete
    11. பெரியவர் ஆதி அய்யா அவர்களே, உங்க வயசை விஸ்வா போட்டு ஒடச்சுடார் என்பதற்காக இப்படி வாழ்த்துக்களை தடை செய்ய சொல்ல்வது சின்ன புள்ள தனமா ல இருக்கு... செல்லாது செல்லாது.. ஹி ஹி

      Delete
    12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி சார்! : ) ! 1975 கிளப்ல இங்கே நிறைய பேர் இருப்பாங்க போல தெரியுதே ! : )

      Delete
    13. நண்பர் ஆதி தாமிரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

      Delete
    14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

      Delete
    15. Belated birthday wishes, Adhi Thamira!

      Delete
  36. XIII கதாசிரியரின் கதை என்று தொடங்கி இன்று எனது சேகரிப்புகளில் தோர்கலும் ஒன்று.சலிப்போடு ஆரம்பிப்போரையும் காந்தம் போல் இழுக்கும் வசீகரம் இதட்கு உண்டு. இதன் முதல் இதழ் ராணி காமிக்ஸில் பத்தோடு பதினொன்று ரகத்தில் வந்து படித்த கொடுமை தவிர்த்து நிச்சயம் வித்தியாசமான தொடரே.முதலில் பார்த்த போது இவ்வாறான கதைகள் குறித்து ஆசிரியர் முன்பு கொண்டிருந்த அபிப்பிராயம் தெரிந்ததால் தோர்கள் மாதிரி கனவு கண்டு விளிக்கிறேனா என சந்தேகம் ;-)

    ReplyDelete
    Replies
    1. ராணி காமிக்ஸில் தோர்கள் வந்ததா ? கதையின் பெயர் என்ன நண்பரே ?

      Delete
    2. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்

      ஆம் அண்ணா ராணி காமிக்ஸில் வந்த தோர்கள் கதை:
      வீரச்சிறுவன்
      இல - 313
      ஜுலை 1-15 ,1997

      Delete
  37. காமென்ட் publish ஆன பின் தான் தெளிந்தது :-)

    ReplyDelete
  38. நண்பர் ஆதி தாமிரா இற்கு எனது மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  39. ​போன ஞாயிறு சிப்பாயின் சுவடுகள் ஒர் பத்து பக்கங்கள் படித்து இருப்​பேன் ஏ​னோ என்​னை அறியாமல் தூங்கி விட்​டேன். ​போன ஞாயிறு தூக்கத்தி​லே​யே கழிந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. 2014 வருட முன்​னோட்டம் நன்றாக உள்ளது. சிலவற்​றை தவிர நி1நி2, கார்சனின் கடந்த காலம் B/w, பூம் பூம் படலம், - இவற்றிற்கு பதிலாக c.i.d. ராபின், மார்டின் ​மைஸ்ட்ரி, டயபாலிக் இவர்க​ளை ​சேர்க்கலாம். எனது சந்தா சம்பளம் வாங்கியவுடன் வந்து ​சேறும்,

      Delete
    2. @ Aslam Batcha

      ராவிலே தூக்கம் வராமத் தவிக்கும் உங்க அண்டை வீட்டுப் பெரியவங்களுக்கு இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவலாமில்லையா? ;)

      Delete
  40. சுவிஸ் வங்கி கணக்கு வச்சு இருக்கவங்க யாரவது டெக்ஸ் காமிக்ஸ் கலரில் தொடர்ச்சியா போட உதவ முன் வரலாமே ..............

    ReplyDelete
    Replies
    1. கருப்பு பணத்தை கலராய் மாற்ற டெக்ஸ் காமிக்ஸ் தானே சிறந்த வழி

      Delete
    2. எனக்கு சுவிஸ் வங்கி கணக்கெல்லாம் கிடையாது. வேணுமின்னா நான் என்னோட piggy bankஐ கொடுத்து உதவ தயாரா இருக்கேன்........

