Powered By Blogger

Sunday, October 06, 2019

பணியும்... பனியும் !

நண்பர்களே,


வணக்கம். நிறைய பிள்ளையார்களைப் பிடிக்கும் முயற்சிகளில் நிறைய மலைக்குரங்குகள் பலனாவது எத்தனை நிஜமோ – அத்தனை நிஜமே – அதன் ரிவர்ஸும்! ‘தீபாவளிக்கு மைசூர் பாகு செமையாய் அமைந்திருக்குடி அம்மு!‘ என்று நீங்கள் சிலாகிக்கும் பல சமயங்களில் – பாராட்டுக்களை வெறும் புன்சிரிப்புகளோடு மட்டுமே ஏற்றுச் செல்லும் மனையாளுக்குத் தான் தெரிந்திருக்கும் அது ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்ட அதிரசம் என்று! So பெரும் சிந்தனையின் பிள்ளைகளாய்க் காட்சி தரும் சிலபல நிகழ்வுகள் கூட – வேறேதோ திக்கிலான காய் நகர்த்தல்களின் எதிர்பாரா பக்கவிளைவுகளாக இருந்திருக்கக் கூடும்…! இம்மாதத்து லயன் கிராபிக் நாவலைப் போன்று!


“வஞ்சம் மறப்பதில்லை…!” இந்தாண்டின் அட்டவணையினில் இடம்பிடித்த போதே இது குறித்ததொரு சன்னமான curiosity இருந்திருக்கலாம் – அந்த பெயிண்டிங் ரக சித்திர விளம்பரங்களைக் கண்டு! ஆண்டின் சகல இதழ்களுமே எனக்குப் பிரத்யேகமானவைகளே என்றாலும், சிலபல ஆல்பங்களை உங்கள் கைகளில் ஒப்படைக்கும் முகமாகவே ரிசல்ட் தெரிந்திருப்பதுண்டு எனக்கு! உதாரணத்திற்கு லக்கி லூக்கைச் சொல்லலாம்! இவரது ஆல்பங்களில் கதைக்களம் கச்சிதமாய் அமைந்திருக்கும் பட்சத்தில் அம்மாதம் அதனில் நீங்கள் எதை – எவ்விதம் ரசித்திடப் போகிறீர்கள்? என்பதில் மாத்திரமே எனது curiosity குடிகொண்டிருக்கும்! தோர்கல்; டெக்ஸின் ஹிட் கதைகள்; ட்யுராங்கோ போன்றோரின் சாகஸங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்! Of course சில சந்தர்ப்பங்களில் அந்தக் கணிப்புகளில் கூடப் பிழை நேருவதுண்டு தான் – ஆனால் அவை பெரும்பாலுமே exceptions than the rule என்று சொல்வேன்! ஆனால் சில one-shots, கிராபிக் நாவல்கள் புதுத் தொடர்களோ / நாயகர்களோ களமிறங்கும் பட்சத்தில் எனக்குள்ளே ஒருவிதத் த்ரில் குடியேறிக் கொள்வதுண்டு! அது ஜானதன் ரேஞ்சிலான நாயகர்களாய் அமைந்திடும் பட்சத்தில் த்ரில்லுக்குப் பதிலாய் டரியலாக அமைந்திடுவதுண்டு! ‘இது கெலிக்கும்‘ என்ற நம்பிக்கையோடு தான் ஆண்டின் சகல தேர்வுகளையும் நான் செய்திடுவேன் என்றாலும் – hands on அந்தந்த இதழ்களுக்குள் முழுமையாய் இறங்கும் சாத்தியங்கள் கதைத் தேர்வுச் சமயங்களில் முடிவதில்லை என்பதால் சதா சர்வ காலமும் சொதப்பலுக்கான வாயில் திறந்தே இருப்பதுண்டு! So திறந்திருக்கும் வாசல் வழியாய் பாரசூட் கட்டிக் கொண்டு ஸ்டைலாகத் தரையிறங்கப் போகிறோமா? அல்லது சணலை பாரசூட் என்று நம்பிய கையோடு,தொபுக்கடீரென்று உசரத்திலிருந்து  குதித்து மூஞ்சி முகரையைப் பெயர்த்துக் கொள்ளப் போகிறோமா?- என்பதில் ஒரு கேள்வி தொடர்வதுண்டு ! And “வஞ்சம் மறப்பதில்லை” கூட இந்த ரகத்தைச் சார்ந்தது தான்! கதையின் ஒரிஜினல் ஆங்கிலத்தில் இருந்ததால், வாசிக்கவோ –  கதையை எடை போடவோ எனக்கு ரொம்பத் தடுமாறவில்லை! ஆனால் இந்த முகத்தில் அறையும் வன்முறை கலந்த இரத்தப் பொரியலுக்கு உங்களது reactions எவ்விதம் இருக்குமோ? என்ற கேள்வியே எனக்குள் பிரதானமாய் !
Early days தான் – ஆனால் இதுவரையிலான அலசல்கள் 80%-20% என்ற ரேஞ்சில் இருப்பது குஷியான சமாச்சாரம்! ஆனால் அதற்குள் இறங்கும் முன்பாக, இந்தப் பதிவின் முதல் பத்திக்கான காரணத்தைப் பார்க்கலாமா? 


சிலபல ஆண்டுகளுக்கு முன்பாய் – லண்டன் நகரில் மார்ச் மாதங்களில் ஆண்டுதோறும் நிகழும் ஒரு மித அளவிலான புத்தகவிழாவில் தலைகாட்டிடத் திட்டமிட்டிருந்தேன். ப்ராங்க்பர்ட் விழாவின் கிட்டக்கே கூட வர இயலா ஒரு பட்ஜெட் விழாவே இது என்பதால் இத்தனை காலங்களாகியும் இதனில் பங்கேற்க பெருசாய் ஆர்வம் காட்டியதில்லை! ஆனால் இங்கிலாந்தின் Fleetway நிறுவனத்தை வாங்கியிருந்ததொரு U.K. காமிக்ஸ் குழுமத்தோடு 2016-ன் இறுதி & 2017-ன் துவக்கங்களில் பேசிக் கொண்டிருந்ததையடுத்து – அவர்கள் Fleetway-ன் அந்நாட்களது ஜாம்பவான்களை சிறுகச் சிறுகத் தட்டியெழுப்பி, புராதனச் சித்திரங்களை remaster செய்து மறுஉலாவுக்குத் தயார் செய்து வரும் விபரம் தெரிய வந்ததையடுத்து, லண்டன் புத்தக விழாவில் தலைகாட்டிடும் பட்சத்தில் அவர்களையும் பார்த்த மாதிரி இருக்குமே என்ற ஆவல் எழுந்தது! இது பற்றியெல்லாம் நிச்சயமாய் அன்றைக்கு எழுதியிருப்பேன் என்று தோன்றுகிறது ; ஆனால் கொச கொச வென்ற மார்கழி மாதத்து மூடுபனி மாதிரியான எனது ஞாபகத்திறனைக் கொண்டு எதையும் உறுதிபடச் சொல்ல இயலவில்லை என்பதால் மறுஒலிபரப்பாகவே இருந்தாலும் சகித்துக் கொள்ளுங்களேன் – ப்ளீஸ்?! So கனடாவில் ஒரு மிஷினரி inspection சார்ந்த பயணத்தின் வால்ப்பகுதியில் இலண்டன் புத்தக விழாவினில் ஒரேயொரு நாள் சுற்றுவது ; அச்சமயத்தில் Fleetway மறுவருகையினில் நமக்கு சுவையாய் ஏதும் அமைந்திடக் கூடுமா ? என்ற கேள்வியோடு புதுக் குழுமத்தைச் சந்திப்பது என்றும் திட்டமிடல் இருந்தது!


அமெரிக்காவுக்கு நிறையவாட்டி பயணம் செய்ய வாய்ப்புகள் அமைந்திருந்த போதிலும் கனடா பக்கமாய்த் தலைவைத்துப் படுக்க அப்போது வரைக்கும் முனைப்பாய் பணிகள் ஏதும் அமைந்திருக்கவில்லை! So வண்டி வண்டியாய் படிவங்களைப் பூர்த்தி செய்து விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தேன்! (சத்தமில்லாமல் ஒரு 'ரிப் கிர்பி ஸ்பெஷல்' மட்டும் அறிவித்த கையோடு – நம் பிரசன்னாவிடம் ஏதாச்சும் "பார்த்துச் செய்யச் சொல்லிக்" கேட்டிருக்கலாமோ??) விசாவும் கிட்டி, பயணமும் மேற்கொண்ட போது, சென்றிறங்கியது டொராண்டோவில் ! பங்குனி மாச வெயில் நம்மூரில் பிடதியில் சாத்திக் கொண்டிருக்க – அங்கே உறைபனியும், நடுங்கும் குளிரும், மனுஷனின் ஜீவனை வற்றச் செய்து கொண்டிருந்தது! (அது சரி – இங்கிலாந்துக் குழுமத்தைச் சந்திக்கும் கதையினில் கனடாவுக்கு ஜோலி எங்கிருந்து எழுந்தது என்கிறீர்களா ? உள்ளது guys ! சொல்கிறேன் !!) ஞாயிறு பின்மதியம் நீல வானங்களும் பளீர் கதிரவனுமாய்க் காட்சி தந்தாலும் – அந்தக் காலத்துக் கம்பவுண்டர்கள் ‘சுருக்‘கென்று குத்தும் ஊசியைப் போல குளிர் வகையாக 'வச்சு செஞ்சு' கொண்டிருந்தது! திங்களன்று ஒரு வேலை ; செவ்வாயன்று கனடாவின் இன்னொரு பெருநகரமான மான்ட்ரியாலில் இன்னொரு வேலை ; செவ்வாயிரவே அங்கிருந்து இலண்டனுக்கு ஓட்டமெடுத்து, புதனன்று லண்டன் புத்தக விழாவில் கலந்து கொள்வது என்று என் அட்டவணையிருந்தது!  பொதுவாய் இது மாதிரியான காமிக்ஸ் சார்ந்த பணித் திட்டமிடல்கள் பயணத்துடன் ஐக்கியமாகிடும் பட்சத்தில் குஷயாகியிருக்கும்! மாமூலான இரும்பு இயந்திரங்களைப் பார்த்த கையோடு மட்டுமே ஊர் திரும்பாது – கொஞ்சம் நமது ஆதர்ஷச் சமாச்சாரத்திற்கும் நேரம் ஒதுக்க சாத்தியப்படுவதை நினைத்தே நான் நாட்களை நகற்றி விடுவேன்!


