Powered By Blogger

Sunday, November 19, 2017

மீண்டும் கோட்டைச்சாமி !

நண்பர்களே,

வணக்கம். 2012-க்குப் பின்பான நமது ஒவ்வொரு இதழோடும் ஏதேனுமொரு ஞாபகம் தீர்க்கமாய் எனக்குள் அடையாளமாய் ஒட்டித் தொடர்கிறது என்பேன் ! துவக்க காலத்து நினைவுகள் - ஆயுட்கால நினைவுகள்  என்பதற்கு அடுத்த இடத்தை கடந்த 5+ ஆண்டுகளின் அனுபவங்கள் கெட்டியாய்ப் பிடித்து நிற்கின்றன !  சென்னையின் ஒரு அடைமழை நாளை பராக்குப் பார்த்துக் கொண்டே “என் பெயர் லார்கோ”வை எடிட் செய்தது ; ஆளரவமிலா ஒரு நிசப்த ஞாயிறு முழுக்க “கான்சாஸ் கொடூரனின்” பணிகளில் செலவிட்டது ; ஒரு அமெரிக்கப் பயணத்தின் போது 2014-ன் அட்டவணைக் கதைகளுக்கெல்லாம் பெயர்கள் தேர்வு செய்தது ; ஜெர்மனியின் கலோன் தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து LMS-க்கான costing போட்டுப் பார்த்தது ; ஈரோடு செல்லும் ரயிலில் “இரவே... இருளே... கொல்லாதே”யின் மொழிபெயர்ப்பை படித்துச் சென்றது ; தாம்பரத்தின் பிளாட்பாரத்தில் அமர்ந்து “மின்னும் மரணம்” எடிட்டிங்கோடு மல்யுத்தம் பண்ணியது – என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! So “சிங்கத்தின் தலை நரைத்த வயதில்” என்ற பகுதியினை என்றைக்கேனும் எழுதுவதாகயிருப்பின் – நிச்சயமாய் நினைவுகளுக்கோ; எழுதச் சமாச்சாரங்களுக்கோ பஞ்சமிராது என்றமட்டிலும் நிச்சயம் ! அந்த நினைவுப்பேழைச் சமாச்சாரங்களின் பட்டியலில் இந்த டிசம்பரின் கமான்சே இதழுமே நிச்சயமாய் இடம் பிடிக்குமென்பேன் !

ஏராளமான மற்ற பணிகளுக்கு மத்தியில் – நமது காமிக்ஸ் சார்ந்த வேலைகளைப் பூர்த்தி செய்திட நாக்குத் தொங்க முயற்சித்திருக்கிறேன்...! ஒரே நேரத்தில் ஏகப்பட்ட இதழ்களை இழுத்து விட்டுக் கொண்டு விழி பிதுங்கத் திக்குமுக்காடிய அனுபவமும் உள்ளது! ஆனால் மொத்த மண்டையும் முற்றிலுமாய் வேறொரு திக்கில் லயித்து நிற்கும் போது - ஒரு சிரமமான இதழோடு ஐக்கியமாக முயற்சிப்பதென்பது எத்தனை முதுகு பழுக்கும் முஸ்தீப் என்பதைக் கடந்த வாரமானது எனக்குக் காட்டியுள்ளது ! கமான்சே கதைத் தொடரினில் பணியாற்ற கதாசிரியர் க்ரெக் தயாராகிய தருணத்தில் நிச்சயமாய் ஏதோவொரு மெகா தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் – இந்தத் தொடரின் ஸ்கிரிப்ட்களும் சரி ; வசனங்களும் சரி, ஒரு சராசரியான கௌ-பாய் தொடருக்கான template-ல் இருந்திடவே கூடாதென்று ! கேப்டன் டைகர் கதைகளில் ஆழம் இருக்கும்! ஆனால் வரிகளில், சம்பாஷணைகளில் ஜாலியான கௌபாய் வாடை தான் தெறிக்கும் ! டெக்ஸ் கதைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம் - நேர்கோட்டுக் கதைகள்; குற்றால நீரோடை போலான ஸ்கிரிப்ட் ! ஆனால் கமான்சே கதையின் நெடுகிலும் ரொம்பவே மாறுபட்டதொரு பாணி அமலில் இருக்கிறது ! இவற்றை பிரெஞ்சில் நேரடியாய் படித்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நான் எழுதுவதன் பொருள் நிச்சயமாய் இன்னும் ஒரு படி கூடுதலாய்ப் புரிந்திருக்கும்! ஒருவித தத்துவார்த்தப் பார்வையோடு –வாழ்க்கையின்  அனுபவப் பாடங்களை ரெட் டஸ்ட் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளும் விதமாய் ஸ்கிரிப்ட்டை வடிவமைத்திருப்பதாக எனக்கு நிறைய முறைகள் தோன்றியதுண்டு ! அது மாத்திரமின்றி – நேர்மறையான வசனங்கள் என்பதற்குப் பதிலாய் மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறை எழுத்து பாணிக்கே இங்கே க்ரெக் ‘ஜே‘ போட பிரயத்தனப்பட்டிருக்கிறார் !

இவன் எங்க சித்தப்பாரு சிங்காரவேலுவின் சின்னப் பேராண்டி மொட்டையப்பன்” என்று சொல்வது வழக்கமான பாணியெனில்,

இவன் எங்க பெரியப்பாவின் ஒன்று விட்ட தம்பியின் மூத்த பிள்ளையின் மகள் வழியில் பிறந்த இளவல்களுள் மூத்தவரல்ல” - என்ற ரீதியில் சொல்ல முற்படுவது ‘கமான்சே‘ ஸ்டைல்!

சத்தியமாய் இந்தத் தொடரின் கதைகளை பிரெஞ்சிலிருந்து  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்குள் முழி பிதுங்கியிருக்கும் நமது பிரெஞ்சு எழுத்தாளருக்கு ! And அதனை தமிழாக்கம் செய்வது - நல்ல நாளைக்கே காளை மாட்டின் மடியில் Cavin’s மில்க் ஷேக்கைக் கறக்க முயற்சிப்பதற்கு சமானம் ; இந்த அழகில் கையும், பையும் திருமண அழைப்பிதழ்கள் நிறைந்திருக்க – அவற்றோடு ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கும் கமான்சேவை தேற்ற முற்பட்டது சத்தியமாய் மறக்க இயலா பல நாட்களை நல்கியுள்ளது எனக்கு !

“கல்யாணத்துக்கு அவசியம் வந்திடுங்க !” என்று சொல்வதற்குப் பதிலாய் ரெட் டஸ்டும், மார்க் ஆப் மூனும் பேசும் டயலாக் எதையாவது எடுத்து விட்டுத் தொலைத்து விடுவேனோ? என்று அநேக வீடுகளில் பதறியிருக்கிறேன் ! கதைநெடுக ஒருவித மெலிதான சஸ்பென்ஸ் விரவிக் கிடக்க, ‘அட... அந்த வில்லன் யாராக இருக்கும் ?‘ என்ற யோசனையோடே – ஒரே தெருவை குறுக்கே ஒரு தபாவும், நெடுக்கே ஒரு தபாவும் சுற்றவும் செய்திருக்கிறேன் ! இத்தனை கூத்துக்களோடு,  ஒரு வழியாக 2 நாட்களுக்கு முன்னதாக ”ஓநாயின் சங்கீதம்”ஒரு மாதிரியாய் முற்றுப்பெற்ற போது - எனக்கு மாங்கு மாங்கென்று தலையைச் சொரிந்து கொள்ளத்தான் தோன்றியது! வழிநெடுக யதார்த்த மாந்தர்களையும், அவர்களது பிழைபட்ட சிந்தைகளையும் சித்தரிப்பதில் இத்தனை மெனக்கெட்ட கதாசிரியர் – கதையின் ஆழத்திற்குமென இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் முனைப்புக் காட்டியிருந்தால் இந்தத் தொடர் தொட்டிருக்கக் கூடிய உயரங்கள் இன்னமும் பன்மடங்காகியிருக்குமே என்ற ஆதங்கம் என்னுள் ! 

இதே கதாசிரியர் – ஓவியர் கூட்டணியின் smash hit தொடரான கேப்டன் பிரின்ஸ் கதைகளுமே இதே மாதத்திற்கென தற்செயலாய் அமைந்திருக்க – கமான்சேவிலிருந்து அவ்வப்போது கடல்களின் காதலரை நோக்கியும் ‘ஜம்ப்‘ பண்ணிட சாத்தியமானது ! தெள்ளத் தெளிவான கதைகளையும், அட்டகாசமான கதைக்களங்களையும், அழகான கலரில் பார்க்கும் போது – கடல் காற்றை நெஞ்சு நிறைய நிறைத்துக் கொண்ட சந்தோஷம் கிட்டியது! And அது சார்ந்த ஒரு ஜாலி சேதியுமே : 

போன வாரம் அறிவித்ததுபடி - “கமான்சே; ஸ்மர்ஃப் & மாயாவி” என்ற 3 இதழ்கள் மாத்திரமே டிசம்பரின் (முதல் கட்ட) கூரியரில் என்ற தீர்மானம் எனக்கே அத்தனை சுகப்பட்டதாகப்படவில்லை! நம்முள் ஒரு அணி ‘no cartoons’ என்ற கொடி பிடிப்போர் கொண்டது ; அதிலும் ‘no smurfs’ என்ற உபகொடியும் உண்டு என்பதில் இரகசியங்கள் லேது ! அதே போல மாயாவி மாமாவை நூற்றியெட்டாவது தடவையாக ரசிக்க சொற்பமான திடமனதுக்காரர்களுக்கே சாத்தியமாகும் என்பதும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது ! So ஆண்டின் இறுதி மாதத்துக் கூரியரில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் தங்கிட வேண்டுமென்ற ஆதங்கம் தலைதூக்கியது ! பிறகென்ன...?

”கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்” பணிகள் இன்னொரு பக்கம் முழுவீச்சில் ஓடத் துவங்கியுள்ளன ! பாருங்களேன் இந்த க்ளாசிக் மறுபதிப்புக் கதைகளின் வண்ணப் பக்கங்களை:


தொடரும் நாட்களில் அச்சுப் பணிகள் நிறைவுற்றிடும் & அட்டைப்படம் ஏற்கனவே தயார் என்பதால் பைண்டிங்குக்கென அவகாசம் தந்தால் போதும் – இம்மாத கூரியரில் பரட்டைத்தலை பிரின்சுமே இடம் பிடித்து விடுவார்! And of course – பிரின்ஸோடு நீங்களுமே இருக்கிறீர்கள் என்பதால் இந்தக் கூரியர் சார்ந்த சுவாரஸ்ய மீட்டர்கள் நிச்சயமாய் உயரே சென்றிடும் என்பதில் ஐயமில்லை எனக்கு ! உங்களில் ஒரு அணி : "சை...எனக்கு எதிர்பார்ப்பை வளர்த்து  ஸ்டிக்கர் அல்வா வாங்குவதே பிடிக்காது !" என்று ஓரமாய்த் திரும்பி நின்று முகத்தைச் சுளிப்பதும் ; இன்னொரு அணி - "என்னத்தே பிரிண்ட் பண்ணி..என்னத்தே தந்தே போ !" என்று உச்சு கொட்டுவதும் சாத்தியமே என்பது புரிகிறது ! மூன்றாவது அணியோ - "அவசரமாய் இப்போதே செய்து மறுக்கா சொதப்ப போறே போ !" என்று நாஸ்ட்ரடாமஸ் ஆரூடங்கள் சொல்லவும் கூடும் என்பதும் புரிகிறது !   But கூரியரை உடைக்கும் போது அத்தனை அணிகளுக்குள்ளுமே கொஞ்சமே கொஞ்சம் பரபரப்பின்றிப் போகாது  என்ற நம்பிக்கையுள்ளது எங்களுக்கு !

