tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6563520055238796214..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: ஒல்லிகளின் மாதமிது !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger201125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35661928637913492102018-09-02T19:30:21.549+05:302018-09-02T19:30:21.549+05:30when will come kaatril karaintha kappalgal.johnny ...when will come kaatril karaintha kappalgal.johnny in london sirAnonymoushttps://www.blogger.com/profile/12673644253945387019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52647198600262322162018-09-01T23:06:28.377+05:302018-09-01T23:06:28.377+05:30எடிட்டரின் புத்தம் புதிய பதிவு தயார் நண்பர்களே.எடிட்டரின் புத்தம் புதிய பதிவு தயார் நண்பர்களே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23902127483982320382018-09-01T21:54:03.797+05:302018-09-01T21:54:03.797+05:30மிதுன் சார்,நீங்க நீட்ஸேவின் "ஜரதுஷ்ட்ரா இவ்வ...மிதுன் சார்,நீங்க நீட்ஸேவின் "ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்" நூலை வாசித்திருப்பீர்கள் போல???Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26675035760720519012018-09-01T21:23:47.631+05:302018-09-01T21:23:47.631+05:30///ஜராதுஷ்ட்ராவும்///
சாாி! பிரடொிக் நீட்ஸே எனப்...///ஜராதுஷ்ட்ராவும்///<br /><br />சாாி! பிரடொிக் நீட்ஸே எனப் படிக்கவும்!!<br /><br />ஜராதுஸ்ட்ரா ஒரு வரலாற்று கதாபாத்திரம்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53999028703691794622018-09-01T20:30:16.384+05:302018-09-01T20:30:16.384+05:30அருமை! அற்புதம் நண்பரே!!!
ஏனோ மனம் நம் மகாகவி பார...அருமை! அற்புதம் நண்பரே!!!<br /><br />ஏனோ மனம் நம் மகாகவி பாரதியோடு அவரை ஓப்பீடு செய்கிறது!<br /><br />இன்றுமே பாரதியை அவா் எழுதிய சில சுதந்திர வேட்கை மற்றும் சமூக பாடல்களுக்காக புகழ்கிறாா்களே தவிர அவரையும், அவரது உலகம், பிரபஞ்சம், மனிதம், ஞானம், உண்மை பற்றிய வெளிப்பாடுகளை முற்றிலுமாய், உணா்ந்து சிலாகிப்பவா்கள் அாிது என்பதே எனதெண்ணம்!!<br /><br />கூடவே, ஜொ்மானிய தத்துவவாதி ஜராதுஷ்ட்ராவும் கூட ரைம்போவின் வாழ்க்கைப்பாடுகளை ஒத்த வாழ்க்கையை தான் வாழ்ந்திருக்கிறாா்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80160597842730274652018-09-01T18:46:49.897+05:302018-09-01T18:46:49.897+05:30காலைல இருந்து போடாத புதிய இதழ் விமர்சனங்கள் இப்ப க...காலைல இருந்து போடாத புதிய இதழ் விமர்சனங்கள் இப்ப கொஞ்ச நேரத்தில் போடவாபோறாங்க ஜி!<br /><br />எல்லோரும் புதிய பதிவுக்காக வெயிட்டிங். அதில் தான் சுடச்சுட விமர்சனங்கள் வரும்.<br /><br />இது பழைய பதிவாகிட்டு, பழைய மேட்டரை விவாதிக்கலாம். இரவு வரை மட்டுமே.!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91615799694133544022018-09-01T18:30:49.492+05:302018-09-01T18:30:49.492+05:30இரண்டு வாரத்துக்கு புது இதழ்களின் மேல் கவனம் /லைம்...இரண்டு வாரத்துக்கு புது இதழ்களின் மேல் கவனம் /லைம்லைட் இருக்கட்டும் நண்பர்களே...இதைப் பற்றிய விவாதத்தை அதற்குப் பிறகு துவக்கலாம். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82070069914060095292018-09-01T18:25:49.967+05:302018-09-01T18:25:49.967+05:30நன்றி செனா. படிச்சுட்டு வரேன்.🙏🙏🙏🙏நன்றி செனா. படிச்சுட்டு வரேன்.🙏🙏🙏🙏Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9176867248577130782018-09-01T18:08:40.046+05:302018-09-01T18:08:40.046+05:30களை கட்டுது, இன்னும் Physics majorகளம் இறங்குங்க.....களை கட்டுது, இன்னும் Physics majorகளம் இறங்குங்க...!!<br /><br />நாங்க பக்கத்து வீடு Chemistry , கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம். அவ்வப்போது விசில் அடிச்சி உற்சாக படுத்துவோம்...<br /><br />கமான்....கமான்...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64234180778249914502018-09-01T17:30:11.651+05:302018-09-01T17:30:11.651+05:30காலம் மானுடத்தின் கணக்கு விதிகளுக்குள் கட்டப்பட்ட...காலம் மானுடத்தின் கணக்கு விதிகளுக்குள் கட்டப்பட்டதாக புரியப் பட்டது. ஒளியுனுடைய ஆற்றலில்,மனதையும்,ஆன்மாவையும் பயன்படுத்த பழக்கப்பட்டால் வெல்ல கூடிய மாயையாக இருக்கும்.<br />இயற்பியல் புலமையோ,மெத்த படித்த மேதா விலாசமோ இல்லாவிடினும் இதை ஓரளவு உணர்ந்ததாகவே அறிகிறேன்.முழுக்கவுமே தற்சார்பு சித்தாந்தம் எனும் போது ஐன்ஸ்டீன்,நியூட்டனை வம்பிழுக்கும் அறிவு புலம் முழுக்கவே குறைவே.<br /> மனதினுடைய ஒளியாற்றல் பற்றி உதாரணப்படுத்த ஒரு சிறு அனுமானம்.<br /> செப்டம்பரில் ஆசிரியர் அறிவிக்க இருக்கும் ஓர் செய்தி தொடர்பானது.<br /> இந்த தளத்தில் பதியப்பட்ட சில காமிக்ஸ் விமர்சனங்களை மொழிமாற்றம் செய்து, ஐரோப்பாவில் உள்ள ஏதோவொரு காமிக்ஸ் அமைப்பபின் கவனத்துக்கு அனுப்பப்பட்டு,அதற்கு அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை அடைந்திருக்கலாம்.உண்மைக்கு வெகு நெருக்கமாக கூட ,தெளிவாக குறிப்பிடாமல் அனுமானத்தின் அடிப்படையில் கருதுவதால் ஆசிரியருடைய அறிவிப்புக்காக காத்திருப்போம்.<br /> மனம் ஆற்றல் வாய்ந்த வலிமையுடைய மனித குலத்துக்கு கிடைத்த வரம்.<br /> ஆன்மா இறப்புக்குப் பின்பும் சாகா வடிவமுடைய வல்லமையுடையதாகவும் இருக்கும்.பாரத தேசத்தில் இது மிகப் பெரிய ஞானிகளால் அடையப்பட்ட இலக்கு.காலம் நீர் குமிழ் போல் உடைந்து கொண்டிருந்தாலும் காலத்தை கடந்தும் வாழ்வதற்கு வழிமுறைகள் உள்ளது.இது குறித்து மேலும் அணுக போதிய நிரூபணம் ஏற்படுத்த இயலாது எனும் போது அர்த்தமற்றதாக இருக்கும்.<br /> இறுதியாகவும் மனம் காலத்தை கடந்தும் பயணிக்கும் வலிமையுடையது.மனித ஆன்மா காலம் கடந்தும் அழிவில்லாத தாக்குதல் உணர்ந்ததால் இதை பதிவிடுகிறேன். Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1807896233340850032018-09-01T17:04:33.825+05:302018-09-01T17:04:33.825+05:30///ரைம்போவின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நம் ந...///ரைம்போவின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நம் நண்பர்களுக்கு ட்ரெண்ட் கதையின் எதிர்நாயகனின் குணவார்ப்பையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ///<br /><br />நன்றி திரு கார்த்திகை பாண்டியன் அவர்களே.!<br />ட்ரெண்ட் கதையை இன்றிரவு படிக்க நினைத்திருந்தேன். தங்களுடைய அறிமுகக்குறிப்பு நிரம்ப உபயோகமாக இருக்கிறது.KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59544861604606750472018-09-01T15:54:37.871+05:302018-09-01T15:54:37.871+05:30நரகத்தின் நுழைவாயில் (4)
வாழ்க்கையின் அர்த்தத்தைத...நரகத்தின் நுழைவாயில் (4)<br /><br />வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடியலைந்த பலரையும் போலவே, ரைம்போவும், தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த உலகாய சங்கதிகளிடமிருந்து விடைபெற எண்ணினார். பொதுவான நம்பிக்கைகளைச் சிதறடித்து, மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் விருப்பங்களைப் பேசும் வடிவமாக “நரகத்தில் ஒரு பருவகாலத்தை” ரைம்போ எழுதிப் பார்த்திருக்கிறார். அதன் பின்னரும் ரைம்போவின் சில கவிதைகள் வெளியாயின, “ஒளிச்சிதறல்கள்” (Illuminations) என்றழைக்கப்பட்ட கவிதைகள், எழுதுவதற்கான மனதையும் நேரத்தையும் மெல்ல மெல்ல தொலைத்துக் கொண்டிருந்த ஒரு அற்புதமான கவிஞனின் இறுதி மூச்சுக்காற்றென அக்கவிதைகளைச் சொல்லலாம். <br /><br />எழுத்துகளின் மாய உலகை விட்டு ரைம்போ முழு விருப்பத்தோடு விலகினாரா அல்லது அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாரா என்பதை ஒருபோதும் நாம் அறிந்து கொள்ள முடியாது. ஆனால், “நரகத்தில் ஒரு பருவகாலத்தை” ரைம்போவின் ஆகச்சிறந்த படைப்பு என்று நாம் அறுதியிட்டுச் சொல்லலாம். <br />கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67255765572774531922018-09-01T15:53:24.132+05:302018-09-01T15:53:24.132+05:30நரகத்தின் நுழைவாயில் (3)
மே மாத இறுதியில் காதலர்க...நரகத்தின் நுழைவாயில் (3)<br /><br />மே மாத இறுதியில் காதலர்கள் இருவரும் மீண்டும் லண்டனுக்கு வந்தார்கள். வசிப்பிட வாடகை மற்றும் புதிதாகப் பழகியிருந்த ஓப்பியம் சார்ந்த செலவுகளை மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதன் வழியாகச் சமாளித்தார்கள். அந்த ஜூன் மாதம் மதிமயக்கத்தின் நீண்ட இரு பகுதிகளையும் ரைம்போ எழுதி முடித்தார். மதிமயக்கத்தின் முதல் பகுதியில் முட்டாள் கன்னிப்பெண்ணாக வெர்லைனையும் தெய்வீக மணமகனாகத் தன்னையும் அவர் உருவகித்திருந்தார். ஆனால் இருவருக்குமிடையே நிகழ்ந்த சண்டையின் காரணமாக வெர்லைன் ரைம்போவைப் பிரிந்து ப்ரூசெல்ஸ் நகருக்குக் கிளம்பிச் சென்றார். அவரைத் தொடர்ந்து, ஜூலை நான்காம் தேதி, ரைம்போவும் ப்ரூசெல்ஸை வந்தடைந்தார். மூன்று நாட்கள் கழித்து, காதலர்களுக்குள் சண்டை மறுபடியும் நிகழ, வெர்லைன் தன்னுடைய ரிவால்வரால் ரைம்போவின் கையில் சுட்டார். பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொள்வதாகவும் ரைம்போவை அச்சுறுத்தினார். ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை மாதத்தின் பெரும்பாலான நாட்களை ரைம்போ மருத்துவமனையில் கழித்தார். ஆகஸ்ட் மாதம் ரோச் நகருக்குத் திரும்பி நரகத்தின் கடைசி நான்கு பகுதிகளையும் எழுதி முடித்தார். அதற்கான முன்னுரையும் இந்த காலகட்டத்தில்தான் எழுதப்பட்டது.<br /><br />அக்டோபர் 1873, ப்ரூசெல்ஸ் நகரத்தில் “நரகத்தில் ஒரு பருவகாலத்தின்” முதல் பிரதி அச்சிடப்பட்டது. புத்தகத்தை அச்சிடுவதற்கான மொத்தச் செலவுகளையும் ரைம்போவின் அம்மா ஏற்றுக்கொண்டார், ஆனால் அதிலிருக்கும் எதுவும் தனக்குப் புரியவில்லை என்று அவர் அறிவித்தார். அதற்கான ரைம்போவின் பதில்: “இந்தப் புத்தகம் இலக்கியரீதியாக அத்தனை அர்த்தப்புலன்களோடும் வாசிக்கப்பட வேண்டியதாகும்.” ரைம்போவின் பத்தொன்பதாவது பிறந்தநாள் முடிந்த இரு தினங்களுக்குப் பிறகு, சிறையிலிருக்கும் வெர்லைனுக்கு ஒரு பிரதியை அனுப்பச் சொல்லி விட்டு, தனக்கென பன்னிரண்டு பிரதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ரைம்போ பாரிசுக்குக் கிளம்பினார். ஆனால் பாரிசின் இலக்கியவாதிகளுக்குத் தன்னுடைய அறிவின் மீதோ படைப்பின் மீதோ நம்பிக்கையில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், ரைம்போ மீண்டும் ரோச்சுக்குத் திரும்பினார். மீதமிருந்த பிரதிகளோடு தன்னுடைய கையெழுத்துப் பிரதிகளையும் சேர்த்து நெருப்பிலிட்டுக் கொளுத்தினார். அன்று அச்சகத்தில் அவர் விட்டு வந்த பிரதிகள் யாராலும் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தன, ரைம்போ இறந்து பத்து ஆண்டுகள் கழித்து 1901 ஆம் ஆண்டில், அவை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன.<br />கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67806632148571955202018-09-01T15:52:33.441+05:302018-09-01T15:52:33.441+05:30நரகத்தின் நுழைவாயில் (2)
பிரான்சின் ஒதுக்குப்புறம...நரகத்தின் நுழைவாயில் (2)<br /><br />பிரான்சின் ஒதுக்குப்புறமானதொரு கிராமத்தில் கழிந்த ரைம்போவின் சலிப்பூட்டுகிற பால்யத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: ஒரு சிறுவன், வெவ்வேறு நாற்காலிகளில் அமர்ந்தபடி, வாசித்துக் கொண்டிருக்கிறான்; அல்லது ஒரு சிறுவன், வெவ்வேறு மேசைகளில் அமர்ந்தபடி, எழுதிக் கொண்டிருக்கிறான். அந்த அயர்ச்சியூட்டும் வாழ்க்கையை, அதன் ஒற்றைப் பரிமாணத்தை, முழுமுற்றாக ரைம்போ வெறுத்தார். பொதுவாழ்வின் ஒழுக்கநெறிகளை மீறுவதன் மூலம் தன்னை அதன் தளைகளிலிருந்து அவர் விடுவித்துக் கொண்டார். 1873-ஆம் வருடம் மே மாதத்தில், லண்டனிலிருந்து திரும்பிய பிறகு, தன்னுடைய நண்பனான எர்னெஸ்ட் டெல்ஹயிக்கு எழுதிய கடிதமொன்றில் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி ரைம்போ சொல்கிறார்: “குதத்தில் இருக்கும் வலியைப் போன்றது அது, இந்தக் குடியானவர்களெல்லாம் எத்தனை பெரிய அப்பாவிகளாக இருக்கிறார்கள்.” மேலும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார், “நான் தற்போது சில உரைநடைக் கவிதைகளை எழுதி வருகிறேன், மதநம்பிக்கையின்மையின் புத்தகம் அல்லது கருப்புப் புத்தகம் என்கிற தலைப்பில்.” தன்னுடைய விதி அந்தப் புத்தகத்தின் வாயிலாகத் தீர்மானிக்கப்படும் என ரைம்போ தீவிரமாக நம்பினார்; பின்னாட்களில் அது உண்மையாகவும் மாறியது. அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதியது “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்பதை நம்மால் தீர்மானமாகச் சொல்ல முடியும், ஏனெனில், புத்தகத்தின் முதல் பதிப்பில், அதனுடைய இறுதிப்பக்கத்தில் ஒரு குறிப்பு நமக்கு காணக்கிடைக்கிறது: ஏப்ரல் – ஆகஸ்ட், 1873.<br /><br />தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்குள் எழுதப்பட்டதாக “நரகத்தில் ஒரு பருவகாலம்” பற்றிய குறிப்பு சொல்கிறது, என்றாலும், அதன் உள்ளடக்கத்தில் எந்தவொரு தொடர்ச்சியையும் நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. செப்டம்பர் 1872 முதல் ரைம்போ வெர்லைனோடு லண்டனில் வாழ்ந்து வந்தார். வெர்லைனின் அம்மா அனுப்பிய பண உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இருவரும் தங்களுடைய ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, பிரிட்டிஷ் நூலகத்தில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். முரண்பட்ட உறவுமுறைக்காகவும் நாடு கடத்தப்பட்ட புரட்சியாளர்களோடு கொண்டிருந்த தொடர்புகளுக்காகவும் அவர்களிருவரின் மீது காவல்துறை சந்தேகம் கொண்டிருந்தது. ஏப்ரல் 4, 1873 அன்று வெர்லைனின் மனைவி தொடர்ந்த வழக்கின் காரணமாக அவர் பிரான்சை விட்டு வெளியேறிட, ரைம்போவும் ரோச் நகரிலிருந்த குடும்பத்தின் பண்ணை வீட்டுக்குத் திரும்பினார். அங்குதான் “நரகத்தில் ஒரு பருவகாலத்தின்” முதல் வரிகளை ரைம்போ எழுதத் தொடங்கினார். <br /><br />பால்யகால நண்பனான எர்னெஸ்ட் டெல்ஹயிக்கு அவர் எழுதினார்: “இந்தக் கதைகள்.. முட்டாள்தனமும் குற்றமின்மையும் கொண்டவை. ஓ குற்றமின்மையே! குற்றமின்மை, குற்றமின்மை, குற்ற – நாசமாய்ப் போகட்டும்!.. என்னுடைய விதி இந்த புத்தகத்தின் பாற்பட்டே அமைந்திடும், இதற்கென குறைந்தது இன்னும் அரை டஜன் கதைகளையாவது நான் கண்டுபிடித்தாக வேண்டும். எதையும் நான் உனக்கு இப்போது அனுப்பப் போவதில்லை, ஏற்கனவே மூன்று கதைகளை எழுதி விட்டேன், ஆனால் இவற்றை அனுப்ப நிறைய செலவாகும்!” அந்தப் புத்தகத்தை எழுதி முடிக்கும்வரை தான் தேர்ந்தெடுத்த வடிவத்திற்கு நேர்மையாயிருந்தார் ரைம்போ. “தீய ரத்தம்” மற்றும் போதையின் ஆதிக்கத்தில் எழுதப்பட்ட “நரகத்தின் இரவு” ஆகிய பகுதிகள் அந்த சமயத்தில் முடிந்திருந்தன.<br />கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46476067706589633122018-09-01T15:51:32.036+05:302018-09-01T15:51:32.036+05:30ரைம்போவின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நம் நண்ப...ரைம்போவின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நம் நண்பர்களுக்கு ட்ரெண்ட் கதையின் எதிர்நாயகனின் குணவார்ப்பையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே ரைம்போ பற்றி நான் எழுதிய ஒரு அறிமுகக்குறிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன் மக்களே..<br /><br />நரகத்தின் நுழைவாயில் (1)<br /><br />ஒரு புராணக்கதையை ஒத்தது ஆர்தர் ரைம்போவின் வாழ்க்கை, ரொம்பவே குறுகிய, ஆனால் தீவிரம் நிரம்பிய வாழ்க்கை. தன்னை ஒரு சாகசக்காரன் என்றே அவர் நம்பினார், எளிமையான பாதைகளைப் புறக்கணித்து விளிம்புகளில் பயணிப்பதையே பெரிதும் தேர்ந்தெடுத்தார். சமரசம் செய்து கொள்ளாத மனத்திடம்; புலன்களின் சிதைவு; போதை மருந்துகள்; ஒருபால் புணர்ச்சி; ஆயுதக்கடத்தல்; வெவ்வேறு நிலங்களினூடான பயணம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இருபத்து ஒன்றாம் வயதுக்குள் எழுதிய கவிதைகளின் நம்பவியலாத முதிர்ச்சி; அதனைத் தொடர்ந்து தன்னுடைய கவிதைகளைக் கைவிட்டுப் பிறகு ஒருநாளும் அவற்றைப் பற்றி உரையாடாத பிடிவாதம் – இவையெல்லாம் சேர்ந்து ஒரு இதிகாச நாயகனின் பிம்பத்தை வரலாற்றில் ரைம்போவுக்குத் தருகின்றன, ஆனால் உயிரோடு இருந்திருந்தால் இதையும் அவர் மறுத்திருக்கவே செய்வார் எனத் தோன்றுகிறது.<br /><br />பெரும்பாலான எழுத்தாளர்களின் வாழ்க்கை, விவரித்துச் சொல்வதற்கான சுவையான சம்பவங்களின்றி, மிகவும் அயர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் ரைம்போ முற்றிலும் வேறு வகையிலானதொரு மனிதர். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு, அவருடைய குணநலன்களும் வாழ்க்கை முறையும் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாயின. “பாரிசின் தேநீர் விடுதிகளில் அமர்ந்து மேசைகளின் மீது ரைம்போ கவிதைகளை எழுதுவார், எழுதுகோலால் அல்ல, மாறாகத் தன் மலத்தைக் கொண்டு. யாரும் எதிர்பாராத தருணங்களில் கால்சராய்களைக் கழற்றி விட்டு பொதுவிடங்களில் சுய-இன்பச் செயல்பாடுகளில் ஈடுபடுவார். உடன்படித்த மாணவர்களைப் பாலியல்ரீதியாக அணுகக்கூடியவர். இலக்குகளற்று வீதிகளில் போதையில் அலைந்தவர். தன்னைக் காட்டிலும் மூத்த கவிஞரொருவரை மனைவியிடமிருந்து பிரித்துத் தனக்குப் பின்னால் அலைய வைத்தவர்.” எண்ணிக்கையிலடங்காக் குற்றச்சாட்டுகள். ஆனால் தான் செய்யும் குற்றங்களை இன்னதென்று ரைம்போ அறிந்திருந்தார் அல்லது விரும்பியே அவற்றை அவர் செய்திருக்கக்கூடும். <br /><br />ரைம்போ தன் பதினான்காம் வயதில் முதல் முறையாக பாரிசுக்கு ஓடிப்போனார் - யுத்தகால பிரான்சில் தன்னந்தனியாக அலைந்து திரிந்தார்; பிழைப்புக்காகத் திருட்டு வேலைகளில் ஈடுபட்டார்; ஆனால் இவையனைத்தையும், நண்பர்களாக அடைய நினைத்த சக கவிஞர்களைச் சந்திப்பதற்காகவே அவர் செய்தார். காதலில் ஈடுபட்டார், ஆனால் தான் மிக நேசித்த கவிஞரால் கையில் சுடப்பட்டார். வெகு விமரிசையானதொரு விருந்தில் சட்டென்று பாதியில் கிளம்பிப் போவதைப்போல கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்ட பிறகும், அறிந்திராத பிரதேசங்களுக்கான பயணங்களின் வழியே தன் சாகசங்களைத் தொடர்ந்தார். சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டார். முப்பத்தியேழு வயதில், அறுவை சிகிச்சையால் ஒரு கால் நீக்கப்பட்ட பிறகு, புற்றுநோய் உடலெங்கும் பரவிட, துயரமானதொரு மரணத்தைச் சந்தித்தார். அவருடைய வாழ்வின் கறுப்புப்புள்ளிகள் எல்லாமே, ரைம்போவின் மனக்கொந்தளிப்புகளை விளக்க முற்படுவதோடு, மனித வாழ்வின் சராசரித்தன்மையை அவர் எத்தனை வெறுத்தார் என்பதையும் சொல்கின்றன. <br /><br />கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75023886530464675162018-09-01T15:48:30.553+05:302018-09-01T15:48:30.553+05:30அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். ஆச்சரியமும் மகிழ்...அன்பின் ஆசிரியருக்கு, <br /><br />வணக்கம். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ததும்பி வழியும் மற்றுமொரு தருணம். வாழ்க்கை என்பது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற என்னுடைய நம்பிக்கை மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. ரைம்போவை மொழிபெயர்த்த சங்கதியை ஏன் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே சமயத்தில் நீங்கள் ட்ரெண்டின் இரண்டாவது கதையை வெளியிட வேண்டும்? நாம் நினைப்பதைக் காட்டிலும் இந்த வாழ்க்கை அபாரமான ஆச்சரியங்களைக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ரைம்போ பற்றிய குறிப்பை நம் இதழில் வெளியிட்டு மீண்டும் ஒரு முறை என்னை கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.<br /><br />பிரியமுடன்,<br />கார்த்திகைப் பாண்டியன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7444942180525952972018-09-01T15:48:13.700+05:302018-09-01T15:48:13.700+05:30ஹெர்லாக் ஷோம்ஸ் - நேத்து படிச்சி இன்னும் சிரிச்சிட...ஹெர்லாக் ஷோம்ஸ் - நேத்து படிச்சி இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் ..!!<br />😂😂😂😂😂😂😂😂😂KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-331834406153835762018-09-01T14:49:26.705+05:302018-09-01T14:49:26.705+05:30///நம்ம அதிவிருப்பப் பாடமான Physicsல, அதிலும் நான்...///நம்ம அதிவிருப்பப் பாடமான Physicsல, அதிலும் நான் மிக விரும்பும் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் தொடா்பான விவாதத்தில் கலந்துக்க ஆவலோடு இருக்கேன்!///<br /><br />நானும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தீவிர ரசிகனே..!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33902684038240058532018-09-01T14:41:17.354+05:302018-09-01T14:41:17.354+05:30அடடே! இதென்னது மெட்டா பிஷிக்ஸ், தத்துவம் அது, இது ...அடடே! இதென்னது மெட்டா பிஷிக்ஸ், தத்துவம் அது, இது எல்லாம் உள்ளே வந்திருச்சே!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71227883709032498232018-09-01T14:35:12.303+05:302018-09-01T14:35:12.303+05:30நம்ம அதிவிருப்பப் பாடமான Physicsல, அதிலும் நான் மி...நம்ம அதிவிருப்பப் பாடமான Physicsல, அதிலும் நான் மிக விரும்பும் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் தொடா்பான விவாதத்தில் கலந்துக்க ஆவலோடு இருக்கேன்!<br />வேலை முடிஞ்சதும் களத்தில் குதிச்சர வேண்டியது தான்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53180048090434287682018-09-01T14:16:16.913+05:302018-09-01T14:16:16.913+05:30நல்லவேளை ஓவியர் வன்கா, பிக்கஸோ எல்லாம் பின் அட்டைப...நல்லவேளை ஓவியர் வன்கா, பிக்கஸோ எல்லாம் பின் அட்டைபடம் பின்னாடி தான் சொல்லாம விட்டிங்களே.<br /><br />Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-247891523633219082018-09-01T13:51:05.030+05:302018-09-01T13:51:05.030+05:30சென்ற மாதம் போல், இந்த முறையும் jumbo missing. இரண...சென்ற மாதம் போல், இந்த முறையும் jumbo missing. இரண்டு முறை லயன் office-கு call செய்து சொல்லியிருக்கிறேன். புத்தகம் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை.<br />Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16329801264479651172018-09-01T09:54:37.358+05:302018-09-01T09:54:37.358+05:30சிரமத்துக்கு வருந்துகிறேன் சார் !
மேலே அப்பதிவு உ...சிரமத்துக்கு வருந்துகிறேன் சார் !<br /><br />மேலே அப்பதிவு உள்ளது ...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54038174677641763182018-09-01T09:52:59.297+05:302018-09-01T09:52:59.297+05:30///எங்கே தொட்டாலும் bloggerகாரவுஹ இங்கிலீசுல ஏதோ வ...///எங்கே தொட்டாலும் bloggerகாரவுஹ இங்கிலீசுல ஏதோ வையுறாங்க// <br /><br />அப்படியா ! ரொம்ப கற்புள்ள லின்கா இருக்கும் போல இருக்கு ..நான் தொட்டா ஓப்பன் ஆகுது ..<br /><br />புது புத்தகங்கள் இருப்பதால இங்க பழைய பதிவை போட யோசிச்சேன் ..<br /><br />இதோ ஷெரிப் -க்காக <br /><br />மர்ம கத்தி ...<br /> ஏற்கனவே சொன்னது போல் கதை முழுதுமே கனவே ..<br />இது விஞ்ஞான கதை அல்ல ...<br /> என்னை பொறுத்தவரை மெட்டாபிசிக்ஸ் கதையை நடத்துகிறது ..<br /> கனவுலகினை இக்கதை ஒரு இணை பிரபஞ்சமாக கையாள்கிறது ...(parallel universe ). உறக்கம் அதற்கான போர்ட்டல் .<br /> நமது பிரபஞ்சத்தில் காலம் என்பது ஒரு மாயை..அது சார்புடையது ...<br /> ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி/ஜெனரல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி காலத்தில் முன்னோக்கி /பின்னோக்கி பயணிப்பது பற்றி வழிவகைகள் இருப்பது பற்றி சொன்னாலும் அவற்றை செயலாக்கம் செய்வது நடைமுறையில் இயலாத காரியம் ..<br /> நமது கதையில் உள்ள கனவுலகான இணை பிரபஞ்சத்தில் <br />காலத்தின் பின்னோக்கி செல்ல <br />ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில் பயணிக்கவேண்டும் <br />காலத்தினை கிராவிடேஷனல் விசையை பயன்படுத்தி லூப்களாக மடக்கி பின் செல்லவேண்டும் <br /> போன்ற சாத்தியமேயில்லாத கட்டுப்பாடுகள் இல்லை ..<br /> மெட்டாபிசிக்ஸ் –ன் மனம்,உடல் பற்றிய கிளை சித்தாந்தங்களை அடியொற்றி எழுதப்பட்ட இக்கதை இருமனிதர்கள் பருப்பொருளாகவே காலத்தின் பின்னோக்கி பயணிப்பதாக அதாவது கனவுலக பிரஜைகளாக இருப்பினும் வர்ணனை செய்கிறது ....<br /> இது கனவுலகம் என்பது ஒரு இணை பிரபஞ்சம் என்றால் மட்டுமே சாத்தியம் ...<br /> இவர்கள் போட்டு சென்ற ஆடையை விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் அணிந்த ஆடையை திரும்பி அணிந்து வருவதும் .<br /> ரோலனின் கத்தி ரோஜரின் கூடவே பயணிப்பதும் இக்காரணத்தினால்தான்..<br />காலத்தில் பின்னோக்கி/முன்னோக்கி பயணிக்க ஒளியின் வேகத்தில் பயணிக்கவேண்டும் ..<br /> உதாரணமாக ரோலனின் கத்தியும் ஒளியின் வேகத்தில் முன்னோக்கி பயணிக்குமாயின் நிறை –சக்தி கோட்பாட்டின்படி கத்தியின் நிறை முடிவிலி (infinite ) என அதிகரிக்கும் ...இக்கத்தியை நகர்த்துவதற்கான சக்தியின் அளவும் முடிவிலி என அதிகரிக்கும் ...இது நடைமுறைக்கு ஒவ்வாதது ..<br /> இதெல்லாம் நமது பிரபஞ்சத்தில் ..<br />கனவுநிலையில் உணர்நிலையில் உள்ளதாக காண்பிக்கப்படும் நமது ரோஜர் மற்றும் பில்லுக்கு இக்கோட்பாடுகள் இணை பிரபஞ்சவாசிகள் என்பதால் பொருந்தாது..<br /> ரோஜர் மற்றும் பில் காலத்தில் பின்னோக்கி செல்ல கால இயந்திரம் தேவையில்லை என்பது கதை உணர்த்தும் செய்தி ..<br /> இருபதாம் நூற்றாண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க துவங்கும் அவர்கள் மறுபடியும் கனவுலகின் வாயிலாகவே இருபதாம் நூற்றாண்டை முன்னோக்கி பயணித்து வந்தடைகிறார்கள் ..<br /> பலசமயங்களில் விஞ்ஞானம் தனது எல்லையை தொட்டு நிற்பதை தாண்டி விளக்கமளிக்க மெட்டாபிசிக்ஸ் முயன்று இருக்கிறது ...<br /> நவீன விஞ்ஞானம் மெட்டாபிசிக்ஸ்-தத்துவத்தை வறட்டு வேதாந்தம் என்றே அழைக்க முற்படுகிறது .... <br /><br /> நாமும் உறங்கி முயற்சி செய்து பார்ப்போம் ..<br />கனவுலகின் பிரஜைகளானால் காலத்தின் முன்னோக்கி சென்று இரத்தப்படலம் வண்ண இதழ்களை ,டைனமைட் இதழ்களை எடிட்டர் அச்சிட்டு முதல் பிரதியை ரசித்து கொண்டு இருக்கும்போது நாமும் அருகில் போய் ரசிக்கலாம் ...<br /> காலையில் எழும்போது படுக்கையின் கீழ் டைனமைட் இதழின் டஸ்ட் கவர் கிடைக்குமாயின் அதிசயிக்க வேண்டாம் ... <br /><br />பின் குறிப்பு : வேறுவித சிந்தனைகள் நண்பர்கள் யாருக்கும் இருக்குமாயின் முன்வைக்கலாம் ... <br /><br /> Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47899841014531184002018-09-01T09:27:21.748+05:302018-09-01T09:27:21.748+05:30எங்கே தொட்டாலும் bloggerகாரவுஹ இங்கிலீசுல ஏதோ வைய...எங்கே தொட்டாலும் bloggerகாரவுஹ இங்கிலீசுல ஏதோ வையுறாங்க செனா அனா ஜி! நீங்கதான் இதுக்கு ஒரு பைசல் பண்ணோணும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com