திங்களும் புலர்ந்தது – டொரண்டோவிலிருந்து 45 நிமிட பஸ் பயணத் தொலைவிலிருக்கும் ஒரு சிறு கிராமத்திலிருந்தது நான் பார்வையிட வேண்டியிருந்த அச்சு இயந்திரம். காலையில் எழுந்த போதோ “ஒரு பனிப் புயல் இன்றைக்கு காத்துள்ளது – செம உக்கிரமானதாக இருக்கக் கூடும்! உஷார்!” என்று டி.வி.யில் அலறிக் கொண்டிருந்தார்கள்! ஜன்னல் வழியே பார்த்தால் இன்னொரு அழகான நீல நாளாய் மட்டுமே தெரிந்தது – எந்தக் கோடியிலுமே மேகங்கள் கண்ணில் படாமல்! “ரைட்டு… நம்ம புழைப்பைப் பார்க்கலாம்!” என்றபடிக்கே புறப்பட்டு, பஸ்ஸை தேடிப் பிடிக்க நடையைப் போட்ட போதே வானம் லேசாய் நிறம் மாறியிருந்தது! வயிற்றுக்குள் பயப்பந்து லேசாய் சுருளத் தொடங்கினாலும்  – புது ஊர்; புதுப் பயண மார்க்கம் என்பதிலுமே கவனத்தைத் தரத் தொடங்க – 11 மணிவாக்கில் நான் அந்த அச்சுக் கூடத்திலிருந்தேன்! அங்கேயிருந்த நட்பான ஜனங்கள் குசலம் விசாரித்த கையோடு, மிஷினைக் காட்டிய பிற்பாடு – ‘எங்கே திரும்பிச் செல்லவுள்ளேன்?‘ என்று கேட்டார்கள்! – மறுக்கா டொரண்டோ!” என்ற போதே அவர்களது முகங்கள் மாறுவதைக் கவனிக்க முடிந்தது! “பின்மதியம் ஒரு அசுரப் பனிப்புயல் தாக்கவுள்ளது ப்ரதர். பத்திரம்!” என்றபடிக்கே விடைகொடுத்தனர்! வயிற்றுக்குள்ளிருந்த பந்தானது பாஸ்கெட் பால் சைஸுக்கு உருப்பெற்றது போலுணர – “வேற வழியே இல்லை… பஸ்ஸைப் புடிச்சு ஊருக்குத் திரும்பிய கையோடு, ரூமுக்குப் போய் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரயிலில் மான்ட்ரியாலை நோக்கிப் பயணம் பண்ண வேண்டியது தான்! ப்ளேனெல்லாம் நிச்சயமாய் கேன்சலாகியிருக்கும்!” என்று தீர்மானித்துக் கொண்டேன்! “சாலைகளில் போவதை விடவும்; பறக்க முற்படுவதை விடவும், இரும்புக் குதிரையில் தடதடப்பது பாதுகாப்பானதுல்லே! ஆனாலும் நீ ஜித்தன்டா சுனா.பாணா!! என்று என்னை நானே கமுக்கமாத் தட்டிக் கொடுத்துக் கொண்டேன்! ஊருக்கும் திரும்பி, ரூமைக் காலி பண்ணி, ஓட்டமும், நடையுமாய் டொரண்டோ ரயில் நிலையத்தை நோக்கி வேகமெடுத்த போது – நிறையவே ஜித்த சுனா-பாணாக்கள் அங்கே குழுமியிருப்பதை உணர முடிந்தது! ரயில் நிலையத்தில் கட்டுமானமோ, மராமத்தோ – ஏதோவொன்று ஓடிக் கொண்டிருக்க, டிக்கெட் கவுண்டரைத் தேடிப் பிடித்து “மான்ட்ரியாலுக்கொரு one way!” என்று கேட்ட போது உள்ளிருந்த பெண்மணி – “are you sure about it?” என்று கேட்டு வைத்தார்! 'என்னாங்கடா இது? ஒரு மனுஷன் மூளையைக் கசக்கி, ஒரு பிரமாதமான அகுடியாவோட வந்தாக்கா அபசகுனமா கேள்வி கேட்கறீங்களே?” என்று நினைத்தபடிக்கே “Of course I am sure!” என்றேன்! ஓசையின்றி டிக்கெட்டும், மீதக் காசும் என் பக்கமாய் வர, மதியம் 2.10-க்கு ரயில் என்றும் பிளாட்பார்ம் 2 என்றும் அதனில் அச்சிடப்பட்டிருந்தது! ‘விறு விறு‘வென்று ரயிலைப் பிடிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்க, ஜனங்கள் எல்லோரும் மத்தியிலிருந்த டி.வி. திரையில் ஊன்றிக் கிடப்பது புரிந்தது. எனக்கோ உள்ளாற குஷி – பின் மதியம் தாக்கவிருக்கும் புயலுக்கு டாட்டா காட்டி விட்டுப் புறப்படுகிறோமென்று! ஆனால் பெரும் தேவன் மணிடோ நம்மோடு விளையாடிடத் தீர்மானித்து விட்டால் – அவரது லீலைகள் தான் கணக்கில் அடங்காதவையாச்சே? “டொரண்டோவைத் தாக்கவிருந்த புயல் சற்றே திசைமாறி – மான்ட்ரியாலை நோக்கி அசாத்திய வேகத்தில் இப்போது பயணித்து வருகிறது! அடுத்த 36 மணி நேரங்களுக்குள் வரலாறு கண்டிராத பனிப்பொழிவை மான்ட்ரியால் சந்திக்கும்! "என்று டி.வி.யில் Breakng News ஓடிக் கொண்டிருப்பதைப் படித்த கணமே அந்தக் குளிரிலுமே வியர்க்கத் தொடங்கி விட்டது! அது மாதிரியான extreme இயற்கை ருத்ர தாண்டவங்களை ரொம்ப காலம் முன்பாய் ரஷ்யாவில் ஒரு முறை சந்தித்ததைத் தாண்டி மறுபடியும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கவில்லை என்ற விதத்தில் அதிர்ஷ்டம் என் பக்கமேயிருந்தது! அந்த ரஷ்யப் படலத்தின் போது வயசுமே முப்பதுகளின் பிற்பகுதி தான் என்பதால் தாக்குப் பிடிக்கும் திறன் சற்றே கூடுதலாகயிருந்திருக்கும்! இன்றைக்கோ தாக்குப் பிடிக்க முடியுமா? என்ற பயம் ஒரு பக்கம்; மறுநாளைய inspection சொதப்பிடும் பட்சத்தில் மேற்கொண்டு கனடாவிலேயே ஒன்றிரண்டு நாட்கள் தங்கிட வேண்டி வந்தால் லண்டனின் புத்தக விழா appointments சகலமும் சொதப்பிடுமே என்ற பயம் இன்னொரு பக்கம்! பற்றாக்குறைக்கு வாரயிறுதியில் காத்திருந்த பிறந்த நாளை எங்கேனும் பர்கர் தின்னும் மண்ணிலோ; பயணத்திலோ செலவிட நேர்ந்திடுமோ என்ற டர்ருமே!


"புயல் டாட்டா காட்டி விட்ட டொராண்டோவுக்கு நீ டாட்டா சொல்லி விட்டு – புயல் அரவணைக்கக் காத்துள்ள மான்ட்ரியாலுக்குப் பயணம் போறியாக்கும் ? செம அறிவாளி தான் போ – சுனா பானா!” என்பது தான் அந்த டிக்கெட் கவுண்டர் பெண்மணியின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்குமென்று புரிந்தது! ‘தொலைகிறது டிக்கெட்‘ என்றபடிக்கே அதைக் கடாசி விட்டு, மறுபடியும் ஒரு ரூம் எடுத்து இங்கேயே தங்கிட்டால் தேவலாமோ? என்ற யோசனை தலைக்குள் துளிர்க்கத் தொடங்கிடுவதற்குள் ரயில் தடதடத்து நுழைந்திருந்தது! அனிச்சைச் செயலாய்ப் பையைத் தூக்கிக் கொண்டு எனது கோச்சுக்குள் புகுந்த நொடியில் “துணிந்த பின் மனமே, துயரம் கொள்ளாதே!” என்ற பாட்டு சோகமான ட்யூனில் தலைக்குள் பேக்கிரவுண்டில் ஒலித்துக் கொண்டிருந்தது! மதியம் மணி மூன்றைத் தொடத் தொடங்கிய வேளையிலேயே வானம் கோபத்தில் கறுத்துப் போயிருக்க, இருள் போர்வை துளி அறிவிப்பின்றி வியாபிக்கத் துவங்கியிருந்தது! ‘எலேய்… எங்க ஊரிலே இது குஸ்காவைக் கொட்டிக்கிட்டு ஏப்பம் விடற வேளைலே! இப்டிலாம் இருட்டப்படாது!!‘ என்று உரக்கச் சொல்லத் தோன்றினாலும், அடுத்து என்ன? என்ற கேள்வியின் முனைப்பில் சகலமும் பின்சீட்டுக்குப் போய்விட மான்ட்ரியாலுக்கு இரவு எட்டரை சுமாருக்குப் போய்ச் சேருமென்பதால் முதலில் தங்கவொரு ரூம் போட்டாகணும் என்பது தலையாய் வேலையாக நின்றது! நெட் சிக்னல் அந்த வானிலையிலும் தாக்குப் பிடிக்க, அடித்துப் பிடித்து ரூமெல்லாம் இணையம் வழியே புக் பண்ணினேன் !


கறுப்பு மையை இயற்கை கேட்டுப் பெற்று பூமியெங்கும் தடவிவிட்டு ஹோலி கொண்டாடியது போலானதொரு  காரிருள் வேளையில் மாண்ட்ரியாலின் suburbs ஒன்றின் ஸ்டேஷனில் இறங்கி ஒரு மாதிரி ரூமுக்குப் போய் சேர்ந்தேன் – யுபெர் டாக்ஸியின் புண்ணியத்தில்! அமெரிக்காவிலும் சரி, கனடாவிலும் சரி – டி.வி.கள் ஒரு விஷயத்தைக் கையிலெடுத்தால் நம் காதில் தக்காளிச் சட்னி மட்டுமல்ல, தக்காளி அருவியே பிரவாகமெடுத்தாலும் ஓய மாட்டார்கள்! காத்திருக்கும் புயலின் உக்கிரத்தைப் பற்றியும், மறுநாள் மாலை ஒரு இயற்கை ஊழித் தாண்டவம் காத்திருப்பது பற்றியும் செய்தி ரிசப்ஷனில் கால் வைத்த கணமே அலறிய டி.வி.கள் பறைசாற்றின! ஐயோ… தெய்வமே… ஏதாச்சுமொரு அதிசயத்தை நிகழ்த்தி ஒரேயொரு நாள் கழித்து இந்த ரகளைகளை அரங்கேற்றிக் கொண்டால் நான் தப்பித்தடித்து எங்க ஊருக்கு ஓட்டம் பிடிச்சிடுவேன்! ஆயுசுக்கும் “ச்சை… இந்த வெயில் படுத்துதேன்னு” அலுத்துக்க மாட்டேன் !! என்று உள்ளுக்குள் முணுமுணுத்தபடியே மறுநாள் காத்திருந்த பணி பக்கமாய் கவனத்தைத் திருப்பினேன்!


மான்ட்ரியாலில் எனக்கு மிஷின் விற்றிருந்தவரோ குஜராத்தி இஸ்லாமியர். வெகு காலம் முன்பாய் ஆப்ரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சென்று, அப்பாலிக்கா கனடாவுக்குச் சென்று செட்டிலாகி, அங்கே தழைத்தோங்கும் தொழில் குடும்பத்தின் வாரிசு! அவர் பிறந்தது, வளர்ந்ததெல்லாமே கனடாவில் தான் எனும் போது இந்திய ஜாடையிலான பெயர்களைத் தாண்டிய அடையாளங்கள் ஏதும் கிடையாது அவரிடம்! கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாய் அங்கு வசிப்பவரிடம் போனில் பேசிய போது வானிலை சார்ந்த பதட்டம் துளியுமில்லை அவரிடம்! நமக்கு இதுவொரு சம்பவம்…. ஆனால் கனடாவின் உக்கிரக் குளிர்களை ஆண்டாண்டாய் அனுபவித்த மனுஷனுக்கு இதுவொரு கொட்டாவி விடச் செய்யும் நிகழ்வு மாத்திரமே என்பது புரிந்தது! ‘காலையிலே வெள்ளென வந்திடறேன்; புயல்… புண்ணாக்குக்கு முந்தி மிஷினைப் பார்த்துப்புட்டு மான்ட்ரியால் திரும்பிடலாம்! நீயும் அடிச்சுப் புடிச்சி ஏர்-போர்ட் போயிட்டா தீர்ந்தது பிரச்சனை !‘ என்று மனுஷன் பேசப் பேச நாகராஜ சோழன் M.A.,B.L.ன் தெனாவட்டு துளிர்விடத் தொடங்கியது! “ப்பூ… இவ்ளோ தானா ? நான் கூட இந்த பிரச்சனையை பெரிய பைட்டர்னு நினைச்சேன். ஆனால் கந்துவட்டிக் கோவிந்தன் தானாக்கும் ?” என்றபடிக்கே  கட்டையைக் கிடத்தினேன் படா தெம்பாய் ! நேர வித்தியாசம்; உள்ளாற இருந்த பதட்டம் என தூக்கத்துக்கு நிறைய சத்ருக்கள் அமைந்திட அதிகாலை 4 மணி சுமாருக்கு முழிப்புத் தட்டி விட்டது! 