திரும்பவும் ஒரு தபா சாத்து வாங்கத் தயாராகிக்கோப்பா‘ என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ்கள் தெளிவாய் ஒலித்தாலுமே- ‘முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டான் இந்தக் கோட்டைச்சாமி‘ என்பதும் நீங்கள் அறிந்தது தானே? எனக்குள்ளேயும் ஒரு உம்மணாமூஞ்சி smurf கைகட்டி நின்று கொண்டு - "ச்சை...எனக்கு சாத்து வாங்கவே புடிக்காது !" என்று முறைத்தாலுமே, இன்னொரு பக்கம் - "ஹை....மறுக்கா சவாலைச் சந்திக்கவொரு வாய்ப்பு !" என்று குதூகலிக்கும் ஒரு  ஜாலி smurf-ம் உண்டு ! தினமும் எதையேனும் படிப்பதில் சுவாரஸ்யங்கள் ஒரு நூறெனும் பொழுது - சறுக்கல்களையும் சவாலாய் ஏற்றுக் கொள்வதன் த்ரில் அலாதி தானே ?!  So டிரவுசரை இறுக்கமாய் மாட்டிக் கொண்டு மாடிப்படியேறிடத் தயார் ஆகிவிட்டார் - this கவுண்டரின் சிஷ்யன் ! தலைகீழாய் கோட்டைச்சாமி சம்மர் அடிக்கக் காத்துள்ளேனா ? சில்லுமூக்கு சின்னாபின்னமாகக் காத்துள்ளதா ? விடைகாண வாரங்கள் இரண்டே !! 

டிசம்பரின் மறுபதிப்புத் துணை இதழான “மர்மத் தீவில் மாயாவி”யின் அட்டைப்படம் இதோ – நமது ஓவியரின் கைவண்ணத்தில் ! சமீப மாயாவி ராப்பர்களுள் இதுவொரு அழகான ஆக்கமாய் எனக்குத் தோன்றியது ! அப்புறம் இந்தக் கதைக்கு நான் டீசரெல்லாம் போட்டால் ஊற வைத்தே சாத்துவீர்கள் என்பது உறுதி ! அதற்குப் பதிலாக – ‘இது எத்தினியாவது தபா வரும் மறுபதிப்பு ?‘ என்ற கேள்விக்கு உங்களைப் பதில் சொல்லக் கோருவது உருப்படியான வேலையாக இருக்கும் என்பேன்! Anyways – one last time என்ற வகையில் மர்மத் தீவில் மாயாவி செய்திடும் சாகஸங்களை ரசித்துக் கொள்வோமே ?

அப்புறம் போன வாரத்துப் பதிவில் “ஒரு பரிச்சயமான ஜோடி மறுவரவு கண்டிடத் தயாராகி வருகிறது – புதுப் பொலிவுடன்” என்று சொன்னது நினைவிருக்கலாம் ! "அது அவர் தான்; இவர் தான் !" என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்குப் பலர் சென்றிருந்ததையும் பார்த்தோம் ! அட... அவ்வளவு மெனக்கெடுவானேன் – simply becos காத்திருப்பதே அவர் தானே என்று உரக்கக் கூவணும் போலிருந்தது எனக்கு  ? என்ன – இன்னமும் புரியவில்லையா?

முழுவண்ணத்தில்; புதுப்பொலிவுடன் அட்டகாசமாய் மறுபடியும் ஆஜராகவிருப்பது நமது ஹெர்லெக் ஹோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தான் ! நொடியில் நூறு மாறுவேடங்களைப் புனைந்து – நூற்றியெட்டு மர்மங்களை ‘மளமள‘வென்று முடிச்சவிழ்க்கிறேன் பேர்வழி என நமது விலா எலும்புகளை நோகச் செய்திடும் இந்தக் காமெடிக் கூட்டணி தற்போது ஐரோப்பாவில் சக்கைபோடு போட்டு வருகிறது ! வண்ணத்தில்  புதுக் கதைகள் + பழைய கதைகள் என்ற கூட்டணியில் இவை கலக்கி வருகின்றன ! எப்போதுமே எனக்குப் பிரியமான இந்தத் தொடரினை மறுபடியும் தமிழுக்குக் கொணர கொஞ்ச காலமாகவே முயற்சித்துக் கொண்டிருந்தேன் ! ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் அதற்கு பலன் கிட்டியிருக்க, இதோ – மினுமினுக்கும் வண்ண டிஜிட்டல் பக்கங்கள் நம் கையில் !

விடைபெறும் முன்பாய் இன்னமும் ஒரு டீசர் :

ஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ? விடை விரைவில் !! அதுவரை உங்கள் யூகங்களுக்கு வேலை தந்திடலாமே guys ? 

இப்போதைக்கு விடை பெறுகிறேன் guys - நீலப் பொடியர்களோடு ஐக்கியமாகிட !! ! See you around soon ! Have a cool Sunday ! 

206 comments:

  1. Replies
    1. இரவு வணக்கம் மகேந்திர பாகுபலி ஜி

      Delete
    2. வணக்கம் செந்தில் ஜி.

      Delete
  2. கொலைகார கானகம் டீசர் அசத்தலோ அசத்தல்

    ReplyDelete
  3. மாயாவி யின் அட்டைப்படம் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  4. Replies
    1. ஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ? விடை விரைவில் !! Norman than avar

      Delete
  5. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
    Replies
    1. // ஏற்கனவே பரிச்சயம் ஆனவர், ,வெட்டு ஒன்னு. ...//

      ஹய்யா. ....அது வேறு யாரும் இல்லை. .......




      அது நம்ம்ம இளவரசியேதான்


      உய்ய்ய்ய்.......... (விசில் சத்தம் தான். )

      Delete
  6. /முழுவண்ணத்தில்; புதுப்பொலிவுடன் அட்டகாசமாய் மறுபடியும் ஆஜராகவிருப்பது நமது ஹெர்லெக் ஹோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தான் ! // ஹைய்ய்ய்ய்யா.... ! எத்தனையோ தடவை இவர்கள் பற்றி இங்கே எழுதியும், 'இவரைக் கொண்டுவர இயலாதா?' என்று கேட்டுப்பார்த்தும் அசையாத நீங்கள், இப்போதாவது ரேடாரைத் திருப்பினீர்களே... ஆக, வேதாளருக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தால் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை இந்தக் கூட்டணியின் மீள்வருகை அதிகமாக்கியிருக்கிறது. நன்றி சார்!!!

    ReplyDelete
  7. அட்டைப் படங்கள் அருமை.. பார்த்துக்கொண்டே இருக்கிறேன்... பிரின்ஸ் வண்ணத்தில் அடடா அப்பப்பா அள்ளுகிறார்..

    ப்ளாக் & ஓய்ட்டில் யாராக இருக்கும்... மறுபடி மோட்டுவளையை பார்க்கும் படங்கள் பத்து...

    ReplyDelete
  8. From January 1st, 2017
    Edi: ஹெர்லக் ஷோம்ஸ் :

    ஷெர்லக் ரேடாரில் இடம்பிடித்திருக்கும் போது - ஹெர்லக் தொலைவில் இருப்பாரா - என்ன ? இந்தக் கார்ட்டூன் / காமெடி டிடெக்டிவ் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது ‘90-களின் லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு நினைவிருக்கும் ! பெர்சனலாக நான் இந்த 'உட்டாலக்கடி நாயகருக்கொரு' பெரிய ரசிகன் ! இவரது கதைகளுக்கு வர்ணங்கள் தீட்டி, கலரில் தகதகக்க விட்டுள்ளனர் ! ஆனால் ராயல்டித் தொகைகள் சார்ந்த படைப்பாளிகளின் எதிர்பார்ப்பு நமது தம்மாத்துண்டு பேங்க் இருப்புகளுக்கு இடராய் இருப்பதே ஹெர்லக் இன்னமும் நமது கார்ட்டூன் சந்தாவினில் இடம்பிடிக்காதிருப்பதன் காரணம் ! But நமது வலுக்கள் சற்றே அதிகமாகிடும் நாளொன்று புலராது போகாது ; இந்த ஜாலி ஹீரோ நம்மை சந்திக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது!

    ReplyDelete
  9. ஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ? விடை விரைவில் !! Norman than avar steel hand hero norman

    ReplyDelete
  10. விஜயன் சார், ப்ரின்ஸ் சில யோசனைகள்
    1.ப்ரின்ஸ் இதழில் வாசகர்கள் படம் அச்சிடப்பட்ட உடன் அந்த நபரின் கொரியர் டப்பாவில் போட்டு வைக்கவும். இது அந்த புத்தகம் சரியான நபருக்கு செல்ல உதவும். கடைசி நேரத்தில் கொரியர் டப்பாவில் போட்டால் முகவரி மாறி வேறு யாருக்காவது சென்று விடும் அபாயம் உள்ளது.

    2.வாசகர் படம் அச்சிடப்படும் முதல் பக்கத்தை இரண்டு copy அச்சிட்டு வைத்துக் கொண்டால் யாருக்காவது முகவரி மாறி சென்று விட்டால் மற்றோரு ப்ரின்ஸ் புத்தகத்தில் வாசகர் அச்சிடப்பட்ட முன் பக்கத்தை மட்டும் ஒட்டி அனுப்பி வைக்க உதவும்.

    ReplyDelete
  11. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  12. ஹெர்லக் வரவு சந்தோசம் தருகிறது. இவர் கதைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. இவர் ஜம்போவில் வருகிறாரா?

      Delete
    2. இவர் கதைகளை இது வரை படித்து இல்லை. வண்ணத்தில் மிகவும் நன்றாக உள்ளது.

      Delete
  13. வாரிசு வேட்டை, விற்பனைக்கு ஒரு பேய் and எழுந்து வந்த எலும்பு கூடு ஒரே புத்தகமாக வெளியிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இதற்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.

      Delete
  14. சார்.. இன்னமும் என்ற புள்ளையின் படத்தை அனுப்பி வைக்க வாய்பிறுக்கிறாதாங்க?

    ReplyDelete
    Replies
    1. உடனே செய்யுங்கள் நண்பரே.

      Delete
  15. ஷெர்லெக் விற்பனைக்கு ஒரு பேய் இப்போதுதான் வாங்கினாற் போல இருக்கிறது.. வண்ணத்தில் அற்புதமாக உள்ளது. பழைய கதைகளையும் வண்ணத்தில் வெளியிடுங்கள் சார்

    ReplyDelete
  16. என்னதான் கோவம் இருந்தாலும் இந்த வரிகளை படித்ததும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

    எனக்குள்ளேயும் ஒரு உம்மணாமூஞ்சி smurf கைகட்டி நின்று கொண்டு - "ச்சை...எனக்கு சாத்து வாங்கவே புடிக்காது !" என்று முறைத்தாலுமே, இன்னொரு பக்கம் - "ஹை....மறுக்கா சவாலைச் சந்திக்கவொரு வாய்ப்பு !" என்று குதூகலிக்கும் ஒரு ஜாலி smurf-ம் உண்டு !

    ReplyDelete
  17. இரவு வணக்கம் நண்பர்களுக்கு...

