Powered By Blogger

Monday, December 03, 2012

ஒரு பனி நாள் பதிவு !


நண்பர்களே,

வணக்கம் ! அதிகாலைகள், பனிக் காலைகளாய் உருமாறிடும் ஆண்டின் அந்த அழகான இறுதி மாதம் எட்டிப் பார்க்கத் தயாராக இருக்கும் நாட்களில் வெப்பம் ஒரு தூரக் கனவாய் இருந்திடுவது வழக்கம். ஆனால் சமீப நாட்களில் நம் வலைப்பூவிற்கு வருகை தந்திட்ட நண்பர்கள் இங்கு நிலவிடும் உஷ்ணத்தைக் கண்டு புருவங்கள் உயர்த்தியிருந்தால் அது ஆச்சர்யத்தை ஏற்படுத்திடாது ! கருத்துக்கள் ; மாற்று சிந்தனைகள் ; பதிவுகள் ; எதிர்ப்புக்கள் என்று ஒரு அக்மார்க் roller coaster ride ! "புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ; சண்டை கூடாது" என்ற obvious ஆன நடுநிலைத் தீர்ப்பு சொல்லிட நான் "திருவிளையாடல்" பாண்டிய மன்னனும் அல்ல ; இங்கு பங்கேற்கும் ஒவ்வொரு நண்பரும் முதிர்ச்சியினில் ; ஆற்றலினில் சளைத்தவரும் அல்ல என்பதால் பெரிதாய் இடையில் புகுந்து எழுதிடப் பிரியப்படவில்லை. இங்கு எந்தவொரு நண்பரின் குரலுக்கும் கடிவாளம் கிடையாது என்பதே இத்தளத்தின் visiting card ஆக இருந்திட வேண்டுமென்பது எனது ஆசை ; so மிக மிக   அத்தியாவசியமான பட்சங்களில் தவிர பதிவுகளை எடிட் செய்திடும் அவசியம் இருப்பதாய்   நான் பார்த்திடவில்லை.

அதே சமயம் இது போன்ற ஆன்லைன் கருத்து மோதல்களை ; இன்டர்நெட்டில்  அரங்கேறும் காமிக்ஸ் மல்யுத்தங்களைப் புரிந்து கொள்ள - வலையுலகின் 'கைப்புள்ளையான' நான் நிறையவே தலையைச் சொரிந்திட வேண்டியது அவசியமாகிறது ! விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்ட முயற்சிகள், பதிவுகள் ; பின்னூட்டங்கள் ஏதுமில்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே முடியாது ! அதே சமயத்தில் அந்த விமர்சனங்கள் ,அந்த சுட்டிக்காட்டல்கள் சற்றே நேசத்தோடு இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்றுக் கொண்டிடுவதிலோ ; குறைந்த பட்சம் அவற்றில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டிடவோ எவருக்கும் எந்தத் தயக்கமும் இருந்திடாதே என்பது என் எண்ணம் ! நையாண்டியிலும் ஒரு நயம் இருக்கலாம், கிண்டலிலும் ஒரு கீற்று அனுசரணை இருந்திடலாம் அல்லவா - நம் கருத்து சுலபமாய் மறு தரப்பிற்குச் சென்றடைய ? ஒரு முயற்சியில் கண்ட குறைபாடுகளை highlight செய்வது தான் நிஜமான நோக்கமாக இருந்திடும் பட்சத்தில், நம் எழுத்துக்களில் விமர்சனமெனும் டீத்தூளோடு , நேசமெனும் துளியூண்டு பாலையும்  கொணர்வது அத்தனை சிரமமான சங்கதியா என்ன  ? மாறாக - 'debit : சின்னதாய் ஒரு கல் ; credit : குட்டியாய் ஒரு  களேபரம்'  என்பதே நோக்கமாய் இருந்திடும் சமயங்களில் அவற்றிற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்காது, நம் பாதையில் மாத்திரமே கவனமாய் செல்லப் பழகிடுவது ஒரு பிரம்மப் பிரயத்தனம் அல்லவே !

நிஜமான வளர்ச்சிக்கு விமர்சனப் பார்வைகள் எத்தனை அவசியமோ ; அத்தனை அவசியமே, பிரச்னைகளுக்கான சின்னச் சின்ன தீர்வுகளுமே ! சமீபமாய் நமது இதழ்களில் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பற்றி நிறைய நண்பர்கள் நியாயமான ஆதங்கத்தோடு சுட்டிக் காட்டி இருந்தனர் ! அவற்றை சரி செய்யும் முயற்சியாக proof reading செய்திட ஒரு தமிழ் ஆர்வலரின் உதவியை நாம் நாடியுள்ளோம் என்றும் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன் ! . அதே சமயம், நண்பர் ஈரோடு ஸ்டாலின் - தமிழ் software ஒன்றை நமக்கு அறிமுகம் செய்து, இதனை வாங்கி உபயோகிக்கும் பட்சத்தில் எழுத்துப் பிழைகளை அதுவே சுட்டிக் காட்டும் என்றும் சொன்னார் !அதனை அடுத்து வரும் இதழ்களில் முயற்சிக்கவிருக்கிறோம்!இது போன்ற ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களைப் பரிசீலனை செய்யவோ;ஏற்றுக் கொண்டிடவோ ஒரு நாளும் எனது ஈகோ தடையாக நிற்காது ! 

At the end of the day இங்கு நம்மை ஒருங்கிணைக்கும் காமிக்ஸ் எனும் காதல், ஒரு சந்தோஷமான பொழுதுபோக்குக் கருவி தானே ?! இதன் வழியாய் உருவாகும் நட்புக்களும் ; நேசங்களும் காலமெல்லாம் நிலைக்கும் ஆற்றல் கொண்டவை எனும் போது, அவற்றை நாடிடாது - சின்னச் சின்ன உரசல்களை ; ஈகோ மோதல்களை வளர அனுமதிப்பதில் லாபம் தான் என்ன இருந்திட முடியும் ? Let's move on guys !

Talking about moving on, NBS பணிகள் முழு வீச்சில் அரங்கேறி வருகின்றன ! இதோ - இவ்வாரம் நான் promise செய்திருந்த அடுத்த செட் ட்ரைலர்கள் !


லார்கோவின் இரண்டாம் பாகத்தின் அட்டை :


தொடர்கிறது கவுண்டமணி - செந்தில் ஜோடிக்கு சவால் விடும்   நம் வுட்சிட்டி கோமாளிக் கும்பல் !


Next in line - கேப்டன் டைகரின் சாகசம் # 1 :


புது வரவு ஜில் ஜோர்டன் தன ஆட்டத்தைத் துவக்குகிறார் - அடுத்தபடியாக !


திரும்பவும் கேப்டன் டைகர் - இம்முறை புதியதொரு தடத்தில் பயணிக்கும் ஒரு கதையோடு ! இங்கே - சின்னதாய் ஒரு snippet ! டைகர் கதைகளில் 1970 களில் உருவாக்கப்பட்ட  சாகசங்கள் அந்த வரிசையின் டாப் கதைகள் என்பதில் மாற்றுக் கருத்து இருந்திட இயலாது ! ஆனால், சமீப காலமாய் படைப்பாளிகள் புதிய டீம் பணியாற்றிட தொடர்ந்திடுவது Young Blueberry கதை வரிசையினையே!எஞ்சி நிற்கும் டைகரின் வெகு சில 1970 's  classic hits  இடையிடையே வெளிவந்திடும் என்ற போதிலும் சமீபப் படைப்புகளான இந்த Young Blueberry தொடருக்கே முக்கியத்துவம் கொடுத்திட வேண்டுமென்பது அவர்களது அன்பான கோரிக்கை ! ஆகையால்  டைகரின் தீவிர அபிமானிகள் "மின்னும் மரணம் "  ; "தங்கக் கல்லறை" யில் ரசித்த அதே கதை ஆழத்தை Young Blueberry தொடரில் எல்லா நேரங்களிலும்  எதிர்பார்ப்பது சாத்தியப்படப் போவதில்லை! இவை ஒவ்வொன்றும் அழகான கதைகள் - on their own ! 


வண்ணத் தோரணத்தின் highlight - வேய்ன் ஷெல்டனின் action த்ரில்லர் - இரு பாகங்களில் ! இதோ முதல் பாகத்தின் அட்டையும் ; ஒரு பக்கமும் ! 



ஷெல்டனின் இரண்டாம் பாகத்தின் அட்டையும், வண்ணப் பக்கமும், மாடஸ்டி +மாயாவியின் black & white பக்கங்களின் முன்னோட்டமும் அடுத்த வாரத்திற்கு!

இந்தப் பதிவை நிறைவு செய்திடும் முன்னே சின்னதாய் ஒரு சேதியும் கூட ! நம் நண்பர் XIII - இன் பயணங்கள் இன்னும் ஓய்ந்த பாடைக் காணோம் ! இரத்தப் படலத்தின் புதிய பாகம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது பிரெஞ்சு மொழியினில் ! 


சீக்கிரமே பாகம் 20 + 21 இணைய ஒரு இதழை தயார் செய்திடுவோமா ? Take care everybody ! 

208 comments:

  1. என்ன ஆயிற்று? அனைத்து பின்னூடங்களயும் அழிக்கப்பட்டு விட்டதா நம் எடிட்டரால்?

    ReplyDelete
  2. இப்படி தான் ஆக வேண்டும் என்ற ஒரு சிலரின் எதிர்பார்ப்பு தற்போது உண்மையாகி கொண்டே இருக்கிறது... எதையும் மன ரீதியாக எடுத்து கொள்ளாதிருத்தல் நலம் பயக்கும்!!!!!! அவர் அவர்க்கு என ஒரு தனிப்பட்ட வழி, ஸ்டைல் என ஒன்று உண்டு அல்லவா? அதனால் நாம் எதற்கு பாதிப்படைய வேண்டும்? தானே சூடு ஆறிடும் பதார்த்தம் இந்த எண்ணங்கள். எனவே நாம் இன்னும் சிறிது பொறுக்கலாம்!!! பொறுத்தார் பூமி ஆள்வார்!!!

    ReplyDelete
  3. சார் உங்களது தலையீடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிகிறது.
    உண்மை அனைத்து பின்னுடங்களும் அழிக்கப்பட்டுவிட்டது போல தெரிகிறது.

    ReplyDelete
  4. Friends

    “The right word may be effective, but no word was ever as effective as a rightly timed pause.”
    ― Mark Twain

    ReplyDelete
    Replies
    1. So true! United we gain, divided we lose!

      Delete
    2. Comic Lover : I guess I deleted your comment by mistake ! Apologies...!! Please do post again ?

      Delete
    3. Comic Lover : And isn't that what somebody wants so badly...?

      Delete
    4. That is fine - as long as the essence got captured in my reply to Simba! Am with all you folks!

      Delete
  5. நண்பர்களே,

    கடந்த இரு நாட்களை erase செய்திடுவதும் சாத்தியமெனில் நொடியில் அதனை செய்திடுவேன் - தயங்காது ! இன்று ஏராளமாய் புகார் மின்னஞ்சல்கள் வரப் பெற்ற பின்னர் தான் இங்கே அரங்கேறிய விஷயங்களை படிக்க எத்தனித்தேன் ! நிச்சயம் இது நமக்கோ, நம் ரசனைக்கோ, பெருமை சேர்க்கும் காலமல்ல !

    எனினும் ஒன்றே ஒன்று நிச்சயம் ...! இங்கே எனது பதிவுகளுக்கு பதில் பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் சுருங்கிப் போனாலும் சரி ; நண்பர்கள் இதனை ஒரு நோட்டீஸ் போர்டாக எடுத்துக் கொண்டு நமது இதழ்களின் வருகைகளைப் பற்றிய updates தெரிந்து கொள்ள மாத்திரம் இதனை உபயோகித்தாலும் சரி, அது நமது பயணத்தைத் துளியும் பாதித்திடாது !

    இடர்களைத் தாண்டிட ; சவால்களை சந்தித்திட, ஆண்டவன் அருளும், அவர் தந்த ஆற்றலும், காமிக்ஸை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களின் ஆதரவும் இருந்திடும் வரை, இது போன்ற சங்கடமான நாட்களும் கடந்து போகும் !

    நாளை புதியதொரு பதிவோடு உங்களை சந்திப்பேன் guys ! Take care !

    ReplyDelete
    Replies
    1. அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்யாமல் சர்ச்சைக்குரிய பதிவுகளை மட்டும் நீக்கியிருக்கலாமே சார்.இப்படி நடக்கவேண்டும் என்று செயல்பட்ட ஒற்றைஎழுத்து ஆசாமி வெற்றி பெற்றுவிட்டார்.

      Delete
    2. ஆஹா நாளைய தங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் !இரண்டாம் பாகம் மற்றும் ,கருப்பு ,வெள்ளை கதைகள் எப்படி என பார்க்கவும்!நள்ளிரவு நம்மை விட்டு செல்ல செல்ல ...............புதிய காலை நாளை அழகாய் புலரும் என்ற நம்பிக்கையில் !

      Delete
  6. //இடர்களைத் தாண்டிட ; சவால்களை சந்தித்திட, ஆண்டவன் அருளும், அவர் தந்த ஆற்றலும், காமிக்ஸை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களின் ஆதரவும் இருந்திடும் வரை, இது போன்ற சங்கடமான நாட்களும் கடந்து போகும் !//

    இது இடர்கள் அல்ல. காமிக்ஸ் காதலால் ஒருகிணைத்து கட்டப்பட்ட இந்த தேன்கூட்டில் சிறிய கல்லடி பட்டு விட்டது. மீண்டும், தேனீக்கள் இணையும். இங்கு தேன்சுவை மலரும்.

    ReplyDelete
  7. இதுவும்............. கடந்து............... போகும்..........

    ReplyDelete
  8. உண்மையில் நம் வலைப்பூவில் பதிவிட கடந்த சில தினங்களாகவே சங்கடமாக இருந்தது. ஒன்று மாற்றி மாற்றி பாராட்டி கொள்கிறார்கள் இல்லையேல் சண்டையிட்டு கொள்கிறார்கள். நம் எடிட்டர் கூறியது போல எனக்கு இது noticeboard தான் நான் இங்கே வருவது ( பின்னூட்டம் இடாமல் பதிவை பார்க்கும் நண்பர்களும் )காமிக்ஸ் பற்றிய அறிவுப்புகளுகும் காமிக்ஸ் பற்றிய விவதங்களுகுமே. நண்பர்கள் தங்களுடைய சச்சரவுகளையும் சமாதானகளையும் பாராட்டுதலையும்( காமிக்ஸுக்கு சம்பந்தம் இல்லாத) மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளை அவரவர் பிளாக்கர் emailku மின்னஞ்சல் அனுப்பி பேசி கொள்ளலாமே. என் வயது 33 அனால் என்னை இன்னும் இளமையாக குழந்தையாக வைத்து கொள்ள நம் காமிக்ஸ் மட்டுமே உதவுகிறது. இது எங்களுக்கு சொர்கத்து பூஞ்சோலை இங்கே நாங்கள் வருவது காமிக்ஸ் என்னும் அமுதத்தை பருகவே தயவு செய்து யாரும் இதை சண்டை இடமாகவும் சந்தை மடமாகவும் மாற்றி விடாதீர்.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் : கல்வீச்சுக்கள் தொடரத் தொடர,நம் உறுதியும் உரம் ஏறிக்கொண்டே செல்லும் ! சலனப்பட மாட்டோம் ; திசை திரும்பிட மாட்டோம் !

      Delete
  9. இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை ! ஸ்டாலின் கருத்துடன் உடன்படுகிறேன் -இதுவும் கடந்து போகும் .

    ReplyDelete
  10. It pains for silent participants like me. I heart weaps silently.

    ReplyDelete
  11. RAJESH : You don't need to be pained....these are small hitches that will go a long way in making us stronger !

    ReplyDelete
    Replies
    1. well said sir, i never felt replying for any hear as for the back and forth comments happening in the past, but the love towards comics keeps us together.. Diamonds do shine after its polished.. we are in the phase now..

      Delete
  12. I welcome with joy the decision of the editor.

    ReplyDelete
  13. அன்பர்களே காமிக்ஸ் நண்பர்களே,

    அனைவரும் நலமே என்பதில் எந்தவிதமான ஐய்யமும் இல்லையென்பதால் நேரிடையாக விசயத்திற்கு வருவோம்.

    நெவர் பிஃபோர் ஸ்பெஷல் என்கிற பேருரு (அதாவது பெரிய உருவம் என்று படிக்கவும்) நம் முன்னே இருப்பதால் அடுத்த ஆண்டுக்கான காமிக்ஸ் முன்னேற்றக் கழக (கா.மு.க ) வேலைகளை மறந்து விட்டால் எப்படி? நம்முடைய புதிய இயக்கமான கா.மு.க சார்பாக சில முக்கியமான கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

    1.அடுத்த ஆண்டுக்கான சந்தாவை கட்டியாகிவிட்டதா?

    2.எத்துனை சந்தாக்கள்?

    3.உங்களது நண்பர்களுக்கு லயன் / முத்து / காமிக்ஸ் கிளாசிக்ஸ் பற்றிய அறிமுகம் செய்தாகிவிட்டதா?

    4. ஒரு காலத்தில் காமிக்ஸ் படித்து இப்போது மறுபடியும் புத்துயிர் பெற்று வருவது தெரியாத அன்பர்களுக்கு மறு அறிமுகம் செய்தாகி விட்டதா?


    கடைசியாக ஒரு பெர்சனல் கேள்வி:
    சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவதற்கு முன்னேற்பாடுகள் செய்தாகி விட்டதா?

    யோசியுங்கள், காமிக்ஸ் அன்பர்களே, சற்றே யோசியுங்கள்.

    இனிமேல் ஒவ்வொரு கேள்வியும் எவ்வளவு முக்கியம் என்பதை உணருவோம்.

    ReplyDelete
    Replies
    1. சென்னை புத்தக கண்காட்சி எந்த தேதியில் நடைபெறுகிறது நன்பரே? தெரிந்தால் முன்னேற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்.

      Delete
    2. காமிக்ஸ் ரசிகன் : ஜனவரி 4 -17 !

      Delete
  14. நம் வாசக நண்பர்களது காமிக்ஸ் படிக்கும் ரசனை பின்னூட்டங்களை வடிக்கும் ரசனையாக மாறிப்போனதே நடந்த பல மோதல்களுக்கு காரணமென கருதுகின்றேன்...காதலுக்கும் போதைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டென ெண்ணுகிறேன்...என்னைக் கேட்டால் word verification இருந்தபோது பலரது பின்னூட்டங்கள் சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன...