      Delete
    3. சொந்தமா பேங்க் வச்சு இருக்கீங்க ....................இத இத தான் எதிர் பார்த்தோம்..........அஹா வள்ளல் பரம்பரை

      Delete
    4. டியர் ஈரோடு விஜய் !!!

      உங்கள் பேங்கின் பெயர் "கோவிந்தா பேங்" தானே....?:-)

      Delete
    5. சொத்து சுகம் ,நகை நட்டு உள்ளவர்கள் கூட சேர்ந்து கொள்ளலாம்

      Delete
    6. // சொத்து சுகம் ,நகை நட்டு உள்ளவர்கள் கூட சேர்ந்து கொள்ளலாம் //

      சுகம் உள்ளது சொத்தில்லை, நட்டு உள்ளது நகையில்லை...

      Delete
    7. // சுகம் உள்ளது சொத்தில்லை,
      நட்டு உள்ளது நகையில்லை... //

      :D

      Delete
  41. வணக்கம் நண்பர்களே !

    நான் புத்தகம் வாங்கி கொடுக்கும் வாசகர்களில் (34 பேர்) அனைவரும் மாதா மாதம் வரும் கதைகளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் அவர்களுடைய கருத்து என்ன என்று தெரிந்து பிளாக்கில் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    இது பற்றி நமது வலைத்தள நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். என்ன நண்பர்களே நான் கேட்பது சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. சிப்பாயின் சுவடுகள் பற்றி அந்த 34 பேரின் கருத்துக்களைச் சொல்லப் போறீங்கன்னு நினைக்கிறேன். பாவம்! அந்தச் சிப்பாய் கதையில்தான் கஷ்டப்பட்டான் என்றால், அதன் பிறகு நம்மிடமும் மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறான்! சரி, நீங்க சொல்லுங்க கர்ணன்ஜி! :)

      Delete
    2. கொஞ்சம் பக்குவமா... பக்குவமா... உலகநாதன் சார் பாவமில்லையா? :)

      Delete
    3. வாயில கண்டிப்பா ஓட்டை இருக்கும் .......................அதென்ன ஓட்டை வாய் ........?மந்திரி confused

      Delete
  42. ஆதி தாமிரா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  43. அப்படியல்ல விஜய் ஆச்சரியத்தக்கமுறையில் சிப்பாயின் சுவடுகள் பற்றி பேசுகிறார்கள்

    ReplyDelete
  44. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆதி தாமிரா!

    ReplyDelete
  45. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆதி தாமிரா!
    இன்று எனக்கும் பிறந்த நாள்தான். கேக் வெட்டும் போது உங்களுக்கும் சேர்த்து வெட்டி விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருச்சி விஜய்! நீங்கள் செல்லும் ஏதாவதொரு பஸ் பயணத்தில் புதியதும் பழையதுமாய் பல நூறு காமிக்ஸ்கள் பக்கத்து இருக்கையிலிருந்து கண்டெடுக்கக் கடவது! ;)

      Delete
    2. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

      Delete
    3. நன்றி விஜய் . ஏற்கனவே ஒரு முறை பழைய புத்தக கடையில் ஒரே நாளில் (1997) முத்து காமிக்ஸ் முதல் நூறு இதழ்கள் லயன் முதல் 50 இதழ்கள் மற்றும் இந்திரஜால் ஒரு 500 இதழ்கள் கிடைத்தன.

      Delete
    4. Happy Birthday Trichy Vijay

      ஒரே நாளில் 650 புத்தகம் என்பது அப்பா கண்ண கட்டுது. எப்படி பாஸ் எடுத்துட்டு போனீங்க?