    ReplyDelete
  18. அனைவருக்கும் ஞாயிறு வணக்கம்.மற்ற நண்பர்கள் என்ன சொன்ன போதிலும் முதல் பக்க போட்டோ நல்ல முயற்சியே...சொதப்பல்கள் இருந்த போதிலும் (எனக்கு வந்த புக்கில் யாரோ நண்பர் புகழேந்தி வந்தார்..😄😄😄😄).அதற்காக மீண்டும் அந்த முயற்சி
    யை கையில் எடுத்த ஆசிரியருக்கு மிக பெரிய சல்யூட்...👏👏👏👏

    ReplyDelete
    Replies
    1. அது நான் தான் என்று நினைக்கிறேன். போட்டோவை 9677690123 என்ற நம்பருக்கு வாட்சப் அனுப்பவும். Confirm செய்து விடுகிறேன்

      Delete
    2. நண்பருக்கு. .... எனது துணைவியார் வெளியூர் சென்று இருப்பதால்.வந்தவுடன் அனுப்பி வைக்க சொல்கிறேன்.(நான் வெளிநாட்டில் உள்ளேன்..சிரமத்திற்கு மன்னிக்கவும். )நன்றி

      Delete
  19. மூன்று புக் வரும் பார்சலில் ஏதோ ஒன்று இடிக்கிறது என்று பிரின்ஸை களம் இறக்க நினைக்கும் நீங்கள். டிசம்பர் 15ல் ஒரு புக் மட்டும் களம் இறக்குவது நியாயமா!!😭😭😭😭(தீடீர் ஸ்பெஷல் ஏதேனும் வைத்து அனுப்புங்களேன்....நம்ம ஜூனியர் திருமண பரிசாக....😄😄😄😄

    ReplyDelete
  20. கேபடன் பிரின்ஸை கலரில் பார்ப்பது என்பது ஆனந்தத்தின் எல்லை.அதுவும் மிக அருமையான கதைகளில் சந்திக்கும் போது கொண்டாட்டத்தை கேட்கவும் வேண்டுமோ...டண்டணக்கா டக்கா டக்கா....
    கார்ட்டூன் ஷெர்லாக் ஹோம்ஸை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.எத்தனை பக்கங்களை கொண்ட கதையாக வரவுள்ளது என்பதை தெரிவித்தால் சந்தோஷம். ரொம்ப நாட்கள் கழித்து வருவதால் ஒரு குண்டு புக் அளவுக்கு கொடுத்தால் பரமானந்தம்...

    ReplyDelete
  21. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு. வேறு ..யாரு நம்ம இரும்பு கை நார்மனாக தான் இருக்கும்.

    ReplyDelete
  22. 17th... இனிய காமிக்ஸ் வணக்கம் நண்பர்களுக்கு 🙏....

    ReplyDelete
  23. அட்டை படங்கள் அள்ளுகின்றன. செர்லக் மறுபடி புது பொலிவுடன் களம் இறங்கபோவகும் உங்களின் அறிவிப்பு சூப்பர் சார் .

    ReplyDelete
  24. herlock holmes தமழில் வெற்றி பெறுவார்.கேப்டன் பிரின்ஸ் இம்மாத இதழ்களோடு என்பது மகிழ்ச்சியான சேதி

    ReplyDelete
  25. பிரின்ஸ் டீசர் அட்டகாசம் சார்.செம அசத்தல் .ரசித்து கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு..மர்மதீவில் மாயாவி இதழின் அட்டைபடமும் அழகு.இதனை இங்கு காணும் பொழுதே இதழாக காண ஆவல் பன்மடங்கு அதிகரிக்கிறது.

    ******************

    வாவ் ...மாறுவேட புகழ் காமெடி ஷெர்லாக் மீண்டும் வருகையா ..மகிழவைக்கும் செய்தி .கைதட்டி வரவேற்கிறேன் .

    வெட்டு ஒன்று .துண்டு ரெண்டு ?

    கராத்தே அடி அடிக்கும் டாக்டரா ...இரும்பு கையை வைத்து அடிக்கும் நாயகரா ? குழப்பமா இருக்கே..!

    ஆனா யாரா இருந்தாலும் குமுதன் ஹேப்பி அண்ணாச்சி...:-)


    **********

    ReplyDelete
  26. சிங்கத்தின் தலை நரைத்த வயதில்...?



    சிங்கத்தின் சிறு வயதே இப்பொழுது உங்களுக்கு நினைவு உள்ளதா என மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறோம் .நரைத்த வயதை நினைவு படுத்துவானேன் சார்.:-(

    ReplyDelete
  27. பிரின்ஸ் அட்டைப்படம் கலக்கல்.

    ReplyDelete
  28. ///ஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ?///


    ராம்போ ..?????

    ReplyDelete
  29. ///புதுப்பொலிவுடன் அட்டகாசமாய் மறுபடியும் ஆஜராகவிருப்பது நமது ஹெர்லெக் ஹோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தான் ! ///

    ஹைய்யா ...!!!😍😍😍

    ReplyDelete
  30. ///, ‘அட... அந்த வில்லன் யாராக இருக்கும் ?‘ என்ற யோசனையோடே – ஒரே தெருவை குறுக்கே ஒரு தபாவும், நெடுக்கே ஒரு தபாவும் சுற்றவும் செய்திருக்கிறேன் ///

    ஹாஹாஹா ..!!


    ReplyDelete
  31. சிவகாசி சலோ நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. வெட்டு ஒணாணு துண்டு ஒண்ணு தான்

      ஏதாச்சும் வெட்டினீங்கன்னா சொல்றேம்பா









      Delete
  32. ஹெர்லாக் ஷோம்ஸ் நிச்சயம் காமெடியில் பட்டையைக் கிளப்புவார். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  33. /// வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ? ///


    Judge Dredd - நீதி தேவன்.

    ReplyDelete
  34. எடிட்டர் சார்,
    தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் நாயகி காமிக்ஸ் ரசிகை என்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஒரு காட்சியில் நமது லயன் காமிக்ஸ் படிப்பது போலும் , மற்றொன்றில் ஒரு புத்தகம் மற்ற புத்தகங்களுடன் இருப்பது போன்றும் வருகிறது் . மாடஸ்டியின் காமிக்ஸ் மற்றும் பிண்ணனியில் மாடஸ்டி போஸ்டர் காண்பிக்கப்படுகிறது. மற்றொரு புத்தகம் ப்ளூகோட்ஸ் அல்லது சிக்பில் ஆக இருக்கலாம். பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தட் வெ.ஒ து. இ நாயகன் - எனக்கு ரொம்பப் பிடித்த டேஞ்சர் டயபாலிக்₹

      Delete
    2. ///மற்றொரு புத்தகம் ப்ளூகோட்ஸ் அல்லது சிக்பில் ஆக இருக்கலாம்.///

      ப்ளூகோட்ஸின் காதலிக்க குதிரையில்லை ..!

      Delete
    3. சூப்பர். அருமையான விளம்பரம்.

      Delete
    4. ச்சே!! எனக்கு இந்த சினிமா பார்க்க்குறதே சுத்தமா புடிக்காது...!!

      Delete
    5. @ Mohamed Harris

      சந்தோசமான தகவல்!! நன்றி நண்பரே!

      Delete
    6. சாதிக்கும் பெண் களுக்கு எங்கள் இளவரசி ஒரு கலங்கரை விளக்கு. !

      Delete
    7. மேஜிக் விண்ட்-ன் உயரே ஒரு ஒற்றைக் கழுகு படிப்பது போலவும், லக்கி லூக் சாகசம் ஒன்று செல்பில் உள்ளது போல காண்பிக்கப்பட்டது.

      Delete
    8. சூப்பர் ஜெய்கணேஷ். தகவலுக்கு நன்றி.

      Delete
  35. வெட்டு ஒன்று துன்டு இரண்டு! கராத்தே டாக்டர்?

    ReplyDelete
  36. சுஸ்கி விஸ்கி எப்போ ஸாா்?

    ReplyDelete
  37. டியர் விஜயன் சார், எனக்கு மிகவும் பிடித்த பிரின்ஸ் வண்ணத்தில் வருவது மிகவும் சந்தோசமே....

    வாசகர்களின் போட்டோக்கள் கிரே கலரில் முன் பக்கத்தில் வருவது மகிழ்ச்சியே. ஆனால் கதையில் வரும் கரடிக்கும், எங்கள் முகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தும் வருகிறது :-)

    ReplyDelete
    Replies
    1. ///ஆனால் கதையில் வரும் கரடிக்கும், எங்கள் முகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தும் வருகிறது :-)///

      நீங்க என்னையோ குருநாயரையோ சொல்லலைன்னு நம்புறோம் சுந்தர்!! 😝😝

      Delete
    2. ///வாசகர்களின் போட்டோக்கள் கிரே கலரில் முன் பக்கத்தில் வருவது மகிழ்ச்சியே. ஆனால் கதையில் வரும் கரடிக்கும், எங்கள் முகத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தும் வருகிறது///

      நியாயப்படி, இந்தமாதிரி பயமெல்லாம் அந்தக் கதையில நடிச்ச கரடிக்குத்தானே வரணும்?!! :D

      Delete
  38. தலீவரின் வேண்டுகோளுக்கிணங்க

    சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்.

    போர். போர். போர்.

    ReplyDelete
    Replies
    1. ///போர். போர். போர்.///

      போர் வரும்போது பாத்துக்கலாம்னு தலீவரோட தலீவர் சொல்லியிருக்காரே ஷெரீப் ..!! 😜

      Delete
  39. காலை வணக்கம்.
    எதயாவது யோசிக்கவிட்டு
    எங்க மண்டைய பிச்சுக்கவிட்டு
    ஏன்ன்ன் ??????நாங்கல்லாம்
    மண்டைக்கு வெளியே கொஞ்சூண்டு
    வெச்சுருக்கறதும் உங்க கண்ண
    உறுத்துதா???
    கல்யாணம் முடிஞ்ச கையோட உங்க
    பொட்டியில் தூங்கும் பிரபல நாயகர்களை
    தூசி தட்டி எழுப்புமாறு
    பணிவென்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    இப்ப. டிக்கி
    அப்புறம் பானெட்.

    ReplyDelete
  40. ந.ஒ.நா இரண்டு வருடங்கள் முன்பு புத்தகம் exchange மூலம் படித்தேன்.

    கொ.கா. இன்னும் படித்து இல்லை. வண்ணத்தில் இதன் பக்கங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    ReplyDelete
  41. விஜயன் சார், சும்மா இருக்கிற எங்க மூளைக்கு இப்படி வேலை கொடுக்காதீங்க சார். அந்த வெ.ஒ.து.இ. கதாநாயகர் யாரேன்று இன்றே சொல்லி விடுங்கள் சார்.

    ReplyDelete
  42. பிரின்ஸ் டிரைலர் அட்டகாசம் போங்கள்.....

    ReplyDelete
  43. நண்பர்களுக்கு ஞாயிறு வணக்கங்கள்!

