tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8150869006735151676..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: நி + நி + நி !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger241125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2858310481915030962019-11-12T19:16:43.109+05:302019-11-12T19:16:43.109+05:30Thank you all for your condolences message. Thank you all for your condolences message. Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-127619379470848652019-11-09T23:02:07.824+05:302019-11-09T23:02:07.824+05:30Priyatels! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!Priyatels! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70923309550843898332019-11-09T22:14:27.392+05:302019-11-09T22:14:27.392+05:30// வெல்டன்! ஷெல்டன்.! // GP வரவர சும்மா பின்னரிங்க...// வெல்டன்! ஷெல்டன்.! // GP வரவர சும்மா பின்னரிங்க போங்க<br /><br />Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42209884054408715982019-11-09T18:23:42.350+05:302019-11-09T18:23:42.350+05:30துரோகமே துணை..!
கண்ணை கட்டி காட்டில் விட்டது போல,...துரோகமே துணை..!<br /><br />கண்ணை கட்டி காட்டில் விட்டது போல, ஏகப்பட்ட ஆட்கள், ஏராளமான சம்பவங்கள், எக்கச்சக்க திருப்பங்கள் என கலந்துகட்டி ரவுண்டுகட்டி தாக்குகின்றன.<br /><br />40 வருஷ பின்னணியும், மாபியா கேங்கின் சரித்திரமும், ரத்தத்தில் தோய்ந்த வாரிசு வேட்டைகளும், குற்றங்களும் என நான்கு பாகத்துக்குண்டான ஒட்டுமொத்த சரக்கை, மொத்தமே 60 பக்கத்தில் அடக்கியது போல ஒரு உணர்வு.<br /><br />ஆனாலும் ஆச்சரியம்.!<br /><br />துளியும் குழப்பமில்லாமல் தெளிவாகவே புரிகிறது.ஆக்சன் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அது குறையாகவே தெரியவில்லை.<br /><br />வெல்டன்! ஷெல்டன்.!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76570035718222016822019-11-09T17:52:01.275+05:302019-11-09T17:52:01.275+05:30இந்த கதை கலரில் வந்து இருந்து இருந்தால் சும்மா பட்...இந்த கதை கலரில் வந்து இருந்து இருந்தால் சும்மா பட்டையை கிளப்பி இருக்கும். ஆனால் இது பிளாக் and White மட்டுமே என்று ஆசிரியர் சொல்லிட்டாரு Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41735189645029632942019-11-09T15:05:28.316+05:302019-11-09T15:05:28.316+05:30**** லயன் தீபாவளி மலர் ***** சிகப்பு ரோஜாக்கள் **...**** லயன் தீபாவளி மலர் ***** சிகப்பு ரோஜாக்கள் *****<br /><br />கதை : பிரபல பெண் எழுத்தாளர் 'எமிலி ரே' எழுதிய சமீபத்திய நாவல் ஒன்றை படிக்க நேரிடுகிறது ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு! அந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் சங்கதிகளில் பலவும், அவர் பணியிலிருக்கும்போது ஊரையே கதிகலக்கி - பின் காணாமல்போன 'டாடி பட்செர்' என்ற சைக்கோ கில்லரின் வழிமுறைகளோடு ஆச்சரியப்படும் வகையில் ஒத்துப்போகிறது! பலவருடங்களுக்கு முன்பே தொங்கலில் விடப்பட்டிருந்த இந்தக் கேஸ் மீண்டும் போலீஸாரால் தூசுதட்டப்பட்டு, அந்தப் பெண் எழுத்தாளரை