      Delete
    5. // ஏற்கனவே ஒரு முறை பழைய புத்தக கடையில் ஒரே நாளில் (1997) முத்து காமிக்ஸ் முதல் நூறு இதழ்கள் லயன் முதல் 50 இதழ்கள் மற்றும் இந்திரஜால் ஒரு 500 இதழ்கள் கிடைத்தன. //

      ஒரு விஷயத்தின் இன்னொரு பக்கத்தையும் நாம் ஆராய வேண்டும்... இதன் அர்த்தம் - யாரோ ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகரின் வீட்டுக்காரம்மா, ஆள் வீட்டில் இல்லாத சமயத்தில் மொத்தமாக பிளாஸ்டிக் சாமான் விற்பவரிடம் எல்லா புக்குகளையும் தள்ளியிருக்கக்கூடும்! ஐயோ பாவம்! :P

      Delete
    6. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் திருச்சி தில்லை நகரில் நாங்கள் குடியிருந்தபோது, ஒரு மழை நாளில் காமிக்ஸ் வாங்கி வருவதற்காக கடைக்குச் சென்றிருந்தேன்.  வீடுதிரும்பியபோது ஷெல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 650க்கும் மேற்பட்ட புத்தகங்கள் திடீரென்று காணாமல் போயிருந்தன. தேடினேன்... ஓடினேன்... கத்தினேன்... கதறினேன்... எந்தப் பலனுமில்லை. ஆனால், நான் நம்பிக்கை இழக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அந்தப் புத்தகங்கள் எனக்குக் கிடைக்குமென்று உறுதியாக நம்பினேன்.

      என் நம்பிக்கை வீண் போகவில்லை! கடவுளுக்கு நன்றி! இதோ! புதையலை பூனை காப்பதுபோல் இத்தனை நாளும் என் புத்தகங்களை பாதுகாத்துவருகிறார் மதிப்பிற்குரிய நண்பர் திரு.திருச்சி விஜய்! இவரது கடமை உணர்வுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேனோ நானறியேன்!

      போதும் நண்பரே போதும். இத்தனை நாளும் எனக்காக நீங்கள் சுமைதாங்கியாய் வாழ்ந்தது போதும்! நீங்கள் சரி என்றால் நாளையே நான் திருச்சி வந்து என் உடமைகளை (100 முத்து + 50 லயன் + 500 இந்திரஜால்) பெற்றுக் கொள்கிறேன்.


      (பி.கு: வேறு யாரிடமும் நீங்கள் ஏமாந்துவிடக்கூடாதில்லையா? அதனால், நான் அங்கே வரும்போது என் அடையாள அட்டையையும் எடுத்துவருவேன். கூடவே கால் கிலோ அல்வாவும், சட்டைப் பையில் ஒரு நாமக்கட்டியும் வைத்திருப்பேன். )

      Delete
    7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

      Delete
    8. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திருச்சி விஜய்

      Delete
    9. விஜய் அவரே கனவு கண்டுள்ளார் .....உங்களுக்குமா ....கனவுக்குள் களவா

      Delete
    10. ஈரொோடுவிஜய், நீங்கள் நான் கொடுத்த புத்தகங்களை 1997 தொலைத்து விட்டு தற்போது திரு. விஜயிடமிருந்து திரும்ப பெற்று தரப்போவதற்காக நன்றிகள்

      Delete
    11. கனவல்ல நண்பரே . உண்மை . அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாட்சி . காலப்போக்கில் கரையான் அரித்தது போக சில புத்தகங்கள் தான் மிஞ்சியது. அதுவும் வீடு கட்டும்போது சில நண்பர்கள் மூலம் பணமாக மாறிவிட்டது . இப்ப எல்லாம் பழைய புத்தக கடைக்கு போய் கேட்டால் ஒரு புத்தகம் கூட கிடைக்கமாட்டேங்குது .

      Delete
    12. நண்பரே,

      திருச்சி விஜய் என்றவுடன் வேறு யாரோ என்று இருந்துவிட்டேன். இந்த கமெண்ட்டை படித்தவுடன் தான் பழைய நினைவுகள் எல்லாம் வந்து நீங்கள் யார் என்பது தெளிவாக புரிந்தது.