    'ஹெர்லக் ஹோம்ஸ்' மறுபடியும் வரயிருப்பது விசிலடிக்க வைக்கிறது! போன மாதம் தீபாவளிப் பரிசாக ஒரு அன்பு நண்பர் அனுப்பிவைத்த 'எழுந்து வந்த எழும்புக் கூடு' கதையை பலப்பல வருடங்களுக்குப் பின்னே படித்துமகிழும் வாய்ப்புக் கிடைத்தது. பலமுறை கெக்கபுக்கே என சிரிக்க வைத்த ரகளையான கதை அது! கார்ட்டூன் சித்திரங்களும் அப்படியே!!
    அந்த நண்பர் எந்த புத்தகம் எனக்கு அனுப்பினாலும், அந்தத் தொடர் மறுவருகைக்குத் தயாராகிவிடும் ராசி இருப்பதாக உறுதியாக நம்பப்படுகிறது. ஆகவே, அந்த அன்பு நண்பர் உடனே எனக்கு கருப்புக் கிழவி, பேட்மேன், அங்கிள் ஸ்க்ரூட்ஜ், ரோபோ ஆர்ச்சி, வேதாள மாயாவிகாரு உள்ளிட்ட அனைத்து புத்தகங்களையும் காமிக்ஸ் ரசிகர்களின் நலன் கருதி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! ;)

    ReplyDelete
    Replies
    1. எப்படி எல்லாம் துண்டு போட வேண்டி இருக்கிறது. 😄😄😄😄😄😄

      Delete
    2. நம்ப விஜய் போட்டது துண்டு இல்ல.. இது பேர் போர்வை (bed sheet)

      Delete
  44. D. I. A. B. O. L. I. K

    O. R

    J. U. D. G. E. D. R. E. D. D

    ReplyDelete
  45. DIABOLIK வேண்டாம் சாமி. போதும் இவர் இதுவரை இங்கு சாதித்து.

    ஜம்போவில் இவர் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு (சொல்ல போனால் சான்ஸே இல்லை) எனவே இவர் நமது ஜூனியர் லயனில் வந்த கார்டூனாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. ///DIABOLIK வேண்டாம் சாமி. போதும் இவர் இதுவரை இங்கு சாதித்து. ///

      மாடச்சுடிய மட்டும் தனியா கலாய்ச்சி போரடிக்குது பரணி. டயபாலிக்கும் வந்தா சோடியா கலாய்க்கலாமே ..?? ஏன் வேண்டான்றிங்க ..!? 😂

      Delete
    2. அதுக்கு தான் டெக்ஸ் இருக்கார்ல்ல.

      லயன் 300 அட்டைப்படத்தில் பேன்ட் கீழே விழாமல் ஒரு கையால் பிடித்து கொண்டு மற்றோரு கையால் துப்பாக்கியை வைத்து வடை சுடும் அழகு இருக்கே ...யப்பா சான்ஸே இல்ல :-)

      Delete
    3. டெக்ஸ் எல்லா நேரத்திலும் கலாய்க்குறதுக்கு ஸ்க்ரிப்ட் தர்ரதில்லை பரணி ..! ஆனா மாடசுட்டியும் டயபாலிக்கும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஸ்க்ரிப்ட் தராங்களே :-)

      Delete
    4. டெக்ஸ மட்டும் தான் அட்டையில் இருந்து கடைசி பக்கம் வரை கலாய்க்கலாம்.

      அதுவும் அட்டையில் சட்டையில்லாமல் கைக்கு கட்டு போடுவாரே.. ய்ப்பா பயந்து போய் விட்டேன்.

      Delete
    5. // அதுக்கு தான் டெக்ஸ் இருக்கார்ல்ல.

      லயன் 300 அட்டைப்படத்தில் பேன்ட் கீழே விழாமல் ஒரு கையால் பிடித்து கொண்டு மற்றோரு கையால் துப்பாக்கியை வைத்து வடை சுடும் அழகு இருக்கே ...யப்பா சான்ஸே இல்ல :-) //

      Parani from Bangalore சார், You are my best friend :))))

      Delete
    6. // டெக்ஸ மட்டும் தான் அட்டையில் இருந்து கடைசி பக்கம் வரை கலாய்க்கலாம்.

      அதுவும் அட்டையில் சட்டையில்லாமல் கைக்கு கட்டு போடுவாரே.. ய்ப்பா பயந்து போய் விட்டேன். //

      Parani from Bangalore சார், You are my great friend :))))

      Delete
    7. அப்படியா பரணி 😜😜😜???

      Delete
    8. // ஆமாவா பரணி 😝😝😝??? //
      //அப்படியா பரணி 😜😜😜??? //

      கண்ணா - நீயும் நானுமா ?!

      Delete
    9. கண்ணா @ // ஆமாவா // எப்ப பெங்களூருக்கு இடம் மாறினீங்க. சொல்லவே இல்லை.

      Delete
  46. Hi friends have a nice day 🐑🐏🐀🐱🐩🐩

    ReplyDelete
  47. டியர் எடிட்,

    என்னை பொறுத்த வரை 2012 முதல் ஏன், நான் காமிக்ஸ் எழுத்துகூட்டி படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே... ஒவ்வொரு கதையை படிக்கும்போது நடந்த நிகழ்வு, இன்றும் அக்கதையை மறுவாசிப்பின் போது நினைவுகூற முடிகிறது. ஒரு வாசகனுக்கே இப்படி என்னில், கதைகளை ஆளபடித்து அதன் மறுமொழி இடும் ஆசிரியருக்கு அது எவ்வித நினைவலைகளை பத்திரபடுத்த முடியும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனாலும், சிங்கத்தின் சிறு வயதில் இருந்து நரை வயது வரை நடந்த நிகழ்வுகளை உங்களால் இப்படி துல்லியமாக நினைவுபடுத்தி கொள்ள முடிகிறது... ஒவ்வொன்றுயும் வகைபடுத்தும் உங்கள் Mind-Map பற்றி ஒருமுறை எங்களுக்கும் அறிவுறுத்துனால், உபையோகமாக போகும, உண்மையில். :)

    கமான்சே கதைகளில் உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன். அமர்க்களமான சித்திரங்கள், மற்றும் வித்தியாசமான கதை களங்களை மட்டும நம்பி ஒரு கதையை அல்லது கதை தொடரை ஒப்பேற்றி விடலாம் என்ற ப்ரான்கோ/பெல்ஜியன் நவீன கால கிராபிக் சிந்தனைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கமான்சே தொடரே. ஹெர்மன் அவ்விஷயத்தில் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். பிரின்ஸ் போன்ற ஒரு கதைதொடர் அமைவதற்கு சிறந்த கதை ஆசிரியரும் முக்கியம் என்று அவர் புரிந்துகொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்.

    இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல், கமான்சே கூடவே ஒரு கிளாசிக் பிரின்ஸ் கதையை மீண்டும் ஒரு புதிய பரிணாமத்தில் படிக்கபோகிறோம் என்பதே.... இக்கதை வெளியான போது கதையின் முடிவில் பிரின்ஸ் இத்தனை மெனக்கெடாமல் வான்வழியில் உதவியிருக்கலாமே என்ற ஒரு ரசிகரின் கடிதம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அது இந்த கதை தானே... பார்னே உயிரோடு எரிக்க முற்படுவாற்களே ?

    ஹெர்லெக் ஹோம்ஸ் கதைகள் மீண்டும் புதுபொலிவுடன் வரயிருப்பது அறிந்து ஆனந்தமே. மினி லயனில் இந்த கதை தொடர் அறிமுகமான போது அதற்கு நானும் ஒரு ரசிகன். நண்பர்கள் கூறியபடி அந்த இரு கதையும் அடுத்த வருடத்தில் ஒரு கிளாசிக் மறுபதிப்பாக வண்ணத்தில் வெளியிட்டு விடுங்கள், மறவாமல்.

    இன்னொரு பழைய நாயகர் திரும்ப வரபோகிறார் என்ற அறிவிப்பை வைத்து கண்டுபிடிப்பது சிறமமே. ஆனால், பிரிட்டீஸ் கதை நாயகர்கள் ஏற்கனவே கிளாசிக்ஸ் மறுபதிப்பில் வந்து கொண்டிருப்பதால், இது ஒரு இத்தாலிய நாயகராக தான் இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது. காத்திருப்போம் அறிவிற்கு.

    தமையனின் கல்யாண வைபவம் நெருங்கிவரும இந்நாட்களிலும், எங்கள் காமிக்ஸ் ஆர்வத்திற்கு தீணி போட உங்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருவது போற்றுதலுக்குறியதே. வளரட்டும் நமது காமிக்ஸ் நேசம்.

    ReplyDelete
    Replies
    1. // இக்கதை வெளியான போது கதையின் முடிவில் பிரின்ஸ் இத்தனை மெனக்கெடாமல் வான்வழியில் உதவியிருக்கலாமே என்ற ஒரு ரசிகரின் கடிதம் இப்போதும் நினைவில் .//
      அது பிரின்ஸ் in ஆப்பிரிக்கா என்று நினைக்கிறேன்.

      Delete
    2. அறிவரசு ரவி!

      ஹஹஹஹஹஹ.......நானும் படித்து சிரித்தேன். !

      Delete
    3. @ ரபீக் ராஜா

      உயிரோடு பார்னே எரியூட்ட முயற்சிக்கும் காட்சி கொலைகார கானகத்தில் அல்ல. அந்த காட்சி வருவது 'நதியில் ஒரு நாடகம்'.!

      காட்டுமிராண்டிகளிடம் மாட்டிகொண்ட பார்னேவை தலைகிழாக மூங்கிலில் கட்டி தொங்கவிட்டு,நெருப்பு மூட்டி உயிருடன் எரிக்க முற்படுவார்கள். பார்னே உயிருடன் இருக்கிறாரா இல்லையா என தெரியாத பிரின்ஸ்...காட்டில் பார்னேவை தேடி தனியே அலைய, திடீரென பார்னேவின் மரண ஓலம் கேட்டு...அந்த திசையில் பதுங்கிசென்று பார்க்கும்போது,பார்னே நிலை படுபயங்கரமானவை.

      இன்னும் சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடும் நெருக்கடியில் பார்னே அலறும் மரண ஓலம்...பிரின்ஸை வெறிகொள்ள செய்து கையில் உள்ள ஒற்றை துப்பாக்கியை மாத்தியம் ஏந்தி காட்டுமிராண்டிகள் மீது ஆவேசமாக பாய்வார்.

      அந்த சந்தர்ப்பத்தில் தனிஒருவனாக செய்ய கூடியது எதுவுமில்லை.அத்தனை காட்டுமிராண்டிகளை ஒற்றை ஆளாய் ஜெய்ப்பது ஆகாத காரியம். இருந்தும்கூட

      "ஒன்றாக உண்டு,ஒன்றாக உறங்கினோம்...உன் மரணத்திலும் நான் துணையிருப்பேன்...இதோ வந்துவிட்டேன் நண்பா...என் அடுத்த பிறவியில் ஏன் எனக்கு இப்படியொரு வெறி வந்து மடத்தனமாக பாய்கிறேன் என யாராவது விடை சொல்லுங்கள்..."

      என மனக்கொந்தளிப்புடன் ஆக்ரோஷமாக பாயும் காட்சி...

      உணர்வின் உச்சத்திற்கு நம்மை கொண்டுசெல்லும்.! 'உயிர் கொடுப்பான் தோழன்.!' என்பதற்கு அட்டகாசமான மற்றும் ஒரு உதாரணம்.!!

      உங்கள் நினைவுகளை மீட்டெடுக்கும் அந்த காட்சி பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
    4. செம சீன் அது வேதாளரே ஆயுளுக்கும் மறக்காது

      Delete
    5. சிவா @ கதையின் இந்த வரிகளை மிகவும் ரசித்து படித்தேன். இருவருக்கும் இடையேயான நட்பை வெளிப்படுத்திய அருமையான வரிகள்.

      Delete
    6. அதுவும்...

      "அந்த காட்டுமிராண்டிகளிடம் மாட்டிய எவரும் உயிருடன் திரும்பிதில்லை..!"