    ReplyDelete
  15. எனக்கு ஏற்பட்ட நிஜமான பயம் என்னவென்றால் இணைய போதை நமது ஆசிரியரையும் பாதித்துவிட்டால் காமிக்ஸ் தயாரிப்புப் பணிகள் தாமதமாகக் கூடுமே என்றுதான்...ஏனெனில் நான் நான்கு மாதங்களுக்கு முன் ஆண்ட்ராய்டு போன் வாங்கியதிலிருந்தே நம் வலைப்பூ, ஃபேஸ்புக், ட்விட்டர் இவை போதாதென்று கேம்ஸ் வேறு எல்லாவற்றிலும் நேரம் செலவிட்டு செலவிட்டு எனது வழக்கமான பணிகள் பாதிக்கப்படுமளவு சென்றுவிட்டேன்...இப்போது இரண்டு வாரங்களாகவே முயற்சி செய்து இணையப் பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டேன்...எனக்குக் காமிக்ஸ்தான் பிடிக்கும்...அவற்றைப் படிக்கும் பொன்னான நேரங்களை இந்த இணையப் புதைகுழிக்குள் விட்டுவிட மாட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. Raja Babu : போதைகளுக்கு அடிமையாகும் வயதுகளை நான் பின்னே விட்டுச் சென்று ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன ! இணையமோ ; அதனில் சில வேளைகளில் கிட்டிடும் பாராட்டுக்களோ ; விமர்சனங்களோ - என் சிந்தையில் அவசியத்திற்கு அதிகமான ஆக்கிரமிப்பைச் செய்திட ஒரு நாளும் நான் அனுமதிப்பதில்லை ! Rest assured !

      Delete
    2. நான் போதையெனக் குறிப்பிட்டது இங்கே நீளநீளமாக பின்னூட்டமிட்டுக் கொண்டே இருந்த நண்பர்களின் அதீத ஆர்வத்தைத்தான் சார்...முன்பெல்லாம் நீங்கள் எங்களது பின்னூட்டங்களுக்குப் பொறுமையாக பதிலளிப்பீர்கள்...இப்போது அவர்களது அளவற்ற ஆர்வக் கோளாறுகளால் உங்கள் பதில்களையும் எங்களால் வாங்க முடியவில்லை.அதையே குறிப்பிட்டேன்...you know your value of time more than all of us...we want more & more comics wonders from you & you only...

      Delete
  16. விஜயன் சார் ப்ளாக் ஆரம்பித்த ஆரம்பத்தில இருந்தே என் ஒரிஜினல் பெயரிலேயே (ஒரே ஒரு ID யில்) நான் இங்கே வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கே நடந்தேறும் விஷயங்களை பார்த்து இது எங்கே போய் முடியுமோ என்று மிரட்சியுடன் பார்த்துகொண்டிருந்தேன். ஆசிரியர் இப்படி வளரவிடுகிறாரே என்று விஜயன் சார் மீது கோபமாகவும் இருந்தது. ஆனால் இன்று அவர் எடுத்த நடவடிக்கை தாமதமாக இருந்தாலும் வரவேற்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. word verification நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக இப்போது வருந்துகிறேன். தயவுசெய்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள் சார்.

      Delete
    2. ஆனால் கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு இங்கே என்ன நடந்தது என்பது என்னைபோன்றவர்களுக்கு தெரியாமல் போனது மிகுந்த வருத்தமே.

      Delete
    3. P.Karthikeyan : தவிர்க்க இயலாததொரு சூழல் உருவாகும் தருணத்தில் மாத்திரமே நான் தலையிடுவது அவசியமாக இருக்குமென்பது எனது நிலைப்பாடு ! துரதிர்ஷ்டவசமாக அதனை அவசியப்படுத்தும் விதத்தில் சமீபமாய்க் காய்கள் நகர்த்தப்பட்டதால், வேறு மார்க்கமின்றியே நான் இடை புகுந்திட நேர்ந்தது.

      ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா ? இந்த சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்கத் துவங்கியதே நமது NBS பணிகள் ஒரு உச்சத்தை எட்டிடும் தருவாயினில் ....அதன் ட்ரைலர்களை இங்கே வெளியிடத் துவங்கிய நாள் முதலாய் !

      சவால்கள் சூடு பிடிக்கப் பிடிக்க; எடுத்த காரியத்தை அழகாய் நிறைவேற்றிட வேண்டுமென்ற வேட்க்கையும் ஒரு notch அதிகரித்துள்ளது எங்களுக்குள் ! இதற்காகவேனும் நன்றிகள் -முகம் தெரியா அந்த சதுரங்க எதிராளிக்கு !

      Delete
    4. //P.Karthikeyan :word verification நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக இப்போது வருந்துகிறேன். தயவுசெய்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள் சார்.//

      அது ஓரளவுக்கு பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடு என்பதால் என்றுமே அதனை நீக்கச்சொல்லிக் கோரியதில்லை.

      கடந்த சில நாட்களாகப் பின்னூட்டங்களில் வெளுத்து வாங்கியவர், தனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு முழுமையாக இங்கேயே மெனக்கெட்டது தெரிந்தது. (அவ்வளவும் டைப் பண்ணவே பல மணிநேரம் ஆயிருக்குமே!). செயற்பாடு எதிர்மறை நொக்கத்தைக் கொண்டதோ என்னவோ, காமிக்ஸ்க்காக இவ்வளவு மெனக்கெட்டிருப்பதும் பாராட்டுக்குரியதே ;).

      தப்பியோடிய டால்ட்டன்களைப் பிடிக்க எதிர்த்திசையில் ஓடும் ரிட் டின்னைப் பயன்படுத்தியதுபோல, இந்தச் செயற்பாடும் ஆசிரியரின் பணிகளுக்கு பூஸ்ட் கொடுத்திருப்பது - எல்லாம் நன்மைக்கே என்று சொல்லத்தோன்றுகிறது.

      word verification மறுபடியும் வருமா?

      Delete
    5. எடிட்டர் அவர்களே,

      இதுவரை இங்கு பதித்த யார் மீதும் ஐயம் கொள்ளாதிருந்தேன். உங்களின் இந்த கமெண்ட் மற்றும் கார்த்திக் சொமலிங்காவின் logical reasoning - இவை இரண்டும் அர்த்தம் போந்திந்ததாய்ப் படுகிறது.

      என் வயது 38 - நான் சார்ந்த கணிணித் துறையினிலும், நான் பகுதி நேரமாய்ச் செய்யும் பதிப்புத் துறையினிலும் (இந்த வலைப்பூ பதிவுகள் அல்ல :) - நிஜ புத்தகப் பதிப்புக்கள், அதுவும் மிகவும் நன்கு அறியப்பட்ட ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து) இந்த மாதிரி சவால்கள் மற்றும் சோதனைகள் பலவும் சந்தித்துள்ளேன் - எங்கள் குழுவும் சந்தித்துள்ளது.

      இந்த சதுரங்க ஆட்டதினில் வெல்ல உங்களுக்கு வாழ்த்துக்களும் அன்பும்! ஜனவரி மாதம் சிவகாசி வருகிறேன். சந்திப்போம்! அதற்கு முன் சென்னைத் திருவிழாவில் சந்திப்போம்!

      Delete
    6. Comic Lover : பள்ளி நாட்களில் நான் மாவட்ட அளவிலானதொரு சதுரங்க ஆட்டக்காரன். ஒரு காலத்தில் செஸ் மட்டுமே வாழ்க்கை என்றெல்லாம் இருந்ததும் உண்டு ! தொடர்ந்த காலங்களில் அதனை மூட்டை கட்டிப் பரணில் போட்டு விட்ட போதிலும், இத்தனை காலம் கழித்து அதனை தூசு தட்டி மீட்டிட ஒரு வாய்ப்பு !

      சிவகாசிக்கு வருவதாக இருப்பின், ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே ஒரு போன் அடித்துச் சொல்லிட வேண்டுகிறேன் ! The welcome mat's always ready !

      Delete
  17. டியர் விஜயன் சார்,

    மூன்று வாரங்களுக்கு முன்னர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு Anonymous ID-யின் துணையுடன், முதல் இரு வாரங்களுக்கு மட்டும் சுவையாக எழுதி, அனைவர் நட்பையும் சம்பாதித்த வாசக நண்பர் திரு.மரமண்டை அவர்கள், மூன்றாவது வாரத்தில் வாசகர்கிளைடையே பிரிவினையைத் தூண்டும் பதிவுகளையும், சிலரை மட்டும் உயர்த்தி பலரை மறைமுகமாக தாக்கி எழுதி - படிப்பவர்க்கு குழப்பத்தைத் தரும் சில இலைமறை காய் பதிவுகளையும் தனது திட்டத்தின் ஒரு அங்கமாக எழுதி வந்தார். தன்னை இந்த வலைப்பூவின் பாதுகாவலராகவும் தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்!

    அவரது தீய நோக்கத்தை இனங்கண்டு 'மிகவும் நாகரிகமான முறையில்' நேரடியாக நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் அளித்திடாமல், பதட்டத்தில் யார் யாரிடமோ, எதை எதையோ பேசி, அதன் வாயிலாக மேலும் பல உண்மைகளை அவரே வெளியிட்டு விட்டார். தன் திட்டம் தோல்வியடைந்த வருத்தத்தில் தான் 'வந்த வேலை' முடிந்தது எனச் சொல்லி கிளம்பியும் விட்டார்! பிரிவினையைத் தூண்டி, இந்த வலைப்பூவை வாட வைப்பதுதான் அவர் வந்த வேலை என்றால் அது நிச்சயமாக நடக்கவில்லை! இதன் மூலம் நமது வாசக நண்பர்கள் வலுப்பெற்றே இருக்கிறார்கள் - அவருக்கு நன்றி!!!

    ஆனால், உங்கள் மீது ஒரே ஒரு வருத்தம் விஜயன் சார். நீங்கள் 'ஒரு பனி நாள் பதிவின்' பின்னூட்டங்களை முழுவதுமாக நீக்கியதன் மூலம் அவரின் உண்மை முகம் பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது! வரம்பு மீறிய வார்த்தைகள் கொண்ட சில பின்னூட்டங்களை மட்டும் நீக்கி இருக்கலாமே?!

    //இடர்களைத் தாண்டிட ; சவால்களை சந்தித்திட, ஆண்டவன் அருளும், அவர் தந்த ஆற்றலும், காமிக்ஸை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களின் ஆதரவும் இருந்திடும் வரை, இது போன்ற சங்கடமான நாட்களும் கடந்து போகும் !//
    கடந்தே விட்டது சார்! இனி காமிக்ஸ் மட்டும் பேசுவோம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : எனக்கும் வருத்தமே - உங்களைப் போன்ற ஏராளமான நண்பர்களின் நியாயமான பின்னூட்டங்களும் இந்த Operation Dryclean -ல் சிக்கிட நேர்ந்தமைக்காக ! ஆனால் - நேற்றிரவு இங்கு கடைசியாய் வந்திட்ட சில பதிவுகள் - யாருமே படித்திடக் கூடிய தரத்தில் இல்லை என்பது தான் உண்மை ! நான் login செய்து இங்கே நடந்து கொண்டிருந்த குளறுபடிகளை நேர் செய்யும் நோக்கில் ஒரு பதிலை டைப் செய்து upload செய்திருந்த சில நொடிகளுக்கெல்லாம் நாராசமாய் இரு பின்னூட்டங்கள் தொடர்ந்தன.. ! இதற்கு மேலும் இந்த சங்கதி தொடர்வது எவருக்கும் பிரயோஜனமில்லை என்ற நொடிப் பொழுதுத் தீர்மானத்தில் முழுவதையும் delete செய்து விட்டேன் !

      செயற்கையான இந்தக் களேபரத்தின் பின்னணி பற்றிய சந்தேகங்கள் நண்பர்களில் பலருக்கு சூசகமாகவும் ; உங்களின் பின்னூட்டத்தில் வெளிப்படையாகவும் வெளியான தருணமே - முகமறியா அதன் சூத்ரதாரிக்கும் நாடகத்தின் 'இந்த சீன்' நிறைவுக்கு வந்து விட்டதென்பதை புரியச் செய்திருக்கும் !

      எனினும், இத்தனை நேரமும்,சிந்தனையும் செலவு செய்து உருவாக்கப்பட்டதொரு நாடகத்தின் முழுமையையும் நாம் பார்த்து விட்டதாக நான் நம்பிடவில்லை :-)

      Delete
    2. கார்த்திக்,

      ஒரு அண்டா பாயசத்தில் ஒரு துளி நஞ்சிட்டால் அந்த முழு அண்டாவும் பயனற்று விடுகிறதே! அது போல்தான்!

      சரி காமிக்ஸ் பேசுவோம்: ஆங்கில ப்ளுபெர்ரி எங்கு கிடைக்கும்? தெரிந்திட்டால் வாசக அன்பர்கள் vrsrag@gmail.com என்ற மின் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்களேன்!

      Delete
    3. டியர் விஜயன் சார்,

      //இத்தனை நேரமும்,சிந்தனையும் செலவு செய்து உருவாக்கப்பட்டதொரு நாடகத்தின் முழுமையையும் நாம் பார்த்து விட்டதாக நான் நம்பிடவில்லை :-)//
      உண்மை!!! வேறு ஒரு வடிவில், வேறு ஒரு Anonymous / Fake ID-யில், வேறு ஒரு தருணத்தில் மீண்டும் துவங்கலாம்! வாசக நண்பர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

      உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் அழிக்கப்பட்ட ஆதாரங்களை நான் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளேன். நீங்கள் அனுமதி கொடுத்தால் அதை இங்கு பகிர்வேன். நண்பர்கள் உண்மைகளை அறியவும், எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறேன்.

      Delete
    4. நண்பர் Comic Lover ராகவன்,

      என்றும் உங்கள் பதிவுகளில் நடுநிலைமையை தவறாமல் கடைபிடித்ததிற்கு என் நன்றிகள். பாற்கடலில் கலந்த விஷம் உறுஞ்சி எடுக்கப்பட்டு விட்டதாகவே நான் இதை பார்க்கிறேன்.

      ப்ளூபெர்ரி ஆங்கிலப் பதிப்புகள் பற்றிய விவரங்களை மற்ற காமிக்ஸ் நண்பர்களிடம் கேட்டுச் சொல்கிறேன். நான் நிஜமாகவே ஆங்கில / பிறமொழி காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில்லை (அரிதாக படிப்பதுண்டு!) :) :) :)

      Delete
    5. comic lover Raghavan -- you can buy english limited edition version of Moebius Blueberry Series which are aupgraphed by artist Moebius Giraurd at Graphiti Designs but they dont ship them to India, unless you have someone to carry them here from US you cant get them.

      The link is http://www.graphittidesigns.com/shop/MOEBIUS-4-BLUEBERRY-Ltd.-Book-by-Charlier-and-Giraud.html

      Shriram
      Chennai.

      Delete
  18. எதிர்பார்த்தது நடந்துவிட்டது!! நடந்தேவிட்டது!!!

    நேற்றைய தினம் எனது கோரிக்கை சில நண்பர்களையாவது சென்றடைந்திருக்கும் என்று நம்புகிறேன். இங்கே ஒவ்வொரு தலைப்பில் ஆசிரியர் பதிவுகளை இடும்போது, அந்தந்தப் பதிவுகள் தொடர்பான பின்னூட்டங்களும், விவாதங்களும் இடம்பெறுவதே பொருத்தமாக இருக்கும்.

    பின்னூட்டங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதே இங்கு வரும் எல்லாரும் எல்லா பின்னூட்டப் பதிவுகளையும் வாசிக்கும் நிலை இருக்கும். இல்லையெனில், எமது கேள்விகள் தாங்கிய பின்னூட்டங்களைக்கூட ஆசிரியரே வாசிக்காமல், பதிலளிக்காமல்விடும் சாத்தியம் இருக்கிறது. எனவே, தயவுசெய்து இனியாவது நாம் அந்தந்தப் பதிவுகளுக்குப் பொருத்தமான பின்னூட்டங்களையும் விவாதங்களையும் பதிவோமாக!

    லக்கிலூக்கின் கதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று சம்பந்தமேயில்லாமல் மாடஸ்டி - கார்வின் ஜோடி இரண்டு பக்கங்களுக்கு வந்து சாகசம் புரிந்தால் (அதுவும் - முடிவு, தொடக்கம் எதுவுமேயில்லாமல்) எப்படி இருக்கும்? வேண்டாமே இந்த விபரீதங்கள்?

    ReplyDelete
  19. ஆசிரியருக்கு: டிசம்பர் வெளியீடு எப்போது சார்? சென்னைப் புத்தகக் கண்காட்சி திகதிகள் முடிவாகிவிட்டனவா?

    ReplyDelete
    Replies
    1. Podiyan : "மரணத்தின் நிசப்தம்" - டிசெம்பர் 15 -ல் வந்திடும் ! NBS பணிகளின் மும்முரத்தில் இது சற்றே பின்சீட்டுக்கு தள்ளப்பட்டதென்பது நிஜமே ! எனினும், ஏற்கனவே தயார் செய்யப்பட இதழ் என்பதால், தயாரிப்பில் அதிக நேரம் எடுக்காது !

      அப்புறம் சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4 '2013 -ல் துவங்குகிறது ! 17 -ஆம் தேதி நிறைவு பெறுகிறது ! உங்கள் அனைவரையும் அங்கே சந்திக்க இயன்றால் அற்புத அனுபவமாக இருந்திடும் ! ஸ்டால் விபரங்கள் தெரிய வரும் போது இது பற்றி தனியாக ஒரு பதிவை தயார் செய்திடுவேன் !

      Delete
    2. ஆசிரியருக்கு:

      சிதம்பரத்தில் இடம்பெறவிருக்கும் உலகத் தமிழ் இணையமாநாட்டில் படிப்பதற்கு எனது கட்டுரையும் தேர்வுபெற்றிருக்கிறது (டிசம்பர் - 28-3)). வேலைப்பளு காரணமாக மாநாட்டில் பக்குபெறுவது தொடர்பாக என்னால் இன்னமும் உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. கலந்துகொண்டால், நிச்சயம் உங்களையும் சந்திக்க அவலாயிருக்கிறேன். தகவலுக்கு நன்றி.

      Delete
  20. அணைத்து பதிவுகளும் அழிக்க படும் அளவுக்கு இங்கே என்ன நடந்தது நண்பர்களே. இரண்டு நாட்களாக நான் இந்த வலைப்பூ பக்கம் வராததால் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Mahesh: மீண்டும் ஆரம்பத்திலிருந்து வேண்டாமே! அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரலாமே!

      Delete
  21. அன்புள்ள ஆசிரியருக்கு,

    அனைத்து நீளளளளமான கருத்துக்களையும் இல்லாமல் செய்ததற்கு நன்றி.

    நான் எனக்குத் தோன்றிய தவறுகளை சுட்டிக் காட்டவே விரும்பினேன். என் போல் நினைத்த சில நண்பர்களும் (பொடியன், ராட்ஜா, கார்த்திக், கிருஷ்ணா வ வெ) அவர்கள் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். நான் யாரையும் கருத்துக்கள் இட வேண்டாம் என்று கூறவில்லை. அது நம் லயன் முத்து காமிக்ஸ் தொடர்பாகவும், நீங்கள் இடும் பதிவுகள் தொடர்பாகவும், எல்லோரும் படிக்கும் படியான கருத்துக்களை இடவே ஆரம்பத்தில் இருந்து கேட்டுக் கொண்டேன். என் கருத்தில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.

    உங்கள் வாசகர்களாகிய நாங்கள் எறிந்த கல் உங்களுக்கு என்றும் படிக்கட்டுகளாகுமே தவிர தடைக் கற்கள் ஆகாது.

    நான் முன்பே கூறியது போல் இனியும் இது போன்ற விவாதங்களை வளர்க்க நான் விரும்பவில்லை. எனக்கு தோன்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களை இனிமேலும் நான் பதிவு செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அவர்கள் தங்களை பற்றி கூறலாமே, தங்களது பெயர், ஊர்

      Delete
    2. ஏற்கனவே மெயில் ID போன் நம்பர் எல்லாமே வழங்கியிருந்தேன் நண்பரே. மீண்டும் முதலிலிருந்து வேண்டாமே :D

      Delete
  22. Ok sir past is past.

    எப்போது மரணத்தின் நிசப்தம் வெளிவரும்? இன்னமும் தாங்கள் தேதியைக் குறிப்பிடவில்லையே. அப்படியே நெவெர் before வெளிவரும் தேதியையும் (ஒரு வலைத்தளத்திற்கு தாங்கள் அளித்த பேட்டியில் Jan 05 என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.) கொஞ்சம் சொல்லலாமே.

    ReplyDelete
  23. நிஜமான 1000 காமிக்ஸ் வாசகர்கள், ஆளுக்கு ஒரு பின்னூட்டம் வீதம் 1000 பின்னூட்டங்களை விரைவில் இடப்போகும் அந்த நன்னாளில் எனது கீழ்கண்ட பதிவு உபயோகமாக இருக்கும்! நன்றி!

    (மீள்பதிவு)

    Blogger வலைப்பூக்களில், பின்னூட்டங்கள் 150 அல்லது 200-ஐத் தாண்டினால் "Load More" செய்து படிப்பது மிகவும் சிரமம், குறிப்பாக மொபைலில்! இதைத் தவிர்க்க சில எளிய வழிகள் உள்ளன. பின்னூட்டங்கள் எண்ணிக்கை குறைவோ அதிகமோ, கீழ்க்கண்ட முறைகள் மூல அவற்றை எளிதில் படித்திடலாம்!

    1. Feeder மூலம் பின்னூட்டங்களைப் பார்ப்பது:
    இருப்பதிலேயே மிகவும் எளிதான முறை இது! கீழ் கண்ட முகவரிக்கு சென்றால், புதிய பின்னூட்டங்களை உடனுக்குடன் காணலாம்:
    http://lion-muthucomics.blogspot.in/feeds/comments/default?orderby=published

    2. பின்னூட்டங்களுக்கு மின்னஞ்சல் சந்தா கட்டுவது :-)
    பதிவின் அடியில், பின்னூட்டப் பெட்டிக்கு வலது பக்கம் உள்ள "Subscribe by email" என்ற இணைப்பை அழுத்தினால், அனைத்து பின்னூட்டங்களும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து சேரும். Google, Yahoo மற்றும் பல பிரபல தளங்கள் Label & Filter வசதிகளை அளிக்கின்றன. அதன் மூலம் லயன் முத்து வலைப்பூவில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களும் (அதாவது பின்னூட்டங்கள்) ஒரு குறிப்பிட்ட Folder-க்கு செல்லுமாறு செய்திடலாம். இதன் மூலம் உங்கள் Inbox-இல் இந்த பின்னூட்டங்கள் தெரிவதை தவிர்க்கலாம்.

    3. Google Reader மூலம் பார்ப்பது:
    கீழ் கண்ட இணைப்புக்குச் சென்று,
    http://lion-muthucomics.blogspot.in/feeds/comments/default?orderby=published
    அதன் மேற்பக்கத்தில் உள்ள,
    "Subscribe to this feed using:"
    என்பதற்கு எதிரே "Google" என்பதை தேர்ந்தெடுத்து "Subscribe Now" என்ற பொத்தானை அமுக்கவும் :) பிறகு Goolgle Reader என்பதை தெரிவு செய்தால் மிகவும் அழகிய தெளிவான Interface மூலம் பின்னூட்டங்களை படித்து மகிழலாம்! :)

    4. Mobile பதிப்பில் வலைப்பூவை பார்ப்பது:
    இது கணினிகளுக்கும் பொருந்தும். கீழ் கண்ட முகவரி மூலம் இவ்வலைப்பூவின் Mobile வடிவைக் காணாலாம். இது சற்று வேகமாக இருக்கும்:
    http://lion-muthucomics.blogspot.in/?m=1

    மேலும் பல வழிமுறைகள் உள்ளன :) :) :) ஆனால், உங்களை போரடிக்க விரும்பவில்லை. காமிக்ஸ் வலைப்பூவில் இப்படி ஒரு தொழில்நுட்பப் பதிவை இட்டதிற்கு வருந்துகிறேன் நண்பர்களே!!! :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for your efforts karthik :D

      Delete
    2. பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பா!

      Delete
  24. //இங்கே ஒவ்வொரு தலைப்பில் ஆசிரியர் பதிவுகளை இடும்போது, அந்தந்தப் பதிவுகள் தொடர்பான பின்னூட்டங்களும், விவாதங்களும் இடம்பெறுவதே பொருத்தமாக இருக்கும்.

    பின்னூட்டங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதே இங்கு வரும் எல்லாரும் எல்லா பின்னூட்டப் பதிவுகளையும் வாசிக்கும் நிலை இருக்கும். இல்லையெனில், எமது கேள்விகள் தாங்கிய பின்னூட்டங்களைக்கூட ஆசிரியரே வாசிக்காமல், பதிலளிக்காமல்விடும் சாத்தியம் இருக்கிறது. எனவே, தயவுசெய்து இனியாவது நாம் அந்தந்தப் பதிவுகளுக்குப் பொருத்தமான பின்னூட்டங்களையும் விவாதங்களையும் பதிவோமாக! // I fully accepted these points.

    ReplyDelete
    Replies
    1. செ அவர்களே,

      இது பொருத்தமாய் இருந்தாலும் காமிக்ஸ் தொடர்பான சில அனுபவங்களும் கேள்வி பதில்களும் வருவது தவறல்லவே. சென்ற இரு பதிவுகளின் இறுதி இரண்டு பின்னூட்டங்களைப் பார்த்திடுங்களேன். எப்படி சந்தா கட்டுவது - எங்கு கிடைக்கும் என்று புதிய நண்பர்கள் கேட்டிடுகிரார்கள்.

      அது தவிர என் போல் முத்து காமிக்ஸ் அதிகம் படிக்காமல் லயன், மினி-லயன் மட்டுமே படித்தவர்கள் இப்போது பழைய கதைகளை ஆங்கிலத்திலாவது படிக்க அலைந்து கொண்டிருக்கிறோம். இவற்றை இங்குள்ள நண்பர்களைக் கேட்காமல் எங்கு கேட்பது?

      Delete
    2. //இவற்றை இங்குள்ள நண்பர்களைக் கேட்காமல் எங்கு கேட்பது? // அதைப் பற்றி கேட்பதில் என்ன தவறுள்ளது? தவறே இல்லை நண்பரே. நம் காமிக்ஸ் தொடர்பான எந்த விசயமும் நண்பர்களை முகம் சுழிக்க வைக்காது.

      Delete
    3. Comic Lover : காமிக்ஸ் எனும் வானத்தின் கீழேயுள்ள எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இங்கே அழகாய் வெளிப்படுத்திட தடைகள் நிச்சயம் கிடையாது !

      ஆங்கிலத்தில் காமிக்ஸ்களை வாங்கிப் படித்திட நீங்கள் ஆர்வமாய் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு உதவிட நம் muthufan நிச்சயம் சரியானவர்.

      ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூட Gil Jordan ஆங்கில இதழ்களை வாங்கிடும் லிங்க் ஒன்றினை தந்திருந்தார் : http://www.amazon.com/Murder-High-Tide-Private-Detective/dp/1606994514/ref=sr_1_1?ie=UTF8&qid=1354247578&sr=8-1

      Delete
    4. Thanks Dear Editor,

      கண்டிப்பாக நான் சிவகாசி வரும்போது தெரிவிக்கிறேன். It should be after Jan 27th - but that same week. No other job - just to see our team!

      மற்றபடி, எல்லா ஆங்கில காமிக்ஸும் வாங்கிடப்போவதில்லை. நான் முத்து காமிக்ஸினில் தவறவிட்டவை மட்டுமே. For instance, not Largo, not Gill Jordan - as they are lined up for our publication. Tiger yes if available - because past issues are not with us anymore. Will mail muthufan soon. Thanks for the lead!

      Delete
  25. \\ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா ? இந்த சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்கத் துவங்கியதே நமது NBS பணிகள் ஒரு உச்சத்தை எட்டிடும் தருவாயினில் ....அதன் ட்ரைலர்களை இங்கே வெளியிடத் துவங்கிய நாள் முதலாய் !//

    ஆசிரியர் அவர்களது பின்னூட்டமும் மற்றவர்கள் பதில்களும் படித்தால் என்ன நடந்தது என்று தெரியாமல் மண்டை காய்கிறது, ஆனால் சற்றே யூகிக்க முடிகிறது.

    ஆசிரியர் அவர்களே,

    யாராலும் தங்களது காமிக்ஸ் பயணத்தை கலங்கபடுத்தவோ, தடுக்கவோ முடியாது. அப்படி நினைப்பவர்கள் ஏதாவது ஒரு ஒரு முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். நமது NBS வெற்றி அவர்களது முயற்ச்சிக்கு சாவுமணியாக இருக்கும்.

    தொடரட்டும் உங்களது புது புது முயற்ச்சிகள். வெற்றி நமதே, எபோழுதும் எங்களது ஆதரவு உங்களுக்கே.

    ReplyDelete
    Replies
    1. Mahesh : இந்த காமிக்ஸ் பயணம் எனதல்ல - நமது !

      Delete
    2. திருத்திகொள்கிறேன், தங்களது அல்ல, நமது பயணத்தை யாரும் தடுக்க முடியாது.

      Delete
    3. மிகச்சரியாகச் சொன்னீர்கள் சார்...நமது பயணமும் தேடல்களும் சரியான இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பது உறுதி...மீண்டும் எண்பதுகளின் வசந்த காலம் திரும்பும் விரைவில்...சிறுவர்களைக் கவர்வது போன்று நம் காமிக்ஸ்களுடன் ஏதாவது இலவச இணைப்புகளைக் கொடுத்தால் ஒரு promote in sales ஏற்படும் என்பது என் business கண்ணோட்டத்தில் படுகிறது...try பண்ணலாமே சார்...

      Delete
  26. இந்தக் களேபரத்தில் காணாமல் போன என் கேள்வி,

    கடைகளில் நூலில் கட்டித் தொங்கவிடும் (மேலிருந்து கீழாக) விதத்தில் இங்கு லயன் முத்து காமிக்ஸ் கிடைப்பெறும் (லோகோவுடன்) என்ற வாசகம் அடங்கிய விளம்பர அட்டை (agentukalukku) சாத்தியமா சார்?

    ReplyDelete
  27. Tamil Comics - SoundarSS : நிச்சயம் சாத்தியம் சௌந்தர் ! NBS -க்கு தயார் செய்து தந்தால் போச்சு !

    ReplyDelete
    Replies
    1. Thank You very much sir. Seekkirame thayaar pannunga (NBS work kettu vidaamal) :D

      Delete
  28. Dear Comics Lover,

    I do not have your mail id. You can send a mail to muthufan@gmail.com

    We can proceed from there. As this is an individual thing, let's talk separately instead of discussing it in a forum.

    Regards,
    MF

    ReplyDelete
  29. //இடர்களைத் தாண்டிட ; சவால்களை சந்தித்திட, ஆண்டவன் அருளும், அவர் தந்த ஆற்றலும், காமிக்ஸை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களின் ஆதரவும் இருந்திடும் வரை, இது போன்ற சங்கடமான நாட்களும் கடந்து போகும் ! //
    சத்தியமான வார்த்தைகள்.

    //நாளை புதியதொரு பதிவோடு உங்களை சந்திப்பேன் guys ! Take care !//
    காத்திருக்கிறோம்

    ReplyDelete
  30. பதிவின் தலைப்பு திருத்தப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி எடிட்டர் சார்... சென்னை புத்தகக்கண்காட்சிக்கு நீங்கள் முதல் இரு நாட்கள் வருவதாக கூறி இருந்தீர்கள், அது உறுதியாகி விட்டதா சார்?

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் ரசிகன் : புத்தகக் கண்காட்சியின் முதல் 2 நாட்கள் நான் ஸ்டாலில் தான் இருப்பேன் - மாலைகளில் !

      Delete
  31. வணக்கம் நண்பர்களே,
    புயல் அடித்து சட்டென ஓய்ந்துவிட்டது போன்ற ஒரு அமைதி இங்கே தற்போது நிலவுகிறது.நேற்றிரவு இங்கே நடந்த நிகழ்வுகளும் அதன் பின்னே இப்போது இங்கே பதிகின்ற பின்னூட்டங்களும் நம்பமுடியதவைகளாக இருக்கின்றன. என் என்ரொய்ட் கூகிள் ரீடர் அப்பில் பதிந்துள்ள தற்போது டெலீட் செய்யப்பட்ட 300+ பின்னூட்டங்களையும் இன்னொருமுறை படித்துவிட்டு வந்து இந்த பின்னூட்டம் இடுகிறேன்.
    இங்கே நடந்த கலாட்டாக்களுக்கு ஏதோ ஒருசிலரை மட்டும் குற்றம் சாட்டுவதை போன்ற தற்போதைய சார்பு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நம்முள் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்த ஒரு "முகமறியா சூத்ரதாரி" என்று ஒருவர் இருப்பதாக நான் சத்தியமாக நம்பவில்லை.
    இங்கே பின்னூட்டம் இட வரும் அனைவரும் காமிக்ஸ் மேல் ஒரு PASSION கொண்டவர்களே. சிலர் அவர்களின் கருத்தை வலுவாக பதிந்துள்ளனர். ஒரு சிலர் COMEDY யாக பதிந்து சென்றுள்ளனர். இன்னமும் சிலர் மென்மையாக தாங்கள் கருத்துக்களை பதிந்துள்ளனர். இப்படி தான் கருத்துக்களை பதிய வேண்டும் என நாம் எந்த நேரிமுறைகளையும் இதுவரை இயற்றிடவில்லை.
    நாகரீகம் அற்ற அநாகரீகமான கருத்துக்களை இந்த வலை பூவில் இதுவரை நான் கண்டதில்லை. அநாகரீகமான என்ற எல்லைக்கோட்டை நிர்ணயிப்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கிறது. So அநாகரீகம் என்று இங்கே நான் நிர்ணயித்த எல்லை கொடு இணைய தளத்தில் உள்ள மற்ற பிற ப்ளாக் களிலும் பாரங்களிலும் நடக்கும் உரையாடல்களின் அடிப்படையாக கொண்டது. அப்படி பார்க்கும்போது ALL OUR FRIENDS ARE MILLION TIMES BETTER AND CIVILISED!இந்த கருத்தை நான் மிக அழுத்தமாக பதிகிறேன்.
    இந்த சூழ்நிலையில் தற்போதைய நிகழ்வுகளுக்கு ஒரு சிலரை குற்றம் சொல்வதை போன்ற இதற்கு முன்பு இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சற்றும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை! இந்த நிகழ்வுகளுக்கு நாம் அனைவருமே COLLECTIVE RESPONSIBILITY எடுத்துக்கொள்வதே சரி என்று எனக்கு படுகிறது.
    நீ குற்றவாளி என்று ஒரு விரலை நீட்டி என் எதிரில் உள்ள நபரை சுட்டிக்காட்டினால் மற்ற நான்கு விரல்களும் என்னுடைய திசையை சுட்டிகாடுகின்றன!
    இதெல்லாம் இருக்கட்டும் இங்கே இப்படிதான் என்று சில நண்பர்கள் முடிவெடுத்தல் அதவும் நலமே! இதுவரை ACTIVE வாக பின்னுட்டம் இட்டு நம்மை மகிழ்வித்து வந்து தற்போது அமைதியாக உள்ள அருமையான் நண்பர்கள் சிலரை இழக்கபோகிறோம் என்பதால் இதயம் கணக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி:

      வருத்தம் நம் அனைவருக்குமே ! பல தரப்பட்ட திறமைகள் கொண்டிருந்தாலும், பலர் genuine-ஆக இருந்தாலும், if we do not execute our collective responsibility in respecting each other - this is what will be the result! இருபது முதல் ஐம்பது வயதினைக் கொண்ட நம்மால் அமைதி காக்க முடியவில்லையெனில் - ஒன்று பட முடியவில்லையெனில் - இப்படி நடப்பது தவிர்க்க இயலாதது நண்பரே! As I said: United we gain, Divided we lose!

      That said, நம் காமிக்ஸ் காதல் இங்கே நம்மை அழைத்து வரும் என்பதற்கு இன்றைய பல பின்னூட்டங்களே சாட்சி!

      இப்படிக்கு,
      Never before special-லுடன் ever after togetherness-யும் எதிர்நோக்கும் உங்களைப் போன்ற ஒரு காமிக்ஸ் காதலன்!

      Delete
    2. நண்பரே உங்கள் வருத்தம் கண்டு ஆச்சர்யமாய் உள்ளது. இப்போது பாருங்கள் யார் கருத்திட்டாலும் எவ்வளவு தெளிவாய் உள்ளதென்று.

      இதைதான் இங்குள்ள நண்பர்கள் அனைவரும் முன் மொழிந்துள்ளனர். நடந்த பிரச்சனைகள் முடிவுற்றுவிட்டன. ஆசிரியரும் சரியான வகையில் செயலற்றிவிட்டார். யாருமே அதைப் பற்றி பேச விரும்பாத ஒரு நிலையில் உள்ளோம்.

      நீங்கள் கூறுவது தவறு செய்தவர்களின் செயலுக்கு இங்கு வரும் அனைவரும் பொறுப்பாளி என்பது போல் உள்ளது. எதிலும் தலையிடாத என் போன்ற வாசகர்கள் எதற்கு இவர்களின் தேவையற்ற நீள் புலம்பல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

      //இதுவரை ACTIVE வாக பின்னுட்டம் இட்டு நம்மை மகிழ்வித்து வந்து// என்னைப் பொறுத்தவரை மீண்டும் இது நிகழ்ந்தால் இந்த ப்ளாக்தான் கணக்கும் குப்பைகளால்.

      காமிக்ஸ் பற்றிய அளவான கருத்துக்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

      Delete
    3. மேலே நான் இட்ட கருத்துக்கள் நண்பர் சுஸ்கி விஸ்கி -க்கு :D

      Delete
    4. -----
      கடந்த இரண்டு வாரங்களாக இங்கு நடந்தவை தேவையற்ற ஒன்று. அவை காமிக்ஸ் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உபயோகமாக இல்லை.

      இந்த ப்ளாக்கில் காமிக்ஸ் பற்றிய நம் ரசனைகளையும், அனுபவங்களையும், லயன்/முத்து வளர்ச்சிக்கு உபயோகமான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் மட்டும் பதியப்பட்டால் நன்று

      இன்று இந்தப் பக்கம் பார்க்க மிகவும் அழகாகவும் தெளிவாவகவும் துடைத்துப்போட்டார் போன்று இருக்கிறது.

      இங்கு கமெண்ட் இட்டவர்களில் ஒரு சிலரால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது வருத்தமளிக்கும் ஒன்று. அது ஒரு சிலரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற பிரச்சினை.

      நடந்தவை பின்புறமாக இருக்க.. நாம் முன் நோக்கி நடப்போம்..

      ---------

      Delete
    5. @Tamil Comics - SoundarSS:
      வணக்கம் நண்பரே ,
      உங்கள் பின்னூட்டங்களை பல முறை ரசித்துள்ளேன்.தங்க கல்லறையை எவ்வளவு தூரம் ரசித்துப்படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் வலைப்பூவில்(உ.ம்: குகைக்குள் கதவை திறக்கும் போது எழும் BACKGROUND ஓசை ) தெரிந்துகொண்டேன். காமிக்ஸ்'சை மிகவும் நேசிப்பவரால் மட்டுமே இவ்வளவு தூரம் ஆழமான கருத்துக்களை கூற முடியும். CRITICISM ஒன்று மட்டுமே நம்மை தரம் எனும் அடுத்த படிக்கு அழைத்துச்செல்லும் உந்துவிசை. கார்த்திக் போன்று இங்கே பின்னூட்டம் இடும் பல நண்பர்கள் நம் காமிக்ஸ்சின் தரத்தை ELEVATE செய்வதற்க்கு ஏதாவது ஒரு வகையில் உதவியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.
      நிற்க.
      இப்படி சொல்வதால் தனி மனித துதி என்று என்மேல் யாரும் பாய்ந்து விடாதீர்கள்.

      ஒழுங்கீனமான/ஒழுங்கற்ற முறையில் உள்ள அனைத்துமே குப்பைகள் தானே சௌந்தர்?? உங்கள் அலுவலகத்தில் சுத்தம் செய்பவரின் பார்வையில் தரையில் போடப்பட்டுள்ள அனைத்து தாள்களுமே குப்பைகள் தானே?? அந்த தாள்களின் மதிப்பு அதன் சம்மந்த பட்டவர்களுக்கே புரியும் தானே?? இங்கே உங்கள் பார்வை ஒரு துப்புறவு பணியாளரை போல இல்லாமல் அரு சக தோழரை போல இருப்பதையே நான் விரும்புகிறேன்!

      இங்கே அனைத்து பின்னூட்டங்களையும் டெலிட் செய்ததை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இங்கே பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களின் செயல்/நேரவிரயம் கேலிக்கூத்தாகிவிட்டது. இதற்கு பதில் provocative வாக பதியப்பட்ட ஒன்றிரண்டு கமெண்டுகளை மட்டும் டெலிட் செய்துவிட்டு ஒரு GENERAL GUIDANCE சை அறிவித்து இருக்கலாம்.

      இந்த இடம் ஒரு கண்ணாடி மாளிகை போன்று FRAGILE ஆனது சௌந்தர்! இங்கே நாம் ஒருவர் மேல் ஒருவர் கல் எறிந்துக்கொண்டு விளையாடுகிறோம். அது எவ்வளவு அபாயகரமானது என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்!!

      Delete
    6. @Tamil Comics - SoundarSS, சுஸ்கி -விஸ்கி,

      உங்கள் இருவர் கருத்திலும் points உள்ளது.

      எனினும் சில நேரங்களில் பொது மேடைகளில் நமக்கு உடன்பாடில்லா கருத்துக்களுக்கும் நம்மை விட ஒரு முதிர்ந்த [வயதினில் அல்ல எடிட்டர் :)] moderator இருப்பின் சற்றே பொறுத்தல் நன்று.விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லைதானே folks!!

      Delete
    7. சுஸ்கி -விஸ்கி: நண்பரே உங்களின் பொறுமையான பதில்களுக்கு நன்றி.

      இங்கு பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நண்பர்களில் சிலர் எனக்கும் பிடித்தமான நண்பர்களே (உ.ம். நண்பர் ஸ்டீல் க்ளா மற்றும் ஈரோடு விஜய் போன்றோர்).

      ஒரு பொது பார்வையாளனாக: எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் என்ன ஆகுமோ அதுதான் இங்கு நடந்துள்ளதாக எனக்கு தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து.

      எனவே தவறுகளை அவர்களாகவே களைந்து விடுவது நல்லது. எந்தவொரு விசயத்திலும் நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே.

      இங்கு பொதுவான நண்பர்கள் கூறியுள்ளது போல் காமிக்ஸ் தொடர்பான அளவான கருத்துக்கள் அழகாக இருக்கும்.

      Delete
    8. //பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நண்பர்களில்//
      பிரச்சனையில் மத்தியில் திணிக்கப்பட்டுள்ள அல்லது சிக்கியுள்ள என்பதே சரியாக இருக்கும் நண்பரே ...

      //எனவே தவறுகளை அவர்களாகவே களைந்து விடுவது நல்லது//
      இங்கே தான் பிரச்னையே...இது போன்ற ஒரு பொதுவான தளத்தில் "நீ இது தான் செய்ய வேண்டும் இது தான் சரி!" என்று மற்றவகளை command செய்யும் அதிகாரம் நமக்கு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா ?? அதிகாரம் மூலமாக அனைவரையும் உங்களால் கட்டுப்படுத்திட முடியுமா?? நம் அன்றாட வாழ்க்கையிலேயே அது முடியாதபோது வலைத்தளம் போன்ற ஒரு volatile environment'ல் அது சாத்தியப்படும ??

      மீண்டும் நான் முதலில் கூறிய கருத்தையே மீண்டும் மொழிகிறேன்

      //இந்த இடம் ஒரு கண்ணாடி மாளிகை போன்று FRAGILE ஆனது சௌந்தர்! இங்கே நாம் ஒருவர் மேல் ஒருவர் கல் எறிந்துக்கொண்டு விளையாடுகிறோம். அது எவ்வளவு அபாயகரமானது என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்!!//

      Delete
    9. @Comic Lover:

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!

      //விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லைதானே folks!!//
      நூற்றில் ஒரு வார்த்தை! நன்றி

      Delete
    10. நண்பரே ஆரம்பத்தில் இருந்தே அநாகரீகமான பிரச்சனைக்கு காரணமான, "வந்த வேலை முடிந்தது. நான் வருகிறேன்" என்ற முகமறியா நபரை ஊக்குவித்தவர்கள் யார், யார் என்று கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியவரும். திணித்தார்களா? திணிக்கப்பட்டார்களா? என்று.

      தவறை தவறு என்று சுட்டிக்காட்டப் பழகுங்கள். சப்பைக்கட்டு என்றைக்கும் உதவாது.

      ஒரு லயன் காமிக்ஸின் வாசகனாக கேட்கிறேன். இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இந்த தளத்தைப் பயன்படுத்தி தங்கள் சுயபுராண விசயங்களைத் அடுத்தவர் மேல் திணிக்க? இதற்கா இந்த தளம் இருக்கிறது. இல்லை என்று நீங்கள் மறுத்தால் அது முழுப் பூசணிக்காயை மறைக்க முயல்வதே ஆகும்.

      பார்த்துக் கொண்டிருந்த நானோ மற்ற நண்பர்களோ சிறு பிள்ளையல்ல தவறு யார் பக்கம் என்று புரிந்து கொள்ளாமலிருக்க. எனவே இதற்கு மேலும் எனக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

      அது மேலும் பிரச்சனையை வளர்க்கவே செய்யும். இதற்கு பிறகும் முடிந்த கதையை வளர்க்க வேண்டாமே.

      இனியாவது இந்த தளத்தை எதற்காக உருவாக்கப் பட்டதோ அதற்கான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தி இங்கே வருபவர் முகம் சுழிக்காமல் பார்த்துக் கொள்ளாலாம்.

      லெட்ஸ் மூவ் ஆன். நன்றி நண்பரே.

      Delete
    11. நண்பர்களே சரியோ ,தவறோ முடிந்தவை முடிந்ததாக இருக்கட்டும் .....................நல்லவை தொடரட்டும் .............விட்டு விடுங்கள் இனி மேல் இங்கே யாரும் வீண் விவாதங்களை விட்டு விடுவோம் இதிலிருந்து !

      Delete
    12. //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா// நீங்கள் என் கருத்துக்களை சரியான பார்வையில் எடுத்துக் கொண்டதற்கு நன்றி நண்பரே :D

      Delete

    13. ஹ்ம்ம்ம்...நீங்கள் ஒரு வழியில் செல்லவேண்டும் என முடிவெடுத்த பின் எது சிறந்த வழி என்று விவாதித்து பயனில்லை!

      //ஒரு லயன் காமிக்ஸின் வாசகனாக //
      இங்கே வரும் அனைவருமே லயன் காமிக்ஸின் வாசகர்கள்தனே??

      //சப்பைக்கட்டு என்றைக்கும் உதவாது.//

      இங்கேயுள்ள சிலரை போல ஒரு கருத்து திணிப்பு...

      //. எனவே இதற்கு மேலும் எனக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.//
      :)
      அருமையான பதில்.தற்போது நாம் எடுக்கவேண்டிய சரியான பாதை! நன்றி சௌந்தர் !!

      Delete
    14. உங்களுக்கு என் இறுதி பதில்:


      //இங்கேயுள்ள சிலரை போல ஒரு கருத்து திணிப்பு...// எது கருத்து திணிப்பென்று உங்களுக்கே தெரியும். ஏன் தொடர்ச்சியாக முகமறியா நபருக்கு தோதாகவே பேசுகிறீர்கள்?

      //இங்கே வரும் அனைவருமே லயன் காமிக்ஸின் வாசகர்கள்தனே?? // அது பலருக்கு நினைவில்லையே. நீங்கள் உட்பட "மரமண்டை" வாசகர்களாக மாறிவிட்டதுதான் இந்த நிலைக்கு காரணம்.

      Delete
    15. //ஏன் தொடர்ச்சியாக முகமறியா நபருக்கு தோதாகவே பேசுகிறீர்கள்?//
      நான் எப்படி பேசவேண்டும் என்பதை...சரி விடுங்கள் சௌந்தர் இதற்கு நான் பதில் கூற ஆரம்பித்தால் முடிந்து போன விவாதம் மீண்டும் ஆரம்பித்துவிடாதா ?? நமது பாதை கடினப்பட்டு விடாதா ??

      //. எனவே இதற்கு மேலும் எனக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.//
      :)
      அருமையான பதில்.தற்போது நாம் எடுக்கவேண்டிய சரியான பாதை! நன்றி சௌந்தர் !!

      Delete
    16. நன்றி சுஸ்கி - விஸ்கி அவர்களே. எப்போதும் போல் நண்பர்களாகவே தொடர்வோம். :D

      Delete
    17. THANK YOU MATE! IT'S MY PLEASURE...(((H)))-- BIG HUG.

      Delete
    18. விஸ்கி-சுஸ்கி & others : பின்னூட்டங்களை முழுமையாக நீக்கிட்டதில் எனக்கும் வருத்தமே ! ஆனால் ஒரு சில பதிவுகளை மாத்திரமே நீக்கிடுவதென நான் தீர்மானித்தால், மீண்டுமொரு சர்ச்சைக்கு அது நிச்சயம் வழி வகுத்திருக்கும் ! வேண்டாமே - இன்னுமொரு சங்கட அனுபவம் !

      அனைவரது positive energy -யும் ஆக்கபூர்வமான விஷயங்கள் பக்கமாய் செயலானால், அது நமது காமிக்ஸ் பயணத்திற்கு நிச்சயம் உதவிடும் ! வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இங்கே நான் கற்றுக் கொண்ட சின்னச் சின்ன விஷயங்களைப் பட்டியலிட்டாலே - அது நல்லதொரு நீளம் தேறும் ! அவை in turn நமது இதழ்களின் தர உயர்வுக்கு சிறிதேனும் உதவிட்டாலும் கூட - நன்மை நம் அனைவருக்கும் தானே ! அப்படியிருக்க - நம் நேரங்களை ; சிந்தனைகளை பிற திசைகளில் இட்டுச் செல்லும் ஒரு பதிவே வேண்டாமே என்று தோன்றியதால் தான் - Operation Dryclean அவசியமானது !Sorry guys !

      Delete
  32. நன்றிகள் பல வாத்தியாரே! கலக்கிட்டிங்க! நல்ல விஷயம்தான்! காமிக்ஸ் ஜூஸ் அருந்த வரும் அனைத்து நல்ல உள்ளங்களையும் வரவேற்கிறோம்! காமிக்ஸ் பற்றிய சுவையான நிகழ்வுகளை தொடருங்கள்! பறவைகள் பலவிதம்! உங்கள் மகத்தான ரசனை மிகுந்த ரசிப்புக்கு உள்ளான பழைய கதைகளை பேசி சிலாகிக்க வாங்க நண்பர்களே!
    நம்ம நெவெர் பிபோர் ஸ்பெஷல் விற்பனையிலும் கற்பனையிலும் பல புதிய உச்சங்களை தொடப் போவது உறுதி நண்பர்களே! என்ஜாய் தி அழகான நிமிடங்கள்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  33. Thanks a million editor Sir.

    Observing the directions on the comments for the last two postings, I decided not to comment ever on this blog but just visit and stay tuned with your updates. However you have stepped in at the right time and cleaned the house to make this blog enjoyable again.

    Thanks Again Sir!!!

    "Vadapalani Vavalu" will be back at appropriate times with appropriate comments. Mr. Satan, lets gear up mate ;)

    ReplyDelete
  34. ஆசிரியர் அவர்களுக்கும் அன்பு நண்பர்களுக்கும்,

    வணக்கம் !!!

    கடந்த சில பதிவுகளாக இங்கே நடந்தவை அனைத்தும் முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்து மிகவும் சந்தோசம் கொள்கிறேன்.

    தகுந்த நேரத்தில், தக்க நடவடிக்கை எடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் !!!

    எங்களை போன்ற சிலருக்கு (வேறு யாரு !! நானும் நம்ம ஜான் சைமன் ஜியும் தான் :) ) பதிவிட நேரமில்லாத போதிலும் உங்கள் அனைவருடைய பதிவுகளையும் படிப்பதில் ஒரு ஆனந்தம் கிடைக்கும் (யாருடைய மனதையும் புண்படுத்தாத பதிவுகள்).

    இனி வரும் நாட்களும், ஒரு புதிய விடியலாக அமைய வாழ்த்துக்கள் !!! தொடர்து நல்ல பதிவுகள் பதியுங்கள் ...

    குறிப்பு : நேற்று நமது லயன் முத்து மற்றும் கிளாசிக் அடுத்தட வருட சந்தா (Rs. 1860) நமது ஆசிரியரும் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டேன்.
    நண்பர்கள் இன்னும் சந்தா தொகை கட்டாமல் இருந்தால் (அல்லது) மறந்திருந்தால் இது ஒரு சிறிய நினைவூட்டல்.

    நன்றி !!!!

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
  35. உடல் நலக்குறைவால் சில நாட்களாக நம் தள‌த்தின் பக்கம் வரமுடியவில்லை.....அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது போலும்.....

    இதுவும் கடந்து போகும்........டேக் இட் ஈஸி நண்பர்களே......

    ReplyDelete


  36. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) வழக்கமாக சென்னை புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நான் தினமும் அவ்வழியாகத்தான் எனது அலுவலகம் செல்கிறேன். அவ்விடத்தை கடக்கும் போதெல்லாம் புத்தக கண்காட்சி முத்து காமிக்ஸ் NBS வெளியீடு என்ற எண்ணம் தான் மேலோங்கி வருகிறது. தற்பொழுது அந்த பள்ளியின் நுழைவாயிலில் மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    விஜயன் சார் NBS வெளியீடு தவிர வேறு எதாவது சர்ப்ரைஸ் லயன்-முத்து காமிக்ஸ் சார்பில் அந்த புத்தக கண்காட்சியில் உண்டா?

    ReplyDelete
  37. Well..the trailer looks amazing..this is going to be one helluva of a issue..
    we are waiting NBS!

    & regarding the comments -> ppl are little over reactive in this blog...thats what i felt & thats why i stopped commenting too..

    when i said the courier proce needs to be brought down..ppl from abroad said that -> you will faint down if you know..how much we are paying?

    & 'nobody' opposed the comment..it hurted me a lot...

    All i said was a simple math -> when a person can buy a comic for 100 @ store..he will obviously feel little worried if he has to pay 140 for the same issue through subscription....

    i know that our circulation is limited...but i am a strong believer who always feel that..
    'there will be a work around always'

    Guys please think twice before you blog once..because you are reaching different genre of audiences & most importantly kids are also reading! so lets not behave like our parliamentarians..

    Adios brother's

    ReplyDelete
  38. நண்பர்களே,

    எதிர்பாராத ஒரு நாள் பயணம் அவசியம் ஆகிவிட்டதால் இன்றைய இரவும் நாளைய இரவும் ரயில் பெட்டியினில் !

    ஆகையால் புதிய பதிவு வியாழன் அன்று !

    Thanks!

    ReplyDelete
  39. இரண்டு நாட்களில் இங்கு என்னவெல்லாமோ நடந்திருக்கும் போல.

    ReplyDelete
  40. இந்த களேபரங்களுக்குப்பின் சிக்-பில்லின் ட்ரைலர் பக்கத்தை மறுபடியும் படித்திட்டேன். இரு வாரங்களுக்குப்பின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது நிஜம் !

    சுமார் இருபத்தைந்து - ஆண்டுகளுக்கு முன் வந்திட்ட லயன் சூப்பர் ஸ்பெஷல் - (1987 or 1989? - பல ஆண்டுகள் பாதுகாத்த அந்த குண்டு காமிக் புக் நான் படிக்க கல்லூரி சென்ற பொது காணாமல் போன சோகம் சொல்லில் அடங்காது ) -- அதனை எதிர்பார்த்திருந்த சிலிர்ப்பினை இப்போது மீண்டும் அனுபவிக்கிறேன்.

    ReplyDelete
  41. இங்கு நடந்தவைகளை பற்றி ஒரு பொதுவான விளக்கம் ஆசிரியர் தரலாமே?
    சத்தியமாக எதுவுமே புரியவில்லை .

    ReplyDelete
  42. Let's welcome the Triple special - Never before Special or New Year Special or 40th Year Special - with all our Love and Affection.

    ReplyDelete
  43. சார் ,என்ன ஆச்சு ஜானிக்கு ! இதுவும் ஒரு வகை இடி ஆப்ப சிக்கலோ !முடிவே தெரிய வில்லையே ! மர்மம் நீடிக்கிறதே !

    ReplyDelete
  44. அன்புள்ள ஆசிரியருக்கு !
    கடந்த சில தினங்களில் இங்கு நடந்த நிகழ்வுகளை நான் அறியவில்லை.
    நீங்கள் கூறியதை போன்று விரும்ப தகாத நிகழ்வுகளால்
    தாங்கள் அனைத்து பின்னூட்டங்களையும் அழித்துவிட்டதை அறிந்து மிக மகிழ்ச்சியே .
    இங்கு நடந்த வார்த்தை விளையாட்டுகளை பற்றி நான் இதுவரை நினைத்தது ரசனை மாறுபாட்டாலும்,
    கருத்து வேறுபாட்டாலும் என்பதாகவும்,
    இல்லையெனில் உங்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்வதர்க்காகவும் அல்லது தங்களில் யார் அறிவாளி என்று நிருபிப்பதர்க்காகவுமே என்றுதான் நினைத்திருந்தேன் .
    ஆனால் தாங்கள் நண்பர்களுக்கு தந்திருக்கும் பதில்களில் எதையோ புரிந்து கொண்டதை போல் எழுதி உள்ளீர்கள்.
    அதன் அர்த்தம் சிரிதளவினும் கூட எனக்கு விளங்கவில்லை.
    நீங்கள் சதுரங்க எதிராளி என்று குறிப்பிடுகின்றீர்கள். தங்களுக்கு எதிரி என்றால் அவர் இந்த தளத்துக்கும் பொதுவான எதிரியே.
    அவர்களை அடையாளம் காணவேண்டியது மிக,மிக அவசரமான செயலாக உள்ளது.
    ஏனெனில் என்போன்றவர்கள் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்கின்றார்கள்,தேவையானவற்றுக்கு எந்தவித உள் நோக்கமும் இன்றி பதில் எழுதுகின்றார்கள்.
    இதன் மூலமாக அவர் அந்த குருப்பை சார்ந்தவர் ,இவர் இந்த குருப்பை சார்ந்தவர் என்று எங்களை அறியாமலேயே பிரிந்து போய்விட வாய்ப்புகள் உள்ளன.
    மேலும் தப்பானவர்களின் எண்ணங்கள் வெற்றிபெறுவதற்கு துணை போய்விடவும் கூடும்.
    நாங்கள் இந்த தளத்தை பொருத்தவரை இன்னும் குழந்தைகளாகவே இருக்கின்றோம்,உணர்கின்றோம்.
    எனவே அந்த சதுரங்க எதிராளிகள் இங்கு எதை சாதிக்க விரும்பினார்கள் என்று எங்களுக்கு இலை மறை காயாகவாவது விளக்குவீர்கள் என்று நினைக்கின்றேன்.
    இனி ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பார்த்து ,நீங்கள் இந்த பதிவின் ஆரம்பத்தில் கூறியதை போலவலையுலகின் கைபுள்ளயான நான் தலையை சொரிந்திடவே வேண்டிருக்கும் .
    இங்கு நடக்கும் நிகழ்வுகளால் என் உள்மனசு என்னை பார்த்து சொல்கின்றது ''கண்ணா உனக்கு விபரம் பத்தாது ''
    இந்த தளத்தின் ''தலை'' என்ற முறையில் நீங்களே எங்களை வழி நடத்துவீர்கள் என்று நம்புகின்றேன்.

    ReplyDelete
  45. இங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் நண்பர்களுக்கு, நமது வலைபூவினில் இரண்டாம் வழிமுறை கையாளப்பட்டுள்ளது. அதாவது கேள்வியும் நானே, பதிலும் நானே என்கிற ரீதியில் இடப்பட்ட பின்னூட்டங்கள் , அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாகவே இந்த நடவடிக்கையை ஆசிரியர் எடுத்துள்ளார்.

    இதற்க்கு தனிப்பட்ட முறையினில் யாரையும் கைகாட்டிட இயலாது. இந்த குழப்பங்கள் மூலம், நமது NBS வெளியீட்டில் தாமதப்படுத்துவதும், ஒரு நோக்கமாக இருக்கலாம். இதனை தவிர்க்க ஆசிரியரால் மட்டுமே முடியாது. இந்த வலைபூ வாசகர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்.

    அதாவது பதிவுக்கோ, அல்லது நாம் பயணப்படும் பாதைக்கோ தொடர்பிலாமல் வரும் பின்னூட்டங்களை தவிப்போம். அல்லது நாகரீகமான முறையினில் சுட்டிக்காட்டி அதனை தடுக்கலாம். எக்காரணம் கொண்டும் அவ்வகையான பின்னூட்டங்களை ஊக்கபடுதிட வேண்டாம்.

    இதனை விடுத்து, இரண்டு நாட்களாக பார்கிறேன் , இரண்டு வாரங்களாக பார்கிறேன், என்று வெளியில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு எல்லாம் முடிந்தவுடன் வந்து ஜோக் அடிக்க வேண்டாமே.

    நண்பர்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள், முடிந்தாளவு இங்கு நடைபெறும் விவாதங்களில் பங்கு பெற முயற்சி செய்யுங்கள். இங்கு இடப்படும் கருத்துக்கள் தங்க்லீஷ் ஆக இருந்தாலும் பரவாஇல்லை. நமது உண்மையான வாசகர்களின் பங்கெடுப்பே, போலிகளின் ஊடுரவல் மற்றும் வேண்டாத குழப்பங்களை உருவாக்கிட நினைக்கும் அவர்களது எண்ணங்களுக்கும் தடை போட்டிட இயலும்.

    இது மீரான், சிவ சரவணகுமார் , மற்றும் நல்ல உள்ளங்கள் அனைவரின் பார்வைக்காக..

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... நண்பர் சிம்பா அவர்களே........

      Delete
  46. ஸ்டீல் க்ளா,

    நேற்றைய மதியப் பதிவில் (ப் உண்டா இல்லையா? :)) டிசம்பர் பதினைந்து என்று சொல்லி உள்ளாரே.

    ReplyDelete
  47. Muthu Fan: Thanks for your exhaustive mail. Appreciate the earnest response.

    Modesty Blaise: Thanks for your links too.

    இந்த காமிக்ஸ்கள் ஆர்டர் செய்திடுமுன் என் better half-யிடம் அடி வாங்கி தாங்கிக் கொள்ள [விலை அப்படி! இப்போதுதான் XIII english set இரு மாதங்களுக்கு முன் வாங்கி சில நாட்கள் மௌன விரதம் பூண்டேன் !!!] சில ஏற்பாடுகள் செய்துவிட்டு ஆர்டர் செய்திடுவேன் :-)

    ReplyDelete
  48. Erode Vijay:

    மௌனம் கலையுங்கள் ! எழுபது வயது வாழ்வினில் பாதி தூங்கி விடுகிறோம்! மீதியில் பாதி கடந்தே விட்டது. இருக்கும் சொச்சத்தில் சிரித்தல் முதன்மையாம்! Come back mate!

    ReplyDelete
  49. Looking forward for the below thing.

    சீக்கிரமே பாகம் 20 + 21

    ReplyDelete
  50. @சாத்தான் :// அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்யாமல் சர்ச்சைக்குரிய பதிவுகளை மட்டும் நீக்கியிருக்கலாமே சார்.இப்படி நடக்கவேண்டும் என்று செயல்பட்ட ஒற்றைஎழுத்து ஆசாமி வெற்றி பெற்றுவிட்டார்.// உண்மை... சத்தியமான வார்த்தைகள்.
    @ விஸ்கி சுஸ்கி: //இங்கே அனைத்து பின்னூட்டங்களையும் டெலிட் செய்ததை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இங்கே பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களின் செயல்/நேரவிரயம் கேலிக்கூத்தாகிவிட்டது. இதற்கு பதில் provocative வாக பதியப்பட்ட ஒன்றிரண்டு கமெண்டுகளை மட்டும் டெலிட் செய்துவிட்டு ஒரு GENERAL GUIDANCE சை அறிவித்து இருக்கலாம். இந்த இடம் ஒரு கண்ணாடி மாளிகை போன்று FRAGILE ஆனது சௌந்தர்! இங்கே நாம் ஒருவர் மேல் ஒருவர் கல் எறிந்துக்கொண்டு விளையாடுகிறோம். அது எவ்வளவு அபாயகரமானது என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்!!// அருமையாக எனது எண்ணத்தையும் உங்கள் வாயிலாக வெளிப்படுத்தி விட்டர்கள் நண்பரே... எதையோ இழந்ததை போன்றே மனம் தத்தளிக்கிறது ,,, அது இழந்த நமது நேரம் மட்டும் அல்ல :( மேற்கொண்டு இங்கு பதிவிடவே மிகுந்த கனமாக மனம் இன்னும் உள்ளது :(

    ReplyDelete
  51. இனி ஒரு விதி செய்வோம்! அனைவரும் அதை அழகாய் கடைப்பிடிப்போம்!
    இந்த சதுரங்க ஆட்டத்தில் இனி அடுத்த மூவ், என்னுடையது!

    விரைவில் வெளிவருகிறது!

    CHECKMATE ''

    ஆசிரியரின் அடுத்த பதிவில்! ஆசிரியர் என்னை துரோகியாக நினைத்தாலும், அல்லது முடிவெடுத்தாலும் என் பதிவுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் இங்கே இடம் அளிக்க வேண்டும்! நண்பர்கள் அனைவரும் தவறாமல் வரவேண்டும்! இங்கே உங்களை இரு கரம் கூப்பி வரவேற்க காத்திருப்பேன்! இனி காத்திருப்போம் ஆசிரியரின் அடுத்த பதிவுக்கு அல்லது ஆசிரியரின் கருத்துக்கு அல்லது ஆசிரியரின் முடிவுக்கு!

    தர்மம் தனை சூது கவ்வும், பின் தர்மம் தனை சூது கவ்விக்கொண்டே இருக்கும்! ஆனால் எத்தனை காலம், அறிந்துக்கொள்ள அனைவரும் வாரீர்!!!

    1.ஆசிரியர் VIJAYAN : பதிவாய் மட்டுமே வாருங்கள், பின் ஒரு முடிவாய் செல்லுங்கள்!
    2.புத்தக ப்ரியன் : உங்கள் பாரதியார் கவிதை மட்டுமே என்னை மீண்டும் மீண்டும் இங்கே வர தூண்டுகிறது!
    3.விஸ்கி சுஸ்கி : உங்களை போன்ற தெளிந்த சிந்தனையாளர் இந்த உலகில் மிக மிக அரிது!
    4.Mr.Saint and விஜய் : உங்களைப்போன்ற மனவலிமை மிக்கவர்கள் உலகில் மிக குறைவு!

    பின் குறிப்பு: எனக்கு வரும் பதிலுக்கு நானே பதிலிடுவேன் , அப்படி பதிவிடா விட்டால் அங்கே மௌனமே என்னுடைய பதிவு!!! எனவே யாரும் எனக்காக பதிலிட வேண்டாம்!!!




    ReplyDelete
    Replies
    1. டியர் மர மண்டை
      இங்கே உள்ள அனைவறுக்கும் நமது வெளியீடுகளை பற்றிய நியாயமான எண்ணங்களை/கருத்துக்களை பதிவிட எந்த தடையேதுமில்லை/இருந்ததில்லை . உங்கள் தரப்பு பதிலை இங்கே பின்னூடமிடுவதற்க்கு முன்பு ஆசிரியரை தொடர்பு கொண்டு உங்களின் நியாயமான விளக்கங்களை அளித்துவிட்டு அவர் மூலமே ஒரு விளக்கத்தை இங்கே பதிய சொல்லலாமே...

      Delete
    2. விஸ்கி சுஸ்கி: உங்கள் கருத்து எனக்கு புரிகிறது! ஆனால் இது எனக்காக அல்ல, ஆசிரியருக்காக ! மற்றும் இங்கே வரும் ஸ்டீல் க்ளா, சிம்பா, மீரான் இன்னும் இது போன்ற எத்தனையோ உண்மையான வாசக நண்பர்களுக்காக மட்டுமே! உளி படாமல் சிலை செதுக்க முடியாது. வெள்ளிக் கிழமையோடுயோடு ஒழியட்டும் ஆசிரியரின் தொல்லைகள்!!!

      Delete
    3. //வெள்ளிக் கிழமையோடுயோடு ஒழியட்டும் ஆசிரியரின் தொல்லைகள்!!!//
      லயன்/முத்துவின் தீவிர வாசகன் என்ற முறையில், இதை கடுமையாக எதிர்க்கிறேன். அப்படி என்ன கோபம் ஆசிரியர் மீது...உங்களுக்கு லயன்/முத்து படிக்க பிடிக்கவில்லை எனில் ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதானே. இல்லை லயன்/முத்துவின் வளர்ச்சி பிடிக்க வில்லை எனில் நீங்களே ஒரு காமிக்ஸ் ஆரம்பிக்கவேண்டியது தானே.

      Delete
    4. Rajavel: தங்களின் தமிழ் புலமை என்னை வியக்க வைக்கிறது! இதோ சரியான வாக்கியம், வெள்ளிக் கிழமையோடு ஒழியட்டும் ஆசிரியருக்கு இதுநாள் வரை இருந்து வந்த தொல்லைகள்! நானும் லயன், முத்து தீவிர வாசகன் தான். வாக்கிய பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி! நானும் உங்களைப்போலவே ஒரு களையெடுக்க விரும்புகிறேன் நண்பரே!

      Delete
  52. அறிந்தோ அறியாமலோ நம்முள் பகையை வளர்த்திக்கொண்டு விட்டோம். இனி நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு நம்மை தயார் படுத்திகொள்வது தற்போது மிக அவசியம் ஆகிறது.

    //எனினும், இத்தனை நேரமும்,சிந்தனையும் செலவு செய்து உருவாக்கப்பட்டதொரு நாடகத்தின் முழுமையையும் நாம் பார்த்து விட்டதாக நான் நம்பிடவில்லை :-) //


    நமது பதிவுகளை SPAM களிடம் இருந்து காப்பாற்ற உடனடியாக WORD VERIFICATION ய் ACTIVATE செய்வது நலம்.

    இந்த ப்ளாக் கட்டமைப்பில் இருந்து வேறு கட்டமைப்புக்கு மாற்றிட இருக்கும் வாய்ப்புகளை ஆராயவேண்டும். நாம் MODERATOR'ய் நியமிப்பதற்கும் MODERATE செய்வதற்கும், ஒரு மெம்பரை தேவைப்பட்டால் BAN செய்வதற்கும் வழிமுறைகள் உள்ள கட்டமைப்பு (உ ம்: FORUM )

    இப்போது FOOL PROOF METHOD என்று எதையும் செய்யா முடியும் என்று தோன்ற வில்லை. ANYWAY SOMETHING IS BETTER THAN NOTHING.

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி: How can I contact you friend? My id is in this specific feedback - somewhere up.

      Delete
    2. If you dont mind - drop a one liner now - as I have some spare time I would mail you stuff I want to say. You may reply as you please!

      Delete
    3. YEP! DONE.THANKS FOR YOUR INTEREST MATE!

      Delete
  53. விஸ்கி சுஸ்கி: தாங்கள் சொல்ல வருவது எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கிறது! ஆனாலும் எதற்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகவேண்டும்! அது இந்த பேரழிவுக்கு பின் லக்னர் போன்றவர்கள் காணாமல் போகட்டும்! ஒன்ன்றை இழக்காமல் ஒன்றை பெறமுடியாது என்பதை தாங்கள் அறியாததா! இனி இதுபோன்ற நிகழ்வுகள் என்றுமே இங்கு நடைப்பெற கூடாது என்பதே ஆண்டவனின் விருப்பம்!!!

    delete செய்யப்பட்ட பதிவுகளை இங்கே மீண்டும் கொண்டுவந்தால் மட்டுமே மீண்டும் ஒரு மரமண்டை உருவாகமாட்டான்! வரம்பு மீறிய பின்னூட்டங்களை தவிர்த்து மீதி நிச்சயமாக இங்கே காலம் காலமாக பாதுக்கப் படவேண்டும்!!! எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு யாரும் பதிவிடாமல் இருந்தாலே போதும், உண்மை தெரிந்து விடும்!!!

    ReplyDelete
  54. விஸ்கி-சுஸ்கி நண்பரே , எனக்கு ஒரு சந்தேகம் , WORD VERIFICATION ய் ACTIVATE செய்தால் SPAM களை தவிர்க்கலாம் என்பது ஓகே. ஆனால் நமது பதிவுகளில் எங்கே spam வருகிறது. எதை spam என கூறுகீறீர்கள் ? WORD VERIFICATION கமெண்ட் இடுவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. மேலும் அலுவலகத்தில் இருந்து கமெண்ட் இட நினைத்தால் block ஆகிறது. தேவை இல்லாத கமெண்டுகளை தவிர்க்க நினைப்பது உங்கள் எண்ணமாக இருந்தால் அதை இதன் மூலம் தவிர்க்க இயலாது. தேவை இல்லாத கமெண்டை போட்டே ஆக வேண்டும் என யாராவது நினைத்தால் அதை WORD VERIFICATION கொண்டு எப்படி தவிர்க்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கருதுக்களுக்கு நன்றி லக்கி நண்பரே
      நான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லமுடியததற்கு வருந்துகிறேன். I REALLY MEANT TO SECURE THIS BLOG FROM SPAMS THAT MAY RAISE IN THE NEAR FUTURE.நமக்கு பிடிக்காத ஒரு தளத்தை SPAM செய்து முடக்குவது மிக எளிது. WORD VERIFICATION ஆல் நிச்சயம் ABUSIVE கமெண்ட்ஸ் ஐ தடுத்திட இயலாது. ப்ளாக்'ய் MODERATE செய்வதால் மட்டுமே முடியும்.

      Delete
    2. Lucky Limat நண்பரே, Word verification enable செய்திடுவதால் பின்னூட்டங்களை தாமதபடுத்தும். இது பல நேரங்களில் எரிச்சலாக இருக்கலாம், ஆனால் தொடர்ச்சியாக அல்லது, கோபமாக கருத்துபதிவிட வரும் பொழுது அதனையும் தாமதபடுத்தும். பலரது கோபம் சில நொடிகள் மட்டுமே. தொடர்ந்து பின்னூட்டமிட நினைத்தால் ஒரு சிறு சலிப்பு தட்டும். இதுவே Spam உருவாகாமல் இருக்க எதுவாக இருக்கும். எனினும் Word verification என்பது நேரடியான வலி முறை அல்ல.. அதற்கு Moderation தான் சரியான வழி... ஆனால் அதற்கு ஆசிரியரிடம் நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை... ஆகவே தற்சமையம் இதுவே(Word Verification) நமக்கு சிறந்த வழி...

      Delete
  55. டியர் மரமண்டை , வந்த வேலை முடிந்தது வருகிறேன் என்று சொல்லிவிட்டு ,திரும்ப வந்து உள்ளீர்கள் ! ஒருவேளை அந்த கருத்தை சொன்னது போலி மரமண்டையாக இருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. utha man r : நல்ல கேள்வி நண்பரே! நான் தங்களுக்கு முதல்முறையாக அளித்துள்ள பதிலிலேயே இதற்கான பதில் அடங்கியுள்ளது! அது அழித்து விடப்பட்டுள்ளதால் தங்களுக்கு வாய்ப்பு இருக்குமானால் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்!

      Delete
    2. "நான் வந்த வேலை முடிந்து விட்டதாக கருதுகிறேன்" என்று சொல்லிச் சென்றவரும் இவர்தான்!

      "தங்களுக்கு வாய்ப்பு இருக்குமானால் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்" என்று சொல்லுபவரும் இவர்தான்!

      சந்தேகம் இருப்பவர்கள் (பதிவு டெலிட் செய்யப்படும் முன் "Comments - Subscribe by Mail" செய்திருந்தவர்கள் மட்டும்) check செய்து பார்க்கலாம்! நான் Gmail -இல் ஏற்கனவே check செய்து விட்டேன். மேற்கண்ட இரண்டு Comments வந்த மின்னஞ்சல்களுக்குச் சென்று,
      "மர மண்டை has left a new comment on the post"

      எனத் தொடங்கும் முதல் வரியில் உள்ள "மர மண்டை" என்ற இணைப்பை அழுத்தினால் அது நண்பருடைய Google+ Profile-க்கு இட்டுச் செல்லும்!
      https://plus.google.com/116655451584764697661

      அவருடைய Blogger முகவரியை பார்க்க விரும்பினால், அந்த மின்னஞ்சல் மீது Forward-ஐ அழுத்துங்கள்! பிறகு தெரியும் Compose Window-வில் "மர மண்டை" என்ற இணைப்பின் மேல் Mouse-ஐ கொண்டு சென்றால் அவருடைய Blogger UID தெரியும்!
      http://www.blogger.com/profile/13555337769316881512

      Delete
    3. ----------

      மரமண்டை - தயவுசெய்து.. காமிக்ஸ் பற்றி மட்டும் இங்கு பேசுவோம்.

      கார்த்திக் சொல்வது போல இரண்டு கமெண்டுகளும் உங்களால் (blogger profile) போடப்பட்டது தான். உங்களின் நோக்கம் என்ன ?.

      கும்மிகளை, facebook-ல் எதாவது க்ரூப்பில் வைத்துக்கொள்ளலாமே ?... ஏற்கனவே இரண்டு க்ரூப்கள் இருக்கின்றன. உங்களுக்கு விருப்பமிருப்பின் அங்கு பேசலாம். இல்லை எனில் நீங்கள் புதிய க்ரூப் தொடங்கி, உங்கள் ஆதரவாளர்களை அங்கு வரவழைத்து அங்கு பேசுங்கள்...

      நன்றிகள்

      -------------

      Delete
    4. RAMG75: தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே! தாங்கள் கூறிய விஷயங்களை படித்து அறிந்துக்கொண்டேன்! என்றும் நட்புடன் மரமண்டை!

      Delete
    5. =============================================================================
      சந்தேகம் இருப்பவர்கள் (பதிவு டெலிட் செய்யப்படும் முன் "Comments - Subscribe by Mail" செய்திருந்தவர்கள் மட்டும்) check செய்து பார்க்கலாம்! நான் Gmail -இல் ஏற்கனவே check செய்து விட்டேன். மேற்கண்ட இரண்டு Comments வந்த மின்னஞ்சல்களுக்குச் சென்று,
      "மர மண்டை has left a new comment on the post"

      எனத் தொடங்கும் முதல் வரியில் உள்ள "மர மண்டை" என்ற இணைப்பை அழுத்தினால் அது நண்பருடைய Google+ Profile-க்கு இட்டுச் செல்லும்!
      https://plus.google.com/116655451584764697661

      அவருடைய Blogger முகவரியை பார்க்க விரும்பினால், அந்த மின்னஞ்சல் மீது Forward-ஐ அழுத்துங்கள்! பிறகு தெரியும் Compose Window-வில் "மர மண்டை" என்ற இணைப்பின் மேல் Mouse-ஐ கொண்டு சென்றால் அவருடைய Blogger UID தெரியும்!
      http://www.blogger.com/profile/13555337769316881512
      ======================================================================
      கார்த்திக்,

      நான் கமெண்ட்டுகளை மின்னஞ்சல் மூலம் தருவிப்பதால் நீங்கள் சொன்ன்னது மாதிரி செக் செய்து பார்த்தேன்.

      ஆனால் இரண்டுமே வேறு வேறு ப்ளாக்கர் ஐடிக்களே. ஒன்றல்ல.

      Mramandai blogger profile: http://www.blogger.com/profile/13555337769316881512

      Saint Satan blogger profile: http://www.blogger.com/profile/05190863407804467408

      வேறு ஏதாவது வெள்ளை எலி கூண்டு பரிசோதனை முறைகள் உளவா? அல்லது சந்தேகத்தின் பேரில் மட்டுமே என்கவுண்டர் தானா?

      இந்த கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை கார்த்திக். ஆனால் ஆதாரம் என்று நீங்கள் கூறி இருப்பதில் வேறு மாதிரி இருப்பதாலேயே இந்த கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது.

      NB: மர மண்டை என்னை புகழ்ந்ததால் அவர் எனக்கு நண்பரும் அல்ல. என்னைப்பற்றி தவறாக கமேன்ட்டுவதால் நீங்கள் என் எதிரியும் அல்ல. நண்பர் ஆவதற்கும், எதிரி ஆவதற்கும் தகுதிகள் உள.

      Delete
    6. லூfoலூபை:

      நான் Saint Satan அவர்கள்தான் மரமண்டை என்று எங்கேயாவது (FB உட்பட) கூறியுள்ளேனா?! மேலே நான் இட்ட பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்! உங்களுக்கு இப்படி பட்ட ஒரு "வீண் சந்தேகம்" ஏன் வந்தது என்பதை சற்று "வெளிப்படையாக" விளக்கினால் நன்றாக இருக்கும்! தேவையில்லாத வதந்திகள் பரப்புவது ஏனோ?!

      //ஆனால் ஆதாரம் என்று நீங்கள் கூறி இருப்பதில் வேறு மாதிரி இருப்பதாலேயே இந்த கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது//
      நான் அந்தப் பின்னூட்டத்தில் "ஆதாரம்" எனக் குறிப்பிட்டது, இரண்டு "மரமண்டைகளும்" ஒருவரே என்பதை!!! அதுதான் உண்மையும் கூட!

      ஏனெனில் பதிவு அழிக்கப்பட்ட மகிழ்ச்சியில், "கடைசியில் வந்து எழுதியது போலி மரமண்டையாக இருக்குமோ?" என்ற உத்தமன் அவர்களின் 'நல்ல கேள்வி',

      //utha man.r5 December 2012 16:45:00 GMT+05:30 டியர் மரமண்டை , வந்த வேலை முடிந்தது வருகிறேன் என்று சொல்லிவிட்டு ,திரும்ப வந்து உள்ளீர்கள் ! ஒருவேளை அந்த கருத்தை சொன்னது போலி மரமண்டையாக இருக்குமோ ?//

      திரு.மரமண்டை அவர்களால் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வாசகர்களை மேலும் குழப்பும் முயற்சிகள் நடந்தன!!! எனவே இரண்டு மரமண்டைகளும் ஒருவரே என்பதை எலிக்கூண்டு முறையில் பரிசோதித்தேன். நீங்கள் தப்புத் தப்பாக சோதித்துவிட்டு, திரு.புனித சாத்தான் மேல் பழி சுமத்த நினைக்கும் உங்களின் "நல்ல எண்ணம்" புரிகிறது!

      நான் இங்கு அழிந்து போன பின்னூட்டங்களை Facebook-இல் மீள்பதிவு செய்து கொண்டிருந்த போது, "மரமண்டை அவர்கள் எனக்கு பதில் அளிக்காமல் சாத்தான் அவர்களுக்கு பதில் அளிப்பது ஏன்" என்ற சந்தேகம் மட்டுமே எழுப்பி உள்ளேனே தவிர சாத்தான் அவர்கள்தான் மரமண்டை என்று நான் "எங்கும்" சொல்லவில்லை.

      நீங்கள் FB-யில் உள்ளவற்றை "தப்புத்தப்பாக புரிந்து கொண்டு", இங்கு லயன் வலைப்பூவில் மேற்கொண்டு குழப்பம் ஏற்படுத்தாமல் இருந்தாலே போதுமானது!

      நன்றி!

      Delete
  56. டியர் விஜயன் சார்,

    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! இனி மீண்டும் ஒரு சமயம், பதிவினை delete செய்யும் துரதிர்ஷ்ட நிலை நேருமானால் (அப்படி நேரக்கூடாது என கடவுளை வேண்டுகிறேன்) தயவு செய்து முழுப்பதிவையும் delete செய்திட வேண்டாம்! எனக்குத் தெரிந்த மாற்று வழிகள் இதோ (உங்களுக்கு ஏற்கனவே இதைப் பற்றி தெரியுமென்றால் மன்னியுங்கள்). இந்த வழிகளில் ஏதாவது ஒன்றை உடனே Enable செய்து விட்டு பிறகு சாவகாசமாக நீங்கள் delete செய்ய நினைக்கும் பின்னூட்டங்களை delete செய்யலாம்!!! பிறகு நீங்கள் பகிர நினைக்கும் அறிவிப்பை / பதிவை எழுதி வெளியிட்டு விட்டு, சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ கழித்து இந்த Settings-ஐ Disable செய்து கொள்ளலாம்! அது வரை யாராலும் இங்கு கருத்திட முடியாது!

    1. "Comment Moderation" அமைப்பது:
    www.blogger.com ---> Select your Blog ---> On the left Pane select the following ---> "Setting" ---> "Posts and comments" ---> "Comment Moderation" ---> and click on ---> "Always" ---> and on the top right, click on ---> "Save Settings"

    2. பதிவை "Unpublish" செய்வது:
    www.blogger.com ---> Select your Blog ---> On the left Pane select the following ---> "Posts" ---> "Published" ---> Check Mark the post you that you want to disable ---> and click on ---> "Revert to draft"

    "நான் வந்த வேலை முடிந்து விட்டதாக கருதுகிறேன்" எனச் சொல்லிச் சென்றது போலி மரமண்டையாக இருக்குமோ - என்ற கேள்விக்கு "ஆமாம்" / "இல்லை" என நேரடியாக பதில் அளிக்காமல், நண்பர் மர மண்டை அவர்கள் பெரும் குழப்பத்தை மற்ற வாசகர்களிடையே ஏற்படுத்தி உள்ளார். உங்களுக்கும் அப்படி ஒரு குழப்பம் இருக்குமானால், என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் அதை எளிதில் check செய்வது எப்படி என்ற முறையை விளக்கி உள்ளேன், அதன் மூலம் நீங்கள் உண்மையை அறியலாம். ஒரு வேளை தங்களிடம் Comments Email Backup இல்லை என்றால் அதை உங்களுக்கு அனுப்பத் தயாராக உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போது Email Subscription செய்து விடுங்கள், இது போன்ற சமயங்களில் மிகவும் உதவியாக இருக்கும்!!!

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Kartik Somalinga : இந்த வலைத்தள நிழல் யுத்தங்களுக்கு நான் புதியவன் என்பதாலோ என்னவோ, நான் அதிகம் குழம்பிப் போய் விடவில்லை ! டிசம்பரிலும் ஓரிரு நாட்கள் பனிக்குப் பின்னே வெயில் எட்டிப் பார்க்கும் சீதோஷ்ணத்தில் வளர்ந்திட்ட எங்களது epidermis சற்றே கனம் அதிகம் என்பதாலோ - என்னவோ, இது போன்ற சங்கதிகள் அதிகமாய் ஒரு பாதிப்பை எற்படுத்திடுவதில்லை !

      உங்களின் தகவல்களுக்கு எப்போதும் போல் நன்றிகள் ! Email subscription உள்ளது தான் ! இதற்கென எற்படுத்தப்பட்டதொரு e -mail முகவரிக்கு ஒவ்வொரு பின்னூட்டமும் வந்திடுவது உண்டு தான் - but சுமார் 7500 + மெயில்களுக்கு மத்தியில் புதையுண்டு கிடக்கும்.எந்தவொரு சங்கதியினையும் தோண்டித், தேடி எடுப்பது நடவாத காரியம் !

      Delete
  57. lion book no 169. மெக்ஸிகோ படலம்
    lion book no 179. இருளின் மைந்தர்கள்

    மேற்கண்ட புக்ஸ் இரண்டு பிரதிகள் இருந்தால் எனக்கு ஒரு பிரதி தேவை
    கொடுக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும் mobil no 9976541077

    ReplyDelete
  58. ஒரு வழியாக அனைத்து சர்ச்சைகளும் ஓய்ந்து விட்டன.
    நன்றிகள் பல ஆசிரியர்க்கு!

    -சங்கர்

    ReplyDelete
  59. அன்பு நண்பர் சிம்பாவுக்கு!
    நீங்கள் என் பார்வைக்காக வைத்த பதிவை படித்தேன். நீங்கள் கூறுவதுபோல் இரண்டாம் வழி முறை கையாளப்பட்டது என்பதினாலே அணைத்து பின்னூட்டங்களும் அழிக்கப்பட்டன என்பது சரியே.
    ஆனால் நீங்கள் நான்காவது வரியில் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லமுடியாது என்கிறீர்கள் ஆனால் ஆசிரியர் மற்ற நண்பர்களுக்கு அளித்திருக்கும் பதில்களை நன்கு கவனீதீர்களா ?
    அதன் பொருட்டே நான் ஆசிரியருக்கு அந்த பதிவை இட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வாஸ்தவம் தான் நண்பரே.. //ஆசிரியர் மற்ற நண்பர்களுக்கு அளித்திருக்கும் பதில்களை நன்கு கவனீதீர்களா ?//

      ஆசிரியர் மட்டும் அல்ல இன்னும் நமது நண்பர்கள் சிலருக்கும் மனதில் ஒரு சந்தேகம் உள்ளது.. அவ்வாறு அது உண்மையாகினும் அதனை ஆசிரியரே வெளியிடுவதுதான் நல்லது. வலையுலகில் இவர் தான் தவறு செய்தார் என ஒருவரை மட்டும் நோக்கி விரல் நீட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதுவரை இல்லாத ஒரு எதிரியை தேடித்தான் நாம் பயணப்பட் வேண்டும். இதனால் கால விரயம் நமக்கு தான். ஒரு வேலை இது கூட அவர்களது எண்ணமாக கூட இருக்கலாம். அதாவது தேவையற்ற கால விரையம், அதனால் ஏற்படும் மன உளைச்சல்.

      Delete
    2. அதனை ஆசிரியரே வெளியிடுவதுதான் நல்லது. yes

      Delete
  60. அன்பு நண்பர் மரமண்டை அவர்களுக்கு!
    உங்கள் பார்வைக்கான ஒரு திறந்த மடல். நான் இந்த வலை பூவில் பதிவு செய்த சிறு வயது நினைவுகளை நீங்கள் வெகுவாக பாராட்டியும் அதனை உங்கள் டாப் 5
    ல் ஒன்றாகவும் தேர்ந்து எடுத்து என்னை கவுரவ படுத்தினீர்கள் அதற்காக முதன்மையாக ஒரு நன்றி!
    உங்கள் எழுத்துக்களும், நீங்கள் தேர்ந்து எடுக்கும் வார்த்தைகளும் உங்களை ஒரு சிந்தனை வாதி என்ற தோற்றத்தையே தோற்றுவிக்கிறது .
    இங்கு நீங்கள் இடுகின்ற பதிவுகளுக்காக அதிகமான நேரம் செலவிடுகின்றீர்களா? அல்லது போகிற போக்கில் சொல்லும் திறமை வாய்ந்தவரா என்று நான் அறியேன்.
    ஆனால் எனக்கு தங்களிடம் ஒரு மனக்குறை உண்டு, என்னவெனில் நீங்கள் சொல்லவிரும்பும் செய்தியை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைத்து அல்லது உள் அர்த்தம் பொதிந்ததாக சொல்வதாக எனக்கு தோன்றுகிறது.
    ஏன் அவ்வாறு?
    முகம் பதிவு செய்து உண்மை பெயருடனே பின்னூடங்கள் இடும் நானே [மன்னித்துவிடுங்கள் வேறு யாரையும் குறிப்பிட விரும்பவில்லை] என் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக்க மற்றும் நேரிடையாக கூறிட தயங்குவதில்லை.
    புனைபெயரில் எழுதும் தாங்கள் உள் அர்த்தம் பொதிந்ததாக எழுதுவது ஏனென்று தெரியவில்லை?
    நீங்கள் இங்கு வருகை தந்திடும் நண்பர்களில் சிலரை நேரிடையாக அறிவீர்களோ என்ற எண்ணம் எனக்கு எழுகின்றது .
    உங்கள் மறைவான id யும் , உங்கள் நடவடிக்கைகளும், ஒரு அச்ச அல்லது எச்சரிக்கை உணர்வையே உண்டு பண்ணுகின்றன.
    நீங்கள் கூறுவதை வெளிப்படையாகவும், உங்கள் உண்மை முகத்துடனும் கூறினால் உங்கள் நியாயங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
    அவ்வாறில்லாமல் நீங்கள் செய்யும் எந்த செயலும் வீண் வாதங்களையும், எதிர்ப்புகளையுமே உண்டு பண்ணும்.

    நான் மேல் வரிகளில் சொல்லியிருப்பதை போல் நீங்கள் சிந்தனைவாதியாக இருந்தால் நான் சொல்லியிருப்பதில் உள்ள ஞாயங்களை புரிந்து கொள்ளவீர்கள்.
    நீங்கள் உங்கள் முகத்தை மறைத்து கொண்டு என்போன்ற நண்பர்களை பெயர் குறிப்பிட்டு செய்யும் பதிவுகளினால் நாங்கள் வீண் சச்சரவுகளில் அகப்பட்டு கொள்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன என்பது நீங்கள் அறியாதது அல்லவே!
    நீங்கள் உண்மை முகத்துடன் வாருங்கள் அனைவரும் இசைந்து நல்வழி நடப்போம்.

    ReplyDelete
  61. @ மரமண்டை: தூக்கு தண்டனை கைதிக்கும் கூட கடைசி விருப்பம் நிறைவேற்றப் படுமாம். ஏன் அந்த ஒரு வாய்ப்பை இங்கு கேட்பவருக்கு மறுக்க வேண்டும்? என்ன தான் இவர் சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு சிறிது இருக்கிறது எனக்கு!!! Come out with your views pretty openly mate… u can never again gain such a bad reputation it seems!!! Better u speak up!!!!!!!

    ReplyDelete
  62. Meeraan:
    *ஆனால் எனக்கு தங்களிடம் ஒரு மனக்குறை உண்டு, என்னவெனில் நீங்கள் சொல்லவிரும்பும் செய்தியை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைத்து அல்லது உள் அர்த்தம் பொதிந்ததாக சொல்வதாக எனக்கு தோன்றுகிறது.ஏன் அவ்வாறு?
    முகம் பதிவு செய்து உண்மை பெயருடனே பின்னூடங்கள் இடும் நானே என் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக்க மற்றும் நேரிடையாக கூறிட தயங்குவதில்லை.புனைபெயரில் எழுதும் தாங்கள் உள் அர்த்தம் பொதிந்ததாக எழுதுவது ஏனென்று தெரியவில்லை''

    நண்பரே சற்றேறக்குறைய இதே போன்ற கேள்வியை முன்வைத்த நண்பர் விஜய் க்கு தெளிவான பதிலை கடந்த அழிக்கப்பட்டுள்ள பதிவில் அளித்துள்ளேன்! இதுபோன்ற பல தன்னிலை விளக்கத்தை அங்கேயே அளித்துவிட்டேன்! ஏனென்றால் நான் சொல்ல வந்ததை எல்லாம் தெளிவாக சொல்லிமுடித்து விட்டதாலேயே வந்தவேலை முடிந்து விட்டது, சென்று வருகிறேன் என்று கூறினேன்! பொதுமேடையில் பகிரங்கமாக யாரையும் குற்றம் சாட்டமுடியாது! குற்றவாளியாகவே இருந்தாலும் இங்கே பொதுமறையாக எப்படி கூறமுடியும்!

    ஆனால் நடுநிலை என்னவென்று நமக்கு புதியதாய் கற்றுகொடுத்த சில நண்பர்களாலும், அநாகரிகமான கேள்விக்கு நெஞ்சு போறுக்குதில்லேயே'' என்று பதிலிட்ட சில நல்ல நண்பர்களின் நல்ல செயல் கடைசியில் ஏற்பட்டதால் அதற்கு பதில் அளிக்கும் சாக்கில் எதிரிக்கும், லக்னர் போன்றவர்களுக்கும் பெரிய வாய்ப்பை அது ஏற்படுத்தி கொடுத்ததாலேயே, ஆசிரியர் அதுபோன்ற முடிவை எடுக்க நேர்ந்தது! அழிக்கப்படாமல் இருந்திருந்தால் பல உண்மைகள் படிக்க படிக்க புரிந்திருக்கும்! என்னை பொறுத்தவரை துஷ்ட பதிவை கண்டால் தூரத்தான் விலக வேண்டும்!

    எது எப்படியோ வெள்ளிக்கிழமை நான் யார் என்ற உண்மையை இங்கே சொல்லி விடுகிறேன்! மறக்காமல் வரவும் நண்பரே! இனி நீளமான பதிவுகள் எல்லாம் சென்ற பதிவிலேயே முடிந்துவிட்டது, இனி எழுத ஒன்றும் இல்லை என்பதாலேயே சென்று வருகிறேன் என்று கூறி சென்றேன்! அனால் விதி வலியது, நாம் என்ன செய்ய!!!

    ReplyDelete
  63. உள்ளேன் ஐயா,

    பதிவிடும் அளவிருக்கு இங்கு எந்த விவாதமும், தகவல்களும் இல்லை

    ReplyDelete
  64. ----

    எடிட்டருக்கு ஒரு கோரிக்கை

    மரணத்தின் நிசப்தத்தை - NBS உடன் அனுப்பிவிடலாமே.. கூரியர் செலவும் குறையும் என நினைக்கிறேன். கம்பேக்குடன் மாயாவி சாகசம் வந்தது போல, இரண்டு புத்தகங்களை சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடுகையில் காமிக்ஸ் பக்கம் கூடுதல் கவனம் ஈர்க்க வாய்ப்பு அதிகம். இது காமிக்ஸ் படிக்காதவர்களையும், ஸ்டால் பக்கம் வரவைக்கும்..

    ஆனால்..

    முடிவு உங்களுடையதே..

    -----

    ReplyDelete
    Replies
    1. அப்ப ஜானி கதைக்காக ஜனவரி வரை காத்திருக்க வேண்டுமா?

      வேண்டாம் Boss. அது டிசம்பர்-லேயே கிடைக்கட்டும்

      Delete
    2. RAMG75 : நல்லதொரு suggestion தான் ! What say folks ?

      Delete
    3. Agreed - two books in 15 days. I will order back issues for next 15 days !

      Delete
    4. @ Editor,

      Is there a possibility of reprinting some back issues for sales at Chennai Book Fair? If not for this year - may be for future Erode, Comic Con and Chennai meets. Of course only if you think it is viable based on commercials, unless you don't want to consider 10 buck books again.

      Delete
    5. Excellent. I agree with this idea :)

      Delete
    6. No sir. Till now we received 11 books in this year. Please send the Maranathin Nisaptham book in December itself. So after a long time 12 issues in 12 months. Keep rocking.

      Regards
      C. Sankar

      Delete
    7. We would love to get 'Maranathin Nisaptham' this month it self! :)

      Delete
    8. டியர் சார்,

      பனி மாதமான டிசம்பர் எங்களுக்கு காமிக்ஸ் இல்லாமல் காய்ந்த மாதமாக இருக்கிறது,
      தயவு செய்து மரணத்தின் நிசப்தத்தை இம்மாதமே வெளிஇடுங்கள்.

      Delete
  65. நம்" காமெடி கர்னல்" புனித சாத்தான் ஐ யாராவது என்கவுண்டர் செய்து விட்டாங்களா ?
    மீண்டும் நகைச்சுவை குண்டு முழங்க வாருங்கள் நண்பர் சாத்தான் அவர்களே , இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டி உள்ளது , இதற்கே மனம் சோர்ந்து விட்டால் எப்படி ?
    உங்கள் பதிவை பார்க்க ஆவலுடன் !

    ReplyDelete
  66. @மர மண்டை
    You have no business here if you continue commenting in the fashion like what you are doing now.You have no right to interfere and question editors activities. As i have already said before commenting here talk to the editor personally if you believe you have something to explain.

    @Che
    Who are you to dictate terms here mate. Only a blog owner can fix rules like how we should comment and what we should comment.We will wait for our editors next post for a general guidance.Until then don't create flutters here.

    @Mr.Vijayan, If you could block this commenting section for some time many would welcome it gladly.

    ReplyDelete
    Replies
    1. @விஸ்கி-சுஸ்கி

      நான் பதில் சொல்லியிருப்பது நண்பர் 'மரமண்டைக்கு''. அவர் என் கருத்துக்களை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறியதால் பதில் கூறியிருக்கிறேன். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

      //@மர மண்டை
      You have no business here if you continue commenting in the fashion// நான் ஆரம்பத்தில் இருந்து இதைத்தான் கூறி வருகிறேன். இப்போதுதான் இது உங்களுக்கு தோன்றுகிறதா?

      //Who are you to dictate terms here mate.// then, who you are to raise questions against me? - இப்படி நானும் கேட்கலாம். ஆனால் இங்கு ஆசிரியரின் ''UPDATE" களை அறிய வரும் ஒரு வாசகனாக, சிலநாட்களாக நான் சந்தித்த இடர்பாடுகளுக்கு எதிராகவே நான் கேள்வியெழுப்பியுள்ளேன். என் போன்று பலரும் இதே கருத்தை தெரிவித்திருப்பது உங்களுக்கு கண்ணில் படவில்லையா? என் பிரச்சனைக்கு தீர்வை ஆசிரியர் பார்த்துக் கொள்வார். நான் உங்களிடம் தீர்வு கேட்கவில்லை. நான் வேறு யாரிடமும் விவாதம் செய்ய விரும்பவில்லை. Thank You FRD.

      Delete
    2. @ விஸ்கி-சுஸ்கி:

      Though I completely understand your point of view, just because less than a handful of people are not able to show restraint - we should not ban other sensible comments. Writing in this space, gives me a chance to relive my teen times with comics. We will wait for Editor to give us further directions. If he is willing to block for some time - I am willing to accept!

      Delete
  67. விஸ்கி சுஸ்கி : நான் காலையில் சென்றவன் இப்பொழுது தான் இந்த ப்ளாக் ஐ ஓபன் செய்து பார்க்கிறேன், அதற்குள் என் இரண்டு கமெண்ட் காணவில்லை ஆனால் உங்கள் பதிலிலிருந்து நடந்தது என்ன என்று எனக்கு புரிகிறது! சரி ஒரு நாள் பிரச்சனைக்காக காலம் காலமாக எல்லோரும் இப்படியே அவதிதான் பட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? அப்படி என்றால் தவறுகள் மறைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமா? எதற்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகவேண்டும்! எல்லோருக்கும் உண்மை தெரிய இந்த சந்தர்ப்பத்திலாவது தயவு செய்து ஆதரவு கொடுங்கள் வாசக நண்பரே! இதை நீங்கள் தவற விட்டால் மீண்டும் இதுபோன்ற ஒரு வாய்ப்பு வரவே வராது! நான் முன்பே கூறியப்படி சென்று விட்டால் திரும்ப வரமாட்டேன்! யாரை நம்பியும் நம் ஆசிரியர் இல்லை என்பதே உண்மை! நான் அவரை மதிக்கிறேன், மரியாதை செய்கிறேன்! அவருக்கு என்மூலம் களங்கம் வர ஒருபோதும் அனுமதியேன்! அவரை ஒரு சத்திய சீலனாய், ஒரு காமிக்ஸ் கதாநாயகனாய் நான் பார்க்கிறேன்! அந்த சத்தியம் தான் என்னை இங்கே மரமண்டையாய் உருவாக்கியது!

    இல்லை என்றால் நண்பர் சௌந்தர்SS கூறியப்படி (*''//எனவே தவறுகளை அவர்களாகவே களைந்து விடுவது நல்லது.// ''*) தான் நான் செயல்பட வேண்டிவரும்!!!

    ReplyDelete
    Replies
    1. ச்சே எனக்கே சற்று குழப்பமாகி விட்டது, நான் சொல்ல வந்தது என்னவென்றால் எனக்கு வரும் அளவுக்கு மிஞ்சிய பயத்தினால் SoundarSS சொல்படியே நான் சேவைபுரிய வேண்டியிருக்கும் என்பதே! சொற்குற்றம், பொருட்குற்றத்திற்கு எப்பவும் போல் வருந்தும்,

      இவண்;
      மரமண்டை.

      Delete
    2. டியர் மரமண்டை , ஆரம்பத்தில் உங்களுடன் பலர் கும்மி அடித்து உள்ளனர் . உங்கள் ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது நியாயம் இல்லைதான் . உங்களை குறை சொல்லும் நண்பர்களில் பலர் கும்மி அடிபதற்கு என்றே own blog வைத்து உள்ளார்கள் .infact அதில் பல நல்ல கருத்துகளும் ஷேர் செய்யப்பட்டு உள்ளன !
      ownblog வைக்க சில காரணங்களால் முடியாத நண்பர்கள் சில விஷயங்களை இதில் ஷேர் செய்து வருகிறார்கள் , அது பல நட்பு வட்டாரங்களையும் உண்டாக்கி உள்ளது ! இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது !
      சில விஷயங்கள் அளவுக்கு மிஞ்சி போனதால்தான் பிரச்சனை உண்டாகி உள்ளது !இதற்காக மரமண்டையை corner செய்து ,இந்த blog பக்கமே வரகூடாது என்பது எல்லாம் toomuch !நாம் யார் அதை சொல்ல ? விஜயன் சார் அதை சொல்லட்டும் ! அவர் இன்னொரு id உருவாக்கி " சட்டிமண்டை" என்று பெயரிட்டு வந்தால் என்ன செய்வோம் ? அதயும் blok செய்தால் ,அவர் வேறுஒரு id உருவாக்க எவளவு நேரம் ஆகும் ? பிறகு இதற்கு முடிவுதான் என்ன ?
      ஆரம்பத்தில் மரமண்டை டாப் 5 லிஸ்ட் அறிவித்த போதே , எடிட்டர் நாசூக்காக சொல்லிருந்தால் , யாரும் அதிகம்மாக கும்மி அடித்து இருக்கமாட்டார்கள் ! நடந்ததை பேசி நோ use !
      மரமண்டை நல்ல கருத்துகளை சொன்னால் அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை ,எடிட்டரை தவிர ! மரமண்டை இந்த விவகாரங்களை நீங்களும் உங்கள் மண்டையில்ருந்து delete செய்து விடுங்கள் , புண்ணியமாக போகும் !

      Delete
  68. நண்பர்களே மர மண்டை என்னதான் சொல்லுகிறார் என்று பொறுத்துதான் பார்ப்போமே

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. இது ஆசிரியரின் ப்ளாக்கா, இல்லை எல்லோருமாக பலர்கூடி நடத்தும் ப்ளாக்கா என்று இப்போது ஒரே குழப்பமாக இருக்கிறது.

    இது ஒன்றும் ஃபோரம் இல்லையே கருத்து மோதல்களை நடத்த? ஒரு காமிக்ஸ் வெளியீட்டாளரின் பதிவுகள் பிரசுரமாகும் இடம்தானே?

    ஆசிரியரிடம் கேள்விகள் கேட்கலாம், அவர் இடும் பதிவுகளுக்கு முரணான கருத்துக்களையும் சொல்லலாம், ஆதரித்து வரவேற்றும் எழுதலாம். அதற்கு இந்தத் தளம் பொருத்தமானதுதான்! ஆனால், வலைப்பதிவை வாசிக்கவரும் நாங்கள் எங்களுக்குள் மோதிக்கொள்வது நாகரிகமாகவா இருக்கிறது?

    வேறொருவர் வீட்டுக்குள் எங்கள் தனிப்பட்ட சண்டைகளைப் போட்டுக்கொள்வது அசிங்கமல்லவா? ஆசிரியர் தனது வலைப்பதிவில் உள்ள பின்னூட்டங்களை நீக்குவது அவரது உரிமை. அதை யாரும் கேட்கமுடியாது. இங்கே பின்னூட்டங்களை இடுவதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதற்காக நாங்கள் இங்கே சந்தா செலுத்தி அனுமதி பெறுகிறோமா? இல்லையே?

    ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் இவ்வளவு கட்டணம் என்று ஒரு நடைமுறை இருந்திருந்தால், நாங்கள் இவ்வாறு பின்னூட்டங்களில் மோதிக்கொண்டு 400-500 ஐக் கடக்கச் செய்வோமா? ஆசிரியர் தந்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பயன்பெறுவதை விட்டு, இப்படி தேவையில்லாத விடயங்களை ஏன் எம்மேல் அள்ளிப் பூசிக்கொள்ளவேண்டும்? ஆசிரியர் தனது பதிவிலுள்ள பின்னூட்டங்களை அழித்துவிடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டதென்றால், எப்படி பின்னூட்டங்களை அள்ளி அள்ளிப் போடும்போது ஆசிரியரும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டார்களோ, அதேபோல இதையும் ஏற்றுக்கொள்வதுதானே நியாயம்? இதை கருத்து சுதந்திர மீறல் என்று கொடிபிடிக்க, நாங்கள் ஒன்றும் அரசியல் பத்திரிகைக்காக இங்கே வரவில்லையே. எங்கள் அனைவருக்கும் பிடித்த காமிக்ஸ்தானே?

    பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த பல அருமையான காமிக்ஸ் ப்ளாக்குகள் இருக்க, இங்கே இவ்வளவு வருகைகளும் பின்னூட்டங்களும் கொடிகட்டுகின்றன என்றால், ஆசிரியரோடு நேரடியாகப் பேசி, தங்கள் காமிக்ஸ் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்த இயலாதவர்களினதும், ஆசிரியரின் புதிய அறிவிப்புக்களையும், அவரது அனுபவங்களையும் அறிய ஆவலாய் வருபவர்களினதும் வருகையால்தானே?

    எங்களுக்குள் மோதிக்கொள்வதும், பல ஐடிக்களில் வந்து (உண்மையாக இருந்தால்!) அவர்களுக்குள்ளாகவே கருத்துப் பரிமாறுவதும் கொஞ்சம் சிக்கலான மனநிலையின் வெளிப்பாடு என்பது எனது எண்ணம். நிச்சயம் எங்களை நாங்களே பல கேள்விகள் கேட்டுக்கொண்டு எங்கள் உள நிலை பற்றிச் சிந்திக்கவேண்டியதும் கட்டாயம். இந்தத் தளத்தை, ஆசிரியரின் பதிவுத் தளமாகவே இருக்க வழிவிடுவீர்கள் என்றும் இதுவே உங்கள் எண்ணமாக இருக்குமென்றும் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே.....

    உடனடித்தேவை: நாங்கள் இங்கே சரியாக நடந்துகொண்டோமா என்று எம்மை நாமே கேட்டுக்கொண்டு, இந்தச் சலசலப்புக்களுக்கு எமக்கு நாமே வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு முற்றுப்புள்ளி!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஆத்மார்த்தமான ஆதங்கம் உங்கள் பதிவில் தெரிகின்றது ! இவை கலைந்து செல்லும் இருள் மேகங்களே - இந்தப் போர்வை நெடு நேரம் நீடிக்காது ! கவலை வேண்டாம்...!

      Delete
  71. My Lord வாசக நண்பர்களே! இங்கு நடந்த அனைத்து பேரழிவுக்கும் உண்டான பொறுப்பு மொத்தமாக என்னையே சேரும் என இங்கு உறுதியிட்டு கூறுகிறேன்! சந்தேகம் இருந்தால் மிகப்பெரிய விளக்கத்தை உள்ளடக்கிய ஒரு வார்த்தை விளம்பரத்தை பாருங்கள்!!! இப்பொழுது லயன் ப்ளாக் ல் வெளிவந்துள்ளது!

    **நா ஒத்த ஆளு**

    ஏற்கனவே ஸ்டீல் க்ளா, meeraan, சிம்பா பற்றி விளக்கம் அளித்து விட்டதால் இனி அடுத்த Hit List கீழே!

    1.விஜய் : தீபாவளி அன்று ரிலீஸ் ஆன துப்பாக்கி பட ஹீரோ வாக விஜய் நன்றாக நடித்திருந்தார், அதனால் அவர் மேல் ஒரு நல்ல அபிமானம்!

    2.சாத்தான் : அன்றைய தினமே செகண்ட் ஷோ முடித்து விட்டு வரும்போது நான் பார்த்து பயந்தவர் தான் சாத்தான்!

    3.புத்தக ப்ரியன் : பாரதியார் கவிதைகளில் மிகுந்த புலமை பெற்றவர் என்று அவர் பெயரே பலமுறை எடுத்துரைக்க கேட்டது மட்டும் தான்!

    இதனால் நான் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நடந்த எல்லா பழியும் என்னையே சேரும் அதுவும் அவன் செயலால் கரைந்தே காணாமல் போகும்!!!

    பின்குறிப்பு : அதாவது நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் தீபாவளி அன்று நான் பதிவிட்ட பதிவுக்கு இவர்கள் அதற்குரிய பாராட்டை தெரிவித்தார்கள் என்றும் புத்தக ப்ரியன் பதியும் ஆழ்ந்த தெளிவான கருத்துக்கள் என்னை ஈர்த்தது அதன் அடிப்படையிலேயே நான் அவர்கள் நண்பனானேன், அவர்களுக்கு இன்றுவரை நான் யார் என்பது தெரியாது என்பதாகும்!

    இப்பொழுது சந்தோஷம் தானே meeran !!!

    ReplyDelete
    Replies
    1. மர மண்டை : சொல்ல வரும் விஷயம் எதுவாக இருப்பினும் இத்தனை பீடிகை ஒவ்வொரு முறையும் அவசியம் தானா ?

      உங்களது நிஜ அடையாளத்தைத் தெரிந்திடுவதிலோ;தெரியாதிருப்பதிலோ இருந்திடக் கூடிய ஆர்வத்தை விட, ஆயாசம் வரவழைக்கும் நீண்ட பின்னூட்டங்களைத் தவிர்த்து விட்டு, அனைவருக்கும் சுவாரஸ்யம் தர வல்ல விஷயங்களை உங்களின் அழகான தமிழ் நடையில் படித்திடுவதில் தான் ஆர்வம் மேலோங்கி இருக்க முடியும் !

      இங்கு நாம் அனைவரும் காமிக்ஸ் காதலர்களே....அதைத் தாண்டிய அடையாளங்கள் நிச்சயம் எந்தவொரு வேறுபாட்டையும் கொணரப் போவதில்லை !

      Delete
    2. ஆசிரியர் Vijayan : தங்கள் அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்! நான் சொல்ல வந்ததை எல்லாம் சென்ற பதிவிலேயே பதிவிட்டு விட்டேன்! இனி நான் சொல்ல எதுவும் இல்லை என்பதால் மட்டுமே வந்த வேலை முடிந்தது, நான் சென்று வருகிறேன் என்று கூறி சென்றேன். நான் பதிவிட்ட பல விஷயங்களும் போக வேண்டிய இடத்திற்கு சென்று பலனளித்து விட்டது என்றே நினைக்கின்றேன்! அதே போல் வெள்ளிக்கிழமை என்று சொல்லியதுகூட தங்கள் பதிவு வியாழன் இரவு நடு இரவில் வரும் என்பதால் தான்!