எழுந்து உட்கார்ந்த மறுநொடியே வெளியே கேட்டதொரு வினோதமான சத்தம் நெஞ்சுக்குழியைத் தடதடக்கச் செய்தது! உரத்த விசில் சத்தம்; உச்சஸ்தாயியில்; பேய்ச் சீற்றத்தோடு; ஒற்றை நொடி கூட விடை தராது அலறிக் கொண்டிருப்பதைக் கேட்ட போதே தெரிந்து விட்டது ஏதோ சரியில்லையென்று! அவசரம் அவசரமாய் டி.வி.யை ஆன் செய்தால் “மாலைக்குள் மான்ட்ரியாலை பனி புதைத்து விடும்” என்ற ரீதியில் குமுறிக் கொண்டிருந்தார்கள்! இயன்றமட்டுக்கு சாப்பாட்டு ஐட்டங்களை அள்ளிப் போட்டு வீட்டை ரொப்பிக் கொள்ளுங்கள்! என்ற சமாச்சாரத்தைக் காதில் கேட்ட நொடியே ஈரக்குலை பதறத் தொடங்கி விட்டது – “ஆஹா… கையில் ஒன்றிரண்டு பிஸ்கெட்டுகளைத் தாண்டி எதுவும் கிடையாதே! என்று! குடிக்கவும் ஏதாச்சும் தேவையே என்றபடிக்கே ஹோட்டல் வராந்தாவிலிருந்த Vending Machine-ஐ படையெடுத்தேன்; காசு போட்டால் அதிலிருந்து வெளிப்படக் கூடிய பண்டங்களையும், பானங்களையுமாவது அள்ளிப் போகலாமென்று! “நீ ரொம்ப லேட்டு மாமூ!” என்று பறைசாற்றியது அதனில் தொங்கிக் கிடந்த ‘OUT OF STOCK” பதாகையானது! 'அடங்கொன்னியா… கக்கூஸ் குழாயிலே தண்ணியைக் குடிச்சுப்புட்டு, மேரி பிஸ்கட்டைக் கடிக்கிறது தான் உன்னோட அடுத்த 2 நாட்களது தலைவிதியா ?' என்ற பயம் பிடரியை உலுக்கத் தொடங்க – புத்தி தறிகெட்டு ஓடத் தொடங்கியது! ஹோட்டலிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் ஒரு 24 மணி நேர அங்காடியைப் பார்த்த ஞாபகம் அப்போது பளீரிட்டது! நம்மூரைப் போல ரோட்டை க்ராஸ் பண்ணி அப்பாலிக்கா ஜம்ப் பண்ணி ஓட்டமாய் ஓடிடும் கதையெல்லாம் அந்த ஊர்களில் செல்லுபடியாகாது என்பதுமே பளீரிட்டது! எங்கே போவதானாலும் ஒரு வண்டி இன்றியமையாத தேவை என்றாலும் அந்த ஜாமத்தில் டாக்ஸிக்கு எங்கு போவது ? ரூமுக்குத் திரும்பியவனின் புத்தி சொன்ன ரோசனையை செயலாக்கும் முனைப்பில் ஸ்வெட்டர்; தெர்மல்வேர்; கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப்; காதில் பனிக்குல்லாய்; கையில் க்ளவ்ஸ் என்று சிக்கிய சகலத்தையும் அணிந்து கொண்டு – செல்போனின் டார்ச்லைட்டை ஆன் செய்தபடிக்கு ஹோட்டலின் குறுக்குவாக்கில் நடை போட்டால் ஒரேயொரு நெடுஞ்சாலையினைத் தாண்டிடும் பட்சத்தில் எதிர்பக்கம் கடையிருக்குமென்பதை தலைக்குள் ப்ரோக்ராம் செய்தபடிக்கே நாலரை மணிக்கு ஹோட்டலிலிருந்து வெளிப்பட்டேன்!


கதைகளில் ஏகப்பட்டவாட்டி இது போன்ற சூழல்களைப் பார்த்திருப்போம்...! டெக்ஸ்.... ட்ரெண்ட்.... டைகர்... என்று நாயகர்கள் இயற்கையோடே பயணிப்பதை ; அதன் கோர முகத்தை அசால்ட்டாய் எதிர்கொள்வதை ஒரு நாலைந்து பக்க அனுபவமாய்க் கடந்திருப்போம்! ஆனால் 50 வயதைத் தொடும் ஒரு கடாமாடனால்  அன்றிரவு ஐம்பதடி தூரத்தை அந்தச் சூழலில் கடக்கமுடியவில்லை என்பதே யதார்த்தத்தின் முகம்! சுழன்றடிக்கும் காற்று; பற்களை பரமபதம் ஆடச் செய்யும் குளிர்; காரிருள்; காதுக்குள் கூகைகளின் கரையலைப் போல ஒலித்துக் கொண்டிருந்த பேரிரைச்சல்; எல்லாவற்றிற்கும் மேலாய் அந்தத் தனிமை மனுஷனை ரொம்பவே பேஸ்தடிக்கச் செய்திருந்தது. தூரத்தில் சர்...சர்...ரென்று சீறிப் போகும் மின்னல் பெண்களாய் கார்கள் மட்டும் கண்ணில்பட நானூறு மீட்டர் தொலைவிலான அங்காடியைக் கண்ணில் பார்க்கக் கூட சாத்தியப்படவில்லை! நிமிர்ந்து பார்த்தால் அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு தந்திட இயலாது கண்களிலிருந்து அருவியாய் நீர் கொட்டியது! வெளிச்சத்துக்கோசரம் டார்ச் 'ஆன்' பண்ணுவதெனில் பாக்கெட்டிலிருந்து கூட கையை வெளியே எடுக்க வழியில்லை அந்தக் குளிர் பிரளயத்தில்! அந்த நொடியில் அத்தனை தெய்வங்களுமே இஷ்ட நாயகர்களாய்த் தோன்றிட – மொத்த மொத்தமாய்ப் பிரார்த்தனைகள்; வேண்டுகோள்கள் என்று தெறிக்க விட்டேன்! ஒரு மனுஷன் எத்தனை தைரியசாலி என்பதையும் ; எத்தனை புருடாசாலி என்பதையும் அக்கக்காய் அலசித் தொங்கவிடும் ஆற்றல் இயற்கைக்கு உண்டென்பதை அந்த அதிகாலை எனக்கு கற்பித்துக் கொண்டிருந்தது   ! ! ‘தம்‘ கட்டிப் பத்தடி நடப்பதற்குள் ஒரு நூறு சந்தேகங்களும், பயங்களும் மனுஷனைத் தாக்கோ தாக்கென்று தாக்கிட – நூறடி தூரத்தைக் கடந்திருந்தவன் திரும்பி ஹோட்டலைப் பார்வையிட்ட போது அதுவே பெரும் தொலைவில் நிற்பது போலப் பட்டது! ‘செத்தாண்டா சேகரு... தக்கி முக்கி அங்காடியை எட்டிப் பிடிப்பது பற்றி மாத்திரமே யோசித்திருந்தேன்; அங்கே போய்விடும் பட்சத்தில் பொருட்களையும் சுமந்தபடிக்கே ரூமுக்குத் திரும்புவதென்பது மகாபாரதத்தின் இன்னொரு மெகா அத்தியாயமாகிடக் கூடுமே!!!' என்ற புரிதல் முதுகுத்தண்டை முடக்கியே விட்டது! அப்படியே; அந்த நொடியே அபவுட் டர்ன் போட்டவன் ஹோட்டலுக்கு ஓட்டமும், நடையுமாய்த் திரும்பி, ரூமுக்குப் போய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த நொடியில் தான் எத்தனை அசாத்தியப் பித்துக்குளித்தனத்தை முயற்சித்திருக்கிறேன் என்பது புரியத் தொடங்கியது! அந்த வெட்டவெளியில் என்னை முடக்கவோ; வீழ்த்தவோ; மாய்க்கவோ எத்தனை நோவுகளுக்கு நான் இடம் தந்திருந்தேன்? என்ற கேள்வியை NEET மருத்துவ நுழைவுத் தேர்வின் வினாத்தாளில் வைத்திருக்கலாம்! கொஞ்சமாய் என்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்ட போது புத்தி மெதுமெதுவாய் வேலை செய்யத் துவங்கியது! தடதடவென்று கீழிருந்த Breakfast அறைக்குப் போனேன்; ஒரு மினி கூடை நிறைய ஆப்பிள்; ஆரஞ்சு & வாழைப்பழங்கள் பத்திரமாகக் கிடந்தன – கேட்பாரன்றி ! கையில் தூக்க முடிந்த சகலத்தையும் ஏந்தியபடிக்கே ரூமுக்குத் திரும்பிய போது கொஞ்சம் தெம்பாகயிருந்தது! “அடாது புயலடித்தாலும், விடாது வாழைப்பழம் சாப்பிடுவோம்லே!” என்றபடிக்கே ஒன்றைப் பிய்த்து வாயில் போட்டேன் – உயிர் காக்கும் அமிர்மாய்க் கரைந்தது! காலையில் மிஷின் காட்ட அவர் 7 மணிக்கெல்லாம் வருவதாய்த் திட்டம்; ஆனால் சர்வ நிச்சயமாய் அதனை மறுநாளைக்கென மாற்றிடுவார்; அன்றிரவு இலண்டன் பயணமெலாம் கோவிந்தா; புத்தக விழாவும் பீப்பீப்பீ...தான்! என்று உறுதியாய் எனக்குள் தோன்றியது! சரி... இனியும் இழவு வீட்டிலிருப்பவனைப் போல முகரையைத் தூக்கிக் கொள்ளாமல், குளித்து, கீழே போய் ப்ரேக்பாஸ்டையாவது உருப்படியாய்ச் சாப்பிடுவோம் என்று புறப்பட்டேன்! என்னே ஆச்சர்யம் – நான்காவது ப்ரெட்டை வயிற்றின் இன்னொரு கோடிக்கு நான் அனுப்பிடும் முஸ்தீபிலிருந்த போதே செல்போன் கிணுகிணுத்தது! “ரெடியாகியாச்சா? நான் லாபியிலே காத்திருக்கேன்! என்று மறுமுனையிலிருந்து சேதியைக் கேட்ட போதே அவசரம் அவசரமாய்ப் பையைத் தூக்கிக் கொண்டு முன்வாயிலுக்கு ஓட்டமெடுத்தேன்!


ஒரு பளபளக்கும் கறுப்பு நிறத்திலான செம புது ATV வண்டியில் நம்மவரும், அவரது 20 வயதுப் புத்திரனும் அங்கு நின்றிருந்தனர். ஒவ்வொரு டயருமே நம்மூர் லாரிக்களின் டயரை விடவும் கனமாய்த் தோன்றியது! பேசியபடியே உள்ளே ஏறி நாமும் அமர, தன் மகனையும் உடனழைத்து வந்ததன் காரணத்தை மனுஷன் சொன்னார்! தான் மட்டுமே வந்திருந்தால் அத்தனை வேகமாய் வண்டியோட்டியிருக்க முடியாதென்றும், மகர்ர்ர் சும்மா விர்ர்ர்ரென்று விரட்டுவதில் கில்லாடி என்றும் சொன்னார். அடுத்த 150 நிமிடங்களை விவரிக்க இன்றளவுக்கு வார்த்தைகள் தேடித் தோற்றுப் போய் வருகிறேன்! சாலையில் புதைந்து கிடந்த பனியையும் ஊன்றிப் பற்றிக் கொள்ளும் பிரத்யேக டயர்களின் சகாயத்தோடும்; எஞ்சினின் ராட்சஸக் குதிரைசக்தியின் சகாயத்தோடும், மகரின் பல நாள் ரேஸ் டிரைவர் கனவுகளின் சகாயத்தோடும் நம்மூர் பனிபய மாதாவின் சகாயத்தோடும் ஒரு நம்ப இயலாத் தொலைவை மின்னல் வேகத்தில், கடந்திருந்தோம் – முழுசாய்! மாண்ட்ரியோலிலிருந்து அகல, அகல வானிலையும் சன்னமாய் முன்னேறிட, அந்த அச்சுக்கூடத்தைச் சென்றடைந்து; மிஷினைப் பார்வையிடுவதும் வெகு சுலபமாய் நிறைவுற்றது! மறுக்கா காண்டாமிருகக் கார்; மறுக்கா மகர்... மறுக்கா சாலைகளைத் தெறிக்க விடுமொரு பயணம் – மதியம் ஒன்றரை சுமாருக்குப் பத்திரமாய் எனது ஹோட்டல் அறை என்ற போது மெய்யாகவே எனக்குள் ஒரு நம்பிக்கை எழுந்திருந்தது – ஆண்டவன் மிச்சத்தையும் முறைப்படி பார்த்துக் கொள்வாரென்று! மிஷின் காட்டிய கையோடு அவரும் டாட்டா காட்டி விட்டுப் புறப்பட – இனி ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் பயணமாகி விட்டால் தீர்ந்தது பிரச்சனை என்று நினைத்தபடிக்கே ரூமுக்குள் புகுந்து சட்டி; பெட்டியெல்லாம் கட்டத் துவங்கினேன். மதியம் மூன்றைத் தொடும் முன்பாகவே காரிருள் அப்பிக் கொள்ள – எந்த நொடியும் பனி கொட்டத் துவங்கலாம் என்று டி.வி.யில் நியூஸ் ஓடியது! பரபரவென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரிசப்ஷனுக்கு ஓட்டமெடுத்தேன் – அவர்கள் உதவியோடு ஒரு டாக்ஸியைப் பிடித்துப் பனிப்பொழிவை முந்திடலாம் என்ற பேராசையில்! கீழேயோ ஒரு கொத்தவால் சாவடிச் சூழல் நிலவிக் கொண்டிருந்தது; குறைந்தது முப்பது பேராவது ஏர் போர்ட் போகும் முனைப்பில் தயாராகி நின்று கொண்டிருந்த நிலையில்! பாவப்பட்ட அந்த ரிசப்ஷனிஸ்டோ “போன் போக மாட்டேன்கிறது; டாக்ஸிக்கள் கிடைப்பது கஷ்டம்” என்று சரணாகதியாகி விட்டாள்! ஆளாளுக்கு யுபெர்... ஓலா... லாலா.... என்று முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, நானும் அந்த ஜோதியில் ஐக்கியமானேன்!


‘கடவுள் இருக்கார்டா கொமாரு...!‘ என்று துள்ளிக் குதிக்கத் தோன்றியது – எனக்கொரு சீன ட்ரைவர் யுபெரின் புண்ணியத்தில் ஏற்பாடாகிப் போனது! ஏழு நிமிடக் காத்திருப்பு ஒரு யுகமாய்த் தோன்றியது! “மனுஷன் கேன்சல் பண்ணிப்புடுவானோ?” என்ற பீதியும் உலுக்கியெடுக்க கைபேசியின் அந்த appலிருந்து முட்டைக்கண்களை அகற்றவேயில்லை! ஆனால் தில்லான அந்த மனுஷன் ஒரு மாதிரியாய் – ஹோட்டல் வாசலுக்குள் வண்டியை நுழைத்த நொடியில் மானசீகமாய் செண்டை மேளம் ஒலித்து, அவருக்கொரு நூறடி உசரச் சிலை எழுப்பினேன் மனசுக்குள்ளாறயே! லக்கேஜை காரின் பின்சீட்டில் போட்டபடிக்கே ‘ஏர்போர்ட்‘ என்றபடிக்கு காருக்குள் நான் தாவிய கணத்தில் ரூமில் பின்தங்கி நின்றோரின் கண்களில் தெரிந்தது! சோகமா? பச்சாதாபமா? என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த நொடியில் என்னைப் பொறுத்தவரைக்கும் சகல இடர்களையும் தாண்டியாச்சு என்ற நிம்மதியே மனம் முழுசும்!


ஏர்போர்ட் நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து மொத்தமே 3 கிலோ மீட்டர்கள் மட்டுமே! நல்ல நாளில் ஐந்து நிமிடப் பயணமே ஜாஸ்தி! ஆனால் விண்ணிலிருந்து டன் டன்னாய் பனிப்பொதிகளை மேகங்கள் அசாத்திய கதியில் கொட்டித் தள்ளத் துவங்கியிருக்க, சாலையின் எந்தத் திக்கில் திரும்பினாலும் ‘பளீர்‘ வெண்மையைத் தாண்டி எதுவும் கண்ணில் படவில்லை! போகப் போக பனியின் வீச்சு அசுர கதியாகிப் போக – பொறியில் சிக்கிய பெருச்சாளியாய் உணர்ந்தேன்! இருபத்தி நான்கு மணி நேரங்களுக்குள் நான் எடுத்திருந்த இரண்டாவது பைத்தியக்காரத்தனமான தீர்மானம் அந்த டாக்ஸிப் பயணம் என்ற புரிதல் உள்ளே விரவிய நொடிகளிலேயே சொல்ல இயலா பீதியும், மிரட்சியும் ஆட்கொண்டன! உள்ளூர்காரரான ட்ரைவரே திகைப்பில் வண்டியோட்டுவதைக் கவனிக்க முடிந்தது! திரும்பிப் போகவும் மார்க்கமில்லை; வண்டி நின்றிடும் பட்சத்தில் EMERGENCY-ஐ அழைப்பதைத் தாண்டி வேறு வழியில்லை என்பதும் புரிந்தது! அவர்களுக்கு நம்மை எட்டிப் பிடிக்க எத்தனை நேரமாகுமோ? அது வரையிலும் காரின் ஹீட்டர் தாக்குப் பிடிக்குமா? காருக்குள்ளேயே குளிரில் விறைத்துக் கிடக்கணுமோ ? என்றெல்லாம் சிந்தனைகள் தறிகெட்டுத் தெறித்தோட – ஏர்போர்ட் விளக்குள் எங்காவது கண்ணில் படுகின்றனவா? என்ற தவிப்போடு சுற்றுமுற்றும் பார்த்தால் கும்மிருட்டு மாத்திரமே! ஒரு வஞ்சத்தோடு வானம் பனியினை கொட்டிக் குவித்த அந்தக் காரிருளினில் தொடர்ந்த 10 நிமிடங்களுக்கு எங்களது அந்த வாகனத்தைச் செலுத்தியது அந்தச் சீனரது கரங்களாகயிருந்தாலும் – அவற்றைச் செயலாற்றியது இந்திய-சீன தெய்வங்களின் கூட்டணியே என்பதில் கிஞ்சித்தும் எனக்கு ஐயம் கிடையாது ! பிரவாகமெடுக்கும் பனியிலும் வண்டி தாக்குப் பிடித்தபடியே மான்ட்ரியால் ஏர்போர்ட்டைத் தொட்ட போது டாக்ஸியிலிருந்து இறங்கிய நொடியில் எனக்குள் குமுறிய உணர்வுகளை என்றைக்கேனும் ஒரு சாவகாச நாளில் விவரிக்க முயற்சித்துப் பார்க்கணுமென்பேன்! மரணபயத்தை விரல் கொண்டு தொட்டுப் பார்த்துத் திரும்பிய அனுபவத்தை வார்த்தைகளாக்கும் லாவகம் 2 ½ ஆண்டுகள் கழிந்த நிலையில் கூட எனக்கு சாத்தியப்படவில்லை ! ட்ரைவரின் கரத்தை ஆத்மார்த்தமாய்ப் பற்றிக் குலுக்கியபடிக்கே விமான நிலையத்துள் புகுந்த சமயம் வாழ்க்கையே விக்கிரமன் பட க்ளைமேக்ஸ் போல ஒரு சந்தோஷ வசந்தமாய்த் தென்பட்டது!


பத்திரமாய் உள்ளே தஞ்சமாகியபடிக்கே கண்ணாடி ஜன்னல்கள் வெளியே பார்த்த கணத்தில் விக்கித்துப் போனேன் – பனிப்பொழிவின் உக்கிரத்தைக் கண்டு! டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளும் நொடிக்கொரு update தந்திட – நானோ இலண்டன் போகும் விமானத்துக்கு எந்த கவுண்டரில் சென்-இன் என்றபடிக்கு நடைபோட ஆரம்பித்தேன். இரவு 9.30க்கு ப்ளைட்; போர்டிங் பாஸை வாங்கி விட்டு செக்யூரிட்டி சோதனைகளையும் தாண்டி உரிய இலக்கில் போய் அமர்ந்தபடிக்கே செல்போனிலிருந்த எங்கள் வீட்டு ப்ளம்பரின் நம்பரைத் தவிர்த்து பாக்கி சகலத்துக்கும் ஃபோன் போட்டு என் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டேன்! “என்ன கனடாவோ போ..!!. சுத்த நான்சென்ஸ்பா!” என்றபடிக்கே ஓய்ந்த போது தான் தூக்கமின்மையின் பளு என்னை அசத்துவது புரிந்தது! பொதுவாய் பயணங்களில் எத்தனை அயர்விருந்தாலும் தூக்கத்தைச் சிலம்பாடிடும் ஆற்றலுண்டு எனக்கு! ஆனால் அன்றைக்கோ அடித்துப் போட்டாற் போல ஒரு அசதி என்பதால் என்னையுமறியாது காலியாகக் கிடந்த இருக்கைகளில் மட்டையாகிப் போயிருந்தேன்!


எத்தனை அவகாசம் கழிந்ததென்று தெரியாது; அரக்கப் பறக்க கண்விழித்துப் பார்த்த நொடியில் லண்டன் ப்ளைட்டுக்கு பயணிகள் போர்டிங் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது! “நாசமாய்ப் போச்சு... கொஞசம் தாமதித்திருந்தால் விமானத்தைத் தவற விட்டிருப்பேனோ? இத்தனை லோல்பட்டதெல்லாம் வீணாகியிருக்குமே !!" என்றபடிக்கு ஓட்டமாய்ப் போய் நானும் லைனில் நின்று பயணிகளோடு உள்ளே நடந்தேன்! ஆனால் என்னவோ வித்தியாசமாய்ப்பட்டது எனக்கு! மெதுவாய் எனக்கு முன்நின்றவரிடம் வினவ – அவர் என்னை மேலும், கீழுமாய்ப் பார்த்தபடியே "உனக்கு விஷயமே தெரியாதா? பனிப் பொழிவு ராட்சஸ அளவுகளைத் தொட்டுத் தொடர்வதால் சகல ரன்வேக்களுமே புதைந்து விட்டுள்ளன! மான்டரியால் விமான நிலையத்தை ஒட்டுமொத்தமாய் மூடியாச்சு! எப்போது  மறுபடியும் செயலாற்றத் தொடங்குமென்று யாருக்கும் தெரியலை !  So அடுத்த சில நாட்களுக்கு நமக்கு ஜாகை இந்த ஏர்போர்ட் தான் !! நாமிப்போது லைனில் போவது செக்-இன் செய்த நமது பெட்டிகளை மறுக்கா பெற்றுக் கொள்வதற்கே!” என்றார்.


எனக்குக் கிறுகிறுவென்று வந்தது!!! ஒரு கக்கூஸ் ஓரமாய்க் கட்டையைக் கிடத்தியபடிக்கே பையிலிருந்த வாழைப்பழங்களைத் தின்னப்படிக்கே பிறந்தநாளைக் கழிப்பது போல் காட்சிகள் சுழற்றியடித்தன மண்டைக்குள்ளே !! 


தொடர்ந்த அந்த இரவு....வாழ்க்கையில் மறக்கவியலா ஒரு இரவு !! அது பற்றியும், இலண்டன் பயணம் பற்றியும், "வஞ்சம் மறப்பதில்லை" பின்னணி பற்றியும் தொடரக் கூடிய உபபதிவில் folks ! விரலில் தம் இல்லை இதற்கு மேல் பேனா பிடிக்க.. ; டைப்படிக்க !! 

Bye guys...See you around !! Have an awesome bunch of festival days !! 

P.S : தயை கூர்ந்து இந்த நம்பராய்ப் போட்டு பின்னூட்ட எண்ணிக்கையினை ஏற்றும் போங்காட்டம் வேண்டாமே ப்ளீஸ் ? புதுசாய்ப் பதிவுகளை படிக்கும் ஆசையினால் அதைச் செய்வது புரிகிறது ; ஆனால் ஒரு பதிவுக்கென எனக்குப் பிடிக்கும் அவகாசங்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கின்றன !! So பின்னூட்டங்களை செயற்கையாய் எகிறச் செய்திட வேண்டாமே ப்ளீஸ் ?


326 comments:

  1. Tex Kit Sir : First spot உங்களதே !!

    ReplyDelete
  2. ஏற்கனவே போஸ்ட் செய்ததில் font பிரச்னை இருந்ததால் அதனை நீக்கிவிட்டேன் ; நீங்கள் அதனில் முத்லிடத்தைப் பிடித்திருந்ததால் - நகல் பதிவிலும் உங்களுக்கே முதலிடம் !

    ReplyDelete
  3. சார்.. கிளைமேக்சிலே தொடரும் போட்டுட்டு போயிட்டீங்களே..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அந்த உப பதிவுக்கு காத்து இருக்கிறேன்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ஓய் ரம்மி@ பங்சர் ஒட்டுற கதையை தொடரும்யா!!! பாதியில் நிக்குதல்லோ!!!

      Delete
    4. அந்த மணி அடிக்கும் சீன்லாம் எப்படி கலாய்ப்பீர்னு பார்க்கனும்!!

      Delete
    5. சைக்கிள் பெல் அடிச்சதும்பாரு....

      கிணிங். கிணிங்...

      Delete
  4. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. குளிரான மித மழை தூரலில் இனிய காலை வணக்கம் தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,ஆசிரியருக்கும்..:-)

      Delete
  5. அப்படியே விசுவலா நாங்களும் உங்க கூடவே வந்த மாதிரி இருந்த்துச்சு..

    கம்முன்னு உங்க ப்ரயாண அனுபவங்களை புது காமிக்ஸா போட்டு இருக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஓவியர்களும் நம் வசம் நிறைய்ய் இருக்கும் பொழுது ....


      உண்மைத்தான்..:-)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. உண்மை தான் சரவணன் சார். நீங்கள் ஓய்வு பெற்ற பின்னர் உங்கள் பயண அனுபவங்களை மட்டும்
      ஏன் எங்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது. உங்கள் பயண அனுபவங்கள் மட்டுமே ஒரு தனி புத்தகமாக please Sir.

      Delete
    4. ///அப்படியே விசுவலா நாங்களும் உங்க கூடவே வந்த மாதிரி இருந்த்துச்சு..///---ஆம்....!!!்

      Delete
  6. மிகப்பெரிய முழுநீளப் பதிவு..

    படித்து விட்டு...:-)

    ReplyDelete
  7. ஒரு முறை நமது நண்பர் ஒருவர் தங்களை டெக்ஸ்வில்லர் பாணியில் வரைந்து இருந்தது நினைவு வருகிறது இந்த பதிவை படிக்கும் பொழுது..

    பதிவின் தொடர்ச்சியை காண ஆவலுடன் வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. நெனச்சென்....வாய்விட்டு சொல்லிட்டிய தலீவரே...நம் இருவர்....சேம் பிச்

      Delete
    2. எடிட்டர் டெக்ஸ் வில்லர் போஸ்லயா...

      தேடி கண்டுபிடிச்சி அந்த படத்த போடுங்கப்பா....

      Delete
  8. // தயை கூர்ந்து இந்த நம்பராய்ப் போட்டு பின்னூட்ட எண்ணிக்கையினை ஏற்றும் போங்காட்டம் வேண்டாமே ப்ளீஸ் ? புதுசாய்ப் பதிவுகளை படிக்கும் ஆசையினால் அதைச் செய்வது புரிகிறது ; ஆனால் ஒரு பதிவுக்கென எனக்குப் பிடிக்கும் அவகாசங்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கின்றன !! So பின்னூட்டங்களை செயற்கையாய் எகிறச் செய்திட வேண்டாமே ப்ளீஸ் ? // நீங்கள் சொல்வது சரி தான் sir. Agreed 🙋

    ReplyDelete
  9. ஒண்பது மணிக்கு நண்பர்களை வரச் சொல்லி விட்டு பதிவு முன்னரே வந்த மாயம் தான் என்னவோ சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. இது எப்போது நடந்தது 🤔

      Delete
    2. வேற என்னசிரிப்பபா சிரிப்பாவலேன்னு பய்ந்துதா

      Delete
    3. ஆமா தலீவரே அதே கேள்வி நேக்கும் உண்டு!

      Delete
  10. அட்டகாசமான பதிவு சார். அப்படியே உங்களுடன் அந்த பனிபுயலுக்குள் மாட்டிக்கொண்டது போல இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு படிக்கும் போதே வெட வெடத்து போச். பனி, குளிர்னா நாங் கொஞ்சம் பயஞ்த ஆளு! பல இடங்களில் படபடக்க வெச்சது பதிவு!

      Delete
  11. thrilling experience. it was like reading a thrilling story

    ReplyDelete
  12. உங்களுடைய பயணபதிவுகள் எப்போதுமே அருமை தான். அதுவும் ஹோட்டல் லில் இருந்து தனி ஆளாக ரோட்டில் இறங்கி departmental store நடந்து சென்றது எல்லாம் அப்பப்பா பயங்கரம். கிராஃபிக் நாவலை விட அருமையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. யெஸ்ஸூ! டிபார்ட்மெண்ட் படலம், அந்த இடம்தான். நள்ளிரவு 4மணிக்கு என்னா தெகிரியம். அதுவும் தெரியாத ஊரில்!

      Delete
  13. பனியில் ஒரு புயல் ..
    வேற யாரு ??
    நம்ம விஜயன் சார்தான்..

    அப்படியே சகாரா பாலைவனம் &
    அமேசான் காட்டூக்கும் ,
    பெர்முடா ட்ரையாங்கிள் க்கும ஒரு விசிட் போட்டு பயண கட்டுரைகள் போடுங்கள் சார்..

    இப்போதைக்கு இது போதும்..
    ஆப்பிரிக்கா அண்டார்டிக்கா இன்னும் சில எல்லாம் அடுத்த ரவுண்ட் ல பாத்துக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ

      Delete
  14. ஞாயிறு காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  15. //ஆனால் இதுவரையிலான அலசல்கள் 80%-20% என்ற ரேஞ்சில் இருப்பது குஷியான சமாச்சாரம்! // தலைவரே நோட் பண்ணுங்க

    ReplyDelete
    Replies
    1. தீபாவளிக்கு மைசூர் பாகு செமையாய் அமைந்திருக்குடி அம்மு!‘ என்று நீங்கள் சிலாகிக்கும் பல சமயங்களில் – பாராட்டுக்களை வெறும் புன்சிரிப்புகளோடு மட்டுமே ஏற்றுச் செல்லும் மனையாளுக்குத் தான் தெரிந்திருக்கும் அது ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்ட அதிரசம் என்று!

      ######

      நான் இதை நோட் பண்ணி விட்டேன் குமார் சர்...:-)

      Delete
    2. தலைவரே சார் எல்லாம் வேண்டாமே

      Delete
    3. தலைவரே சார் எல்லாம் வேண்டாமே

      Delete
    4. // தலைவரே நோட் பண்ணுங்க //
      குமார் ஹி,ஹி,ஹி......

      Delete
    5. // நான் இதை நோட் பண்ணி விட்டேன் குமார் சர்...:-) //
      தலைவரே ஹா,ஹா,ஹா.......

      Delete
    6. தலை இந்த இரண்டு வாரமாக நல்ல பார்ம்ல இருக்கறது புரிது.👍

      Delete
    7. வீட்ல நிறைய கரண்டிகள் பறந்து வருவதும் ஒரு காரணம் ஸ்ரீராம் சார்..:-)

      Delete
    8. தலைவரே சார் எல்லாம் வேண்டாமே..

      ####

      சாரை கட் பண்ணி நீங்க வயசை குறைச்சுக்கிட்டாலும் போனவாரம் தான் எங்க மிஸ் நம்மளை விட பெரியவங்களை சார்..அல்லது அண்ணான்னு கூப்புடுனும்னு சொன்னாங்க குமார் சார்..அதான் பாக்குறேன்..;-(

      Delete
  16. Good morning. Super experience sir. May Almighty's choicest blessings be showered on you all through your life.

    ReplyDelete
  17. Replies
    1. தலீவரே @ ஒரு தடவையாவது எங்கே உள்ளேன்னு சொல்லவே மாட்டறாரே...!!!!

      Delete
  18. அய்யாடிக்கய்யாடியோவ்!!!

    என்னாவொரு பயண அனுவம்!!! என்னவொரு விவரிப்பு!!! என்னவொரு வார்த்தை ஜாலம்!! என்னவொரு ஹாஸ்யம்!!! என்னவொரு த்ரில்லிங்!!

    அந்தப் பிரளயத்தின்போது எடுத்த (எடுத்திருந்தால்) ஒன்றிரண்டு போட்டோக்களையும் இவிட போட்டிருந்தால் இன்னும் செமத்தியாய் இருந்திருக்கும் சார்!

    சமீபத்தில் படித்த எந்தொரு காமிக்ஸ் கதையையும் விட பரபரப்பாய் இருந்தது - உங்கள் சொந்த அனுபவங்கள்!!

    ஆவலோடு, திக்திக் இதயத்தோடு - அடுத்த பாகத்துக்காண்டி வெயிட்டிங்!!

    (சாமி.. கடவுளே.. 100 கமெண்டுக்கப்புறம் ஸ்ட்ரெய்ட்டாய் 300வது கமெண்ட் வந்திடணும் சாமி..)

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பிரளயத்தின்போது எடுத்த (எடுத்திருந்தால்) ஒன்றிரண்டு போட்டோக்களையும் இவிட போட்டிருந்தால் இன்னும் செமத்தியாய் இருந்திருக்கும் சார்..

      #₹###

      ஆனா பேசறதுக்கே போன் எடுக்க முடியலைன்னு ஆசிரியர் தடுமாறும் பொழுது எங்கே போட்டோ எடுப்பது செயலரே..:-(

      Delete
    2. (சாமி.. கடவுளே.. 100 கமெண்டுக்கப்புறம் ஸ்ட்ரெய்ட்டாய் 300வது கமெண்ட் வந்திடணும் சாமி..)

      #####

      அதுக்கு என்கிட்ட ஒரு அருமையான ஐடியா இருக்கு செயலரே...நூறு கமெண்ட் வரட்டும் பாருங்க...:-)

      Delete
    3. //சாமி.. கடவுளே.. 100 கமெண்டுக்கப்புறம் ஸ்ட்ரெய்ட்டாய் 300வது கமெண்ட் வந்திடணும் சாமி // நானும் வேண்டி கொள்கிறேன்

      Delete
    4. // சாமி.. கடவுளே.. 100 கமெண்டுக்கப்புறம் ஸ்ட்ரெய்ட்டாய் 300வது கமெண்ட் வந்திடணும் சாமி // அதே அதே

      Delete
    5. // அதுக்கு என்கிட்ட ஒரு அருமையான ஐடியா இருக்கு செயலரே...நூறு கமெண்ட் வரட்டும் பாருங்க...:-) // அது என்ன அகுடியா தலைவரே எனக்கு மட்டும் சொல்லுங்களேன்

      Delete
    6. //அந்தப் பிரளயத்தின்போது எடுத்த (எடுத்திருந்தால்) ஒன்றிரண்டு போட்டோக்களையும் இவிட போட்டிருந்தால் இன்னும் செமத்தியாய் இருந்திருக்கும் சார்!///ஈவி என் மனக் கண்ல தெரிது...முடில..நீங்களும் சிரிப்பூட்டடாதிய....நா ஆஸ்பத்ரி அட்மிட் ஆயிருவனோ.,,,.ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ...ஆம்புலன்ஸ் ௭ங்னப்பா,,,ஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
  19. இதை எல்லாம் ஏன் சி.சி யில் எழுத கூடாது என்று தான் போ.கு.விற்கு தெரியமாட்டேன் என்கிறது..:-(

    ReplyDelete
    Replies
    1. நானும் போராட்ட குழுவில் இணைகிறேன்

      Delete
    2. நானும் மெண்டலாக....ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ

      Delete
    3. ஸ்டீல் க்ளா வருகை

      பதிவு எண் :3×50 =150

      150 + 87 =237

      உப பதிவு விரைவில் என ஸ்டீல் பட்சி சொல்கிறது:-)

      Delete
    4. ஆசிரியர் பெரம்பால போடுவார்னூ பட்சி பதறுது

      Delete
    5. ஆசிரியர் பெரம்பால போடுவார்னூ பட்சி பதறுது

      ######

      பதறினாலும் பரவாலன்னு தாரைபட்சி பரபரக்குது.
      :-)

      Delete
    6. நானும் போராட்ட குழுவில் இணைகிறேன்

      #####

      எதிர் கட்சி தலைவரின் கனிவான கவனத்திற்கு..எங்கள் போராட்ட குழுவின் எண்ணிக்கை இரட்டைப்படையை தொட்டுவிட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்..

      Delete
    7. தலீவரே போராட்டக் குழுவின் அடிமட்டத் தொண்டனை மறந்துட்டீங்களா? புது ஜோடி கிடைச்சதும் என்னைக் கை கழுவீட்டிங்களே?

      Delete
  20. ////P.S : தயை கூர்ந்து இந்த நம்பராய்ப் போட்டு பின்னூட்ட எண்ணிக்கையினை ஏற்றும் போங்காட்டம் வேண்டாமே ப்ளீஸ் ? ////

    இதை நீங்க அடுத்த பதிவிலே போட்டிருக்கலாம் சார்...

    மாண்ட்ரியால் ஏர்போட்டில் அன்றிரவு உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிந்துகொள்ள உலகமகா ஆர்வத்துடன் இருக்கிறோம்!

    எனவே மேற்கூறிய உங்களது கோரிக்கை எங்களால் நிராகரிக்கப்படுகிறது! சிரமத்துக்கு மன்னிக்கவும்!!

    மதியம் நல்லா சாப்டுட்டு செமத்தியா ஒரு தூக்கம் போடுங்க.. முழிப்புத் தட்டியதுமே 'கம்பேனி ரூல்ஸ் படி' லேப்டாப்பை கையில் எடுத்துக்கிட்டு 'நண்பர்களே... வணக்கம்!'னு டைப்ப ஆரம்பிச்சுடுங்க!! சமர்த்தோல்லியோ!!

    ReplyDelete
  21. ///செல்போனிலிருந்த எங்கள் வீட்டு ப்ளம்பரின் நம்பரைத் தவிர்த்து பாக்கி சகலத்துக்கும் ஃபோன் போட்டு என் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டேன்!///

    இப்போ நான் வீட்டிலிருக்கிறேன் என்பதைக்கூட மறந்து 'கெக்கபிக்கே'ன்னு சிரிச்சுவச்சுட்டேன்! :)

    ReplyDelete
    Replies

    1. இப்போ நான் வீட்டிலிருக்கிறேன் என்பதைக்கூட மறந்து 'கெக்கபிக்கே'ன்னு சிரிச்சுவச்சுட்டேன்! :)//
      ஈ.வி நீங்க மட்டும் வீட்ல தனிய இருக்கறதுனால பிரச்சனை இல்லை.


      இல்லனா உங்க நிலைமையை நெனைக்கவே பயமா இருக்கு. சூதானமா இருங்க மக்கா.
      👊👊👊👊💥💥💥💥

      Delete
    2. என்னா தெகிரியம்....

      இருங்க ....தங்கச்சி ஊர்லருந்து திரும்புன ஒடனே போட்டு குடுத்துட்றேன்

      Delete
  22. வெண்பனியில் ஒரு பயணம். அடுத்த ஈரோடு ஸ்பெஷல் சிங்கத்தின் சிறுவயதில்பயணக்கட்டுரைத் தொகுப்பு. அறிவிப்பிற்க்காக ஆவலுடன் வெய்ட்டிங் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடமே சந்தா பாய்ண்ட் க்கு நான் ஒரு புத்தகம் கேட்டு இருந்தேன். அது எப்போது கிடைக்கும்

      Delete
  23. ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. Claw வந்து விட்டீர்களா

      Delete
    2. ஆம்...நண்பரே...ஆசிரியர் Mrபீன்தான்கிறேன்,,,பந்தயமா

      Delete
    3. நான் பந்தயதிற்க்கு வரவில்லை

      Delete
    4. இந்த முழுநீளச் சிரிப்பை பார்ட் பார்ட்டா பிரிச்சுப் போட்டிருந்தீங்கன்னா 300 கமெண்ட்ஸைதெ தாண்டியிருக்குமே ஸ்டீல்?!!

      ஆனாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை.. நீங்க வந்தாலே 300ஐ நெருங்கிட்டமாதிரிதான்!!

      எடிட்டர் சார்.. பேனாவுல இங்க்கை ஊத்தி ரொப்பி வச்சுக்கங்க சார்..
      எழுத ஆரம்பிக்கும்போது எங்களைக் கெட்டவார்த்தையிலேயே ரெண்டு திட்டு திட்டி மனசை லேசாக்கிட்டு எழுதுங்க.. ப்ளோ செமயா இருக்கும்!!

      Delete
    5. ஈவி வலிக்குது,,,போதும்,,,சிரிச்சா கண்ணீர் வருதே,,,செனாவதா பாக்கனுமோ,,,எனக்கு மெண்டலா,,,அல்சரா,,,,செனா தயவு செஞ்சு இந்த ஒருவாட்டி காப்பாத்துங்களேன்

      Delete
    6. கவிஞர் அய்யா!!!ஏதாவது பிரச்சனைங்களா.
      என்னாச்சு....

      Delete
    7. ஏப்பா க்ளா! ஏதும்........ வேணாம். ஒண்ணுமில்லே!

      Delete
    8. ஆமா ஒன்னுமில்லே கோபால்,,,ஒன்னுமில்லே

      Delete
    9. க்ளா @ அதெல்லாம் கெடக்கட்டும். நீர் சாத்து வாங்கின பூரிக்கட்டை எத்தினி துண்டா உடைஞ்சது! அதை மட்டும் சொல்லிடும்.!!

      Delete
  24. ஒங்க பதிவுலயே டாப் இதான்னு பட்சி பாடுது,,,,இன்னா லாவகமா எழுத்துக அமர்ந்து வசீகரிக்குது,,,,உங்க கூடவே சுத்துனா வவுறு அல்சர் வாங்கிடும் போல,,,,அந்த மெசின வாங்க மானிடோ வுதவுனாரா,,,,,வோ

    ReplyDelete
    Replies
    1. // இன்னா லாவகமா எழுத்துக அமர்ந்து வசீகரிக்குது, // நீங்க என்னா லாவகமாக எழுதுகிறீர்கள்

      Delete
  25. புத்தகம் உடூவியலோ இல்லலியொ...அந்த கார் பயணத்த போட்டே ஆகணு...ஆமா

    ReplyDelete
  26. இன்னிக்கு எதுவும் புத்தக முன்னோட்டம் இல்லையா ?????

    ReplyDelete
  27. Excellent travel Dairy. Please post remaining further

    Last month rating

    Tex - 8 / 10
    Modesty - 7 / 10
    Trent - 6 / 10
    Vanjam marapathillai - 4 / 10

    ReplyDelete
  28. தடதடக்கும் காமிக்ஸ் படித்த அனுபவம் இன்றைய பதிவில் கிடைத்தது. தீபாவளிக்குள் தீபாவளி மலர் எங்கள் கைகளில் கிடைக்குமா எடிட்டர் சாரே?

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே!தட நடக்கும் காமிக்ஸ் தான்!

      தீபாவளிமலர்ன உடனே 20வயசு பையன்களா மனசு துள்ளுது!

      Delete
    2. கண்டிப்பாக கிடைக்கும் என்று சிவகாசி பட்சி சொல்லுது நண்பரே..:-)

      Delete
  29. என்னவொரு எழுத்து நடை சார்,அபாரமான வர்ணிப்பு,ஒரு திகில் நாவலை வாசித்தது போல் உணர்வு எழுகிறது,பயங்கரமான அனுபவம்தான்........

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் சொன்னது போல் இதையே ஒரு நாவலாக போடலாம் போல,திகில் லைப்ரரி லிஸ்டில் பயணம் சார்ந்த பதிவுகளும் எதிர் காலத்தில் இடம் பிடிக்குமோ.......

      Delete
    2. முதல்ல சி.சிறு வயதில் லைப்ர்ரி க்கு போராடலாம் ரவி அண்ணே..திகில் லைப்ர்ரி அப்புறம் பாக்கலாம்..:-(

      Delete
    3. சி.சி.வ. போராட்டத்துக்கு முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் தலைவரே! வாழைப்பூ வடையாவது கிடைக்குதானு பார்ப்போம்!

      Delete
  30. நெனச்சேன் 9மணின்ன போதே ஏதோ இடிக்குதேனு, அதே மாதிரி...
    9மணிக்கு பதிவுனு தாங்கள் சொல்லியதால், கொஞ்சம் முன்னாடி வந்து பார்த்தா பதிவு போட்டு்9 மணி
    நேரம் ஆகுதே!!!!ஙே...ஙே...ஙே...ஙே...!!!

    எல்லா பக்கமும் போங்கு ஆட்டமா..!!!!
    ஓ மனிடோ!!!

    அப்ப சாயந்திரம் 9மணிக்கு ஒரு பதிவு போட்டு விடுங்க!
    வாக்கு மீறுவது ராபியாக மட்டுமே இருக்கட்டும்!

    2வாரமாக 9மணியை நோக்கியே ஓட்டம் இருக்கு!

    பதிவு ரொம்ப "சின்னமா" இருக்கு!
    ஒரு 9தோசை சாப்பிட்டாதான் தெம்பு வரும்.
    சரி,9நிமிடத்தில் படிச்சிட்டு வர்றேன்.

    ReplyDelete
  31. ஓய் போக்கு ஆட்ட ஸ்பெஷலிஸ்ட் குமாரு

    அது உமக்கு தான் சொல்றாரு எடிட்ரு...


    ஏன்னா பதிவு 185 ஆன ஒடனே நம்பர் போட ஆரம்பிச்சுடுவீர்ல...அக்காங்

    ReplyDelete
    Replies
    1. சரி தான் அண்ணா . ஹிஹிஹி

      Delete
    2. ஆனா உப பதிவும் இன்றே வேணுமே!!!!

      Delete
  32. சும்மா சிரிச்சி முடியல சார்....

    ReplyDelete
    Replies
    1. ஆமா... அவஸ்தையான நிகழ்வை விவரிக்கும் த்ரில்லிலும் சிரிக்க வெச்சுப்புட்டார்.

      Delete
  33. அடாத பனியிலும் விடாது வாழைப்பழம்.....

    ReplyDelete
  34. “ப்பூ… இவ்ளோ தானா ? நான் கூட இந்த பிரச்சனையை பெரிய பைட்டர்னு நினைச்சேன். ஆனால் கந்துவட்டிக் கோவிந்தன் தானாக்கும் ?” என்றபடிக்கே கட்டையைக் கிடத்தினேன் படா தெம்பாய் !//


    இதுதான் எடிட்டர் டச்.

    அங்க நிக்கறிங்க ஆசானே!!!
    அடுத்த எபிசோடும் உடனே உங்கள எழுத வைக்க சங்கத்துல ஏதாவது வழி இருக்கானு தலயும்,தளபதியும் சேர்ந்து அகுடியா பண்ணுவாங்கனு நெம்பறோம்.

    ReplyDelete
    Replies
    1. ///இதுதான் எடிட்டர் டச்.///---+200

      சரியாக சொன்னீங்க ஸ்ரீ!

      Delete
  35. Wow, இதுவரை கண்ணில் காணாத இடங்கள் மற்றும் காலச்சூழ்நிலைகள் குறித்த பதிவு ஆனால் உங்களுடனே சக பயணியாய் வந்த உணர்வு, அருமையான பயணக் கட்டுரை, கடுமையான சூழ்நிலைகளை அதன் தீவிரம் குறையாமல் ஆனால் நகைச்சுவையுடன் விவரிக்கும் பாங்கு, மணியனைப் போல ஒரு அருமையான பயணக் கட்டுரையாளராக நீங்கள் எழுதியுள்ளீர்கள், We are always fan of your hotline, waiting for many more travel articles from you sir

    ReplyDelete
    Replies
    1. /// We are always fan of your hotline, waiting for many more travel articles from you sir/// ---யெஸ்!!! வெல்செட் நண்பரே!

      30 ஆண்டுகளாக மாறாத ஒரே விசயம் இதுதான்! இன்னும் 30 ஆண்டுகளுக்கும் அதே ஆர்வம் தொடரும்.

      Delete
    2. வரிக்கு வரி வழிமொழிகிறேன்..!

      Delete
  36. இதுவரை அந்த விடியற்காலை 4மணியில் இருந்து நீங்க ஏர்போர்ட்ல பெட்டிய ரிட்டன் வாங்கியது வரை 9முறை படிச்சாச்சு சார்.



    ReplyDelete
    Replies
    1. மறுபடி படிக்காம இருக்க முடியலை!

      Delete
    2. அசாத்தியமான தில்தான் உங்களுக்கு!

      Delete

    3. மாண்ட்ரீயல் பனிப்படலம்! செமத்தியான த்ரில் அத்தியாயம்!

      Delete
  37. //..தீபாவளிக்கு மைசூர் பாகு செமையாய் அமைந்திருக்குடி அம்மு!‘ என்று நீங்கள் சிலாகிக்கும் பல சமயங்களில் – பாராட்டுக்களை வெறும் புன்சிரிப்புகளோடு மட்டுமே ஏற்றுச் செல்லும் மனையாளுக்குத் தான் தெரிந்திருக்கும் அது ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்ட அதிரசம் என்று!////

    ----- அந்த அதிரசம் எது?என தெரியனும்னா உப பதிவு வரணுமே!!! என்னவா இருக்கும்???

    ReplyDelete
    Replies
    1. மைசூர் பாக்கும் நல்லாத்தானே இருக்கு!!!

      Delete
    2. அதிரசமும் நல்லா இருக்கும் மைசூர்பாக்கும் நல்லா இருக்கும் டெக்ஸ்..ஆனா அதிரசத்தை மைசூர்பா எனவும் மைசூர்பாவை அதிரசமும் என மாற்ற வைத்ததில் தான் ஒரு "திடுக் சஸ்பென்ஸ் " ஒளிந்துள்ளது.
      :-)

      Delete
    3. சகதர்மிணிகள் நெனச்சா பூரி மாவுலயே சீனிப்பாகு ஊத்தி மைசூர் பாக் க விடாம பண்ணீடுவாங்கள்ல‌

      Delete
    4. ஆமா எத்தன பேரு வீட்ல மைசூர் பாக் அதிரச அதிசயம் இந்த தீபாவளிக்கு...

      Delete
    5. ஆமா தலைவரே கரெக்டா சொன்னீங்க!

      Delete
    6. J ji @ ஏகப்பட்ட தடவை மைசூர் பா சாப்பிட்டு இருப்பீங்க போல...!!! ஹி..ஹி..!!!

      பூரா பேத்துக்கும் ஜல்பு; சுவீட்டு காசு மிச்சமாயிடும் போல..!!!
      நமக்குத்தான் இருக்கவே இருக்கு லயன் தீபாவளி மலர் என்ற சுவீட்டு பாக்ஸே!

      Delete
    7. அதிரச மாவோட கேசரி பவுடர் சேத்து
      நெய் புட்டு கிளறினா மைசூர்பா

      Delete
  38. ///
    “வஞ்சம் மறப்பதில்லை…!” இந்தாண்டின் அட்டவணையினில் இடம்பிடித்த போதே இது குறித்ததொரு சன்னமான curiosity இருந்திருக்கலாம் – அந்த பெயிண்டிங் ரக சித்திர விளம்பரங்களைக் கண்டு!///

    ---- பெயிண்டிங் ஓவியங்கள் தூளாக இருக்கின்றன சார்.
    கதை தூக்கலாக தெரய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ???

    ReplyDelete
    Replies
    1. இந்த பெயிண்டிங் பாணியில் ஒரு சில டெக்ஸ் கதைகள் வந்திருக்கு போல!

      டெக்ஸ் இத்தாலிய ஃபேஸ்புக் பக்கங்களில் டெக்ஸ் மூங்கில் காட்டில் போவது போல பெயிண்டிங் ஓவியங்கள் அசத்துது!

      நம்ம லயன்ல டெக்ஸ் இந்த பாணியில் எப்ப வர்றார்??????

      மேக்ஸி பெயிண்டிங் செமயா இருக்கும்!

      Delete
    2. அப்ப அடுத்த ஆண்டுதான்...கடேசி...பயணி...அதான....இல்ல...இல்ல....அஃது ஸ்பைடருல்ல....அதுவுந்தே....இதுவூந்தே

      Delete
    3. கொலைப்படை கலரில் மேக்ஸியில்-- என் ஓட்டு!

      Delete
    4. இருவண்ணத்ல ஒரிஜினல்ல ஈயடிச்சான் காப்பியா விளம்பரம் கூட மாறாம அப்டியே உள்ளது மாறாம ...அப்டியே கொலைப்படையும்....வண்ணத் விண்வெளிப்பபிசாசு மேக்சில

      Delete
    5. யோவ் க்ளா! இரு வண்ணம்லாம் உப்ப படிக்க முடியாது. முழு வண்ணம் தான் கொலை படைக்கு அழகு!

      Delete
    6. தொடராக வந்த விண்வெளி பிசாசுக்கு என் ஓட்டு கண்டிப்பாக உண்டு..:-)

      Delete
    7. வண்ணம்லா பாத்துட்டுதான இரூக்கம்....சிறபபு மலர்னா வித்யாசம் வேணும்ங்கண்ணா...மாறுபட்டு நிக்கணுங்ண்ணணா...அதான. சிறப்பு....அதெல்லாஞ்சேரி....தோட்டடா தீராத டெக்ஸ் துப்பாக்கி கெடச்சாச்சி போல...

      Delete
    8. ஏ அஜக் டுமுக்
      டுமுக்கு அஜக்கு...

      அஜக்கு டுமுக்கு
      அஜக்கு டுமுக்கு
      அமுக்கேய்....


      ஏ குண்டு
      ஏ குண்டு
      ஏ குண்டு புக்கேய்....



      Delete
    9. ஆமா...துபாக்கி துருப்பிடிச்சி கெடந்துச்சி! உப்ப தான் க்ரீஸ் போட்டு லூஸான நட்டு போல்டுலாம் டைட்டு பண்ணி சிக் குனு கொடுத்துகிறாங்க...!!!!

      இனி டு..டு...டு...டு....டு..னு தோட்டா தீராத்...!!!

      Delete
    10. குண்டு புக்...ஏஏஏஏஏ...

      அஜக்கு இன்னா அஜக்குதான்!
      குமக்கு இன்னா குமக்குதான்!

      Delete
  39. ////திறந்திருக்கும் வாசல் வழியாய் பாரசூட் கட்டிக் கொண்டு ஸ்டைலாகத் தரையிறங்கப் போகிறோமா? அல்லது சணலை பாரசூட் என்று நம்பிய கையோடு,தொபுக்கடீரென்று உசரத்திலிருந்து குதித்து மூஞ்சி முகரையைப் பெயர்த்துக் கொள்ளப் போகிறோமா?- என்பதில் ஒரு கேள்வி தொடர்வதுண்டு///----

    இந்தாண்டு பாராசூட்கள்...

    பராகுடா-அலைகடலின் அசுரர்கள்.

    பராகுடா-இரத்த வைரம்.

    முடிவிலா மூடுபனி.

    பிஸ்டலுக்குப் பிரியா விடை.

    நித்தமும் ஒரு யுத்தம்.

    மேக்ஸி-பழிவாங்கும் பாவை

    மேக்ஸி-மனதில் உறுதி வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சணல் கயிறுகள்...,

      ஜெரமையா-பயணங்கள் முடிவதில்லை-சத்தியமாக முடியல!

      ஜானதன் கார்ட்லேண்டு-குளிர்காலக் குற்றங்கள்-கடும் சோதனை! ஆங்காங்கே கெளபாய் கதைகள்ல இருந்து பிச்சி எடுத்து சேர்த்தகலவை! 2013 ஆண்டுமலருக்கு இதை வெளயிட தாங்கள் அறிவித்து விட்டு அப்போது ஸ்கிப்பிங் செஞ்சது ஏன்னு புரிஞ்சது. ஸ் அப்பாடா!!!

      நீரில்லை நிலமில்லை--இதை போல மறுபடியும் வேற படிக்க தெம்பில்லை!

      Delete
    2. 50:50--- தனியொருவன்! இது பாராசூட்டாவும் இல்லாம, கயிறாவும் இல்லாம தொங்கிட்டு இருக்கு! அடுத்த வாய்ப்பில் பாராசூட்டாக மாறுமோ???

      Delete
  40. வஞ்சம் மறப்பதில்லை--இதுவும் பாராசூட்தான்.

    சேஃபானா சூட்!

    இரத்தபொறியல்- கதையிலாவது இருக்கேனு கொஞ்சம் குஷியாவே ரசிக்க முடிஞ்சது!

    ஆல்மோஸ்ட் எல்லா கி.நா.வும் பாஸ் எக்ஸப்ட் 1!

    பெஸ்ட் ஜானர் கி.நா.வாக மாறிட்டே வருது. தங்களது முயற்சிகள் கொடுத்த ரிசல்ட்; மேலும் விரிவடையட்டும் தேடல்கள்!

    ReplyDelete
  41. ///"உனக்கு விஷயமே தெரியாதா? பனிப் பொழிவு ராட்சஸ அளவுகளைத் தொட்டுத் தொடர்வதால் சகல ரன்வேக்களுமே புதைந்து விட்டுள்ளன! மான்டரியால் விமான நிலையத்தை ஒட்டுமொத்தமாய் மூடியாச்சு!///----+

    சில சமயத்தில் நியூஸ்ல இது போல் பார்க்கும் போது அதன் தாக்கம் புரிவதில்லை!

    தங்களது அனுபவங்கள்
    பனிப்பொழிவு எனும் ராட்ஸஸனையும் பனியின் பேயாட்டத்தையும் தெள்ளத் தெளிவாக புரியச் செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் பனிமூடியதால் பிரீமியர் லீக் போட்டிகள் கேன்சல் ஆகும்... அந்த பீல்டில பனியை அள்ளும் காட்சிகள் டிவியில் நமக்கு விளையாட்டாக தெரியும். பின்னணியில் உள்ள பயங்கரங்கள் இப்போது உணர முடிகிறது. வரும் வின்டர்ல அப்படி பார்க்கும் போது அந்த எமர்ஜென்சி டீமையும் அவர்களது வேலையையும் மரியாதையோடு பார்ப்பேன்.

      Delete
  42. ///
    தொடர்ந்த அந்த இரவு....வாழ்க்கையில் மறக்கவியலா ஒரு இரவு !! அது பற்றியும், இலண்டன் பயணம் பற்றியும், "வஞ்சம் மறப்பதில்லை" பின்னணி பற்றியும் தொடரக் கூடிய உபபதிவில் folks ! விரலில் தம் இல்லை இதற்கு மேல் பேனா பிடிக்க.. ; டைப்படிக்க !! ///

    --- ஓவ்... அடக்கடவுளே!
    முக்கியமான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே சார்...!!!

    அந்த நிகழ்வுகளை விரைவில் அறிய செய்யும் உப பதிவு,

    "ஒரு பனியிரவு படலம்."...த்தை காண திகிலோடு வெயிட்டிங்!!!

    ReplyDelete
    Replies
    1. நெம்பர் பார்டிக பாலகுமார் அடிச்சு விட்டுறுங்க இன்னிக்கி ஒரு நாளுக்கும்..!!! நானும் வர்றேன்!

      Delete
  43. ///ஒரு மனுஷன் எத்தனை தைரியசாலி என்பதையும் ; எத்தனை புருடாசாலி என்பதையும் அக்கக்காய் அலசித் தொங்கவிடும் ஆற்றல் இயற்கைக்கு உண்டென்பதை அந்த அதிகாலை எனக்கு கற்பித்துக் கொண்டிருந்தது ///

    Absolutely yes!!

    ReplyDelete
  44. 300

    ம்ம்ம்... ஆகட்டும்.. ஆகட்டும்..

    மிச்சத்தை கன்டின்யூ பண்ணுங்க சார்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார்...இந்த முறை மட்டும் லோட் மோர் வந்தாலே உப பதிவு என போராட்ட குழு முடிவெடுத்து உள்ளது சார்..

      எனவே...200 க்காக வெயிட்டிங் நியாயமான முறையிலேயே..:-)

      Delete
    2. குமாரு

      தீயா நம்பர் போடணும் குமாரு...


      நம்பர் தான் போடக்கூடாதுன்னாரு.


      எழுத்துத் எழுதீரும்.


      நூத்தி தொண்ணூத்தி ஒன்பது..


      இருநூத்தி பத்து.


      இருநூத்தி அறுபது....


      எதோ நம்மளால முடிஞ்சது.....

      Delete
    3. அதென்னமோ தெர்ல...

      ஞாபகம் வருதே ன்னு பாட ஆரம்பிச்சீங்கன்னா சூப்பர் ஹிட் ஆயிடுது சார்...

      Delete
    4. 172தானே வந்திருக்கு! லோடு மோரே காணோமே!

      ம்...சரி புடிங்க ஒரு 20கமெண்ட்!

      Delete
    5. சார்,

      ஈ தீபாவளி மலர் பாக்ஸில் ரவுண்டு பன்னும் உண்டு தன்னே....

      ஆயாள் 5 ஸ்டார் சாக்லேட்...ஓல்ட் ஸ்டைலாயிண்டே

      Delete
  45. டெக்ஸ் வில்லர் பற்றிய அருமை பெருமைகளை வெளியுலக நண்பர்களுக்கு எடுத்து சொல்ல அருமையான வாய்ப்பு போன மாசம் கிடைத்தது.

    கனலி- கலை இலக்கிய இணைய இதழிலின் ஆகஸ்ட் 2019 பதிப்பில் வெளியானது.

    தமிழ் காமிக்ஸ் உலகின் "தல" டெக்ஸை பற்றி எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை எனில் முழுமை பெறாதே....!!!!

    பெருவாரியான டெக்ஸ் ரசிகர்களுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. """"டெக்ஸ் வில்லர்"""""

      கெளபாய் அமெரிக்கா கி.பி.1800களில்......!!!!

      ---சுட்டெரிக்கும் பாலைவனங்கள்,

      ---தகிக்கும் பாறை முகடுகள்,

      ----உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர்,

      Delete
    2. -கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள்,

      ----சுரங்கத்திலே தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும் தங்கவேட்டையர்கள்,

      ----மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள், அவர்களின் ஆதிகால பழக்க வழக்கங்கள்,

      ---தலைவிரித்தாடும் நிறவெறி,

      Delete
    3. ----நியாயம் என்றால் விலை கிலோவிற்கு எத்தனை டாலர்கள் என கேட்கும் முரடர்கள்&போக்கிரிகள்,

      ----அதே முரட்டு கரங்களை கொண்டு இவர்களை அடக்கும் ஷெரீப்புகள், மார்ஷல்கள், ரேஞ்சர்கள், என்ற கலவையான சூழலைக் கொண்டது!

      Delete

    4. *ஒன்றறை நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்த கெளபாய் உலகை ஆவலோடு அள்ளிக்கொண்டு விட்டனர் ஐரோப்பிய கதாசிரியர்கள்! வன்மேற்கு என பெயரிட்டு எண்ணிலடங்கா கெளபாய் காமிக்ஸ் கதைத்தொடர்களை படைத்தனர்.

      Delete

    5. *150நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியே நமக்கு மறந்து விடுகிறது. சுமார் 150வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களை தத்ரூபமாக நம்முன் விவரிக்கும் கெளபாய் கதைகள் மனதை மயக்கும் தங்க சுரங்களாக மிளிர்கின்றன! அந்த நாயகர்களோடு மற்றொரு குதிரையில் நாமும் பயணிப்பது போன்ற பிரமிப்புக்கு உள்ளாக்குகின்றன அந்த கதைகள்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete

    7. *புற்றீசல் போலப் புறப்பட்டு பலநூறு கெளபாய் தொடர்கள் இந்த வன்மேற்கின் வஞ்சக ஆடுகளங்களில் அனல் பறத்தின. அசாதாரண வில்லன்கள், அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் சமயோசித யுக்திகள் என வளைய வரும் கெளபாய்கள் அழகு தமிழ் பேசினர்; 1980களில் தொடங்கி இன்றுவரை பல கெளபாய் தொடர்களை வெற்றிகரமாக வெளியிட்டு வருகிறது லயன் காமிக்ஸ்!

      Delete

    8. #டெக்ஸ் வில்லர்

      #லக்கிலூக்

      #ப்ளூபெர்ரி

      #டியூராங்கோ

      #கமான்சே

      #பெளன்சர்

      ----போன்ற பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் வெளியாகி வரும் பல கெளபாய் தொடர்களை தமிழ் மொழியில் உரிமம் வாங்கி தன்னுடைய நேர்த்தியான மொழிபெயர்ப்பில் வெளியிட்டு வருகிறார் லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு S.விஜயன். இரும்புக்கை மாயாவியை தமிழில் கொண்டுவந்த முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு M.செளந்திரபாண்டியன் அவர்களின் புதல்வர் இவர்.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. *இத்தனை தொடர்கள் தமிழில் வெளியானாலும் தனக்கென தனிமுத்திரை பதித்து தமிழ் காமிக்ஸின் நெ.1 இடத்தில் தற்போது கோலோச்சிவருபவர் சாட்சாத் டெக்ஸ் வில்லரே!

      Delete

    11. *தைரியம், வீரம், துணிச்சல், நேர்மை, நடுநிலையான நீதிதன்மை, நட்புக்காக தன் உயிரையும் பணயம் வைக்கும் அசாத்திய குணநலன்கள் என ஐடியல் மனிதராக இருப்பதே டெக்ஸ் வில்லரை தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் தம் நெஞ்சுக்கு மிக அருகே வைத்து ரசிப்பதற்கு தலையாய காரணங்கள்.

      Delete
    12. *செவ்விந்தியர் நலனைக் காக்கும் இனவாதம் சற்றும் இல்லாதவர்தான், பிறப்பால் வெள்ளையரான ரேஞ்சர் அதிகாரி டெக்ஸ் வில்லர். செவ்விந்திய பழங்குடிகளில் ஒன்றான நவஹோ இன தலைவரின் பெண் லிலித்தை கைப்பிடித்து காதலிக்கும் டெக்ஸ், பின்னாளில் அவர்களுடைய ஒப்பற்ற தலைவராக மாறுகிறார்

      Delete

    13. *இரவுக்கழுகு என நவஹோ மக்கள் அவரை அழைக்கின்றனர். வெள்ளையர்களின் மேற்கே பரவலால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நவஹோக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் உரிமையை நிலைநாட்டும் நாயகராக இருக்கிறார் டெக்ஸ் வில்லர்.

      Delete
    14. *நமக்கு பரிட்சயம் இல்லாத புதிய உலகம் தான் கெளபாய் பிரதேசம். அங்கே செவ்விந்தியர் வாழ்வின் போராட்டங்கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தூண்டும்.
      எத்தனை பிரச்சினைகள் இருக்கும் போதும் ஒரு டெக்ஸ் வில்லர் கதை படிச்சம்னா மனசு இலகுவாகிடும்.

      Delete

    15. *ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஹூரோயிசத்துக்கு தீனி போடுது இந்த டெக்ஸ் வில்லர் கதைகள்! அவர் ஆநீதியை தட்டி கேட்பது நாமே அதை செய்வது போன்ற ஆத்ம திருப்தியை தரும். சோர்ந்து போன உள்மனம் குதூகலிக்கும். இந்த குதூகலமே திரும்ப திரும்ப டெக்ஸ் வில்லர் கதைகளைப் படிக்கத் தூண்டுகோள்.

      Delete

    16. *எளியவர்களைக் காக்கும் குணநலனை டெக்ஸ் வில்லரது பலகதைகள் கற்றுத்தருகின்றன.
      ஒவ்வொரு முறை எளியவர் மீது அடக்குமுறை கட்டவிழும் போதும் டெக்ஸ், "ஆட்டு மந்தையில் புகுந்து இரத்தவெறி பிடித்து அலையும் ஓநாயை விட்டு விட முடியுமா?" என கர்ஜித்து எழுந்து அநீதையைக் களைவார்.

      Delete
    17. *ராணுவமே என்றாலும் அத்துமீறும்போது தட்டிக்கேட்பது டெக்ஸ் வில்லரின் இயல்பு! பலமுறை இராணுவத்துடன் மோதி, தன்னுடைய சமயோசித யுக்திகள் மூலம் சின்னஞ்சிறு நவஹோ படையைக் கொண்டே அவர்களை முறியடித்து உள்ளார். அத்தகைய கதைகளைப் படிக்கும்போது தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்!

      Delete
    18. *கோழையையும் வீரனாக்கும் கிளர்ச்சி ஊட்டும் இவரது கதைகள். அடாவடிக்கு அதே ஸ்டைல்ல பதில் தருவது இவரது ஸ்பெசாலிட்டி!

      Delete

    19. *வீணாக ஒரு உயிரையும் கொல்வதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒற்றைக்கு ஒற்றை சவாலில் எதிராளியைக் கொல்வது 19ம் நூற்றாண்டு அமெரிக்க சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இதைப்போன்ற பல நுணுக்கமான விசயங்களை இந்த கதைகளில் இருந்து அறியலாம்.

      Delete

    20. *செவ்விந்தியர் உரிமைகளை காக்கும் அதேசமயத்தில், வெள்ளையர் உயிர்-உடமை காக்கும் நடுநிலையோடு நடப்பது டெக்ஸ் வில்லரின் தனிச்சிறப்பு.

      Delete

    21. *கருப்பு குதிரையில் ஆரோகணித்து வரும் வாலில்லா குரங்கு(?) இரவில் தனியாக பயணம் செய்பவர்களின் தலையை வெட்டி கையில் கொடுத்து விடுகிறது. அது பேய் என்பதான மர்மத்தை டெக்ஸ் வில்லர் விடுவித்து, அந்தப் பகுதியில் நிலவும் மூடநம்பிக்கைகளை தகர்ப்பார். பல கதைகளில் இதுபோன்ற அமானுஷ்ய மர்மங்களின் புதிரை விடுவிப்பார்.

      Delete

    22. *அந்நாளைய அமெரிக்க சட்டப்படி செவ்விந்தியர்களுக்கு துப்பாக்கி விற்பது கடும் குற்றம். அங்கே நிலவும் கொஞ்ச நஞ்ச சமாதானத்தை இந்த கள்ளவியாபாரிகள் தம் சுயநலத்திற்காக சீர்குலைப்பர். அவர்களை டெக்ஸ் வில்லர் இராணுவத்துடன் இணைந்து கூண்டோடு அழித்து சட்டத்தைநிலைநிறுத்தவார். அரசாங்க விருது டெக்ஸுக்கு கிடைக்கும் என சொல்லும் இராணுவ அதிகாரிகளிடம், "பாராட்டுக்காகவோ-மெடலுக்காகவோ நான் இங்கே வரவில்லை இரத்த வியாபாரிகளைக் கண்டால் எனக்கு பிடிக்காது அவ்வளவுதான்"- என உயிர்ப்பாக சொல்லி செல்வார்.

      Delete

    23. *நிறவெறியில் ஊறிப்போன சமுதாயத்தில் அதை எதிர்த்து குரல் கொடுப்பது டெக்ஸ் வில்லரின் தனிப்பண்பு. நிறவெறியை அறவே வெறுக்கும் டெக்ஸ் வில்லர் பல கதைகளில் கறுப்பின மக்களை காப்பார். எல்லோரும் சமம் என்பது இவரது கதைகள் போதிக்கும் சமூக நீதி!

      Delete

    24. *டெக்ஸ் வில்லர் கதைகள் படிப்பது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே அல்ல! இலகுவானதும் கூட. ஆத்ம திருப்தி. மனசுக்கு நிம்மதியும் புத்துணர்வும் தரும்.

      Delete

    25. *என்னுடய வாசிப்பில் அறிவியல் கட்டுரைகள், வரலாற்று நூல்கள், சரித்திர நாவல்கள், சித்திரக்கதை என பரவலாக இருந்து வருகின்றன. சித்திரக்கதை சற்றே அதிகமாக இப்போதெல்லாம் படிக்கிறேன். அது எனக்கான உலகம். அங்கே நான் நுழைந்துவிட்டால் ஒரு சிறுகுழந்தையாக மாறிவிடுகிறேன். கார்டூன் படிக்கும் போது நான் ஒரு சிறுவன். கெளபாய் படிக்கையில் நானும் ஒரு வன்மேற்கு வீரன். துப்பறியும் கதைகள் படிக்கும் போது நான் ஒரு தேர்ந்த டிடெக்டிவ். பேன்டசி கதைகள் படிக்கும் போது நானும் வேறுவித வெளியில் பறப்பேன். மொத்தத்தில் எல்லா கவலையும் மறக்கச் செய்யும் கனவுலகம் அது.

      Delete

    26. *தமிழில் சரிவர எழுத படிக்க இந்த சித்திரக்கதை எனும் காமிக்ஸ் பழக்கம் வெகுவாக உதவுகிறது. மழலைகள் தாய்மொழியில் சரளமாக தேர்ச்சி பெற வேண்டுமானால் சித்திரக்கதை படிக்க வைப்பது சிறந்த வழி.

      ---சேலம் TeX விஜயராகவன்.

      Delete
  46. நம்பர் போடாதீங்கன்னு சொன்னதாலா..ஹஹ வா

    ReplyDelete
    Replies
    1. கிட்@ அப்படியும் வெச்சிக்கலாம்..

      Delete
  47. தமிழ் மொழியில் காமிக்ஸ் படிப்பதே சுகம்.

    1973களில் ஆரம்பித்த இந்த அருமையான பொழுதுபோக்கு இப்போது நிரந்தரம்.

    அப்பாவுக்கு பயந்து பயந்து படிப்பேன்.

    இப்போது என் மகனுக்கு நானே படிக்கத் தருகிறேன்.

    பாடப்புத்தகங்களில் ஒளித்து வைத்து படிக்க வேண்டியிருந்தது.

    இப்போது என் பிள்ளைகளுக்கு தைரியமாக படி என்று மன்றாட வேண்டியிருக்கிறது...

    அப்போது ஒரு ரூபாய்.

    இப்போது ஒரு நூறு ரூபாய்.

    ReplyDelete