      என படைவீரர்கள் சொல்ல கேட்ட பொடியன் 'ஐயோ அப்படியா... அவரை காப்பற்ற நான் போகிறேன்' பிரின்ஸ் போன பாதையை நோக்கி ஓடும் காட்சி....

      ஒருவருக்கொருவர் வயது வித்தியாசமில்லாமல் நட்புபாராட்டும் தன்மை அபாரமானது.!

      பிரின்ஸ் கதைகள் நம் அனைவரின் ஆழ்மனதை தொட காரணமாக நான் கணிப்பது...

      கதையுடன் இழையோடும் நட்பும்,உறவும்,அதுசார்ந்த உணர்வுகளே.!

      Delete
    7. ///ஒருவருக்கொருவர் வயது வித்தியாசமில்லாமல் நட்புபாராட்டும் தன்மை அபாரமானது.!

      பிரின்ஸ் கதைகள் நம் அனைவரின் ஆழ்மனதை தொட காரணமாக நான் கணிப்பது...

      கதையுடன் இழையோடும் நட்பும்,உறவும்,அதுசார்ந்த உணர்வுகளே.!///

      மாயாஜிசார்.. அருமையா சொன்னீங்க..

      +8888 8888 8888

      Delete
    8. ///பிரின்ஸ் கதைகள் நம் அனைவரின் ஆழ்மனதை தொட காரணமாக நான் கணிப்பது...

      கதையுடன் இழையோடும் நட்பும்,உறவும்,அதுசார்ந்த உணர்வுகளே.!///

      செம & உண்ம!

      Delete
    9. பிரின்ஸின் கொலைகார கானகத்திலும் உணர்ச்சி பூர்வமான காட்சி ஒன்று தீயின் பிடியிலிருந்து அனைவரும் தப்பி பாதுகாப்பான இடம் வந்து சேர்ந்த பிறகுதான் பிரின்சுக்கு கரடிக் குட்டியை விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வரும் உடனே கரடிக்குட்டியை காப்பாற்ற தீயின் கோர நாக்குகளுக்கு இடையில் பாய்ந்து காப்பாற்றுவார் பாருங்கள் செமையாக இருக்கும்

      Delete
  48. /////ஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் ! மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே ! யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா ? ////

    ரொம்ப சுளு! 'இப்படி'ன்ற நேரத்துக்குள்ள ஈசியா கணிச்சுடலாம். இன்பாக்ட், இந்தப் பதிவு வெளியாகறதுக்கு முன்னாடியே கணிச்சுட்டேன்றதுதான் உண்மை!

    ஆனா என்னோட கணிப்பை பொசுக்குனு இங்கே போட்டு உடைத்து, நண்பர்களின் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட விருப்பமில்லை எனக்கு!ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. ///ரொம்ப சுளு! 'இப்படி'ன்ற நேரத்துக்குள்ள ஈசியா கணிச்சுடலாம். இன்பாக்ட், இந்தப் பதிவு வெளியாகறதுக்கு முன்னாடியே கணிச்சுட்டேன்றதுதான் உண்மை!///

      நான் போனவாரம் போன்ல சொன்னேனே .. அதுதானே குருநாயரே?!?

      ( என்ன சொன்னேன்னு குழப்பமா இருக்கா .. ..! நீங்க கணிச்சது என்னென்னு முதல்ல சொல்லுங்க .. நான் போனவாரம் சொன்னது அதுதான்னு சொல்றேன். . குழப்பம் தீர்ந்திடும். ஹீஹீ ..எப்பூடீ...:-) )

      Delete
    2. K O K உங்கள் மறுபெயர்
      கமலஹாசன் கண்ணணா.

      Delete
    3. கணேஷ் ஜி!

      KiD ஆர்டின் KannaN ன்னும் சொல்லலாம். . கமல் கண்ணன்னும் சொல்லலாம்! எப்படி சொல்றோம் என்பதைவிட ஏன் சொல்கிறோம் என்பதே முக்கியம்னு சொல்லலாம்.!
      சிலசமயங்களில் ஏன் சொல்கிறோம் என்பதைவிட எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம்னு சொல்லலாம்.!
      சொல்லாமல் இருப்பதைவிட சொல்லிவிடுவதே நல்லது என்றாலும் சிலசமயங்களில் சொல்வதைவிட சொல்லாமல் இருந்துவிடுவதே நல்லதுன்னும் சொல்லலாம்.!

      இனிமே ஏதாச்சும் கேப்பிங்க கணேஷ்ஜி!?? 😝

      Delete
    4. கண்ணா @ அப்ப இந்த ரவி கண்ணன் யாரு?

      Delete
  49. // ஏற்கனவே பரிச்சயம் ஆனவர் //

    லயன காமிக்ஸை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தவர் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர். ........


    சாட்சாத் இளவரசியேதான். ...



    //வெட்டு ஒண்ணு _ துண்டு இரண்டு பார்ட்டி //


    மாடஸ்டி எடுக்கும் அனைத்து முடிவுகளும் வெட்டு ஒண்ணு துண்டு இரணடாகத்தான் இருக்கும். !


    // மீண்டும் கலக்க காத்திருக்கிறார். !//


    மாடஸ்டி வந்தாலே கலக்கல்தான்...


    //பிளாக் & ஒயிட்லேயே //


    இளவரசி கதைகள் அனைத்தும் பிளாக் & ஒயிட் தானே ?????



    சந்தேகமே இல்லை. .....


    சாட்சாத் எங்கள் இளவரசியேதான். !

    ReplyDelete
    Replies
    1. டேஞ்சர் டயபாலிக்கா? ஒரு ஆய்வு. .....


      //ஏற்கனவே பரிச்சயம் ஆனவர் //

      இவர் ஹிரோவா அல்லது அக்யூஸ்டா ?வில்லனா? 80 'ஸ் இருந்தே மண்டை குழம்பி அறிமுகம் ஆனவர். !

      // வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு //


      ஆம் இவர் பணத்திற்காக, வாளை எடுத்து நாள க்கு சாகபோற கிழவியை வெட்டு பவர். !



      //மீண்டும் கலக்க காத்திருக்கிறார். !//

      ஆம். ! பணம் வைத்துள்ள பணக்காரர்கள் அனைவரும் இவருக்கு பயந்து கலக்கத்தில் உள்ளனர். !

      //பிளாக் &ஒயிட்லேயே //

      மிகுந்த அழகான தெளிவான ஓவியங்களுடன் அசத்தல் சித்திரக்(கதை).!

      வின்னர் படத்தில் வரும் வடிவேலு பாணியில் சொன்னால். ...


      ஓப்பனிங் (ஓவியங்கள் ) எல்லாம் பிரமாதமாத்தா இருக்கு. .....

      ஆனா.......உங்கிட்ட (கதை) பினிஷிங் சரியில்லையேப்பா. ...!

      Delete
    2. M.V சார்...

      ஏதோ உங்களைமாதிரி ஓரிருவரை வச்சுத்தான் ஒரு 'ஆர்மியே' ஓடிக்கிட்டிருக்கு! :P

      Delete
    3. பூனையாரே. !

      என்ன இப்படி சொல்லிபோட்டீங்க. ?

      ஒரிஜினல் மாடஸ்டி கதையில் மேற்கத்திய கலாச்சாரத்தில் வரைந்த ஓவியங்கள் பார்த்து நிறைய ரசிகர்கள் சங்கடப்பட்டு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மாடஸ்டி ஆர்மி யில் சிலீப்பர் செல்லாக இருக்கிறார்கள். ஆனால் மாடஸ்டி க்கு பிரச்சினை என்றால். ......


      ஆழ்கடலில் அமைதியாக பயணிக்கும் சுனாமி கரையைத் தொடும்போது ஆக்ரோசம் அடைவதுபோல் மாடஸ்டி ரசிகர்கள் வெளிப்படுவார்கள்.!


      இந்திய பாரம்பரிய மருத்துவ உணவுப்பொருளில் தலையாயது இஞ்சி. ! ஆனால் அந்த இஞ்சி யின் தோல் கெடுதலை கொடுக்கும். ஆகவே தோலை நீக்கி சாப்பிட்டால் மட்டுமே இஞ்சி யின் முழு பலனும் கிடைக்கும்.


      அதேபோல் நமது எடிட்டர். மேற்கத்திய கலாச்சாரத்தில் உருவான மாடஸ்டி யை நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாடஸ்டி கதையின் ஓவியங்களை நமக்கு ஏற்றவாறு எடிட்செய்து கண்ணியமாக மாற்றி உள்ளார்.

      நான்
      ஒரிஜினல் மாடஸ்டி யை திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. விஜயன் சார் மாடஸ்டி யை மட்டுமே ரசிக்கிறேன். ஆகவே தில்லா கில்டி பீலிங் இல்லாமல் நான் உரக்க கூவுகின்றேன். !!!

      Delete
    4. ///ஆழ்கடலில் அமைதியாக பயணிக்கும் சுனாமி கரையைத் தொடும்போது ஆக்ரோசம் அடைவதுபோல் மாடஸ்டி ரசிகர்கள் வெளிப்படுவார்கள்.////

      கொஞ்ச நேரம் கழிச்சு 'சுனாமி எச்சரிக்கை வாபஸ் வாங்கப்பட்டுவிட்டதாக' அறிவிச்சுட்டோம்னா பிரச்சினை தீர்ந்தது! :P

      Delete
    5. ///நான்
      ஒரிஜினல் மாடஸ்டி யை திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. ///

      ஒரிஜினல் மாடஸ்டிகூடத்தான் நம்மைத் திரும்பிப் பார்க்க வாய்ப்பில்லை! அதுக்காண்டி? ;)

      Delete
    6. // அதேபோல் நமது எடிட்டர். மேற்கத்திய கலாச்சாரத்தில் உருவான மாடஸ்டி யை நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாடஸ்டி கதையின் ஓவியங்களை நமக்கு ஏற்றவாறு எடிட்செய்து கண்ணியமாக மாற்றி உள்ளார். //

      அதே போல் வசனங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த வருடம் வந்த மாடஸ்டி, ஷெல்டன் மற்றும் லேடி s கதைகளில் சில வசனங்களை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம்.

      வரும் வருடம் இது போன்ற வசனங்கள் சரியாக கையாளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

      Delete
  50. மேச்சேரியாரே!


    ஏதோ சொல்லி ட்டு அழிச்சுட்டீங்களே? ???


    கற்பனை கதா பாத்திரத்தை கலாய்பதில் என்ன சங்கடம்?

    நம்ம தலைவர் & செயலாளர் திட்டி எழுதுவதைக்கூட ' கமான்சே " பணியில் நாசூக்காக எழுது பாணியை ரசிப்பேன். அதேபோல் நகைச்சுவை யாக காலய்க்கும் உங்கள் நகைச்சுவை பாணி வெகுவாக ரசிப்பேன்.!

    மாடஸ்டி யை எவ்வளவு கலாய்த்தாலும் புடம் போட்ட தங்கம் போல் மேலும் மேலும் பிரகாசமாய் ஜொலிப்பார். !அதில் எனக்கு சந்தேகம் இல்லை. !

    ReplyDelete
    Replies
    1. மேலே சொல்லியிருக்கேன் ஆர்மிக்காரரே .. :)

      Delete
    2. நல்ல கலாய்க்கனும் கிட் ஆர்ட்டின் சார். !அப்பத்தான் இளவரசி புகழ் வானளாவிய யுகழை எட்டும். !