சந்தேக வலையின்கீழ் கொண்டு வருகின்றனர்!! <br /><br />இக்கட்டில் சிக்கிய அந்தப் பெண் எழுத்தாளர் நம் டைலன் டாக்கை அணுகி, அந்த நாவலை தான் எழுதவில்லை எனவும், சிலவருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு கார் விபத்தினால் கோர்வையாக சிந்திக்கும் திறனையும் - அதன் தொடர்ச்சியாக தன் எழுத்தாற்றலையே மொத்தமாய் இழந்துவிட்டதாகவும், பதிப்பகம் ஒன்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஒரு நாவலை எழுதிமுடித்துத்தர வேண்டிய நெருக்கடி தனக்கு இருந்ததாகவும், அதனால் வேறுவழியின்றி 'கோஸ்ட் ரைட்டர்ஸ்' எனப்படும் - காசுக்காக எழுதித்தரும் முகம்காட்டாத ஆசாமிகளில் ஒருவரால் இந்த நாவல் எழுதி வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறாள்! <br /><br />இதனிடையே, துயிலெழுந்த சைக்கோ கொலைகாரன் தனித்திருக்கும் பெண்களைக் கோரமாகத் தாக்கி, அவர்களது உடல் உறுப்புகளை வெட்டியெடுத்து பூந்தொட்டியில் போட்டு சிகப்பு ரோஜாக்களை வளர்ப்பதை வாஞ்சையோடு செய்துவருகிறான்!<br /><br />* யார் அந்த சைக்கோ கொலைகாரன்?<br />* அந்த நாவலை எழுதிய கோஸ்ட் ரைட்டர் யார்?<br />* கொலைகாரனுக்கும், கோஸ்ட் ரைட்டரும் ஒரே ஆசாமியா அல்லது வேறுவேறு நபரா?<br />* பெண் எழுத்தாளர் எமிலி ரே இந்த சிக்கலிலிருந்து மீண்டாளா அல்லது மாண்டாளா?<br />- என்பதையெல்லாம் திகைக்கச் செய்யும் திக்திக் கதைநகர்வோடும், நேர்த்தியான சித்திரங்களோடும் நம் டைலன் டாக் ஒரு இயல்பான டிடெக்டிவாக அசத்தியிருக்கும் இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!<br /><br />டைலன் டாக்கிடமிருந்து மீண்டும் ஒரு தரமான திரில்லர்! அந்திமண்டலம், வாராதோ ஓர் விடியலே - சூப்பர் ஹிட் கதைகளின் வரிசையில் இப்போது 'சிகப்பு ரோஜாக்கள்'ளும்!<br /><br />எனது ரேட்டிங் : 10/10<br /><br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61265425220042301462019-11-09T08:29:35.617+05:302019-11-09T08:29:35.617+05:30Hi all😊
Just finished reading vidumuraiyil kol.wh...Hi all😊<br />Just finished reading vidumuraiyil kol.what a funny story it was.laughed out in many pages.become fan of Clifton.loved it.expecting more stories like this.thank you😊👌Mrs.RamVShttps://www.blogger.com/profile/05102984527767639820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53174675944124540342019-11-08T18:06:39.685+05:302019-11-08T18:06:39.685+05:30RipRipSivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88106481880244938442019-11-08T17:15:35.660+05:302019-11-08T17:15:35.660+05:30Marma manithan Martin vicithira ulagamithu excelle...Marma manithan Martin vicithira ulagamithu excellent.Please release at least 2 albums per year for him. Dylan dog sigappu rojakkal must be in 18+ category so much of violence but nice psycho thriller. CID robin's Kolai kolaiya mundrika good thriller. New version robin is better than older versionsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14762965430430600112019-11-07T23:25:01.792+05:302019-11-07T23:25:01.792+05:30****** வேய்ன் ஷெல்டன் 