      உங்களது புத்தகங்கள் கரையானால் அறிக்கப்பட்டதை நண்பர்கள் ஹாஜா இஸ்மாயில். முத்து விசிறி, அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார் போன்றவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சில பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆவடி பஸ் நிலையத்தில் உங்களை சந்தித்தபோதுகூட நாம் இதைப்பற்றி பேசி இருந்தோம்.

      புத்தகங்களை நண்பர்கள் சிலர் நம் வீடு வந்து திருடிக்கொண்டு போனால்கூட அவை வேறு ஒருவரிடம் இருக்கின்றன என்று இருந்துவிடலாம். ஆனால் அவை இப்படி வீணாக அழிந்துவிடும்போது தான் மனம் ஏதோ செய்கிறது.

      கவலையை விடுங்கள். உங்க நல்ல மனசுக்கு நீங்கள் இழந்த பழைய புத்தகங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

      Delete
  46. தோழர்களே கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் மறந்து விடாதீர்கள். ஏன் இதற்க்கு ஒரு Vote Polling Option கொடுத்து பார்க்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. Vote Polling Option - லாம் எதற்கு? வண்ணத்தில் தான் வேண்டும்

      Delete
  47. சார்,

    வருடத்திற்கு 2 GN என்பதுப் போய் 6 GN கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராகவே படுகிறது! +6 வரிசையை மூட்டைக் கட்டிவிட்டு அந்தயிடத்தில் GN-னை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இங்கு GN-காக கைகளை உயர்த்துபவர்கள் எத்துனைப்பேரோ? வழுக்கட்டாயமாக திணிக்கப்படுவதுப்போல் உள்ளது?

    இட்லி, தோசைக்கு பதில் பிசாவும், பர்கரும் என்றாவதொரு நாள் ஓகே. தினந்தோறும் என்றால்? தங்களின் ஆக்கமும், நேரமும் +6 வரிசைக்கு திரும்பினால் மகிழ்வேன்!

    ReplyDelete
  48. +6 ஜாஸ்தி வேண்டும்

    ReplyDelete
  49. பழகுவதற்கு இனியவர்,

    பாசக்கார தோழர்,

    நேர்மைக்கு உதாரணமாக திகழ்பவர்,

    நண்பர்கள் பலரால் காமிக்ஸ் புத்தகங்களுக்காக ஏமாற்றப்பட்டாளும்கூட அவர்களையே மன்னித்த மகானுபாவர்,

    நேற்று பிறந்த நாள் கண்ட இனிய நண்பர் திருச்சி விஜயஷங்கர் (எ) விஜய்


    அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.


    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கண்டிப்பாக திருச்சியில் சந்திப்போம்.

    ReplyDelete
  50. இன்று அரவிந்த்குமார் என்ற பெயரில் சிவகாசிக்கே நேரில் போய் சந்தா கட்டியாச்சு

    கிராபிக் நாவலுக்கும் சேர்த்து

    ReplyDelete
    Replies
    1. @ Mugunthan kumar

      குட்! :)

      // அரவிந்த்குமார் என்ற பெயரில் //
      ???!!

      Delete
    2. என் தம்பி பெயர். போன வருடமும் அவன் பெயரில்தான் சந்தா பதிவு செய்திருந்தேன்.

      Delete
  51. எனக்கு வன அதிகாரி ஜோ புத்தகங்களை வண்ணத்தில் மறுபதிப்பு வேண்டும் ...

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு ராம். காககா உடன் இதற்கும் ஒரு போராட்டம் நடத்தப்படுமா ??!!

      Delete
  52. காமிக்ஸ் படிக்கிறோம் என்பதற்காக நாம் குழந்தைகளுமல்ல!

    காமிக்ஸ் படிக்காதவர்களெல்லாம் பெரியவர்களுமல்ல!

    ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் கொஞ்சம் பெரியமனிதத் தனம் ஒளிந்திருக்கிறது...
    ஒவ்வொரு பெரிய மனிதருக்குள்ளும் கொஞ்சம் குழந்தைத் தனமும் குடிகொண்டிருக்கிறது...

    (ந்தாப்பா... நீ என்ன சொல்ல வர்ற?)

    வேறென்ன?...
    HAPPY CHILDREN'S DAY! :)

    ReplyDelete
    Replies
    1. // ஒவ்வொரு பெரிய மனிதருக்குள்ளும் கொஞ்சம் குழந்தைத் தனமும் குடிகொண்டிருக்கிறது...//

      ஒவ்வொரு பெரியவருக்குள்ளும் பல குழந்தைகள் உள்ளன. ஒரு 1 வயது குழந்தை, ஒரு 2 வயது குழந்தை, ஒரு 3 வயது குழந்தை... என்று ஒரு டஜனுக்கும் மேலே குழந்தைகள்!

      ஆனால் ஒரு பெரிய பூனைக்குள்ளே ஒளிந்திருப்பதோ பூனைக்குட்டிகள் மாத்திரமே - நீங்கள் கொண்டாடவேண்டியது பூனைக்குட்டிகள் தினம்!

      Delete
    2. // பூனைக்குள்ளே ஒளிந்திருப்பதோ பூனைக்குட்டிகள் மாத்திரம் //

      இயற்கைதானே?! மாறாக, ஒரு பூனைக்குள்ளே பல நாய்க் குட்டிகள் இருந்தால்தான் பிரச்சினையே! :D

      Delete
  53. வணக்கம் நண்பர்களே
    கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட நிலையில், KBGD க்கான GIFT WATCH இன்று வந்துசேர்ந்தது. திடீர் இன்ப அதிர்ச்சி. மிகவும் சந்தோசமாக உள்ளது. ஆசிரியருக்கும், வலைதள நண்பர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.

    ReplyDelete
  54. வணக்கம் நண்பர்களே
    KBGD க்கான GIFT WATCH எனக்கும் இன்று வந்துசேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிரியருக்கும், அவர்தம் அலுவலக பணியாளருக்கும், தேர்வுக்குழுவினருக்கும் மற்றும் வலைதள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @அருணாசலம் & Karnan L,

      எனக்கும் GIFT WATCH வந்து சேர்ந்தது. Great! :)

      Delete
    2. @ அருணாச்சலம், கர்ணன், Ramesh kumar

      இனிமேலாவது 'டயத்துக்கு' சந்தா கட்டிடுங்க! ;)

      Delete
    3. ரமேஷ், கர்ணன், அருணாசலம் மூவருக்கும் வாழ்த்துக்கள்

      Delete
    4. //இனிமேலாவது 'டயத்துக்கு' சந்தா கட்டிடுங்க! ;)// அதுக்குக் காலண்டர் போதுமே...

      Delete
    5. //Erode VIJAY, Ramesh Kumar, salemkelamaran@gmail.com//

      Thanks pa :)

      Delete
  55. @ டியர் புனித சாத்தான்!

    அடுத்த வருட அட்டவணையில் டயபாலிக் கதை பற்றிய தகவலே இடம்பெறவில்லை.

    டயபாலிக் ரசிகர் மன்ற தலைவராகிய உங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுகின்றேன்,சார்.

    ReplyDelete
    Replies
    1. டியர் சிவ சுப்பிரமணியன் !!!

      அடுத்த ஆண்டு டயபாலிக் கதை மட்டுமல்ல ,கார்சனின் கடந்த காலமும் (வண்ணத்தில்)நிச்சயம் வரும் !!!

      கட்டை விரலார் மீது அடியேனுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு!!!

      WAIT PLEASE ...!!!

      Delete
    2. எஸ் சார்! அப்படியே நடக்கும் என நம்புவோம்.

      Delete
    3. ஓஹோ டியாபோலிக் வேணும்னா சாத்தானிடம் புகார் செய்ய வேணுமா ....?

      மத்தவங்களும் எதுல ''புகார் ஸ்பெசலிஸ்ட்''................. லிஸ்ட் தேவை

      Delete
    4. @ மதியில்லா மந்திரி

      புகார் எல்லாம் எதுவும் இல்லை மந்திரியாரே! அட்டவணை கிடைத்த நாள் முதல் புனித சாத்தான் அவர்களிடம் கேக்க நினைத்த கேள்வி தான்!

      தீபாவளி-க்கு முந்திய நாளில் நம் விஜயன் சாரிடம் கூட இதே கேள்வியினை கேட்டிருந்தேன்,மந்திரியாரே!

      Delete
  56. நண்பர்கள் அருணாசலம் மற்றும் கர்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  57. அவ்வளவாக வாசிப்பில் (காமிக்ஸ் உட்பட) ஆர்வமில்லாதவர் என் மனைவி. ஆனால், நேற்று டெக்ஸின் குண்டு புக்கின் முதல் கதையின் ஓவிய சாதனையைப் பார்த்துவிட்டு வியந்துவிட்டார். சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக அதை இருவரும் வியந்துகொண்டிருந்தோம். பேசிப்பேசி மாய்ந்துகொண்டிருந்தோம், காடு, மரங்களின் துல்லியம் மட்டுமல்லாது, ஒரே நபரின் பல்வேறு கோணங்கள், அவற்றில் அவர்களின் பலவிதமான முக உணர்ச்சிகள் என எப்படி கொண்டுவரமுடிகிறது ஓவியர்களால் என! (அதன்பின்பும் புக்கை வாசிக்கவெல்லாம் அவர் தொடங்கிவிடவில்லை)

    காமிக்ஸுக்கு கதை முக்கியம், பின்னணி வேலைகள் முக்கியம், ஓவியம் முக்கியம் என்றெல்லாம் இங்கே பேசப்படுகிறது. ஆனால், ஒரு நாவலுக்கும்தான் கதை முக்கியம். சினிமாவுக்கும் கூடத்தான் கதை, பின்னணி வேலைகள் எல்லாம் முக்கியம். ஆனால் ஓவியம்தான் காமிக்ஸின் தனித்துவமான குணம், சாதனை, வியப்பு எல்லாம் என்பது அவர் கருத்து. ஆச்சரியகரமாக அவர் கருத்தோடு நான் ஒப்புக்கொள்ளும் (ஒரே?!?) கருத்தாகவும் இது இருந்தது.

    இன்று எங்கள் திருமண நாள். கோவில், பிக்னிக் எல்லாம் சென்று இப்போது வீடு திரும்பவும் கூரியரில் கடிகாரப்பரிசு வந்து சேர்ந்தது. குடும்பத்து பெரியவர்களின் ஆசி இங்கு சென்னையில் இல்லை. இதுபோன்ற தினங்களைப் பிறரிடம் சொல்லிக் கொண்டாடும் பழக்கமெல்லாம் இல்லையென்பதால் நண்பர்கள் வரவு,பரிசு இதெல்லாம் எப்பவும் இருந்ததில்லை. ஆக, சின்னப் பரிசானாலும் இன்று வந்ததால் மகிழ்ச்சியை அதிகம் கொண்டுவந்தது. (என்னைவிட என் மனைவிக்கு!)

    அனைவருக்கும் என் அன்பு!

    ReplyDelete
    Replies
    1. சற்றே விசேசமான இந்த நாளில், சற்றும் எதிர்பாராத பரிசு கிடைத்திருப்பது உங்கள் மகிழ்ச்சியை மல்டிப்ளை செய்திடும் விசயமே! வாழ்த்துக்கள் ஆதி(கால) நண்பரே! :)

      Delete
    2. Whoever got the wrist watch, can one of you post the picture? So we can also see how it looks :)

      Delete
    3. Here are the photos! (as usual the address written in human handwriting, nice!)