      நீங்கள் மாடஸ்டி ஆர்மி யின் ஸ்லீப்பர் செல் என்ற ரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அடிச்சு கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீக!

      Delete
    3. K O K சொல்லவேயில்ல.

      Delete
    4. வெங்கடேசன் @ செம. இத இததான் எதிர்பார்த்தேன்.

      Delete
    5. ///நீங்கள் மாடஸ்டி ஆர்மி யின் ஸ்லீப்பர் செல் என்ற ரகசியத்தை ///

      செல் லுன்னா அறை, இடம்னு பொருள். ஸ்லீப்பர் செல்னா தூங்குறதுக்கு உகந்த இடம்னு அர்த்தம் வருதே ..?! அப்படின்னா மாடஸ்டி தூங்க உகந்தஇடம்னு என்னைச் சொல்றிங்களா? 😍😍😍

      ஹைய்யோ.. .. அப்படீன்னா நான் ஷானியாவுக்கும் ஸ்லீப்பர்செல்தான் ..😍😍😍

      Delete
    6. வெல்க மாடஸ்டி,வெல்க இளவரசி.

      Delete
    7. @ KOK

      ///அப்படின்னா மாடஸ்டி தூங்க உகந்தஇடம்னு என்னைச் சொல்றிங்களா? ///

      ;) :)))) :P

      Delete
  51. சார் அருமை...எல்லாம் நல்லதற்கே...என் தங்கை மகள் பெயர் இடம் பெறாமல் எனது பெயர் மட்டும் இடம் பிடித்திருந்தது அந்த வரலாற்றில் இடம் பெரும் புத்தகத்தில்...அடுத்தமாதம் ஹரிணியுடன் பொன்ராஜ் என வரலாற்று நாயகரும் , வண்ணத்திற்கு முழுத்தகுதியும் பெறத்தக்க பிரின்சின் இதழில் கருப்பு வெள்ளை காவியமாய் எங்கள்தம் புகைப்படமுமே கலக்கலாய்....ஆக மொத்தம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..யாராவது உடம்பு சரியில்லை எனத் தும்மினாலும் சரிஇல்லை போல என ஆசிரியர் மீண்டும் அச்சிடும் வாய்பமைந்தால் ஒரே கல்லில் மூன்று மாங்காய் எனும் புதிய கண்டுபிடிப்பு பதிவேறலாம்...எல்லாம் நன்மைக்கே....அப்புறம் பிரின்சின்ஒரு பககம் கலக்க , மாயாவியின் அட்டைப்படம் அசத்த ,பொடுயர்களுடன் குதூகலமாய் களிக்க காத்திருக்கிறேன் அடுத்தமாத வரவிற்காக களிப்புடன்...மகிழ்ச்சி ட்டுமே....இரும்புக் கை நார்மனா...ஷெர்லக்ஹோம்ஸ் ....சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல்!!!

      அடுத்த அஞ்சு நிமிசத்துல ட்ரெயின் கிளம்பப்போகுதுன்ற மாதிரி நிலைமைல அவசர அவசரமா ஒரு கடுதாசிய எழுதி போஸ்ட் பாக்ஸுல போட்டுட்டு ஓடினமாதிரி இருக்கே!! :D

      Delete
  52. இரும்புக்கை நார்மனின் கதைகள் வரிசையில் இதுவரை வந்த ஆறு கதைகளையும் தமிழ்ல் ஆசிரியர் வெளியிட்டுவிட்டார் என நம்புகிறேன். எனவே, வேறு யாராவர் ஆளாகத்தானிருக்கவேண்டும். ஒருவேளை நீதி தேவன் நம்பர் வன் ஆக இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. நீதி தேவன் கதை பிளாப் என்று ஹாட் லைனில் எடிட்டர் எழுதியதாக ஞாபகம். !

      Delete
  53. எங்கே சேலத்து காரரை காணும் இந்த பக்கம்??😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. இங்கதான் எங்கயாவது மாறு வேசத்துல சுத்திக்கிட்டு இருப்பாங்க நல்லா பாருங்க.

      Delete
  54. முழுவண்ணத்தில்; புதுப்பொலிவுடன் அட்டகாசமாய் மறுபடியும் ஆஜராகவிருப்பது நமது ஹெர்லெக் ஹோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தான்.............






    ஆஹா திவ்யம் ............வரட்டும் டும்

    ReplyDelete
  55. கண்டிப்பா இரட்டை வேட்டையர் தான் .........

    அந்த வெட்டு ரெண்டு பார்டி ...........

    நான் ஜெயிச்சா எதுவும் தர மாட்டேன் .........

    ஆனா நீங்க ஜெயிச்சா .....ஸ்பைடர் படை புக் கொடுத்த போதும் .....


    ஆஅ............ உள்ளே வெளியே .......உள்ளே வெளியே......உள்ளே வெளியே

    ReplyDelete
  56. லேடி S ......VRS கொடுத்துடலாம் சார் ......

    பகடை காயாக மட்டுமே வரும் கதா பாத்திரம் .......

    ReplyDelete
  57. லேடி S.

    நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளை கடத்த ஒரு க்ரூப் ப்ளான் போடுது. ( அப்பாடா இந்த மாதிரி மாதிரி கதையைக் கேட்டு எத்தனை நாளாச்சி.திரு .விஜயகாந்த் பீரியட்ல பாத்தது மறுபடி இப்போதான் பாக்கிறோம்,)
    விஞ்ஞானிகளைக் கடத்த ஷானியா (எ) ஷானியுச்கா எப்படி உதவுகிறாள்? விஞ்ஞானிகளைக் காப்பாற்ற எப்படி உதவுகிறாள் என்பதே இருவரிக் கதை.

    ஷானியா என்ற பாத்திரத்தின் கடந்தகாலத்தை, நேர்த்தியான கதையில் ரசிக்க வைக்கும்படி தேவையான இடங்களில் மெலிதான ப்ளாஷ்பேக்கை சிறுகச்சிறுக முன்பின் மாற்றியமைத்து அற்புதமான படைப்பாக உருமாற்றிய ஆசிரியர் வான் ஹாமே , சுடும் பனியில் கொஞ்சம் சறுக்கி விட்டார்.

    இன்னும் சொல்லப் போனால், ஆசிரியரின் மாயாஜாலம் சிறிதும் காணப்படவில்லை.

    சுருக்கமாகச் சொன்னால்,
    ஷானியா மீது மையம் கொண்ட புயல்,இம்முறை மழையாக மாறவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ///ஆசிரியர் வான் ஹாமே , சுடும் பனியில் கொஞ்சம் சறுக்கி விட்டார்.///

      ஒரு தடையை தாண்டி குதிக்க இரண்டு ஸ்டெப் பின்னால் போகவேண்டியிருக்குமே... அப்படியோ என்னவோ?!!

      ///ஷானியா மீது மையம் கொண்ட புயல்,இம்முறை மழையாக மாறவில்லை.///

      உண்மை! முதலிரண்டு பாகங்களில் ஷானியாவிடம் தெறித்த இளமை இந்த பாகத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்!
      அம்மணிக்கு கண்களில் சோகத்தைக் காட்டத் தெரிந்த அளவுக்கு காதலை(?!!)க் காட்டத் தெரியாமல் போனதும் துரதிர்ஷ்டவசமானதே!

      Delete
    2. //லேடி S அமா்க்களம்

      ஆரம்பித்ததிலோ்ந்து இறுதி வரை சற்றும் குறையாத விறுவிறுப்பு!

      கடந்த பதிவிலே யாரோ ஒரு நண்பா் இக்கதை அப்படியென்றும் சாியில்லைனு சொன்ன மாதிாி ஞாபகம்!

      ஆனால் நிஜம் சொல்வதென்றால், முன்பு வந்த இருபாக கதையை தூக்கி சாப்பிடும் விதமாகவே இக்கதை உள்ளது.

      வான் ஹாம்மே is a legend!

      பெண் கதாநாயகி என்பதற்காக ஒப்புக்கு சப்பாணியாக (நம்ம விஜயசாந்தி, மாடஸ்டி போல) இல்லாமல் அற்புதமாக கதையை கொண்டு செல்லும் பாங்கு மிகப் பிரமாதம்!!

      ரியல் கதாநாயகி இப்படிதான் இருக்க முடியும்!

      என்ன ஒரே சங்கடம்னா "ஜேம்ஸ்பாண்ட்" போல அடிக்கடி பள்ளியறையில துள்ளி விளையாடுவது மட்டுந்தே.. சற்றே வருத்தமாக உள்ளது.

      எது எப்புடியே எங்க ஊா்லே "சானியா" ரசிகா் மன்றம் ஆரம்பிக்கறதுன்னு முடிவேடுத்துட்டேன்! அம்புட்டுத்தேன்!

      மொத்தத்துல "சுடும்பனி"
      சூட்டைக் கெளப்பிய பணி!//

      நண்பரே, கடந்த பதிவிலே நான் பதிவிட்டது. எனக்கு மாடஸ்தி விஜயசாந்தியாக தொியும் போது, உங்களுக்கு சானியா விஜயகாந்த் படம் போல தொிவது பாகிஸ்தான் தீவிரவாதிகள்ங்கற காரணத்தினாலா?

      என்னமோ எனக்கு கடந்த கதையைவிட இதுதான் மிகவும் பிடித்திருக்கிறது!!

      அசகாஷ வித்தைகளெல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை!

      "பிரியா" படத்தில் ரஜினியின் முன் கராத்தே கட்டாவெல்லாம் செய்து விட்டு ரஜினியின் முன் வந்து சண்டைக்கு நிற்கும் சீனாக்காாியை கையைப் பிடித்து இழுத்து வீச எறிந்து விட்டு அடுத்த ஆணிடம் சண்டையிடுவாா்!

      பெண்கள் சண்டையிடும் காட்சியின் போதெல்லாம் எனக்கு மேற்கண்ட தமாஸ் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

      Delete
    3. ////உண்மை! முதலிரண்டு பாகங்களில் ஷானியாவிடம் தெறித்த இளமை இந்த பாகத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்! ////

      என்னங்க ஈ.வி. மன்றமே ஆரம்பிக்கலாம்னு இருக்கும்போது அது மிஸ்ஸிங், இது மிஸ்ஸிங்ன்றீங்களே நியாயமா!

      Delete
    4. //ஷானியா மீது மையம் கொண்ட புயல் இம்முறை மழையாக மாறவில்லை. !//

      அப்போ,சென்னை யில் சென்ற ஆண்டு மழை பெய்யாமல் இலட்சக்கணக்கான மரங்களை மட்டுமே சாய்த்து விட்டு கடுப்பேற்றிய வர்தா புயல் மாதிரி மோசம்ன்னு சொல்லுங்கள் ??

      Delete
    5. @ Mithun Chakravarthi

      ஒரு ரெண்டுமூனு பேர் சேர்ந்துக்கிட்டு ஒரு ஆர்மியே அமைச்சுக்கிட்டிருக்கச்சே... பலப்பல வாலிப, வயோதிக அன்பர்களை தன் மச்சத்தால் இச்சை செய்யும் ஷானியா செல்லத்துக்காண்டி நாம ஒரு மன்றம் கூடவா ஆரம்பிக்கக்கூடாது?!!

      நீங்க மன்ற ஏற்பாடுகளை கவனியுங்க, அடுத்த EBFல செல்லத்துக்கு ஒரு கட்-அவுட் வச்சு பாலாபிஷேகம் பண்ணிப்புடலாம்!