      அதே போல் இதுபோன்ற நீளமான பின்னூட்டங்கள் மேற்கொண்டு இடவும் எனக்கு வேறு எந்த ஒரு விஷயமும் இனிமேல் இல்லை. அதனால் நண்பர்களின் இதுபோன்ற பதிவுகளுக்கும் தாங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியத்தை தங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்த மாட்டேன்! ஆனால் தாங்கள் எனக்கு நாளை ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு அனுமதியளிக்க வேண்டும்! நான் சொல்ல வேண்டிய செய்தியை முழுமையாக்கிட எனக்கு ஒரு வாய்ப்பை தாங்கள் எனக்கு அளிக்க வேண்டும்!

      உதாரணத்திற்கு, என் பின்னூட்டங்கள் அதிகமாக இருக்கிறது என்று சண்டை போடும் நண்பர்கள் Msakrates ஒரே கமெண்டை நான்கு முறை பதிவது அவர்களுக்கு தொல்லையாக தெரிவதில்லை! ஆனால் நான் சொல்ல போவது இதை அல்ல, முற்றிலும் வித்தியாசமான ஒரு விஷயத்தை என்பதால் தங்களின் அனுமதியை நானே மானசீகமாக பெற்றுக்கொண்டேன்!

      என்றும் தங்கள் உண்மையுள்ள,
      உங்கள் தீவிர வாசகன்.


      Delete
    3. நண்பர்களே இது நம்மை பிரித்து ஆள யாரோ செயும் சூழ்ச்சியே !முதலில் இதனை புரிந்து கொள்ளுங்கள்!மரமண்டையின் இகழ்ச்சியான பாராட்டையோ அல்லது புகழ்ச்சிதனயோ (வஞ்ச புகழ்ச்சி ஏற்று கொள்ளவில்லை ) நான் ஏற்று கொள்ளவில்லை என்பது தெளிவாக புரியும் எனது பின்னூட்டங்களை படித்தாலே ! கருத்துக்கள் நமக்கு தேவை எனில் மட்டுமே நான் சப்போர்ட் செய்திருப்பேன் சௌந்தர் !இங்கே ஆசிரியருக்கு எதிராக அல்லது நமது ப்லொக்கிற்கு எதிராக காய் நகர்த்தும் வித்து இங்கே ஏற்கனவே போட பட்டு விட்டது ! அதற்காகவே அவர்களுக்கு சில பதில்கள் காட்டமாக தெரிவிக்க வேண்டி இருந்தது! சிலரை இழுக்கவும் நேர்ந்தது !முன்பு இது போல நமது முன்னாள் ப்ளாக் நண்பர்கல் அடித்து கொண்டு சென்றது போல இப்போது நம்மை செல்ல வைக்க சூழ்ச்சி நடக்கிறது !கோஷ்டி பூசலென அதனை நிறுத்தியது போல இதுவும் இருக்கலாம் !யாருடைய பாராட்டும் ,இகழ்ச்சியும் என்னை பாதிக்க அனுமதிக்க மாட்டேன்!அது போல இங்கே வரும் நண்பர்களை பார்க்காமல் அவர்களது கம்மண்டுகளை மட்டுமே பாருங்கள்!என்னடா போன பதிவில் சண்டை போட்டனே என்பதற்காக ,அவர்களது சிறந்த கருத்துகளை ஆதரிக்க நான் தவறுவதில்லை !இப்போதைய நிலையில் நாம் அடித்து கொண்டு சென்னை புத்தக திருவிழாவை சீர் குலைக்கவே இந்த முயற்சி என நினைக்கிறேன் !சிலரை நாம் கண்டு கொள்ளாததால் வந்த விளைவே இது !உண்மையான அக்கறை கொண்ட நண்பர்கள் இதற்க்கு ஆட்படாமல் நீ எப்படி இவரை பாராட்டலாம்,எதிர்க்கலாம் என எதிர்த்து பிரச்சினை செய்யாதீர்கள் !நம்மை பிரித்தால முனையும் கை தேர்ந்த ஒருவரின் நாடகம்தான் இது !அவரை ஆட விடுங்கள் !விடுங்கள் !அவரது காய் நகர்த்தலில் ஆசிரியரின் காய்கலான நாமே அடித்து கொண்டு வீழ வேண்டுமா ?சிந்தித்து பாருங்கள் !இந்த சதுரங்க ஆட்டத்தில் ஆசிரியரின் கை ஒங்க வெளியே உள்ள நண்பர்கள் ஒதுங்காமல் இருந்தாலே போதும் !
      நான் சத்தியமாக என்னை ஏதோ பெரிய ஆளாக நினைத்து கொண்டு எழுதவில்லை நண்பர்களே,இங்கே இந்த கருத்து தேவை என நினைத்தே ,இனி மேலும் நாம் ஒருவரை ஒருவர் காய படுத்தாமல் இருக்கவே !எதிராளி நமது எல்லைக்குள் வர விட்டு மடக்குவோம் அவசர பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள் !

      Delete
    4. //ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா ? இந்த சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்கத் துவங்கியதே நமது NBS பணிகள் ஒரு உச்சத்தை எட்டிடும் தருவாயினில் ....அதன் ட்ரைலர்களை இங்கே வெளியிடத் துவங்கிய நாள் முதலாய் !

      சவால்கள் சூடு பிடிக்கப் பிடிக்க; எடுத்த காரியத்தை அழகாய் நிறைவேற்றிட வேண்டுமென்ற வேட்க்கையும் ஒரு notch அதிகரித்துள்ளது எங்களுக்குள் ! இதற்காகவேனும் நன்றிகள் -முகம் தெரியா அந்த சதுரங்க எதிராளிக்கு ! //

      ஆசிரியர் !

      Delete
    5. மர மண்டை : இங்குள்ள அனைவருக்கும் பொதுவான காமிக்ஸ் தொடர்பான சிந்தனைகளை ; கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே இத்தளத்தின் நோக்கம்.

      ///நான் பதிவிட்ட பல விஷயங்களும் போக வேண்டிய இடத்திற்கு சென்று பலனளித்து விட்டது/// என்ற உங்களின் வரிகள் - உங்களுக்குள்ள ஏதோவொரு hidden agenda வினை சுமந்தே உங்கள் பதிவுகள் அரங்கேறுகின்றன என்பதைத் தெளிவாக்குகிறது !

      "சொல்ல வேண்டியவர்களுக்கான" உங்கள் சேதியை ஒலிபரப்ப - இது நிச்சயம் மேடையல்ல ! காமிக்ஸ் நேசத்தின் பெயரில் இங்கு கூடிடும் நண்பர்களை தொடர்ந்து இது போன்ற சங்கடங்களுக்கு உட்படுத்துவதற்கு நானும் ஒரு மறைமுகக் காரணியாக இருந்திட பிரியப்படவில்லை !

      உங்கள் "செய்தியை முழுமையாக்கிட" அருள் கூர்ந்து நீங்கள் பிறிதொரு இடத்தைத் தேர்வு செய்திடுவதே நலம்.

      Delete
    6. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : Well said !

      Delete
    7. //நீங்கள் பிறிதொரு இடத்தைத் தேர்வு செய்திடுவதே நலம்// CHECKMATE :D

      சரியான பதில் சார்.

      Delete
    8. @ Steel Claw, spot on!

      Let's make chennai book fair a grand success for Lion/Muthu comics!

      @ Editor,

      NBS - I want one copy from your hands, one copy from Founding Editor and rest in courier :)

      Delete
    9. இனி நம் தளம் சரியான பாதையில் NBS -ன் வெற்றியை நோக்கி செல்லட்டும் . பிரச்சனைக்கு சரியான தீர்வளித்ததற்கு நன்றி சார்.

      Delete
    10. //உங்கள் "செய்தியை முழுமையாக்கிட" அருள் கூர்ந்து நீங்கள் பிறிதொரு இடத்தைத் தேர்வு செய்திடுவதே நலம்.//


      --Excellent Sir !!. Well Said !!. Plain and Simple ....

      Delete
    11. சார் ,எனக்கும் ,நண்பர் சுஸ்கி -விஸ்கிக்கும் தங்கள் கையால் மேலும் ஒன்று சென்னையில் !காத்திருக்கிறோம் விழாவிற்காக !

      Delete
    12. டியர் ஸ்டீல் க்ளா: நல்ல கருத்துக்கள். நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது...

      Delete
  72. @ all: I am sure many are like me now - don't know if I should laugh or cry! We cant stop defending our egos even for common good :) :(

    ReplyDelete
  73. ஆசிரியர் Vijayan : ஆசிரியர் அவர்களுக்கு நன்றி! இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இறையருள் இருக்கும் போது நானும் அவ்விதமே செயல்படுவேன்! ஆனால் நீங்கள் நினைத்தது போல் அதுவல்ல என்னுடைய செய்தி, இங்கே உங்களுக்காக மட்டுமே நான் பதிவிட்டு வந்தேன், நான் இப்பொழுது சொல்ல வந்ததும் உங்கள் நன்மைக்காக மட்டுமே! இது நிச்சயமாக இங்கு சிலருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்! இதோடு இரண்டுமுறை நான் இங்கு உண்மையை சொல்ல மறுக்கப்பட்டுள்ளேன்! அதற்கு என் வார்த்தை பிரயோகம் தங்களுக்கு இப்படிப்பட்ட முடிவை எடுக்க ஒத்துழைத்து இருக்கலாம்! இதுவரை எனக்கு இடமளித்தமைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!

    போகும் முன் ஒரே ஒரு வார்த்தை, நான் பதிவிட கற்றுக்கொண்டதே 10.11.12 அன்று தான். இது நீங்கள் நம்பும் அந்த ஆண்டவன் மீது சத்தியம்!

    ReplyDelete
    Replies
    1. சின்னதாய் ஒரு காமிக்ஸ் நேச நெஞ்சங்களின் வட்டம் ; அழகாய் நம் முன்னே விரியும் உலகக் காமிக்ஸின் சமீப காலப் படைப்புகள் ; இவற்றை சுலபமாய் ரசித்திட, ஆராதித்திட இத்தனை பிரயத்தனமோ ; பெரிய வார்த்தைகளோ அவசியம் தானா ?

      மனதை இலகுவாக்கிக் கொண்டாலே, வார்த்தைகளில் அது பிரதிபலிக்கும் என்பது என் அனுபவப் பாடம். நித்தமும் அவரவர் நிஜ வாழ்க்கைகளில் சந்திக்கும் ஓராயிரம் தலை நோவுகளை மறந்து சற்றே இளைப்பாற ஒதுங்கும் ஒரு தளத்தை இலகுவாகவே வைத்திருப்போமே ?

      Delete
  74. மரமண்டை:

    மூன்று நான்கு கமெண்ட்கள்
    விழுவது எனது
    கட்டுப்பாட்டில் இல்லை!

    தமிழில் கருத்திட
    வேண்டும் என்ற
    ஆசையில் புது மொபைல் வாங்கினேன்!

    அது சொதப்பி விட்டது!

    இனி தேவையற்ற
    கருத்துக்கள் இடாமல்
    இருப்பேன்!

    நீங்கள் 200 கருத்துகள்
    இட்டும் அவற்றில் ஒரு
    விஷயம் கூட தேறுவதாக
    தோன்றவில்லை!

    நீங்கள்
    யார் என்பது
    முக்கியமல்ல!

    உங்கள் கருத்து என்ன
    என்பதே முக்கியம்!

    உங்கள் எண்ணங்களை
    வெளிப்படையாக
    கூறுங்கள்!

    நியாயமாக இருந்தால்
    நானே உங்களுக்கு
    ஆதரவு தெரிவிப்பேன்!

    இந்த தளத்தை
    சுத்தம் செய்ய
    உதவி செய்திருக்கிறீர்கள்!

    அதற்காக எனது
    நன்றிகள்!!!

    ReplyDelete
  75. Msakrates : உங்கள் ஆர்வம் இங்குள்ள அனைவருக்கும் பரிச்சயமே ! உங்கள் மொபைல் பதிவுகளில் நேரும் சிக்கல்களைக் களைய முயலுங்கள் ! உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததொரு விஷயத்திற்காக நீங்கள் ஓரமாய் நின்றிடுதல் அவசியமல்லவே !

    நானும் உங்களைப் போன்றவனே...இன்றைய நவீன gadgets செயல்பாடு எனக்கும் ஒரு புரியாத புதிரே !

    ReplyDelete
    Replies
    1. @ Editor, waiting for Jan 4th evening!

      P.S: The last time I waited for an evening to meet someone was in 2002, to meet my now "better half" :)

      Delete
    2. Comic Lover : Flattered to say the least ! But the expectations are mutual ! I am pretty keen to catch up with every one of our friends as well !

      Delete
  76. மிக்க நன்றி விஜயன் சார்!

    ReplyDelete
  77. திரு விஜயன் சார்,

    சென்னை புத்தக கண்காட்சி தொடக்க நாள் (04-01-2013) வெள்ளியன்று மாலை நீங்கள் அங்கு இருப்பீர்களா ? உங்களை சந்திக்க முடியுமா ?

    //காமிக்ஸ் ரசிகன் : புத்தகக் கண்காட்சியின் முதல் 2 நாட்கள் நான் ஸ்டாலில் தான் இருப்பேன் - மாலைகளில் !//

    காரணம் : நான் சனியன்று காலை திருப்பதி செல்ல முன் ஏற்பாடுகள் செய்து உள்ளேன். எனவே திங்கள் அன்றுதான் திரும்ப சென்னை வரமுடியும்.

    வெள்ளியன்று NBS புத்தகத்தை நமது மூத்த ஆசிரியர் மற்றும் உங்களது கைகளால் பெற்று கொள்ள முடியுமா ?


    புத்தக திருவிழாவை எதிர் நோக்கி ....


    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி : ஜனவரி 4 மாலையில் உங்களையும், நம் இதர நண்பர்களையும் சந்திக்கக் காத்திருப்போம் - ஆவலாய் !

      Delete
    2. அவசியம் சார் ... தவறாமல் அங்கே இருந்திடுவோம் ....

      மிக்க மகிழ்ச்சி ...

      Delete
  78. நண்பர்களே
    வேறு எதைப்பற்றியும் சீரியஸாக எழுதாமல் காமிக்ஸ் பற்றி மட்டுமே ஜாலியாக எழுதினால் அனைவரும் ரசித்துப்
    படிப்பார்கள்

    ReplyDelete
  79. டியர் மரமண்டை வாசக நண்பரே,

    இங்கு பல வாசக நண்பர்கள் வார்த்தை யுத்தங்கள் செய்திருக்கின்றனர். ஆனால், ஒருபோதும் மன யுத்தம் செய்ய நேர்ந்ததில்லை. கிட்டத்தட்ட நான்கு வாரங்கள், உங்களுடைய புதிர்க்குகைக்குள் பலரை நுழைய வைத்து, உங்கள் விருப்பத்திற்கு விளையாட வைத்துள்ளீர்கள்!

    நீங்கள் 'ஒருவரா' இல்லை 'பலரா' என்ற உண்மையும்...
    உங்களைப் பற்றி தெரிந்து கொண்டே ஆதரவு அளித்தவர்கள் யார்,
    தெரியாமல் பதிலளித்தவர்கள் யார் யார் என்ற உண்மையும்...

    இங்குள்ள சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்...
    அந்த உண்மை போய்ச் சேரவேண்டிய இடங்களில் சேர்ந்திருக்கலாம்...
    தான் தேர்ந்தெடுக்கும் மேலும் சில இடங்களுக்கும் அது பயணிக்கலாம்...

    எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவும் ஆசிரியரால் எடுக்கப்பட்டு விட்டது...
    அது பலராலும் வரவேற்கப்பட்டு விட்டது...
    நானும் வரவேற்கிறேன்...!

    அந்த முடிவை ஒரு சிலர் வரவேற்காமலேயே போகலாம்...
    இது ஒரு துவக்கத்தின் முடிவாகவும் இருக்கலாம்...
    அல்லது ஒரு முடிவின் துவக்கமாகவும் அமையலாம்...

    ஆனால், உங்களைப் பற்றிய உண்மை போய்ச் சேராத வாசகர்களின் நிலையை நினைத்தால்தான் சற்று வருத்தமாக உள்ளது. ஒரு வித அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும் வாசக நண்பர்களிடையே ஏற்படுத்தி விட்டீர்களே என நினைக்கையில் ஒரு வித கலக்கமும், சோர்வும் என்னை சூழ்கிறது!

    ஆனால், இது ஒரு தற்காலிக பின்னடைவே! காலம் பதில் சொல்லும், உங்களுக்கும், இங்குள்ள அனைவருக்கும்!

    குழப்பமாக ஒரு பதில் அளித்ததிற்கு மன்னிக்கவும். ஆனால் அப்படி இருந்தால்தான் உங்களுக்கு பிடிக்கும் என்பதாலேயே இப்படி எழுத நேர்ந்தது!!!

    நீங்கள் எனக்கு கடைசியாக அளித்த 'நேரடி' பதிலில் இவ்வாறு குறிப்பிட்டீர்கள்:

    //டியர் கார்த்திக், நான் இதுவரை இங்கு பதிவிட்ட எந்த பதிவுமே உங்களுக்காக எழுதப்பட்டது அல்ல. இது சத்தியம்! இதை தவிர வேறு எப்படி உங்களுக்கு சொல்ல! இந்த காமிக்ஸ் ப்ளாக் ஐ எதிரியாக பார்க்கும் சிலருக்கு முன்னால் நீங்கள் எல்லாம் ஒரு அப்பாவி அல்லது ஆசிரியரின் உண்மையான நலன் மீது அக்கறை கொண்ட நண்பர் என்பதால் என்றுமே நீங்கள் இங்கு எல்லோருக்கும் நண்பரே! வீணாக குழப்பம் வேண்டாம், நம் எண்ணம் மட்டுமே நம்மை என்றும் அலைகழிக்கும்!//

    ஒரு நல்ல நண்பனாய், ஒரு சிறிய வேண்டுகோள்: "NBS படித்த பின்னர் அதைப் பற்றிய உங்களுடைய 'நேரடியான' கருத்துக்களை இங்கே காண விரும்புகிறேன் (உங்களுடைய சொந்தப் பெயரில்!)"

    நன்றி!

    ReplyDelete
  80. Hai friends,
    How all of you. I pray to god for all of you to live peaceful life. I am vignesh from mayiladuthurai. I am not new person. Since from the starting of this blog i watched everything and read everything. The reason for not posting comment is , i don’t know how to type in tamil and also don’t have time.hereafter i am going to post comment.whether u welcome me guys.

    ReplyDelete
  81. Welcome Mr. Vignesh.
    தங்கள் வரவு நல்வரவாகுக.
    தமிழில் டைப் செய்ய இந்த லிங்க்கை பயன்படுத்தவும்.
    http://www.google.com/transliterate/Tamil

    ReplyDelete
  82. சார்,
    வரவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு NBS வுடன் கைகோர்ந்து 'மாயாவி digest ' ம் அதற்குள் தயார் செய்து வெளியிட்டால் சைக்கிள் gap ல் விற்பனையில் தூள் கிளப்ப வாய்ப்பிருக்கிறது ? ரீபிரின்ட் என்பதால் தயாரிப்பு பணிகள் சீக்கிரமாக முடிக்கலாம் தானே ?

    ReplyDelete