      Group Photo
      Solo

      Delete
    4. Watch looks cool and the packaging too.

      Delete
    5. நண்பர் தி. ரமேஷ் குமார் அவர்களுக்கு அனுப்பி வைத்த கை கடிகாரத்தில் X, XI & X II போன்ற குறியீடுகள் இருந்தும் நமது காமிக்ஸ் சார்ந்த XIII இல்லாததை வன்மையாக கண்டித்து இன்று காலைமுதல் புட்டு சாப்பிடும் போராட்டம் காஞ்சிபுரம் காமிக்ஸ் ரசிகர்கள் சார்பில் துவக்கப்படும் என்பதை எடிட்டருக்கு இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன்.

      Delete
    6. அதென்ன......................................... ''சற்றே'' விசேசமான இந்த நாளில் னு சொல்லறது ...............சிண்டு முடிய சொல்லியா குடுக்கணும் .................
      ஒரு .............
      புனையும்...............
      நூல் .......................
      கண்டும் ..................

      Delete
    7. @ ரமேஷ் குமார் .....................விலாசம் அழிக்கப்பட்டும் உங்களை தபால் வந்து சேர்ந்துள்ளது என்றால் உங்கள் ஊரில் அவ்வளவு பெரிய அப்பாடகர் காமிரேடா நீங்கள் ............

      Delete
  58. டியர் எடிட்டர்
    பிரபல பத்திரிகைகள் சினிமா நடிகர் நடிகைகளை வைத்து ஆண்டுதோறும் காலெண்டர் வெளியிடுகிறார்கள். அதே போல் நாமும் நமது காமிக்ஸ் கதாநாயகர்களை வைத்து மல்டிகலரில் காலண்டர் வெளியிட்டால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. That's a very good idea, i am all for it. Not sure regarding practicality, but i it comes true we can proudly display it in the home.

      Delete
    2. நாம எல்லோரும் வாங்கி ஆபீஸ் ல தொங்க விடலாம்

      Delete
  59. என்னை வாழ்த்திய ஈரோடு விஜய், சேலம் இளமாறன், மதியில்லாமந்திரி, சிவ சுப்ரமணியன் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  60. // 'ஒரு ஊரில் ஒரு பயங்கர மாயக் குள்ளன் இருந்தானாம்' என்று உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ஒரு மழை நாளிரவில் சொல்லிடக் கூடிய அதீதக் கற்பனையாகவும் classify செய்திடலாம்.//
    Dear Sir, I have not read thorgal till now. But if it is of the type as you have described above, it will be a great news and welcome it full heartedly. I really love those kind of stories. Unfortunately these type of stories, it seems, are only available in western countries nowadays and if you didn't tell us about this, i would not even know about it. Friends here will agree that there were lot of small sized novels labeled as mayajala kathaigal which were ruling during the late seventies to late eighties. As a child and later even as an adult, it was fascinating to read about the flying horses, palaces under the ocean, stones talking, two daemons sitting in the tree and talking while the prince sleeps under the tree without knowing which a parrot listens and conveys to the prince. for a children and even adults it really helps and develops brain. I feel the westerners understand the importance of these stories whereas it is made like out of fashion.

    ReplyDelete
    Replies
    1. CORRECTION: I feel the westerners understand the importance of these stories whereas it is made like out of fashion in our place

      Delete
    2. Sorry for typing in English. I have the google transliteration problem still unsolved. i hope to solve it soon.

      Delete
  61. PLEASE TIE SANDHAA IN FRONT OF DECEMBER
    அருஞ்சொற் பொருள்
    சாந்தாவை டிசம்பருக்கு முன்னாலேயே கட்டவும்....

    KBT க்கு நான் ரெடி ..............நீங்க ரெடியா..
    மொழி பெர்யப்புக்கு நான் உத்திரவாதம்

    ReplyDelete