      Delete
    6. ///அசகாஷ வித்தைகளெல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை///

      மிதுன் சார்.
      காமிக்ஸ் என்பதே கற்பனையில் வளர்ந்து நிற்க்கும் விருட்சமல்லவா? இதில் லாஜிக் பார்க்கலாம். ஆனால் யதார்த்தத்தை காண இயலுமா என்ன?

      ஒரு கதை நாவலாக புனையப்படுவதற்கும், காமிக்ஸாக (அ) சினிமாவாக உருமாற்றம் அடைவதற்கும் ஏகமாக வித்தியாசம் உள்ளது.

      நாவலில் நம்பகத்தன்மை மிகுந்திருக்கும். காமிக்ஸ் (அ) சினிமாவில் அது கற்பனையோடு இரண்டறக் ககலந்திருக்கும் அவ்வளவே.

      நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டால், டெக்ஸையும் ரசிக்க இயலாது. லார்கோவையும் ரசிக்க இயலாது.அவ்வளவு ஏன் குட்டியூண்டு ஸ்மர்ப்பையும் ரசிக்க இயலாது போய் விடுமே.

      Delete
    7. மச்சக்கண்ணி வாழ்க!
      மாடஸ்தி வீழ்க!

      Delete
    8. நாவல் என்றால் புனை கதை!
      புதினம்!!
      உண்மையில் காணப்படாத ஆட்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி விவாிக்கும் நூல்!
      - தரவு (Oxford Dictionary)

      நாவல் நம்பகத் தன்மை என்பதும், காமிக்ஸ் கற்பனை என்பதும் என்ன என விளங்கவில்லை!

      கல்கியின் "பொன்னியின் செல்வன்"ல் நந்தினி, வைஷ்ணவ குடுமிக்காரா், படகுக்காாி, குரவைக் கூத்தாடி, இன்னும் பல கற்பனைக் கதாப் பாத்திரங்கள் தான் கதையையே நகா்த்திச் செல்லும்!

      சிவகாமியின் சபதத்திலும் கூட கதைநாயகி "சிவகாமி"யே கற்பனைக் கதாப்பாத்திரம் தான்!

      சாண்டில்யனின் சாித்திர நாவலும் முற்றிலுமே கற்பனை கதாப்பாத்திரங்கள் தான்!

      சமூக நாவல்களும் இத்தகையதே!

      நாவல் என்பதே கற்பனை கதாப் பாத்திரங்களை சற்றே மிகைப்படுத்தி நம்மால் செய்ய முடியாததை, கொஞ்சம் உணா்ச்சி மிகுதியாக காட்ட முயல்வது தானே!

      அப்படியே கொஞ்சம் காமிக்ஸ்ன் பக்கம் திரும்புங்கள்!

      நிஜ வாழ்க்கையை அவலங்களை பகடி செய்யவே காா்ட்டூன்கள் (கேலிச் சித்திரங்கள்) உருவாயின.

      அதன் நீட்சிகள் தான் படக் கதைகளாகவும் வளா்ச்சியடைந்திருக்கின்றன!!

      உண்மையில் நிஜ வாழ்க்கையில் அதிக தொடா்புடையது காா்ட்டூன் காமிக்ஸ்கள் தான்! நம்மில் பெரும்பாலானோா் ஏனோ அதை ரசிக்கப் பழகவில்லை என்பதே இதில் வருத்தமான விஷயம்!!

      அதன்பொருட்டே காமிக்ஸ் என்றாலே காா்ட்டூன் என்று தொடா்ந்து முழங்கி வருகிறேன்!

      சினிமா முழுவதையும் பொழுது போக்கியாகவே பாா்ப்பதும் சாியல்ல!

      அகிரா குரோசவா, சத்யஜித்ரே, சாப்ளின், இன்னும் ஏராளமான ஈரானிய, கொாிய திரைப்படங்கள் உள்ளனவே!

      அவையெல்லாம் எந்த நாவலுக்கும் சளைத்தவை கிடையாது!

      சினிமாவுக்கு ஸ்டோாி போா்டு என்னும் படக்கதைப் பிாிவையே காமிக்ஸ் கலைஞா்களால் வளா்த்தெடுக்கப் பட்டதுதானே!

      அவ்வளவு ஏன் இந்தியாவின் உணா்வுப் பூா்வமான அற்புத இயக்குநா் 'சத்யஜித்ரே' ஒரு ஸ்டோாி போா்டு வரையும் ஒரு அற்புத ஓவியா் தான்!!

      நீங்கள் சொல்வது போல நாவல் வேறு, காமிக்ஸ் வேறு, சினிமா வேறு அல்ல!

      எல்லாவற்றிலும் அற்புதக் கலைப் படைப்புகளும் உண்டு; பொழுது போக்குக் கதைகளும் உண்டு!

      ஆனால் காா்ட்டூன்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு! அதனுடைய நோக்கம் பொழுதுபோக்கு அல்ல! அதிலே ஒரு சமூக, தத்துவ சிந்தனை இருக்கும்! அதை கண்டறிந்த ரசிக்க, நாம் தான் நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!

      Delete
    9. @ மிதுன்

      பட்டைய கிளப்புறீங்க பாஸ்! அரும & செம!!

      Delete
    10. கோவிந்தராஜ் @ அருமையான விமர்சனம்.

      // ஷானியா மீது மையம் கொண்ட புயல்,இம்முறை மழையாக மாறவில்லை. //

      உண்மை. இதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.

      அதேநேரம் இவருக்கு லேடி ஜேம்ஸ் பாண்ட் மாதிரி சில (உல்லாச) காட்சிகள் அமைத்து இருந்தது அந்த கதாபாத்திரம் மீது இருந்த நன்மதிப்பைப் குறைத்து விட்டது.

      Delete
    11. ///அதேநேரம் இவருக்கு லேடி ஜேம்ஸ் பாண்ட் மாதிரி சில (உல்லாச) காட்சிகள் அமைத்து இருந்தது அந்த கதாபாத்திரம் மீது இருந்த நன்மதிப்பைப் குறைத்து விட்டது.///

      ஆமா .. ஆமா ..! நம்ம இள்வர்சீ பெருசுகளோட சேர்ந்து ஒவ்வொரு கதையிலும் நடத்துற நீதிபோதனை காட்சிகளால் அவர்மேல் நன்மதிப்பு அதிகரித்துவிட்டது...!!

      நியாயந்தானுங்களே ..! :-))) 😝

      (டமாஷ் மட்டுமே பரணி ..!!! யாராச்சும் குறுக்குசால் ஓட்டிடுவாங்கன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிட்டேன் ..😃😃😃 )

      Delete
    12. கண்ணா @ இளவரசி, ஷெல்டன் பற்றி ஏற்கனவே மேலே நம்ப மாடஸ்டி ஆர்மி பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். படித்தது விட்டு வாருங்கள். ரூல் எல்லா நாயகி/நாயகர்களுக்கும் ஒன்று தான் :-)

      Delete
    13. ///அதே போல் வசனங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த வருடம் வந்த மாடஸ்டி, ஷெல்டன் மற்றும் லேடி s கதைகளில் சில வசனங்களை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம்.///

      இதுவா பரணி ..??

      வசனம் வேறு காட்சி வேறு அல்லவா??

      Delete
    14. வேறு தான். :-) காட்சி மற்றும் வசனங்கள் இணைந்து வருவதையும் சேர்த்து கொள்ளலாம்.

      Delete
  58. மச்சக்கன்னி முன்னேற்ற கழகம்
    (ம க மு க) தொடங்கப்பட்டுள்ளதை ஆரவராத்தோடு அறிவிக்கிறோம்.!
    உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டுள்ளது.
    தலைவர் செயலாளர் பொருளாளர் என்றெல்லாம் பதவிகள் நம்முடைய மகமுக வில் எப்போதும் இருக்காது ..!

    உறுப்பினர் அனைவருமே ஷானியாவின் செல்லாக்குட்டிகளாக கருதப்படுவர்.!

    (நான் மட்டும் மச்சக்கன்னிக்கு இச்சைக்கண்ணனாக கருதப்படுவேன் என்பது கொசுறு தகவல். 😍)

    ReplyDelete
    Replies
    1. அடடா... என்னோட ஃபோன் நம்பரை முன்னொருதபா இங்கே பப்ளிக்கா போட்டது தப்பாப் போச்சு! 'ம.க.மு.க' மன்றம் ஆரம்பிச்சது தெரிஞ்ச உடனே உறுப்பினர் பதவி கேட்டு தொடர்ந்து கால் மேல கால் (ஃபோன் கால் தான்!). 'நீங்கதான் இந்த மன்றத்துக்கும் செயலாளரா இருக்கணும் ஈவி அவர்களே'னு கோரிக்கை வேற! நண்பர்களின் அன்பான வேண்டுகோளை புறக்கணிக்க முடியாமத் திண்டாடிக்கிட்டிருக்கேன்! :D

      எல்லாப் புகழும் ஷா.செல்லத்திற்கே!

      Delete
    2. அதுல ஒருத்தர் "நம்ம ம.க.மு.க மன்றத்துல வாழ்நாள் உறுப்பினர் ஆகணும்னா எவ்வளவு பணம் கட்டணும்?"னு கேட்டார். "நீங்க மொதல்ல அடுத்தவருச சந்தாவக் கட்டுற வழியப் பாருங்க சார்"னு சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கேன்!

      எல்லாம் தம்மாத்துண்டு மச்சம் படுத்தும் பாடு!

      Delete
    3. சித்தே முன்னே ஒருத்தர் போன் பண்ணி ரொம்ப நேரமா எதுவுமே பேசாமயே இருந்தார்... அப்புறம் போனை வச்சுட்டார். அப்புறம்தான் அவர் ஒரு மெளனப் பார்வையாளர்னு தெரிஞ்சது. தன்னையும் உறுப்பினரா சேர்த்துக்கச் சொல்லி மெளனமாவே கேட்டிருக்கார்னும் புரிஞ்சுக்கிட்டேன்! ( courtesy : KOK )

      ஷானியா எனும் செல்லம்
      திகட்டாத பனை வெல்லம்!

      Delete
    4. தமிழ்நாட்டுலேயே முதல் முறையாக ம.க. சானியா மன்றம் கோபில ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு! யாரா இருந்தாலும் எங்க தலைமைக்கு கீழே தான் வருவீங்க! தொிஞ்சுக்கோங்ப்பா!

      (இந்த நாங்கங்கிறல தலைவா், செயலாளா், பொருளாளா், செயல்தலைவா் எல்லாமே Iam தான்)

      Delete
    5. // அப்புறம்தான் அவர் ஒரு மெளனப் பார்வையாளர்னு தெரிஞ்சது. தன்னையும் உறுப்பினரா சேர்த்துக்கச் சொல்லி மெளனமாவே கேட்டிருக்கார்னும் புரிஞ்சுக்கிட்டேன்! ( courtesy : KOK )//

      LOL :-))))

      Delete
    6. ///சித்தே முன்னே ஒருத்தர் போன் பண்ணி ரொம்ப நேரமா எதுவுமே பேசாமயே இருந்தார்... அப்புறம் போனை வச்சுட்டார். அப்புறம்தான் அவர் ஒரு மெளனப் பார்வையாளர்னு தெரிஞ்சது ///

      குருநாயரே .. அது நான்தான்.! சிக்னல் வீக்கா இருந்திருக்கும்போல..!! இந்தப்பக்கம் தொண்டைத்தண்ணி வத்த நான் கத்திட்டு இருந்தேன்., நீங்களானா எதுவுமே பேசலை .. அடடே குருநாயரும் மௌணப்பார்வையாளர் ஆயிட்டார் போலிருக்கேன்னு நினைச்சுட்டேன். .! இப்போ உங்க கமெண்ட்டை படிச்சதும்தான் That's purely our telecom's technical issue ன்னு புரிஞ்சுண்டேன்... .ஹிஹி ..!!

