நண்பர்களே,
வணக்கம். முன்னெல்லாம் "ஹாட்லைன்" மாத்திரமே எனக்கான communication தளமாக இருந்தது ; நிதானமாய் தலைக்குள் தோன்றிய சகலத்தையும் அங்கு ஒப்பித்தேன் ! அப்பாலிக்கா "சிங்கத்தின் சிறு வயதில்" என்று ஆரம்பிக்க, அங்கேயும் கொஞ்சம் பின்னோக்கிய பார்வைகளுடன் பேச சாத்தியமாகியது ! ரெம்போ காலம் கழித்து நமது மறுவருகையின் சமயத்தில், இதோ இந்த blog என்ற வலைப்பூ துளிர் விட - அடுத்த 12 ஆண்டுகளுக்கு இட்லி சாப்பிட்டதிலிருந்து, தொட்டுக்க காரச் சட்னியா ? மல்லிச் சட்னியா ? என்பது வரைக்கும் அலசித் தள்ளிட முடிந்தது ! And இதோ மூன்றோ, நான்கோ மாதங்களுக்கு முன்பாய் வாட்சப்பில் "கம்யூனிட்டி" என்ற ரவுசை ஆரம்பித்த பிற்பாடு, இங்கே பதிவிட தோதுப்பட்டிருக்கா நண்பர்களோடும் கும்மியடிக்க இயன்ற வருகிறது ! பற்றாக்குறைக்கு சமீப வாரங்களில் நம்ம YouTube சேனலில் எதையாச்சும் பேசும் படலமும் ஆரம்பித்திருக்க, அங்கேயும் ஆத்தோ-ஆத்தென்று உரையாற்றிங் ! So இப்போல்லாம் காலையில் வீட்டுக்காரம்மாவைப் பார்க்கும் போது கூட "ஹை..ஹல்லோ..வணக்கம் !" என்று தான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது ! ("நீயெல்லாம் ரெம்போ லேட்டு பாஸு ; நாங்கல்லாம் கண்ணாலம் ஆன நாள் முதலாவே அப்புடி தான் !!" - என்ற இதர வீரர்களின் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை !!)
இதில் கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் நம்ம ஆபீஸ் புள்ளீங்க மாத்திரமன்றி, நமக்கு மொழிபெயர்ப்பு செய்து வரும் யுவதிகளுமே, ஆங்காங்கே நம்ம திருவாய் மலரும் படலங்களை வாசிக்க / கேட்க ஆரம்பித்துள்ளனர் என்பதால் ஜாக்கிரதையாகவே எழுத / பேச வேண்டி கீது ! ஆனால் நமக்குத் தான் மோட்டார் ஓட ஆரம்பிச்ச சற்றைக்கெல்லாமே இஷ்டப்பட்ட திக்கிலெல்லாம் வண்டி இஸ்துகினு போகுமே - so ஒரு மந்தகாச 'ஹி...ஹி..' சகிதம் கடந்து செல்ல வேண்டி வருகிறது ! And இந்த லூட்டிகள் மத்தியில் எனக்குள்ளான 'டர்ர்ர்' படலமோ இருமடங்கு படுத்தி எடுக்கிறது !
டர்ர்ர் # 1 : ஒரே விஷயத்தை இங்கேயும் எழுதி, இன்ன பிற ஒலிபரப்புகளிலும் கதைத்து, மொக்கை போடாதிருக்க வேண்டுமே என்பது பிரதான டர்ர் !
டர்ர்ர் # 2 : வேளைக்கொரு பாணியிலோ, விதத்திலோ, ஸ்டைலிலோ எழுதுவதும், செப்புவதும் நமக்கெல்லாம் அசாத்தியமே ! So ஒரே பாணியிலான நம்ம எழுத்துக்கள் / பேச்சுக்கள் உங்களுக்கு அலுத்துப்புடலாகாதே - என்பது மெயினான டர்ர்ர் !!
எந்தச் சாமியின் புண்ணியத்திலோ, இரண்டு இடர்களுக்கும் இதுவரையிலுமாவது கடுக்காய் கொடுத்து, குரங்கு பெடலடிச்சபடிக்கே வண்டியை ஓட்டி வருகிறேன் ! பெர்சனலாக எனக்கு உதறுவது கூடுதலாய் இன்னொரு காரணத்தின் பொருட்டுமே !! மொழிபெயர்ப்புகளை யாரேனும் செய்து விட்டு, எடிட்டிங் மட்டும் என் பொறுப்பாகிடும் வேளைகளில் பேனாவினை கொஞ்சம் ஓய்வாக இருந்திட அனுமதிக்கலாம் ! ஆனால் இதோ - லேட்டாகி விட்ட இம்மாதத்து ஸ்டெர்ன் கதைக்கு ஒற்றை நாளில் தமிழாக்கம் செய்திடும் லூசுத்தனமான கட்டாயம் ; ரிப்போர்ட்டர் ஜானியை கிட்டத்தட்ட முக்கால்பங்கு மாற்றி எழுதும் அவசியம் - என்றெல்லாம் நேரும் போது, மண்டைக்குள் சர்வ சதா காலமும் வஜன டயலாக்ஸ் ஓடிக்கொண்டே இருப்பது போலவே இருக்கும். And அவற்றை எல்லாம் தக்கி, முக்கி முடிக்கும் நொடியில், வாரமே ஓட்டம் கண்டிருக்க, இங்கே blog-ல் புதுசாய், சுவாரஸ்யமாய் எதையாச்சும் எழுதும் சமயம் புலர்ந்திருக்கும் ! So நமக்கே நம்ம வரிகளை கண்டு போரடிச்சுப்புடுமோ ? என்ற பயமும் அவ்வப்போது தலைதூக்குவதை மறுக்க மாட்டேன் !
நான்பாட்டுக்கு "அது பாருங்க.....எங்க ஊரு பரோட்டாவை பிச்சி போட்டு சால்னா ஊத்தினா.." என்று foodvlogs பாணியிலோ ; அல்லது, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு கருத்து சொல்லும் கந்சாமியாகவோ ; அல்லது "டிரம்பை வன்மையாய் கண்டிக்கிறேன் !!" என்று சவுண்டு விடும் சுந்தரனாகவோ இருந்திடும் பட்சத்தில், content-க்குப் பஞ்சம் எழாது தான் ! ஆனால் நாமோ, நம்ம புழைப்பைத் தவிர்த்து வேறு எது பற்றியும் எழுதுவதில்லை எனும் போது, நடுநடுவே ரோசனையில் கேசத்தைக் கொஞ்சமாய் பிய்த்துக் கொள்ள வேண்டி வரும் தான் ! But - மாதம்தோறும் 4 புக்ஸ் என்பதால், எழுத சமாச்சாரம் இல்லாதே போவதில்லை & பற்றாக்குறைக்கு "சுந்தர சந்துக்குள் உலா போவோமா நைனா ?" என்று ஆராச்சும் அவ்வப்போது அன்பொழுக இட்டுப் போவதும் நடைமுறை என்பதால், blog வண்டி சீராகப் பயணித்து வருகிறது ! இதோ - இதுவும் ஒரு 4 புக் மாசம் எனும் போது லேப்டாப்பை தூக்கிக்கினு குந்தும் சமயமே பதிவு உருவகம் கண்டு விட்டது !! So here we go :
பொழுதுபோக்கு துறையில் இருக்கும் அம்புட்டு பேருக்கும் பிடித்தமானதொரு phrase - "ரொம்பவே வித்தியாசமான" என்ற ஜிகினா தான் ! நம்மளுமே அந்த ஜோதியில் சேர்த்தி தான் ; "வித்தியாசமான கதைக்களம்" என்று ஜடாமுடி ஜானதனுக்கும் பில்டப் தந்தவர்களாச்சே ! But trust me guys - இந்த அக்டோபரின் நான்கு - மெய்யாலுமே ஒன்றுக்கொன்று நிரம்ப மாறுபட்டவையே !!
*ஒரு அக்மார்க் கவ்பாய் தொடர் - டெக்ஸ் ரூபத்தில் !!
*இன்னொரு West களமே - வெட்டியான் ஸ்டெர்னுக்கும் - but முன்னதுக்கும், பின்னதுக்கும், இம்மி கூட ஒற்றுமை இராது ! முதலாவது கற்பனையின் மிகை எனில், இரண்டாவதோ நிஜத்தின் gory முகத்துடனானது !!
*அப்புறம் ஒரு க்ரைம் த்ரில்லர் - ரிப்போர்ட்டர் ஜானியின் ரூபத்தில், பாரிஸ் எனும் வட்டத்துக்குள் !
*மறுபடியும் ஒரு க்ரைம் த்ரில்லர் - இம்முறையோ பூமியின் ஒரு துருவ எல்லைக்கே இட்டுச் செல்லும் பாணியில் - ப்ருனோ ப்ரேசில் புண்ணியத்தில் !
So ஒரே மாதிரித் தோன்றினாலும், ஒரே மாதிரியானவை அல்ல எனும் போது - "வாசு"என்றதொரு வாசகனாய் மட்டும் நானிருப்பின், இந்த நான்கினுள் எவற்றை எந்த வரிசையில் வாசிப்பேன் ? என்று யோசிக்கத் தோன்றியது ! ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்துக்கே தீர்வு சொல்லும் ஆற்றல் வாய்ந்த அந்த மகா ரோசனையே இந்த வாரத்தின் பதிவு :
Honestly - உள்ளே காத்திருப்பது என்னவென்று தெரியாத வாசகப் பார்வையில் நானிருந்திருக்கும் பட்சத்தில் சர்வ நிச்சயமாய் உள்ளே இழுத்திருக்கக்கூடியது ஸ்டெர்ன் தான் !! அந்த மனிதனிடம், அந்தக் கதாப்பாத்திரத்திடம், அவரை கதாசிரியர் இட்டுச் செல்லும் இடங்களிடம் - ஒரு இனம்புரியா சோகம், தனிமை இருப்பது போலவே எனக்குத் தோன்றுவதுண்டு ! முகத்தில் ஒரு சலனமற்ற expression மாத்திரமே, ஆனால் அவரது உணர்வுகளை சுற்றுமுற்றும் இருக்கும் சூழலைக் கொண்டே கடத்திடுவதில் ஓவியர் செம ஜித்து எனும் போது, ஸ்டெர்ன் பெருசாய் முகத்தில் எமோஷன்ஸ் காட்டிட அவசியமாவதில்லை ! And எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஈர்ப்பது அந்த சித்திர ஸ்டைலும், கலரிங்கும் தான் ! அந்த இரண்டுக்காகவுமே ஆட்டத்தை வெட்டியானிடமிருந்தே ஆரம்பித்திருப்பேன் ! ஒற்றை வசனம் கூட இல்லாத முழுப் பக்கங்கள் ; மொழிபெயர்ப்பாளனாய் அவற்றைக் கடந்திடும் போது "ஹை...ஜாலி..ஜாலி !!" என்று கூவும் உள்ளம், ஒரு வாசகனாகவுமே கூவியிருக்கும் - கதை நகர்த்தலுக்கு மௌனத்தையே பாஷையாக்கி ஓவியர் செய்திருக்கும் அட்டகாசத்தைக் கண்டு ! And அந்த அழகுப் பெண் வாலென்டினா அறிமுகமாகும் பக்கத்தில் கலரிங் திடீரென வேறொரு உச்சத்தில் செம bright ஆகிடுவதை ரசிக்கத் தவறியே இருக்க மாட்டேன் ! கதையோடு மூழ்கும் போது என்னை impress செய்திடும் முதல் பாத்திரமாய் மர்ரே என்ற அந்த சீனியர் (கருப்பு) வெட்டியான் தான் இருந்திருப்பார் ! வெட்டியான் வேலையினையும் ஒரு ஒழுக்கத்தோடு, கர்ம சிரத்தையாய் செய்யும் மனுஷன், தனக்கு ஜூனியராக வந்து சேரும் ஸ்டெர்னுக்கு திடீரென பெரிய இடது சகவாசமெல்லாம் கிடைக்கும் போதுமே பொறாமை கொள்ளாது, இயல்பாய் தன பிழைப்பைப் பார்த்துச் செல்வதில் காட்டிய கண்ணியத்தை ரசித்திருப்பேன் ! பற்றாக்குறைக்கு, மனசு ஒடிஞ்சு போய் ஸ்டெர்ன் திரும்பும் சமயத்தில், "ஹி..ஹி..ஹி..நாங்க தான் சொன்னோம்லே... உன் முகரைக்கு அந்தப் பொண்ணு கேக்குதாக்கும் ?" என்று கெக்கலிக்காது - "நண்பா...இது நியூ ஆர்லியன்ஸ் ! இன்னிக்கி ராத்திரிக்குள்ளாற அவளை விடவும் பத்து மடங்கு அழகான ஒரு மந்தைப் பொண்ணுங்களை நீ சந்திக்க வாய்ப்புண்டு !!" என்று தேறுதல் சொல்வது அற்புதம் !! அதே போல "இந்தப் பெண் நம்ம ரேஞ்சுக்கு அப்பாற்பட்ட பெரிய இடம் தான் ; ஆனாலும் அவளது காதல் நமக்குக் கிடைக்க ஏதாச்சுமொரு அதிசயம் நிகழ்ந்து விடாதா ?" என்ற கடைசிக் கட்டம் வரைக்குமான மௌன ஏக்கம் நிச்சயமாய் ஸ்டெர்ன் மீது எனது கரிசனத்தைக் கூட்டியிருக்கும் ! அதே சமயம், கதையின் வில்லனாக பில்டப் தந்து ரெடியாகும் "சேலம்" - படித்துறை பாண்டி ரேஞ்சிலான பிஞ்சு வில்லனே என்பதை உணர்ந்த சமயம் கொஞ்சம் ஏமாற்றம் தலைதூக்கவே செய்திருக்கும் ! But ஸ்ட்ராங்கான அந்தப் பெண்மணி கேரக்டரும், க்ளைமாக்சில் நடந்திடும் களேபரங்களும், அதன் மத்தியில் நம்மாள் ஸ்டெர்னுக்கு கிடைக்கும் ஒரு "இச்" ஜாக்பாட்டும் அந்த ஏமாற்றத்தினை மறக்கடித்திருக்கும் ! In fact - படித்து முடிக்கும் நொடியில், கதையில் ஆழம் குறைச்சலோ ? என்ற எண்ணம் மேலோங்கியிருந்தாலும், கொஞ்ச நேரம் அந்த அனுபவத்தினை அசை போட்ட பிற்பாடு - ஸ்டெர்னின் யதார்த்த கதாப்பாத்திரத்துக்கு இது தான் சரி என்றே தோன்றியிருக்கும் ! கதை முழுசும் விரவிக் கிடக்கும் அந்த melancholy ; இறுதிப் பக்கத்தில் ஆளே இல்லாத அறையிலிருந்து குடையை விரித்தபடிக்கே மெது நடை போடும் ஸ்டெர்னை காட்டி ஓவியர் தந்திருக்கும் ஓராயிரம் குட்பைகளை ரசித்தபடிக்கே 8 /10 போட்டிருப்பேன் !
எனது அடுத்த தேர்வு நிச்சயமாய் ப்ருனோ ப்ரேசில் 2.0 வாகத் தானிருந்திருப்பார் - becos டெக்சிலும் சரி, ரிப்போர்ட்டர் ஜானியிலும் சரி - என்ன எதிர்பார்ப்பதென்று முன்னமே எனக்கொரு ஐடியா இருந்திருக்கும் ! ஆனால் கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்குப் பின்பாய் மீள்வருகை செய்திடும் முதலைப் பட்டாளம் சொல்ல வருவது என்னவோ ? என்ற curiosity என்னை உள்ளே இழுத்திருக்கும் ! அட்டைப்படத்திலேயே ரெண்டு நிமிஷம் லயித்திருப்பேன் - அந்த ஓவிய ஜாலத்தில் மயங்கியவனாய் !! இங்கும் ப்ருனோவின் விழிகளில் தென்படும் ஒரு மென்சோகம் கதை சார்ந்த எனது ஆர்வத்தினை அதிகப்படுத்தி இருக்கும் ! மெதுவாய் உள்ளே புகுந்தால் உட்பக்க சித்திரங்கள் மட்டுமன்றி, அந்த layout கூட என்னை நிரம்ப இம்ப்ரெஸ் செய்திருக்கும் ! பின்னணிகளுக்கு முக்கியத்துவம் தந்திட வேண்டிய தருணங்களில் பக்கத்துக்கு நான்கே படங்கள் - page 12 போல !! அதே போல ஒரு குளிர் பிரதேசத்து பாரை கண்ணில் காட்டிடும் போது ஓவியரின் details சார்ந்த நுணுக்கம் (பாருங்களேன் page 17) ; அந்த வானிலை அறிக்கை வாசிக்கத் துவங்கும் நொடியில் அங்குள்ளோர் அனைவரும் அதற்கு முழுக்கவனமும் தந்திடும் யதார்த்த பாங்கு - இது வெறும் பொம்ம புக் அல்ல ; இதன் பின்னணியில் ஒரு லோடு research உள்ளதென்பதை புரியச் செய்திருக்கும் ! And கதைக்குள் ஆழமாய்ப் போகப் போக, அந்த வடதுருவத்து வனாந்திரங்கள், அங்குள்ள வித்தியாசமான இன்யூட்கள், அவர்களது வாழ்க்கை முறைகளோடு பின்னிப் படரும் கதைக்களத்தை நிச்சயம் ரசித்திருப்பேன் ! 'இது போலத்தான் கதையின் மையப்புள்ளி இருக்கும் ' என்பதை யூகிக்க ஆங்காங்கே குறிப்புகளை கதாசிரியர் சிதற விட்டுச் சென்றிருந்தாலும், நம் கண்முன்னே உயிரோட்டமான சித்திரங்களுடன் கதை ஒரு க்ளைமாக்ஸை நோக்கி unravel ஆகிடுவதையே விரும்பியிருப்பேன் ! அந்தப் பழங்குடிச் சிறுவன் ; அவனுக்கிருக்கும் அந்த விசேஷ ஆற்றல் ; அதனை 'காதிலே பூ' சமாச்சாரம் போல தெரியவிடாமலே கதாசிரியர் நகர்த்திக் கொண்டு சென்ற லாவகத்தை நிச்சயம் applaud செய்திருப்பேன் ! கொஞ்சம் மிகையான கற்பனையாய் க்ளைமாக்ஸ் தென்பட்டிருந்தாலுமே, வாசிப்பின் முடிவில் 9 /10 மார்க் போட தயங்கியே இருக்க மாட்டேன் தான் !
And வாசகனாகவோ, புடலங்காய் எடிட்டராகவோ, எந்த அவதாரத்தில் இருந்திருந்தாலும் கடைசிப் பக்கத்தில் ஒரு கணம் தடுமாறி நின்றே இருப்பேன் - அங்கிருந்தது அம்மாவின் நினைவஞ்சலிப் படம் என்பதால் ! Of course இழப்புகளை சந்திக்காதோர் எவரும் இருக்க முடியாது தான் & முடிவே இன்றி இந்த ஆயுள் யாருக்கும் தொடரவே போவதுமில்லை தான் ! Yet - அம்மாவின் அந்த போட்டோவை பார்க்கும் நொடியில் கடைசி 4 வருடங்களில் அவர் பட்ட கஷ்டங்களும், வலி, வேதனைகளும் தான் மனதில் நிழலாடுகின்றன ! எங்கள் சக்திகளுக்கு மீறியும் செலவழித்து வைத்தியம் பார்க்க முயற்சித்தும், அவரது வலிகளை இறுதி வரைக்கும் மட்டுப்படுத்த இயலவில்லையே என்ற ஆற்றாமை தான் இன்னமும் பிடுங்கித் தின்னுகிறது ! 2018-ன் இறுதியில் ஒரு இக்கட்டான அறுவை சிகிச்சையின் போதே அம்மா இயற்கை எய்தியிருப்பின் ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்த திருப்தி எல்லோருக்குமே கிட்டியிருக்கும் ! ஆனால் அன்று பிழைக்கச் செய்த எங்களுக்கு, தொடர்ந்த 4 ஆண்டுகளின் இன்னல்களை தடுக்கவே முடியாது போனது தான் விதியின் கோர முகம் போலும் !! சாரி folks ; இது இங்கே தேவையில்லா ஒரு சமாச்சாரமாய் இருக்கக்கூடும் தான் - but அந்த கடைசிப் பக்கத்தைப் பார்த்து விட்டு இதை எழுதாது இருக்க முடியவில்லை !! Sorry again !!
Moving on, எனது வாசிப்பு # 3 நிச்சயமாய் டெக்ஸாகவே இருந்திருக்கும் ! 'தல' நம்பள் கி சர்டிபிகேட்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் எனும் போது - அவரைப் பற்றியோ, கதையைப் பற்றியோ 'ஆஹா..ஓஹோ..' என்றெல்லாம் எழுத மெனெக்கெட மாட்டேன் ! மாறாக, அட்டகாசமான சித்திரங்களை ரசித்தபடிக்கே அந்த வன்மேற்குக்குள் நுழையும் கணமே, போனெல்லியின் ஒட்டு மொத்த டீமுக்குமே ஒரு மானசீக வணக்கத்தைப் போட்டிருப்பேன் ! கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு நாயகரை, நாம் யாரும் கண்ணில் பார்த்தே இருக்காத பூமியில் உலவ விட்டு, அங்கேயே தொடர் வெற்றிக்கொடிகளை நாட்டிடச் செய்வதென்பது எத்தனை அசாத்திய சாதனை !! அதை இம்மி பிசகாமல் ஆண்டுதோறும், மாதம்தோறும் செய்து வரும் அசாத்தியர்களை என்னவென்று புதுசாய் சிலாகிப்பது ? சிங்கிள் ஆல்பம் ; அதுவும் நம்ம V காமிக்சில் - so நிச்சயமாய் இது செம breezy read ஆகவே இருந்திடுமென்ற எதிர்பார்ப்போடே ஒரு துள்ளலுடன் உட்புகுந்திருப்பேன் ! மிரளச் செய்யும் உயிரோட்டமான சித்திரங்கள் இங்கேயும் கட்டிப் போட, 'நீங்க வந்தா மட்டும் போதும்....நீங்க வந்தா மட்டும் போதும்" என்று டெக்சிடம் வழிந்து தள்ளியிருப்பேன் ! சிம்பிளான storyline ; இருப்பினும் அதனை துளி தொய்வுமின்றி நகற்றிச் சென்றுள்ள பாங்குக்கே சென்டம் தரலாம் என்ற சபலம் எழும் ; but "சொடலமுத்து ரொம்ப ஸ்டிக்ட்டுப்பா !!" என்ற சிலாகிப்பை ஈட்டவாச்சும் 8.5 /10 போட்டிருப்பேன் !
Last, but not the least - ரிப்போர்ட்டர் ஜானியின் "நள்ளிரவின் நாயகன்" !!
இந்த இதழைக் கையில் எடுத்துப் புரட்டும் போது எனக்குத் தோன்றியிருக்கக்கூடிய முதல் சிந்தனை - இதனை அச்சிட்ட பிரிண்டரைக் கூப்பிட்டு ஒரு மோதிரம் போடுவதாகவே இருந்திருக்கும் ! But தங்கம் விற்கின்ற விலைக்கு அதுலாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்பதால், எங்க பால்யங்களில் போல, ஒரு ஜவ்வுமிட்டாய் மோதிரத்தை செஞ்சு வாங்கி அவருக்கு மாட்டி விட்டிருப்பேன் ! Oh wow - இந்த இதழின் பிரிண்டிங்கில் தான் என்னவொரு துல்லியம் !!! லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங்கில் படைப்பாளிகள் பின்னிப் பெடலெடுத்துள்ளனர் தான் - but still அதை துளியும் சொதப்பாது அச்சில் கொணர்வது சுலபமே ஆகாது !! செவாசிக்காரன் என்றமுறையில் அது பற்றி "வாசு" வுக்குக் கூட விபரம் தெரிந்தே இருக்கும் !! பக்கம் 26 -ஐ பாருங்களேன் : இரவில் ஷூட்டிங் நடக்கிறது ; அந்த லைட்ஸ் உமிழும் ஒளி ; அப்புறமாய் கடைசி பிரேமில் மோட்டார் சைக்கிளில் வரும் வில்லனை highlight செய்திட க்ரே பின்னணி ! அதே போல பக்கம் 35 !!! காரின் ஹெட்லைட்ஸ் எறியும் ஒளி ; பூட்டியுள்ள ஆபீசுக்குள் இருளில் ஜானி புகும் போது அவர் முகத்தில் தெரியும் பிரதிபலிப்பு ; தரையில் சிகப்பு அம்புகளோடு நிலா வெளிச்சம் - என கலரிங்கில் அவர்கள் செய்துள்ள அத்தனை அதகளங்களையும் பிசிறின்றி இங்கு அச்சில் நமக்குக் கொண்டு வந்துள்ளார்களே - hats off !!
ஆங்...கதையைப் பொறுத்தவரை இங்கே எல்லோருமே நம்ம ஸ்டீலின் தட்கல் பின்னூட்டங்களின் பாணியிலேயே பேசுவதால் பேந்தப் பேந்த முழித்தபடிக்கே பயணித்திருப்பேன் ! Oh yes - முடிச்சு முடிச்சா போட்டுகினே போவார் ; கடாசி 2 பக்கங்களில் தான் சகலத்தையும் அவிழ்ப்பார் என்பதும் தெரியும் தான் ! Yet - ஆந்தை விழிகள் எக்ஸ்ட்ராவாய் ரெண்டு mm திறந்தே இருப்பது போல் பட்டது - கதை நெடுகிலும் !! And நம்ம ஜானிகிட்டே நாம் எதிர்பார்ப்பதே இந்த இடியாப்பங்களைத் தான் எனும் போது, கதையை முழுசாய் படித்து முடித்த கணத்தில் - ஒரு ஜிகர்தண்டாவை அடிச்ச குஷி விரவி நின்றிருக்கும் !! My marks : 7.5 /10
So, இந்த மாதத்து இதழ்களை இந்த டப்ஸா வாசுவின் பார்வையில் பாத்தாச்சு ! இனி மெயின் ; ஒரிஜினல் ; அசல் "வாசுக்கள்" ஆகிய நீங்கள் தான் அலசி, ஆராய்ந்து மார்க் போட்டாக வேணும் !! ஒரு சித்திர அதகளமான அக்டோபர் முழுசாய் சாதித்துள்ளதா ? என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்க் காத்திருப்போம் !! Bye all ....have a beautiful weekend !! See you around !!
And lest I forget :
- திருச்சி
- விருதுநகர்
- தூத்துக்குடி
என ஒரே சமயத்தில் 3 இலக்குகள் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறோம் !! இது நமக்கொரு record !!! ஆங்காங்கே வருண பகவான் மட்டும் புகுந்து விடுகிறார் ; மற்றபடிக்கு ரகளைஸ் தான் !! அதிலும் தூத்துக்குடி இறுதி நொடியில் எடுத்த தீர்மானம் - and அங்கு கிட்டிடும் விற்பனை a real surprise !!! Thanks all !!!
என்ன அதிசயம்
ReplyDeleteMe in..😍😘
ReplyDeleteHi
ReplyDeleteHi
ReplyDeleteJai thorgal
ReplyDeleteWow 🤩
ReplyDeleteவணக்கமுங்கோ…
ReplyDeleteSixth
ReplyDeleteOh 😱 my god ... I am in 4th
ReplyDeleteWelcome friend
Deleteவணக்கம்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteவணக்கமுங்க!
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete//ஆனால் அன்று பிழைக்கச் செய்த எங்களுக்கு, தொடர்ந்த 4 ஆண்டுகளின் இன்னல்களை தடுக்கவே முடியாது போனது தான் விதியின் கோர முகம் போலும் !!//
ReplyDeleteமரணம் மகா கொடுமையானது...
படித்தது கொஞ்சம் தான்... துக்கம் தொண்டையை அடைக்கும் அளவு பேச்சு அற்று போனாலும்... அம்மாவின் இழப்பு.ஈடு செய்யவே முடியாது போனாலும்...
வாழ்நாள் முழுதும் அழுகையை அடக்க முடியாது போனாலும், உங்களின் பேணிய அம்மாவின் வலியை மனதில் கொண்டு...
Deleteபடைத்தவரிடம் அன்பு கூறும் எவருக்கும் சகலமும் நன்மைக்கே நடக்கிறது என்பதே நமக்கு கிடைக்கும் பெரும் ஆறுதல்... நம்பிக்கை தானே ஐயா எல்லாமே.
எல்லாம் கடந்து போகும் ஆதி !
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteநானும் ஜானியைதான் முதலில் படிக்க வேண்டும் என்று எண்ணினாலும் மனது ப்ரூனோ பிரேசிலைதான் செலக்ட் செய்தது.😘👍
பனிபிரதேசத்தில் நடக்கும் தடாலடிகள் அருமை.👌
IWSO ல் நானும் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்..😘✊👍
கதை, திரைக்கதை, வசனம், சித்திரங்கள் அத்தனைக்கும் 10/10..❤💛💙💚💜
ஆஹா....கோடாரி மாயாத்மா பேரவை அம்போவா ?
Deleteஇவருதான் ஜம்போவாச்சே சார்....தாவட்டும்...அங்கிமிங்கும்
Deleteவணக்கம்
ReplyDeleteகாமிக்ஸ் உறவுகளுக்கு வணக்கங்கள்❤️🙏
ReplyDelete@Edi Sir..🙏
ReplyDeleteஅம்மாவின் இழப்பை யாராலும் ஈடு செய்ய இயலாதுதான்..😥
வாருங்கள் கடந்துசெல்வோம்..
அடுத்த கட்டத்தை நோக்கி..🙏அம்மாவின் ஆசிர்வாதங்களுடன்..💐💐
நிச்சயமாக சார் !!
Delete🙏🙏🙏🙏🙏🙏
Deletehi
ReplyDeleteஇறைவன் மிகக் கொடூரமானவன் என்று சில சமயங்களில் நான் நினைப்பேன். அது உண்மை என்று பல சமயம் உறுதியாகியுள்ளது. அதில் ஆசிரியரின் அன்னை இழப்பும் ஒன்று. மரணம் மட்டுமே நிரந்தரமானது தான். அந்த மரணம் கூட ஏன் வலிகளோடும் வேதனைகளோடும் ஏன் இறைவன் தர வேண்டும். அன்னையின் ஆசிகள் என்றென்றும் ஆசிரியர் தங்களுக்கு உண்டு. அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாறிக் கொண்டிருக்கும். கொண்டிருக்கும்
ReplyDeleteHi..
ReplyDelete28th
ReplyDeleteஜானி, பிரேசில் கதைகள் நன்று...
ReplyDeleteமற்ற கதைகள் இனிமேல் தான்
Deleteஅதென்ன ஜானிக்கு மட்டும் 7.5 மார்க். இது போங்கு ஆட்டம்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் அட்டைப் படங்கள் நாலுமே அசத்த...உத்து பாத்தா ஜானி எல்லாத்தையும் விட பளபளக்க...பட்டய கிளப்புது டெக்ஸ் நானே டாப்பென...
ReplyDeleteஉள்ள புரட்டுனா ...முதல்கட்ட ( முதல்காட்சிக்கே கொடுத்த பணம் ஈடுன்னு தோண)வழிமறிக்கும் மரத்த கஷ்டபட்டு கடக்க ... நம்ம வெட்டியான் அசால்டா இழுக்க ஒட்டுக்காக படிப்போம்னு நிதானமா தள்ள...
டெக்ஸ் துவக்கமும் பதறவைக்க...என்னாகுமோ அடுத்து என அச்சப்பட்டு பாத்தா டெக்சும் கார்சனும் அதிரடியாக எழ ...ஆஹான்னு துள்ளவைக்கும் எண்ட்ரில இதுவரை வந்த எண்ட்ரில டாப்னு ஓவியங்க தலையில்லா போராளி சைசுல வந்தா என ஏங்க வெக்க...அடுத்து படிக்கைல துள்ள வைக்கனுமேன்னு அடுத்த கட்டத்த தாண்டாம தள்ள...ஜானியும் துவக்கத்திலேபதற வைக்க பின்பு ஒன்னுமில்லன்னு சிதற வைக்க நாளைன்னு தள்ளி வைக்க...
எல்லாரும் ஓரமா போங்கப்பூன்னு துவக்க கட்ட காட்சிய பார்ப்பதா...சிதறி கிடக்கும் வரிகள் சேப்பதான்னு ...வண்ணத்தை கோப்பதான்னு யோசிக்க விடாம சிம்பாளிக்கா டாப்ஸ்பீடு காரக்காட்டி கதையும் டாப்ஸ்பீடெடுக்க சத்தியம் செய்து தெறிக்க வைக்க...நடு சாமம் படிப்போம்னு ...சாமத்துல வாரேன் சாமந்தி பூ தாரேன்ன கதையோட தூங்க...இப்ப துவங்கியாச் மரண ஓட்டத்த அந்த மீன்களுக்கு நடுவே யாரென ...செம சார்...லார்கோ துவக்க கதை கார் சேசிங்க நினைவு படுத்தி அதையும் மிஞ்சுமோ என பார்கிறேன் பாயிலிருந்தெழுந்து
பதிவு துவக்கம் சூப்பர் சார்...கதய சொல்ல ஆரம்பிச்சதால முதல்முறையா கஷ்டபட்டு கடக்கிறேன்...படிச்சி பிறகு விமர்சனத்தோட உங்க விமர்சனத்துக்கு வாரேன்
ReplyDeleteFacebook ல் எழுதியது இங்கும்.
ReplyDeleteமாயா.. எல்லாம் மாயா...!
லயன் காமிக்ஸ்
முத்து காமிக்ஸ்
ஸ்டெர்ன்
இம்மாதம் வெளிவந்துள்ள ஸ்டெர்னின் மாயா.. எல்லாம் மாயா...! வாசித்தேன்,
நியூ ஆர்லியன்ஸில் உள்ள ஒரு பணக்கார யுவதி ஒருத்தி உள்ளூரில் அமானுஷ்ய மேஜிக் ஷோ நடத்தும் விக்டர் சேலம் என்பவனின் பிடியில் இருப்பதாக அவளின் தந்தை நம்புகிறார். நமது நாயகன் எலிஜா ஸ்டெர்னிடம் தம் மகளை அந்த விக்டரிடம் இருந்து விடுவித்து தருமாறு கோருகிறார் அவளின் தந்தை. அவரின் கோரிக்கைக்கு சம்மதிகிறார், இறுதியில் அந்த விக்டர் சேலம் என்பவனின் பிடியில் ஸ்டெர்னே சென்று மாட்டிகொள்கிறார். இறுதியில் அவர் மீண்டரா? அந்த யுவதியை காப்பாற்றினாரா? என்பதுதான் மொத்தக்கதை.
மேற்படி மெல்லிய கதைக்கு JULIEN MAFFRE அவர்களின் அபாரமான சித்திரங்கள்தான் பெரும் பலமாக அமைந்துள்ளது. அந்த கால நியூ ஆர்லியன்ஸ் நகரின் கட்டிடங்கள், தெருக்கள், குறிப்பாக அந்த ஊரின் சுடுகாடு என ஒவ்வொரு பேணலும் நம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. மேலும் கதையை சில இடங்களில் வசனமேயின்றி மெளனமாக சித்திரங்கள் வழியே சொல்லும் பாணி மிகவும் அபாரமாக உள்ளது. துவக்கத்தில் கத்தோலிக்கர், ப்ராட்டஸ்டண்ட், யூதர், ஊடு நம்பிக்கை சார்ந்தோர், கருப்பர் என ஐந்து வகை நம்பிக்கை உள்ள மக்கள் அந்நகரில் வசிப்பதாக கூறி, அவரவருக்கு மயானத்தில் தனி இடம் உண்டு என்பதாக ஒரு வசனம் வரும். அதை தொடர்ந்து ஒரே நாளில் அந்த ஐந்து நம்பிக்கை ஆட்களின் சவ அடக்க காட்சியை ஓவியர் JULIEN MAFFRE கையாண்டுள்ள விதம் உண்மையில் அசத்தல், அடுத்தக் காட்சியில் விக்டர் சேலம் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் சுமார் ஒரு மணிநேரம் நீளும் காட்சியை உருகும் மெழுகுவர்த்தியை கொண்டு காட்சிப் படுத்தியது அபாரம்.
கதை என்னவோ அழுத்தமற்று தோன்றினாலும், ஓவியர் JULIEN MAFFRE அவர்களின் சித்திர நேர்த்திக்காகவே இந்த ஸ்டெர்னின் மாயா.. எல்லாம் மாயா...! புத்தகத்தை வாங்கிடலாம்.
கீழே நான் விவரித்த சித்திர பக்கங்களை இணைத்துள்ளேன்.
நவீன வெட்டியான் ரசிகர்கள் வட்டம் பெரியதாகி வருகிறது. மகிழ்ச்சி
DeleteFacebook ல் எழுதியது இங்கும்.
ReplyDeleteபனிக்கடலில் முதலைகள்!
லயன் காமிக்ஸ்
முத்து காமிக்ஸ்
ப்ருனோ ப்ரேஸில்
இம்மாதம் முத்துவில் வெளிவந்துள்ள ப்ருனோ பிரேஸிலின் பனிக்கடலில் முதலைகள்! வாசித்தேன். ஒரே வார்த்தையில் சொல்வது எனில் கதை படு அட்டகாசம்.
கிட்டத்தட்ட வெகு ஆண்டுகளுக்கு பிறகு நம் தோழர் ப்ருனோ மற்றும் அவரது டீமை சந்திக்கிறேன். குள்ள நரிகளின் இரவு! தான் ப்ருனோ வந்த கடைசி கதை என்று எண்ணுகிறேன்.
ஸ்டெர்னின் கதையை வாசித்து முடித்ததும் அடுத்து ரிப்போர்டர் ஜானி கதையைத்தான் வாசிக்க தேர்வு செய்தேன்.. ஏனோ முதல் இரண்டு பேணல் வாசித்ததுமே சுவாரஸ்யம் குறைந்து போய்.. ப்ருனோவை வாசிக்க எடுத்துக் கொண்டேன். “என்னை வசித்து விட்டு தான் நீ மறுவேலை செய்ய போகவேண்டும்!” எனும் அளவுக்கு ப்ருனோவின் புத்தகம் என்னை ஈர்த்துக் கொண்டது.
முதலைப் பட்டாளம் டீமின் மறுவருகைக்கு நல்வரவு.
பாஸ்டன் கான்லே துறைமுகத்துக்கு பதப்படுத்திய மீன்கள் வந்து சேர்க்கிறது. மீன்களை வேனில் கொட்டும்போது மீன்களோடு ஒரு மனித உடலும் வந்து விழுகிறது. போதாதற்கு அந்த உடலின் கழுத்து மற்றும் முன்னங்கை தோலில் மீனைப் போன்று செதில் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த இறந்த மனித உடலில் இரத்ததிற்கு பதில் ஆக்சிஜன் தான் உள்ளது என்று ரிப்போர்ட் கூறுகிறது. இதன் மர்மம் என்ன என பரபரவென்று கூறியுள்ளனர்.
கதாசிரியர் LE BOLLE மிகவும் தெள்ளத் தெளிவான ஸ்க்ரிப்டை எழுதியுள்ளார். முதல் பக்கம் துவக்கி இறுதிவரை கொஞ்சம்கூட சுவாரஸ்யம் குன்றவில்லை அந்தளவிற்கு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
சித்திரங்கள் PHILIPPE AYMOND அவர்கள். தமது ஆற்றல் மிகு சித்திரங்கள் மூலம் இக்கதைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். முன்பு இந்த கதை வரிசைக்கு சித்திரம் வில்லியம் வான்ஸ் அவர்கள்.. அவரின் சித்திர தரம் எந்தளவிற்கு இருக்கும் என்பது நமக்கு நன்கு தெரியும், அந்தளவிற்கு ஈடுகொடுத்து PHILIPPE AYMOND அவர்கள் தமது சித்திரங்களால் நம்மை வசீகரிக்கிறார்.
கலரிங் DIDIER RAY அவர்கள். உண்மையில் இந்தக் கதையின் நிஜ நாயகர் இந்த கலரிங் ஆர்டிஸ்ட்தான். ஒவ்வொரு பேணலிலும் தமது கைவண்ணத்தால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். மேஸ சூ செட்ஸ் நகரில் நடக்கும் காட்சிகளும், கனடாவின் எஸ்கிமோ பாயிண்டில் உள்ள பனிப்பொழிவு காட்சிகள், யுடா வின் இயற்கை காட்சிகளும் வண்ணச்சேர்க்கை அற்புதம். முதல் பேணல் துவங்கி இறுதி பேணல் வரை வர்ண ஜாலம் செய்துள்ளார் இந்த DIDIER RAY அவர்கள்.
இந்த மாதம் வெளிவந்துள்ள கதைகளில் ப்ருனோவின் பனிக்கடலில் முதலைகள்! தான் முதலிடம் பிடிக்கும் என்று எண்ணுகிறேன். இவ்வருடத்தின் சிறந்த கதைகள் பட்டியலில் இக்கதைக்கு நிச்சயம் இடமுண்டு.
தற்போது வந்துள்ள பனிக்கடலில் முதலைகள்! (Terreur boréale à Eskimo Point, 2022) ப்ருனோவின் The new adventures சீரிஸின் மூன்றாவது கதை. முதல் இரண்டு கதைகளான
1. Black Program 1, (2019)
2. Black Program 2, (2020)
ஆகியவற்றை தமிழில் விரைவில் வெளியிடவும் எடிட்டர் Vijayan S அவர்களிடம் இங்கு கோரிக்கை வைக்கிறேன்.
இம்மாதம் வெளிவந்துள்ள ஸ்டெர்னின் மாயா... எல்லாம் மாயா..! ப்ருனோவின் பனிக்கடலில் முதலைகள்! ஆகிய இரண்டு புத்தகங்களும் ஒரே நாளில் வாசிக்க வைத்ததும் இல்லாமல் இரண்டு கதைகளுக்கும் விமர்சனமும் எழுத வைத்துவிட்டது. 🙂
நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பரே.
Deleteஅந்த மழை பெய்யும் மீன்கள் கம்பனி...பனித்தூவலுள் நீங்கள் நனைத்ததை பார்க்கிறேன்...அருமை நண்பரே
Delete//ரத்தக் காட்டேரிகளை முறியடிக்க பூண்டு செம் வீரியமான சக்தி தெரியுமோ.// ஒரு ட்ராகுலா படம் பார்த்துக் கொண்டிருப்பதான உணர்வு . இன்னும் மீள முடியவில்லை . ஸ்டெர்ன் எப்ப படிச்சாலும் அப்படியே உள்ளே இழுத்துக் கொள்வார்
ReplyDeleteஇதிலும் அப்படியே
Editor sir, Bruno Brazil கதையில்
ReplyDeletePage number 31 / 5வது பேனலில் டோனி பேசிய வசனம் என்ன?
3வதா 5வதா
Deleteகரண்ட் கட்...நேற்று முன்னிரவு பத்து பக்கங்கள் படித்த பின்னே தூங்கினேன் ப்ரூனோல...மீண்டும் முதல்வருக்கு படிக்க வசனங்கள் இன்னுமோர் படி சிலிர்க்கச் செய்ய தவறல..கௌச்சோ நா வர தாமதமாகலாம்னு உள்ள போக...போன வேகத்துலயே திரும்புவான் அடிபட்டு..முதல்ல படிக்கைல கவனிக்கல...காட்சிக்கும் வசனத்திற்குமுள்ள பகடி...இரண்டாம் முறையா படிக்கும் போது மனம் இயல்பாக உள்ள போகைல கதையின் சுவாரஸ்யம் கூடுது....இரத்தப் படலம் போல வீரியமிகு கதைகள் மறுக்கா படிக்கைல விஷயங்கள் கூடுதலாக கிடைக்க சுவாரஸ்யம் கூடுது...இது போலான கதைகள் நேர் கோட்டுக்கதைகள்ங்றத விட ..zigzag...லைனா தோனுனாலும் மீண்டும் வாசிக்கைல ஒன்று கூடும் போது நேர்கோடாவது உணர இயலும்...மீண்டும் மீண்டும் படிக்க உகந்த கதைகள் இவைதாம்...கரண்ட் வந்தாச்...
ReplyDeleteநீண்ட காலத்திற்கு பிறகு புத்தகம் கைக்கு வந்த முதல் நாளே படித்தாகி விட்டது...!
ReplyDeleteமுதலில் "மாயா எல்லாம் மாயா"
இந்த வெட்டியான் கதைகளில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருப்பதினால் இதைத்தான் முதலில் வாசித்தேன்! அந்த ஈர்ப்பை இக்கதையிலும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டான் வெட்டியான்...! 8/10
இரண்டாவது - ப்ருனோ ப்ரேஸில்
எடிட்டர் சார் சொன்னது போல 17ஆம் பக்கம் நானுமே சற்று நின்று, அந்த பாரிலே கொஞ்சம் லயித்துவிட்டுத் தான் அடுத்த பக்கத்திற்கு போனேன்...!
வண்ணக்கலவைக்காகவே : 8/10
மூன்றாவது - ரிப்போர்டர் ஜானி
கடந்த இரண்டைக் காட்டிலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தது இந்த கிளாசிக் இடியாப்பச் சிக்கல் தான்! ரொம்ப நாட்களுக்கு பிறகு ஜானியின் கிளாசிக் இடியாப்பம் அதே ருசியுடன் சூப்பர்...! 9/10
வழக்கமாக கடைசியாகப் படிக்கும் டெக்ஸை முதலில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதே சித்திரங்கள் தான்...! இருந்தாலும் கடைசியாகத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்...!!
மணி அதிகாலை 4.00 ஹிஹி!
வாயில் நுழையாத பெயர் கொண்ட ஓவியர் வாழ்க...!
சித்திரங்களுக்காண்டி : 10/10
அருமை. மிதுன்
Deleteகாலை வணக்கம்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் 💐💐💐
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇறுதி ஆட்டம் : சூடான காபியை குடித்து கொண்டே விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை படித்து விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கமான டெக்ஸ் மசாலா, நன்றாக இருந்தது. V- காமிக்ஸ வரும் அனைத்து கதைகளை போல் இதிலும் ஓவியங்கள் சிறப்பு; மிகவும் துல்லியமான நுணுக்கமாக வரைந்துள்ளார் ஓவியர். V- காமிக்ஸ நிறைய பேர் விரும்பி படிக்க காரணம் நல்ல ஓவியம் நேர்கோட்டு கதை எளிதான வாசிப்பு, இந்த கதை அதற்கு உறுதி.
ReplyDeleteஎல காபியை குடிச்சியா குளிச்சியா
Deleteபார்சலை பிரித்ததும் முதலில் கவர்ந்தது ப்ரூனோ தான்.
ReplyDeleteஎனவே . முன்பே வரிசைப் படித்தியது போல் , "முதலைப் பட்டாளத்தை, " - படித்து முடிச்சாச்சு..
ஒரு ஆங்கிலப் படத்தை DVD - கேசட் - டில் பார்த்த திருப்தி..
அந்த அளவிற்கு ஓவியத்திறமை..
அப்றம் - ஒரு துப்பறியும் கதையில் . மிக இயல்பாக கடந்து சென்று இறுதியில் வில்லன் (என்பவரிடம்) - இடம் சென்று நிற்கும் - முடிவடையும் நேர்த்தி என்று அட்டகாசமான வாசிப்பு அனுபவம்..
நிச்சயம் காமிக்ஸ் - படிப்பதற்கு, காமிக்ஸின் - பவரை தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற இதழ்..
அப்றம் - "அதுல பாருங்க..." - இரண்டாவதா - ரிப்..ஜானி தான் படிப்பேன்னு சொல்லி இருந்தேன்..
நா .. எப்பவுவே புத்தங்களை ஒரு புரட்டு புரட்டி உள்ளே - ஹாட்லைன் - அடுத்த வெளியீடுகள் - பார்த்து விட்டு - ஒவ்வொரு புத்தகத்தையும் இரண்டு பக்கம் படித்து கதைப் போக்கை தெரிந்து கொள்வேன்..
இந்த தடவை - டெக்ஸ் இதழின் அந்த ஓவிய அழகு என்னை கட்டி இழுத்து விட்டதால் - டெக்ஸை படிச்சுப் புட்டேன்..
ஆனாலும், நீங்க சொன்ன அந்த கனவு நாள் - இன்று கிடைத்துவிட்டது ..
காலையில் - ரிப்ஜானி -
மதியம் - ஒரு சினிமா -
மாலையில் - ஸ்டெர்ன் .
என்று plan செய்து விட்டேன்..
அதேதான் நண்பரே ...அட்டகாச திரைப்படத்த துல்லியமாக HD பிரிண்ட்ல பாத்த திருப்தி
Deleteஇந்த மாதம் நிச்சயம் கடும் போட்டி தான். நான்கும் வெவ்வேறு விதங்களில் அசத்துகிறது. அதிலும் ஜானியா, டெக்ஸா என்பதில் கடும் போட்டி எனக்குள். மூன்று அபார வண்ணங்களுக்கு இடையே, கறுப்பு வெள்ளையில் இருந்தும் கடும் போட்டியை உருவாக்கிய டெக்ஸின் அந்த மெர்சலூட்டும் சித்திர பாணிக்கே எனது முதல் பார்வைக்கான ஓட்டு
ReplyDeleteஞாபக படுத்திட்டீங்க...என்னோட அடுத்த பயணம் டெக்சோடதா
Deleteஆனால் கதைகளை பொறுத்தவரை ஸ்டெர்ன் அனைவரையும் பின்னுக்கு தள்ளி விடுவார் என்பது என் கணிப்பு. பார்ப்போம்
ReplyDeleteபடிங்க மாறும்
DeleteI completed my books. Rating as per my reading order
ReplyDeleteBrune Brazil. - 9/10
Stern - 7/10
Reporter Johnny - 8/10
Tex - Outstanding
முதலைப்பட்டாளம் நல்ல கனமான கரு,அட்டகாசமான சித்திரங்கள்,டெக்ஸ் வழக்கம்போல் விரைவான வாசிப்பிற்கு ஏற்ற ஆக்ஷன் மேளா,ஸ்டெர்ன் தலைமுடி,உடல்வாகு கதாசிரியர் எட்கார் ஆலன்போவின் தாக்கத்தில் உருவாக்கியது என நினைக்கிறேன்.ஸ்டெர்னின் கதையில் கரு,கதை சொல்லல்,சித்திரங்கள்,அனைத்திலும் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான தொனி,ஸ்டெர்ன. தொடர் காமிக்ஸ் ரசனைக்கு ஒரு சான்று,
ReplyDeleteContent கேட்டீர்களானால் ஏற்கனவே ஆரம்பித்து பாதியில் விட்ட காமிக்ஸ் நாயகர்களின் வரலாறு,தகவல்கள் தொடர் ஸ்பைடரிலிருந்து ஆரம்பிக்கலாம்.
ReplyDeleteவண்ணமும் அதில் விளைந்த எண்ணமும்
ReplyDeleteகதை கதையா காரணமா ....காரணத்த கூறனுமா.....
கதையை படித்த உணர்வே எழவில்லை...வேற்றுலகில் வாழ்ந்த வந்த பிரம்மை நீங்கவேயில்லை....நம்ம லயனில் இரண்டாம் உலகப் போருக்கு பின் ஹிட்லரின் இரட்டை சகோதர ஆராய்ச்சியென பிரளயத்த வெளிப்படுத்திய பின்...அதிரடிக் கதையா வருது இக்கதை....கதையை செலுத்த துவக்கத்திலே காரணிகளைக் தந்து விட...செதில் உடல்...இரத்த நாளங்களில் ஆக்சிஜன்...சிறுவன் நீரினுள் மூச்சடைக்கும் திறன்...என ஆர்வத்தை தூண்டி துரத்த அநாசயமாய் அவிழ்க்கிறார்கள் முடிச்சை இரு திசைகளில் பயணித்து ஒன்றாகும் முதலைப்பட்டாளத்தார்...ஒரு குழு கண்டறிய அறிய இன்னோர் குழு செல்லும் வேகமும் பிரம்மிப்பைத் தருது...
கௌச்சோவோடு கதையில் வேகமாய் காரை செலுத்தும் நாற்காலிப் பெண்...அந்த கரடியை கட்டுபடுத்தும் காது வாயில்லா சிறுவன்...பிரேசிலோடு பயணிக்கும் கட்டைகால்ல் துணைவன் நமக்கு மோர் வாழ்வியல் எனர்ஜியை தந்து செல்ல தவறலை...
அச்சிறுவனின் தாய் சைகை பற்றி சொல்ல...ப்ரூனோ சிறுவனை சந்தேகமா பாக்க அந்த சந்தேகக் கண்ணோடு நம்மையும் தன்வயப்படுத்தி அழைக்கிறார் கதாசிரியர்...ஆனா முடிவு வேறு திக்கில்...
இது தாத்தாக்கள் காலம் போலும்...ப்ரூனோவும் முதிர முடிவு ...ப்ரூனோவயும் தவிக்க வைத்து அழைத்துச் செல்ல ...உயிரைபணயம் வைத்து காத்த ப்ரூனோவை தன் மகனை பாக்க ...கதையினோட்டத்தில் வீரமான ப்ரூனோ ...பார்க்க முயன்று...என்னால் முடியாதென திரும்பும் உணர்ச்சிப் பிரவாகம்....பிறருக்கு உதவும் போது காணாமல் போன பயம் தனக்கு என வரும் போது....என கேள்வியோடு முடிய
அந்தக்கரடிகளோடு ஊளையிட்டு பனிப்பாதையை பிளந்து வில்லனை ஜில்லிட வைக்கும் சிறுவனால் நம்மையும் ஜில்லென உறையவிடத் தவறாது...
உறைந்து தான் போனேன் கதையினுள்....செம சார்...இன்னோர் லார்கோ...இன்னோர் ஸ்பைடர்...இன்னோர் தாத்தா ....அவ்ளோதான்
டாக்டரின் கதையென்பதால் நம்ம டாக்ட*'ரின்* அலசலுக்காக ஆர்வமுடன் உங்களைப் போல நானும்