'தோன்றும்' ***** து... ****** வேய்ன் ஷெல்டன் 'தோன்றும்' ***** துரோகமே துணை! *****<br /><br />மரணத்தின் பிடியிலிருக்கும் ஒரு டான், தான் பதுக்கிவைத்த சொத்துகளையெல்லாம் 40 வருடங்களுக்கு முன் காணாமல் போன தன் பேத்தியிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அவளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியை ஷெல்டனிடம் ஒப்படைக்கிறார்! சொத்துகளை மொத்தமாய் ஆட்டையை போடும் முனைப்பில் அந்த டானின் அல்லக்கைகளே இடையூறாக வழிமறிக்க; தன் காதலி ஹானஸ்டியுடன் இணைந்து ஷெல்டன் அந்த 40 வயது பேத்தியை தேடுவதே மீதக்கதை!<br /><br />நம்பினால் நம்புங்கள் - ஓரிரு முறை எதிராளியின் வயிற்றில் குத்து விடுவதைத் தாண்டி ஷெல்டனுக்கு சாகஸம் செய்ய பெரிதாய் எந்தவொரு வாய்ப்புமில்லை!! 'அப்படீன்னா கதையில் விறுவிறுப்பு இருக்காது.. மொத்தமா ஊத்திக்கிடப் போவுது' என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!! சாகஸங்கள் நிறையவே உண்டு - ஆனால் அந்த சாகஸங்களையெல்லாம் நிகழ்த்திக் காட்டியிருப்பது கதாசிரியர் 'வான் ஹாம்'மின் பேனா தான்!! எதிர் பாராத திருப்பங்கள் ஒரு கதையில் இடம்பெறுவது ஜகஜம் தான்.. ஆனால் யூகிக்க முடியாத திருப்பங்களைக் கொண்டே ஒரு முழுக்கதையையும் அமைக்கும் வித்தைகள் எல்லாம் வான் ஹாமிற்கு மட்டுமே சாத்தியமாகிடும் கலை!! கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதும் சரி.. படித்து முடிக்கும்போதும் சரி - இந்த மனிதரின் கதை சொல்லும் ஆற்றல் பற்றி வியக்காமல் இருக்கவே முடியாது!! என்னவொரு அசாத்தியத் திறமை!!!<br /><br />பக்கம் பக்கமாய் பேசப்படும் வசனங்கள் ஆரம்பப் பக்கங்களில் கொஞ்சம் அலுப்பாய் தோன்றினாலும், அந்த வசனங்களெல்லாமே ஒரு அசாத்திய கதை சொல்லும் திறமையின் அங்கங்களே என்று பிற்பாடு புரியவரும்போது 'அய்யாடிக்கய்யாடியோவ்' என்று பிரம்மிக்கத் தோன்றுகிறது!<br /><br />'துரோகமே துணை' - வான் ஹாமின் அக்மார்க் சாகஸம்!<br /><br />எனது ரேட்டிங் : 10/10Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68066982799316369462019-11-07T19:28:27.524+05:302019-11-07T19:28:27.524+05:30எடிட்டர் சார்... 5250 சந்தா வகை home pageலேயே வர்ற...எடிட்டர் சார்... 5250 சந்தா வகை home pageலேயே வர்றாப்ல ஏதாவது பண்ணுங்களேன்..? நிறைய நண்பர்கள் ஏமாற்றமடையறாங்க!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65604449509446523412019-11-07T19:26:04.722+05:302019-11-07T19:26:04.722+05:30@Texkit
lioncomics.in Home pageல் ஏனோ இந்த சந்தா ...@Texkit<br /><br />lioncomics.in Home pageல் ஏனோ இந்த சந்தா வகை display ஆகவில்லை! <br /><br />மாற்றுவழி:<br />அதே lioncomics.in வெப் சைட்டில் <br />top left cornerல் lion comics logoவுக்குக் கீழே ஒரு menu button (மூன்று hyphen symbol ஒன்றின்கீழ் ஒன்றாக) இருக்கும்.. அதை க்ளிக்கினால் '2020 subscription' என்ற டைட்டிலின் கீழ் 'subscribe' hyperlink காணக்கிடைக்கும்! அதை கிளிக்கினால் எல்லா சந்தா வகையறாக்களும் காட்சியளிக்கும்!!<br /><br />சந்தா கட்டுங்க!! பந்தா காட்டுங்க!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16756993929574073112019-11-07T18:27:24.033+05:302019-11-07T18:27:24.033+05:30A+B+C+D+E+ Maxi tamilnadu courier how much...in th...A+B+C+D+E+ Maxi tamilnadu courier how much...in the previous post it mentioned 5250 but it is not there in the online site..Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78636446632622688152019-11-07T14:46:44.964+05:302019-11-07T14:46:44.964+05:30**** கர்னல் கிளிப்டனின் காமெடி ரணகளத்தில் "வி...**** கர்னல் கிளிப்டனின் காமெடி ரணகளத்தில் "விடுமுறையில் கொல்" *****<br /><br />கிளிப்டனை யாரோ காரில் பின்தொடர்வதாக ஆரம்பிக்கிறது கதை! நான்கு பக்க ரகளைகளுக்குப் பிறகு பின்தொடர்ந்த உருவம் ஒரு பாட்டீம்மா என்பதும்; பாட்டீம்மா ஒரு எழுத்தாளர் என்பதும்; ஒரு பராக்கிரமம் மிக்க துப்பறிவாளரின் கூடவே தங்கியிருந்து அவரது செயல்பாடுகளைக் குறிப்பெடுத்து; அதை ஒரு நாவல் வடிவில் வெளியிட வேண்டுமென்பதே பாட்டீம்மாவின் குறிக்கோள் என்பதும் தெரியவருகிறது!! அந்த நேரத்தில் லண்டனின் வேறொரு ஒதுக்குப்புறத்திலிருக்கும் ஒரு ராஜவம்ச குடும்பத்திடமிருந்து விருந்தாளியாகத் தங்கிச் செல்ல நம் கர்னலுக்கு அழைப்பு வரவே, எழுத்தாள பாட்டீம்மாவையும் உடனழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார் கர்னல்! சென்ற இடத்தில் நிலவும் சில அசாதாரணச் சூழ்நிலைகளை நம் கர்னலும், பாட்டீம்மாவும் கூட்டாகச் சேர்ந்து எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதே ரகளையான மீதக் கதை!<br /><br />வழக்கமாக கர்னலின் கதைகளில் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான ஆக்ஷனுடன் வழிநெடுக காமெடி ரகளைகளும் இருந்திடும்! இதில் ஆக்ஷன் குறைவுதான்.. ஆனால் காமெடி ரகளைகளுக்குப் பஞ்சமேயில்லை! குறிப்பாக, தன்னை நம்பர்-1 டிடெக்டிவாக பாட்டீம்மாவிடம் நிலைநிறுத்த கர்னல் செய்யும் முயற்சிகளும், அந்த முயற்சிகளை பாட்டீம்மா பல்ப்பாக மாற்றுவதும், பல்பு வாங்கிய கர்னலின் முகபாவங்களும் - கெக்கபிக்கே ரகங்கள்!! பல தருணங்களில் இந்த 'முகபாவம்' சமாச்சாரத்தில் நம் வுட்சிட்டி ஷெரீப் டாக்புல்லோடு போட்டி போடுகிறார் கர்னல்! ரகளையான நிகழ்வுகளின் நடுவே சலனமின்றி நின்றுகொண்டு பாட்டிம்மா அந்த நிகழ்வுகளை சத்தமாக உச்சரித்தபடியே குறிப்புகள் எடுப்பதும், அதைப் பார்த்து கர்னல் கடுப்பாவதும் - ஹா ஹா.. செம்ம!!<br /><br />இறுதியில் அந்த ராஜவம்சக் குடும்பத்தில் ஒரு மர்ம முடிச்சை அவிழ்க்கவும் பாட்டீம்மாவே உதவிட, கர்னலுக்கு துப்பறியும் வேலை துளியும் இன்றி மீண்டும் பாட்டீம்மாவால் பல்பு வழங்கப்படுவதும் ஒரு இயல்பான கெக்கபிக்கே!!<br /><br />கார்ட்டூன் கதைகளில் கர்னலுக்கும் ஒரு இடம் வேண்டுமென்று பலமாக நினைக்க வைக்கிறது இந்த 'விடுமுறையில் கொல்'!<br /><br />என்னுடைய ரேட்டிங் : 9.5/10Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3967057523648435492019-11-07T14:46:22.146+05:302019-11-07T14:46:22.146+05:30அழகாக சொன்னீர்கள் ரஃபிக் சார். இந்த கதைகள் எல்லாம்...அழகாக சொன்னீர்கள் ரஃபிக் சார். இந்த கதைகள் எல்லாம் வரும் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க முடியாது. நாம் போகும் தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80452111322616958072019-11-07T10:21:14.781+05:302019-11-07T10:21:14.781+05:30டியர் எடிட்,
உங்கள் கதை தேர்வுகள் மற்றும் காம்பின...டியர் எடிட்,<br /><br />உங்கள் கதை தேர்வுகள் மற்றும் காம்பினேஷன்கள் என்றும் சோடை போனதில்லை, அதனால் உங்கள் முடிவுகளுடன் மனமுவந்து ஒத்துபோகிறேன். ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகளை கடந்து, தோர்கல் போன்ற கதைதொடரை நமது வெகுஜன வாசிப்பில் இடம்பிடிக்க வைத்ததே அதற்கு ஒரு சான்று. 6, 7 வருடங்களுக்கு முன்பு XIII தாண்டி நமது காமிக்ஸ் அணிவகுப்புகள் லார்கோ, தோர்கல், ப்ளூகோட், க்ரீன்மேனர், வெஸ்டர்ன் என்ற கதை தொடர்களை தொடாதா என்ற எண்ணங்களை, நிஜமாக்கியது உங்கள் தேடல்கள்தான். இப்போது, பராகுடா போன்ற தொடர்களும் வெளிவரும் சாத்தியகூருகள் அமைந்தது இதன் வழிதடத்திலேயே.<br /><br /><br />ஒரு காலத்தில் டெக்ஸ் கதைகள் மாதா மாதம் திகழ்வாக மட்டும் போனபோது லயன் வாங்குவதை நிறுத்தலாமா என்று யோசித்தவன் நான். இன்று அவை நமது மற்ற கதை தொடர்களை பரவலான வாசகர்களுக்கு அறிமுகபடுத்தும் காரணியாக இனம் கண்டுகொள்ள முடிவதும் உங்கள் கதை தேர்வுகளில்தானே.<br /><br />2020 லும் அடித்து தூள் கிளப்புங்கள்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71464687720049116682019-11-06T23:49:49.993+05:302019-11-06T23:49:49.993+05:30ஒரேயொரு பிங்க் ; ஒரேயொரு ரெட் ; ஒரேயொரு ப்ளூ சந்தா...ஒரேயொரு பிங்க் ; ஒரேயொரு ரெட் ; ஒரேயொரு ப்ளூ சந்தா இதுவரையிலும் !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54331494768759495382019-11-06T23:46:58.474+05:302019-11-06T23:46:58.474+05:30'பொன்னியின் செல்வன்' ஏற்கனவே காமிக்ஸ் வடிவ...'பொன்னியின் செல்வன்' ஏற்கனவே காமிக்ஸ் வடிவில் வெளிவந்து கொண்டிருக்கும் போது அதனுள் நாமும் தலைநுழைக்க நினைப்பது பொருத்தமிராது நண்பரே !<br /><br />And ஒரு படைப்பென்பது, நாமெல்லாம் இப்போது கைகுலுக்கி உறவாடி வரும் தரத்தோடு இருந்திட வேண்டுமெனில் அதன் பின்னணியில் ஒரு எடிட்டரின் அனுபவங்கள் மாத்திரமே ஒருபோதும் போறாது ! ஒரு அசாத்திய ஜாம்பவான் அணிவகுப்பே அவசியமாகிடும் !<br /><br />ஒரு கதையைக் கோர்வையாய் உருவகப்படுத்தி ; அதனை frame by frame பிரித்து ; ஒன்றுக்கும், அடுத்ததற்கும் பார்வைக்கோணங்களிலேயே வித்தியாசம் காட்டி ; கதைக்கேற்ற டெம்போவில் ஸ்கிரிப்ட் எழுதி ; ஒரு குறிப்பிட்ட பக்க எண்ணிக்கைக்குள் அடக்குவதென்பது இமாலய பணியாக்கும் ! அதனை ஒரு தவமாய்ச் செய்தாலொழிய வெற்றி கானல்நீராய் மாத்திரமே இருந்திடும் ! <br /><br />ஒரு விமர்சகராய் இருப்பது சுலபம் சார் ; ஒரு எடிட்டராய் மெருகூட்ட முனைவதுமே கடினமல்ல சார் ; ஆனால் ஒரு படைப்பாளியாய் விஸ்வரூபம் எடுப்பது வரம் பெற்றுவந்த மாந்தர்க்கே சாத்தியம் ! நம் திறன்கள் எதனிலோ, அதிலேயே தொடர்வது தானே விவேகமாக இருக்க முடியும் ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28671922590465839182019-11-06T23:35:19.276+05:302019-11-06T23:35:19.276+05:30//இந்த பதிவின் மூலம் ஆசிரியர் தன்னுடைய கதை தேர்வுக...//இந்த பதிவின் மூலம் ஆசிரியர் தன்னுடைய கதை தேர்வுகளுக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார்.//<br /><br />Not at all ! யாருக்கும் எதையும் நிரூபிக்கவோ ; எடுக்கும் தீர்மானங்களை மேடை போட்டு நியாயப்படுத்திடவோ - இப்போதெல்லாம் மெனெக்கெடுவதே இல்லை நண்பரே ! ரசனைசார் விஷயங்களில் எந்த இரண்டு பேரும் ஒத்துப் போவது கடினம் எனும் போது அதன் பொருட்டு மிச்சம் மீதியிருக்கும் கேசத்தைப் பறிகொடுக்க தம் லேது ! So தீர்க்கமாய் யோசித்த பின்னே, தீர்மானம் எதையெடுத்தாலும் அதனோடு நின்றிடுவதே இப்போதெல்லாம் எனது அவா ! Of course - இதை இப்படி மாற்றியிருக்கலாமோ ? அதை அப்படி முயற்சித்திருக்கலாமோ ? என்ற நினைப்புகள் ஆண்டின் ஓட்டத்தின் போது தோன்றுவதுண்டு தான் ! ஆனால் யார் தான் ஜீனியஸ் இல்லை - திரும்பிப் பார்க்கும் வசதி கிட்டிடும் போது ?<br /><br />இந்தப் பதிவில் நான் எழுதியுள்ளவை யாவுமே mere statements of facts ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48758760523530589662019-11-06T23:27:42.000+05:302019-11-06T23:27:42.000+05:30உங்கள் கேள்விக்கான பதில் மேலுள்ள பதிவிலேயே உள்ளதே ...உங்கள் கேள்விக்கான பதில் மேலுள்ள பதிவிலேயே உள்ளதே நண்பரே ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53195016590867449172019-11-06T23:26:32.656+05:302019-11-06T23:26:32.656+05:30//கதையில் ட்விஸ்ட் இருக்கலாம் ஆனால் ட்விஸ்ட்டே கதை...//கதையில் ட்விஸ்ட் இருக்கலாம் ஆனால் ட்விஸ்ட்டே கதையா இருந்தா என்ன பண்றது.//<br /><br />வான் ஹாம் எனும் ஜாம்பவானுக்கு மட்டும் இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது ? என்று வியக்கலாம் சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70290447376874681272019-11-06T23:22:26.461+05:302019-11-06T23:22:26.461+05:30துரோகம் துணை படித்தாயிற்று.. ஷெல்டன் கடைசி புத்தகம...துரோகம் துணை படித்தாயிற்று.. ஷெல்டன் கடைசி புத்தகம் ok ரகம் .. கடைசி என்பதால் மிகுந்த முயற்சி செய்துவிட்டனர் போல. கதையில் ட்விஸ்ட் இருக்கலாம் ஆனால் ட்விஸ்ட்டே கதையா இருந்தா என்ன பண்றது.<br />ட்விஸ்ட் மொத்தமும் மிகுந்த வசனங்களில் கூறி உள்ளனர் சற்றே நேரம் எடுத்து இன்னும் 100 பக்கங்களில் சொல்லவேண்டியது. இருந்தும் ok.<br /><br />படிக்காமல் இருந்த இருளின் ராஜ்ஜியம் படித்தேன்... வாவ் அந்த வில்லன் செம கேரக்டர் அறிமுகத்தில் ரோஸி இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற விளக்கம் சற்றும் எதிர்பார்க்கவில்லை நிஜமாகவே ராட்சசன் தான். இப்படி ஒரு வில்லன் இதுவரை பார்த்ததில்லை. முடிவில் கைதானது சற்றே ஏமாற்றமாக இருந்தது.. சோக முடிவு வேறு.. அண்டர்ட்கேர் மீண்டும் மனதில் இடம் பிடித்துவிட்டான்.கிருஷ்ணா வ வேhttps://www.blogger.com/profile/17760740943700501539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56048411001881940542019-11-06T12:17:24.498+05:302019-11-06T12:17:24.498+05:30///Why dont we try our own comics? ///
எடிட்டரை ந...///Why dont we try our own comics? ///<br /><br />எடிட்டரை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றிக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.. பெரும்பாலும் புன்னகையே அவரது பதிலாக இருந்திடும் - ஒவ்வொரு முறையும்!<br /><br />ஆனா அந்தப் புன்னகையின் பின்னால் ஒரு அர்த்தமில்லாமலில்லை தான்! ஒரு காமிக்ஸை உருவாக்கறது சாதாரண விசயமில்லேன்றது நம்ம எல்லோருக்குமே தெரியும்! ஒரு 50 பக்க காமிக்ஸை உருவாக்கப் பல மாத உழைப்பு அவசியப்படும்!! வண்ணத்தில் என்றால் இன்னும் கூடுதலாய்! எடிட்டரின் மனத்திரையில் விரிவதைக் அழகாகக் காட்சிபடுத்தும் ஒரு திறமையான ஓவியர் கிடைக்க வேண்டும்!! அந்த ஓவியருக்கு ஊதியம் அளிக்க வேண்டியதிருக்கும்! வரையப்பட்ட சித்திரங்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றி, அச்சுக்கு ஏற்றாற்போல் செய்திடவும் நிறைய உழைப்பும், அவகாசமும் தேவைப்படும்! <br /><br />இதெல்லாம் என்றாவது ஒருநாள் சாத்தியமாகும் என்று நம்புவோம்!<br /><br />///Pattasa koluthi pottutten...adhu vedikka pogudhaa illa bussaguma...paakkalaam!///<br /><br />நாம திரியில தீ வச்சுப் பல வருசங்களாச்சு.. ஆனா திரி ரொம்ப நீளம்ன்றது அப்புறம் தான் தெரிஞ்சது!<br />ஆனா நிச்சயமா என்னிக்காவது வெடிக்கும்! வெடிக்கும்போது அது நமக்கு இன்னொரு தீபாவளியா அமையும்றது உறுதி!!<br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2888967561089873242019-11-06T12:03:10.148+05:302019-11-06T12:03:10.148+05:30இந்த பதிவின் மூலம் ஆசிரியர் தன்னுடைய கதை தேர்வுகளு...இந்த பதிவின் மூலம் ஆசிரியர் தன்னுடைய கதை தேர்வுகளுக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார். 100-க்கு 90 சதவீதம் ஏற்க வேண்டிய கருத்துக்களே என்று நானும் ஆமோதிக்கிறேன். 1000 பேர் இருந்தால், அனைவரையும் திருப்தி செய்வது இயலாது எந்தவொரு மனிதருக்கும்.<br /><br />புதிது புதிதாக ஜானர்களையும், ஹீரோக்களையும் முயற்சி செய்து கொண்டே வருவது தான் எதிர்கால காமிக்ஸ் வளர்ச்சிக்கும், புதிய பாதைகளை உருவாக்கவும் உதவி செய்யும் வழிமுறையாக இருக்கும். அதற்கு ஆசிரியர் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். இதுவரை நீங்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் கதைகளுக்கு ஹேட்ஸ் ஆஃப் விஜயன் சார். உங்களுடைய தேடுதல் மேலும் வீரியமாக இருந்தால், எங்கள் காட்டில் அடைமழை பெய்ய ஆரம்பித்து விடும். 52 வயது என்று சொல்லி இருக்கிறீர்கள், அதில் கிட்டத்தட்ட 40 வயதுக்கும் மேல் காமிக்ஸில் அனுபவம் கொண்டவராக இருப்பீர்கள். அந்த அனுபவத்தை ப்ளஸ் பாய்ண்டாக வைத்து, புதிய ஜானர்களை முயற்சி செய்யுங்கள. அதற்காகவே கூட வருடத்திற்கு 6 புத்தகங்கள் கொண்ட சந்தா நியூ கொண்டு வரலாமே? (பிட்டை போட்டு வைப்போம்)...<br /><br />புதிதாக கதைகள் வேண்டும் என்பதால், பழையனவற்றை கழித்துக் கட்ட சொல்லவில்லை, டெக்ஸும் இருக்கட்டும், டைகரும் வரட்டும் XIII-ம் தேடட்டும்....<br /><br />நன்றிகள் பல.discoverboohttps://www.blogger.com/profile/15291107006933135449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76411104436106943992019-11-06T09:03:25.879+05:302019-11-06T09:03:25.879+05:30For your information sir பொன்னியின் செல்வன் alread...For your information sir பொன்னியின் செல்வன் already available as comics. Please check in AmazonKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.com