      Delete
    7. ஹாஹாஹா😂😂😂😂

      Delete
    8. ///தமிழ்நாட்டுலேயே முதல் முறையாக ம.க. சானியா மன்றம் கோபில ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு! யாரா இருந்தாலும் எங்க தலைமைக்கு கீழே தான் வருவீங்க! தொிஞ்சுக்கோங்ப்பா!///

      அதெல்லாம் முடியாது ..! எங்களோடது மேம்படுத்தப்பட்ட கழகமாக்கும்.!
      வோணும்னா கூட்டணி வெச்சிக்குவோம்., வோணாம்னா களத்துல சந்திப்போம். .!
      💪💪💪

      Delete
    9. ///அதெல்லாம் முடியாது ..! எங்களோடது மேம்படுத்தப்பட்ட கழகமாக்கும்.!///

      ம்.. எச்சூஸ்மீ.

      வந்து. . ..அதாவது ... ம்...ம்.. இந்த மிஸ்டுகால் கொடுத்தா கழகத்துல சேத்துக்குவீங்களா?

      Delete
    10. ///மிஸ்டுகால் கொடுத்தா கழகத்துல சேத்துக்குவீங்களா?///

      எங்க நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிவிட்டா சேத்துக்குவோம்.!

      மிஸ்டு கால் குடுத்து மிஸ்ஸானது போதாதா G P ..! :):)

      Delete
  59. ///கல்கியின் "பொன்னியின் செல்வன்"ல் நந்தினி, வைஷ்ணவ குடுமிக்காரா், படகுக்காாி, குரவைக் கூத்தாடி, இன்னும் பல கற்பனைக் கதாப் பாத்திரங்கள் தான் கதையையே நகா்த்திச் செல்லும்!///

    ஓரிருவர் கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும், முக்கிய பாத்திரங்கள் உண்மையானவைதானே.

    கதாபாத்திரங்கள் புனையப்பட்டிருப்பினும், நிகழ்வுகளும் காலகட்டமும் உண்மைதானே.அதுதானே கதையோடு ஒன்றச் செய்கிறது.

    சமூக நாவல்களும் அத்தகையதே.அவை அந்தந்த காலகட்டங்களின் நிஜ நிலைமையை அல்லவா பிரதிபலிக்கிறது.
    'தண்ணீர் 'நாவல் எழுபதுகளின் நீர் பஞ்சத்தை கண்முன் நிறுத்தியதே.அந்த மாந்தர்கள் கற்பனைதான். நிகழ்வினை மறுக்க முடியுமா என்ன.

    நாவல், முழுக்க கற்பனையாக இருந்தாலும், அதனோடு ஒன்றிவிடுவது சுலபமே. ஏனென்றால் அதற்கு மனதுக்குள் உருவம் தந்து உலவ விடுவது எளிதாகிறது.
    கதையில் தன்னையும் உள்ளிணைப்பதால் கதையானது அந்நியமாகத் தெரிவதில்லை.

    மேலும் தரவுகள் என்பது மாறாததில்லையே. அவை நமக்குள்ளே போட்டுக் கொண்ட எல்லைதானே. எட்டு பக்க சிறுகதையே இப்போ ஒரு பக்க கதையாக மாறி, ஒரு நிமிடக்கதை, ஒருவரிக்கதையாக மாறி விட்டது.அன்றும், இன்றும், என்றும் மாறாத ஒரே விசயம் ஒளியின் வேகம் மட்டுமே. மற்றவை மாறுதலுக்குட்பட்டவை.

    ReplyDelete
    Replies
    1. ////நாவல் என்பதே கற்பனை கதாப் பாத்திரங்களை சற்றே மிகைப்படுத்தி நம்மால் செய்ய முடியாததை, கொஞ்சம் உணா்ச்சி மிகுதியாக காட்ட முயல்வது தானே////

      ////நிஜ வாழ்க்கையை அவலங்களை பகடி செய்யவே காா்ட்டூன்கள் (கேலிச் சித்திரங்கள்) உருவாயின////

      இதை புாிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!

      புாிதல் இல்லாத தா்க்கம் பிரயோஜனப் படாது என்பதே என் எண்ணம் நண்பரே!

      உணா்ச்சி வயப்படுதலை பிரதானப் படுத்துவது நாவல்! இது உங்கள் உணா்வைத் தூண்டும்!

      நிஜத்தை நகைச்சுவையோடு எடுத்துரைப்பதே காா்ட்டூன்! இது அறிவைக் கொடுக்கும்!

      நாவல்கள் உணா்வை தூண்டுமே அன்றி அறிவைக் கொடுக்காது!

      மாறாக காமிக்ஸ் அறிவுச் சுரங்கம் என்பது நடைமுறையில் நான் தினமனுபவிக்கும் உண்மை!

      பொன்னியின் செல்வன் புனையப்பட்ட காவியம்!

      நிஜ சோழ வரலாறு என்பது வேறு!

      சிவகாமியின் சபதம் - சிவகாமியே கற்பனை!

      இதுபோன்ற சாித்திர நாவல்களில் அறிவாதாயம் கிடைப்பதைவிட உணா்வனுபவமே ஏராளம் கிட்டும்!

      இது வேண்டுமா வேண்டாமா என்பது தனிப்பட்ட விருப்பம்!

      அறிவை வேண்டாம் என்பதும், காமிக்ஸை வேண்டாம் என்பதும் ஒன்றே!

      பின்குறிப்பு : தற்போது பொன்னியின் செல்வன் கதையும் "காா்ட்டூன் காமிக்ஸ்" வெளியாகியுள்ளது!

      Delete
    2. நான் சொல்ல வருவது வேறு. நீங்கள் புரிந்து கொண்டது வேறு.

      இதற்கு இத்தோடு முற்றுப் புள்ளி வைப்பதே நலம்.

      நேரில் சந்திக்கும்போது இது பற்றி விவாதிக்கலாம் சார்.

      Delete
    3. ரெண்டுபேருக்கும் பொதுவா ஒரு விளக்கஞ் சொல்றேன் கேட்டுக்கோங்க...

      நாலு வரில சொல்லவேண்டியத நாலு பக்கத்துக்கு இழுத்துச் சொன்னா அது - நாவல்!

      படிச்சுக்கிட்டிருக்கும்போதே திடீர்னு 'நாலு பக்கம் காணாமல் போயிருக்குமோ...?'ன்னு நினைக்க வச்சா அது - கிராபிக் நாவல்!

      இன்னுஞ்சொல்றேன் கேட்டுக்கோங்க..

      படைப்பாளி விளக்கிச் சொல்லி நாம புரிஞ்சுக்கிட்டோம்னா அது - நாவல்!

      நாம சொல்லித்தான் படைப்பாளியே புரிஞ்சுக்கறார்னா அது - கிராபிக் நாவல்!

      ஹிஹி!

      Delete
    4. ////நாலு வரில சொல்லவேண்டியத நாலு பக்கத்துக்கு இழுத்துச் சொன்னா அது - நாவல்!

      படிச்சுக்கிட்டிருக்கும்போதே திடீர்னு 'நாலு பக்கம் காணாமல் போயிருக்குமோ...?'ன்னு நினைக்க வச்சா அது - கிராபிக் நாவல்!////

      சூப்பா் சூப்பர் 💃🌽🌽🍔🌶🍏🍆🍟

      Delete
    5. ///நாலு வரில சொல்லவேண்டியத நாலு பக்கத்துக்கு இழுத்துச் சொன்னா அது - நாவல்!

      படிச்சுக்கிட்டிருக்கும்போதே திடீர்னு 'நாலு பக்கம் காணாமல் போயிருக்குமோ...?'ன்னு நினைக்க வச்சா அது - கிராபிக் நாவல்!///

      இதை விட எளிமையாக யாராலும் விளக்க இயலாது.சூப்பர் சார்.

      Delete
  60. தம்பி சத்யா எங்க இருகிறீங்க? எப்படி இருக்கிறீங்க! அப்ப அப்ப இங்கு கொஞ்சம் வந்து தலைய காட்டிவிட்டு செல்லலாமே!

    அப்படியே நமது நண்பர் புனித சாத்தான், எப்படி இருக்கிறீங்க! அப்ப அப்ப இங்கு கொஞ்சம் வந்து தலைய காட்டிவிட்டு செல்லலாமே!

    சந்தோஷபடுவேன்!

    ReplyDelete
  61. திருமண நாள் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  62. இன்று தனது திருமணநாளை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது அன்பின் ஆசிரியர் அவர்களை வாழ்த்த வயது பற்றாத காரணத்தால் வணங்குகிறேன் 🙏🏼

    அவரும் அவர்தம் துணைவியாரும் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார். .💐💐💐

      Delete
    2. இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார். .💐💐💐

      Delete
    3. இனிய திருமணநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்!💐💐💐
      இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!

      Delete
    4. இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார்
      இன்று போல் என்றும் வாழ்க
      பல்லாண்டு வாழ்க.

      Delete
  63. இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார். .💐💐💐

    ReplyDelete
  64. இனிய திருமண வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.

    ReplyDelete
  65. @All : வாழ்த்தியதற்கு நன்றிகள் நண்பர்களே !

    ஞாபகப்படுத்தியமைக்குமே !! :-))

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஆசானுக்கு
      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

      Delete
    2. ///ஞாபகப்படுத்தியமைக்குமே !! :-)) ///

      நன்றி சொல்றதுகூட கி.நா பாணியிலேயே இருக்குங்களே எடிட்டர் சார்! :)

      Delete
    3. மேஜையில் "நிஜங்கள் நிசப்தம்" ஒய்யாரமாய்க் கிடக்கிறதே..!

      Delete
  66. எடிட்டர் அவர்களுக்கு
    எனது இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  67. அன்பு எடிட்டர் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  68. அன்பிற்குரிய எடிட்டருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  69. ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.எனது சார்பாகவும் & தாரை தலைவர் அன்பு நண்பர் பரணீதரன் அவர்களின் சார்பாகவும்.

    ReplyDelete
  70. தலைவரின் கைப்பேசி பழுதால் அவர் வாழ்த்தை தெரிவிக்க இயலவில்லை என்பதையும் தெரிவிக்கச் சொன்னார்.

    ReplyDelete
    Replies
    1. செல்லாது ...செல்லாது....proxy வாழ்த்துலாம் செல்லாது !!!

      Delete
    2. அய்யகோ இது என்ன தலைவருக்கு வந்த சோதனை.
      😇😇😇

      Delete
  71. ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  72. அன்பு எடிட்டர் அவர்கட்க்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். !

      Delete
  73. காமிக்ஸை காத்து நிற்கும் காலத் தேவனுக்கு அவர்தம் துணைவியாருக்கும் திருமண வாழ்த்துகளுடன் என்றென்றும் இறைவனின் கடாட்சம் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன். நன்றி. 💐💐💐💐💐

    ReplyDelete
  74. 2018 ஆம் ஆண்டுக்கான முழு சந்தாவும் செலுத்தியாகிவிட்டது..

    ReplyDelete
  75. 👏👏👏👏👏👏👏👏👏👏
    👌👌👌👌👌👌👌👌👌👌
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete